மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே.
சுப்ரமணியன் சுவாமிக்கும்ஜெயலலிதாவுக்கும் மோதல்ஏன் ஏற்பட்டது என்பதுபலருக்கு புரியாதபுதிராக இருக்கிறது. சாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும், மதம் சார்ந்தநம்பிக்கைகள் அடிப்படையிலும், இருவரும்ஒத்திசைந்தகருத்துடையவர்கள்..... பிறகுஏன் மோதல்?
இதற்கு ஒருசுவையான பின்னணிஇருக்கிறது. 1989ம்ஆண்டு நடந்ததேர்தலில் ராஜீவ்தலைமையிலானகாங்கிரஸ்அரசு 195 சீட்டுகளைவெல்கிறது. ஆனால், வி.பி.சிங்தலைமையிலான ஜனதாதள் கூட்டடணி, வெறும் 140சீட்டுகள்மட்டுமே பெற்றது. ஆனால், ராஜீவ்ஏனோ, ஆட்சியில்அமருவதை தவிர்த்துஎதிர்க்கட்சியாக அமர்ந்தார்.இடது சாரிகள்மற்றும் பிஜேபியின்52 எம்.பிக்களின்ஆதரவோடு, விபிசிங் பிரதமரானார். ரதயாத்திரையைதடுத்தகாரணத்தால், பிஜேபிஆதரவை வாபஸ்பெறவும், விபி.சிங்அரசு கவிழ்ந்தது.
![]() |
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் |
வெறும் 55 எம்.பிக்களைவைத்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சியின்195 எம்.பிக்கள்ஆதரவோடு ஆட்சியமைத்தார்சந்திரசேகர். அந்த சந்திரசேகர்அரசில் வர்த்தகம்மற்றும் சட்டத்துறைஅமைச்சராக இருந்தவர்சுப்ரமணியன் சுவாமி.அப்போது, ஜெயலலிதாவின்ஒரே குறிக்கோள், தமிழகத்தில் நடக்கும்கருணாநிதி அரசைடிஸ்மிஸ் செய்யவேண்டும் என்பது. இதுபற்றிசுப்ரமணிய சுவாமியிடம் பேசுகிறார் ஜெயலலிதா. சுவாமியும் அதற்குசம்மதிக்கிறார். கருணாநிதிஅரசைநான் டிஸ்மிஸ்செய்ய வைக்கிறேன், பதிலுக்கு எனக்குஒரு எம்.பிபதவி வேண்டும்என்று கேட்கிறார். அதற்குசம்மதித்தஜெயலலிதா, எனக்குதேர்தல் செலவுக்குபணம் இல்லை. அதனால் செலவுக்குபணம் வாங்கித்தரவேண்டும்என்று மற்றொரு கோரிக்கையையும் ஜெயலலிதா வைக்கிறார். வர்த்தகத்துறை அமைச்சராகஇருந்தசுவாமிக்குஇது ஒன்றும்பெரிய விஷயம்இல்லை. அஷோக் லெய்லேன்ட்மற்றும் இன்னும்சிலநிறுவனங்களிடமிருந்து ஜெயலலிதாவின் தேர்தல் செலவுக்காக10 கோடி பெற்றுத்தருகிறார்.
