முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுகப் புரட்சி

மிகப் பெரிய வெற்றியாக அமைந்திருக்க வேண்டிய போராட்டம் மிக கரும்புள்ளியோடு முடிவடைந்திருக்கிறது.  ஜல்லிக் கட்டுக்கான இந்த இளைஞர்களின் போராட்டம், வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டமா என்றால் நிச்சயமாக இது வரலாற்று சிறப்பு மிக்க போராட்டமே.   தன்னெழுச்சியோடு அரசியல் கட்சிகளின் தலைமையின்றி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தமிழக இளைஞர்கள் நடத்தி உலகையே தமிழகத்தை நோக்கி திரும்ப வைத்துள்ளனர். அப்படி உலகை வியக்க வைத்த ஒரு போராட்டம், இப்படித்தான் முடியும் என்று பலரும் ஆருடம் கணித்தது போலவே வன்முறையோடு முடிந்துள்ளது.
CHN_2017-01-24_maip3_20

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சம்பிரதாயமான ஆர்ப்பாட்டங்களோடு ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நிறைவடைந்து விடும் என்றே ஆட்சியாளர்கள் கருதினர்.   தடையை மீறி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டையொட்டி கைது நடவடிக்கைகள் அரங்கேறின.   போராட்டம் தீவிர வடிவம் பெறும் என்பதை அறியாத ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற ஒரே காரணத்தால் அவசர அவசரமாக கைதில் இறங்கினர். மெள்ள மெள்ள ஜல்லிக்கட்டு தமிழர் அடையாளம் என்ற உணர்வு பரவி, தமிழகத்தின் இதர மாவட்டங்களில் போராட்டம் தொற்றிக் கொள்ளத் தொடங்கியது.
சென்னையில் போராட்டம் முழு வீச்சை அடைந்தது.  பெருமளவில் மாணவர்களும், இளைஞர்களும் மெரினாவில் குவிந்தனர். சில நூறாக இருந்த எண்ணிக்கை லட்சங்களை தொட்டது.   மாணவிகள் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.   சென்னை கடற்கரை திருவிழாக் கோலம் பூண்டது.    குடும்பம் குடும்பமாக மக்கள் இந்த மாபெரும் திருவிழாவில் பங்கெடுக்கத் தொடங்கினர்.  ஜல்லிக் கட்டுக்கு என்று குவிந்த கூட்டம், பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, அந்நிய குளிர்பானங்கள், என்று அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கத் தொடங்கியது.     இவை குறித்த முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
49640-zoknvippsm-1484756705
போராட்டத்துக்காக கூடிய கூட்டத்துக்கு உணவு, குடிநீர் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு வழங்கப்பட்டது.   அடிப்படை சிக்கல்கள் இல்லாமல் இருந்ததால் போராட்டம் தொய்வின்றி நடந்தது.
தொலைக்காட்சி சேனல்கள் போராட்டத்தை கொண்டாடின.   24 மணி நேரமும் இடைவேளையின்றி நேரடி ஒளிபரப்பு செய்தன.   செய்தி ஊடகங்களுக்குள் யார் இளைஞர்களின் நற்பெயரைப் பெறுவது என்பதில் பெரும் போட்டியே நடந்தது.    முதல் இரண்டு நாட்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருந்த தேசிய ஊடகங்கள், வேறு வழியேயின்றி போராட்டங்களை ஒளிபரப்பு செய்யத் தொடங்கின.  நேரில் செல்ல வாய்ப்பு கிடைத்தவர்கள் நேரில் சென்றனர்.   வாய்ப்பு இல்லாதவர்கள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் ஆர்வத்தோடு போராட்டத்தை பின் தொடர்ந்தனர்.   தமிழகமே திருவிழாக் கோலம் பூண்டது.
தன்னெழுச்சியான மாணவ இளைஞர் போராட்டம் போலத்தான் வெளிப்படையாக தெரிந்தது.   ஆனால், இதில் எப்படி அரசியல் ஆதாயம் அடையலாம் என்று பல்வேறு சக்திகள் ஒரே நேரத்தில் இந்த போராட்டங்களை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின.
