முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"இவள்"களுள் நான் 25+



21 22 23 வயதின் யுவதிகள் அணியும் ஆடைகள் எல்லாம் கவர்ச்சியாக உள்ளதா? அல்லது இவர்கள் கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறார்களா? என்று தெரியவில்லையே, இவள்கள் பெற்றோர் எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள் போல், முன்பெல்லாம் சுடிதாரின் தோள்பட்டையை மேலேற்றி விடுவது வழக்கமாக இருந்தது ஆனால் இங்கொருத்தி முன்னிழுத்து விட்டு மெலிதான க்ளிவேஜ் தெரியும்படி பார்த்துக்கொள்கிறாள். துப்பட்டாவையும் கழுத்தை ஒட்டி போட்டுகொண்டு ச்சே என்ன இதெல்லாம். சுடியும் முட்டுக்கு மேல் வரைக்கும் தான் இருக்கிறது, கேட்டால் ஷார்ட் என்பாள். வயிறு flat ஆ இருப்பதாலயே அவளுக்கு எல்லா ஆடைகளும் பொருந்துகிறது, மார்பு தூக்கி வைத்தாற்போல் இருக்கிறது கண்டிப்பாக புஷ்அப் ப்ரா போட்டு இருப்பாள். இன்னொருத்தியின் தொப்புளில் சிறியதாக ஒரு கம்மல். எப்படி வெட்கமே இல்லாமல் காது குத்துவது போல காண்பித்துக்கொண்டிருந்திருப்பாள்? ஜீன்ஸ் ஸ்லீவ்லெஸ் டாப்ல ஒருத்தி அனாயசமாக ஒருவனின் பைக் பின்னால் இருபக்கமும் கால் போட்டு அமர்ந்து கட்டிக்கொள்கிறாள், டெய்லியும் அக்குளை சேவ் செய்வாளா இருக்கும். நடக்கும் போது தாளத்திற்கு ஏற்ற வகையில் அசையும் புட்டம், ஹீல்ஸ் போட்டு பழகி இருப்பாள். எங்கோ படித்தேன் ஹீல்ஸ் செருப்பு போட்டால் பிரசவத்தில் சிக்கல் வரும் என்று. சர்வ சாதரணமாக ஒருவனின் தோளில் கைவைத்து தாங்கியபடி ஏதோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டு…. எப்படி முடிகிறது? இந்த இளைய சமுதாயம் ஏன் இப்படி வீணாகிறது? நல்லவேளை நான் அப்படியெல்லாம் இல்லை. இப்படியெல்லாம் உடம்பை வெளிக்காட்டாமலே என்னை பல ஆண்கள் திரும்பிப்பார்ப்பார்கள் அது தானே என் பெருமை. – இதுவெல்லாமே இளைய சமுதாயத்தின் மீதான தன்னுடைய அக்கறை என்றே நம்பினாள் மதுமிதா. அப்படி நம்புவது அவளின் 35 வயதுக்கு ஆசுவாசமாக இருந்தது.
எனக்கு மகள் இருந்தால் அவளும் இப்படிதான் ஆடை அணிவாள் அவளை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் தவிர அது அவசியமற்ற ஒன்று. அதெப்படி என் மகளை மட்டும் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு பார்க்க முடிகிறது என்ற கேள்வி ஒன்று உண்டு. ஆசைகள் எல்லாருக்கும் பொதுதானே என்ற சமாதானமும் உண்டு. என் உதிரம் என்பதால் வரும் சலுகைகள் அவை. மகள் இல்லை என்பதால் அந்த பிரச்சினைக்கு போக வேண்டாம் தற்போதைய பிரச்சினை மகன் தான். நேற்று துணி துவைத்துக்கொண்டிருக்கும் போது அவன் உடுத்திய கைலியில் விந்துப்படிமம். அவனுக்கு தனியறை கொடுத்தது தப்போ? இது இயல்பு தானா? என்ற மனதை அரிக்கும் கேள்விகள் தான்டி, அவன் திடீரென்று குழந்தையில் இருந்து இளைஞன் ஆகிவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதே பதைபதைப்பு தான் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்த பின்னும் இருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கிறான், டிவியில் முத்தக்காட்சிகள் வந்தால் அவனே சேனலை மாற்றும் அளவுக்கு பக்குவம் இருக்கிறது என்றெல்லாம் பெருமையில் இருந்தேனே… என்ன இப்படி ஆகிவிட்டது. இதை அவனிடம் கேட்க முடியாது.. சரி கணவனிடம் சொன்னால் அந்த மனுஷனுக்கு பிள்ளைய போட்டு அடிக்கத்தான் தெரியும். வேலை அலைச்சலில் வார நாட்களில் வருபவரிடம் இதை ஏன் சொல்லிக்கொண்டு என்றொரு எண்ணம் வேறு. தோழியிடம் சொன்னேன் அவள் கெக்கேபிக்கே என்று சிரித்து உன் மகன் கல்யாணத்துக்கு தயாராகிட்டான் என்று கேலி பேசுகிறாள். ஒழுங்கா படிப்பானா? டாக்டர்ட்ட கவுன்சலிங் கூட்டிட்டு போகலாமா? பேசாம நெட் கனெக்சன கட் பண்ணிட்டா என்ன? கேள்விகள் கேள்விகள் கேள்விகள் கடந்து அவனையும் அவன் வயதையும் புரிந்துகொள்வதற்கு சில மணி நேரங்கள் பிடித்தது. காமத்தை கடந்துவந்தால் காதல் பிறக்கும். அவன் காமத்தை அவன் கடக்கிறான், பெருங்கருணை பிறக்கிறது. பிறந்து பசியிலவன் அழுத போது தோன்றிய அதே கரிசம்.
மகன் வளர்ந்துவிட்டான் எனத்தெரிந்ததும் எனக்கு இன்னும் வயதாகிவிட்டது போல உணர்கிறேன். ஒன்றிரண்டு நரைமுடிகள், பிரசவச்சுருக்க வயிறு. கொஞ்சம் குண்டடித்திருகிறேன், அவ்வளவுதான் மற்றபடிக்கு நான் அழகாகதான் இருக்கிறேன். அதனால் தான் இந்த சரவணன் என் பின்னாலயே சுற்றுகிறான். அவனுக்கும் என் வயது தான் ஆகிறது. ஆள் பார்க்கவும் ஓரளவுக்கு ஜெய் மாதிரி இருப்பான். இவனை சமாளிப்பது பெரும் பிரயத்தனம். ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு முகத்தை திருப்பிக்கொள்வதும் சாத்தியமில்லாத ஒன்று.ஒன்றாக காப்பி குடிப்பது ஒன்றாக சாப்பிடுவது என்று பரிணமித்திருந்தது அவனோடான பழக்கம், அவனின் கேள்விகளுக்கு சிரிக்காமல் பதில் சொல்ல முடியவில்லை. இதுவெல்லாம் புதியதாக இருக்கிறது யாரும் என்னிடம் இப்படியெல்லாம் பேசியதே இல்லை. பெண்ணின் ஆடைக்குறைப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து, தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் விர்ஜின் இல்லை என்றுவந்து முடிப்பான். புணர்வு தொடர்பானது என்று அறிந்ததுமே சட்டென்று உள்ளங்கை வியர்க்க துவங்குகிறது. உடனே அந்நேரத்தில் நான் பேச்சை மாற்றுவதற்கு முன் அவனே மாற்றிவிடுகிறான்/.. தொடர்பே இல்லாமல் – உங்களுக்கு எப்போதுதான் வயதாகும்? இப்படி அவன் கேட்க வரும் சந்தோசம் அவன் பேச்சை கேட்கத்தூண்டியது.
ப்ளவுஸ் எல்லாம் எங்க ஸ்டிச் பண்றிங்க நல்லா fit ஆ இருக்கு, என் மனைவிக்கு தான் நல்ல டெய்லர் அமையவே இல்ல. என அவன் பார்க்கின்ற இடங்களை வெளிப்படையாக சொல்லிக்காட்டும் உத்தியை வியக்கிறேன். மனம் மூளைக்கு கட்டளை இட்டுக்கொண்டே இருக்கிறது. ”பதில் சொல்லாத மதுமிதா”
கண்ணு சோர்வா இருக்கு நைட் நேரங்கழிச்சு தூங்கினிர்களா? மனம் பலவித இரட்டை அர்த்தங்களை சொல்கிறது, ”பதில் சொல்லாமல் சிரித்துவை மதுமிதா”
இந்த கவிதை எப்படி இருக்கிறது பாருங்கள்
”தேவதைகள் நீலச்சேலையில் வரலாம்
நிரம்பியிருக்கும்
மது(மிதா)க்கோப்பை போல” / ‘புரியவில்லை என்று திருப்பிக்கொடுத்துவிடு மதுமிதா’
சிவப்பு, நீலம், இளமஞ்சள், ரோஸ், ஆரஞ் – என்ன இதெல்லாம்?
இதெல்லாம் போன வாரம் நீங்க கட்டுன சேலை நிறங்கள். – ஓ! வெகுவாக கவனிக்கிறான் ”கவனம் மதுமிதா”
நாளைக்கு என்ன கலர் சேலை உடுத்துவிங்க சொல்லுங்க ”’தெரியாதென்று சொல் மதுமிதா இல்லையென்றால் இவனுக்காகவே சொன்ன வண்ண சேலையை உடுத்த வேண்டி வரும்”
புதன் கிழமை ஒரு மல்ட்டி கலர் சேலை இருக்கு அதைதான் உடுத்தணும்,நாளைக்கு தெரியல.
புதனன்று மல்ட்டிகலர் சேலையை தொட்டதும் வந்தது அவன் நினைவுதான், புதன் வியாழன் இரண்டு நாட்களாக அவன் வேலைக்கு வரவில்லை அவனை தேடுகிறேன். வேலைகளை முடித்துவிட்டு படுக்க வந்த போது அலைபேசி ஒளிர்ந்தது. அவன் செய்தி தான்
kiss you madhumitha.
என்ன இது என்று ஆத்திரம் கோபம் கிளர்ச்சியில் பதில் அனுப்பும் முன் அடுத்த செய்தி
sorry, ,miss you madhumitha
hello
hello
hello
enna aachu?
அவன் பார்வைகளை உள்ளூர ரசிக்கிறேன். ரசிப்பது வெளித்தெரியாமல் இருக்க மனமுதிர்வு ஏற்பட்டதாக நடிக்கிறேன். பதின்மத்தில் பெண்கள் பின்னால் ஆண்கள் சுற்ற ஆரம்பிக்கும் ஒரு பருவம் வரும் அல்லவா?! அப்போதே எனக்கு திருமணம் செய்து வைத்து அந்த ஆசையை நீர்த்துப்போகவைத்துவிட்டார்கள். இப்போது இவன் பேச்சுக்களும் பார்வைகளும் அதை மீட்டுக்கொடுப்பதாக தோன்றுகிறது. இளைஞர்கள் காதலில் இருந்தால் எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாம மந்திரித்து விட்டது போல திரிவார்களே அப்படியான ஒரு நிலை. இது தவறா சரியா என்ற தர்க்க ரீதி நியாயங்கள் எப்பொதும் ஒரு முடிவிற்கு வரப்போவதே இல்லை. என்னை ரசிக்கிறாய் ரசித்துவிட்டு போ என்பதில் உள்ள ஆபத்து அவன் ரசிப்பதை ரசிக்கத்தொடங்கிவிடுதல்தான்.
மறுநாள் வேலைக்கு வந்தான்
என்னங்க மெசேஜ்க்கு ரிப்ளை செய்யவே இல்ல?
…எதுக்கு மெசேஜ் பண்ணுனிங்க?
சும்மாதான் உங்களை தேடுச்சி
….ஏன்?
ஏனோ!
சரி சொல்லுங்க ஏன் ரிப்ளை பண்ணல மொபைல்ல பேலன்ஸ் இல்லியா? ச்சே தெரிஞ்சா ரீசார்ஜ் செஞ்சு விட்டுருப்பேனே.
….பேலன்ஸ்லாம் இருக்கு.. ரிப்ளை அனுப்பனும்ன்னு தோணல
கோபமா இருக்கிங்களா?
….இல்லியே
sorry ங்க அது நான் உங்களுக்கு வேணும்ன்னு அனுப்பல வேற ஒருத்தங்களுக்கு அனுப்ப வேண்டியது உங்களுக்கு மிஸ்பிளேஸ் ஆகிட்டு.
….எது kiss you வா?
இல்லங்க அதுக்கு அடுத்து அனுப்பியவை.
….இல்லியே எனக்கு அதுக்கு அடுத்து ஒன்னும் மெசெஜ் வரலியே
வரலியா..? இதெல்லாம் என்று sent message காண்பித்தான்.
ummmaaa
enna dress?
ippa naan anka varavaa?
i love you di
லேசாக தலை சுற்றியது. அவன் மெசேஜ் காரணம் அல்ல. அது என் மொபைலில் காணாமல் போனதின் காரணம் தேடி.
அவன் நம்பரும் டெலிட் செய்யப்பட்டு இருந்தது.
குழப்பத்தில் தெளிந்து வீட்டுக்கு திரும்பும்போது க்ளீவேஜ் தொப்புள் யுவதிகள் புனிதைகளாக தெரிந்தார்கள். நான்தான் அசிங்கமாக போய்விட்டேன்..
பரவாயில்லை
என்னைப் புனிதப்படுத்தும் பெருங்கருணையை என் மகன் வழங்குவான்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...