முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

500 / 1000 நோட்டு: சாதாரணர்கள் என்ன செய்யலாம்?

500 / 1000 நோட்டு:

நேற்றைய நள்ளிரவு முதலாக‌ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினெட் முடிவு செய்திருக்கும் நிலையில், இதனால் கறுப்புப் பணம் வெளியே வருமா, கள்ளப் பணம் ஒழிக்கப் படுமா என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்துக் கொள்ளட்டும். ந‌ம் போன்ற சாதாரணர்கள் இச்சிக்கலைக் கடப்பதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். சாதாரணர்கள் என்றால் ஏழையோ, பணக்காரரோ, மத்யமரோ கறுப்புப் பணம் பற்றிய கவலையற்ற எளியோர். இந்திய ஜனத்தொகையில் உத்தேசமாய் 90 விழுக்காடு இவ்வகைமையில் தான் வரும்.


1. நாளை முதல் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் பழைய 500 அல்லது 1000 நோட்டுக்களைக் கொடுத்து விட்டு புதிய நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். (நவம்பர் 24 வரை தலைக்கு ரூ. 4,000 உச்ச வரம்பு. பிற்பாடு இது உயர்த்தப்படும்.)

2. மேற்கண்ட‌ எல்லா இடங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கேனும் கூட்டம் பெரிய அளவில் இருக்கும். பணியிடத்தில் விடுப்பு / அனுமதி பெற்றே இதைச் செயல்படுத்த வேண்டி இருக்கலாம். அதற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

3. அத்தியாவசியங்கள் தவிர்த்து முடிந்த அளவு உங்கள் மற்ற‌ செலவுகளை ஒரு வாரத்திற்கு ஒத்திப் போடுங்கள். செல்லுபடியாகக்கூடிய பணமானது உறுதியாய்க் கைகளுக்கு கிட்டிய பின் அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். (கூலியாட்கள், பணியாளர்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல‌. இங்கே அவர்கள் குடும்பங்களையும் மனதில் கொள்ள வேண்டும். நான் சொல்வது நம்முடைய‌ தனிப்பட்ட செலவுகள் பற்றி.)

4. கடைகளில் கூடுமானவரை டெபிட் அல்லது க்ரெடிட் கார்ட்களைப் பயன்படுத்துங்கள். அதற்கு எந்தத் தடையோ கட்டுப்பாடோ இல்லை. நகரங்களில் கணிசமான இடங்களில் இந்த முறையிலேயே தப்பித்துக் கொள்ளலாம்.

5. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தைப் பயன்படுத்துங்கள். உதாரணமாய் அமேஸான் தளத்தில் பலசரக்கு முதல் ப்ளாட்டினம் வரை அனைத்தும் வாங்கலாம். பல வலைத் தளங்களில் செல்ஃபோன் ரீசார்ஜ் செய்யலாம். மின்சார, தொலைபேசி, இணையச் சேவை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம். ரயில், பேருந்துச் சீட்டுகள் இணையத்தில் முன்பதியலாம். சினிமா டிக்கெட்கள் வாங்கலாம். உணவுகள் கூட ஆர்டர் செய்யலாம்.

6. இயன்ற அளவு மாற்று பணங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாய் சுடக்ஸோ கூப்பன். அலுவலக உணவகங்களில் மட்டுமல்ல சூப்பர் மார்க்கெட்களில் அரிசி, பருப்பு வாங்கக் கூடப் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7. இன்னொரு மாற்றுப் பண வடிவம் எலக்ட்ரானிக் வேலட்கள். உதாரணமாய் ஆட்டோ பிடித்தால் கரன்ஸியில் தான் கட்டண‌ம் செலுத்த வேண்டும்.  டேக்ஸி எனில் ஓலா மணி, பேடியெம் என ஈ-வேலட்கள் மூலம் பணம் செலுத்தலாம்.

8. அடுத்த ஒரு வாரத்துக்கு ஒவ்வொரு 10, 20, 50, 100 ரூபாய்த் தாளைப் பயன்படுத்தும் போதும் அது அவசியம் தானா அல்லது வேறு மார்க்கமுண்டா என யோசியுங்கள். இன்று இவை சில்லறை நோட்டுகள். தீருகிற வேகம் தெரியாது.

9. வீட்டைத் துப்புரவாய்த் தேடி 10, 20, 50, 100 ரூபாய்த் தாள்களைச் சேகரியுங்கள். உண்டியல், புத்தகங்கள், பழைய பர்ஸ், மேசை இழுப்பறை, அஞ்சறைப் பெட்டி என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றைச் சேர்த்து எவ்வளவு கையிருப்பென கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதற்கேற்ப‌ ஒரு வாரச் செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

10. பார்ட்டி, பிக்னிக், ரெசார்ட் உள்ளிட்ட படோடபச் செயல்களை அடுத்த சில பல‌ நாட்களுக்கேனும் தவிருங்கள். மூலச் செலவு போக‌ அங்கெல்லாம் சில்லறைச் செலவுகளில் கரன்ஸியைக் கொடுக்க நேரிடலாம். திட்டமிடவும் முடியாது.

11. ஆதார் அட்டை, பேன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்ட் போன்ற குடும்பத்தாருடைய அடையாள அட்டைகளைத் தேடித் தொகுத்துக் கொள்ளுங்கள். பணம் மாற்றுவதாக இருந்தாலும் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக இருந்தாலும் அடையாள அட்டை கட்டாயம். அவற்றை ஒளிநகல் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

12. உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் வைத்திருக்கும் அல்லது ஒளித்திருக்கும் அல்லது மறந்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைத் தேடி எடுத்துச் சேகரியுங்கள். அது ஒருவேளை வீட்டாருக்குத் தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் பணம் என்றாலும் ஆண்டிறுதிக்குள் வெளியே வந்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.

