முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருப்பர் நகரம்

கருப்பர் நகரம்



                               





மெட்றாஸ்.   இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி, பரவலான ஆதரவைப் பெற்று வெற்றி பெற்ற படம் இது.  நடிகர் சிவக்குமாரின் மகன், கார்த்தி நடித்துள்ள படம்.  

சமூக வலைத்தளங்கள் பிரபலமானது முதற்கொண்டே, திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், சமூக வலைத்தளங்களின் மூலமாக தங்கள் திரைப்படங்களை பிரபலமாக்க வேண்டும் என்று முனைப்பாக இருக்கின்றனர்.   ஏனென்றால், சன் டிவியின் தர வரிசை, ஆனந்த விகடனின் மதிப்பெண்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் அரசியலை, மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். 



அதனால்தான், முகநூல் மற்றும் ட்விட்டரில் வரும் சில வரி விமர்சனங்களையே மக்கள் அதிகம் நம்புகின்றனர். இதனால், திரைப்படங்களின் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், முகநூல் மற்றும் ட்விட்டரில் அதிக பின்தொடர்பாளர்களை வைத்திருப்பவர்களை அணுகி, தங்கள் திரைப்படத்தைப் பற்றி பாராட்டி எழுதுமாறு, கேட்டுக் கொள்கின்றனர்.  அதன் அடிப்படையில் சில சமூக வலைத்தள பிரபலங்களும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

மெட்றாஸ் திரைப்படம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி வெளியானது.   அந்த திரைப்படம் வெளியான அன்று காலை, இந்தியா டுடேவில் பணியாற்றும் செய்தியாளரும், கவிஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர், திரைப்பட விமர்சகர், தலித் போராளி மற்றும் கைதேர்ந்த லாபியிஸ்ட் என்று பல்வேறு பரிமாணங்களை கொண்ட கவின் மலர் தனது முகநூல் பக்கத்தில் "அண்மையில் எந்தப் படத்துக்காகவும் இத்தனை காத்திருந்ததில்லை . பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ வெற்றிபெற வாழ்த்துகள்" என்று பதிவு செய்திருந்தார். 




அடுத்ததாக, "தமிழ் சினிமா வரலாற்றில் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் சொல்வதென்றால், முதன்முதலாக ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் தலித்துகளே எழுதியுள்ள படம் ‘மெட்ராஸ்’ தான். இயக்குநர் ரஞ்சித்தால் மட்டுமே இது சாத்தியப்பட்டிருக்கிறது. கானா பாலா, கு.உமா தேவி, கபிலன் என அனைவருமே தலித்துகள். அனைவருக்கும் வாழ்த்துகள்" என்றும் பதிவு செய்திருந்தார். 


நாடி, நரம்பு, ரத்தம், சதையெல்லாம் சாதி வெறியேறியிருக்கும் ஒருவரால்தான், பாடலாசிரியரின் சாதியைக் கேட்டு பாட்டை ரசிக்க முடியும்.  அப்படி ஒரு வெறி பிடித்தவர்தான் இந்த கவின்மலர்.   

பார்ப்பன சாதி வெறி, தேவர் சாதி வெறி, வன்னியர் சாதி வெறி, கவுண்டர் சாதி வெறி எப்படி கண்டிக்கத்தக்கதோ, அதே போல கண்டிக்கத்தக்கதுதான் தலித் சாதி வெறி.  மனிதர்களை மனிதர்களாக பார்க்கத் தெரியாமல், சாதி வெறி கண்ணாடி அணிந்து பார்ப்பவர்கள், ஆதிக்க சாதியில் மட்டுமல்ல, அடிமை சாதியிலும் இருக்கிறார்கள் என்பதற்கு, சிறந்த உதாரணம், கவின்மலர்.  

