முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல செய்தி!


இந்திய‌ ஊடகத்துக்கு இது முக்கியமான ஆண்டு. ஏனென்றால், இந்த ஆண்டில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் ஊடகத்துறையில் நிகழ்ந்துள்ளன. ஒன்று, ‘ராம்நாத் கோயங்கா விருது’ வழங்கும் விழாவில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஆசிரியர் ராஜ் கமல் ஜா, பிரதமர் முன்னிலையில் அவரது அரசையே விமர்சனம் செய்திருக்கிறார். இன்னொன்று, என்.டி.டி.வி. மீதான தடையும் அது சார்ந்த விவாதங்களும்! இந்த இரண்டும் சொல்லும் நல்ல செய்தி... ஊடகச் சுதந்திரத்தை யாரும் நெரிக்க முடியாது என்பதே!
இவற்றில் என்.டி.டி.வி. மீதான மத்திய அரசின் தடை உத்தரவு, பல கேள்விகளை எழுப்புகிறது. என்.டி.டி.வி. செய்தது சரியா, அரசு செய்தது சரியா என்று தீவிரமாக அலசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் வெளியாகியிருக்கிறது, ‘மோர் நியூஸ் இஸ் குட் நியூஸ்’ எனும் புத்தகம்.
என்.டி.டி.வி. ஆரம்பித்து தற்போது 28-வது ஆண்டில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் ஊடகத்துறையில் தனது 25 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததன் நினைவை அசைபோடும் விதமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. என்.டி.டி.வி.யின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஆயிஷா ககல் தொகுத்த இந்தத் தொகுப்பை ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
முதல் தனியார் தொலைக்காட்சி
இன்று நாடு முழுக்க சுமார் 450-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தி சேனல்கள் உள்ளன. முப்பது வருடங்கள் பின்னோக்கிப் போனால் ‘தூர்தர்ஷன்’ மட்டுமே அன்றைக்கு நாட்டிலிருந்த ஒரே தொலைக்காட்சி. அதுவும் அரசு நிறுவனம். அமைச்சர்கள் ரிப்பன் வெட்டிப் புதிய கட்டிடங்களைத் திறந்துவைப்பதுதான் அன்றைக்கெல்லாம் செய்தி. இதையே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்த மக்களுக்கு, உலகத்தை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்தது ‘தி வேர்ல்ட் திஸ் வீக்’ எனும் அரைமணி நேர நிகழ்ச்சி.
பொருளாதார அறிஞராக இருந்த பிரணாய் ராய், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரின் மனைவி ராதிகா ராய் ஆகியோர் புதிதாகச் செய்தி சேனல் தொடங்கத் திட்டமிட்டனர். அதன் முதல் படி, தூர்தர்ஷனிலேயே அரை மணி நேர ஸ்லாட்டை வாங்கி, அதில் உலக நிகழ்வுகளை வழங்கத் தொடங்கினர். அதுதான் மேற்சொன்ன நிகழ்ச்சி. இது நடந்தது 1988-ம் ஆண்டு. கணினி, கை பேசி உள்ளிட்ட அடிப்படையான தொழில்நுட்பக் கருவிகள்கூட அன்று வளர்ச்சியடைந்திருக்காத காலத்தில் பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து செய்திகளை வழங்கியவர்கள் ‘ராய் அண்ட் கோ’.
அதற்குப் பிறகு அதே தூர்தர்ஷனில் நேரலையாகச் செய்திகளை வழங்கியது, பிரிட்டனின் ‘ஸ்டார் நியூஸ்’ நிறுவனத்துடன் கைகோத்தது, தனியாக சேனல் தொடங்கியது என அனைத்துமே வரலாறு!
இந்தி சேனலின் முகம்
என்.டி.டி.வி. நிறுவனம் என்.டி.டி.வி. 24X7, என்.டி.டி.வி. இந்தியா என இரண்டு செய்தி சேனல்களைக் கொண்டிருக்கிறது. முன்னது ஆங்கிலத்தில்; பின்னது இந்தியில்.
தற்போது என்.டி.டி.வி. மீது தடை விதிக்கப் படுவதற்குக் காரணமாகச் சொல்லப்படும் பதான்கோட் தாக்குதல் தொடர்பான நிகழ்ச்சி என்.டி.டி.வி. இந்தியா சேனலில்தான் வெளியானது. அந்த சேனலின் நட்சத்திரத் தொகுப்பாளராக இருப்பவர் ரவீஷ் குமார். இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து தனது சேனலில் இரண்டு ‘மைம்’ கலைஞர்களை வைத்து அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தார். இதற்கு முன்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சிக்க, தான் பங்கேற்கும் ‘ப்ரைம் டைம்’ நிகழ்ச்சியின்போது சுமார் 40 நிமிடங்களுக்குத் திரையைக் கருப்பாக்கினார். இதுபோன்ற பல நிகழ்ச்சிகளால் அவர் பார்வையாளர்களிடமும் சக பத்திரிகையாளர்களிடமும் மிகவும் பிரபலமாக விளங்குகிறார்.
என்.டி.டி.வி.யில் பணிபுரிந்த, பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்களின் நினைவுகளைக் கட்டுரையாக எழுதியிருக்கும் இந்தத் தொகுப்பில், இந்தி சேனலின் முகம் என்று புகழப்படும் ரவீஷ் குமாரைக் குறித்து ஒரு கட்டுரை உள்ளது. அவரே எழுதிய கட்டுரை ஒன்றும் உள்ளது.
வெற்றி ரகசியம் என்ன?
‘ரவீஷ் குமாரால் மட்டும் ஏன் இந்தியில் வெற்றி பெற முடிகிறது?’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையை என்.டி.டி.வி. இந்தியா சேனலின் நிர்வாக ஆசிரியர் அனிந்தியோ சக்ரவர்த்தி எழுதியுள்ளார். இது ரவீஷ் குமாருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமை.
ஒரு செய்தியை நிருபர் ஒருவர் தன்னுடைய பார்வையிலிருந்து தன்னிலை அனுபவமாக விவரிக்கும் செய்தி வழங்கும் முறையை ஆங்கிலத்தில் ‘கன்ஸோ ஜர்னலிஸம்’ என்று அழைக்கப்படுகிறது. 1960-களில் பி.பி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த ஹன்டர் எஸ்.தாம்ஸன் மற்றும் அவரது குழுவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகையான செய்தி வழங்கல் முறை வெளிநாடுகளில் பிரபலம்.
“அந்த ‘கன்ஸோ’ முறையைத்தான் ரவீஷ் குமார் பின்பற்றுகிறார். ‘இந்தி டி.வி. பார்வையாளர்கள் எந்த ஒரு விஷயம் குறித்தும் குறைந்த அளவே தகவல் அறிந்தவர்கள்’ பொதுவான பார்வை, இந்தி சேனல்களிடம் உள்ளன. எனவே அவர்களுக்கு ஆழமான செய்திகள், அலசல்கள் ஆகியவற்றை எல்லாம் வழங்காமல் கிசுகிசு, பரபரப்பு கொண்ட, ரசனை குறைவான‌ ‘டேப்ளாய்ட்’ நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
அறிவுலக ஆளுமைகள், அதிகார வர்க்கம், உரிமைகளைப் பேசுதல் போன்ற விஷயங்கள் ஆங்கில டி.வி. பார்வையாளர்களை அதிகம் கவரும். எனவே இவர்களை ‘குடிமைச் சமூகம்’ எனவும், சமநிலைச் சமுதாயம், ஒன்றிணைந்து பணியாற்றுதல் போன்ற விஷயங்கள் இந்தி டி.வி.பார்வையாளர்களைக் கவர்வதால் இவர்களை ‘அரசியல் சமூகம்’ எனவும் பிரிக்கலாம். ரவீஷ் குமாரின் நிகழ்ச்சிகள் இந்த இரண்டு பிரிவினரையும் பார்க்க வைக்கின்றன. அதனால்தான் அவரின் நிகழ்ச்சிகள் வெற்றியடைகின்றன” என்று எழுதுகிறார் அனிந்தியோ சக்ரவர்த்தி.
ரவீஷ் குமாரோ ‘லுடியன்ஸ் ஜர்னலிஸம்’ என்ற தன் கட்டுரையில் “இந்திய நாடாளுமன்றத்தில்தான் பல பத்திரிகையாளர்கள் ஜாகை அமைத்துத் தங்கள் வாழ்நாளை ஓட்டுகிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே, டெல்லிக்கு வெளியேதான் உண்மையான இந்தியா இருக்கிறது. செய்தியாளர்களுக்கு அங்குதான் நிறைய வேலைகள் இருக்கின்றன” என்கிறார்.
தற்சமயம் என்.டி.டி.வி. மீதான தடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான விவாதங்களிலிருந்து நாம் பாடம் கற்கிறோமோ இல்லையோ, நிச்சயம் இந்தப் புத்தகத்திலிருந்து பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளராக வரத் துடிக்கும் இளைஞர்களும் நிறைய கற்றுக்கொள்ளலாம்!

