முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல செய்தி!


இந்திய‌ ஊடகத்துக்கு இது முக்கியமான ஆண்டு. ஏனென்றால், இந்த ஆண்டில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் ஊடகத்துறையில் நிகழ்ந்துள்ளன. ஒன்று, ‘ராம்நாத் கோயங்கா விருது’ வழங்கும் விழாவில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஆசிரியர் ராஜ் கமல் ஜா, பிரதமர் முன்னிலையில் அவரது அரசையே விமர்சனம் செய்திருக்கிறார். இன்னொன்று, என்.டி.டி.வி. மீதான தடையும் அது சார்ந்த விவாதங்களும்! இந்த இரண்டும் சொல்லும் நல்ல செய்தி... ஊடகச் சுதந்திரத்தை யாரும் நெரிக்க முடியாது என்பதே!
இவற்றில் என்.டி.டி.வி. மீதான மத்திய அரசின் தடை உத்தரவு, பல கேள்விகளை எழுப்புகிறது. என்.டி.டி.வி. செய்தது சரியா, அரசு செய்தது சரியா என்று தீவிரமாக அலசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் வெளியாகியிருக்கிறது, ‘மோர் நியூஸ் இஸ் குட் நியூஸ்’ எனும் புத்தகம்.
என்.டி.டி.வி. ஆரம்பித்து தற்போது 28-வது ஆண்டில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் ஊடகத்துறையில் தனது 25 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததன் நினைவை அசைபோடும் விதமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. என்.டி.டி.வி.யின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஆயிஷா ககல் தொகுத்த இந்தத் தொகுப்பை ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
முதல் தனியார் தொலைக்காட்சி
இன்று நாடு முழுக்க சுமார் 450-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தி சேனல்கள் உள்ளன. முப்பது வருடங்கள் பின்னோக்கிப் போனால் ‘தூர்தர்ஷன்’ மட்டுமே அன்றைக்கு நாட்டிலிருந்த ஒரே தொலைக்காட்சி. அதுவும் அரசு நிறுவனம். அமைச்சர்கள் ரிப்பன் வெட்டிப் புதிய கட்டிடங்களைத் திறந்துவைப்பதுதான் அன்றைக்கெல்லாம் செய்தி. இதையே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்த மக்களுக்கு, உலகத்தை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்தது ‘தி வேர்ல்ட் திஸ் வீக்’ எனும் அரைமணி நேர நிகழ்ச்சி.
பொருளாதார அறிஞராக இருந்த பிரணாய் ராய், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரின் மனைவி ராதிகா ராய் ஆகியோர் புதிதாகச் செய்தி சேனல் தொடங்கத் திட்டமிட்டனர். அதன் முதல் படி, தூர்தர்ஷனிலேயே அரை மணி நேர ஸ்லாட்டை வாங்கி, அதில் உலக நிகழ்வுகளை வழங்கத் தொடங்கினர். அதுதான் மேற்சொன்ன நிகழ்ச்சி. இது நடந்தது 1988-ம் ஆண்டு. கணினி, கை பேசி உள்ளிட்ட அடிப்படையான தொழில்நுட்பக் கருவிகள்கூட அன்று வளர்ச்சியடைந்திருக்காத காலத்தில் பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து செய்திகளை வழங்கியவர்கள் ‘ராய் அண்ட் கோ’.
அதற்குப் பிறகு அதே தூர்தர்ஷனில் நேரலையாகச் செய்திகளை வழங்கியது, பிரிட்டனின் ‘ஸ்டார் நியூஸ்’ நிறுவனத்துடன் கைகோத்தது, தனியாக சேனல் தொடங்கியது என அனைத்துமே வரலாறு!
இந்தி சேனலின் முகம்
என்.டி.டி.வி. நிறுவனம் என்.டி.டி.வி. 24X7, என்.டி.டி.வி. இந்தியா என இரண்டு செய்தி சேனல்களைக் கொண்டிருக்கிறது. முன்னது ஆங்கிலத்தில்; பின்னது இந்தியில்.
தற்போது என்.டி.டி.வி. மீது தடை விதிக்கப் படுவதற்குக் காரணமாகச் சொல்லப்படும் பதான்கோட் தாக்குதல் தொடர்பான நிகழ்ச்சி என்.டி.டி.வி. இந்தியா சேனலில்தான் வெளியானது. அந்த சேனலின் நட்சத்திரத் தொகுப்பாளராக இருப்பவர் ரவீஷ் குமார். இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து தனது சேனலில் இரண்டு ‘மைம்’ கலைஞர்களை வைத்து அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தார். இதற்கு முன்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சிக்க, தான் பங்கேற்கும் ‘ப்ரைம் டைம்’ நிகழ்ச்சியின்போது சுமார் 40 நிமிடங்களுக்குத் திரையைக் கருப்பாக்கினார். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளால் அவர் பார்வையாளர்களிடமும் சக பத்திரிகையாளர்களிடமும் மிகவும் பிரபலமாக விளங்குகிறார்.
என்.டி.டி.வி.யில் பணிபுரிந்த, பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்களின் நினைவுகளைக் கட்டுரையாக எழுதியிருக்கும் இந்தத் தொகுப்பில், இந்தி சேனலின் முகம் என்று புகழப்படும் ரவீஷ் குமாரைக் குறித்து ஒரு கட்டுரை உள்ளது. அவரே எழுதிய கட்டுரை ஒன்றும் உள்ளது.
வெற்றி ரகசியம் என்ன?
‘ரவீஷ் குமாரால் மட்டும் ஏன் இந்தியில் வெற்றி பெற முடிகிறது?’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையை என்.டி.டி.வி. இந்தியா சேனலின் நிர்வாக ஆசிரியர் அனிந்தியோ சக்ரவர்த்தி எழுதியுள்ளார். இது ரவீஷ் குமாருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமை.
ஒரு செய்தியை நிருபர் ஒருவர் தன்னுடைய பார்வையிலிருந்து தன்னிலை அனுபவமாக விவரிக்கும் செய்தி வழங்கும் முறையை ஆங்கிலத்தில் ‘கன்ஸோ ஜர்னலிஸம்’ என்று அழைக்கப்படுகிறது. 1960-களில் பி.பி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த ஹன்டர் எஸ்.தாம்ஸன் மற்றும் அவரது குழுவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகையான செய்தி வழங்கல் முறை வெளிநாடுகளில் பிரபலம்.
“அந்த ‘கன்ஸோ’ முறையைத்தான் ரவீஷ் குமார் பின்பற்றுகிறார். ‘இந்தி டி.வி. பார்வையாளர்கள் எந்த ஒரு விஷயம் குறித்தும் குறைந்த அளவே தகவல் அறிந்தவர்கள்’ பொதுவான பார்வை, இந்தி சேனல்களிடம் உள்ளன. எனவே அவர்களுக்கு ஆழமான செய்திகள், அலசல்கள் ஆகியவற்றை எல்லாம் வழங்காமல் கிசுகிசு, பரபரப்பு கொண்ட, ரசனை குறைவான‌ ‘டேப்ளாய்ட்’ நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
அறிவுலக ஆளுமைகள், அதிகார வர்க்கம், உரிமைகளைப் பேசுதல் போன்ற விஷயங்கள் ஆங்கில டி.வி. பார்வையாளர்களை அதிகம் கவரும். எனவே இவர்களை ‘குடிமைச் சமூகம்’ எனவும், சமநிலைச் சமுதாயம், ஒன்றிணைந்து பணியாற்றுதல் போன்ற விஷயங்கள் இந்தி டி.வி.பார்வையாளர்களைக் கவர்வதால் இவர்களை ‘அரசியல் சமூகம்’ எனவும் பிரிக்கலாம். ரவீஷ் குமாரின் நிகழ்ச்சிகள் இந்த இரண்டு பிரிவினரையும் பார்க்க வைக்கின்றன. அதனால்தான் அவரின் நிகழ்ச்சிகள் வெற்றியடைகின்றன” என்று எழுதுகிறார் அனிந்தியோ சக்ரவர்த்தி.
ரவீஷ் குமாரோ ‘லுடியன்ஸ் ஜர்னலிஸம்’ என்ற தன் கட்டுரையில் “இந்திய நாடாளுமன்றத்தில்தான் பல பத்திரிகையாளர்கள் ஜாகை அமைத்துத் தங்கள் வாழ்நாளை ஓட்டுகிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே, டெல்லிக்கு வெளியேதான் உண்மையான இந்தியா இருக்கிறது. செய்தியாளர்களுக்கு அங்குதான் நிறைய வேலைகள் இருக்கின்றன” என்கிறார்.
தற்சமயம் என்.டி.டி.வி. மீதான தடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான விவாதங்களிலிருந்து நாம் பாடம் கற்கிறோமோ இல்லையோ, நிச்சயம் இந்தப் புத்தகத்திலிருந்து பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளராக வரத் துடிக்கும் இளைஞர்களும் நிறைய கற்றுக்கொள்ளலாம்!

ஜி... அது என்ன ‘ஸெஃபாலஜி’?

இந்தியத் தொலைக்காட்சி ஊடகத்தில் என்.டி.டி.வி. பல விஷயங்களுக்கு முன்னோடி. முக்கியமாகத் தேர்தல். தேர்தல் தொடர்பான ஆய்வுகள், அலசல்களை ஆங்கிலத்தில் ‘ஸெஃபாலஜி’ (Psephology) என்று குறிப்பிடுகிறார்கள். இந்தச் சொல்லை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் (கவனிக்க... உருவாக்கியவர் அல்ல!) இங்கிலாந்தின் ஆக்ஸ்பார்ட் பகுதியில் உள்ள புதுக் கல்லூரிப் பேராசிரியர் டேவிட் பட்லர். 1945-ம் ஆண்டில் இதைத் தன் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அறிமுகப்படுத்தினார்.
பண்டைய கிரேக்கத்தில் தேர்தலின்போது மண் பானைக்குள் கற்களைப் போடும் வழக்கம் இருந்தது. கிரேக்கத்தில் கற்களுக்கு ‘ஸெஃபோஸ்’ (Psephos)என்று பெயர். அதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தச் சொல் உருவானதாக ப‌ட்லர் கூறுகிறார். இந்த வார்த்தை இந்திய மக்களுக்கு என்.டி.டி.வி.யின் மூலமாக அறிமுகமானது. ஆம், 90-களில் இந்தியாவில் நடந்த தேர்தல்களை அலசுவதற்கு என்.டி.டி.வி., பட்லரின் உதவியை நாட, இந்த வார்த்தை இந்தியத் தேர்தல் அகராதியில் இடம்பிடித்தது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...