லாபியிஸ்ட் கவின்மலர்
இந்த கவின்மலருக்கு, முகநூலில் 40 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  ஊடகம், நீதித்துறை, போன்ற எல்லா பிரிவுகளிலும் உள்ள சீரழிவு, சமூக ஊடகங்களையும் பீடித்துள்ளது என்பதற்கு, கவின்மலர் போன்ற நபர்கள் சான்று. தங்களின் பிரபலத்தை காசாக்கும் கலையை நன்றாக கற்றறிந்துள்ளார்கள். இப்படி இந்தப் படத்தை வெளிப்படையாக, அப்பட்டமாக பாராட்டி விட்டு, அவர் பணியாற்றும் இந்தியா டுடே பத்திரிக்கையில், இப்படத்தின் விமர்சனத்தையும் கவின் மலரே எழுதுகிறார். இணைப்பு  இந்த மாதிரி நபர்களை, இந்தியா டுடே ஊடகம் எப்படி வேலைக்கு வைத்திருக்கிறது என்பதுதான் புரியாத புதிர். 

இந்த மெட்றாஸ் திரைப்படம் "ஒரு கருத்தாழமிக்க கலைப்படைப்பு" என்று கூறி, 11 அக்டோபர், சனிக்கிழமை, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தப் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது, லாபியிஸ்ட் கவின்மலரின் அமைப்பான, மாற்றத்துக்கான ஊடகவியலாளர்கள் சங்கம்.   லாட்டரி அடித்துக் கொண்டிருந்த அமைப்பு இப்படியொரு விழாவை நடத்த எங்கிருந்து நிதி வந்தது ?  இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பணத்திலா என்றெல்லாம் அதிகப்பிரசங்கித் தனமாக கேள்வி கேட்கக் கூடாது. 



சரி..... மெட்றாஸ் ஒரு கருத்தாழமிக்க கலைப்படைப்பா ?  பார்ப்போம். 
வள்ளியூர் பாலு என்பவர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையில் ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் நடன வகுப்புகளை நடத்தி வருகிறார்.  திரைப்படத் துறையோடு நெருங்கிய உறவு கொண்டவர். இவரிடம் வளரும் இயக்குநர்கள் பலர் கதை சொல்ல வருவார்கள்.  அப்படி கதை சொல்ல வந்தவர்தான் நட்ராஜ் கோபி. 

வடசென்னை மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு, ஒரு கதை இருக்கிறது என்று கூறுகிறார்.   வடசென்னையைச் சேர்ந்த ஒருவன் சிறந்த கால்ப்பந்தாட்ட வீரனாக இருக்கிறான்.  வறுமையின் காரணமாக அவன் திறமை மறுக்கப்பட்டு, எப்படி சீரழிக்கப்படுகிறான் என்பதுதான் ஒன் லைன். படத்தின் தலைப்பு குதிரை என்று வைத்திருக்கிறார் நட்ராஜ். 

வள்ளியூர் பாலுவுக்கு கதை பிடித்துப் போனதும், விவாதம் தொடங்குகிறது. புதுமுகங்களை வைத்து இயக்கலாம் என்று நட்ராஜ் சொன்னதும், வேண்டாம் நட்சத்திரங்களையே வைத்து எடுக்கலாம் என்று, பாலு சொல்கிறார்.  வடசென்னை மக்களின் வாழ்வு கதை என்பதால், படத்தின் தலைப்பை கருப்பர் நகரம் என்று மாற்றுகிறார்கள். 

வள்ளியூர் பாலு

படத்தின் கதாநாயகனாக அகிலும், கதாநாயகியாக அருந்ததியும் என்று முடிவு செய்யப்படுகிறது.   முக்கிய வேடத்தில் ஆனந்த் பாபு நடிக்கிறார். படத்தின் இசையமைப்பாளராக தேவா நியமிக்கப்படுகிறார்.  பாடல் பதிவுகள் அனைத்தும் முடிந்து நவம்பர் 2010ல் விஜிபி கோல்டன் பீச்சில் முதல் நாள் ஷுட்டிங் தொடங்குகிறது. கருப்பர் நகரம் என்ற தலைப்பை சிம்பாலிக்காக காட்டுவதற்காக, ஆப்பிரிக்கர்களை வைத்து அந்தப் பாடல் படமாக்கப்படுகிறது. அதன் பின், பட்டினப்பாக்கம், மைலாப்பூர் லஸ் குடியிருப்பு ஆகிய இடங்களில் படபிடிப்பு நடைபெறுகிறது.  

அடுத்த கட்ட படபிடிப்பு ஓட்டேரியில் நடைபெற்று வருகிறது.  அந்த நேரத்தில் தினமலர் நாளேடு ஒரு செய்தி வெளியிடுகிறது.  கருப்பர் நகரம் படபிடிப்பு ஓட்டேரி குடியிருப்புப் பகுதியில் நடைபெற்று வருவதால், பொதுமக்களுக்கு கடும் இடையூறு என்று அரைப் பக்கத்துக்கு செய்தி வெளியிடுகிறது.  இந்த செய்தியைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் நெருக்கடியால் படபிடிப்பு தடைபடுகிறது. 





இதையடுத்து, படபிடிப்பு தாமதமானதும், அகில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் நகர்புரம் மற்றும் நந்தி ஆகிய படங்களில் பிசியாகி விடுகிறார்.  அடுத்த கட்டப் படபிடிப்பை தொடங்கலாம் என்று முடிவெடுத்தபோது, அகிலின் கால்ஷீட் கிடைக்கவில்லை.   மீண்டும் மீண்டும் அழைத்தும் அகில் வரவில்லை.  ஒரு கட்டத்தில் எரிச்சலான தயாரிப்பாளர் பாலு, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் அகிலிடம் நடித்துத் தந்தே ஆகவேண்டும் என்றும், தேதிகளை சரி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.   

இந்த பஞ்சாயத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் இயக்குநர் ரஞ்சித் அட்டக்கத்தி படத்தை தொடங்குகிறார்.   அந்த அட்டக்கத்தி படம், திருவள்ளுர் மாவட்டத்தில் தலித்துகள் பகுதியில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.  கருப்பர் நகரத்தின் படபிடிப்பு மீண்டும் தொடங்குவதற்கு முன்பாக, அட்டக் கத்தி படம் ரிலீஸ் ஆகிறது.  

மெட்றாஸ் இயக்குநர் ரஞ்சித்
அட்டக்கத்தி படத்தைப் பார்த்த, கருப்பு நகரம் படத்தின் இயக்குநர் கோபி, கருப்பு நகரம் படத்தின் காட்சிகளில் இருந்து ஐந்து காட்சிகள் அப்படியே அட்டக்கத்தி படத்தில் இருப்பதாக தயாரிப்பாளர் பாலுவிடம் தெரிவிக்கிறார்.  அதிர்ச்சி அடைந்த பாலு, எப்படி என்று விசாரிக்கவும், ரஞ்சித், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக, தன்னுடைய கதை விவாதங்களில் பங்கெடுத்ததாகவும், கருப்பு நகரம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ரஞ்சித்துக்கு அத்துப்படி என்றும் கூறுகிறார்.  

சரி.  ரஞ்சித் காப்பியடித்த அந்த ஐந்து காட்சிகளையும் மாற்றியமைத்து விட்டு, ஷுட்டிங் தொடங்கலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது.  இந்நிலையில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் மெட்றாஸ் ஷுட்டிங் நடக்கிறது.  இந்த சத்தியமூர்த்தி நகர் மாநகராட்சி விளையாட்டுத் திடலில்தான் கதாநாயகன் கால்பந்து விளையாடுவதாக கருப்பர் நகரத்தில் காட்சி அமைக்கப்பட்டு ஷுட்டிங் நடந்தது.  அந்த ஷுட்டிங்கில் கலந்து கொண்டு, கருப்பர் நகரம் படத்தில் நடித்த சார்லஸ் என்பவர், மெட்றாஸ் படத்தின் படபிடிப்பை பார்க்க நேர்கிறது. அவர் நேரடியாக இயக்குநர் ரஞ்சித்திடம் சண்டைக்குப் போகிறார்.  இப்படி இன்னொருவர் படத்தை காப்பியடித்து எடுப்பதற்கு போயி பிச்சையெடுக்கலாமே என்ற தொனியில் கடுமையாக பேசுகிறார். 

இந்த சண்டையைத் தொடர்ந்து, மெட்றாஸ் படத்தின் இயக்குநர் ரஞ்சித், கருப்பு நகரம் படத்தின் இயக்குநர் நட்ராஜ் கோபியை அழைக்கிறார்.  நட்ராஜிடம், ரஞ்சித், தன்னுடைய படம் வேறு படம் என்றும், நாம் இருவரும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நாம் சண்டையிடுவது, ஆதிக்க சாதியினருக்குத்தான் நலமாகப் போய் முடியும் என்று கூறுகிறார்.  இதையடுத்து, நட்ராஜ், இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டு விடுகிறார். 

இயக்குநர் நட்ராஜ் கோபி, இத்தனை விஷயங்கள் நடந்தும், இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் பாலுவுக்கு தெரிவிக்கவே இல்லை.   இது இப்படியே இருக்கும் சமயத்தில்தான், மெட்றாஸ் படத்தின் ட்ரைலர் மற்றும், கார்த்தியின் பேட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.  படத்தின் ட்ரைலரைப் பார்த்த தயாரிப்பாளர் பாலு அதிர்ந்து போகிறார்.   நம் படத்தின் காட்சியமைப்புகள் அப்படியே இருக்கிறதே என்று, உடனடியாக தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் தெரிவிக்கிறார்.   இந்த புகார் தெரிவிக்கப்பட்ட நாள் 19 ஜுலை 2014.  இந்தப் புகார் தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அளிக்கப்படுகிறது. தயாரிப்பாளர் கவுன்சிலின் செயலர் யார் தெரியுமா ?  மெட்றாஸ் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான்.   



ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கையில், எப்படி இந்தப் புகாரின் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் ?   .

இந்நிலையில் மெட்றாஸ் படத்தின் வெளியீடு தேதி 26 செப்டம்பர் என்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.  இந்த வழக்கு நீதிபதி தமிழ்வாணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. மெட்றாஸ் படத்தின் கதை, கருப்பர் நகரம் படத்தின் அப்பட்டமான காப்பி. அந்தப்படத்தை வெளியிட்டால், எனது படத்துக்கு நான் செய்த முதலீடு அப்படியே பாழாய்ப் போகும்.  ஆகையால், இப்படத்தை வெளியிட அனுமதிக்காதீர்கள் என்று வழக்கு தொடுக்கிறார் பாலு. 

தமிழ்வாணன், மெட்றாஸ் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குநர் ரஞ்சித்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுகிறார். 22 செப்டம்பர் 2014 அன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உத்தரவிடுகிறார் நீதிபதி தமிழ்வாணன். இதையடுத்து, தயாரிப்பாளர் பாலுவுக்கு திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.  

"நான் வன்னி அரசு பேசறேன்.   கொஞ்சம் ஹோட்டல் லீ மெரிடீயனுக்கு வாங்க.  உங்க படம் பத்தி பேசணும்" என்று கூறப்படுகிறது.  தயாரிப்பாளர் பாலு, உடனே கிளம்பி, லீ மெரிடியனுக்கு செல்கிறார்.  அங்கே, வன்ன அரசு,  தொல் திருமாவளவனின் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் ஆகியோருடன் மற்றொருவர் அமர்ந்திருக்கிறார்.  


மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன்
பாலுவிடம் அந்த மற்றொருவர் அறிமுகப்படுத்தப்படுகிறார்.  நான்தான் ரஞ்சித். மெட்றாஸ் படத்தின் இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அப்போதுதான் தயாரிப்பாளர் பாலு, முதன் முதலாக, இயக்குநர் ரஞ்சித்தை சந்திக்கிறார். இரு தரப்பும் தங்கள் பக்க நியாயத்தை எடுத்து வைக்கின்றனர்.  

இறுதியாக தயாரிப்பாளர் பாலு, நான் இது வரை எடுத்த படத்தையும், மெட்றாஸ் படத்தையும், தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குழு பார்க்கட்டும். அந்த ப்ரிவியூவுக்கு ஆகும் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.   சம்மதமா என்று கேட்கிறார். ஆனால், மெட்றாஸ் இயக்குநர் ரஞ்சித், இதற்கு மறுக்கிறார்.   

இறுதியாக, ரஞ்சித், நேரடியாகவே, கருப்பர் நகரம் படத்தின் தயாரிப்பாளர் பாலுவிடம், கெஞ்சுகிறார்.   இந்த ஒரு முறை பிரச்சினை பண்ணாமல் விட்டு விடுங்கள்.   உங்களுக்கான நான் பிறகு ஏதாவது செய்கிறேன் என்கிறார்.  வன்னி அரசுவோ, அவர் பங்குக்கு, ஒடுக்கபட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவர் வளருகிறார்.  அவரை வளர விடுங்கள் என்று கூறுகிறார். தயாரிப்பாளரோ, நான் செலவு செய்த, இரண்டரை கோடிக்கு பதில் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.   இறுதியில் எந்த முடிவும் எட்டப்படாமல் அந்த சந்திப்பு நிறைவடைகிறது. 

அதன் பிறகு, வன்னி அரசிடமிருந்து எந்த தகவலும் இல்லை. மூன்றாவது நாள், வன்னி அரசிடமிருந்து திடீரென்று போன். உடனடியாக கிளம்பி தி நகரில் உள்ள பெதில்டா ஹோட்டலுக்கு வர வேண்டும் என்றும், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அவரை சந்திக்க விரும்புவதாகவும் அவசரமாக வருமாறும் கூறுகிறார்.  பாலுவும் உடனடியாக கிளம்புகிறார்.   பாலு பாதி வழியில் வருகையில், வன்னி அரசு மீண்டும் அழைக்கிறார்.  நீங்கள் இங்கே வந்து, ஞானவேல்ராஜாவிடம் எதுவும் பேசக்கூடாது.   அமைதியாக இருக்க வேண்டும்.  வந்து அவரிடம் கை கொடுத்து விட்டு சென்று விட வேண்டும் என்று கூறுகிறார்.   மேலும் நீங்கள் தனியாகத்தான் வர வேண்டும், வேறு யாரும் வரக்கூடாது என்றும் கூறுகிறார்.  பாலு, என் பணத்துக்கு பதில் சொல்லுங்கள்.  நான் ஏன் ஞானவேல் ராஜாவிடம் கை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.  அந்த சந்திப்பு நடைபெறாமலேயே நின்று விடுகிறது. 

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா
என்ன நடந்திருக்கிறது என்றால், ஞானவேல் ராஜாவிடம் பொறுக்கித் தின்ற வன்னி அரசு, "அண்ணே பாலு நம்ப பயண்ணே.... நான் சொன்னா அதைமீறி ஒரு பேச்சு பேச மாட்டாண்ணே... நீங்க வேணும்னா பாருங்க. இப்போ உடனே வரச்சொல்றேன்..... உங்க கிட்ட ஒரு வார்த்தை பேசாம கையை குலுக்கிட்டு போவான் பாருங்களேன்" என்று பில்டப் கொடுத்துள்ளார்.  அந்த அடிப்படையில்தான், பாலுவை ஞானவேல் ராஜாவை பார்க்க வரச்சொன்னது. 

வன்னி அரசு

இதன் பிறகு, இந்த வழக்கு நீதிமன்றத்தில் ரிலீசுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தமிழ்வாணன் சரி.. இந்த வழக்குக்கு ஏதாவது ஒரு தீர்வைச் சொல்லுங்கள் என்று கூறுகிறார். தயாரிப்பாளர் பாலு தரப்பு, இது வரை, கருப்பர் நகரம் படத்துக்கு செலவு செய்துள்ள மூன்று கோடியை, நீதிமன்றத்தில் கட்டுமாறு கேட்கிறார். ஞானவேல் ராஜா தரப்பு மறுக்கவும், சரி.... படம் ரிலீஸ் ஆகட்டும்.  ரிலீஸ் ஆனதும், படத்தின் வசூல் விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டு, மெட்றாஸ் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்று உத்தரவிடுகிறார்.  

நீதிபதி தமிழ்வாணன் அழைத்தார் என்றால், சென்னை உயர்நீதிமன்றத்தின் பெண் ஊழியர்கள் அவர் அறைக்கு செல்லவே அஞ்சுவார்கள்.   அதுவும் மாலை வேளை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை என்று செல்லவே மாட்டார்கள்.   தமிழ்வாணன் பொறுப்பாக இருக்கும் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் மாவட்ட நீதிபதி, தமிழ்வாணனை பார்க்க வருகிறார்.  மரியாதைக்காக, தமிழ்வாணனுக்கு ஆப்பிள் பழங்களை வாங்கி வருகிறார்.  அந்த ஆப்பிள் பழங்களை வாங்கும்போது தமிழ்வாணன், அந்த நீதிபதியின் கையைப் பிடித்து, உன் கைகளே ஆப்பிள் போல இருக்கிறதே என்று ஈஈஈஈஈ என்று இளிக்கிறார்.  அந்த பெண் நீதிபதி நெளிந்ததும், தமிழ்வாணன் பயப்படாதீர்கள்.  அமருங்கள் என்றுகூறி, அப்படியே அந்தப் பெண்ணின் முதுகை தடவிக் கொடுக்கிறார்.  அலறி அடித்தபடி அந்த பெண் நீதிபதி வெளியேறி, தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கிறார்.   தலைமை நீதிபதி புகாரை விசாரிக்கிறார் என்று தெரிந்ததும், தமிழ்வாணன், ஒரு தலித்துக்கு எதிராக ஆதிக்க சாதியினர் சதிச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்று புதிய பீதியைக் கிளப்பினார்.  பின்னாளில், அந்தப் பெண் நீதிபதி, தன் புகாரை வாபஸ் பெற்றார் என்பது வேதனையான உண்மை.   பெண் நீதிபதியை இப்படி நடத்திய தமிழ்வாணன், ஆண் நீதிபதிகளை பேசும் பேச்சு இருக்கிறதே.....   துளி கூட மரியாதை இல்லாமல், அவனே இவனே என்ற ரீதியில் பேசுவார்.   என்ன செய்வது... இவரும் தகத்தகாய தலித்தாயிற்றே....  இவரை என்ன செய்ய முடியும் ?


கோட் போட்டிருப்பவர்தான் தகத்தகாய தலித் தமிழ்வாணன்

இது தொடர்பாக மெட்றாஸ் படத்தின் இயக்குநர் ரஞ்சித்திடம் பேசினோம். உங்கள் மெட்றாஸ் படத்தின் கதை, காப்பியடித்தது என்று கூறப்படுகிறதே என்றதும், யார் சொன்னது அப்படி என்றார்.  தயாரிப்பாளரிடம் பேசினோம் என்றதும், யார் அந்த தயாரிப்பாளர் என்றார்.  பாலு மற்றும் இயக்குநர் கோபியிடம் பேசினோம் என்றதும், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, அவர்கள் நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்ளட்டும் என்றார்.  உங்கள் கருத்தாக இதை பதிவு செய்து கொள்ளலாமா என்றதும், என்ன சண்டை போடுவது போல பேசுகிறீர்கள் என்றார்.  சார்.... சண்டை கிடையாது.  அவர்கள் தரப்பில் பேசி விட்டோம். உங்கள் தரப்பு நியாயம் என்ன என்பதைக் கூறுங்கள் என்றதும், அவர்களுடையது வேறு கதை.  எங்களுடையது வேறு கதை.  அது ஃபுட்பால் பற்றிய கதை.  எங்களுடையது லைப் பற்றிய கதை என்றார். நீதிமன்றத்தில் எங்களுடைய ஒன் லைனும் அவர்களுடைய ஒன் லைனும் அளிக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார். 

சரி. நீங்கள் லீ மெரிடீயன் ஹோட்டலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னி அரசு முன்னிலையில் தயாரிப்பாளர் பாலுவோடு பேச்சுவார்த்தை நடத்தினீர்களா என்று கேட்டதும் சற்று அதிர்ச்சி அடைந்தார்.  இதை யார் உங்களுக்கு சொன்னது என்றார்.  சார்... நாங்கள் இது தொடர்பான அனைவருடனும் பேசியிருக்கிறோம் என்று சொன்னேன். சந்திப்பு குறித்து பேசுங்கள் என்று கூறியதும், தயாரிப்பாளர் பாலுதான் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் என்றும், அவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கட்டிங் எதிர்ப்பார்த்து அந்த சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்றும், தர முடியாது என்று பிடிவாதமாக மறுத்த காரணத்தால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என்றும் கூறினார். மெட்றாஸ் படத்தின் கதாநாயகன் கார்த்தி ஏன் கால்பந்து விளையாடும் வீரனாக காட்டப்படுகிறார், ஒரு சண்டைக்காட்சியில் கூட கால்பந்து விளையாடுவதைப் போலவே சண்டையிடுகிறார், கால்பந்து மைதானத்திலேயே பல காட்சிகள் அமைக்கப்பட்டது ஏன் என்பது போன்ற விபரங்களை ரஞ்சித் கூறவில்லை. 

இறுதியாக, சம்பந்தமே இல்லாமல் நீங்கள் இந்த விஷயத்தை எதற்காக நோண்டுகிறீர்கள்.   இதைப் பற்றி எழுதி உங்களுக்கு என்ன ஆகப்போகிறது என்றார்.  சார் அவர் உங்கள் மீது ஒரு புகார் தெரிவிக்கிறார்.  நீங்கள் அதை மறுக்கிறீர்கள்.  இதை பதிவு செய்ய வேண்டியது எங்கள் கடமை என்றதும், எழுதிட்டுப் போங்க என்று இணைப்பை துண்டித்தார். 

இப்படத்தின் இயக்குநர் கோபியை தொடர்பு கொள்ள முனைந்தபோது, அவர் கத்தி படத்தின் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சங்கரசுப்புவோடு விவாதத்தில் உள்ளதாக தெரிவித்தார்.  அதன் பிறகு பல முறை தொடர்பு கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பியும், அவர் இணைப்புக்கு வரவில்லை. கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இணைப்பு.  இந்த வழக்கு தொடர்பாக, டீல் முடிந்து விட்டதாகவும், ஒரு கணிசமான தொகை கைமாறியதை அடுத்து, வழக்கு வாபஸ் பெறப்படும் என்றும் தெரிகிறது.  சங்கரசுப்பு  வழக்கறிஞராக இருந்தால், அது டீலில்தான் முடியும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

இந்த விவகாரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வன்னி அரசின் தலையீடு மற்றும் மெட்றாஸ் படத்தை தூக்கிப் பிடித்து, அதை உலக காவிய ரேஞ்சுக்கு விளம்பரப்படுத்தும் கவின்மலர் மற்றும் நீதிபதி தமிழ்வாணன் ஆகியோரின் செயல்பாடுகள். 

தலித் போராளி என்றும், தலித்துக்களுக்காக உயிரையே கொடுப்பேன் என்றும் கூறிக்கொண்டு, சொகுசுக் காரில் பவனி வரும் வன்னி அரசு, ஞானவேல்ராஜா என்ற கவுண்டரிடம் பணம் வாங்கிக் கொண்டு, தயாரிப்பாளர் பாலு மற்றும், இயக்குநர் கோபி ஆகிய தலித்துக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.  ஒரு தலித் வளரட்டும் என்று ரஞ்சித்துக்கு ஆதரவாக செயல்பட்டால், மூன்று கோடியை செலவு செய்து விட்டு தெருவில் நிற்கும் பாலுவும் தலித்தானே... ?  இந்த தலித் தயாரிப்பாளரின் நலனை விட, கொழுத்த பணம் படைத்த ஞானவேல் ராஜா கவுண்டரின் நலன்தானே வன்னி அரசுக்கு பெரிதாகத் தெரிகிறது ?

தன்னுடைய பிரபலத்தை பயன்படுத்தி, மற்றவர் உழைப்பை சுரண்டி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை உலக காவியம் எனும் அளவுக்கு புகழ்ந்து, அந்த திரைப்படத்துக்கு ஆதரவாக தான் பணியாற்றும் இந்தியா டுடே பத்திரிக்கையில் திரை விமர்சனம் எழுதி, அந்தப் படத்தின் இயக்குநர் ரஞ்சத்துக்கு பாராட்டு விழாவும் எடுக்கும் கவின் மலர் போன்றவர்களே, தலித்துகளின் நலனுக்கு விரோதமானவர்கள்.   இதே கவின்மலர்தான், காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள், ஒரு பெண்ணை குழுவாக வன்புணர்ச்சி செய்தபோது, இந்தியா டுடேவில் எழுதிய கட்டுரையில், விடுதலைச் சிறுத்தை பிரமுகர்களை கடுமையாக கண்டிக்காமல், மயிலிறகால் வருடிக் கொடுத்தார். 

திருமாவளவன் மீது, கவிதா என்ற பெண், காதலித்து ஏமாற்றி விட்டார் என்று புகார் தெரிவித்தபோது, இதே கவின்மலர் ஏற்பாட்டில்தான், வன்னி அரசு அந்தப் பெண்ணோடு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.   

நீதிபதி தமிழ்வாணன் இந்த விவகாரத்தில் பணம் வாங்கிக் கொண்டுதான் தீர்ப்பளித்தார் என்று குற்றம் சுமத்த நம்மிடம் ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால், ஒரு திரைப்படத்தின் கதை காப்பியடித்தது என்று புகார் எழுகையில், நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யச் சொல்லாமல், கல்லாவில் எவ்வளவு சேர்ந்தது என்பதை, நான்கு வாரங்கள் கழித்து தெரிவியுங்கள் என்பது எந்த வகையான தீர்ப்பு என்பது தமிழ்வாணனுக்கே வெளிச்சம். 

தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் தலித்துகள் இன்னும் பல்வேறு ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதிகளை விட, தலித்துகளின் பெயரைச் சொல்லி, அவர்களை சுரண்டி வாழும், இந்தப் புல்லுருவிகளே, தலித்துகளுக்கு மிகப்பெரிய எதிரிகள். 

கருப்பர் நகரம் படத்தின் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் தரப்படுகின்றன.   இதையும், மெட்றாஸ் படத்தையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். 




























கருப்பர் நகரம் இயக்குநர் நட்ராஜ் கோபி





கருப்பர் நகரம் படத்தின் சுவர் காட்சி




















கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...