முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினகரன் யார் பக்கம்?


ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிரி, பிரதமர் மோடியின் தீவிர எதிர்ப்பாளர், பாஜகவைக் கொள்கைரீதியாக எதிர்ப்பவர் என்பதெல்லாம் டிடிவி தினகரன் மீது வைக்கப்படும் அல்லது திணிக்கப்படும் பார்வைகள். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கி சமீபத்திய நக்கீரன் கோபால் கைது வரை தினகரன் எடுத்த நிலைப்பாடுகளும் முன்வைத்த கருத்துகளும் எடுத்துவைத்த வாதங்களும் மேற்கண்ட பார்வைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட திசையில்தான் பயணித்துவருகின்றன.
முதலில் குடியரசுத் தலைவர் தேர்தலை எடுத்துக்கொள்ளலாம். ஓபிஎஸ்ஸின் மெரினா தியானத்துக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தினர் மீதான டெல்லியின் பார்வை முற்றிலும் எதிர்மறையாகவே இருந்தது. அதன் நீட்சியாகவே இரட்டை இலை முடக்கம், அதிமுக அணிகள் உருவாக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்பதெல்லாம் நடந்தேறின. அதன் உச்சம்தான், தினகரன் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டது.
ஜாமீனில் வெளியே வந்த தினகரன், பாஜகவையும் மத்திய அரசையும் மிகத் தீவிரமாக எதிர்த்தார். அந்த எதிர்ப்பின் வீரியத்தைப் பார்த்து அடுத்து வரவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தினகரன் ஆதரவு எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்தது. ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுடன் தனித்தனியே ஆதரவு கோரிய பாஜக, தினகரன் தரப்பை அணுகவே இல்லை. ஆனாலும், சசிகலாவின் உத்தரவின்படி தங்கள் ஆதரவு எம்பிக்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பார்கள் என்றார்  தினகரன். அதன்மூலம், வெளிப்பார்வைக்கு பாஜகவை எதிர்த்துவிட்டு, முக்கியமான தருணத்தில் பாஜகவைப் பகைத்துக்கொள்ளாமல் காய் நகர்த்துகிறார் தினகரன் என்ற விமர்சனம் எழுந்தது.
அதேபோல, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மிகப் பெரிய எதிர்ப்புப் போராட்டத்தைத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன. தமிழகம் வந்த மோடியின் விமானம் தரையிறங்க முடியாத அளவுக்குக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. GoBackModi என்கிற பிரச்சாரம் தீவிரமாக நடந்தது.
அதுநாள் வரை மோடியின் எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட தினகரனோ ‘‘தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்ட நினைப்பது சரியான தீர்வாகாது. ஆகவே, பிரதமருக்குக் கருப்புக்கொடி காட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை’’ என்றார். ஆக, தேர்தல் என்று வரும்போது பாஜகவைப் பகைத்துக்கொள்ள தினகரன் விரும்பவில்லை, போராட்டம் என்று வரும்போதும் மோடியை எதிர்க்க தினகரன் விரும்பவில்லை என்பது வெளிப்படையானது.
அடுத்து, ஓபிஎஸ்ஸுடனான சந்திப்பு சர்ச்சை. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ நடத்திவருவதாகச் சொன்ன ஓபிஎஸ்ஸுடன் தினகரன் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறார், சசிகலா சிறையிலிருக்கும் நிலையில், ஓபிஎஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டில் துளியும் உறுதிகுலையாமல் இருக்கிறார் தினகரன் என்பதுதான் ஊடகங்களில் உருவாக்கப்பட்ட பிம்பம். ஆனால், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘தர்ம யுத்தம்’ நடந்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் ஓபிஎஸ்ஸைச் சந்தித்துப் பேசியிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அதை ஓபிஎஸ்ஸும் உறுதிசெய்திருக்கிறார்.
இதன்மூலம், வெளியில் காட்டிவரும் எதிர்ப்புக்கு மாறாக, அதிமுகவுக்குள் இன்னும் ரகசிய பேரங்கள் நடத்திவருகிறார் தினகரன் என்பது அம்பலமானது. இதோடு நில்லாமல், 2018 செப்டம்பர் இறுதியிலும்கூட ஓபிஎஸ் – தினகரன் சந்திப்புக்கான முயற்சிகள் நடந்ததாகச் சொன்ன தினகரன், அதுபற்றிய உண்மைகளை இன்னும் மூன்று மாதங்களில் ஓபிஎஸ் ஒப்புக்கொள்வார் என்றும் அப்படி ஒப்புக்கொள்ளவைக்கும் அளவுக்கு என்னிடம் ரகசியங்கள் உள்ளன என்றும் கூறியிருக்கிறார்.
ஆக, ரகசியச் சந்திப்பு என்று சொல்லி ஓபிஎஸ்ஸைச் சந்தித்ததைப் பொதுவெளியில் சொன்னதோடு, ஓபிஎஸ் குறித்த ரகசியங்கள் தன்வசம் இருப்பதாகப் பொதுவெளியில் வைத்து தினகரன் சொல்வது என்ன மாதிரியான அரசியல் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
இறுதியாக, ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். அந்தக் கைது பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் முயற்சி என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வெளியிட்டபோது, தினகரனின் எதிர்வினை வித்தியாசமாக இருந்தது.
‘‘ஆளுநரைப் பற்றி அவதூறாகச் செய்தி வெளியிட்டால் கைது செய்யத்தான் செய்வார்கள். இதில் தவறு இருப்பதாகக் கருதவில்லை’’ என்றார் தினகரன். அதோடு நிறுத்தவில்லை. ‘‘என்னைப் பற்றியும் நக்கீரன் கோபால் அவதூறாக எழுதினார்.  தனால் அவர் மீது வழக்குத் தொடுத்து ஆறுமாதம் தண்டனை பெற்றுக்கொடுத்தேன். இப்போது நக்கீரன் கோபால் மேல்முறையீடு செய்திருக்கிறார். இப்போது நான் நினைத்தால் அந்த வழக்கைத் துரிதப்படுத்த முடியும்’’ என்றும் கூறியிருக்கிறார்.
அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதும், ஒவ்வொரு பிரச்சினையிலும் தனித்த பார்வை கொண்டிருப்பதும் எதிர்பார்க்கக்கூடியது. தினகரன் விஷயத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் மீனுக்குத் தலையும் பாம்புக்குத் வாலையும் காட்டுகிறவராக இருக்கிறார் என்பது. பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு மாறுபட்ட ஒருவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள தினகரன் முற்படுகிறார். ஆனால், அவருடைய அரசியல் இன்று எந்தவிதத்திலும் அவர்களிடமிருந்து மாறுபட்டதாக இல்லை!
- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.
‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...