முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாஸ்மாக் அமைச்சர் ஓரங்கட்டப்பட்டது ஏன் ?

தமிழக அமைச்சரவையில் செல்வம் கொழிக்கும் இரண்டு துறைகளை வைத்திருந்தவர் என்றால் அது நத்தம் விஸ்வநாதன்தான்.    டாஸ்மாக்கை கவனிக்கும் கலால் துறை மற்றும் மின் துறை.   இரண்டு துறைகளிலும் பணம் கோடிக்கணக்கில் புழங்கும்.

மிகவும் செல்வாக்காக வலம் வந்த நத்தம் விஸ்வநாதன் சமீப காலமாக ஓரங்கட்டப்பட்டு முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு உள்ளார். ஏன் என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
மத்திய பிரதேசத்தில் சூரிய ஒளி மின் திட்டத்தை அமைக்க டெண்டர் விடப்பட்டது.  அந்த டெண்டரில் பங்கெடுத்த அதானி நிறுவனம், ஒரு யூனிட் 6 ரூபாய் 4 பைசா விலையில் சூரிய மின்சாரம் வழங்குவதாக கூறியிருந்தது.    ஆனால், மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரம் 5 ரூபாய் 5 பைசாவுக்கு வழங்க முன்வந்ததும், அதானி நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மொரீஷியஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது.
????????????????????????????????????
????????????????????????????????????
அதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் தமிழக அரசு அதானி நிறுவனத்திடம்  ஒரு யூனிட் 7 ரூபாய் 1 பைசா விலையில் 25 ஆண்டுகளுக்கு வாங்க டெண்டர் விடாமலே நேரடியாக ஒப்பந்தம் செய்தது.  இது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தன.
இந்நிலையில், அதானி நிறுவனம் கார்டனுக்கு 300 கோடியை கொடுத்தனுப்பியுள்ளது.  இந்த தொகை நத்தம் விஸ்வநாதன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.  இத்தொகையை முழுமையாக சேர்க்காமல், வெறும் 180 கோடியை மட்டும் நத்தம் விஸ்வநாதன் வழங்கியுள்ளார்.   பேசியபடி பணம் கிடைக்காத காரணத்தால், கார்டன் தரப்பு நேரடியாக அதானி நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளது.    எந்த தேதியில் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விபரத்தை அதானி நிறுவனம் கையெழுத்தில்லாத ஒரு கடிதத்தில் கார்டன் தரப்புக்கு அளித்துள்ளது.   இதற்குப் பிறகே நத்தம் விஸ்வநாதன் பணத்தை முழுமையாக ஒப்படைக்காமல் பாதித் தொகையை ஆட்டையை போட்டுவிட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
கடுமையான கோபமடைந்த கார்டன் தரப்பு, உடனடியாக நத்தம் விஸ்வநாதன் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டது.  அந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள், கார்டன் தரப்பையே அதிர வைத்துள்ளது.
அதிமுக அரசில் உள்ள அமைச்சர்கள் வழக்கமாக தங்கள் பதவிக்காலம் முடிவதற்குள் கணிசமான ஒரு தொகையை சேர்ப்பது வழக்கமே.   அந்தத் தொகை 200 முதல் 300 கோடிகள் இருக்கும்.    நத்தம் விஸ்வநாதன் சேர்த்துள்ள தொகை தோராயமாக 4000 கோடி என்ற தகவல், மேலிடத்தின் கோபத்தை அதிகரித்துள்ளது.
நத்தம் விஸ்வநாதனின் உதவியாளராக அறியப்படுபவர் கோபி என்பவர்.  இவர்தான் நத்தம் சார்பாக அனைத்து விதமான வசூலிலும் ஈடுபடுவார்.  டாஸ்மாக் நிறுவனத்தில் கோபி வைத்ததுதான் சட்டம்.   இந்த கோபியின் பின்னணி என்ன என்பதையறிந்த கார்டன் வட்டாரம் அதிர்ந்து போயுள்ளது.   திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் பெரிய தலை என்றால் அது மாவட்ட செயலாளர் பெரியசாமிதான்.  இந்த பெரியசாமியின் சொந்த அக்கா மகன்தான் கோபி.    இந்த கோபியும் அவருடைய உறவினருமான கண்ணன் என்பவரும் அத்தனை வசூலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக்கில் சப்ளை செய்யப்படும் பெரும்பாலான உயர் வகை மது வகைகள் அனைத்தும் நத்தத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.   வழக்கமாக டாஸ்மாக்கில் வரும் வசூலில் கார்டனுக்கு செலுத்தப்படும் கப்பத்தில் இந்த உயர்வகை மதுவகைகளில் வரும் வசூல் சேர்த்தி இல்லை.   உயர்வகை மதுவகைகளில் ஒரு கேஸுக்கு 400 வரை வசூலிக்கப்படுகிறது.  இந்த வசூலில் நத்தம் விஸ்வநாதனுக்கு பெரிதும் உதவுவது எம்ஜிஎம் மது கம்பெனி  அதிபர் எம்.ஜி.முத்து.
இந்தியா முழுவதுமே ரியல் எஸ்டேட் தொழில் ஒரு தேக்கநிலையை சந்தித்து வருகிறது.   குறிப்பாக தமிழகத்தில் இது மிகவும் மந்தமான நிலையில் உள்ளது.  கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் விற்கவில்லை.  புதிய திட்டங்களுக்கு முதலீடு இல்லை.  ரியல் எஸ்டேட்டில் ஜாம்பவான்களான பல நிறுவனங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டு உள்ளன.   ஆனால் இதில் சென்னையைச் சேர்ந்த காஸா க்ராண்ட் நிறுவனம் மட்டும் விதிவிலக்கு.     இந்நிறுவனத்தின் 15க்கும் மேற்பட்ட அடுக்குமாடி மற்றும் சொகுசு வீடு திட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.   பல லட்ச ரூபாய் செலவில் ஆங்கில நாளிதழ்களில் முழுப்பக்க வண்ண விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது காஸா க்ராண்ட் நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் நத்தம் விஸ்வநாதனின் முதலீடு 850 கோடி.      இந்த முதலீடுகளை கவனித்துக் கொள்வது நத்தத்தின் மகன் அமர்.   காஸா கிராண்ட் நிறுவனம், கிழக்குக் கடற்கரை சாலையில் கட்டி வரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு “அமரேந்திரா” என்று பெயர் சூட்டி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஒரு விலை உயர்ந்த ஹோட்டலை நத்தம் விஸ்வநாதன் வாங்கியுள்ளார்.    இதில் நத்தத்தின் முதலீடு 386 கோடி.    இந்த ஹோட்டல் வாங்கியது மற்றும் அதன் நிர்வாகம் அனைத்தையும் நத்தத்தின் மகன் அமர் கவனித்துக் கொள்கிறார்.  சமீபத்தில், வரி ஒழுங்காக கட்டவில்லை என்று அமெரிக்க நிர்வாகம் இந்த ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
லண்டனை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஓக்லி ப்ராப்பர்டி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில்  நத்தம் 400 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஒரு மின்திட்டம் கூட செயல்படாமல் போனதற்கு முக்கிய காரணம் நத்தம் விஸ்வநாதன் என்பது கார்டன் தரப்பில் இப்போது கூறப்படும் தகவல்.
உடன்குடி மற்றும் வடசென்னை மின் திட்டத்துக்கான டெண்டரில் சீன நிறுவனம் பங்கு பெற்றது.   சீன நிறுவனத்தின் அதிகாரிகள் இது தொடர்பாக நத்தம் விஸ்வநாதனை சந்தித்து பேசியபோது, நத்தம் 400 கோடி  கேட்டுள்ளார்.    டெண்டரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறைந்த தொகைக்கு டெண்டர் கேட்டிருந்த சீன நிறுவனம், தங்களால் அதெல்லாம் தர முடியாது என்று தெரிவித்து விட்டது.
இதையடுத்து நத்தம் விஸ்வநாதன் பிஎச்இஎல் நிறுவனத்தின் துணை காண்ட்ராக்டர்களிடம் பேசி, ஒரு பெரும் தொகையை வசூல் செய்துள்ளார்.    இந்த காண்ட்ராக்ட் எப்படியும் பிஎச்இஎல் நிறுவனத்துக்குதான் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்து, அவர்களிடம் முன்னதாகவே தொகையை பெற்றுள்ளார் நத்தம்.
இந்த பேரத்தில் தலைமைச் செயலாளரும், முன்னாள் மின்  வாரியத்தின் தலைவருமான ஞானதேசிகனின் சகலை ராஜன் என்பவரும் நத்தத்தோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார்.
முன்தொகையை பெற்று விட்டதால் எப்படியாவது பிஎச்இஎல் நிறுவனத்துக்கு டெண்டரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், டெண்டரில் பல்வேறு குளறுபடிகளை செய்ததால், சீன நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.   இதன் காரணமாக வட சென்னை, உடன்குடி ஆகிய இரு மின் திட்டங்களும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கின.   இந்த குளறுபடிகளால், அதிமுக அரசு ஒரு யூனிட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யவில்லை என்ற அவப்பெயர் கிடைத்தது. ”இதற்கெல்லாம் எல்லோரும் அம்மாவை குற்றம் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் இதற்கு நத்தம் விஸ்வநாதனே காரணம்” என்று கார்டன் தர்ப்பு நிர்வாகி நம்மிடம் தெரிவித்தார்.
நத்தம் விஸ்வநாதன் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்துக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் நத்தம் விஸ்வநாதன் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக அரசில் செல்வாக்கான தலைவராக வலம் வந்து கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதனின் இந்த வீழ்ச்சி, அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

சிம்பு குடும்பத்தாருக்கு கொற்றவை கடிதம்!

உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்                         கொற்றவை -பெண்ணிய செயல்பாட்டாளர் ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப்படுற வழியப்பாருலே “பு.ண்.டை” நாயம் பேசிட்டு திரியுறவ” என்று சொல்வார்கள். ஓர் உயிரை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் உறுப்பிற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இவ்வளவுதான் மரியாதை என்றோ அல்லது பெண் பித்து பிடித்து அலையாமல் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார் என்றோ சொல்வதாகவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் “புண்டை” நியாயம் பேச வைத்த பெருமை உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் போய்ச் சேரும். இதை எண்ணி உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டும், உயிரையும் உடைமையையும் இழந்தும் துன்புருகையில் இவர்கள் “பு.ண்.டை” ஆராய்ச...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...