முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

500 / 1000 நோட்டு: சாதாரணர்கள் என்ன செய்யலாம்?

500 / 1000 நோட்டு:

நேற்றைய நள்ளிரவு முதலாக‌ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினெட் முடிவு செய்திருக்கும் நிலையில், இதனால் கறுப்புப் பணம் வெளியே வருமா, கள்ளப் பணம் ஒழிக்கப் படுமா என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்துக் கொள்ளட்டும். ந‌ம் போன்ற சாதாரணர்கள் இச்சிக்கலைக் கடப்பதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். சாதாரணர்கள் என்றால் ஏழையோ, பணக்காரரோ, மத்யமரோ கறுப்புப் பணம் பற்றிய கவலையற்ற எளியோர். இந்திய ஜனத்தொகையில் உத்தேசமாய் 90 விழுக்காடு இவ்வகைமையில் தான் வரும்.


1. நாளை முதல் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் பழைய 500 அல்லது 1000 நோட்டுக்களைக் கொடுத்து விட்டு புதிய நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். (நவம்பர் 24 வரை தலைக்கு ரூ. 4,000 உச்ச வரம்பு. பிற்பாடு இது உயர்த்தப்படும்.)

2. மேற்கண்ட‌ எல்லா இடங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கேனும் கூட்டம் பெரிய அளவில் இருக்கும். பணியிடத்தில் விடுப்பு / அனுமதி பெற்றே இதைச் செயல்படுத்த வேண்டி இருக்கலாம். அதற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

3. அத்தியாவசியங்கள் தவிர்த்து முடிந்த அளவு உங்கள் மற்ற‌ செலவுகளை ஒரு வாரத்திற்கு ஒத்திப் போடுங்கள். செல்லுபடியாகக்கூடிய பணமானது உறுதியாய்க் கைகளுக்கு கிட்டிய பின் அவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். (கூலியாட்கள், பணியாளர்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல‌. இங்கே அவர்கள் குடும்பங்களையும் மனதில் கொள்ள வேண்டும். நான் சொல்வது நம்முடைய‌ தனிப்பட்ட செலவுகள் பற்றி.)

4. கடைகளில் கூடுமானவரை டெபிட் அல்லது க்ரெடிட் கார்ட்களைப் பயன்படுத்துங்கள். அதற்கு எந்தத் தடையோ கட்டுப்பாடோ இல்லை. நகரங்களில் கணிசமான இடங்களில் இந்த முறையிலேயே தப்பித்துக் கொள்ளலாம்.

5. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தைப் பயன்படுத்துங்கள். உதாரணமாய் அமேஸான் தளத்தில் பலசரக்கு முதல் ப்ளாட்டினம் வரை அனைத்தும் வாங்கலாம். பல வலைத் தளங்களில் செல்ஃபோன் ரீசார்ஜ் செய்யலாம். மின்சார, தொலைபேசி, இணையச் சேவை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம். ரயில், பேருந்துச் சீட்டுகள் இணையத்தில் முன்பதியலாம். சினிமா டிக்கெட்கள் வாங்கலாம். உணவுகள் கூட ஆர்டர் செய்யலாம்.

6. இயன்ற அளவு மாற்று பணங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாய் சுடக்ஸோ கூப்பன். அலுவலக உணவகங்களில் மட்டுமல்ல சூப்பர் மார்க்கெட்களில் அரிசி, பருப்பு வாங்கக் கூடப் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7. இன்னொரு மாற்றுப் பண வடிவம் எலக்ட்ரானிக் வேலட்கள். உதாரணமாய் ஆட்டோ பிடித்தால் கரன்ஸியில் தான் கட்டண‌ம் செலுத்த வேண்டும்.  டேக்ஸி எனில் ஓலா மணி, பேடியெம் என ஈ-வேலட்கள் மூலம் பணம் செலுத்தலாம்.

8. அடுத்த ஒரு வாரத்துக்கு ஒவ்வொரு 10, 20, 50, 100 ரூபாய்த் தாளைப் பயன்படுத்தும் போதும் அது அவசியம் தானா அல்லது வேறு மார்க்கமுண்டா என யோசியுங்கள். இன்று இவை சில்லறை நோட்டுகள். தீருகிற வேகம் தெரியாது.

9. வீட்டைத் துப்புரவாய்த் தேடி 10, 20, 50, 100 ரூபாய்த் தாள்களைச் சேகரியுங்கள். உண்டியல், புத்தகங்கள், பழைய பர்ஸ், மேசை இழுப்பறை, அஞ்சறைப் பெட்டி என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றைச் சேர்த்து எவ்வளவு கையிருப்பென கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதற்கேற்ப‌ ஒரு வாரச் செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

10. பார்ட்டி, பிக்னிக், ரெசார்ட் உள்ளிட்ட படோடபச் செயல்களை அடுத்த சில பல‌ நாட்களுக்கேனும் தவிருங்கள். மூலச் செலவு போக‌ அங்கெல்லாம் சில்லறைச் செலவுகளில் கரன்ஸியைக் கொடுக்க நேரிடலாம். திட்டமிடவும் முடியாது.

11. ஆதார் அட்டை, பேன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்ட் போன்ற குடும்பத்தாருடைய அடையாள அட்டைகளைத் தேடித் தொகுத்துக் கொள்ளுங்கள். பணம் மாற்றுவதாக இருந்தாலும் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக இருந்தாலும் அடையாள அட்டை கட்டாயம். அவற்றை ஒளிநகல் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

12. உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் வைத்திருக்கும் அல்லது ஒளித்திருக்கும் அல்லது மறந்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைத் தேடி எடுத்துச் சேகரியுங்கள். அது ஒருவேளை வீட்டாருக்குத் தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் பணம் என்றாலும் ஆண்டிறுதிக்குள் வெளியே வந்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.

