முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

500 / 1000 நோட்டு: சாதாரணர்கள் என்ன செய்யலாம்?

500 / 1000 நோட்டு:

நேற்றைய நள்ளிரவு முதலாக‌ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினெட் முடிவு செய்திருக்கும் நிலையில், இதனால் கறுப்புப் பணம் வெளியே வருமா, கள்ளப் பணம் ஒழிக்கப் படுமா என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்துக் கொள்ளட்டும். ந‌ம் போன்ற சாதாரணர்கள் இச்சிக்கலைக் கடப்பதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். சாதாரணர்கள் என்றால் ஏழையோ, பணக்காரரோ, மத்யமரோ கறுப்புப் பணம் பற்றிய கவலையற்ற எளியோர். இந்திய ஜனத்தொகையில் உத்தேசமாய் 90 விழுக்காடு இவ்வகைமையில் தான் வரும்.


1. நாளை முதல் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் பழைய 500 அல்லது 1000 நோட்டுக்களைக் கொடுத்து விட்டு புதிய நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். (நவம்பர் 24 வரை தலைக்கு ரூ. 4,000 உச்ச வரம்பு. பிற்பாடு இது உயர்த்தப்படும்.)

2. மேற்கண்ட‌ எல்லா இடங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கேனும் கூட்டம் பெரிய அளவில் இருக்கும். பணியிடத்தில் விடுப்பு / அனுமதி பெற்றே இதைச் செயல்படுத்த வேண்டி இருக்கலாம். அதற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

3. அத்தியாவசியங்கள் தவிர்த்து முடிந்த அளவு உங்கள் மற்ற‌ செலவுகளை ஒரு வாரத்திற்கு ஒத்திப் போடுங்கள். செல்லுபடியாகக்கூடிய பணமானது உறுதியாய்க் கைகளுக்கு கிட்டிய பின் அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். (கூலியாட்கள், பணியாளர்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல‌. இங்கே அவர்கள் குடும்பங்களையும் மனதில் கொள்ள வேண்டும். நான் சொல்வது நம்முடைய‌ தனிப்பட்ட செலவுகள் பற்றி.)

4. கடைகளில் கூடுமானவரை டெபிட் அல்லது க்ரெடிட் கார்ட்களைப் பயன்படுத்துங்கள். அதற்கு எந்தத் தடையோ கட்டுப்பாடோ இல்லை. நகரங்களில் கணிசமான இடங்களில் இந்த முறையிலேயே தப்பித்துக் கொள்ளலாம்.

5. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தைப் பயன்படுத்துங்கள். உதாரணமாய் அமேஸான் தளத்தில் பலசரக்கு முதல் ப்ளாட்டினம் வரை அனைத்தும் வாங்கலாம். பல வலைத் தளங்களில் செல்ஃபோன் ரீசார்ஜ் செய்யலாம். மின்சார, தொலைபேசி, இணையச் சேவை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம். ரயில், பேருந்துச் சீட்டுகள் இணையத்தில் முன்பதியலாம். சினிமா டிக்கெட்கள் வாங்கலாம். உணவுகள் கூட ஆர்டர் செய்யலாம்.

6. இயன்ற அளவு மாற்று பணங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாய் சுடக்ஸோ கூப்பன். அலுவலக உணவகங்களில் மட்டுமல்ல சூப்பர் மார்க்கெட்களில் அரிசி, பருப்பு வாங்கக் கூடப் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7. இன்னொரு மாற்றுப் பண வடிவம் எலக்ட்ரானிக் வேலட்கள். உதாரணமாய் ஆட்டோ பிடித்தால் கரன்ஸியில் தான் கட்டண‌ம் செலுத்த வேண்டும்.  டேக்ஸி எனில் ஓலா மணி, பேடியெம் என ஈ-வேலட்கள் மூலம் பணம் செலுத்தலாம்.

8. அடுத்த ஒரு வாரத்துக்கு ஒவ்வொரு 10, 20, 50, 100 ரூபாய்த் தாளைப் பயன்படுத்தும் போதும் அது அவசியம் தானா அல்லது வேறு மார்க்கமுண்டா என யோசியுங்கள். இன்று இவை சில்லறை நோட்டுகள். தீருகிற வேகம் தெரியாது.

9. வீட்டைத் துப்புரவாய்த் தேடி 10, 20, 50, 100 ரூபாய்த் தாள்களைச் சேகரியுங்கள். உண்டியல், புத்தகங்கள், பழைய பர்ஸ், மேசை இழுப்பறை, அஞ்சறைப் பெட்டி என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றைச் சேர்த்து எவ்வளவு கையிருப்பென கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதற்கேற்ப‌ ஒரு வாரச் செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

10. பார்ட்டி, பிக்னிக், ரெசார்ட் உள்ளிட்ட படோடபச் செயல்களை அடுத்த சில பல‌ நாட்களுக்கேனும் தவிருங்கள். மூலச் செலவு போக‌ அங்கெல்லாம் சில்லறைச் செலவுகளில் கரன்ஸியைக் கொடுக்க நேரிடலாம். திட்டமிடவும் முடியாது.

11. ஆதார் அட்டை, பேன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்ட் போன்ற குடும்பத்தாருடைய அடையாள அட்டைகளைத் தேடித் தொகுத்துக் கொள்ளுங்கள். பணம் மாற்றுவதாக இருந்தாலும் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக இருந்தாலும் அடையாள அட்டை கட்டாயம். அவற்றை ஒளிநகல் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

12. உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் வைத்திருக்கும் அல்லது ஒளித்திருக்கும் அல்லது மறந்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைத் தேடி எடுத்துச் சேகரியுங்கள். அது ஒருவேளை வீட்டாருக்குத் தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் பணம் என்றாலும் ஆண்டிறுதிக்குள் வெளியே வந்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.

