முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாஸ்மாக் அமைச்சர் ஓரங்கட்டப்பட்டது ஏன் ?

தமிழக அமைச்சரவையில் செல்வம் கொழிக்கும் இரண்டு துறைகளை வைத்திருந்தவர் என்றால் அது நத்தம் விஸ்வநாதன்தான்.    டாஸ்மாக்கை கவனிக்கும் கலால் துறை மற்றும் மின் துறை.   இரண்டு துறைகளிலும் பணம் கோடிக்கணக்கில் புழங்கும்.

மிகவும் செல்வாக்காக வலம் வந்த நத்தம் விஸ்வநாதன் சமீப காலமாக ஓரங்கட்டப்பட்டு முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு உள்ளார். ஏன் என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
மத்திய பிரதேசத்தில் சூரிய ஒளி மின் திட்டத்தை அமைக்க டெண்டர் விடப்பட்டது.  அந்த டெண்டரில் பங்கெடுத்த அதானி நிறுவனம், ஒரு யூனிட் 6 ரூபாய் 4 பைசா விலையில் சூரிய மின்சாரம் வழங்குவதாக கூறியிருந்தது.    ஆனால், மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரம் 5 ரூபாய் 5 பைசாவுக்கு வழங்க முன்வந்ததும், அதானி நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மொரீஷியஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.
????????????????????????????????????
????????????????????????????????????
அதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் தமிழக அரசு அதானி நிறுவனத்திடம்  ஒரு யூனிட் 7 ரூபாய் 1 பைசா விலையில் 25 ஆண்டுகளுக்கு வாங்க டெண்டர் விடாமலே நேரடியாக ஒப்பந்தம் செய்தது.  இது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தன.
இந்நிலையில், அதானி நிறுவனம் கார்டனுக்கு 300 கோடியை கொடுத்தனுப்பியுள்ளது.  இந்த தொகை நத்தம் விஸ்வநாதன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.  இத்தொகையை முழுமையாக சேர்க்காமல், வெறும் 180 கோடியை மட்டும் நத்தம் விஸ்வநாதன் வழங்கியுள்ளார்.   பேசியபடி பணம் கிடைக்காத காரணத்தால், கார்டன் தரப்பு நேரடியாக அதானி நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளது.    எந்த தேதியில் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விபரத்தை அதானி நிறுவனம் கையெழுத்தில்லாத ஒரு கடிதத்தில் கார்டன் தரப்புக்கு அளித்துள்ளது.   இதற்குப் பிறகே நத்தம் விஸ்வநாதன் பணத்தை முழுமையாக ஒப்படைக்காமல் பாதித் தொகையை ஆட்டையை போட்டுவிட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
கடுமையான கோபமடைந்த கார்டன் தரப்பு, உடனடியாக நத்தம் விஸ்வநாதன் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டது.  அந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள், கார்டன் தரப்பையே அதிர வைத்துள்ளது.
அதிமுக அரசில் உள்ள அமைச்சர்கள் வழக்கமாக தங்கள் பதவிக்காலம் முடிவதற்குள் கணிசமான ஒரு தொகையை சேர்ப்பது வழக்கமே.   அந்தத் தொகை 200 முதல் 300 கோடிகள் இருக்கும்.    நத்தம் விஸ்வநாதன் சேர்த்துள்ள தொகை தோராயமாக 4000 கோடி என்ற தகவல், மேலிடத்தின் கோபத்தை அதிகரித்துள்ளது.
நத்தம் விஸ்வநாதனின் உதவியாளராக அறியப்படுபவர் கோபி என்பவர்.  இவர்தான் நத்தம் சார்பாக அனைத்து விதமான வசூலிலும் ஈடுபடுவார்.  டாஸ்மாக் நிறுவனத்தில் கோபி வைத்ததுதான் சட்டம்.   இந்த கோபியின் பின்னணி என்ன என்பதையறிந்த கார்டன் வட்டாரம் அதிர்ந்து போயுள்ளது.   திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் பெரிய தலை என்றால் அது மாவட்ட செயலாளர் பெரியசாமிதான்.  இந்த பெரியசாமியின் சொந்த அக்கா மகன்தான் கோபி.    இந்த கோபியும் அவருடைய உறவினருமான கண்ணன் என்பவரும் அத்தனை வசூலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக்கில் சப்ளை செய்யப்படும் பெரும்பாலான உயர் வகை மது வகைகள் அனைத்தும் நத்தத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.   வழக்கமாக டாஸ்மாக்கில் வரும் வசூலில் கார்டனுக்கு செலுத்தப்படும் கப்பத்தில் இந்த உயர்வகை மதுவகைகளில் வரும் வசூல் சேர்த்தி இல்லை.   உயர்வகை மதுவகைகளில் ஒரு கேஸுக்கு 400 வரை வசூலிக்கப்படுகிறது.  இந்த வசூலில் நத்தம் விஸ்வநாதனுக்கு பெரிதும் உதவுவது எம்ஜிஎம் மது கம்பெனி  அதிபர் எம்.ஜி.முத்து.