13. கூட்டத்தின் பொருட்டு முதல் சில நாட்கள் விடுத்து அருகிருக்கும் தபால் நிலையம் அல்லது வங்கியில் வீட்டில் அடையாள அட்டை வைத்திருக்கும் எல்லோரும் ஆளுக்கு ரூபாய் 4,000 கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கைகளில் செலவுக்கு சுமார் ரூபாய் 4,000 முதல் 20,000 வரை செல்லுபடியாகும் நோட்டுகள் கிட்டும். அவ்வளவு தேவை இல்லை என்றாலும் வாங்கி வைத்துக் கொள்வது உத்தமம். அன்றேல் அவசரத்துக்கு அலைய வேண்டி இருக்கும்.

14. மீதமிருக்கும் செல்லாத நோட்டுகளை வங்கிக்குச் சென்று உங்கள் கணக்கில் செலுத்தி விடுங்கள். பிற்பாடு தேவைப்படுகையில் சுய காசோலை மூலமோ ஏடிஎம்கள் மூலமோ தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

15. அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலும் ஏடிஎம்கள் பணம் நிரப்பிய ஓரிரு மணி நேரத்திலேயே தீர்ந்து போகும். (நவம்பர் 18 வரை அட்டைக்கு ரூ. 2000 என்றும் பின் ரூ.4000 என்றும் உச்ச வரம்பு வைத்திருக்கிறார்கள் என்றாலும் இது நிகழும் சாத்தியம் அதிகம்.) வங்கிகளிலும் இதற்கு வாய்ப்புண்டு. அதை மனதில் இருத்திச் செயல்படுங்கள்.

16. வங்கிகளிலும் பணமெடுக்க தினம் ரூ.10,000 என்றும் வாரத்திற்கு ரூ.20,000 என்றும் அதிகபட்ச‌ வரையறை நிர்ணம் செய்திருக்கிறார்கள். அப்படியே பணத்தை எடுக்க முடியாது. அதனால் அதற்கேற்பச் செலவுகளைத் திட்டமிடுங்கள்.

17. இன்னும் சில இடங்களில் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குகிறார்கள் எனத் தெரிகிறது. அதையும் செய்யலாம். அவர்கள் தம் கணக்கில் மாற்றுக் கொள்வர். இதில் சட்ட விரோதம் ஏதும் தென்படவில்லை.

18. பெட்ரோல் பங்க்கள் தாம் இப்போது அட்சயப் பாத்திரம். வாகனங்களின் டேங்க் ஃபுல் செய்வதன் மூலம் சில பல செல்லாத நோட்டுக்களைத் தீர்க்கலாம். ஒரே பிரச்சனை அடுத்த சில நாட்களுக்கு பங்க்கள் கூட்டமாகவே இருக்கும்.

19. இந்தியாவின் மூலை முடுக்கில் இருப்போரெல்லாம் வங்கிக் கணக்குத் திறக்க‌, டெபிட் கார்ட்கள் பயன்படுத்தத் துவங்க‌, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட‌ ஒரு வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறேன். அதுவே பணத்தின் எதிர்காலம்.

20. "1000 ரூபாய்க்கு செல்லாத 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுக‌ள் தருகிறோம், பதிலாக 700 ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டு தாருங்கள்" என்று சிலர் பேரம் ஆரம்பித்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். அது நாசூக்காய்க் கருப்பை வெளுப்பாக்கும் தேச விரோதச் செயல். லாபம் தான் என்றாலும் அதற்கு ஒருபோதும் துணை போகாதீர். மாற்றும் போதோ செலுத்தும் போதோ அந்தப் பணம் உங்கள் வருமானக் கணக்கில் வந்து விடும் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.

21. எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு மிக முக்கிய விஷயம். சமூக வளைதள மீம்களில் காட்டப்படுவது போல் 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுகளில் கடலை மடிக்கும் அளவுக்கு நிலமை மோசமாய்ப் போய் விடவில்லை. கருப்பு இல்லை எனில் உங்கள் பணம் உங்களுடையதே. அதற்குரிய இணைப் பணத்தை அரசாங்கம் இன்றோ நாளையோ உங்களுக்குத் தந்து விடும். அதனால் இதில் பதற்றமுறவோ, பயமுறவோ, கவலையுறவோ, கடுப்புறவோ ஏதுமில்லை. நமது அன்றாடங்கள் பாதிக்கப்படுகின்றன தாம். ஆனால் ஓரளவு முன்கூட்டிய திட்டமிடல் மூலம் அவற்றைச் சமாளித்து விட்டால் பிரச்சனை ஏதுமில்லை. ஒரு பைசா கூட சாதாரணர்களான நமக்கு நட்டமில்லை. அஞ்ச வேண்டியவர்கள் அஞ்சட்டும், நண்பர்காள்.

(இவற்றில் சில கிராமவாசிகளுக்கு, இணையப் பரிச்சயமற்றவர்களுக்கு, வங்கிக் கணக்கில்லாதவர்க்கு சாத்தியமற்ற யோசனைகளாக இருக்கலாம். நான் பொதுவான ஒரு பட்டியலையே அளித்திருக்கிறேன். அவரவர்க்குப் பொருந்துவதை மட்டும் பொருட்படுத்தி செயல்படுத்த எத்தனிக்கலாம். மற்றபடி எலைட் மனப்பான்மையில் எழுத்தப்பட்டதல்ல இஃது.)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...