முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயோக்கிய அரசு.

முட்டாள் அரசாக இருந்து வந்த ஜெயலலிதா அரசை, இந்த மழை வெள்ளம் அயோக்கிய அரசாக மாற்றியிருக்கிறது.    அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.    லும்பன்களைத் தவிர வேறு யாருக்கும் அக்கட்சியில் இடம் கிடையாது.    லும்பன்களால்தான், ஊழல் வழக்கில் சிறைசென்ற தலைவிக்காக காவடி தூக்கவும், நீதித்துறையை திட்டி போஸ்டர் ஒட்டவும் முடியும்.

2176838929_30c714cf74_b
வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு அபாயகரமான மழையும் வெள்ளமும், தமிழகத்தைத் தாக்கியபோது, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததோடு நிவாரணப் பணிகளையும் சரிவர கையாளவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது.
டிசம்பர் 1 அன்று பெய்யும் கனமழையை எதிர்ப்பார்த்து, ஏற்கனவே கொள்ளளவு நிரம்பும் அளவுக்கு இருந்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட ஏன் தாமதம் என்றும், டிசம்பர் 1 அன்று இரவு 10 மணிக்கு ஏன் 29 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது என்ற கேள்வியே இப்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.  நவம்பர் 26 மற்றும் 29 அன்று மழை குறைவாக இருந்த அன்று ஏன் தண்ணீரைத் திறந்து விட்டு, ஏரியின் கொள்ளளவை குறைக்கவில்லை.  டிசம்பர் 1 அன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், டிசம்பர் 1 இரவு 10 மணி வரை தாமதம் ஆனது ஏன்.   மேலும் பொதுப்பணித் துறை செயலர், ஏரியை திறந்து விடலாம் என்று நவம்பர் 27ம் தேதியே தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியும் டிசம்பர் 1 வரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதுமே பிரதான குற்றச்சாட்டுகள்.
இது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடந்து வரும் நிலையில்,  நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
“இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மிக அதிக பலத்த மழை பெய்யும் என்றுதான் வானிலை அறிவிப்பு வெளியிட்டதே தவிர 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என அறிவிக்கவில்லை. நாசா அமைப்பு, 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. மழைப் பொழிவைக் கணிக்கும் வேலையை தாங்கள் மேற்கொள்வதில்லை என நாசா அமைப்பே இதுகுறித்து தெளிவுப்படுத்தியுள்ளது.
மிக பலத்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு டிசம்பர் 1-ஆம் தேதி நண்பகல் முதல் மிக அதிகமான நீர்வரத்து இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் உதவி ஆணையர்தான் கட்டுப்பாட்டு அதிகாரி ஆவார். பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல நீராதார நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
பொறியாளர்கள் ஏரிக்கான நீர்வரத்தையும், மழைப்பொழிவையும் தொடர்ந்து கண்காணித்து, செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பைக் கருதி நீரைத் திறந்துவிட்டனர். டிசம்பர் 1-ஆம் தேதி வரை, உபரி நீரைத் திறந்து விடுவதற்காக பொதுப்பணித் துறையின் செயலர் உத்தரவோ, தலைமைச் செயலாளரின் உத்தரவோ தேவைப்படவில்லை, கோரப்படவும் இல்லை.
களத்தில் இருந்த பொறியாளர்களே நிலைமைக்கு ஏற்ப திறந்துவிடப்படும் நீரைத் தொடர்ந்து அதிகரித்து வந்தனர். இதற்கு நீரைத் திறந்துவிட்டது தொடர்பான புள்ளிவிவரங்கள் ஆதாரங்களாக உள்ளன.
செம்பரம்பாக்கம் மட்டுமின்றி, பூண்டி, செங்குன்றம், சோழவரம் ஏரிகளிலும் நீரைத் திறந்துவிடுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே முடிவுகளை எடுத்தனர்.
நீரைத் திறந்துவிடுவதற்காக பொறியாளர்கள் பொதுப்பணித் துறைச் செயலாளரிடமிருந்தும், தலைமைச் செயலாளரிடமிருந்தும் உத்தரவை எதிர்பார்த்து இருந்ததாகவும், அவர்கள் முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் கூறப்படுவது உண்மையல்ல. இவை எந்தவொரு அடிப்படையும் இல்லாத அவதூறு பரப்பும் வதந்திகள் மட்டுமே.
100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக மழையின் காரணமாகவே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மிக அரிய இயற்கைப் பேரிடர்தானே தவிர, ஏரியில் நீர் திறந்துவிடுவதில் ஏற்பட்ட நிர்வாகக் கோளாறல்ல. அடையாற்றின் முகப்பில் தூர்வாரியுள்ளதால்தான் மிக அதிகளவு நீர் அடையாற்றில் வெளியேறியது. இல்லையென்றால், மேலும் மிகப்பெரிய அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.”
50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று எந்த அமைப்பும் முன்னெச்செரிக்கை தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் ஞானதேசிகன்.    50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று டிசம்பர் 1 அன்று காலை 8.25 மணிக்கு, பிபிசி வானிலை நிலையம் கணித்து கூறியிருந்ததின் இணைப்பு.  ஆனால் எந்த அமைப்பும் அறிவிப்பு வெளியிடவில்லை என்று கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை வெளியிட்டிருக்கிறார் ஞானதேசிகன்.
செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடுவதில் உள்ள குளறுபடிகள் கடந்த வாரம் முதலாகவே தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், ஒரு வாரம் கழித்து சாவகாசமாக இப்படியொரு பத்திரிக்கை செய்தியை ஞானதேசிகன் வெளியிட்டுள்ளதின் பின்னணியில், இந்த செய்திகள் அரசு மீது ஏற்படுத்தியுள்ள கோபமே காரணம்.
சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் எல்லா அரசுகளிலும் உண்டு.  ஆனால், இந்த அதிகாரம் முழுமையாக பறிக்கப்பட்டது அதிமுக அரசில்தான்.  எது செய்தால் தவறாகும் ?  எது சரியாகும் என்று எதற்கெடுத்தாலும் பயத்தை ஏற்படுத்தும் போக்கு தமிழக அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.    ஏதாவதொரு தவறான நடவடிக்கை எடுத்து அதனால் தங்கள் பதவி பறிக்கப்பட்டு விடுமோ என்ற கடுமையான அச்சத்திலேயே அனைத்து அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.   அதிகாரம் பரவலாக்கப்படாமல், அனைத்தும் முதல்வரின் உத்தரவுப்படியே நடப்பதாக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கவே இத்தகைய அதிகாரப் பறிப்புகள்.
K__Gnanadesikan_2230438e-horz
முதல்வரின் குரலாக, தமிழக அரசில் செயல்பட்டு வரும் இரு மங்குணிகளான ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ஞானதேசிகன் ஆகியோர் அனைத்து அதிகாரிங்களையும் தங்களிடையே குவித்து வைத்து, ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறார்கள்.      இவர்கள் இருவரையும் தவிர, வேறு எந்த அதிகாரியும் முதல்வரை அவ்வளவு எளிதில் சந்தித்து விட முடியாது.     அப்படியே மற்ற அதிகாரிகளோடு சந்திப்பு நடந்தாலும், அது காணொலி காட்சியின் போது ஓரிரு நிமிடங்களே.     அந்த ஓரிரு நிமிடங்களிலும் ஜெயலலிதாவிடம் எந்த கருத்தையும் கூறி விட முடியாது.    இப்படிப்பட்ட ஒரு இறுக்கமான சூழல் நிலவுகையில் எந்த அதிகாரி சுதந்திரமாக முடிவெடுப்பார்.
“மாண்புமிக தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க” என்றுதானே தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.  மேட்டூர் அணையில் பாசனத்துக்காக நீர் திறந்து விடப்படுவதும் இந்த அம்மாவின் ஆணையால்தானே செயல்படுத்தப்படுகிறது.  அப்படி இருக்கையில், செம்பரம்பாக்கம் ஏரியை மட்டும் எப்படி ஒரு பொதுப்பணித் துறை செயலர் திறந்து விட உத்தரவிடுவார் ?
தமிழக அரசு ஏறக்குறைய ஒரு மன்னர் ஆட்சிபோலவே செயல்பட்டு வருகிறது என்பது வெளிப்படை.    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் கூட, ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டியே வழங்கப்படுகிறது.  குடிநீர் பாட்டில்கள் முதல், பேருந்துகள் வரை, அனைத்தும் ஸ்டிக்கர் ஒட்டாமல் விநியோகிக்கப்படுவதில்லை.     மக்களின் வரிப்பணத்தில் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் ஜெயலலிதா, ஏதோ தனது தகப்பனார் ஜெயராமின் பணத்தில் திட்டங்களை செயல்படுத்துவது போல, அனைத்திலும் தன் படத்தை ஒட்டி ஆதாயம் தேடி வருகிறார்.
பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கவும், ராணுவமும், கடற்படையும் சென்னை விரைந்தபோது, அவர்களை ஒருங்கிணைக்கக் கூட தமிழக அரசு தவறி விட்டது என்றே செய்திகள் தெரிவிக்கின்றன   தங்கள் சொந்த வேலைகளை பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கில் உலகெங்கும் இருந்து வந்து குவிந்த தன்னார்வத் தொண்டர்களால் செய்ய முடிந்த பணியை, அரசு இயந்திரத்தால் செய்ய முடியவில்லை.
மக்களின் மறுவாழ்வுக்காகவும், குப்பைகளை அகற்றுவதற்காகவும், இன்று பல்வேறு கட்சிகளும் தனித்தனியாக தங்கள் தொண்டர்களுடன் களத்தில் இறங்கி இன்று போராடிக் கொண்டிருக்கின்றன.    வரலாறு காணாத பெருவெள்ளம் என்பதை ஒப்புக் கொள்ளும் ஜெயலலிதா, இந்த மீட்பு நடவடிக்கைகளைக் கையாள, உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டியோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியோ விவாதித்திருந்தால், எந்தக் கட்சியும் ஒத்துழைக்க மறுத்திருக்காது.     இன்று தனித்தனியாக நடைபெறும் பணிகள், அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்போடு நடந்திருக்கும்.    ஆனால், தன் அமைச்சவரவை சகாக்களோடு கூட எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விவாதிப்பதில்லை.   அவருக்கு தெரிந்ததெல்லாம், ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ஞானதேசிகன் என்ற இரண்டு மங்குணிகள்தான்.   இவர்களைத் தவிர வேறு ஒருவரையுமே சந்திக்காத ஜெயலலிதாவால், எப்படி நாட்டு நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் ?