ஜனவரி மூன்றாம்வாரத்தில் சென்னையில்நடந்த ஒருஉலகத் திரைப்படவிழாவை துவக்கிவைக்க வந்தஅப்போதையமத்தியஉள்துறை இணைஅமைச்சர் சுபோத்காந்த் சஹாயிடம், பத்திரிக்கையாளர்கள் திமுகஆட்சிடிஸ்மிஸ்செய்யப்படுமா? என்றுகேட்டதற்கு, அப்படிஒரு எண்ணம்மத்திய அரசிடம்இல்லை என்றார். அப்படிச்சொல்லிவிட்டுஅதற்கு அடுத்தவாரத்திலேயே, அதாவது1991, ஜனவரி 31-ம் தேதி, திமுகஅரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதுவும் அன்றைய தமிழக ஆளுனர்பர்னாலாவிடம் அறிக்கைபெறாமலேயேடிஸ்மிஸ்செய்யப்பட்டது. அதன்பிறகுஜூன் 15-ம்தேதி தேர்தல்அறிவிக்கப்பட்டது. இடையில்தமிழகத்தில்கவர்னர்ஆட்சி. அ.தி.மு.க.வும்காங்கிரஸும் கூட்டணிஅமைத்தன. ஆனால், தேர்தலுக்கு முன்னதாக, மே 21அன்றுராஜீவ் இறந்துபோகிறார். சுவாமி, தான்அளித்த வாக்கைகாப்பாற்றினார். ஆனால், ஜெயலலிதாசுவாமிக்குவாக்களித்தபடி, எம்.பிசீட் தரவில்லை. தேர்தல் முடிந்து, ஜெயலலிதாவை சந்தித்தசுவாமி, எம்.பிசீட்தான்தரவில்லை. தான் அளித்தபணத்தை திருப்பித்தரும்படி கேட்கிறார். எனக்கு பணம்கொடுத்தது அஷோக்லெய்லேன்ட்உள்ளிட்டநிறுவனங்கள், அவர்கள்கேட்டால் நான்தருகிறேன். உங்களிடம் தரமுடியாது என்றுகூறி அவமானப்படுத்திஅனுப்பி விடுகிறார். பணத்தையும் பறிகொடுத்து, எம்.பிசீட்டும் கிடைக்காதஆத்திரத்தில் இருந்தசுவாமி, ஓடுமீன்ஓடஉறுமீனுக்காக காத்திருக்கிறார். 1992,மே19 அன்று சந்திரலேகாவின் மீது ஆசிட்ஊற்றப்படுகிறது.
சந்திரலேகாவோடு சுவாமிபேச்சுவார்த்தை நடத்துகிறார். சந்திரலேகாவை இஸ்ரேல்அழைத்துச்சென்று,நவீனப்ளாஸ்டிக் சர்ஜரிமூலம், அவரின்ஆசிட் காயங்களைசரி செய்யசுவாமி உதவுகிறார்.
9 நவம்பர் 1992-ம்ஆண்டு, தற்போதுஅப்போல்லோ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள சிந்தூரிஹோட்டலில்சந்திரலேகாவைபத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி, இந்ததாக்குதலுக்கு முழுக்காரணமும்ஜெயலலிதாதான்என்று வெளிப்படையாகஅறிவிக்கிறார். அதிர்ந்து போகிறதுதமிழகம். அதுவரை,அதிகாரிகள்மட்டத்தில் இந்தவிபரங்கள் அரசல்புரசலாக பேசப்பட்டுக்கொண்டிருந்தாலும், வெளிப்படையாகசுவாமிஇப்படிஅறிவித்தபோது, ஊடகங்களில்அது பெரியசெய்தியாக வெளியிடப்பட்டது.
அடுத்ததாக, 1993-ம்ஆண்டு, ஜெயலலிதாமீது புதியஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார் சுவாமி. ஜெயலலிதாவும்சசிகலாவும், ஜெயா பப்ளிகேஷன்நிறுவனத்தில் பங்குதாரர்கள் மற்றும் உரிமையாளர்கள். அப்படிஇருக்கையில்அரசு நிறுவனமான, தமிழ்நாடு பாடநூல்நிறுவனத்துக்கு ஜெயாபப்ளிகேஷன்ஸ் எப்படிபாடநூல்அச்சிட்டுத்தர முடியும், இது லஞ்சஒழிப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் என்றுபுகாரை தெரிவிக்கிறார்.
ஜெயலலிதாவை இதுமேலும் மேலும்எரிச்சலாக்குகிறது. அப்போது உளவுத்துறைதலைவராகஇருந்தஅலெக்சாண்டரிடம் ஆலோசனைகேட்கிறார். அலெக்சாண்டர், இந்த ஆள்உயிரோடு இருக்கும்வரைபிரச்சினைதான். இந்த ஆள்கதையை முடித்துவிடுவோம். என்றுஆலோசனை கூறுகிறார். அதற்கானதிட்டத்தையும் கூறுகிறார். சுப்ரமணிய சுவாமியைஏதாவது ஒருவழக்கில் கைதுசெய்து, சென்னைசென்ட்ரல்சிறையில்அடைத்து விடுவோம். அதன்பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, அவரைஅப்படியேஎதிரில்உள்ள அரசுபொது மருத்துவமனைக்கு மாற்றி விடலாம். அங்கே டாக்டர்கள்இவர் கதையைமுடித்துவிடுவார்கள்என்று ஆலோசனைகூறுகிறார்.
![]() |
சமீபத்தில் அதிமுக அடிமைகள் சங்கத்தில் சேர்ந்த முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் |
இந்த ஆலோசனையின்பின்னணியில்தான், சுவாமிமீது "இன்டர்நேஷனல்பறைய்யா" என்றுவிடுதலைப்புலிகள்தலைவர் பிரபாகரனைஒரு கூட்டத்தில்பேசியதற்காக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில்சுவாமியை கைதுசெய்ய பகீரதப்பிரயத்தனம் எடுக்கப்பட்டது குறித்து விரிவாகபழையகட்டுரையில்பார்த்தீர்கள். இறுதியாக விமானநிலையத்தில் நுழைந்துசுவாமியை கைதுசெய்ய வேண்டும்என்றுமுயற்சிநடந்தபோது, அதைத்தடுத்தது அன்றையடிஜிபி ஸ்ரீபால்தான். நான் சொன்னேன்என்றுமுதல்வரிடம்சொல்லுங்கள். சுவாமி கைதுசெய்யப்படக்கூடாது என்றுஉத்தரவிடுகிறார். இறுதியாக சுவாமிதப்பிச்சென்றதும், ஸ்ரீபால் மாற்றப்பட்டு, அவர் இடத்துக்குவைகுந்த் டிஜிபியாகநியமிக்கப்படுகிறார்.
![]() |
முன்னாள் டிஜிபி வைகுந்த் |
வைகுந்தை அழைத்தஜெயலலிதா, அலெக்சாண்டரின் திட்டத்தைச் சொல்லி, சுவாமியை எப்படியாவதுகைதுசெய்யவேண்டும்என்று கூறுகிறார். இதைக் கேட்டுவெலவெலத்துப் போய், ஜெயலலிதாவை தலைக்குமேலேகையெடுத்துகும்பிட்ட வைகுந்த், ஏற்கனவே தமிழகத்தில்நடந்த சந்திரலோகாஆசிட் வீச்சு, வழக்கறிஞர்சண்முகசுந்தரம் மீதான தாக்குதல், விஜயன் மீதானதாக்குதல் ஆகியவற்றில் உங்கள் பெயர்தான் அடிபடுகிறது.மூன்று வழக்குகளுமேசி.பி.ஐ விசாரணையில்உள்ளது. அந்த விசாரணைஎந்த திசைக்குசெல்லும்என்பதுதெரியாது. இந்த மூவரும்சாதாரண நபர்கள். ஆனால் சுப்ரமணியன்சுவாமி இந்தியாவில் இருந்து உலகம்முழுக்கதொடர்புகள் உள்ளபிரபலமான நபர். அவருக்கு ஏதாவதுஒன்று நேர்ந்தால், நான் மட்டுமல்ல, நீங்களும்சிறைசெல்ல நேரிடும். என்னால் இந்தகாரியத்தை செய்யமுடியாது. எனக்குஇந்த டிஜிபிபதவியே வேண்டாம்என்றுகூறுகிறார்.
அதற்குப் பிறகுதான்ஜெயலலிதாவுக்கு அலெக்சாண்டர்மீது லேசாகசந்தேகம் ஏற்படுகிறது. இதையடுத்துஉளவுத்துறைதலைவராக இருந்தஅலெக்சாண்டரின் தொலைபேசியைஒட்டுக் கேட்கஉத்தரவிடுகிறார்.
அந்த உரையாடல்கள்ஜெயலலிதாவிடம் போட்டுக்காண்பிக்கப்பட்டபோது அதிர்ந்துபோகிறார் ஜெயலலிதா. அந்தஅத்தனைஉரையாடல்களும், சரசசல்லாபம் தொடர்பானஉரையாடல்கள். நம்மை வகையாகமாட்டிவிடதிட்டம்போட்டு விட்டு, இந்த நபர்தொலைபேசியில் சல்லாபத்தில்ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாரே என்றுகடும்கோபமடைந்தஜெயலலிதா, உடனடியாகஅலெக்சாண்டரை மாற்றஉத்தரவிடுகிறார். யாரோஒரு அதிகாரிசொன்னான்என்பதைக்கேட்டு, தன்னைஎதிர்த்தவர்களை கொலைசெய்யும் அளவுக்குப்போனவர் ஜெயலலிதா. அதற்குஅவர்எப்போதும் தயங்கியதேஇல்லை.
1991-1996 காலகட்டத்தில் கொலை-கொள்ளை என்ற பழிபாவங்களுக்கு அஞ்சாத ஜெயலலிதா, 96க்குப்பின்,மாற்றம்அடைந்தார் என்றுநம்பித்தான் 2001ல்மக்கள் வாக்களித்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரியஏமாற்றம்காத்திருந்தது.
இதன் நடுவே, 1999-ல் ஒருசம்பவம் நடந்தது. 14 மார்ச் 1999-ல்ஜெயலலிதாவின் கணக்குவழக்குகளை பார்த்துவந்தஆடிட்டரானராஜசேகரை ஜெயலலிதாமற்றும் சசிகலாஆகியோர் செருப்பாலும்கட்டையாலும் தாக்கினர். இணைப்பு. சசிகலாவின் உறவினரானமகாதேவன் ஒருகட்டையை எடுத்துத்தாக்கினார். இதில் கடுமையானகாயமடைந்தராஜசேகர்காவல்துறையில் புகார்அளிக்கிறார்.
ஜெயலலிதா, சசிகலாமற்றும் மகாதேவன்மீது கொலைமுயற்சி வழக்குபதிவு செய்யப்படுகிறது. இந்தவழக்குசிபி.சிஐடிவிசாரணைக்கு மாற்றப்படுகிறது. இது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகிவிடக்கூடாதேஎன்பதற்காக, மறுநாள் சட்டப்பேரவையில் ஒரு பெரியநாடகத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா. சட்டப்பேரவையின் பட்ஜெட்கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, காரணமேஇல்லாமல், தாமரைக்கனிஎம்எல்ஏ,அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகத்தின்முகத்திலேயே குத்தினார். இணைப்பு. சிபி.சிஐடியில்அந்த வழக்கைஅப்போதுவிசாரித்தவர், முத்துக்கருப்பன். அவர் எப்படிசிறப்பாக விசாரணைநடத்தினாரோ, அதற்குக்கிடைத்த பரிசுதான்,ஐஜியாக இருந்தவரை, சென்னை மாநகரஆணையராக்கியது.
1991 ஜெயலலிதா ஆட்சியைக்கூட நான்மன்னிப்பேன், ஆனால்2001 ஜெயலலிதா ஆட்சியைநான்மன்னிக்கவேமாட்டேன் என்றார்ஒரு மூத்தபத்திரிக்கையாளர். திட்டமிட்டு, ஜனநாயகத்தின்ஒவ்வொருஅமைப்புகளையும் சிதைத்தார் ஜெயலலிதா.
2000 பிப்ரவரியில் கொடநாடுஹோட்டல் வழக்கில்ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். அக்டோபர் 2000த்தில்டான்சிவழக்கில்தண்டிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்புகளைஎதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்தார்ஜெயலலிதா. அந்த மேல்முறையீட்டை விசாரித்தமலை சுப்ரமணியம்என்ற நீதிபதி, குழப்பமான ஒருதீர்ப்பைஅளித்தார். ஆனாலும், என்னால்தண்டனையை நிறுத்திவைக்க இயலாதுஎன்றார்.