இந்தியா முழுவதுமே ரியல் எஸ்டேட் தொழில் ஒரு தேக்கநிலையை சந்தித்து வருகிறது.   குறிப்பாக தமிழகத்தில் இது மிகவும் மந்தமான நிலையில் உள்ளது.  கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் விற்கவில்லை.  புதிய திட்டங்களுக்கு முதலீடு இல்லை.  ரியல் எஸ்டேட்டில் ஜாம்பவான்களான பல நிறுவனங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டு உள்ளன.   ஆனால் இதில் சென்னையைச் சேர்ந்த காஸா க்ராண்ட் நிறுவனம் மட்டும் விதிவிலக்கு.     இந்நிறுவனத்தின் 15க்கும் மேற்பட்ட அடுக்குமாடி மற்றும் சொகுசு வீடு திட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.   பல லட்ச ரூபாய் செலவில் ஆங்கில நாளிதழ்களில் முழுப்பக்க வண்ண விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது காஸா க்ராண்ட் நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் நத்தம் விஸ்வநாதனின் முதலீடு 850 கோடி.      இந்த முதலீடுகளை கவனித்துக் கொள்வது நத்தத்தின் மகன் அமர்.   காஸா கிராண்ட் நிறுவனம், கிழக்குக் கடற்கரை சாலையில் கட்டி வரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு “அமரேந்திரா” என்று பெயர் சூட்டி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஒரு விலை உயர்ந்த ஹோட்டலை நத்தம் விஸ்வநாதன் வாங்கியுள்ளார்.    இதில் நத்தத்தின் முதலீடு 386 கோடி.    இந்த ஹோட்டல் வாங்கியது மற்றும் அதன் நிர்வாகம் அனைத்தையும் நத்தத்தின் மகன் அமர் கவனித்துக் கொள்கிறார்.  சமீபத்தில், வரி ஒழுங்காக கட்டவில்லை என்று அமெரிக்க நிர்வாகம் இந்த ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
லண்டனை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஓக்லி ப்ராப்பர்டி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில்  நத்தம் 400 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஒரு மின்திட்டம் கூட செயல்படாமல் போனதற்கு முக்கிய காரணம் நத்தம் விஸ்வநாதன் என்பது கார்டன் தரப்பில் இப்போது கூறப்படும் தகவல்.
உடன்குடி மற்றும் வடசென்னை மின் திட்டத்துக்கான டெண்டரில் சீன நிறுவனம் பங்கு பெற்றது.   சீன நிறுவனத்தின் அதிகாரிகள் இது தொடர்பாக நத்தம் விஸ்வநாதனை சந்தித்து பேசியபோது, நத்தம் 400 கோடி  கேட்டுள்ளார்.    டெண்டரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறைந்த தொகைக்கு டெண்டர் கேட்டிருந்த சீன நிறுவனம், தங்களால் அதெல்லாம் தர முடியாது என்று தெரிவித்து விட்டது.
இதையடுத்து நத்தம் விஸ்வநாதன் பிஎச்இஎல் நிறுவனத்தின் துணை காண்ட்ராக்டர்களிடம் பேசி, ஒரு பெரும் தொகையை வசூல் செய்துள்ளார்.    இந்த காண்ட்ராக்ட் எப்படியும் பிஎச்இஎல் நிறுவனத்துக்குதான் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்து, அவர்களிடம் முன்னதாகவே தொகையை பெற்றுள்ளார் நத்தம்.
இந்த பேரத்தில் தலைமைச் செயலாளரும், முன்னாள் மின்  வாரியத்தின் தலைவருமான ஞானதேசிகனின் சகலை ராஜன் என்பவரும் நத்தத்தோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார்.
முன்தொகையை பெற்று விட்டதால் எப்படியாவது பிஎச்இஎல் நிறுவனத்துக்கு டெண்டரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், டெண்டரில் பல்வேறு குளறுபடிகளை செய்ததால், சீன நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.   இதன் காரணமாக வட சென்னை, உடன்குடி ஆகிய இரு மின் திட்டங்களும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கின.   இந்த குளறுபடிகளால், அதிமுக அரசு ஒரு யூனிட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யவில்லை என்ற அவப்பெயர் கிடைத்தது. ”இதற்கெல்லாம் எல்லோரும் அம்மாவை குற்றம் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் இதற்கு நத்தம் விஸ்வநாதனே காரணம்” என்று கார்டன் தர்ப்பு நிர்வாகி நம்மிடம் தெரிவித்தார்.
நத்தம் விஸ்வநாதன் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்துக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் நத்தம் விஸ்வநாதன் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக அரசில் செல்வாக்கான தலைவராக வலம் வந்து கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதனின் இந்த வீழ்ச்சி, அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ” என் பெண் வருகிறாள் ” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில் , ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து ; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த , குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ” ஹாய்! ” என்றாள். ” என்னைத்தெரியுமா ?” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு. ” சொல்லுங்க ” என்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர் , ” இவருதான் ...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest