முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார். 



அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் வேலை செய்யவில்லை. ஃபேஸ்புக் இணைப்பு இருக்கிறது. அந்த எண்ணுக்கு அழைத்தால் எந்த பதிலும் இல்லை. என்ன ஆனார்? எப்படி இருக்கிறார் என்று எதுவும் தெரியவில்லை. 

‘முதல் தளத்தில் மூன்று குடும்பங்கள் இருக்கிறோம். தண்ணீர் தரைதளத்தை மூழ்கடித்துவிட்டது. குடிப்பதற்கு வெறும் பத்து லிட்டர் தண்ணீர்தான் இருக்கிறது. எங்களுடன் குழந்தை ஒன்றும் இருக்கிறது’ என்று தகவல் வந்திருந்தது. பெரும்பாலான உதவி எண்கள் வேலை செய்யவில்லை. எந்த செல்போனும் உபயோகத்தில் இல்லை. யாருக்கும் யாருடனும் தொடர்பு இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் தண்ணீருக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். மீட்புக் குழுவினரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அந்தக் குழுவினரில் தொண்ணூறு சதவீதம் பேர் தன்னார்வத்தில் சேவை செய்ய வந்தவர்கள். அரசு அதிகாரிகள் எங்கே போனார்கள் என்று மக்கள் கேட்பார்களா இல்லையா? 

அரசின் கீழ்மட்ட ஊழியர்களைக் குறை சொல்ல முடியாது. மின்வாரியத்தில் லைன்மேனாக வேலை செய்பவர் என்ன செய்ய முடியும்? காவல்துறையின் கான்ஸ்டபிள் என்ன செய்வார்? மேல் மட்ட அதிகாரிகளுக்கு அறிவு வேண்டும். அதிகாரிகளை வழிநடத்த அமைச்சர்களுக்குத் தெரிய வேண்டும். அமைச்சர்களை முதலமைச்சர் கண்காணிக்க வேண்டும்.  எந்த இடம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து அந்த இடத்திற்கு ஆர்வலர்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும். பிரச்சினை மிகுந்த இடங்களில் மீட்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்திருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ஐம்பது பேர் கொண்ட குழுவை அமைத்த புரட்சித்தலைவி ஏன் வாயைத் திறக்கவில்லை?  பேரிடரைச் சமாளிப்பதற்காக முப்பது அமைச்சர்கள் தலைமையில் முப்பது குழுக்கள். அதில் கவுன்சிலர்களையும் கார்போரேஷன் அதிகாரிகளையும் உள்ளூர்வாசிகளையும் நியமித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்திருக்க முடியாதா? இடைத்தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் வாக்கு குறைந்தால் அம்மா தம்மை டம்மியாக்கிவிடுவார் என்று மண்ணைக் கவ்விக் கொண்டு பணி செய்த அமைச்சர்களுக்கு அதே போன்ற எச்சரிக்கையை வழங்கியிருக்க முடியாதா என்ன?

அமைச்சர்கள் வேண்டாம். மேயர் எங்கே போனார்? யார் மைக்கை நீட்டினாலும் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார். குறைந்தபட்சம் பேசுங்கள். பிரச்சினை இருக்கிறது. நிலைமையைச் சீராக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நம்பிக்கையாவது ஊட்டுங்கள். அதைக் கூட ஏன் பேசுவதில்லை? எது உங்களைத் தடுக்கிறது? சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதியிடம் நியூஸ் 7 செய்தியாளர் ஒலிவாங்கியை நீட்டினால் எட்டிக் குதித்து ஓடுகிறார். மேடைகளில் எதிர்கட்சிகளைப் பந்தாடத் தெரிந்தவருக்கு டிவி சானலின் மைக் மீது ஏன் அவ்வளவு பயம்? யாருமே பேசக் கூடாது என்கிற தடையுத்தரவு அமலில் இருக்கும் போலிருக்கிறது.

தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலே பாதிப் பிரச்சினை குறைந்துவிடும். ஆனால் எதுவுமே வெளிப்படையாக இல்லை. ‘நிலைமை சீராக இருக்கிறது’ என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஜெயாவில் செய்தி வாசிக்கிறார்கள். மழைக்கே பொறுக்கவில்லை. நிலையத்திற்குள் புகுந்து காலி செய்துவிட்டது. ஒருபக்கம் நிலைமை சரியாக இருக்கிறது புருடாவிட்டால் மற்றொரு சானலில் சென்னையைக் காணவில்லை என்று அடித்துவிடுகிறார்கள். சென்னையைத் தாண்டியிருக்கும் மக்கள் பரிதவித்துப் போய்விட்டார்கள். இன்னமும் சென்னையில் இருக்கும் தங்களின் உறவுகளைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனைகளில் நேற்றுக் காலையிலும் முந்தினநாட்களிலும் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. மருத்துவர்கள் அவரவர் வீடுகளில் சிக்கியிருப்பார்கள். உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டன. மருந்து வாங்கக் கூட வெளியே செல்ல முடியாத நிலைமை. நோயாளியுடன் இருப்பவர்களுக்கு கையும் ஓடியிருக்காது காலும் ஓடியிருக்காது. கணவன் ஒரு பக்கமும் மனைவி ஒருபக்கமும் சிக்கித் தவித்தவர்கள், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பமுடியாத பெற்றோர்கள்- வீட்டில் தனியாகத் தவிக்கும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பால் வாங்கக் கூட வழியில்லாமல் குழந்தையை வைத்துக் கொண்டு தவித்தவர்கள், உணவுக்கு வழியில்லாமல் வீடுகளில் சிக்கிக் கொண்ட முதியவர்கள், மாத்திரை தீர்ந்து போன நோயாளிகள்- யோசித்துப் பார்த்தால் எவ்வளவு கொடுமை?

கடந்த முறை மழை பெய்து எச்சரிக்கை செய்திருந்தது. அப்பொழுதாவது தமிழக அரசு விழித்திருக்க வேண்டாமா? நனையாமல் வேனில் அமர்ந்து ஒரு வலம் வந்து சென்றால் போதுமா? வண்டிக்குக் கூட குடைபிடித்தார்கள். குடைபிடித்தால் தொலைகிறது. அப்பொழுதே அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் எந்த இடங்களில் அடைப்பு இருக்கிறது என்பதையாவது கவனித்திருக்கலாம். மெட்ரோ பாலம் கட்டுமிடத்தில் இருந்த அடைப்பு அண்ணாசாலையை மூழ்கடித்திருக்கிறது. சென்னை முழுவதையும் ஒரு வாரத்தில் சரி செய்திருக்க முடியாது. ஆனால் முடிந்த அளவு வேலையைச் செய்திருக்கலாம். சில இடங்களிலாவது பிரச்சினைகளைக் குறைத்திருக்க முடியாதா?

குறைந்தபட்சம் ஏரிகளைத் திறந்துவிட்டு கொஞ்சம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். கடந்த ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்துவிட்டிருக்கலாம். மேலே வானம் கொட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் பல்லாயிரம் கன அடி நீரைத் திறந்துவிட்டால் அது எங்கே போகும்? தமிழ்நாட்டில் முக்கால்வாசிப்பேருக்குத் தெரியாத பவானிசாகர் அணையைத் திறக்கும் போது கூட ‘நான் உத்தரவிட்டேன்’ என்று சுயபுராணம் பாடுகிற முதலமைச்சர் சென்னையின் ஏரிகளைத் திறந்துவிடுவது குறித்து ஏன் வாயே திறக்கவில்லை?

வெள்ளநீருக்கு சரியான வடிகால் சரியாக இல்லை என்பதெல்லாம் நீண்டகாலப் பிரச்சினை. இவர்கள் அவர்கள் மீதும் அவர்கள் இவர்கள் மீதும் குற்றம் சுமத்துவார்கள். தொலையட்டும். தற்காலிகமாகவேனும் ஏன் பெரும்பாலான அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்திற்கு வரவில்லை என்பதுதான் கேள்வி. பயம். மக்கள் சட்டையைப் பிடித்தால் தேர்தல் சமயத்தில் பெயர் நாறி விடும் என்கிற பயம். இல்லையா?

பெரிய மழைதான். யார் இல்லையென்று சொன்னார்கள். ஆனால் ஏன் இவ்வளவு சோப்பலாங்கித்தனமாக ஓர் அரசு இயங்குகிறது என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

பணி நீட்டிப்புக் கொடுத்து வைத்திருக்கும் ரமணன் இன்னமும் ஒரே பல்லவியைத்தான் பாடிக் கொண்டிருக்கிறார். ‘தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சில இடங்களில் லேசானது முதல் மித மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது’. பல இடங்கள் என்றால் எவை? தூத்துக்குடியும் ஒரு இடம்தான். தாம்பரமும் ஒரு இடம்தான். சரி போகட்டும். அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்று அவர் சொல்வதை நம்பி அரசு பாதுகாப்பான இடங்கள் எவை என்பதையாவது அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டுமல்லவா? கூவத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிற நேரம் வரைக்கும் அதன் கரைகளில் வாழும் குடிசைவாசிகளுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை. மழை கடுமையாக இருக்கப் போகிறது என்கிற எச்சரிக்கையைக் கொடுத்திருந்தால் பாதிப் பேர் தங்களது மனைவி குழந்தைகளையாவது அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள். 

அரசு மிக மெத்தனமாக செயல்படுகிறது என்பதுதான் உண்மை. 

இவையெல்லாம் நேரடி பாதிப்புகள். நிறுவனங்கள் இயங்கவில்லை. தலைமைச் செயலகம் இயங்கவில்லை. பல நிறுவனங்களில் தண்ணீர் புகுந்து பல கோடிக்கணக்கான எந்திரங்கள் பழுதடைந்திருக்கின்றன. அரசு அலுவலகங்கள் மூடிக் கிடக்கிறன. வங்கிகள் செயல்படவில்லை. இனி புதுப் புது வைரஸ்களும் பாக்டீரியாக்களும் உருவாக்கவிருக்கும் நோய்கள், குடிநீரில் கலந்திருக்கும் சாக்கடைத் தண்ணீர், துண்டிக்கப்பட்ட மின்சாரக் கம்பிகள், தொலைபேசி இணைப்புகள், வாகனப்பழுதுகள், வீடுகளில் உண்டாகியிருக்கும் பாதிப்புகள் என பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வீணாகப் போயிருக்கிறது. இதற்கெல்லாம் யார் பொறுப்பு? யார் பதில் சொல்லப் போகிறார்கள்? தலைநகருக்கு வந்தால் அரைக்காசும் கால்காசும் சம்பாதித்துவிடலாம் என்று சொந்தங்களையும் ஊரையும் விட்டுவிட்டு வந்தவர்களுக்கு இயற்கை ஒரு அடியைக் கொடுத்திருக்கிறது என்றால் அடி விழுந்தவர்களின் மீது பெரும் பாறாங்கல்லைச் சுமந்து இந்த சோப்பலாங்கி அரசு வைத்திருக்கிறது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...