இரண்டு தொகுதிகளுக்கு மேல் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்ற விதிஇருந்தும், வேண்டுமென்றேநான்குதொகுதிகளில்மனுத்தாக்கல் செய்தார். ஏனென்றால் ஊழல்வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின்வேட்புமனுநிராகரிக்கப்பட்டது என்றுயாரும் நினைத்துவிடக்கூடாதாம். இப்படிஅற்பத்தனமாகநான்குவேட்புமனுக்களை தாக்கல்செய்து, நான்குவேட்பு மனுக்களும், நிராகரிக்கப்பட்டன. இதற்காக தனியாகஒருவழக்கைசந்தித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
பாட்டாளி மக்கள்கட்சி, இரண்டுகம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் மற்றும்தமிழ்மாநிலகாங்கிரஸ் என்றுஒரு பெரியகூட்டணியை அமைத்தார்ஜெயலலிதா.இந்தக்கூட்டணி நிறைவேறவேண்டும் என்பதற்காகமூப்பனாரின் வீட்டுக்கேசென்றுபேசினார்ஜெயலலிதா. 1996ம் ஆண்டுதேர்தலில், ஊழல்எதிர்ப்பு என்றகாரணத்தின்அடிப்படையில், தமிழ் மாநிலகாங்கிரஸை தோற்றுவித்தமூப்பனார்,ஜெயலலிதாவோடுகூட்டணி சேர்ந்ததற்கு, "கடந்த தேர்தலில்ஜெயலலிதாவைஏற்கனவேமக்கள் தண்டித்துவிட்டார்கள்" என்றகாரணத்தைச் சொன்னார்.
தேர்தலில் அதிமுககூட்டணி அமோகவெற்றி பெற்றது. அந்த தேர்தல்முடிவுகள்,விஜய்டிவியில் அலசப்பட்டுக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் விஜய்டிவியில்செய்திகள்வரும். அந்த விவாதத்தில்மூத்த பத்திரிக்கையாளர்டி.என்.கோபாலனிடம்ஜெயலலிதா மாறியிருக்கிறாரா என்று கேட்கப்பட்டது. ஜெயலலிதா தன்கட்சியைநடத்திவருவதைப் பார்க்கையில், அவர் சற்றும்திருந்தியதாகத் தெரியவில்லைஎன்றார். ஒரே வாரத்தில், அந்தடிஎன்.கோபாலன்மற்ற பத்திரிக்கையாளர்களோடு சென்னைதலைமைச்செயலகத்தின் முன்புமறியலில்ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
![]() |
பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன் |
14 மே 2001 அன்றுகாலை 11 மணிக்குஜெயலலிதா ஆளுனர்பாத்திமா பீவியைசந்தித்தார். ஆளுனர்மாளிகையிலிருந்து ஜெயலலிதா வாகனம்வெளியேறுவதற்கு முன்பாகவே, கவர்னரின் பிஆர்ஓ, 12 மணிக்குபதவிப்பிரமாணம் என்றுகூறினார். ஊழல் வழக்கில்தண்டிக்கப்பட்ட ஒருகுற்றவாளி, எம்.எல்.ஏவாகஇல்லாதவர்,இவருக்குபதவிப்பிரமாணம் செய்துவைக்கலாமா என்றுசட்ட அறிஞர்களைகலந்தாலோசிக்கிறேன் என்றுஒருசம்பிரதாயத்துக்குக் கூட பாத்திமாபீவி அறிவிக்கவில்லை. சில நிமிடங்களில்பதவிப்பிரமாணம்என்றுமுடிவெடுத்தார்.
பின்னாளில் காங்கிரஸைசேர்ந்த ஒருமூத்த அரசியல்வாதிசொன்னது என்னவென்றால், நவம்பர் 2000ம்ஆண்டிலேயேபாத்திமாபீவியோடு ஜெயலலிதாதொடர்பு ஏற்படுத்திவிட்டார் என்பதே. பாத்திமா பீவியின்பினாமி ஒருவருக்காக,கொடநாட்டில் ஒருஎஸ்டேட் வாங்கித்தரப்பட்டது என்றும், அதையொட்டியே, ஜெயலலிதாவின்அடிவருடியாகபாத்திமாபீவி செயல்பட்டார்என்றும் கூறினார்அவர்.
![]() |
இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் தமிழக ஆளுனருமான பாத்திமா பீவி |
ஆட்சிக்கு வந்தநாள் முதலாகவேதன் அராஜகத்தைதொடங்கினார் ஜெயலலிதா. இரண்டு ஊழல்வழக்குகளில்தண்டிக்கப்பட்டு, ஜெயலலிதாவின் அரசியல்முடிந்து விட்டதுஎன்று எல்லோரும்நினைத்துக்கொண்டிருந்தவேளையில், அபரிமிதமான மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியைப்பிடித்தால், ஏற்கனவேஆணவம்பிடித்தஜெயலலிதாவுக்கு ஏற்படும்அகந்தையை சொல்லவும்வேண்டுமோ.....
சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கருணாநிதி, அரசுகஜானாவை காலிசெய்து விட்டார்என்றார்.கஜானாதுடைத்து வைத்ததுபோல இருக்கிறதுஎன்றார். கருணாநிதி நான்கஜானாவை காலிசெய்யவில்லை,அத்தனையும்அரிசியாக அரசுகிடங்குகளில் இருக்கிறதுஎன்றார். விடுவாரா ஜெயலலிதா? அத்தனைஅரிசியும்புழுத்துப்போன அரிசிஎன்றார். உடனே அதிமுகஅடிமை அமைச்சர்கள், புழு நெளியும்அரிசியை எடுத்துவந்துசட்டப்பேரவையில் காண்பித்தனர்.
![]() |
தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்டு தடியடி படும் பத்திரிக்கையாளர்கள் |
திமுக முன்னாள்அமைச்சர் பொன்முடி,நேராக அரசுஉணவுக் கிடங்குக்குள் சென்றார். சன் டிவிசெய்தியாளர் சுரேஷ்மற்றும்,கேமராமேனோடுகிடங்குக்குள் சென்று,அரிசியை சேம்பிள்எடுத்து,தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையாளர்கள்முன்னிலையிலும் காண்பித்தார். வந்ததேகோபம்ஜெயலலிதாவுக்கு. அரசுஅலுவலகத்தில்அத்து மீறிநுழைந்ததாக,பொன்முடிமீதும், சன்டிவி செய்தியாளர்சுரேஷ்மீதும்வழக்கு. இருவரும்கைதுசெய்யப்பட்டனர்.
இதை எதிர்த்துபத்திரிக்கையாளர்கள் அனைவரும்தலைமைச் செயலகம்முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆனால் ஜெயலலிதாஅசரவில்லை. தனது தாக்குதல்களைதொடர்ந்து கொண்டேஇருந்தார்.
அரசு கிடங்குகளில்இருந்த அத்தனைஅரிசியும் புழுத்தஅரிசி என்றுநிரூபிக்க வேண்டுமல்லவா... ? தமிழகம்முழுக்கலஞ்ச ஒழிப்பத்துறை அதிகாரிகள்அத்தனை அரசுகிடங்குகளிலும் சோதனை நடத்தஉத்தரவிடப்பட்டனர். ஒரு வாரமாக, இரவு பகலாகசோதனைகள் நடந்தது. கிடங்குகளில் இருக்கும்அத்தனை அரிசியும்புழுத்தஅரிசிஎன்று நிரூபிக்கவேண்டும். கிடங்குகளில் இடமின்மைகாரணமாக, சிலஇடங்களில் ஈரத்தின்காரணமாகசிலமூட்டைகளில் அரிசிசேதமடைந்திருந்தது. எடை குறைவு, சில அரிசிமூட்டைகள் ஈரப்பதத்தோடுஇருந்தது என்று,அறிக்கை அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும்இருந்து வரப்பெற்றஅறிக்கைகள் தொகுக்கப்பட்டு, அரசுக்குஅனுப்பப்பட்டன. இந்த அறிக்கைகளைஅனுப்புவதற்காக, லஞ்சஒழிப்புத்துறை ஊழியர்களும், அதிகாரிகளும்,இரவுமுழுவதும் பணியாற்றினர். அந்த அறிக்கையின்அடிப்படையில் மாவட்டந்தோறும்25 விரிவானவிசாரணை(Detailed Enquiry) பதிவு செய்யஉத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன்படி, விசாரணைமேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில், அரசுக்கு எவ்விதமானநஷ்டமும் இல்லைஎன்ற அறிக்கைஅளிக்கப்பட்டது.
ஜெயலலிதா பதவியேற்றதும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகநியமிக்கப்பட்டவர் பி.பி.நெயில்வால். இவர்நியமிக்கப்பட்டு ஒரு சிலவாரங்களில் மாற்றப்பட்டுடிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவரை அடுத்து, லஞ்சஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் வி.கே.ராஜகோபாலன்.
