முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோச்சடையான் (2014): 3D – Tamil


Kochadaiyaan_movie__2014__hd_wallpaper_655698556


Uncanny Valley – when human features look and move almost, but not exactly, like natural human beings, it causes a response of revulsion among some human observers.
1. ’அன்கேன்னி வேலி’ என்று இங்லீஷில் ஒரு உளவியல் பதம் உள்ளது. என்னவென்றால், மனிதர்களைப் போலவே சில உருவங்களை உருவாக்கி நடமாடவிடுகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அவைகள் மனிதர்கள் போலவே கைகால்களை ஆட்டுகின்றன. பேசுகின்றன. நடக்கின்றன. அவைகளைப் பார்த்த மாத்திரத்தில் நிஜமான மனிதர்களுக்கு முதலில் மனதில் தோன்றும் உணர்ச்சி வெறுப்புதான் என்று இந்தத் தியரி சொல்கிறது.
2. ஹாலிவுட்டின் சரித்திரத்தில் முழுவதும் Performance Capture தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் – Polar Express.  இந்தப் படத்தைப் பார்த்த பலரும்,  அதன் அனிமேஷன் மிகவும் கொடுமையாக இருந்ததாகச் சொல்லியிருக்கின்றனர். சிலருக்கு அந்த அனிமேஷனைப் பார்த்ததும் பய உணர்ச்சியும் வந்திருக்கிறது. இது ஏனெனில், நாம் மேலே பார்த்த உளவியல் விஷயம்தான். Uncanny Valley. எதுவுமே முதன்முதலாக இப்படிச் செய்யப்படும்போது அதனை அடிமனம் வெறுக்கத்தான் செய்யும் என்பதே இதன் சாராம்சம்.

ஒரு அனிமேஷன் படத்தில் ஒலி எப்படி இருக்கவேண்டும்? என்னதான் நாம் பார்ப்பது அனிமேஷன் என்றாலும், ஒலியைப் பொறுத்தவரை எத்தனைக்கெத்தனை நிஜமான ஒலிகளோடு ஒன்றுபடுகிறதோ, அத்தனைக்கத்தனை அந்தப் படத்தின் செயற்கைத்தன்மை குறையும். இந்த விஷயத்தைக் கோச்சடையானில் துல்லியமாகச் செய்திருக்கிறார் ரஸூல் பூக்குட்டி. படத்தில் வரும் போர்க்களக் காட்சிகளுக்காக 150 பேரை வெறியுடன் கத்தச்செய்து அதனைப் பதிவு செய்து படத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறார். இதெல்லாம் ஹாலிவுட்டில் சர்வ சாதாரணம். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் ஒலியைக் கச்சிதமாகக் கொண்டுவர என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை யூட்யூபிலும் behind the scenes ப்ளூரேக்களிலும் பார்த்துக்கொள்ளலாம். அதேபோல் கோட்டைகளுக்கு நேரில் சென்று அங்கு தர்பார்களில் பேசும்போது எப்படியெல்லாம் ஒலி அதிர்கிறது, எதிரொலிக்கிறது என்பதையும் தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். அந்த சாம்பிள்களை வைத்துக்கொண்டுதான் படத்தின் தர்பார் காட்சிகளில் வசனங்கள் பேசும் ஒலிமுறையையும் சத்தங்களையும் வடிவமைத்திருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல், கவசங்கள், அணிகலன்கள் ஆகியவற்றை அணிந்துகொண்டு ஒரு மனிதன் நடக்கும்போது என்னென்ன சத்தங்கள் எழும்? இதையும் நன்றாக ஆராய்ச்சி செய்து, படத்தில் உபயோகித்திருக்கிறார். பொதுவாக இதுபோன்ற அனிமேஷன் படங்களில் அனிமேஷன் ஒவ்வொரு அடுக்காகத்தான் உருவாக்கப்படும். உதாரணமாக ஒரு மனிதனைக் காண்பிக்கவேண்டும் என்றால் முதலில் அவனது உடலின் ஔட்லைன், பின்னர் அந்த உடலின்மீது முடி, உடைகள், அணிகலன்கள் ஆகிய ஒவ்வொன்றுமே அடுக்கடுக்காக உருவாக்கப்படும். இதனால் ஒலியையும் அதேபோல் ஒவ்வொரு அடுக்காகவே உருவாக்கும் நிர்ப்பந்தம். அதையும் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார் ரஸூல்.
அவரது முயற்சிகளைப் பற்றி இந்தப் பேட்டியில் விரிவாகப் படித்துக்கொள்ளலாம்.
ஒரு அனிமேஷன் படம் மிகச்சுலபமாக உருவாகிவிடும் என்ற பொதுவான நம்பிக்கையில் உண்மை இல்லை என்று சொல்வதற்காகவே ஒலியைப் பற்றி எழுதினேன். இதுபோன்ற பல அம்சங்கள் ஒன்றுசேர்ந்தால்தான் அனிமேஷன் வெற்றிகரமாக உருவாகும். நிஜத்தில் ஒரு திரைப்படம் எடுப்பதைவிடப் பலமடங்கு கஷ்டப்பட்டால்தான் அனிமேஷன் படம் எடுக்கமுடியும்.

’ராணா’ என்ற கோச்சடையான் ரணதீரன், கோட்டைப்பட்டினம் என்ற நாட்டில் இருந்து சிறுவயதில் காளிங்கபுரிக்குக் கடலில் தத்தளித்து வந்துசேர்கிறான். அந்த ஊரில் பெரும் விரனாக வளர்ந்து மன்னன் ராஜமஹேந்திரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அந்த நாட்டின் தளபதி ஆகிறான். அவர்களது எதிரி நாடு கோட்டைப்பட்டினம். அந்த நாட்டின் அரசன் ரிஷிகோடகன். கோட்டைப்பட்டினத்தின் மூவாயிரம் வீரர்கள் காளிங்கபுரியில் கைதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்கும் ரணதீரன், அவர்களுக்கு விடுதலை அளித்து அவர்களைத் தாய்நாடான கோட்டைப்பட்டினத்துக்கு எதிராகவே திருப்பிவிடுகிறான். போர் மூள்கிறது. அப்போது நடக்கும் சில சம்பவங்களால் காளிங்கபுரியின் மன்னன் ராஜமஹேந்திரன் ரணதீரனின் மீது கோபமடைகிறான். அதேசமயம் கோட்டைப்பட்டினத்தின் மன்னன் ரிஷிகோடகனுக்குமே ரணதீரனின் மீது பொறாமை கலந்த கோபம். இரண்டு மன்னர்களின் கோபத்துக்கும் ஆளாகும் ரணதீரன் யார்? அவனது நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறானா என்பதே கதைச்சுருக்கம் (சுருக்கத்தைப் படித்ததும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘A Fist Full of Dollars’ படம் போலவே இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை).
கடைசியாக ரஜினி நடித்து எனக்குப் பிடித்த படம் – 1995ல் வெளிவந்த ‘முத்து’. அதற்கு முன்னர் ’பாட்ஷா’. முத்துவுக்குப் பின்னர் வந்த படங்கள் எதுவுமே சுவாரஸ்யமாக இல்லை (சந்திரமுகி உட்பட) என்பது என் கருத்து. ‘முத்துவுக்குப் பின்’ என்றதும் ரஜினி எக்கச்சக்கமான படங்கள் நடித்துவிட்டதாக நினைத்துவிடவேண்டாம். கௌரவ வேடங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், முத்துவுக்குப் பின்னர் ரஜினி 19 ஆண்டுகளில் ஹீரோவாக ஏழே படங்களில்தான் நடித்திருக்கிறார் (அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன்). இவைகள் எல்லாவற்றிலுமே எதுவோ ஒன்று மிஸ்ஸாவதுபோலவே எனக்குத் தோன்றியது. இந்தப் படங்களை என்னால் முழுதாக ரசித்துப் பார்க்க முடியவில்லை. குறிப்பாக எந்திரன் படம். இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் ரஜினி நடித்து நான் ரசித்துப் பார்த்த படமாக ‘கோச்சடையான்’ படத்தைத்தான் சொல்லுவேன்.
காரணம்? ரஜினியின் ப்ளஸ் பாயிண்ட்களை கச்சிதமாகக் கோச்சடையான் capture செய்திருக்கிறது. ரஜினிக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள். ரணதீரனாகவும் கோச்சடையானாகவும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ரஜினிக்கே உரிய மேனரிஸங்கள், ஸ்டண்ட்கள், நடனங்கள், வசனங்கள் என்று முழுமையாக ’முத்து’வுக்குப் பின்னர் ரஜினியை ரஜினியாகவே காட்டியிருக்கிறது இந்தப் படம் என்பது என் கருத்து (படையப்பாவில் கொஞ்ச நேரம் இது இருந்தாலும், பின்னர் வேறு ரேஞ்சில் போய்விடும். அதில் ரஜினியைப் பார்த்து அவ்வப்போது ‘வயசாயிருச்சு’ என்னும் விதத்தில் அமைந்த டயலாக்ஸ் வேறு இருக்கும். பாபாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சந்திரமுகியில் ரஜினி ஹீரோவா இல்லை நகைச்சுவை நடிகரா என்ற சந்தேகம் நீண்டநேரம் இருந்தது. சிவாஜியில் ஷங்கர் ரஜினியை வைத்துப் பல கோமாளித்தனங்களை அரங்கேற்றினார்.  குசேலன் & எந்திரன் – ஆளை விடுங்க சாமி).
படத்தின் ஆச்சரியம் – நாகேஷ். அவரது கதாபாத்திரம் ரஜினிக்குப் பிறகு நன்றாகவே கேப்சர் செய்யப்பட்டிருக்கிறது. வசனம் உட்பட. படத்தில் தீபிகா, சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷ்ராஃப் உட்பட பிறர் எல்லாருமே கௌரவ வேடம்தான். ரஜினிக்கு சரிசமமாகப் படம் முழுக்க வருபவர் நாசர் மட்டுமே. கூடவே நாசரின் கைத்தடியாக வரும் சண்முகராஜனையும் சொல்லலாம்.
படத்தின் ஒலிக்குப் பிறகு என்னைக் கவர்ந்த விஷயம் – படத்தின் காட்சிகளில் பின்னணிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம். படத்தின் களத்தின் பிரம்மாண்டத்தை நன்றாகவே பின்னணிகள் பிரதிபலிக்கின்றன. அதேபோல் படத்தின் பாடல்களும் இசையும் அவசியம் படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. படத்தின் இன்னொரு அட்வாண்டேஜ் – படத்தின் நீளம். மொத்தம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவு என்பதால் வேகமாகவே முடிந்துவிடுகிறது படம்.
எந்த நடிகராக இருந்தாலும் சரி – அவரது வளர்ச்சியில் சில இயக்குநர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருப்பார்கள். எண்பதுகளில் ரஜினிக்கும் கமலுக்கும் ஏற்ற பல படங்களை எஸ்.பி. முத்துராமன் எடுத்தார். குறிப்பாக ரஜினியைப் பிரபலப்படுத்தியவர்களில் இவர் முக்கியமானவர் (ஹிந்தியில் இதே காலகட்டத்தில் அமிதாப்பின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியவர்களில் ப்ரகாஷ் மெஹ்ராவும் மன்மோஹன் தேஸாயும் முக்கியமானவர்கள்). அதே எண்பதுகளில் கமலுக்கு ராஜசேகர் கிடைத்தார். ராஜசேகருக்குப் பின் சுரேஷ் கிருஷ்ணாவும் சிங்கீதம் சீனிவாசராவும். அப்படி ரஜினிக்கு இந்தப் படத்தில் கே.எஸ். ரவிகுமார் (படத்தின் இயக்குநர் அவர் அல்ல – சௌந்தர்யா என்றபோதிலும், கதை, வசனம், திரைக்கதை ஆகியவை கே.எஸ் ரவிகுமாரின் பங்களிப்புதான்). எனக்குப் பிடித்த கடைசி ரஜினி படமான முத்துவும் ரவிகுமாரின் கைவண்ணம்தான்.
படத்தின் நெகட்டிவ் அம்சம் என்ன?
படத்தின் ஸிஜி சரியாக செய்யப்படவில்லை என்பது உண்மை.

கோச்சடையான் & Performance capture.
இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் படமாகக் கோச்சடையான் வரப்போகிறது. படத்தின் ட்ரெய்லர் வந்துவிட்டது. இதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்றால், இதற்குமுன் வந்திருக்கும் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படங்களைப் பற்றிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் இது என்ன ஏது என்பது தெளிவாகப் புரியும். பின்னர்தான் அது மொக்கையா சுவாரஸ்யமா என்றெல்லாம் விவாதிக்கமுடியும்.
பொதுவாக இந்தத் தொழில்நுட்பத்துக்கு அவதார்தான் எல்லா இடங்களிலும் உதாரணமாகச் சொல்லப்படும். ஆனால் க்ளாடியேட்டரிலேயே இது வந்துவிட்டது. அதற்கும் முன்னர் மம்மி. உலகின் முதல் 3d பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படம் (முழுதாக இதே தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டது) – போலார் எக்ஸ்ப்ரஸ். அதேபோல், லார்ட் ஆஃப் த ரிங்ஸின் ட்வின் டவர்ஸ்தான் ஆஸ்கரால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படம்.
ரைட். இப்போது கோச்சடையான்.
அவதாரின் பட்ஜெட் – 237 மில்லியன். அதாவது, தோராயமாக 1443 கோடி ரூ. கோச்சடையானின் பட்ஜெட், அஃபிஷியலாக 125 கோடி என்று தெரிகிறது. அந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பெர்ஃபார்மன்ஸ் காப்சரிங் கன்வெர்ஷன் தான் இதில் இருக்கும்.நாம் எல்லோரும் இங்லீஷ் படங்கள் பார்த்தே ஒப்பிட்டுப் பழகிவிட்டதால், தற்போது ட்ரெய்லர் பார்த்ததும் விமர்சனம் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் முதல் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படமாக இது வரப்போகிறது என்பதை மறக்கக்கூடாது. ஒருவேளை இதைப்போன்ற படங்கள் பல வந்தபின்னர் அவதாரின் ரேஞ்சுக்கு ஒரு படம் சாத்தியமாகலாம்.
விஸ்வரூபம் படம் டிடிஹெச்சில் வரப்போவதாகக் கமல் அறிவித்ததைப்போல் இதுவும் தொழில்நுட்பத்தில் ஒரு பாய்ச்சல்தான். இந்தத் தொழில்நுட்பத்தை வரவேற்றுப் பார்க்கலாம் என்பது என் கருத்து. அஃப்கோர்ஸ் படம் மொக்கையாக இருந்தால் அதை விமர்சிக்கத்தான் போகிறோம். ஆனால் நான் சொல்லவருவது இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி.
இதனால் விரைவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்றவர்கள் விரைவில் அதிரடியாக இணைந்துகூட நடிக்கமுடியும். தமிழர்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்பதால் சில்க் ஸ்மிதாவைக் கதாநாயகியாகப் போட்டுக்கூட விரைவில் படம் வரலாம். (அவர்கள் உயிரோடு இல்லாததால் அவர்களைப் போன்றவர்களைக் கேப்ச்சர் செய்யவேண்டும்).
படம் வரட்டும். விமர்சனம் செய்வோம்.

பர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் அறிமுகப்படுத்தப்பட்ட 2004ல்,  Polar Express படத்தின் பட்ஜெட் – 165 மில்லியன் டாலர்கள். அதே பட்ஜெட்டில் அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தால், அப்போது பர்ஃபார்மன்ஸ் கேப்சர் தொழில்நுட்பப் படங்கள் இந்தியாவில் வந்திருக்காததால் கோச்சடையான் இன்னும் பெரிதாகப் பேசப்பட்டிருக்கலாம். ஆனால் நாம் எக்கச்சக்கமான ஹாலிவுட் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டதால் கோச்சடையானின் ஸிஜி அந்த அளவுக்கு நமக்குப் பிடிக்காது. கூடவே, இந்தக் கட்டுரையின் முதல் வரியையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவும். இந்தியாவில் இதுதான் முதல். இப்போதுதான் வந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும்போது இன்னும் துல்லியமான பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.
கூடவே, இந்தியாவில் அனிமேஷனுக்கும் கார்ட்டூனுக்கும் வித்தியாசம் தெரியாத பிரச்னையும் இருக்கிறது. இன்னுமே நம்மில் பலரும் அனிமேஷன் என்றால் அது குழந்தைகளுக்கானது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். காரணம் நம்மில் 90% மக்கள் காமிக்ஸ் படிக்காமல், தொலைக்காட்சியில் அனிமேஷன்கள் பார்க்காமல் வளர்ந்தவர்கள்தான். அதில் தவறும் இல்லை என்றாலும், இப்போதாவது அந்த வித்தியாசத்தைத் தெரிந்துகொண்டால் நல்லது.  மேன்மேலும் இதுபோன்ற முழுநீள அனிமேஷன் படங்கள் இந்தியாவில் வருவதை அது இன்னும் ஊக்கப்படுத்தும்.
கோச்சடையான், அதில் இருக்கும் சில குறைபாடுகளை மீறியும் ஒரு சுவாரஸ்யமான entertainer என்பதில் எனக்கு சந்தேகமில்லை. படத்தைப் பார்த்தவர்கள் அவர்களின் கருத்தை இங்கே பின்னூட்டங்களில் சொல்லலாம்.
கோச்சடையானின் மேக்கிங் பற்றிய ஒரு வீடியோ இங்கே.

நன்றி: .ராஜேஷ் கார்ப்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...