முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார். 



அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் வேலை செய்யவில்லை. ஃபேஸ்புக் இணைப்பு இருக்கிறது. அந்த எண்ணுக்கு அழைத்தால் எந்த பதிலும் இல்லை. என்ன ஆனார்? எப்படி இருக்கிறார் என்று எதுவும் தெரியவில்லை. 

‘முதல் தளத்தில் மூன்று குடும்பங்கள் இருக்கிறோம். தண்ணீர் தரைதளத்தை மூழ்கடித்துவிட்டது. குடிப்பதற்கு வெறும் பத்து லிட்டர் தண்ணீர்தான் இருக்கிறது. எங்களுடன் குழந்தை ஒன்றும் இருக்கிறது’ என்று தகவல் வந்திருந்தது. பெரும்பாலான உதவி எண்கள் வேலை செய்யவில்லை. எந்த செல்போனும் உபயோகத்தில் இல்லை. யாருக்கும் யாருடனும் தொடர்பு இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் தண்ணீருக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். மீட்புக் குழுவினரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அந்தக் குழுவினரில் தொண்ணூறு சதவீதம் பேர் தன்னார்வத்தில் சேவை செய்ய வந்தவர்கள். அரசு அதிகாரிகள் எங்கே போனார்கள் என்று மக்கள் கேட்பார்களா இல்லையா? 

அரசின் கீழ்மட்ட ஊழியர்களைக் குறை சொல்ல முடியாது. மின்வாரியத்தில் லைன்மேனாக வேலை செய்பவர் என்ன செய்ய முடியும்? காவல்துறையின் கான்ஸ்டபிள் என்ன செய்வார்? மேல் மட்ட அதிகாரிகளுக்கு அறிவு வேண்டும். அதிகாரிகளை வழிநடத்த அமைச்சர்களுக்குத் தெரிய வேண்டும். அமைச்சர்களை முதலமைச்சர் கண்காணிக்க வேண்டும்.  எந்த இடம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து அந்த இடத்திற்கு ஆர்வலர்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும். பிரச்சினை மிகுந்த இடங்களில் மீட்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்திருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ஐம்பது பேர் கொண்ட குழுவை அமைத்த புரட்சித்தலைவி ஏன் வாயைத் திறக்கவில்லை?  பேரிடரைச் சமாளிப்பதற்காக முப்பது அமைச்சர்கள் தலைமையில் முப்பது குழுக்கள். அதில் கவுன்சிலர்களையும் கார்போரேஷன் அதிகாரிகளையும் உள்ளூர்வாசிகளையும் நியமித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்திருக்க முடியாதா? இடைத்தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் வாக்கு குறைந்தால் அம்மா தம்மை டம்மியாக்கிவிடுவார் என்று மண்ணைக் கவ்விக் கொண்டு பணி செய்த அமைச்சர்களுக்கு அதே போன்ற எச்சரிக்கையை வழங்கியிருக்க முடியாதா என்ன?

அமைச்சர்கள் வேண்டாம். மேயர் எங்கே போனார்? யார் மைக்கை நீட்டினாலும் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார். குறைந்தபட்சம் பேசுங்கள். பிரச்சினை இருக்கிறது. நிலைமையைச் சீராக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நம்பிக்கையாவது ஊட்டுங்கள். அதைக் கூட ஏன் பேசுவதில்லை? எது உங்களைத் தடுக்கிறது? சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதியிடம் நியூஸ் 7 செய்தியாளர் ஒலிவாங்கியை நீட்டினால் எட்டிக் குதித்து ஓடுகிறார். மேடைகளில் எதிர்கட்சிகளைப் பந்தாடத் தெரிந்தவருக்கு டிவி சானலின் மைக் மீது ஏன் அவ்வளவு பயம்? யாருமே பேசக் கூடாது என்கிற தடையுத்தரவு அமலில் இருக்கும் போலிருக்கிறது.

தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலே பாதிப் பிரச்சினை குறைந்துவிடும். ஆனால் எதுவுமே வெளிப்படையாக இல்லை. ‘நிலைமை சீராக இருக்கிறது’ என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஜெயாவில் செய்தி வாசிக்கிறார்கள். மழைக்கே பொறுக்கவில்லை. நிலையத்திற்குள் புகுந்து காலி செய்துவிட்டது. ஒருபக்கம் நிலைமை சரியாக இருக்கிறது புருடாவிட்டால் மற்றொரு சானலில் சென்னையைக் காணவில்லை என்று அடித்துவிடுகிறார்கள். சென்னையைத் தாண்டியிருக்கும் மக்கள் பரிதவித்துப் போய்விட்டார்கள். இன்னமும் சென்னையில் இருக்கும் தங்களின் உறவுகளைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனைகளில் நேற்றுக் காலையிலும் முந்தினநாட்களிலும் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. மருத்துவர்கள் அவரவர் வீடுகளில் சிக்கியிருப்பார்கள். உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டன. மருந்து வாங்கக் கூட வெளியே செல்ல முடியாத நிலைமை. நோயாளியுடன் இருப்பவர்களுக்கு கையும் ஓடியிருக்காது காலும் ஓடியிருக்காது. கணவன் ஒரு பக்கமும் மனைவி ஒருபக்கமும் சிக்கித் தவித்தவர்கள், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பமுடியாத பெற்றோர்கள்- வீட்டில் தனியாகத் தவிக்கும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பால் வாங்கக் கூட வழியில்லாமல் குழந்தையை வைத்துக் கொண்டு தவித்தவர்கள், உணவுக்கு வழியில்லாமல் வீடுகளில் சிக்கிக் கொண்ட முதியவர்கள், மாத்திரை தீர்ந்து போன நோயாளிகள்- யோசித்துப் பார்த்தால் எவ்வளவு கொடுமை?

