முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல செய்தி!


இந்திய‌ ஊடகத்துக்கு இது முக்கியமான ஆண்டு. ஏனென்றால், இந்த ஆண்டில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் ஊடகத்துறையில் நிகழ்ந்துள்ளன. ஒன்று, ‘ராம்நாத் கோயங்கா விருது’ வழங்கும் விழாவில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஆசிரியர் ராஜ் கமல் ஜா, பிரதமர் முன்னிலையில் அவரது அரசையே விமர்சனம் செய்திருக்கிறார். இன்னொன்று, என்.டி.டி.வி. மீதான தடையும் அது சார்ந்த விவாதங்களும்! இந்த இரண்டும் சொல்லும் நல்ல செய்தி... ஊடகச் சுதந்திரத்தை யாரும் நெரிக்க முடியாது என்பதே!
இவற்றில் என்.டி.டி.வி. மீதான மத்திய அரசின் தடை உத்தரவு, பல கேள்விகளை எழுப்புகிறது. என்.டி.டி.வி. செய்தது சரியா, அரசு செய்தது சரியா என்று தீவிரமாக அலசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் வெளியாகியிருக்கிறது, ‘மோர் நியூஸ் இஸ் குட் நியூஸ்’ எனும் புத்தகம்.
என்.டி.டி.வி. ஆரம்பித்து தற்போது 28-வது ஆண்டில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் ஊடகத்துறையில் தனது 25 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததன் நினைவை அசைபோடும் விதமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. என்.டி.டி.வி.யின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஆயிஷா ககல் தொகுத்த இந்தத் தொகுப்பை ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
முதல் தனியார் தொலைக்காட்சி
இன்று நாடு முழுக்க சுமார் 450-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தி சேனல்கள் உள்ளன. முப்பது வருடங்கள் பின்னோக்கிப் போனால் ‘தூர்தர்ஷன்’ மட்டுமே அன்றைக்கு நாட்டிலிருந்த ஒரே தொலைக்காட்சி. அதுவும் அரசு நிறுவனம். அமைச்சர்கள் ரிப்பன் வெட்டிப் புதிய கட்டிடங்களைத் திறந்துவைப்பதுதான் அன்றைக்கெல்லாம் செய்தி. இதையே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்த மக்களுக்கு, உலகத்தை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்தது ‘தி வேர்ல்ட் திஸ் வீக்’ எனும் அரைமணி நேர நிகழ்ச்சி.
பொருளாதார அறிஞராக இருந்த பிரணாய் ராய், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரின் மனைவி ராதிகா ராய் ஆகியோர் புதிதாகச் செய்தி சேனல் தொடங்கத் திட்டமிட்டனர். அதன் முதல் படி, தூர்தர்ஷனிலேயே அரை மணி நேர ஸ்லாட்டை வாங்கி, அதில் உலக நிகழ்வுகளை வழங்கத் தொடங்கினர். அதுதான் மேற்சொன்ன நிகழ்ச்சி. இது நடந்தது 1988-ம் ஆண்டு. கணினி, கை பேசி உள்ளிட்ட அடிப்படையான தொழில்நுட்பக் கருவிகள்கூட அன்று வளர்ச்சியடைந்திருக்காத காலத்தில் பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து செய்திகளை வழங்கியவர்கள் ‘ராய் அண்ட் கோ’.
அதற்குப் பிறகு அதே தூர்தர்ஷனில் நேரலையாகச் செய்திகளை வழங்கியது, பிரிட்டனின் ‘ஸ்டார் நியூஸ்’ நிறுவனத்துடன் கைகோத்தது, தனியாக சேனல் தொடங்கியது என அனைத்துமே வரலாறு!
இந்தி சேனலின் முகம்
என்.டி.டி.வி. நிறுவனம் என்.டி.டி.வி. 24X7, என்.டி.டி.வி. இந்தியா என இரண்டு செய்தி சேனல்களைக் கொண்டிருக்கிறது. முன்னது ஆங்கிலத்தில்; பின்னது இந்தியில்.
தற்போது என்.டி.டி.வி. மீது தடை விதிக்கப் படுவதற்குக் காரணமாகச் சொல்லப்படும் பதான்கோட் தாக்குதல் தொடர்பான நிகழ்ச்சி என்.டி.டி.வி. இந்தியா சேனலில்தான் வெளியானது. அந்த சேனலின் நட்சத்திரத் தொகுப்பாளராக இருப்பவர் ரவீஷ் குமார். இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து தனது சேனலில் இரண்டு ‘மைம்’ கலைஞர்களை வைத்து அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தார். இதற்கு முன்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சிக்க, தான் பங்கேற்கும் ‘ப்ரைம் டைம்’ நிகழ்ச்சியின்போது சுமார் 40 நிமிடங்களுக்குத் திரையைக் கருப்பாக்கினார். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளால் அவர் பார்வையாளர்களிடமும் சக பத்திரிகையாளர்களிடமும் மிகவும் பிரபலமாக விளங்குகிறார்.
என்.டி.டி.வி.யில் பணிபுரிந்த, பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்களின் நினைவுகளைக் கட்டுரையாக எழுதியிருக்கும் இந்தத் தொகுப்பில், இந்தி சேனலின் முகம் என்று புகழப்படும் ரவீஷ் குமாரைக் குறித்து ஒரு கட்டுரை உள்ளது. அவரே எழுதிய கட்டுரை ஒன்றும் உள்ளது.
வெற்றி ரகசியம் என்ன?
‘ரவீஷ் குமாரால் மட்டும் ஏன் இந்தியில் வெற்றி பெற முடிகிறது?’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையை என்.டி.டி.வி. இந்தியா சேனலின் நிர்வாக ஆசிரியர் அனிந்தியோ சக்ரவர்த்தி எழுதியுள்ளார். இது ரவீஷ் குமாருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமை.
ஒரு செய்தியை நிருபர் ஒருவர் தன்னுடைய பார்வையிலிருந்து தன்னிலை அனுபவமாக விவரிக்கும் செய்தி வழங்கும் முறையை ஆங்கிலத்தில் ‘கன்ஸோ ஜர்னலிஸம்’ என்று அழைக்கப்படுகிறது. 1960-களில் பி.பி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த ஹன்டர் எஸ்.தாம்ஸன் மற்றும் அவரது குழுவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகையான செய்தி வழங்கல் முறை வெளிநாடுகளில் பிரபலம்.
“அந்த ‘கன்ஸோ’ முறையைத்தான் ரவீஷ் குமார் பின்பற்றுகிறார். ‘இந்தி டி.வி. பார்வையாளர்கள் எந்த ஒரு விஷயம் குறித்தும் குறைந்த அளவே தகவல் அறிந்தவர்கள்’ பொதுவான பார்வை, இந்தி சேனல்களிடம் உள்ளன. எனவே அவர்களுக்கு ஆழமான செய்திகள், அலசல்கள் ஆகியவற்றை எல்லாம் வழங்காமல் கிசுகிசு, பரபரப்பு கொண்ட, ரசனை குறைவான‌ ‘டேப்ளாய்ட்’ நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
அறிவுலக ஆளுமைகள், அதிகார வர்க்கம், உரிமைகளைப் பேசுதல் போன்ற விஷயங்கள் ஆங்கில டி.வி. பார்வையாளர்களை அதிகம் கவரும். எனவே இவர்களை ‘குடிமைச் சமூகம்’ எனவும், சமநிலைச் சமுதாயம், ஒன்றிணைந்து பணியாற்றுதல் போன்ற விஷயங்கள் இந்தி டி.வி.பார்வையாளர்களைக் கவர்வதால் இவர்களை ‘அரசியல் சமூகம்’ எனவும் பிரிக்கலாம். ரவீஷ் குமாரின் நிகழ்ச்சிகள் இந்த இரண்டு பிரிவினரையும் பார்க்க வைக்கின்றன. அதனால்தான் அவரின் நிகழ்ச்சிகள் வெற்றியடைகின்றன” என்று எழுதுகிறார் அனிந்தியோ சக்ரவர்த்தி.
ரவீஷ் குமாரோ ‘லுடியன்ஸ் ஜர்னலிஸம்’ என்ற தன் கட்டுரையில் “இந்திய நாடாளுமன்றத்தில்தான் பல பத்திரிகையாளர்கள் ஜாகை அமைத்துத் தங்கள் வாழ்நாளை ஓட்டுகிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே, டெல்லிக்கு வெளியேதான் உண்மையான இந்தியா இருக்கிறது. செய்தியாளர்களுக்கு அங்குதான் நிறைய வேலைகள் இருக்கின்றன” என்கிறார்.
தற்சமயம் என்.டி.டி.வி. மீதான தடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான விவாதங்களிலிருந்து நாம் பாடம் கற்கிறோமோ இல்லையோ, நிச்சயம் இந்தப் புத்தகத்திலிருந்து பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளராக வரத் துடிக்கும் இளைஞர்களும் நிறைய கற்றுக்கொள்ளலாம்!