ஜெயலலிதாவின் உறவினர் தீபா, எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம் வைத்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதே நாளில்தான் காலை ஏழரை மணி முதல் இளைஞர்கள் மெரீனாவில் கூடத் தொடங்கினர்.    தீபாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பை மறைத்து இருட்டடிப்பு செய்ய, ஆட்சியாளர்களுக்கு மாணவர்களின் போராட்டம் பெரும் உதவியாக இருந்தது. தங்கு தடையின்றி மாணவர்கள் கூட அனுமதிக்கப்பட்டனர்.    ஆனால் இப்படி கூடிய கூட்டம் மக்கள் வெள்ளமாக பெருகும் என்பதை, ஆட்சியாளரும் உணரவில்லை, மன்னார்குடி கூட்டமும் உணரவில்லை.  ஆனால் இதில் தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு உருவாகி உள்ளதாக இரு தரப்புமே உணர்ந்தது.
பன்னீர் செல்வம் தனது ஆளுமையை நிலை நிறுத்தவும், தனது முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் இதை ஒரு நல்ல வாய்ப்பாக உணர்ந்து, உடனடியாக அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கைகளை தொடங்கினார்.
2009ம் ஆண்டு ஈழப் போராட்டம் நடந்தபோது, அப்போதைய திமுக அரசு, அந்தப் போராட்டங்களை திட்டமிட்டு படிப்படியாக உடைத்து நீர்த்துப் போகச் செய்தது.   பெரும் இயக்கமாக உருவாக இருந்த அந்த இளைஞர் மற்றும் மாணவர் போராட்டம், காவல்துறை உதவியோடு பொய் வழக்களாலும், வன்முறையாலும் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படிப்பட்ட இழிவான முறைகளை பன்னீர்செல்வம் அரசு கையாளவில்லை.  மாறாக மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முனைப்போடு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
டெல்லி சென்று நரேந்திர மோடியை சந்தித்தபோது, அவர் உதவி செய்ய முடியாது என்று கைவிரித்த நிலையில், மாநில அரசின் சட்டத் திருத்தத்துக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை பெற்று வந்தார்.   அதோடு அல்லாமல், டெல்லியிலேயே தங்கி சட்டத்திருத்தத்தை உள்துறை, சட்டம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகங்களுக்கு அனுப்பி அவற்றின் ஒப்புதலை பெற்று, குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்.
சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்பது தெரிந்ததும், தமிழக அரசு சார்பில் ஞாயிறன்று ஜல்லிக் கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   வெளியிடப்பட்ட அவசர சட்டம், விடுமுறை நாளில் பீட்டா உள்ளிட்ட அமைப்பினரால் உச்சநீதிமன்றத்தில் தடை பெற்று விடப்படுமோ என்ற அச்சத்தில், சட்ட நகல் ரகசியமாகவே வைக்கப்பட்டது.   அரசு சார்பில் அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஞாயிறன்று ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.   இந்த இடத்தில் போராட்டம் நிறைவு பெற்று வெற்றி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.   ஆனால், நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் அறிவித்ததோடு, ஜல்லிக் கட்டு நடத்த விடாமல், பன்னீர்செல்வத்தையும் திருப்பி அனுப்பினர்.
இந்த இடத்தில்தான் சசிகலாவின் கணவரின் நடராஜ தாண்டவம் ஆரம்பமானது.   போராட்டம் நிறைவுக்கு வந்து பன்னீர்செல்வம் தன் பதவியை நிலை நிறுத்திக் கொண்டு விடுவாரோ என்று அஞ்சிய நடராஜன், தனது தமிழ் தேசிய தொடர்புகள் மற்றும் விவி மினரல்ஸின் வைகுண்டராஜனின் உதவியோடு, போராட்டத்தை நீடிக்க செய்தார்.  வைகுண்டராஜனின் நியூஸ் 7, வேலை  அசாதாரணமாக இந்த போராட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.   ஒரு கட்டத்தில், அவசர சட்டத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று வாட்சப்பில் வந்த வதந்தியை சரி பார்க்க வேண்டும் என்ற அடிப்படை நேர்மை கூட இல்லாமல் அதை அப்படியே செய்தியாக வெளியிட்டது.    இந்த செய்தி இந்நிறுவனத்தின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியது.   இது போராட்டத்தை மீண்டும் தீர்வு காணாமல் நீட்டிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே.
பின்னிருந்து இயக்குவோரின் சதித்திட்டம் புரியாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், வறட்டுத்தனமான வாதங்களோடு போராட்டம் தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர்.   நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.   நிரந்தரத் தீர்வு என்ன என்பதற்கான விளக்கம் அவர்களிடத்தில் இல்லை.    சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத காரணத்தால், அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.   அவசரச் சட்டத்துக்கும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டத்துக்கும் ஒரே அதிகாரம் உள்ளது என்பதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் நிரந்தரத் தீர்வு என்ற முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
Madurai : Youngsters stage a protest against Jallikattu ban at Alanganallur in Madurai on Monday. PTI Photo (PTI1_16_2017_000179B)
அரசு நினைத்திருந்தால் எப்போதோ இந்த போராட்டத்தை ஒடுக்கியிருக்க முடியும் என்பதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை.   ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு ஊருக்கு சென்று, உள்ளே நுழையவிடாமல் திருப்பி அனுப்பப் பட்டது, எந்த அரசுக்கும் விடப்பட்ட நேரடி சவால்.    ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா என்பது அனைவரும் அறிந்ததே.   ஆனால் அரசின் பொறுமையை போராட்டக் குழுவினர் பலவீனம் என்று புரிந்து கொண்டனர்.
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று தொடங்கிய போராட்டத்தின் இலக்குகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.   ஜல்லிக் கட்டு நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றிய பிறகு நிரந்தரத் தீர்வு என்ற குழப்பமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமான தீர்வு என்பதே இல்லை என்பதை யாருமே புரிந்து கொள்ளத் தயாராக இல்லை.   மாநில அரசோ, மத்திய அரசோ, எந்த அரசு சட்டம் இயற்றினாலும் அந்த சட்டம் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் சோதிக்கப்படும் என்பதை யாரும் புரிந்து கொள்ள தயாராக இல்லை.    எந்த அமைப்பும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கக் கூடாது என்று ஒரு ஜனநாயகத்தில் எப்படியான நடவடிக்கை எடுக்க முடியும் ?   உச்சநீதிமன்றத்தை மூடி விடலாமா ?   அது சாத்தியமா ?   ஆனால் இவற்றை விவாதிக்கவோ, புரிந்து கொள்ளவோ யாருமே தயாராக இல்லை.
ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த சேனாதிபதி, ராஜசேகர் உள்ளிட்டோர் போராட்டத்தை கைவிடுமாறு வெளிப்படையான கோரிக்கைகளை விடுத்தனர்.    போராட்டத்தில் முன்னணியில் இருந்த பலர், விடுத்த கோரிக்கைகளும் செவிசாய்க்கப்படவில்லை.
இன்று கிராமப்புரங்களில் விவசாயத்தின் நிலை என்ன ?   கடுமையான நெருக்கடியில் விவசாயமும் விவசாயிகளும் இருக்கின்றனரா இல்லையா ?    காளைகளின் பயன் என்ன ?  அவை உழவுக்கு பயன்படுத்தப்படுவதில்லை.    வண்டி மாடுகளாக பயன்படுத்தப்படுவதில்லை.  ட்ராக்டர்தான்.  இனவிருத்திக்காக பயன்படுகின்றனவா என்றால் அதுவும் இல்லை.   அரசின் கால்நடை பராமரிப்புத் துறை நிலையங்களில், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும், உயர் ரக மாடுகளின் விந்துகளே, இனவிருத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.    அப்படி இருக்கையில் வருடம் முழுவதும் தீவனம் அளித்து, வருடத்தில் ஒரு நாள் நடக்கும் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வளர்க்கும் பொருளாதார வசதி படைத்தது யார் ?  கிராமங்களில் பணம் கொழுத்த பண்ணையார்களால்தான் இதை சாத்தியப்படுத்த முடியும்.   உள்ளுர் மாட்டினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று பலத்த கோரிக்கை எழுந்தது.     உள்ளுர் மாட்டினங்களை வளர்க்க வேண்டாம் என்று உங்களை யார் தடுத்தார்கள் ?    வீடுதோறும் காளை மாடுகளை, நாட்டின மாடுகளை வளர்க்க வேண்டாம் என்று தடுத்தது யார் ?    யாரும் தடுக்கவில்லை.  பொருளாதார ரீதியாக இப்படி மாடு வளர்ப்பது என்பது சாத்தியப்படாத ஒரு அவலச் சூழலில் விவசாயம் இன்று இருக்கிறது என்பதே முகத்தில் அறையும் உண்மை.