ஜி... அது என்ன ‘ஸெஃபாலஜி’?

இந்தியத் தொலைக்காட்சி ஊடகத்தில் என்.டி.டி.வி. பல விஷயங்களுக்கு முன்னோடி. முக்கியமாகத் தேர்தல். தேர்தல் தொடர்பான ஆய்வுகள், அலசல்களை ஆங்கிலத்தில் ‘ஸெஃபாலஜி’ (Psephology) என்று குறிப்பிடுகிறார்கள். இந்தச் சொல்லை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் (கவனிக்க... உருவாக்கியவர் அல்ல!) இங்கிலாந்தின் ஆக்ஸ்பார்ட் பகுதியில் உள்ள புதுக் கல்லூரிப் பேராசிரியர் டேவிட் பட்லர். 1945-ம் ஆண்டில் இதைத் தன் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அறிமுகப்படுத்தினார்.
பண்டைய கிரேக்கத்தில் தேர்தலின்போது மண் பானைக்குள் கற்களைப் போடும் வழக்கம் இருந்தது. கிரேக்கத்தில் கற்களுக்கு ‘ஸெஃபோஸ்’ (Psephos)என்று பெயர். அதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தச் சொல் உருவானதாக ப‌ட்லர் கூறுகிறார். இந்த வார்த்தை இந்திய மக்களுக்கு என்.டி.டி.வி.யின் மூலமாக அறிமுகமானது. ஆம், 90-களில் இந்தியாவில் நடந்த தேர்தல்களை அலசுவதற்கு என்.டி.டி.வி., பட்லரின் உதவியை நாட, இந்த வார்த்தை இந்தியத் தேர்தல் அகராதியில் இடம்பிடித்தது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ” என் பெண் வருகிறாள் ” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில் , ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து ; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த , குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ” ஹாய்! ” என்றாள். ” என்னைத்தெரியுமா ?” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு. ” சொல்லுங்க ” என்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர் , ” இவருதான் ...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest