முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்..

 ஆட்டுக்குட்டியும் (2013) – Tamil

onayum aatukuttiyum wallpaper

’மிஷ்கினின் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இன்னமும் குறையவில்லை. அஞ்சாதே & யுத்தம் செய் போன்ற ஒரு படத்தை அவசியம் அவர் அளிப்பார் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, I will wait for Mysskin. And I hope he would bounce back too’ – ஒரு ’பிரபல’ பதிவர்.
 
இன்று ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வரப்போகிறது என்பது எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தெரியும். உடனடியாக ஆன்லைனில் டிக்கெட் கிடைக்கிறதா என்று தேடியதில், பெங்களூரில் படமே ரிலீஸ் இல்லை என்று தெரிந்தது. சென்ற வருடம் எனது பிறந்தநாளன்று (செப் 1) வெளியான ‘முகமூடி’ படம்கூட இங்கே அதே நாளில் வந்திருந்தது. அதனால்தான் அதை தியேட்டரில் பார்த்து, பயங்கர கடுப்பில் என் பிறந்தநாளை கழித்திருந்தேன். பிற ஊர்களிலும் லிமிடட் ரிலீஸ்தான் என்று தெரிந்தது. இங்கே பெங்களூரில் இன்று காலைவரை முக்கியும் எங்குமே ரிலீஸ் ஆகவில்லை என்றே தெரிந்தது. ஆனால், சக்திவேல் என்ற நண்பர், மொத்தம் நான்கு தியேட்டர்களில் அந்தப்படம் ரிலீஸ் ஆகியிருப்பதை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார். அவை: Ravi theatre Ejipura, Savitha theatre Malleswaram, Amruth theatre Lingarajapuram, Madeshwara theatre Banashankari 3rd stage. இவற்றில் நான் இன்று பார்த்தது, அம்ருத் தியேட்டர். லிங்கராஜபுரத்தில் உள்ளது (இந்த நான்குமே பழைய தியேட்டர்கள். ஒரு மல்டிப்ளெக்ஸில் கூட இந்தப்படம் வரவில்லை).
இந்த தியேட்டர் காம்பவுண்டில் நுழைந்ததுமே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் கோவையில் நான் படம் பார்த்த சில தியேட்டர்களை இது நினைவுபடுத்தியது புரிந்தது (டிலைட், நாஸ், கென்னடி). மாலை ஐந்து மணி ஷோவுக்கு நான் தான் முதல் ஆள். இத்தனைக்கும் நான் உள்ளே சென்றது 4:50. அப்போது நான் எடுத்த ஃபோட்டோ கீழே. இங்கு தம்மடித்துக்கொண்டிருப்பவர், டிக்கெட் கொடுக்கும் ஆசாமி. ’தீ.வே.செ.குமாரு’ படத்துக்கும் இதே அசம்பாவிதம் நடந்திருந்தது நினைவு வந்தது (புஷ்பாஞ்சலி – மொத்த தியேட்டரிலும் 5-6 பேர் மட்டுமே). இருந்தாலும், தியேட்டர் அமைப்பு கொஞ்சம் நாஸ்டால்ஜியாவை கிண்டியது. டிக்கெட் கிழிப்பவர், சாவகாசமாக தம் அடித்து டாய்லெட் போய்விட்டு மறுபடியும் என் பக்கத்தில் வந்து நின்றுகொண்டார். ‘ஷோ இருக்கும்ல?’ என்று கேட்டேன். ‘ம்ம்’ என்று முனகிவிட்டு உள்ளே சென்று குட்டி ஜன்னலை திறந்து, கம்பி வலைக்கு நடுவே கையை விட்டு தட்டி என்னை அழைத்தார். பால்கனி டிக்கெட் வாங்கிக்கொண்டு பால்கனியை முதல் ஆளாக ஓப்பன் செய்தேன்.
Amruth Theater Bangalore

இத்தனை பெரிய முன்னுரைக்கு ஒரு காரணம் இருக்கிறது. ஊரில் படமே இல்லை என்ற நிலையில் இருந்து, படம் ஓடுகிறது என்ற தகவல் வந்து, உடனடியாக அடித்துப்பிடித்து தியேட்டர் வந்தவனுக்குதான் அந்த ஜாலி புரியும்.