கடந்த முறை மழை பெய்து எச்சரிக்கை செய்திருந்தது. அப்பொழுதாவது தமிழக அரசு விழித்திருக்க வேண்டாமா? நனையாமல் வேனில் அமர்ந்து ஒரு வலம் வந்து சென்றால் போதுமா? வண்டிக்குக் கூட குடைபிடித்தார்கள். குடைபிடித்தால் தொலைகிறது. அப்பொழுதே அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் எந்த இடங்களில் அடைப்பு இருக்கிறது என்பதையாவது கவனித்திருக்கலாம். மெட்ரோ பாலம் கட்டுமிடத்தில் இருந்த அடைப்பு அண்ணாசாலையை மூழ்கடித்திருக்கிறது. சென்னை முழுவதையும் ஒரு வாரத்தில் சரி செய்திருக்க முடியாது. ஆனால் முடிந்த அளவு வேலையைச் செய்திருக்கலாம். சில இடங்களிலாவது பிரச்சினைகளைக் குறைத்திருக்க முடியாதா?

குறைந்தபட்சம் ஏரிகளைத் திறந்துவிட்டு கொஞ்சம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். கடந்த ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்துவிட்டிருக்கலாம். மேலே வானம் கொட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் பல்லாயிரம் கன அடி நீரைத் திறந்துவிட்டால் அது எங்கே போகும்? தமிழ்நாட்டில் முக்கால்வாசிப்பேருக்குத் தெரியாத பவானிசாகர் அணையைத் திறக்கும் போது கூட ‘நான் உத்தரவிட்டேன்’ என்று சுயபுராணம் பாடுகிற முதலமைச்சர் சென்னையின் ஏரிகளைத் திறந்துவிடுவது குறித்து ஏன் வாயே திறக்கவில்லை?

வெள்ளநீருக்கு சரியான வடிகால் சரியாக இல்லை என்பதெல்லாம் நீண்டகாலப் பிரச்சினை. இவர்கள் அவர்கள் மீதும் அவர்கள் இவர்கள் மீதும் குற்றம் சுமத்துவார்கள். தொலையட்டும். தற்காலிகமாகவேனும் ஏன் பெரும்பாலான அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்திற்கு வரவில்லை என்பதுதான் கேள்வி. பயம். மக்கள் சட்டையைப் பிடித்தால் தேர்தல் சமயத்தில் பெயர் நாறி விடும் என்கிற பயம். இல்லையா?

பெரிய மழைதான். யார் இல்லையென்று சொன்னார்கள். ஆனால் ஏன் இவ்வளவு சோப்பலாங்கித்தனமாக ஓர் அரசு இயங்குகிறது என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

பணி நீட்டிப்புக் கொடுத்து வைத்திருக்கும் ரமணன் இன்னமும் ஒரே பல்லவியைத்தான் பாடிக் கொண்டிருக்கிறார். ‘தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சில இடங்களில் லேசானது முதல் மித மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது’. பல இடங்கள் என்றால் எவை? தூத்துக்குடியும் ஒரு இடம்தான். தாம்பரமும் ஒரு இடம்தான். சரி போகட்டும். அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்று அவர் சொல்வதை நம்பி அரசு பாதுகாப்பான இடங்கள் எவை என்பதையாவது அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டுமல்லவா? கூவத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிற நேரம் வரைக்கும் அதன் கரைகளில் வாழும் குடிசைவாசிகளுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை. மழை கடுமையாக இருக்கப் போகிறது என்கிற எச்சரிக்கையைக் கொடுத்திருந்தால் பாதிப் பேர் தங்களது மனைவி குழந்தைகளையாவது அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள். 

அரசு மிக மெத்தனமாக செயல்படுகிறது என்பதுதான் உண்மை. 

இவையெல்லாம் நேரடி பாதிப்புகள். நிறுவனங்கள் இயங்கவில்லை. தலைமைச் செயலகம் இயங்கவில்லை. பல நிறுவனங்களில் தண்ணீர் புகுந்து பல கோடிக்கணக்கான எந்திரங்கள் பழுதடைந்திருக்கின்றன. அரசு அலுவலகங்கள் மூடிக் கிடக்கிறன. வங்கிகள் செயல்படவில்லை. இனி புதுப் புது வைரஸ்களும் பாக்டீரியாக்களும் உருவாக்கவிருக்கும் நோய்கள், குடிநீரில் கலந்திருக்கும் சாக்கடைத் தண்ணீர், துண்டிக்கப்பட்ட மின்சாரக் கம்பிகள், தொலைபேசி இணைப்புகள், வாகனப்பழுதுகள், வீடுகளில் உண்டாகியிருக்கும் பாதிப்புகள் என பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வீணாகப் போயிருக்கிறது. இதற்கெல்லாம் யார் பொறுப்பு? யார் பதில் சொல்லப் போகிறார்கள்? தலைநகருக்கு வந்தால் அரைக்காசும் கால்காசும் சம்பாதித்துவிடலாம் என்று சொந்தங்களையும் ஊரையும் விட்டுவிட்டு வந்தவர்களுக்கு இயற்கை ஒரு அடியைக் கொடுத்திருக்கிறது என்றால் அடி விழுந்தவர்களின் மீது பெரும் பாறாங்கல்லைச் சுமந்து இந்த சோப்பலாங்கி அரசு வைத்திருக்கிறது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ” என் பெண் வருகிறாள் ” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில் , ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து ; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த , குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ” ஹாய்! ” என்றாள். ” என்னைத்தெரியுமா ?” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு. ” சொல்லுங்க ” என்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர் , ” இவருதான் ...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest