முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"இவள்"களுள் நான் 25+



21 22 23 வயதின் யுவதிகள் அணியும் ஆடைகள் எல்லாம் கவர்ச்சியாக உள்ளதா? அல்லது இவர்கள் கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறார்களா? என்று தெரியவில்லையே, இவள்கள் பெற்றோர் எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள் போல், முன்பெல்லாம் சுடிதாரின் தோள்பட்டையை மேலேற்றி விடுவது வழக்கமாக இருந்தது ஆனால் இங்கொருத்தி முன்னிழுத்து விட்டு மெலிதான க்ளிவேஜ் தெரியும்படி பார்த்துக்கொள்கிறாள். துப்பட்டாவையும் கழுத்தை ஒட்டி போட்டுகொண்டு ச்சே என்ன இதெல்லாம். சுடியும் முட்டுக்கு மேல் வரைக்கும் தான் இருக்கிறது, கேட்டால் ஷார்ட் என்பாள். வயிறு flat ஆ இருப்பதாலயே அவளுக்கு எல்லா ஆடைகளும் பொருந்துகிறது, மார்பு தூக்கி வைத்தாற்போல் இருக்கிறது கண்டிப்பாக புஷ்அப் ப்ரா போட்டு இருப்பாள். இன்னொருத்தியின் தொப்புளில் சிறியதாக ஒரு கம்மல். எப்படி வெட்கமே இல்லாமல் காது குத்துவது போல காண்பித்துக்கொண்டிருந்திருப்பாள்? ஜீன்ஸ் ஸ்லீவ்லெஸ் டாப்ல ஒருத்தி அனாயசமாக ஒருவனின் பைக் பின்னால் இருபக்கமும் கால் போட்டு அமர்ந்து கட்டிக்கொள்கிறாள், டெய்லியும் அக்குளை சேவ் செய்வாளா இருக்கும். நடக்கும் போது தாளத்திற்கு ஏற்ற வகையில் அசையும் புட்டம், ஹீல்ஸ் போட்டு பழகி இருப்பாள். எங்கோ படித்தேன் ஹீல்ஸ் செருப்பு போட்டால் பிரசவத்தில் சிக்கல் வரும் என்று. சர்வ சாதரணமாக ஒருவனின் தோளில் கைவைத்து தாங்கியபடி ஏதோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டு…. எப்படி முடிகிறது? இந்த இளைய சமுதாயம் ஏன் இப்படி வீணாகிறது? நல்லவேளை நான் அப்படியெல்லாம் இல்லை. இப்படியெல்லாம் உடம்பை வெளிக்காட்டாமலே என்னை பல ஆண்கள் திரும்பிப்பார்ப்பார்கள் அது தானே என் பெருமை. – இதுவெல்லாமே இளைய சமுதாயத்தின் மீதான தன்னுடைய அக்கறை என்றே நம்பினாள் மதுமிதா. அப்படி நம்புவது அவளின் 35 வயதுக்கு ஆசுவாசமாக இருந்தது.
எனக்கு மகள் இருந்தால் அவளும் இப்படிதான் ஆடை அணிவாள் அவளை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் தவிர அது அவசியமற்ற ஒன்று. அதெப்படி என் மகளை மட்டும் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு பார்க்க முடிகிறது என்ற கேள்வி ஒன்று உண்டு. ஆசைகள் எல்லாருக்கும் பொதுதானே என்ற சமாதானமும் உண்டு. என் உதிரம் என்பதால் வரும் சலுகைகள் அவை. மகள் இல்லை என்பதால் அந்த பிரச்சினைக்கு போக வேண்டாம் தற்போதைய பிரச்சினை மகன் தான். நேற்று துணி துவைத்துக்கொண்டிருக்கும் போது அவன் உடுத்திய கைலியில் விந்துப்படிமம். அவனுக்கு தனியறை கொடுத்தது தப்போ? இது இயல்பு தானா? என்ற மனதை அரிக்கும் கேள்விகள் தான்டி, அவன் திடீரென்று குழந்தையில் இருந்து இளைஞன் ஆகிவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதே பதைபதைப்பு தான் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்த பின்னும் இருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கிறான், டிவியில் முத்தக்காட்சிகள் வந்தால் அவனே சேனலை மாற்றும் அளவுக்கு பக்குவம் இருக்கிறது என்றெல்லாம் பெருமையில் இருந்தேனே… என்ன இப்படி ஆகிவிட்டது. இதை அவனிடம் கேட்க முடியாது.. சரி கணவனிடம் சொன்னால் அந்த மனுஷனுக்கு பிள்ளைய போட்டு அடிக்கத்தான் தெரியும். வேலை அலைச்சலில் வார நாட்களில் வருபவரிடம் இதை ஏன் சொல்லிக்கொண்டு என்றொரு எண்ணம் வேறு. தோழியிடம் சொன்னேன் அவள் கெக்கேபிக்கே என்று சிரித்து உன் மகன் கல்யாணத்துக்கு தயாராகிட்டான் என்று கேலி பேசுகிறாள். ஒழுங்கா படிப்பானா? டாக்டர்ட்ட கவுன்சலிங் கூட்டிட்டு போகலாமா? பேசாம நெட் கனெக்சன கட் பண்ணிட்டா என்ன? கேள்விகள் கேள்விகள் கேள்விகள் கடந்து அவனையும் அவன் வயதையும் புரிந்துகொள்வதற்கு சில மணி நேரங்கள் பிடித்தது. காமத்தை கடந்துவந்தால் காதல் பிறக்கும். அவன் காமத்தை அவன் கடக்கிறான், பெருங்கருணை பிறக்கிறது. பிறந்து பசியிலவன் அழுத போது தோன்றிய அதே கரிசம்.
