முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தமிழ் மீது பற்றுகொண்ட அவர் “கொச்சையான வார்த்தைப் பயன்பாடுகள் கொண்ட இந்தச் சிறுகதையைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தது மட்டுமல்லாமல் “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்திருக்கிறார். மென்பொருள் துறையில் திட்ட மேலாளராக வேலை செய்யும் அவர் தமிழ்ச் சூழலிலிருந்து எவ்வளவு விலகி இருக்கிறார் என்பதை அவர் முன் வைக்கும் கோரிக்கைகளே தெரியப்படுத்துகின்றன.
கிழக்கு பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த “மொழி பெயர்ப்பு – ஒருநாள் கருத்தரங்கம்” – 2014 ஏப்ரல் மாதம் 31அன்று நடந்தது. புனைவிலக்கிய மொழிபெயர்ப்பின் சாத்தியக் கூறுகளைப் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் ஜி. குப்புசாமி. அதில் tovias wolff எழுதிய “Hunters in the snow” என்ற சிறுகதையைக் குறிப்பிட்டு “இக்கதையை வாசித்து அதிலுள்ள நுட்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் இந்தக் குறிப்பிட்ட கதையை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் அக்கதை முழுவதும் வசவுச் சொற்களால் கட்டமைக்கப்பட்டது. வட்டார வசவுச் சொற்களை மொழிபெயர்ப்பது சவாலான காரியம்” என்ற காரணத்தைக் கூறினார். உலகின் எல்லா மொழிகளிலும் வசவுச் சொற்கள் குவியலாகக் கிடக்கின்றன. “கெட்ட வார்த்தைகள்” என்று சபை நாகரிகம் கருதி நாம் பேச மறுக்கும், பேசத் தயங்கும் வார்த்தைகளின் வேர்களைத் தேடிச் சென்றால் அப்பயணம் சுவாரஸ்யத்தையே ஏற்படுத்துகிறது. பெருமாள்முருகன் அதைத்தான் தனது தொடர் கட்டுரையொன்றில் செய்திருக்கிறார்.
பா. மணி என்ற புனைபெயரில், “இறக்கை”, “மணல்வீடு” ஆகிய சிற்றிதழ்களில் பெருமாள்முருகன் எழுதிய “கெட்ட வார்த்தை பேசுவோம்” என்ற தலைப்பிலான கட்டுரைகள் கலப்பைப் பதிப்பகத்தின் வழியாக நூலாக வெளியாயிற்று. அபுனைவுப் பிரிவில் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கனடா இலக்கியத் தோட்டம் பரிசு வழங்கியது. அந்நூல் சற்றே விரிவுபடுத்தப்பட்டு இப்போது காலச்சுவடு பதிப்பகம் வழியாக இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது. இந்நூலை வாசித்தபோது திலீப்குமாரின் “கடவு” என்ற சிறுகதைதான் முதலில் நினைவிற்கு வந்தது. ஆபாசம் பொதிந்த பாலியல் வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்றாலும் மறைமுகப் பொருள்படும்படி கதை முழுவதும் இரட்டை அர்த்தத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பார்.
க்ரியா பதிப்பகம், 2010-ல் வெளியிட்ட எழுத்தாளர் திலீப்குமாரின் சிறுகதைத் தொகுப்பில் “கடவு” முதல் கதையாக இடம்பெற்றுள்ளது. கங்குப் பாட்டி தான் கதையின் மையப்பாத்திரம். நரைகூடிக் கிழப்பருவம் எய்தி எமனிடம் போகும் நாளுக்காகப் பாட்டி காத்திருக்கிறாள். குஜராத்திக் கிழவியான கங்கு பெஹ்ன் – 13 வயதில் திருமணமாகி, 15 வயதில் புஷ்பவதியாகி, 22 வயதிற்குள் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்து, 27 வயதில் கணவனை இழந்து விதவையாகி நிற்கிறாள். அந்தச் சமயத்தில் ரேனிகுண்டா மிலிட்டரி ‘பாரக்ஸ்’ சோல்ஜர்களால் கடத்திச் செல்லப்பட்டுக் கங்கு சீரழிக்கப்படுகிறாள். பலநூறு நபர்கள் அவளை வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவளை நான்கைந்து வருடங்களாகத் தேடி – பம்பாயிலுள்ள பூலேஷ்வர் என்ற இடத்திலுள்ள ஒரு தெருவில் கர்ப்பவதியாகக் கண்டெடுக்கிறார்கள் அவளது உறவினர்கள். திக்பிரமை பிடித்த அவளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள். பதினோரு வருடங்கள் கழித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணமடைகிறாள் கங்குப் பாட்டி.
கதையில் வரும் பாத்திரங்கள் எல்லோரும் கங்குப் பாட்டியிடம் தோழமை பாராட்டுகிறார்கள். ராண்ட்நா (தேவிடியா மகனே, அவுசாரி மகனே) என்று உரிமையுடன் பாட்டி அழைக்கும் ரஜ்னியைத் தவிர உதிரிப் பாத்திரங்கள் பெரும்பாலும் குஜராத்திப் பெண்கள் தான். சிறுமிகள் முதல் நடுத்தர வயதுள்ள குடும்பத்தலைவிகள் வரையுமுள்ள எல்லோரும் பாட்டியிடம் மனம் திறந்து பேசுகிறார்கள். கங்கு இவர்கள் எல்லோருக்கும் பட்டப் பெயர் சூட்டுகிறாள். “சின்ன டேக்ஸா, பெரிய டேக்ஸா, வெள்ளைப் பன்னி, ஒட்டடைக் கொம்பு, டபுள் ரொட்டி, ஸ்டைல் மாமி” என்பன போன்ற இரட்டை அர்த்தப் பெயர்கள். போலவே, பாலியல் உறுப்புகளுக்கும் கூடச் சங்கேதப் பட்டப் பெயர்களைச் சூட்டுகிறாள். ஆண்குறியை “வஸ்து” என்றும் பெண்குறியைக் “கபிலவஸ்து” என்றும் புட்டத்தை “டேக்ஸா” என்றும் குறியீட்டுப் பெயர் வைத்து ஓய்வு நேரத்தில் பேசிக் கதையாடுகிறார்கள்.
இந்தச் சங்கேதப் பாலுறுப்புப் பெயர்களைக் கொண்டு அன்றாட வாழ்வின் நெருக்குதல்களை எள்ளல் தன்மையில் இந்தச் சிறுகதையில் வெளிக்கொண்டு வந்திருப்பார் எழுத்தாளர் திலீப்குமார். கதைமாந்தர்களில் ஒருத்தி கல்லூரி மாணவி. ஊட்டிக்குச் சுற்றுலா சென்று திரும்பியவள் பாட்டியிடம் பின்வருமாறு உரையாடுகிறாள். (பக்கம்: 27)
“வாடி, காலேஜ் டூரெல்லாம் எப்படியிருந்தது?”
“ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாட்டி. ஒரு வாரம் பயங்கர சந்தோஷமாக இருந்தது.”
“ஊட்டியெல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்தாயா?”
“ஊட்டி என்ன, உலகத்தையே பார்த்துவிட்டு வந்திருக்கேன் பாட்டி.”
“என்னடி சொல்கிறாய்?”
“பெண்களுக்கு இனி வஸ்துவே தேவையில்லை என்று நிரூபித்துக் காட்டிவிட்டாள் அவள்.”
“யாரவள்?”
“அகிலாண்டேஸ்வரி. என் கூடப் படிக்கிறவள்.”
“என்னடி செய்தீர்கள்?”
“எல்லாமே… அதையெல்லாம் வாயால் சொல்ல முடியாது. அனுபவித்துப் பார்க்க வேண்டும்.”
“அடியே, சுத்தபத்தமாக இருந்துகொள்ளுங்கடி.”
“எனக்கு ஒரு பயமும் கிடையாது. யார் தயவும் வேண்டாம் இனி எனக்கு. அகிலா ஒருத்தி போதும்.”
“உன் அம்மாக்காரி சும்மா விடுவாளாக்கும். நிலத்துக்கேத்த உழவனைக் கூட்டி வந்துவிட மாட்டாளா?”
என்பது போல இவர்களது அந்தரங்க சம்பாஷனை நீள்கிறது. தொடர்ந்து பாட்டியிடம் அந்த மாணவி கேட்கிறாள்:“சரி பாட்டி. இதப்பத்தி நீ என்ன நினைக்கிறாய்?”
“அடி நாசமாய்ப் போனவளே, நானே ஒரு ஆத்திர அவசரத்துக்கு என் டேக்ஸாவைச் சொரிந்து விடக் கையை மடக்க முடியாமல் கிடக்கிறேன். என்னிடமா கேட்கிறாய்? நான் சொன்னால் சட்டம் போட்டுவிடுவார்களாக்கும்… சனியனே…” என்கிறாள் கங்குப் பாட்டி.
பின்னாளில், “உமாவும் ராமாவும்” என்ற லெஸ்பியன் நாவலை திலீப்குமார் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழின் முதல் லெஸ்பியன் நாவல் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறன். போலவே, குடும்பத்தலைவி ஒருத்தி பாட்டியிடம் ஒரு சந்தேகம் கேட்கிறாள் (பக்கம்: 24):
“பாட்டி உலர்ந்த – மாங்காய் ஊறுகாய் போடுவதற்கு மிளகாய் எவ்வளவு பாகம்.”
“அது உன் டேக்ஸாவின் எரி- எதிர்ப்புத் திறனைப் பொறுத்தது.” (இப்படிக் கூறினாலும் பாட்டி சபை முடிவில் மிளகாயின் சரியான அளவைச் சரியானபடி கூறிவிடுகிறாள்.)
மலத் துவாரத்தின் வழியே இயற்கைக்கு முரணான வகையில் உறவுகொள்ள விரும்பும் தனது கணவனின் காம வேட்கையைப் பற்றிக் கூறிப் பாட்டியிடம் யோசனை கேட்கிறாள் ஒருத்தி. பாட்டி அவளுக்கு ஆலோசனை கூறுகிறாள் (பக்கம்: 30):
“பாட்டி, வஸ்துவை டேக்ஸாவில் போட வேண்டுமாம்.”
“உன் புருஷன்தானே, அந்த அக்கிரிமி செய்தாலும் செய்வான். சரி, விடு. அப்படியும்தான் ஒருநாள் இருக்கட்டுமே.”
“பாட்டி, என்ன நீ சுத்த கூறுகெட்டவளாக இருப்பாய் போலிருக்கிறதே!”
“அடியே, வீணாகப் பதறாதே. உலகத்தில் எதுவுமே புனிதமானது இல்லை. நிச்சயமாக உன் டேக்ஸா புனிதமானதே இல்லை. இந்து மதம் என்ன சொல்கிறது – உடல் தூய்மையற்றது; அழியக் கூடியது என்று. அழியக்கூடிய உடலிலிருந்து இப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் கிடைக்கட்டுமே.”
“நீ சரியான வக்கிரம் பிடித்தவள். உன்னிடம் வந்தேன் பார்!”
“வெளிப்படுத்திவிடுகிற வக்கிரத்தைவிட, தேக்கி வைத்திருக்கிற வக்கிரம் அபாயமானது. தவிர, வக்கிரம் எதில்தான் இல்லை? பார்க்கப்போனால் எல்லாமே வக்கிரம்தான். என் பேச்சைக் கேள். உனக்கு நிச்சயமாக விருப்பம் இல்லையென்றால் தீர்மானமாக மறுத்துவிடு. ஆனால், நீ அரைமனத்துடன் இருந்தால் பரீட்சித்துப்பார். அதனால் உனக்குச் சில அனுகூலங்களும் ஏற்படலாம்.”
“கிழவி, நீ நாசமாய்த்தான் போவாய்.”
இன்னொரு நடுத்தர வயதுக் குடும்பத் தலைவியின் நிலையோ இதனினும் சிக்கல் நிறைந்தது. பர்மா பஜாரில் விற்கும் செக்ஸ் டாய்ஸ் பற்றிய குறிப்பு ஓரிடத்தில் வருகிறது. கங்குப் பாட்டியிடம் குடும்பத் தலைவி முறையிடுகிறாள் (பக்கம்: 31):
“முன்பு மாதிரி வஸ்துவுக்குக் கபிலவஸ்துவுக்குள் நுழைய முடியவில்லை பாட்டி.”
“ஏன், என்ன ஆச்சி?”
“ஒரு நிமிடத்துக்குள் வழுக்கிவிடுகிறது.”
“அடப் பாவமே, பழைய ஜபர்தஸ்து போய்விட்டதாக்கும்… நாப்பத்தைந்து வயதுக்குள்ளாகவா… உன் புருஷன் பாஸ்கட் பால் ப்ளேயராட்டும் நெடுநெடுவென்று லட்சணமாக இருப்பானே. அவனுக்கா இப்படி? சரி சரி, அதற்காக வேறு வஸ்துவைத் தேடி நீ போய்விடாதே. உன் புருஷன் அப்பாவி.”
“ஆமாம் பாட்டி, பர்மா பஜாரில் வஸ்து மாதிரி மிஷினெல்லாம் கூடக் கிடைக்கிறதாமே!”
“பர்மா பஜாரில் நிஜ வஸ்துவே கிடைக்கும். நான் சொல்வதைக் கேள். மிஷின் கிஷின் எல்லாம் சரிப்பட்டு வராது. விலையும் ஜாஸ்தி. அப்புறம் உன் மாமியாருக்குத் தெரிந்தால் உன் டேக்ஸாவைக் கிழித்து விடுவாள். உசிதமானது – மாதத்திற்கு ஒருமுறை கபிலவஸ்துவுக்குள் வஸ்து வரட்டும். மற்ற சமயத்தில் கைப்பக்குவமாக ஏதாவது செய்து கொள்ளுங்கள்.”
“பாட்டி, உனக்கு அபார மூளை.”
“ஏண்டியம்மா திடீரென்னு என் மூளையைப் பாராட்டுகிறாய்?”
“நான் நினைத்ததை நீ அப்படியே சொல்லிவிட்டாய்.”
“அப்படியா! எவ்வளவு சமத்துடி நீ! ச்சீ நாயே. உன் டேக்ஸாவில் தீயை வைக்க… இவள் நினைத்தாளாம். நான் சொல்லி விட்டேனாம்!”
தனியாகவும், சபையாகவும் கூடிக்கூடி இதுபோல, இந்தச் சிறுகதையில் கதையின் மாந்தர்கள் பேசுகிறார்கள். வசவுச் சொற்கள் ஆங்காங்கு எட்டிப் பார்க்கும் நவீனப் படைப்புகள் நம்மிடம் நிறையவே உண்டு. ஆனால், கதை முழுவதுமே வசவுச் சொல்லைப் பகடியாக வைத்து நகரும் “கடவு” தவிர்த்த வேறேனும் கதை தமிழில் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை. தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பரிமாறிக்கொள்ளும் பாலியல் குறுஞ்செய்திகளை வெட்டி, ஒட்டிக் கதை வடிவில் செதுக்கியதுபோல இந்தச் சிறுகதையின் வடிவம் அமைந்திருக்கும்.








கெட்ட வார்த்தை பேசுவோம்” – தொகுப்பில் “ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, உறுப்புகள் புணரும்போது பொருள்படும் வழக்கிலுள்ள ஒற்றைச் சொல்லின் பெயர்கள்” எனப் பல சொற்களையும் – கூத்துக்கலை முதற்கொண்டு, சங்க இலக்கியத்தில் அச்சொற்களின் பயன்பாடுகள் என்று நுட்பமாக அணுகிச் சமூக யதார்த்தத்தில் அதன் பயன்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்த கேள்வியை எழுப்புகிறார் பெருமாள்முருகன்.
பெண்களின் முலைகளையும் இடையையும் சங்ககாலம் தொட்டுக் கவிஞர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். போலவே, பெண்ணுறுப்பை “அல்குல், பருமம், சிதி, கருமுகன், மாடம்” என்று இலக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். புண்டை என்றும் கூதி என்றும் தற்காலத்தில் குறிப்பிடப்படுகிறது. “யோனி” என்ற வார்த்தையின் பயன்பாடு புதுக்கவிதைகளிலும் நவீனப் படைப்புகளிலும் நிறையவே பார்க்க முடிகிறது. கூதி என்ற வார்த்தையைக் காளமேகப் புலவர் தமது வெண்பாவில், பதினைந்தாம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியுள்ளதை ஆதாரத்துடன் தமது கட்டுரைகளில் பெருமாள்முருகன் எடுத்துக் காட்டுகிறார். சிவனுக்குச் சிலேடையாகக் காளமேகப் புலவரால் இயற்றப்பட்ட கீழ்க்கண்ட வெண்பாவை அதற்கு உதாரணமாகக் காணலாம். (கெட்ட வார்த்தை பேசுவோம் – பக்கம் 77 & 85)
கூதிக்கெட் டேழும் குலைந்து நடுநடுங்கிப்
பூதிக்கொப் பாகவன்றோ போய்விடுமே – ஆதி
நரக்காட் டகவரியை நற்சரப மாகிச்
சுருக்கா விடினஞ் சுணி.
இதனைக் “கூ திக்கு எட்டு ஏழும்” என்று சீர் பிரித்துப் பார்க்கும்பொழுது – ‘கூ’ என்றால் பூமி என்று பொருள்படுகிறது. பூமியின் திசைகள் ‘எட்டும்’ உலகம் ‘ஏழும்’ என்று அடுத்தடுத்துப் பொருள் கொள்ள வேண்டும். இங்கு “கூ திக்கு” என்ற வார்த்தைகள் இணைந்து “கூதி” என்ற சொல் வரும்படி வெண்பா இயற்றப்பட்டிருக்கிறது.
நஞ்சை உண்டவனாகிய சிவன் வலிமையான சிம்புள் பறவையாகித் திருமாலாகிய நரசிங்கத்தை அடக்காமலிருந்தால் பூமியில் எட்டுத் திசைகளும் ஏழு உலகங்களும் நரசிங்கத்தின் கோபத்தால் வெறும் புழுதியாகிப் போய்விடும் என்பது சிவன் பற்றிய கருத்தாகப் பாடலில் அர்த்தம் பொதிந்துள்ளது. யோனியும், ஆணுறுப்பும் சேர்ந்ததின் வடிவம் என்றுதானே லிங்கத்தைச் சொல்கிறார்கள். வட்டார வழக்குச் சொற்கள் பதினாறாம் நூற்றாண்டிலேயே இலக்கியத்திற்குள் நுழைந்திருக்கிறது என்பதற்கு இந்த வெண்பாவே ஆதாரம்.
போலவே, “குஞ்சு, பெல்லா, தம்பி, புடுக்கு” போன்ற பல்வேறு சொற்களில் அர்த்தப்படுத்தப்படும் ஆணுறுப்பிற்கு நிகரான சொல்லின் பயன்பாடு செவ்விலக்கியத்தில் அதிகம் காணப்படவில்லை என்று வருத்தப்படுகிறார் பெருமாள்முருகன். எனினும் பிற்காலச் செவ்வியல் தொகுப்பு ஆக்கங்களில் “செம்பின், சுனி, சுணி, சுண்ணி, கோசம், மாணி, மாணீ” போன்ற சொற்களின் பயன்பாடானது ஆணுறுப்பையே குறிக்கிறது என்றும் கூறுகிறார்.
ஜெயமோகனின் ‘காடு’ நாவலில் “குப்புறத் தொங்கும் பெருச்சாளி போல அவனது குறி” என்று ஆணுறுப்பைப் பற்றிய வர்ணனை வருகிறது. எனினும் அதன் வெளிப்படையான சொல் பயன்படுத்தப்படவில்லை. (காடு – தமிழினி வெளியீடு – பக்கம்: 134). பி.ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ நாவலின் எட்டாவது அத்தியாயத்தில் கோடைகால இரவுகளில் கிணற்றிலும் ஆற்றிலும் நண்பர்களுடன் நீந்திவிட்டு ஈரக் கால்சட்டையுடன் வீட்டிற்கு வரும் கண்ணனிடம் “உன் காலுக்கிடுக்கில இருக்கில்லயா ரெண்டு கோலிக்காய். அது முதல்ல எலுமிச்சம் பழம் ஆகும். அப்பறம் டென்னிஸ் பந்து மாதிரி ஆயிடும். நடக்கும்போது தொடைல அடிச்சிக்கும்” என்று அவனது அப்பா சொல்கிறார் (காலச்சுவடு வெளியீடு – அத்தியாயம்: 8 பக்கம்: 184). இந்த இடத்தில் அப்பா மகனிடம் பேசுவதால் சங்கேத வார்த்தைகளில் பேசுகிறார் என்றேகூட வைத்துக்கொள்ளலாம். ஆனால், இதே நாவலில் கண்ணன் சுய இன்பம் அனுபவிக்கும் ஓர் இடம் வருகிறது. அந்த இடத்தில் கூட ஆண்குறியைக் குறிக்கும் சொல் வரவில்லை. ரெஜாக் தன் லுங்கியை முழுதும் மேல் தொடை மீது சுருட்டிவிட்டுத் தன் குறியை இழுத்து இழுத்து வேடிக்கைக் காட்டினான். (ரத்த உறவு – பக்கம் 13). பாலபாரதியின் மூன்றாம் பாலினத்தவர்களைப் பற்றிய “அவன் + அவள் = அது” நாவலிலும் ஆண்குறியைக் கத்தரித்துவிட்டுப் பெண்ணாக மாறும் சடங்கினைப் பதிவு செய்திருக்கும் இடத்தில் கூட நேரடிச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
ஆண்குறியின் பெயர் நேரடியாக முதன்முதலில் வெளிப்படையாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது தமது “ஏறுவெயில்” நாவலில்தான் என்கிறார் பெருமாள்முருகன். முதன்முதலில் ஜட்டிபோடும் மகனைப் பார்த்து“இதில்லாம சுனி நிக்க மாட்டீங்குதா?” என்று தாய் கேட்பதாக ஓரிடத்திலும், “எஞ்சுனிக்குப் பொறந்தவன் நீ”என்று தந்தை கேட்பதாக மற்றொரு இடத்திலும் இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார். “குண்டி மசுரு” என்ற வசவு வார்த்தையைப் பல எழுத்தாளர்களும் தமது படைப்புகளில் பயன்படுத்தியிருகிறார்கள். லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய உப்பு நாய்கள் நாவலில் வரும் ஒருபால் உறவில் விருப்பமுள்ள உதிரிப்பாத்திரம் “இப்போ உங்கப் பூலக் காட்டுவிங்களா?” (உயிர் எழுத்து வெளியீடு – பக்கம் 27) என்று குழைவது போல ஒரு வசனம் வரும். போலவே, ராஜ்கௌதமனின் “சிலுவைராஜ் சரித்திரம்” என்ற நாவலில் சுருள்சுருளாக உடலில் ரோமங்கள் முளைத்த பள்ளி மாணவனை – அவனது ஆசிரியர் தண்டிக்கும் இடத்தில் “பிரம்பக் கொண்டு அவந் தொடையில தடவிக்கிட்டே டவுசர்குள்ள கொண்டு போவார். கொண்டு போறவர் சும்மா இருக்காம அவங் குஞ்சாங்கிட்ட பிரம்ப வச்சிச் சுத்தி முறுக்குவார்” என்று கதைசொல்லியான சிலுவைராஜ் பகிர்ந்துகொள்வதுபோல ராஜ்கௌதமன் பதிவு செய்திருப்பார். சாருநிவேதிதா, வா.மு.கோமு போன்றவர்களும் தமது பெரும்பாலான படைப்புகளில் வட்டாரப் பயன்பாட்டு வசைச்சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தியிருப்பார்கள். “யோனியில் ஆணி அடித்ததுபோல வலித்தது” போன்ற வார்த்தைப் பயன்பாடுகளை அம்பையின் சிறுகதைகளில் காணலாம். இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். “வண்ணநிலவன், கண்மணி குணசேகரன்” எனப் படைப்பாளிகளை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். “நவீனப் படைப்புகளில் பாலுறுப்பு வார்த்தைகளின் பயன்பாடு” என்ற தலைப்பில் யாரேனும் ஆராய்ச்சி செய்ய முன்வந்தால் இன்னும்கூடச் சிறப்பாக இருக்கும். இன்றைய கல்விப் புலச் சூழலில் “கொச்சை வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள், வசவுச் சொற்கள்” சார்ந்த வட்டார வழக்கு ஆராய்ச்சிகள் சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.
வார்த்தைகளுக்கு “நல்லவை X கெட்டவை” என்ற சாயத்தை நாம் தான் பூசிவிடுகின்றோம். எனினும் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் பேசும் பொழுதும், கையறு நிலையின் கோபத்தை வெளிப்படுத்தும் பொழுதும் – “கெட்ட வார்த்தைகள்” எனச் சமூகம் அடையாளப்படுத்தியிருக்கும் வார்த்தைகள் தான் வாயிலிருந்து அருவிபோலக் கொட்டுகின்றன. ஆங்கிலம் பேசுபவர்கள் “FUCK” என்ற வார்த்தையைப் பல்வேறு பாவங்களில், பல்வேறு உணர்வு நிலைகளின் வெளிப்பாட்டில் வினைச்சொல்லைப் போலப் பயன்படுத்துவதை ஒரு திரளான கூட்டத்தில் ஓஷோ (ரஜனீஷ்) பகிர்ந்து கொள்வார். அதன் காணொளி YouTube-ல் காணக் கிடைக்கிறது. “ஒத்தா எங்கடா போயிருந்த?”, “ஒத்தா சீ… மூட்றா வாய?”, “ஓத்தா ஜஸ்ட் மிஸ்டா” என நாமும் “FUCK”-க்கு நிகரான வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். எல்லா மொழிகளிலும் இதுபோன்ற சொற்கள் இருக்கத்தானே செய்கிறது. “ஒலு, ஓழி, ங்கொக்காலோழி, கண்டாரோலி, ங்கொய்யாலோலி, தாயோலி (Mother Fucker)” போன்ற பாலியல் வட்டார வசவுச் சொற்களின் பயன்பாடும் யதார்த்தப் புழக்கத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால் படைப்பிலக்கியங்களில் அவையாவும் சென்சார் செய்யப்படுகின்றன. அப்படியே பயன்படுத்தினாலும் சர்ச்சைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “காக்க காக்க” திரைப்படத்தில் வரும் வில்லன் கதாப்பாத்திரம் “ங்கோத்தா” என்ற வார்த்தையைச் சேர்த்துத் தான் ஒவ்வொரு வசனத்தையும் பேசுவான். அதனை “த்தா” என்ற ஓசையில் திரைப்படம் முழுவதும் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். ஏனெனில் சென்சாரில் அந்த வார்த்தைகளை வெட்டிவிடுவார்கள் என்ற நியாயமான பயம் இயக்குநருக்கு இருக்கிறது. ஆங்கில, ஹாலிவுட் திரைப்படங்களில் ஏற்ற இறக்கங்களுடன் “FUCK” என்ற வார்த்தையை, மற்ற எந்த வசனத்தையை விடவும் காதுகுளிர மிகத் தெளிவாகக் கேட்க முடியும். கலாச்சாரக் கொடியைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியச் சூழலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. இந்தத் திரைப்பட சென்சார் போர்டு செய்த வேலையைத் தான் சங்ககால இலக்கியத்தை ஆரம்ப காலங்களில் பதிப்பித்தவர்கள் செய்திருக்கிறார்கள். “அல்குல், சிதி” போன்ற வார்த்தைகள் வரும் இடங்களில், அர்த்தத்தைத் திரித்து விளக்கம் எழுதியிருக்கிறார்கள். அல்லது பாடலையே கத்தரித்துத் தொகுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அதுபோன்ற விடுபடல்களைப் பற்றித் தான் பெருமாள்முருகன் இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் முழுவதும் அலசியிருக்கிறார்.