13. கூட்டத்தின் பொருட்டு முதல் சில நாட்கள் விடுத்து அருகிருக்கும் தபால் நிலையம் அல்லது வங்கியில் வீட்டில் அடையாள அட்டை வைத்திருக்கும் எல்லோரும் ஆளுக்கு ரூபாய் 4,000 கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கைகளில் செலவுக்கு சுமார் ரூபாய் 4,000 முதல் 20,000 வரை செல்லுபடியாகும் நோட்டுகள் கிட்டும். அவ்வளவு தேவை இல்லை என்றாலும் வாங்கி வைத்துக் கொள்வது உத்தமம். அன்றேல் அவசரத்துக்கு அலைய வேண்டி இருக்கும்.

14. மீதமிருக்கும் செல்லாத நோட்டுகளை வங்கிக்குச் சென்று உங்கள் கணக்கில் செலுத்தி விடுங்கள். பிற்பாடு தேவைப்படுகையில் சுய காசோலை மூலமோ ஏடிஎம்கள் மூலமோ தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

15. அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலும் ஏடிஎம்கள் பணம் நிரப்பிய ஓரிரு மணி நேரத்திலேயே தீர்ந்து போகும். (நவம்பர் 18 வரை அட்டைக்கு ரூ. 2000 என்றும் பின் ரூ.4000 என்றும் உச்ச வரம்பு வைத்திருக்கிறார்கள் என்றாலும் இது நிகழும் சாத்தியம் அதிகம்.) வங்கிகளிலும் இதற்கு வாய்ப்புண்டு. அதை மனதில் இருத்திச் செயல்படுங்கள்.

16. வங்கிகளிலும் பணமெடுக்க தினம் ரூ.10,000 என்றும் வாரத்திற்கு ரூ.20,000 என்றும் அதிகபட்ச‌ வரையறை நிர்ணம் செய்திருக்கிறார்கள். அப்படியே பணத்தை எடுக்க முடியாது. அதனால் அதற்கேற்பச் செலவுகளைத் திட்டமிடுங்கள்.

17. இன்னும் சில இடங்களில் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குகிறார்கள் எனத் தெரிகிறது. அதையும் செய்யலாம். அவர்கள் தம் கணக்கில் மாற்றுக் கொள்வர். இதில் சட்ட விரோதம் ஏதும் தென்படவில்லை.

18. பெட்ரோல் பங்க்கள் தாம் இப்போது அட்சயப் பாத்திரம். வாகனங்களின் டேங்க் ஃபுல் செய்வதன் மூலம் சில பல செல்லாத நோட்டுக்களைத் தீர்க்கலாம். ஒரே பிரச்சனை அடுத்த சில நாட்களுக்கு பங்க்கள் கூட்டமாகவே இருக்கும்.

19. இந்தியாவின் மூலை முடுக்கில் இருப்போரெல்லாம் வங்கிக் கணக்குத் திறக்க‌, டெபிட் கார்ட்கள் பயன்படுத்தத் துவங்க‌, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட‌ ஒரு வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறேன். அதுவே பணத்தின் எதிர்காலம்.

20. "1000 ரூபாய்க்கு செல்லாத 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுக‌ள் தருகிறோம், பதிலாக 700 ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டு தாருங்கள்" என்று சிலர் பேரம் ஆரம்பித்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். அது நாசூக்காய்க் கருப்பை வெளுப்பாக்கும் தேச விரோதச் செயல். லாபம் தான் என்றாலும் அதற்கு ஒருபோதும் துணை போகாதீர். மாற்றும் போதோ செலுத்தும் போதோ அந்தப் பணம் உங்கள் வருமானக் கணக்கில் வந்து விடும் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.

21. எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு மிக முக்கிய விஷயம். சமூக வளைதள மீம்களில் காட்டப்படுவது போல் 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுகளில் கடலை மடிக்கும் அளவுக்கு நிலமை மோசமாய்ப் போய் விடவில்லை. கருப்பு இல்லை எனில் உங்கள் பணம் உங்களுடையதே. அதற்குரிய இணைப் பணத்தை அரசாங்கம் இன்றோ நாளையோ உங்களுக்குத் தந்து விடும். அதனால் இதில் பதற்றமுறவோ, பயமுறவோ, கவலையுறவோ, கடுப்புறவோ ஏதுமில்லை. நமது அன்றாடங்கள் பாதிக்கப்படுகின்றன தாம். ஆனால் ஓரளவு முன்கூட்டிய திட்டமிடல் மூலம் அவற்றைச் சமாளித்து விட்டால் பிரச்சனை ஏதுமில்லை. ஒரு பைசா கூட சாதாரணர்களான நமக்கு நட்டமில்லை. அஞ்ச வேண்டியவர்கள் அஞ்சட்டும், நண்பர்காள்.

(இவற்றில் சில கிராமவாசிகளுக்கு, இணையப் பரிச்சயமற்றவர்களுக்கு, வங்கிக் கணக்கில்லாதவர்க்கு சாத்தியமற்ற யோசனைகளாக இருக்கலாம். நான் பொதுவான ஒரு பட்டியலையே அளித்திருக்கிறேன். அவரவர்க்குப் பொருந்துவதை மட்டும் பொருட்படுத்தி செயல்படுத்த எத்தனிக்கலாம். மற்றபடி எலைட் மனப்பான்மையில் எழுத்தப்பட்டதல்ல இஃது.)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...