மகன் வளர்ந்துவிட்டான் எனத்தெரிந்ததும் எனக்கு இன்னும் வயதாகிவிட்டது போல உணர்கிறேன். ஒன்றிரண்டு நரைமுடிகள், பிரசவச்சுருக்க வயிறு. கொஞ்சம் குண்டடித்திருகிறேன், அவ்வளவுதான் மற்றபடிக்கு நான் அழகாகதான் இருக்கிறேன். அதனால் தான் இந்த சரவணன் என் பின்னாலயே சுற்றுகிறான். அவனுக்கும் என் வயது தான் ஆகிறது. ஆள் பார்க்கவும் ஓரளவுக்கு ஜெய் மாதிரி இருப்பான். இவனை சமாளிப்பது பெரும் பிரயத்தனம். ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு முகத்தை திருப்பிக்கொள்வதும் சாத்தியமில்லாத ஒன்று.ஒன்றாக காப்பி குடிப்பது ஒன்றாக சாப்பிடுவது என்று பரிணமித்திருந்தது அவனோடான பழக்கம், அவனின் கேள்விகளுக்கு சிரிக்காமல் பதில் சொல்ல முடியவில்லை. இதுவெல்லாம் புதியதாக இருக்கிறது யாரும் என்னிடம் இப்படியெல்லாம் பேசியதே இல்லை. பெண்ணின் ஆடைக்குறைப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து, தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் விர்ஜின் இல்லை என்றுவந்து முடிப்பான். புணர்வு தொடர்பானது என்று அறிந்ததுமே சட்டென்று உள்ளங்கை வியர்க்க துவங்குகிறது. உடனே அந்நேரத்தில் நான் பேச்சை மாற்றுவதற்கு முன் அவனே மாற்றிவிடுகிறான்/.. தொடர்பே இல்லாமல் – உங்களுக்கு எப்போதுதான் வயதாகும்? இப்படி அவன் கேட்க வரும் சந்தோசம் அவன் பேச்சை கேட்கத்தூண்டியது.
ப்ளவுஸ் எல்லாம் எங்க ஸ்டிச் பண்றிங்க நல்லா fit ஆ இருக்கு, என் மனைவிக்கு தான் நல்ல டெய்லர் அமையவே இல்ல. என அவன் பார்க்கின்ற இடங்களை வெளிப்படையாக சொல்லிக்காட்டும் உத்தியை வியக்கிறேன். மனம் மூளைக்கு கட்டளை இட்டுக்கொண்டே இருக்கிறது. ”பதில் சொல்லாத மதுமிதா”
கண்ணு சோர்வா இருக்கு நைட் நேரங்கழிச்சு தூங்கினிர்களா? மனம் பலவித இரட்டை அர்த்தங்களை சொல்கிறது, ”பதில் சொல்லாமல் சிரித்துவை மதுமிதா”
இந்த கவிதை எப்படி இருக்கிறது பாருங்கள்
”தேவதைகள் நீலச்சேலையில் வரலாம்
நிரம்பியிருக்கும்
மது(மிதா)க்கோப்பை போல” / ‘புரியவில்லை என்று திருப்பிக்கொடுத்துவிடு மதுமிதா’
சிவப்பு, நீலம், இளமஞ்சள், ரோஸ், ஆரஞ் – என்ன இதெல்லாம்?
இதெல்லாம் போன வாரம் நீங்க கட்டுன சேலை நிறங்கள். – ஓ! வெகுவாக கவனிக்கிறான் ”கவனம் மதுமிதா”
நாளைக்கு என்ன கலர் சேலை உடுத்துவிங்க சொல்லுங்க ”’தெரியாதென்று சொல் மதுமிதா இல்லையென்றால் இவனுக்காகவே சொன்ன வண்ண சேலையை உடுத்த வேண்டி வரும்”
புதன் கிழமை ஒரு மல்ட்டி கலர் சேலை இருக்கு அதைதான் உடுத்தணும்,நாளைக்கு தெரியல.
புதனன்று மல்ட்டிகலர் சேலையை தொட்டதும் வந்தது அவன் நினைவுதான், புதன் வியாழன் இரண்டு நாட்களாக அவன் வேலைக்கு வரவில்லை அவனை தேடுகிறேன். வேலைகளை முடித்துவிட்டு படுக்க வந்த போது அலைபேசி ஒளிர்ந்தது. அவன் செய்தி தான்
kiss you madhumitha.
என்ன இது என்று ஆத்திரம் கோபம் கிளர்ச்சியில் பதில் அனுப்பும் முன் அடுத்த செய்தி
sorry, ,miss you madhumitha
hello
hello
hello
enna aachu?
அவன் பார்வைகளை உள்ளூர ரசிக்கிறேன். ரசிப்பது வெளித்தெரியாமல் இருக்க மனமுதிர்வு ஏற்பட்டதாக நடிக்கிறேன். பதின்மத்தில் பெண்கள் பின்னால் ஆண்கள் சுற்ற ஆரம்பிக்கும் ஒரு பருவம் வரும் அல்லவா?! அப்போதே எனக்கு திருமணம் செய்து வைத்து அந்த ஆசையை நீர்த்துப்போகவைத்துவிட்டார்கள். இப்போது இவன் பேச்சுக்களும் பார்வைகளும் அதை மீட்டுக்கொடுப்பதாக தோன்றுகிறது. இளைஞர்கள் காதலில் இருந்தால் எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாம மந்திரித்து விட்டது போல திரிவார்களே அப்படியான ஒரு நிலை. இது தவறா சரியா என்ற தர்க்க ரீதி நியாயங்கள் எப்பொதும் ஒரு முடிவிற்கு வரப்போவதே இல்லை. என்னை ரசிக்கிறாய் ரசித்துவிட்டு போ என்பதில் உள்ள ஆபத்து அவன் ரசிப்பதை ரசிக்கத்தொடங்கிவிடுதல்தான்.
மறுநாள் வேலைக்கு வந்தான்
என்னங்க மெசேஜ்க்கு ரிப்ளை செய்யவே இல்ல?
…எதுக்கு மெசேஜ் பண்ணுனிங்க?
சும்மாதான் உங்களை தேடுச்சி
….ஏன்?
ஏனோ!
சரி சொல்லுங்க ஏன் ரிப்ளை பண்ணல மொபைல்ல பேலன்ஸ் இல்லியா? ச்சே தெரிஞ்சா ரீசார்ஜ் செஞ்சு விட்டுருப்பேனே.
….பேலன்ஸ்லாம் இருக்கு.. ரிப்ளை அனுப்பனும்ன்னு தோணல
கோபமா இருக்கிங்களா?
….இல்லியே
sorry ங்க அது நான் உங்களுக்கு வேணும்ன்னு அனுப்பல வேற ஒருத்தங்களுக்கு அனுப்ப வேண்டியது உங்களுக்கு மிஸ்பிளேஸ் ஆகிட்டு.
….எது kiss you வா?
இல்லங்க அதுக்கு அடுத்து அனுப்பியவை.
….இல்லியே எனக்கு அதுக்கு அடுத்து ஒன்னும் மெசெஜ் வரலியே
வரலியா..? இதெல்லாம் என்று sent message காண்பித்தான்.
ummmaaa
enna dress?
ippa naan anka varavaa?
i love you di
லேசாக தலை சுற்றியது. அவன் மெசேஜ் காரணம் அல்ல. அது என் மொபைலில் காணாமல் போனதின் காரணம் தேடி.
அவன் நம்பரும் டெலிட் செய்யப்பட்டு இருந்தது.
குழப்பத்தில் தெளிந்து வீட்டுக்கு திரும்பும்போது க்ளீவேஜ் தொப்புள் யுவதிகள் புனிதைகளாக தெரிந்தார்கள். நான்தான் அசிங்கமாக போய்விட்டேன்..
பரவாயில்லை
என்னைப் புனிதப்படுத்தும் பெருங்கருணையை என் மகன் வழங்குவான்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....