புதிய இயக்குநர்பொறுப்பேற்றதும், பழையவழக்குகள் அத்தனையையும்ஆய்வு செய்தார். பல வழக்குகள்,விசாரணை முடிந்துஇறுதி அறிக்கைஒப்புதலுக்காக இருந்தன. அவற்றில் ஜெயலலிதாமீதானவழக்குகளும்அடக்கம். புலனாய்வு அதிகாரி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபோதுமானஆதாரங்கள்இருக்கிறது என்றுஅறிக்கை அளித்திருக்கிறார். ஒரு நேர்மையானஐபிஎஸ் அதிகாரிஎன்னசெய்யவேண்டும்? ஒப்புதல்தானே அளிக்கவே0ண்டும்? அதைத்தான் செய்தார்வி.கே.ராஜகோபாலன். வந்ததேகோபம்ஜெயலலிதாவுக்கு. உடனடியாகவி.கே.ராஜகோபாலனைபோயஸ் தோட்டத்துக்கு அழைத்தார். போயஸ்தோட்டம்சென்ற ராஜகோபாலன், உள்ளே அழைக்கப்படவில்லை. வெளியிலேயே காரில்அமர்ந்தபடி இருந்தார். அவர் காரில்காத்திருப்பதை, சிசிடிவியில்பார்த்த ஜெயலலிதா, ஏன் அவருகாரை விட்டுஇறங்க மாட்டாரா? காரைவிட்டுஇறங்கி நிற்கச்சொல்லுங்கள் என்றார். வேறு வழியின்றி, காரை விட்டுஇறங்கி, காரில்கை வைத்தபடிஇரண்டுமணிநேரம் காத்திருந்தார் ராஜகோபாலன். அதன்பிறகு உள்ளேஅழைக்கப்பட்டாரா, அல்லதுதிருப்பி அனுப்பப்பட்டாராஎன்பது நினைவில்லை. வந்த வேகத்தில்விருப்ப ஓய்வுஎழுதிக் கொடுத்தார்.
வழக்கமாக லஞ்சஒழிப்புத் துறையில்ஒரு உயர்அதிகாரியை நியமிப்பதென்றால், அவர் ஏற்கனவேலஞ்சஒழிப்புத்துறை விசாரணையில்இருக்கிறாரா.... அவர்மீது வேறுபுகார்கள் உள்ளனவாஎன்பதையெல்லாம் பார்த்தபிறகேநியமிப்பார்கள். இது 1964ம்ஆண்டு முதல்கடைபிடிக்கப்பட்டு வரும்மரபு.
![]() |
திலகவதி ஐபிஎஸ் |
ஆனால் ஜெயலலிதா, திலகவதியை இயக்குநராகநியமித்தார். திலகவதி மீது1988ம் ஆண்டுமற்றும் 1994ல்இரண்டுவிசாரணைகள்லஞ்ச ஒழிப்புத்துறையில் நடைபெற்றன. நியமித்ததோடு அல்லாமல், தமிழகத்தில் உள்ளஅனைத்துமகளிர்காவல்நிலையங்கள் அனைத்துக்கும் திலகவதிதான் பொறுப்புஎன்று கூடுதல்பொறுப்பையும் வழங்கினார். அனைத்து காவல் நிலையங்களும், திலகவதியின் கதைத் தொகுப்பான "திலகவதி கதைகள்" என்ற இரண்டு தொகுதி நூல்களையும் ஐந்து செட்டுகள் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் திலகவதி. அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள், வேறு வழியின்றி, அந்த கருமத்தை வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அதன் பின்புதிலகவதி, லஞ்சஒழிப்புத் துறையிலேயேஊழலில் ஈடுபட்டு, அவர் மீதுரகசியவிசாரணைநடத்தப்பட்டு, அவரதுடிஜிபி பதவிஉயர்வு தாமதப்படுத்தப்பட்டு, அவரை இறுதியாகஜாபர்சேட்காப்பாற்றினார்.
இப்படி ஜனநாயகத்தின்ஒவ்வொரு தூணையும், சிதிலமடையச் செய்தார்ஜெயலலிதா. இப்போதுநாம் பார்த்ததுஒருதுளிதான். மீதமுள்ள விவகாரங்களைஅடுத்த பகுதியில்பார்ப்போம்
கருத்துகள்
கருத்துரையிடுக