தினமணி நாளிதழில் (1988) “மதம் – எழுத்து – சமூகம்” என்ற கட்டுரையில் சல்மான் ருஷ்டியைப் பற்றி அசோகமித்திரன் எழுதும்போது “சமூக அமைதிப் பொறுப்பை ஏற்கிறவர்கள் உயர்ந்த இலக்கிய ரசனையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. எமெர்ஜென்சி காலத்தில் ஒருமுறை சென்னை வந்த இந்திரா காந்திக்கு நல்ல உச்சி வேளையில் பிரபல தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட குழு ஒன்று கூட்டம் கூட்டியது. அதன் தலைவர்கள், அவர்கள் ஆபாசம் என்று கருதும் படைப்புகளையும் படைப்பாளிகளையும் அரசு தடை செய்ய வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்கள்” என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.
“இம்மாதிரி விஷயங்களில் தயவுசெய்து அரசாங்கத் தலையீட்டை வற்புறுத்தாதீர்கள். பொதுவாகவே அரசாங்கங்கள் சற்று ரசனைக் குறைவாகத் தான் எப்போதும் இருந்திருக்கின்றன” என்று சமயோசிதமாக இந்திராகாந்தி அதற்கு பதில் சொல்லியிருக்கிறார். சில பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த நிலையில் தான் இலக்கியச் சமூகம் இருந்திருக்கிறது.
வார்த்தைகள் ஒவ்வொன்றும் மொழிக்கு வளமை சேர்க்கின்றன. உண்மையில் கெட்ட வார்த்தைகள் என்று எதுவுமே இல்லை. இவையெல்லாம் சமூகத்தின் கற்பிதங்கள் மட்டுமே. பெருமாள்முருகனின் “கெட்ட வார்த்தை பேசுவோம்” – அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு. தமிழிலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, மொழி ஆர்வலர்களுக்கும் சரி தீனி போடக்கூடிய சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு இது. சாப்ஃட்வேர் என்ஜினியர்கள் கூடப் படிக்கலாம். “மாமரம்” சிறுகதையைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த, சிபிஎஸ்ஸி பாடத்திட்டத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தந்தையைப் போன்று ஒற்றைத் தளத்தில் சிந்திக்கும் மேல்தட்டு மனோபாவம் கொண்டவர்கள் முக்கியமாகப் படிக்க வேண்டும். ஒருவகையில் இவையாவும் வரலாற்று ஆவணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எளிய மக்களின் மொழியானது தேவையில்லாத சினிமாக் காட்சிகளைப் போலத் துண்டித்து எறிய வேண்டிய ஒன்றல்ல. இந்த வட்டார மொழி ஒருசார் மக்களின் வாழ்வியல் கூறு. அதனைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஏனெனில், படைப்புகள் யாவும் காலத்தின் கண்ணாடி. ரசம் உதிராக் கண்ணாடிகள் எல்லாவற்றையும் பிரதிபலிக்க வேண்டும். உலக இலக்கியங்கள் யாவும் அதைத் தான் பிரதிபலிகின்றன.
***
(கெட்ட வார்த்தை பேசுவோம், பெருமாள்முருகன், இரண்டாம் பதிப்பு காலச்சுவடு பதிப்பகம்.)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...