முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) – Analysis


கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) – Analysis

??????????????????????????????????????????????????????????????????????????????

இந்த விமர்சனத்தில் எந்த முக்கியமான பாயிண்ட்களும் விவாதிக்கப்படவில்லை என்பதால் அவசியம் முழுதும் படிக்கலாம்.
 
கண்ணன் என்பவன் ஒரு பஸ் கண்டக்டர். பஸ்ஸில் வரும் பெண்களை சைட் அடித்துக்கொண்டு, இரவானால் டாஸ்மாக்கில் சரக்கடித்துக்கொண்டு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்துவரும் கதாபாத்திரம். அப்படிப்பட்ட கண்ணன் ஒருநாள் ஒரு திருமணத்துக்குச் செல்கிறான். அங்கே பூவு என்ற பெண்ணை சந்திக்கிறான். பார்த்தவுடன் அவனுக்கு அவள்மேல் காதல் வருகிறது. ஆனால் பூவுக்குக் கண்ணன் யார் என்பதே தெரியவில்லை. மறுபடியும் பூவுவை சந்திக்கவேண்டும் என்று அவள்மேல் வெறியனாக மாறுகிறான் கண்ணன். சிறுகச்சிறுக அவளைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறான். அப்போதுதான் பூவுவுக்கு ஒரு அக்கா இருப்பதாகவும், அவள் ஒரு LIC ஏஜெண்ட் என்பதையும் கண்டுபிடிக்கிறான். அவளை ஒருநாள் எதேச்சையாகக் கண்ணன் சந்திக்க நேர்கிறது. அவள் யார் என்ற உண்மையை அப்போது கண்ணன் கண்டுகொள்கிறான். அவனது வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்னர், கல்லூரி முடித்துவிட்டு ஊதாரியாகத் திரிந்தபோது அவன் காதலித்திருந்த பெண் அவள். அவளை சுற்றிச்சுற்றிப் பாடல்கள் பாடிக் (ஏ கலா கலா) காதலித்திருந்தது அவனது நினைவில் இருக்கிறது. அவளும் இதை உணர்கிறாள். ஆனால் பிரச்னை என்னவென்றால், அவள்மீது கண்ணனுக்குத் துளிக்கூடக் காதல் இப்போது இல்லை.
இந்த நேரத்தில், கண்ணன் தனது அம்மாவுக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் ஒரு ரவுடியிடம் பணம் கடன் வாங்க நேர்கிறது. அந்த ரவுடியின் பெயர் சீதாராமன். அந்த சீதாராமன் செய்யாத பாவம் இல்லை. பல பெண்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறான். செத்த பிணத்தின் நெற்றியில் இருந்து ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு பீடி வாங்குபவன் அவன். அந்தப் பணத்தைக் கண்ணனால் கொடுக்க முடிவதில்லை. கண்ணனின் வாழ்க்கையில் நேரடியாகக் களம் இறங்குகிறான் சீதாராமன். பூவுவைக் கடத்துகிறான். பூவுவின் அக்காவைப் பாலியல் பலாத்காரம் செய்கிறான். இந்தச் சூழலில், வேறு வழியில்லாமல் கண்ணன் அவனுக்குத் தெரிந்த ஒரு போலீஸ் கமிஷனரை அணுகுகிறான். அவர் பெயர் கஜா. அவரது மனைவியின் பெயர் மீனா. அந்தப் பெண்ணும் போலீஸ்தான்.
கஜாவும் கண்ணனும் மீனாவும் சேர்ந்து சீதாராமனை எப்படி அழிக்கிறார்கள்?
 
மோட்டிவே இல்லாமல் கொலை செய்ய முடியுமா? நாம் பாட்டுக்கு ஜாலியாக தெருவில் நடக்கிறோம். நமது பாக்கெட்டில் வீட்டு சமையலுக்காக அப்போதுதான் வாங்கிய கத்தி இருக்கிறது. அதை எடுத்து சரேல் என்று எதிரில் வருபவரைக் குத்திக் கொன்றால் அது மோட்டிவ் இல்லாத கொலை என்று சிலர் வாதாடக் கூடும். ஆனால் கத்தியை எடுத்துக் குத்தவேண்டும் என்று ஒரு எண்ணம் எழுந்ததல்லவா? கொலை செய்வதற்குச் சில கணங்கள் முன்னர்தான் அந்த எண்ணம் எழுந்திருக்கிறது. எனவே அதுதான் அந்தக் கொலையின் காரணம். மோட்டிவ். எனவே மோட்டிவ் இல்லாமல் கொலை செய்வது என்பது கனவில் கூட நடக்காத வேலை. இது common sense. அதைப்போலவே கதையே இல்லாமல் ஒரு படம் எடுக்க முடியுமா? ஏற்கனவே பல வருடங்களாகத் தமிழில் அப்படித்தான் பல படங்கள் வந்திருக்கின்றன. என்றாலும் அவையெல்லாம் ‘கதை’ என்ற ஒரு வஸ்து இருக்கிறது என்று தயாரிப்பாளரை நம்பவைத்து எடுக்கப்பட்ட ஸ்பூஃப்கள். ஆனால் இதனாலேயே அப்படங்களில் கதை இருக்கிறது என்று ஒரு முடிவுக்கும் ஆடியன்ஸாகிய நாம் அவசரப்பட்டு வந்துவிடமுடியாது. இப்படி ஆரம்பத்திலேயே இரண்டுவிதமான முரண்கள் அந்தப் படங்களின் கதையில் இருப்பதால் அது ஒருவிதமான பின்நவீனத்துவ முயற்சி என்று ஆகிறது. ஆனால் அது பின்நவீனத்துவ முயற்சி என்பதே அந்தப் படம் எடுத்த இயக்குநருக்குத் தெரியாது. காரணம் இலக்கியப் பரிச்சயம் இல்லாமை. இதனால் பின்நவீனத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் படுபயங்கர பின்-பின்நவீனத்துவ முயற்சிகள் தமிழ்ப் பட உலகில் பல வருடங்களாக சம்மந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் நடந்துகொண்டு இருக்கின்றன.
ஆனால் ஆர். பார்த்திபன் என்ற ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எடுத்த இந்தப் படம் அப்படி அல்ல. படத்திலேயே ஒரு கதாபாத்திரம், கதை இல்லாமல் படம் எடுத்தால் என்ன என்று கேட்கிறது. எனவே இதில் ஒருவித intertextuality இருக்கிறது. அதாவது பிரதிக்குள் பிரதி. ஜிகர்தண்டாவில் படத்துக்குள் படம் எடுப்பார்களே அப்படி. படத்தின் ஆடியோ ரிலீஸிலேயே கதையில்லாமல் கதை என்ற விவாதத்தை நடத்தியவர் பார்த்திபன். அப்போது அந்த செய்தியைக் கேள்விப்பட்டதுமே மேலே சொன்ன ‘மோட்டிவ் இல்லாத கொலை’ என்பதுதான் எனக்குத் தோன்றியது. அது நடக்காத காரியம் என்று. ஆனால் படம் பார்த்தபின் அது நடக்கக்கூடிய காரியம்தான் என்று புரிந்தது. இது ‘கதை இருக்கிறது’ என்று தயாரிப்பாளரை நம்பவைத்து கதையே இல்லாத படத்தை ஆடியன்ஸின் தலையில் கட்டக்கூடிய ஸ்பூஃப் அல்ல. படம் எடுக்கும்போதே படத்தில் கதை இல்லை என்பதைப் பார்த்திபன் தயாரிப்பாளரிடம் சொல்லிக் கன்வின்ஸ் செய்துதான் படம் எடுத்திருக்கிறார்.
 
சரி. கதையே இல்லாத இந்தப் படம் எப்படி இருக்கிறது?
நன்றாக, ஜாலியாக இருக்கிறது. இது ஒரு பார்த்திபன் படமே இல்லை என்ற ஒரு உணர்வைப் படம் முழுக்க உள்ளே வைத்திருக்கிறார் பார்த்திபன். ஆனால் அப்படிப்பட்ட சந்தேகங்கள் அடிக்கடி மனதில் எழும்போதெல்லாம் திரையில் பார்த்திபனாகவே தோன்றி, இது பார்த்திபன் படம்தான் என்பதைத் தெளிவாகவும் ’புரிய’ வைக்கிறார். மிக விரைவில் வெளியாக இருக்கும் ‘Sin city: A dame to kill for’ படத்தில் இப்படி இயக்குநர்கள் ராபர்ட் ரோட்ரிகஸும் ஃப்ராங்க் மில்லரும் ஒரு காட்சியில் அவர்களாகவே (இயக்குநர்களாகவும்) வருகிறார்கள்’ என்று படித்திருக்கிறேன். அந்த வகையில் இது அவசியம் ஒரு ஜாலியான முயற்சிதான். பார்த்திபனின் இந்தக் கேமியோ எனக்கு மிகவும் பிடித்தது. அதனாலேயே சில மாற்றங்களையும் ஒரு இயக்குநராக ஆன் த ஸ்பாட்டில் படத்தில் செய்கிறார் பார்த்திபன். இதுவுமே ஒருவித intertextuality தான். ஆனால் அதையெல்லாம் விட்டுத்தள்ளுவோம். அதையெல்லாம் எப்படியும் இலக்கியவாதிகள் விமர்சனம் எழுதும்போது கவனித்துக்கொள்வார்கள் (அவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால்). ’கல்லுக்குள் ஈரம்’ படத்தில் பார்த்திபனின் தாத்தா பாரதிராஜாவே ஒரு இயக்குநராக வரவில்லையா? (தாத்தா என்பது குரு பரம்பரையில் குரு, குருவின் குரு என்ற முறையில் உபயோகப்படுத்தப்படும் பதம் என்று அறிக). ஆனால் அவர் வேறு ஒரு இயக்குநரின் படத்தில்தான் அப்படி (கல்லுக்குள் ஈரம் ஒரு நிவாஸ் படம்) வந்தார். அவராகவே வரவில்லை. வந்து படத்தின் காட்சிகளை மாற்றவில்லை.
பார்த்திபனின் இந்த ரீ எண்ட்ரி ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதை அவசியம் சொல்வேன். ஒரு திரைப்பட ரசிகனாக, என் பார்வையில் ஒரு திரைப்படம் என்பது என்னை முழு இரண்டு மணி நேரமும் அதனோடு ஒன்றச்செய்யவேண்டும். அலுப்பு தட்டவைக்கக்கூடாது. எரிச்சல் வரவைக்கக்கூடாது. படத்தில் எத்தகைய க்ளிஷேவுமே வரட்டும். ஆனால் அந்த இடத்தில் அது எடுபடுகிறதா இல்லையா என்பதுதான் ஒரே விஷயம்  இதுதான் எனது ஒரே rule. அந்த விதிப்படி ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்னை அவசியம் கவர்ந்தது. படம் முழுக்க அதனோடு ஒன்ற வைத்தது. சிறிதுகூட அலுப்புத் தட்டவைக்கவில்லை.
படத்தில் பல திரைப்பட மேதைகளுக்கான Homageகள் உள்ளன. பல திரைப்பட ஜாம்பவான்களைப் பற்றிய விபரங்கள் வருகின்றன. . கலைஞானம் கலைஞானமாகவே வருகிறார் (யார் இவர் என்று வினவும் ஆட்கள் ரஜினி நடித்த பைரவியைப் பற்றி இணையத்தில் தேடுக. அந்தப் பெயர் வந்ததுமே எனக்கு அவரைப் பற்றித் தெரிந்துவிட்டது என்பது பின்குறிப்பு. தமிழ் சினிமாவில் ஒரு Cinephileஆக இருப்பதன் நன்மை). சேரன் சேரனாகவே வருகிறார். ஆர்யா ஆர்யாவாகவே வருகிறார். விஜய் சேதுபதி விஜய் சேதுபதியாகவே வருகிறார்.  தனஞ்செயன் தனஞ்செயனாகவே வருகிறார். இன்னும் பலரும் இன்னும் பலராகவே வருகிறார்கள்.
பார்த்திபன் ஜாக் டேனியல்ஸை (அல்லது அவருக்குப் பிடித்த ஒரு மாக்டெய்லை – குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் தீமையானது) அட்டகாசமாக அருந்திவிட்டு ஆடியிருக்கும் ஒரு Ballet+contemporary+jazz+salsa+hiphop+tap இது. பொதுவாகத் திரைப்பட இயக்குநர்களைப் பற்றி ஒரு விஷயம் உலகில் உண்டு. வயது ஆக ஆக அவர்களின் திறமை மங்கும். ஸ்கார்ஸேஸியே அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் பார்த்திபன் மிகுந்த இளமையுடன் இப்போதுதான் பிறி கட்டி அடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்படியே அவர் தொடரவேண்டும் என்பது என் எண்ணம். பொறுத்துப் பார்ப்போம் (உடனே ‘பார்த்திபனும் ஸ்கார்ஸேஸியும் ஒண்ணாடா?’ என்ற மோஸ்தரில் அமைந்த அவசரமான கீபோர்டு நடன கமெண்ட்கள் வரவேற்கப்படுகின்றன).
இந்தப் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் அவசியம் பலருக்கும் பிடிக்கும் என்று தோன்றுகிறது. பாருங்கள். அவசியம்.
பி.கு
1. பார்த்திபன் மட்டும்தான் அஜபுஜாக்ஸாகக் காட்சிகளை அமைக்கவேண்டுமா? ஒரு விமர்சகனாக நான் அப்படி அமைத்த காட்சிகள்தான் முதல் சில பேராக்களில் நீங்கள் படித்த கதை. அதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் இதுவரை பார்த்திபன் படங்களில் வந்த பாத்திரங்களே (இதை சொல்லக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் தமிழ் படிக்கும் நல்(கெட்ட)உலகம் இப்படி சொல்லாவிட்டால் அதை உண்மை என்று எண்ணிக்கொண்டு வடக்கிருந்து உயிர்விட்டுவிடக்கூடும் என்பதால் சொல்லநேர்ந்துவிட்டது).
2. படத்தின் ஒரே பிரச்னை – ஆங்காங்கே பார்த்திபன் நுழைத்திருக்கும் ’அக்மார்க் நயம் பார்த்திபன் பாணி’ வசனங்கள். ஆனந்த விகடனுக்கு ஒருமுறை பார்த்திபன் விளம்பர இன்புட் கொடுத்தார். பல ஆண்டுகளுக்கு முன். அதன் விளம்பரம் டிவியில் இப்படி இருக்கும். ’ஆனந்த விகடன்… நந்த விகடன்.. ந்த விகடன்.. த விகடன்.. விகடன்.. கடன்.. டண்டணக்கர டடண்டன்’… இதுதான் பார்த்திபன் பாணி. இந்த மாதிரியான பல வசனங்களைப் படம் முழுக்கக் கேட்க நேர்ந்தது.
3. தம்பி ராமையா வழக்கமான க்ளிஷே கதாபாத்திரத்தில் க்ளிஷேவாகத்தான் நடித்திருக்கிறார் என்றாலும் அவரது பாத்திரமும் நடிப்பும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கதையில் அது எடுபடுவது ஒன்றே காரணம்.
4. ஆங்காங்கே தம்பி ராமையா உச்சரிக்கும் வசனங்களில் ஸிட் ஃபீல்டைப் படித்த நண்பர்களுக்கு சில இன்புட்கள் உள்ளன.

with the help of   rajeskaru

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...