முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூடர் கூடம்…

Moodar-Koodam-Movie-Poster-01
 .
அங்காடித் தெரு மற்றும், வழக்கு எண் 18/9 கதையம்சம் உள்ள உணர்வுபூர்வமான படங்கள்.  மூடர் கூடம் படம் அப்படிப்பட்டதா.  அப்படி என்ன அப்படத்தின் சிறப்பான கதை ?   நான்கு பேர் சேர்ந்து ஒரு வீட்டில் திருடுகிறார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது… இது என்ன அப்படிப்பட்ட புதுமையான கதையா ?  என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்தக் கட்டுரை.
ரிசர்வாயர் டாக்ஸ் திரைப்படம், ஹாலிவுட்டில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் கதை என்ன ?  ஆறு பேர் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்.  ஹாலிவுட்டின் போக்கையே மாற்றிய படம் என்று புகழப்பட்ட படம் பல்ப் ஃபிக்ஷன்.  அந்தப் படத்தின் கதை என்ன ?  நிழல் உலகத்தைச் சேர்ந்த ஒரு எட்டு கேரக்டர்களிடையே நடக்கும் கதைதான் படம்.   இந்த இரு படங்களையும் எடுத்த இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ.
timthumb
க்வென்டின் டாரன்டினோ
இந்தி சினிமாவில்   இசையமைப்பாளராக இருந்த விஷால் பரத்வாஜ் இயக்கிய திரைப்படம்  மக்பூல்.  இது   ஷேக்ஸ்பியரின் மேக்பெத். அடுத்து அவர் இயக்கிய படம் ஓம்காரா.  இது  ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தின் தழுவல்.  இதே விஷால் பரத்வாஜ் எடுத்த மற்றொரு படம் கமீனே    அந்தப் படத்தில் என்ன புதுமையான கதை ?  இரட்டைப் பிறவிகளான இரண்டு சகோதரர்கள் நடுவே சண்டையிட்டுக் கொண்டு இறுதியில் ஒன்றாக சேர்கிறார்கள்.   ஒருவன் நல்லவன். ஒருவன் கெட்டவன். இறுதியில் இருவரும் திருந்தி ஒன்று சேர்கிறார்கள்.
Vishal_Bhardwaj
விஷால் பரத்வாஜ்
விஷால் பரத்வாஜைப் போலவே பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு, நம்பிக்கையோடு விவாதிக்கப்படும் மற்றோரு இயக்குநர் அனுராக் காஷ்யப்.  இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்ட கேங்ஸ் ஆப் வாசிபூர் (Gangs of Wasseypur) என்ற திரைப்படங்கள், கல்ட் க்ளாசிக் என்று கொண்டாடப்பட வேண்டிய அளவுக்கு வரவேற்பை பெற்றன.     இந்தப் படத்தின் கதை என்ன ?  மூன்று தலைமுறையாக இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் வன்முறையான மோதல்தான் கதை.  கிட்டத்தட்ட சரத்குமாரின் நாட்டாமை கதைதான்.
Anurag-Kashyap-Headshot-for-web
அனுராக் காஷ்யப்
க்வென்டின் டாரன்டினோ, விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷ்யப் ஏன் கொண்டாடப்படுகிறார்கள் ?  அப்படி என்ன புதுமையைச் செய்து விட்டார்கள் ? காலங்காலமாக சினிமாவில் கதை சொல்லப்பட்டு வந்த விதத்தை மாற்றி, புதிய பாதையில் சினிமாவை பயணம் செய்ய வைத்ததாலேயே இந்த இயக்குநர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.
க்வென்டின் டாரண்டினோ, விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இயக்குநர்களின் வரிசையில் நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு திரைப்படம்தான் மூடர் கூடம்.
நான்கு பேர் சந்தர்ப்ப சூழலால் காவல் நிலைய லாக்கப்பில் சந்திக்கிறார்கள். அவர்கள் நான்கு பேருக்கும் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத பராரிகள்.  அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, அந்த நான்கு பேரில் ஒருவரின் உறவினர் வீட்டில் திருடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். வழக்கமாக காவல் நிலையத்தில் சிக்குபவனை போட்டுப் புரட்டிப் புரட்டி எடுக்கும் காவல்துறை அதிகாரிகளையே காட்டும் சினிமாவிலிருந்து மாறுபட்டு, நிஜ வாழ்வில் அபூர்வமாக நடப்பது போல அந்த இன்ஸ்பெக்டர் எந்த வழக்கும் போடாமல் அவர்களை துரத்தி விடுகிறார். போகும்போது செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புகிறார்.  அவர்கள் நால்வரும் வெளியேறி டாஸ்மாக் பாருக்குள் தண்ணியடிப்பதில் கதை தொடங்குகிறது. நவீன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்தவன்.  செண்ட்ராயன், கஞ்சா வியாபாரி. குபேரன்,சமுதாயத்தால் முட்டாள் என ஒதுக்கப்பட்டவன்.வெள்ளை, அனாதையாக வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வந்து இறங்குபவன்.
21
இவர்கள் நான்கு பேரையும் வைத்து, இவர்கள் நான்கு பேரும் கஷ்டப்பட்டு(?) முன்னேறும் அரைத்த மாவு சென்டிமென்ட் கதை உருவாக்கலாம். நான்கு பேரும்  ஆளாளுக்கு ஒரு பெண்ணை காதலிப்பதாக வைத்து ஆளுக்கொரு டூயட் வைக்கலாம். எவ்வித பொறுப்புணர்வும் இல்லாமல் படம் நெடுக லொள்ளு சபா டைப் காமெடிகளை மட்டுமே வைத்து படமெடுக்கலாம். இன்னும் நூற்றுக்கணக்கான தமிழ் சினிமாவின் வழக்கமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஆனால் அந்த வழிகளைக் கையாளாமல் புதிய முறையில் பார்வையாளர்களையும் கவரும் விதமாகக் கதை சொல்லியதில்தான் இத்திரைப்படம் மாறுபட்டு நிற்கிறது. திரைக்கதையின் வடிவம் செம ஃப்ரெஷ்.  ஒவ்வொரு முக்கிய பாத்திரத்துக்கும் முன் கதையாக படத்தின் பல்வேறு இடங்களில் ஃப்ளாஷ் பேக்குகள். ஒவ்வொரு ஃப்ளாஷ் பேக்கிற்கும், இந்த சிறிய பட்ஜெட்டிற்குள்ளும் சினிமாவின் பல்வேறு யுக்திகளை உபயோகப்படுத்திருப்பதும் அவை ரசிக்கும்படியாகவும் இருப்பதும் தான் ஹைலைட். படத்தில் நடித்திருக்கும் நாய்க்குக் கூட பாடலுடன்  முன்கதை.(இந்த ஃப்ளாஷ் பேக்கும் நவீனின் ஃப்ளாஷ் பேக்கும் இப்போது வெட்டப்பட்டுள்ளது வருத்ததிற்குறிய விஷயம்)
வீட்டுக்குள் திருடப் புகுந்ததிலிருந்து கதை விறு விறுவென்று நகர்த்தப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிற்குள் இருக்கும் கணவன், மனைவி. இரண்டு மகள்கள்.  ஒரு மகன். அந்த வீட்டுக்குள்ளே வேறு ஒரு காரணத்துக்காக திருட வந்த இன்னொரு திருடன். என்று முதல் பாதி பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.  தொடக்கத்தில் வந்தவர்கள் யாரென்று தெரியாமல், பணக்காரத் திமிரோடு குடும்பமே அந்த நாலு பேரையும் வேலை வாங்குகையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது. அனால் இந்த பரபரப்புகளுக்கு திடீர் திருப்பங்கள் என்று செயற்கையாக எதையும் புகுத்தாமல் திரைக்கதையில் தனது சாகசத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் நவீன்.