13. கூட்டத்தின் பொருட்டு முதல் சில நாட்கள் விடுத்து அருகிருக்கும் தபால் நிலையம் அல்லது வங்கியில் வீட்டில் அடையாள அட்டை வைத்திருக்கும் எல்லோரும் ஆளுக்கு ரூபாய் 4,000 கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கைகளில் செலவுக்கு சுமார் ரூபாய் 4,000 முதல் 20,000 வரை செல்லுபடியாகும் நோட்டுகள் கிட்டும். அவ்வளவு தேவை இல்லை என்றாலும் வாங்கி வைத்துக் கொள்வது உத்தமம். அன்றேல் அவசரத்துக்கு அலைய வேண்டி இருக்கும்.

14. மீதமிருக்கும் செல்லாத நோட்டுகளை வங்கிக்குச் சென்று உங்கள் கணக்கில் செலுத்தி விடுங்கள். பிற்பாடு தேவைப்படுகையில் சுய காசோலை மூலமோ ஏடிஎம்கள் மூலமோ தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

15. அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலும் ஏடிஎம்கள் பணம் நிரப்பிய ஓரிரு மணி நேரத்திலேயே தீர்ந்து போகும். (நவம்பர் 18 வரை அட்டைக்கு ரூ. 2000 என்றும் பின் ரூ.4000 என்றும் உச்ச வரம்பு வைத்திருக்கிறார்கள் என்றாலும் இது நிகழும் சாத்தியம் அதிகம்.) வங்கிகளிலும் இதற்கு வாய்ப்புண்டு. அதை மனதில் இருத்திச் செயல்படுங்கள்.

16. வங்கிகளிலும் பணமெடுக்க தினம் ரூ.10,000 என்றும் வாரத்திற்கு ரூ.20,000 என்றும் அதிகபட்ச‌ வரையறை நிர்ணம் செய்திருக்கிறார்கள். அப்படியே பணத்தை எடுக்க முடியாது. அதனால் அதற்கேற்பச் செலவுகளைத் திட்டமிடுங்கள்.

17. இன்னும் சில இடங்களில் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குகிறார்கள் எனத் தெரிகிறது. அதையும் செய்யலாம். அவர்கள் தம் கணக்கில் மாற்றுக் கொள்வர். இதில் சட்ட விரோதம் ஏதும் தென்படவில்லை.

18. பெட்ரோல் பங்க்கள் தாம் இப்போது அட்சயப் பாத்திரம். வாகனங்களின் டேங்க் ஃபுல் செய்வதன் மூலம் சில பல செல்லாத நோட்டுக்களைத் தீர்க்கலாம். ஒரே பிரச்சனை அடுத்த சில நாட்களுக்கு பங்க்கள் கூட்டமாகவே இருக்கும்.

19. இந்தியாவின் மூலை முடுக்கில் இருப்போரெல்லாம் வங்கிக் கணக்குத் திறக்க‌, டெபிட் கார்ட்கள் பயன்படுத்தத் துவங்க‌, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட‌ ஒரு வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறேன். அதுவே பணத்தின் எதிர்காலம்.

20. "1000 ரூபாய்க்கு செல்லாத 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுக‌ள் தருகிறோம், பதிலாக 700 ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டு தாருங்கள்" என்று சிலர் பேரம் ஆரம்பித்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். அது நாசூக்காய்க் கருப்பை வெளுப்பாக்கும் தேச விரோதச் செயல். லாபம் தான் என்றாலும் அதற்கு ஒருபோதும் துணை போகாதீர். மாற்றும் போதோ செலுத்தும் போதோ அந்தப் பணம் உங்கள் வருமானக் கணக்கில் வந்து விடும் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.

21. எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு மிக முக்கிய விஷயம். சமூக வளைதள மீம்களில் காட்டப்படுவது போல் 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுகளில் கடலை மடிக்கும் அளவுக்கு நிலமை மோசமாய்ப் போய் விடவில்லை. கருப்பு இல்லை எனில் உங்கள் பணம் உங்களுடையதே. அதற்குரிய இணைப் பணத்தை அரசாங்கம் இன்றோ நாளையோ உங்களுக்குத் தந்து விடும். அதனால் இதில் பதற்றமுறவோ, பயமுறவோ, கவலையுறவோ, கடுப்புறவோ ஏதுமில்லை. நமது அன்றாடங்கள் பாதிக்கப்படுகின்றன தாம். ஆனால் ஓரளவு முன்கூட்டிய திட்டமிடல் மூலம் அவற்றைச் சமாளித்து விட்டால் பிரச்சனை ஏதுமில்லை. ஒரு பைசா கூட சாதாரணர்களான நமக்கு நட்டமில்லை. அஞ்ச வேண்டியவர்கள் அஞ்சட்டும், நண்பர்காள்.

(இவற்றில் சில கிராமவாசிகளுக்கு, இணையப் பரிச்சயமற்றவர்களுக்கு, வங்கிக் கணக்கில்லாதவர்க்கு சாத்தியமற்ற யோசனைகளாக இருக்கலாம். நான் பொதுவான ஒரு பட்டியலையே அளித்திருக்கிறேன். அவரவர்க்குப் பொருந்துவதை மட்டும் பொருட்படுத்தி செயல்படுத்த எத்தனிக்கலாம். மற்றபடி எலைட் மனப்பான்மையில் எழுத்தப்பட்டதல்ல இஃது.)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...