எத்தனை பேரிடர் வந்தாலும், 24 மணி நேரமும் இயங்கும் தலைமைச் செயலாளர் கட்டுப்பாட்டு அறை, தலைமைச் செயலகத்தில் உண்டு.   இதில் ஷிப்ட் முறையில் பிரிவு அலுவலர்கள் இரவு முழுவதும் பணியாற்றுவார்கள்.     மழைக்காலம் போன்ற  அவசர காலங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையிடமிருந்து மணிக்கொரு முறை அறிக்கையை பெற்று, இந்த கட்டுப்பாட்டு அறை தலைமைச் செயலருக்கும், அவர் மூலமாக முதல்வருக்கும் அறிக்கைகளை அனுப்பும்.  முதல்வரின் பணி, அவர் இல்லத்தில் இருந்தபடியே சூழலை 24 மணி நேரமும் கண்காணித்து உத்தரவு பிறப்பிப்பது மட்டுமே.   ஆனால் கடுமையான மழை பெய்த நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில்  கூட ஜெயலலிதாவை உடனுக்குடன் யாராலும் அணுக முடியவில்லை என்பதே உண்மை.   ஒரு பேரிடர் காலத்தில் கூட இரவு முழுவதும் விழித்திருந்து மக்களை பாதுகாக்காத ஒரு முதல்வர் என்ன முதல்வர் ?
முதல்வர் பதவியை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே ஜெயலலிதா கருதுகிறார் என்பது கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர் நடத்திய ஆட்சி கண்கூடாக நிரூபித்துள்ளது.   தொழில்துறை, மின்துறை, விவசாயத்துறை, என்று ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் தமிழகம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.    எதிர்த்து எழுதும் ஊடகங்களின் மீது அவதூறு வழக்குகள், மிரட்டல்கள், காவல்துறையை வைத்து கைது நடவடிக்கைகள், என்று மற்றொரு புறம் கடுமையான மக்கள் விரோத நடவடிக்கைகள்.    இன்னொரு புறம் டாஸ்மாக் மூலமாக அமோக மதுவிற்பனை.  டாஸ்மாக்கை எதிர்த்தால் சிறை.    ஆனால் ஜெயலலிதாவோடு இருக்கும் மன்னார்குடி மாபியாவோ, ஆயிரக்கணக்கான கோடிக்கு சொத்துககளை வாங்கி வாங்கி குவித்து வருகிறது.   தியேட்டர்கள் மேல் தியேட்டர்களாக வாங்குகிறது.
வெள்ளநீர் வடிந்தாலும், குப்பைகளை அகற்ற முடியாமலும், லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை இழந்தும் மக்கள் கடும் அவதியில் இருக்கிறார்கள்.     ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்கள், தங்கள் குடிசைகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில், எங்கே செல்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.   மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், கிறித்துமஸ் கொண்டாட்டங்களையும், புத்தாண்டு கொண்டாட்டங்களையும், தவிர்ப்பதாக பல நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவர்கள் அறிவித்துள்ளார்கள்.    சென்னை மற்றும் கடலூர் இந்த பேரழிவிலிருந்து மீள எத்தனை மாதங்கள் ஆகும் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
6977PDIPR-P.R.NO.663-HON_BLECM-PressReleaseonnamingoftigercubs-DATE13.12.2015
ஆனால் ஜெயலலிதாவோ, வண்டலூரில் பிறந்த பெண் குட்டிகளுக்கு NAKULAA, DEVAA, KALAA, MALAA என்று நியுமராலஜி படி பெயர் வைத்து அதற்கான பத்திரிக்கை அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.   உலகத்திலேயே புலிக்குட்டிகளுக்கு நியுமராலஜி படி பெயர் வைத்த ஒரே முட்டாள் முதல்வராக ஜெயலலிதா மட்டுமே இருக்க முடியும்.
மக்கள் கடும் அவதியில் இருக்கையில், இப்படி புலிக்குட்டிகளுக்கு பெயர் வைத்து, பத்திரிக்கை செய்தி வெளியிட ஒரு கல்நெஞ்சம் படைத்த பெண்மணியால் மட்டுமே முடியும்.      தான் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக தற்கொலை செய்து கொண்ட 200க்கும் அதிகமானோருக்காக 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து அகமகிழ்ந்த ஒரு முதல்வரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?
எல்லா தேர்தல்களையும் போல, இந்தத் தேர்தலிலும், வாக்குக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று கணிசமான பணத்தை அளித்து, மீண்டும் வெற்றியைக் குவித்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.   ஆனால், மக்கள் மறக்க மாட்டார்கள்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...