மூடர் கூடம் என்ற தலைப்பை முக்கிய கதாபாத்திரங்களாக வரும் நால்வருமே அடிக்கடி வெளிக்காட்டுகிறார்கள். நவீனின் கதாபாத்திரம் அந்த நான்கு பேருக்கும் தலைவனாக வழி நடத்துபவனாக நடந்து கொள்கிறது.அந்த கதாபாத்திரத்தின் இறுக்கமான முகம்.  உணர்ச்சிகளே இல்லாத டயலாக் டெலிவரி.  ஆனால், இப்படி உணர்ச்சிகளே இல்லாத நவீனின் கதாபாத்திரம் பேசும் பல வசனங்களின் மூலமாக சமுதாய அவலத்தை புரிந்து கொள்ளவும் அதே சமயத்தில் பல இடங்களில் வெடிச்சிரிப்பும் ஏற்படுகிறது.  இடைவேளைக்குப் பிறகு மேலும் சில பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. கேங்ஸ் ஆப் வாசிப்பூர் திரைப்படத்தில் வரும் சிறு சிறு பாத்திரங்கள் கூட முக்கியப் பங்கு வகித்து, படத்தின் சிறப்பைக் கூட்டுவது போலவே, இந்தப் படத்திலும் வரும் அத்தனை பாத்திரங்களும், சிறிது நேரமே வந்தாலும், திரைக்கதையின் விறுவிறுப்பைக் கூட்டுவதோடு, படத்தை சுவையுள்ளதாக ஆக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு கேரக்டருக்கும்  நபர்களைத் தேர்வு செய்யும் பணியை இயக்குநர் நவீன் மிகுந்த சிரத்தையோடு, மிக மிக கவனமாக செய்திருக்கிறார்.   இறுதிக் காட்சிகள் எதிர்ப்பார்த்தபடியே இருந்தாலும் கூட, இது ஏற்கனவே பார்த்ததுதானே, அல்லது தெரிந்ததுதானே என்ற அயர்ச்சி சிறிதும் ஏற்படவில்லை.
22
சென்ட்ராயன், நவீன்,  ரஜாஜ் மற்றும் குபேரன் சிறப்பாக நடித்துள்ளார்கள் என்று சொல்வது, அந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதாகும். ஃபோனில் பேசும் சிறு குழந்தை, நாய் உள்ளிட்ட அனைவரையும் இத்தனை சிறப்பாக நடிக்க வைத்த பெருமை, இயக்குநர் நவீனையே சாரும்.   குறிப்பாக சென்ட்ராயனிடம் இயக்குநர் வாங்கிய வேலை மலைக்க வைக்கிறது. சென்ட்ராயனுக்கு இது ஒரு life time character. பாத்திரப் படைப்புக்கு அடுத்ததாக, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இசை.  க்வென்டின் டாரன்டினோ திரைப்படங்களில் இசைக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இத்திரைப்படத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த திரைக்கதையை மேலும் செழுமையூட்டும் விதத்தில் இசையமைத்துள்ளார் நடராஜன் சங்கரன். இவரும் இயக்குநர் நவீனும் ஒன்றாக பணியாற்றி, ஒன்றாக வேலையை விட்டு, ஒன்றாகவே திரைத்துரையில் வாய்ப்பு தேடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ள வசனங்களை தனித்தனியாக சொல்ல இயலாது.  அது படம் பார்க்கும் அனுபவத்தை குறைக்கும். திரைப்படம் முடிந்து வருகையில் தமிழில் ஒரு அற்புதமான இயக்குநர் உருவாகியுள்ளார் என்ற நிறைவு இருந்தது.
இயக்குநர் நவீன் பற்றி கொஞ்சம்..
ஒரு பொறியாளர்.  தமிழகத்தில் உள்ள ஈஐடி பாரி நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர் சில காலம் டெல்லியில் ஹார்லிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.  நல்ல சம்பாத்தியம் இருந்தும், சினிமாவின் மீதான தணியாத காதலால் குடும்பக் கடமைகளை முடித்து விட்டு தமிழ்த் திரையுலகை நாடி வருகிறார்.   ஒரு சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பின்னர், தனியாக கதை பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட்தான் மூடர் கூடம்.  இப்படிப்பட்ட கதையை சில தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.  பல தயாரிப்பாளர்கள் என்ன சார் இது.. காமெடி படம்னு சொன்னீங்க.. காமெடியே இல்ல ? என்று கேட்டிருக்கிறார்கள்.  சிலர், சார்… எடுத்தவுடனே, டாஸ்மாக் பார்லயே குடித்து விட்டு டான்ஸ் ஆடுவது போல ஒரு குத்துப்பாட்டு வையுங்களேன் என்றிருக்கிறார்கள்.   தன் கதையை சிதைக்க விரும்பாத நவீன், தன் சகோதரி, அவர் கணவர் ஆகியோரிடம் பணம் வாங்கி படத்தை சொந்தமாக எடுப்பது என்று முடிவு செய்கிறார்.  படத்தை எடுக்கத் தொடங்கியதும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.   பண நெருக்கடி மிரட்டுகிறது.  ஆனால் அதிர்ஷ்ட வசமாக நண்பர்கள் செய்த உதவியால் ஒரு வழியாக படத்தை முடிக்கிறார்.  அவர் இயக்குநராக பணியாற்றிய பாண்டிராஜே இந்தப் படத்தை வெளியிட முடிவெடுத்து வெளியிட்ட பிறகுதான் இன்று வெள்ளித்திரையில் மிளிர்கிறது மூடர் கூடம்.
25
க்வென்டின் டாரன்டினோவின் பல்ப் ஃபிக்ஷன் திரைப்படத்தில் முதல் காட்சியில் பம்ப்கின் என்ற பாத்திரமும் ஹனி பன்னி என்ற பாத்திரமும் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.  அந்தக் காட்சியில் மொத்தம் நாற்பது வார்த்தைகள் வந்தால் 35 வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக இருக்கும்.  குற்றத்தில் ஈடுபடும் நிழல் உலகத்தைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.  இதே போல கஞ்சா வியாபாரம் செய்யும், சென்ட்ராயன் கஞ்சா வாங்க வருபவர்களிடம் இப்படித்தான் பேசுகிறான்.  ஆனால், அந்த வார்த்தைகள் அனைத்தும், ம்யூட் செய்யப்பட்டிருக்கின்றன.  அதே போல, சென்ட்ராயனை அறிமுகப்படுத்தும் காட்சியில் சென்ட்ராயன் கஞ்சா சிகரெட்டை தயார் செய்யும் காட்சியும் அப்படியே தூக்கப்பட்டிருக்கிறது.
ஏன் இந்த சமரசங்கள் செய்யப்பட்டன ?  படத்துக்கு “யு” சர்ட்டிபிகேட் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை சமரசம்.
ஏன் யு சர்ட்டிபிகேட் வேண்டும் ?  யு சர்ட்டிபிகேட் கிடைத்தால்தான் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும்.   இப்படி வரிவிலக்கு கிடைப்பதற்காக பல்வேறு சமரசங்களைச் செய்யும்படி படைப்பாளிகள் நெருக்கடிக் குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.இது   மூடர் கூடம் இயக்குநர் நவீனும் இது போன்ற நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏ சர்டிபிகேட்டோடு எவ்வித வெட்டுக்களும் இல்லாத படமாக இது வந்திருக்க வேண்டும்.
courtesy: ASNR

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

ரகசியத்தின் அரூப நிழல்கள் ( சிறுகதை )

ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது பக்கத்திலோ அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால் பதட்டப்படாமல் பாதியில் நிறுத்தாமல் முழுவதும் வாசிக்க முயற்சி செய்யுங்கள். அவன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது தனிமனித உடல் இச்சைகளை அல்ல. காமத்தின் சுவிசேஷத்தை. Story of a male whore….. Whore? இந்த வார்த்தை எத்தனை அபத்தமானது தெரியுமா? உடல் என்பது பிரார்த்தனைக்கானது, சமயங்களில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிரார்த்திக்க, இன்னும் சில சமயங்களில் ஒரு ஆணும் சில பெண்களும் அல்லது சில ஆண்களும் சில பெண்களுமென தேவை எதுவோ அதுவாக கொண்டாடுவது. அதிகாரத்தின் வழியாய் தனிமனித விருப்பங்களை ஒடுக்க நினைக்கும் சர்வாதிகார மனம் கொண்டவர்களை வேண்டுமானால் இப்படி சொல்லலாம், whore. அந்த இணையத் தளத்தில் முகம் மட்டும் மறைக்கப்பட்ட இவன் படத்திற்குக் கீழ் தன்னை இப்படி அறிமுகம் செய்திருந்தான். Hi I am foot fetish slave. Looking for a mistress who wants me to be her slave dog. This relation is full of submission and domin...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...