ஜி... அது என்ன ‘ஸெஃபாலஜி’?

இந்தியத் தொலைக்காட்சி ஊடகத்தில் என்.டி.டி.வி. பல விஷயங்களுக்கு முன்னோடி. முக்கியமாகத் தேர்தல். தேர்தல் தொடர்பான ஆய்வுகள், அலசல்களை ஆங்கிலத்தில் ‘ஸெஃபாலஜி’ (Psephology) என்று குறிப்பிடுகிறார்கள். இந்தச் சொல்லை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் (கவனிக்க... உருவாக்கியவர் அல்ல!) இங்கிலாந்தின் ஆக்ஸ்பார்ட் பகுதியில் உள்ள புதுக் கல்லூரிப் பேராசிரியர் டேவிட் பட்லர். 1945-ம் ஆண்டில் இதைத் தன் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அறிமுகப்படுத்தினார்.
பண்டைய கிரேக்கத்தில் தேர்தலின்போது மண் பானைக்குள் கற்களைப் போடும் வழக்கம் இருந்தது. கிரேக்கத்தில் கற்களுக்கு ‘ஸெஃபோஸ்’ (Psephos)என்று பெயர். அதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தச் சொல் உருவானதாக ப‌ட்லர் கூறுகிறார். இந்த வார்த்தை இந்திய மக்களுக்கு என்.டி.டி.வி.யின் மூலமாக அறிமுகமானது. ஆம், 90-களில் இந்தியாவில் நடந்த தேர்தல்களை அலசுவதற்கு என்.டி.டி.வி., பட்லரின் உதவியை நாட, இந்த வார்த்தை இந்தியத் தேர்தல் அகராதியில் இடம்பிடித்தது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...