ஜல்லிக்கட்டை யுட்யூபில் மட்டுமே பார்த்த இந்த இளைஞர்கள் சென்னையில் லட்சக்கணக்கில் கூடிய போராட்டம், பல காலமாக அழுத்தப்பட்டிருந்த உணர்வுகளின் வெளிப்பாடு என்பதாகவே இந்த போராட்டத்தை புரிந்து கொள்ள முடியும்.    வேலையிழப்பு, பண மதிப்பிழப்பு, பொய்த்த விவசாயம், செயல்படாத ஒரு மாநில அரசு, பொய்களையே பேசும் மத்திய அரசு என்று பல்வேறு விவகாரங்களின் மீது உள்ள கோபம் ஒரு மையப்புள்ளியை அடைந்து, ஜல்லிக் கட்டு போராட்டமாக வெடித்தது என்றே இதை புரிந்து கொள்ள முடிகிறது.    ஒரு நாள் ஜல்லிக்கட்டு நடத்துவதால், தமிழகத்தின் எந்த வாழ்வாதார பிரச்சினைகளும் தீரப்போவதில்லை என்பது அனைவருக்கும் புரியாமல் இல்லை.   ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தில் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளையும், மாணவர்கள் அனுமதிக்கவில்லை.   இது அரசியல் கட்சிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.   அரசியல் தலையீட்டை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்த காரணத்தால் போராட்டத்துக்கு எவ்விதமான தலைமையும் இல்லாமல் போனது.  போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்த காவல் துறை முயன்றபோது, யாரோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்று புரியாமல் தவித்தனர்.  ஆர்ஜே பாலாஜி, ராகவா லாரன்ஸ், இயக்குநர் கௌதமன் போன்றோர் மாணவர்களின் பிரதிநிதிகளாக மாறினர்.    தலைமை இல்லாத காரணத்தால், எந்த கட்டத்தில் போராட்டத்தை நிறுத்துவது என்று யாருக்குமே புரியாத ஒரு குழப்பமான சூழல் இறுதி வரை நிலவியது.
பல்வேறு தமிழ் தேசிய இயக்கங்கள் மற்றும் நக்சல் ஆதரவு இயக்கங்களுக்கு, இளைஞர்களின் இந்த போராட்டம் வாராது வந்த மாமணியாக இருந்தது.     தாங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின்போது, இது போன்ற கூட்டம் கூடியதை பார்த்தே இராத இந்த இயக்கங்கள், இந்த கூட்டத்தை எபப்பாடுபட்டாவது அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டின.   ஜல்லிக் கட்டுக்கு எதிராக கடுமையான நிலைபாடு கொண்டிருந்த இயக்கம் மக்கள் கலை இலக்கியக் கழகம்.   2008ம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், ஜல்லிக்கட்டு குறித்து இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது. “ஏறு தழுவுதல் மட்டும்தான் பாரம்பரியமாக வந்ததா? சாதிதீண்டாமை, வலங்கை இடங்கை வெறியாட்டங்கள் கூடப் பாரம்பரியமாக வந்தவைதான். அதற்காக அவற்றையெல்லாம் ஆதரிக்க முடியுமா? பாரம்பரியமாக நீடித்துவந்த பொட்டுக் கட்டுதலைச் சட்டம் போட்டுத் தடுக்க முற்பட்டபோது, பார்ப்பனஆதிக்க சாதியினர் பதறியதைப் போலத்தான் இருக்கிறது, சாதிவெறியை மறைத்துக் கொண்டு ‘தமிழன் வீரம்’, ‘பாரம்பரியம்’ எனப் பூசி மெழுகிடும் வாதமெல்லாம்.” இணைப்பு  ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்கள் மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்.
இளைஞர்களின் எழுச்சியை ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கு சாதகமாக திருப்பவே முயற்சித்தன.     ஏனெனில் இப்படியொரு மக்கள் திரளை அவர்கள் பார்த்ததேயில்லை. 1995ம் ஆண்டு, அப்போதைய ஆளுனர் சென்னா ரெட்டி, ஜெயலலிதா மீது வழக்கு தொடர சுப்ரமணியன் சுவாமிக்கு அனுமதி அளித்தார்.   இதனால், தமிழகத்தில் சுப்ரமணியன் சுவாமிக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவர் தனது ஜனதா கட்சியின் சார்பில் சென்னை மைலாப்பூரில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதிமுகவின் ரவுடிகள் எஸ்டி சோமசுந்தரம் மற்றும் மதுசூதனன் தலைமையில் கூலிப் படையினர் அந்த கூட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டனர்.   மேடையில் கல்லெறியப்பட்டது.    சுவாமிக்கு பாதுகாப்பாக இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே சுவாமியை பத்திரமாக ஒரு வேனில் ஏற்றினர்.   வேனில் ஏறிய சுவாமி, “என்ன ஆச்சு… எதற்காக வேனில் ஏற்றுகிறீர்கள்” என்றதும், உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.    என் கட்சிக்கு இப்படி கூட்டம் வந்தது இதுதான் முதல் முறை.   இனி எப்போ வரும்னே தெரியலை.   இப்போ போயி பேச விடாம தூக்கிட்டு வந்துட்டீங்களே என்று வருத்தப்பட்டுள்ளார்.
அவரின் வருத்தத்தைப் போலத்தான் இந்த அமைப்புகளின் வருத்தமும் இருந்தன.    ஞாயிற்றுக் கிழமை சேனாதிபதி உள்ளிட்டவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போராட்டத்தை கைவிடுமாறு கூறிய பிறகும், போராட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது இத்தகைய அமைப்புகளே.  ஞாயிறன்று இரவு மாணவர்களிடையே உரையாற்றிய இயக்குநர் கௌதமன்,  குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட அவசர சட்டத்தின் நகல், திங்களன்று வர உள்ளதாகவும், அதன் பிறகு கூடி என்ன செய்வது என்று முடிவு செய்யலாம் என்றும் இளைஞர்களிடையே கூசாமல் பொய் பேசினார்.   அவர்களும் ஹோ என்று ஒலியெழுப்பி ஆரவாரம் செய்தனர்.   அவசர சட்டம் வெளியிடப்படாமல், ஜல்லிக்கட்டை அரசு எப்படி நடத்த முன் வந்தது என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை.   அன்றே பேசிய மற்ற இயக்கத்தினர், பெப்சி கோக்கை தடை செய்ய வேண்டும், பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும், காவிரி நீர் மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை அடுக்கிக் கொண்டே சென்றனர்.   பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பதை ஏறக்குறைய அனைவருமே வலியுறுத்தினர்.
பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றால், மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், சுற்றுச் சூழலுக்காக குரல் கொடுக்கும் க்ரீன் பீஸ் போன் அமைப்புகளையும் அல்லவா தடைசெய்ய வேண்டும் ?    நமக்கு பிடிக்காது என்று பீட்டாவை தடை செய்ய தொடங்கினால், அவர்களுக்கு பிடிக்காது என்று மக்கள் அதிகாரம், மே 17 , நாம் தமிழர் என்று அவர்களும் தடை கோருவார்களே ?  என்ன பதில் சொல்வீர்கள் ?   பீட்டா போன்ற அமைப்புகளை கருத்து ரீதியாக எதிர்கொள்வதே ஜனநாயகம்.
ஞாயிற்றுக் கிழமை இரவைத் தாண்டி போராட்டம் திங்கட்கிழமை காலை நீடித்ததே வன்முறைக்கு வித்திடத்தான்.    திங்களன்று காலை, காவல்துறை சார்பில்  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.   ஆனால் அவர்கள் மறுத்தனர்.    மிக மிக அதிசயமாக லத்தி இல்லாமல் அவர்களை கலைக்கச் சென்றது காவல்துறை.  அவர்களோ, கடலோரம் தஞ்சம் புகுந்தனர்.  பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அவர்களை அழைத்தபோதும், ஒருவரும் வரவில்லை.   மாறாக, ஜல்லிக் கட்டுக்கு நிரந்தர தீர்வு என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருந்தனர்.
16266156_10208477375198245_3927625162874752664_n
மெரினா சூழலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த காவல்துறையும் மெரீனாவில் குவிக்கப்பட, நகரத்தின் இதர பகுதிகள், சமூக விரோதிகளின் கைகளுக்குள் சென்றது.  ஐஸ்ஹவுஸ் போன்ற பதற்றமான பகுதிகளில் போதுமான காவல்துறையினரை நிறுத்தியிருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சென்னை மாநகரத்தை பைனாக்குலர் மூலம் நிர்வாகம் செய்தார் ஆணையர் கமிஷனர் ஜார்ஜ்.
காவல் நிலையம் தாக்கப்பட்டது என்ற செய்தி பரவியதுமே, காவலர்கள் வேட்டை நாய்களைப் போல பாய்ந்தனர்.  கையில் சிக்கியவர்களை அடித்து நொறுக்கினர்.    வாகனங்களை நொறுக்கினர்.  தீ வைத்தனர்.    காவல்துறையினர் இல்லாத இடங்களில் பதிலுக்கு காவல்துறையின் வாகனங்களும் பொதுச் சொத்துக்களும் கொளுத்தப்பட்டன.
போராட்டத்தின்போது, கேக் வழங்கி அன்போடு பேசிய காவல்துறையினரைப் பார்த்ததும் இளைஞர்கள் காவல்துறை உண்மையிலேயே மக்களின் நண்பன் என்று தவறாக நம்பினர்.   காவல்துறையின் உண்மை முகம் வன்முறை மட்டுமே.   வன்முறையை நிகழ்த்துவதற்காகவே அவர்கள் பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.   உருவாக்கப்படுகிறார்கள்.   சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009, பிப்ரவரி 19 அன்று நாள் முழுவதும் நடந்த காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை நேரில் பார்த்துள்ளேன்.  நேற்று நடந்தது ஒன்றுமே அல்ல.  கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி, உயர்நீதிமன்றம் என்று காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்துக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
24_01_2017_005_001_012
CHN_2017-01-24_maip5_15

ஒரு வார காலமாக விடுப்பு இல்லாமல், தொடர்ந்து வெயிலில் பணியாற்றி வைத்திருந்தவர்களை, அடியுங்கள் என்று அனுப்பினால் என்ன ஆகும் என்பதே நேற்றைய காவல்துறையின் வன்முறை.   காவல்துறையின் மற்ற எல்லா வன்முறைகளையும் போல, இதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படப் போவதில்லை.   ஒரு நாளும் எடுக்கப்படப் போவதில்லை.  திமுக அரசாக இருந்தாலும் இது நடந்திருக்காது.  ஏனெனில் இதுதான் சிஸ்டம்.
ஜல்லிக் கட்டுக்காக நடந்த இந்த போராட்டத்தைப் போலவே இதர மக்கள் பிரச்சினைகளுக்காகவும் மாணவர்களும், இளைஞர்களும் திரளுவார்களா அப்படி திரண்டாலும் அதை அரசு இயந்திரம் இது போல அனுமதிக்குமா என்பது சந்தேகமே.   இருப்பினும், 1965க்கு பிறகு தமிழகத்தில் நடந்த எழுச்சிமிகு போராட்டம் இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தற்போதைய இளைய சமுதாயம் பொறுப்பற்ற செல்போன் தலைமுறை என்ற விமர்சனத்தை இளைஞர்கள் உடைத்தெறிந்துள்ளார்கள்.    செல்போன் மூலமாகவே சமூக பொறுப்புணர்வோடு போராட்டத்தை நடத்துவோம் என்பதை காட்டியுள்ளார்கள்.    செல்போன் மூலமாகவே ஒன்றிணைவோம் என்பதை உணர்த்தியுள்ளார்கள். சமூக அக்கறை மற்றும் பொறுப்புணர்வில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளார்கள்.   அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மகிழ்ச்சிதரத்தக்க வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாளைய தலைமுறை நம்பிக்கை அளித்துள்ளது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....