படம் எப்படி?
படத்தைப்பற்றி மிஷ்கினே இங்கே சொல்கிறார். இந்த வீடியோவை முதலில் பார்த்துவிடுங்கள். அதன்பின் விமர்சனத்துக்குள் செல்லலாம்.
மிஷ்கினுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது. ஒரு படத்தை ஐந்தே நிமிடங்கள் பார்த்தாலும், அது மிஷ்கின் படம் என்பதை மிகத்தெளிவாக சொல்லிவிடலாம். அவர் படங்களின் முதல் ஷாட்கள் பெரும்பாலும் வித்தியாசமான கோணங்களில் இருப்பதை கவனித்திருக்கலாம். ‘அஞ்சாதே’வில் உடற்பயிற்சி செய்யும் அஜ்மலை காண்பித்துவிட்டு அப்படியே கேமரா ந……..கர்ந்து அவரை தாக்க வருபவர்களை காட்டும். ‘யுத்தம் செய்’யில் டாப் ஆங்கிள் ஷாட்டுடன் படம் தொடங்கும். உடனே மழை. ’முகமூடி’யில் இருட்டுக்குள் இருக்கும் கேமரா, மிகத்தொலைவில் இருந்து வரும் லாரியை காட்டும். அந்த ஷாட், இருளும் ஒளியும் கலந்து, ஒரு Noir ஸ்டைலில் இருக்கும் (Noir = மொத்த படத்திலும் அந்த ஷாட் மட்டும்தான்). அதேபோல் இந்தப் படத்திலும் முதல் ஷாட் ஒரு டாப் ஆங்கிள் ஷாட்தான்.
மிஷ்கினுக்கு என்றே இன்னும் சில ஷாட்கள் உள்ளன. ஒரு ஷாட்டில் வசனங்களை பேசாமல், கதாபாத்திரங்களின் உடல்மொழியாலேயே நடப்பதைப் புரியவைக்கும் விதமான ஷாட்கள். உதாரணம்: அந்த ஷாட்டுக்குள் இருக்கும் கதாபாத்திரம், தலையை மெதுவாக தொங்கப்போட்டுக்கொள்ளும். அல்லது மெதுவாக தலையை உயர்த்தும். இல்லையேல் வலது, இடது பக்கங்களை இதேபோல் மெதுவாக கவனிக்கும். அந்த ஷாட்டும் அந்த செய்கை முடிந்தபின்னரும் ஓரிரு நொடிகள் அப்படியே கட் ஆகாமல் இருக்கும். இந்த ஷாட்களில் நடிக்கும் நடிகர்கள் சொதப்பினால், அந்த ஷாட் நகைச்சுவை ஷாட் ஆகிவிடும். சொதப்புகிறார்கள். அப்படியே ஆகிறது. குறிப்பாக, போலீஸாக நடித்திருக்கும் ஷாஜி. அவரது உடல்மொழி மிகவும் விசித்திரமாக இருக்கிறது. அவரது உடைகள், அவரது வசனம் பேசும் பாணி ஆகியவை சரியாக வரவில்லை. சில காட்சிகளில் நன்றாக நடித்தும், பல காட்சிகளில் மனிதர் கோட்டை விட்டுவிட்டார். முதல் படம் என்பதால் அந்த பதற்றம் தெரிகிறது. ஷாஜி மட்டும் இல்லாமல், படத்தில் வரும் பலரின் உடல்மொழியும் ஆங்காங்கே செயற்கையாகவே இருப்பது படத்தின் ஒரு மைனஸ் பாயிண்ட்.
மிஷ்கினின் இன்னொரு மிகப்பெரிய டெம்ப்ளேட் – வரிசையாக வந்து ஒவ்வொருவராக அடிவாங்கி செல்வது. ஃபேஸ்புக்கில் இது பயங்கர நகைச்சுவை ஆகி, மிஷ்கின் என்றாலே இதைத்தான் எல்லோரும் சொல்வதாக இருக்கிறது. ஆனால் அது இந்தப்படத்தில் இல்லை.
வசனங்கள் இந்தப்படத்தில் மிகவும் குறைவு. முழுப்படமும் இரவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரே இரவில் நடக்கும் ஒரு கதைதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
படத்தின் கதை ஆரம்பிப்பது, முதல் ஷாட்டிலேயே. அனாவசியமாக எந்த ஷாட்டையும் விரயம் செய்யாமல் எடுத்திருப்பது நல்ல விஷயம். ஆனால், படத்தின் இண்டர்வல் வரை நடக்கும் எந்த சம்பவத்திலும் என்னால் ஒன்ற முடியவில்லை. எமோஷனலாக ஆடியன்ஸை படத்தின் உள்ளிழுக்கும் தன்மை இதன் முதல் பாதியில் இல்லை. ஆனால், முதல்பாதியில்தான் பல சம்பவங்கள் நடக்கின்றன. கண்முன் ஒவ்வொன்றாக சம்பவங்கள் செல்கின்றன. இருந்தாலும் அவற்றில் ஒன்றிப்போய் படத்தின் கதையை ஃபாலோ செய்யமுடியாமல், கதைக்கு வெளியே நின்று வெறுமனே காட்சிகளை கவனிக்க மட்டுமே தோன்றுகிறது. இதுதான் முதல்பாதியின் பெரிய குறை (ஒருவேளை டெலிபரேட்டாகவே அப்படி இருந்திருக்குமோ என்று யோசித்துப்பார்த்தேன். அதற்கு வாய்ப்பில்லை).
இதற்குக் காரணம், படத்தில் நடித்திருக்கும் மிஷ்கினின் கதாபாத்திரத்தின்மீதும் சரி, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் மேலும் சரி, முதல் பாதி முடியும்வரை எந்த அட்டாச்மெண்ட்டும் வரவில்லை. படத்தின் துவக்கத்திலேயே மிஷ்கினின் பாத்திரத்தைப்பற்றி போலீஸ் மூலமாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. கதையில் ஒரு சிறிய துணுக்காக, ஒரு சமூக விரோதிக்கு சிகிச்சை செய்து போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயின் கதை இருந்தாலும், அதனால்கூட அவர் பாத்திரத்தின் மேல் எந்தவித உணர்ச்சிகளும் வரவில்லை.
ஸ்ரீயின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் நன்றாக இருந்தது. அவரது reactionகள் நன்றாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பது முதலிலேயே தெரிந்துவிட்டால்கூட, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் justification புரிகிறது.
எப்போது சட்டென்று கதைக்குள் என்னால் நுழைய முடிந்தது என்றால், படத்தில் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பார்வையில்லாத பிச்சைக்காரியைப் பார்த்தபோது கூட அல்ல. அந்தப் பெண் பேச ஆரம்பித்தபோதுதான். அவரது குரல்தான் என்னை படத்தினுள் தள்ளியது. அவரது குரல் அத்தனை பொருத்தம். அதில் தெறிக்கும் உணர்ச்சிகள் மனதைப் பிழிகின்றன. அவர் பேசும்போது கவனித்துப் பாருங்கள். அது சொந்தக்குரலா அல்லது பின்னணிக்குரலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சரி. அந்தக் குரலில் எதுவோ இருக்கிறது. தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு மகனையோ அல்லது குழந்தையையோ அழைக்கும் குரல் அது. அந்தக் குழந்தையிடம் ஒரு உதவி கேட்கும்போது அது எப்படி இருக்கும்? செல்லமாக, இறைஞ்சி, கோபமே இல்லாமல் ஒரு வித blissful உணர்ச்சியோடு பேசியிருக்கிறார் அந்தக் குரலுக்கு சொந்தக்காரப்பெண். அந்தக் குரல்தான் இந்தப்படத்தின் தலையாய நடிகர். (ஞாநி ஸ்டைலில்) அந்தக் குரலுக்கு ஒரு பூங்கொத்து. அந்தக் குரலை கேட்கும்போதெல்லாம் அதில் இயல்பாக வெளிவரும் எமோஷன்களை மறக்கவே முடியாது.
அதேபோல், அந்த நடிகை ஒரு குறிப்பிட்ட காட்சியில் தரையில் விழுந்து கும்பிட்டுக் கதறுவதுபோல் வரும். பலமுறை. அந்தக் காட்சியின் இயல்புத்தன்மை எனக்குப் பிடித்தது. அந்தப் பெண்ணும் நன்றாக நடித்திருக்கிறார்.
கூடவே, படத்தில் மிக அருமையான காட்சிகளும் இல்லாமல் போகவில்லை. உதாரணம் – போலீஸ் சுடும்போது ஸ்ரீயின் கதாபாத்திரம் அதை தேமேயென்று பார்த்துக்கொண்டிருப்பது. அதனால் ஏற்படும் சாவு. அதற்கு ஸ்ரீயின் இறுதி reaction. இந்த இடத்தில், ஸ்ரீ அழும்போது, மிஷ்கினின் முகம் டக் டக்கென்று மாறுகிறது. முதலில் கோபம் – பின்னர் கருணை என்ற உணர்ச்சிகளை மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார் மிஷ்கின் என்ற நடிகர். இதைப்போல் மிஷ்கினின் நடிப்பை சொல்ல இன்னும் சில காட்சிகள் உண்டு. அதில் ஒன்று – பிறகு.
இதன்பின் தொடங்கும் இரண்டாவது பாதியும் பல சம்பவங்களால் செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஓரளவு ஒன்ற முடிகிறது. குறிப்பாக, படத்தில் வுல்ஃப் கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம். கிட்டத்தட்ட 3-4 நிமிடங்கள், ஒரே ஷாட்டில் இருக்கும் வசனம் இது. ‘நந்தலாலா’வில் இப்படி ஒரு வசனம் ஸ்னிக்தா பேசுவதாக வரும். அந்த வசனத்தை கேட்கும்போதெல்லாம் எரிச்சல் பிய்த்துக்கொண்டு வரும். இந்தப்படத்தில் அந்த ஒரே ஷாட் வசனம் ஆரம்பித்தபோதே அது அவசியம் அட்லீஸ்ட் 5 நிமிடங்கள் வரும் என்று தெரிந்துவிட்டது. ‘செத்தோம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன். தன்னிச்சையாக இரண்டு கைகளாலும் தலையை அழுந்தப் பிடித்துக்கொண்டேன். ஆனால், அந்த வசனம்தான் இந்தப்படத்தின் moodஐ மாற்றுகிறது. அந்த வசனத்தால்தான் இந்தப் படம் பலருக்கும் பிடிக்கப்போகிறது. படமே அதனால்கூட ஓடலாம். சிலர் தாரைதாரையாக கண்ணீர் விட்டுக் கதறிக்கூட அழ நேரிடலாம். கபர்தார். அந்த முழு வசனமுமே அட்டகாசம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அந்த வசனத்தில் ஓரிரு இடங்களில், நெஞ்சில் எதுவோ அசைந்தது.
படத்தின் இரண்டாம் பாதி எனக்குப் பிடித்ததற்கு இன்னொரு காரணம் – இளையராஜா. வெகுநாட்கள் கழித்து (வருடங்கள்), அவரது பின்னணி இசை இந்தப் படத்தில் கதையோடு ஒன்றியிருக்கிறது. எண்பதுகளில் மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களில் பின்னணி இசை எப்படி இருந்தது? அந்தப் படங்களை மறந்தாலும், இசையை மறக்கமுடியாது (ஹே ராமையும் சேர்த்துக்கொள்ளலாம். பிதாமகனில் ஓரிரு காட்சிகள்). இந்தப்படத்தின் இரண்டாம் பாதியில் அந்த அனுபவம் கிட்டியது. இளையராஜாவுக்கு இதுபோன்ற படங்கள்தான் தேவை. மிஷ்கின் ராஜாவை பெண்டு நிமிர்த்தியிருக்கிறார் என்பது தெரிகிறது. அப்படிப்பட்ட நபரால்தான் ஒரு இசையமைப்பாளருக்குள் இருக்கும் திறமையை வெளியே பிடுங்கிப்போட முடியும். இந்தப் படத்தின் இசையை படம் பார்க்கையில் காட்சிகளோடு சேர்ந்து கேளுங்கள்.
வழக்கமாக மிஷ்கின் படங்களில் இருக்கும் அதே குறைபாடுகள் அப்படியப்படியே இந்தப்படத்திலும் இருக்கின்றன. அவைகளை மிஷ்கின் மாற்றுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு உதாரணம் – படத்தில் வரும் சொங்கி வில்லன். இந்த வில்லனின் உடல்மொழியை கவனியுங்கள். எத்தனை செயற்கையாக இருக்கிறது என்பது தெரியும். குறிப்பாக அவன் கைகளை ஆட்டி ‘யெஸ்ஸ்ஸ்’ என்று சொல்லும்போது. அதேபோல் அவனது வசனங்கள். ஆஃப்டரால் நம்மாலேயே இது கவனிக்கப்படும்போது, மிஷ்கின் ஏன் இதை கவனிக்கத் தவறுகிறார்? இத்தகைய செயற்கையான ஷாட்களை குறித்து வைத்துக்கொண்டு காண்பிக்கக்கூட முடியும். அவ்வளவு இருக்கின்றன.
இருந்தாலும், ‘முகமூடி’ போன்ற ஒரு படத்தை அளித்த மிஷ்கினிடமிருந்து இது ஒரு வேறுபட்ட படம். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் எந்தத் தமிழ்ப்படத்தை விடவும் இந்தப் படம் நன்றாக ஓடுவதற்குத் தகுதியானது.
மிஷ்கினை நேரில் சந்திக்கும்போது ஒரு கேள்வி இருக்கிறது.
அது ஏங்க எல்லா கேரக்டருமே திடீர்னு பயங்கர ஸ்லோவா ரியாக்ட் செய்யிறாங்க? ஒண்ணு அசையாமல் நிக்கிறது; இல்லாட்டி வானத்தையோ பூமியையோ பார்க்குறது; இல்லாட்டி மெதுவா மூஞ்சியை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்புறது.. இதுனால நீங்க சொல்லவரும் செய்திதான் என்ன? இதன் உபகேள்வி – ‘நீங்க இந்த மாதிரி ஷாட்களை வைக்க நினைக்கும்போது அதன் அடிப்படை காரணம் என்ன? ஒருவேளை தகாஷி கிடானோவின் பாதிப்பா? ஆனா அவரு படங்களில் இந்த ஷாட்கள் செயற்கையா தெரியாதே? ஒருவேளை உங்க படங்களில் சில காட்சிகள் வேணும்னே செயற்கையா தெரியணும்னு நினைச்சே அப்படி வெக்கிறீங்களா?’
இன்னொன்று – ‘நடிக்கவைக்கும்போதே நடிகர்கள் செயற்கையா நடிக்கிறது உங்களுக்கு தெரியாதா? ஆம் எனில் ஏன்?’
பி.குக்கள்
1. இந்தப்படத்தின் தீம் தமிழ்ப்படங்களில் ஏற்கனவே கையாளப்பட்டிருக்கிறது. 1972ல் சிவாஜி நடித்த ‘நீதி’ படம் அப்படிப்பட்டதே (அந்தப்படம் அதே வருட ஆரம்பத்தில் ஹிந்தியில் வெளிவந்த ராஜேஷ் கன்னாவின் ‘துஷ்மன்’ படத்தின் ரீமேக் என்று நினைக்கிறேன். ‘காப்பி’ என்று சொல்லாமல் ரீமேக் என்று சொன்னதன் காரணம், தயாரித்திருப்பவர் பாலாஜி).
2. படத்தின் டைட்டில், மிஷ்கின் அந்த வீடியோ பேட்டியில் சொல்வதுபோல, ஸ்ரீயின் கதாபாத்திரத்தையும் மிஷ்கினின் பாத்திரத்தையும் குறித்தால் கூட, அதைவிட நெருக்கமான காரணம் வேறொன்று உண்டு. அது என்ன என்பதை தியேட்டரில் பாருங்கள்.
3. படத்தைப்பற்றிய வேறு சில விஷயங்களை மிஷ்கினே சொல்லியிருக்கிறார். நான் பார்த்ததிலேயே இதுதான் அவரது சற்றே ‘அடக்கமான’ பேட்டி. ‘சற்றே’ என்று சொல்லியிருப்பதன் காரணம் பேட்டியை பார்த்தால் தெரியும்.

நன்றி  :தினகரன் நாளிதழ் ScorpRajesh Da 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...