முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருப்பின் அழகு

காலா சுமார் எனப் பார்த்த முதல் நாளே சொல்லி இருந்தேன். அது எவற்றை ஒட்டி எழுந்தது என்பதைப் பார்ப்போம்.


சி.சரவணகார்த்திகேயன்



1) காலாவின் பாத்திர வார்ப்பு (பெரும்பாலும்) இயல்பான‌தாக இருந்தது. ரஜினி படம் என்பதை வைத்துப் பார்க்கும் போது இது அரிதினும் அரிய நிகழ்வு. (மனைவியை மீண்டும் சந்திக்கும் இடம் தவிர கபாலி இயல்பாய்க் கட்டமைக்கப்பட்ட‌ கதாபாத்திரம் அல்ல. ஆனால் அதை நம் மக்கள் யதார்த்தமெனக் கொண்டாடினார்கள். அவ்வளவு பஞ்சம்.) நீரில் ஒன்று, நெருப்பில் ஒன்று என்று வரும் அந்த இரு சண்டைக் காட்சிகளையும் காலாவுக்கு இருக்கும் காரணமற்ற பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கையும் கத்தரித்து விட்டால் எந்த ஹீரோயிசமும் இல்லாத‌ சாதாரணன் காலா. இன்னும் சரியாய்ச் சொன்னால் சாதாரணக் குடும்பஸ்தன். அவனது அறிமுகக் காட்சியே சிறுவர்களுடனான ஸ்ட்ரீட் க்ரிக்கெட்டில் க்ளீன் போல்ட் ஆவது தான். (சூப்பர் ஸ்டார் அந்தஸ்து, அரசியல் பிரவேச முடிவு என்றெல்லாம் கமிட்மெண்ட்கள் உள்ள சூழலில் இப்படிக் காட்சி வைக்கவும் ஒப்புக் கொண்டு நடிக்கவும் அசாத்தியத் திமிர் வேண்டும்.) அவன‌து அன்பு, காதல், நட்பு, பிரியம், பாசம் எல்லாமே மிகையற்ற அழகு. அப்படியான பாத்திரத்தை ரஜினிக்கு உருவாக்கிய ரஞ்சித்தை உச்சி முகரலாம்.

2) அடுத்தது ரஜினி அந்தப் பாத்திரத்தை எப்படிச் செய்திருக்கிறார் என்ற விஷயம். காதல் மற்றும் குடும்பக் காட்சிகளில் ரஜினியின் நடிப்பு அபாரம். நெடுங்காலம் கழித்து ரஜினியின் நடிப்பு நிஜமாகவே இதில் பிடித்திருந்தது. (கபாலியில் அவர் நடிப்பு அதீதமாக அல்லது போலியானதாக இருந்ததாகப் பட்டது.) காலா குடும்பத்திடம் காட்டும் கண்டிப்பான பிரியம், மனைவியிடம் விளையாட்டாய் அஞ்சுவது, பழைய‌ காதலியுடனான தடுமாற்றங்கள் எல்லாவற்றிலுமே இயல்பான ஒரு பின்மத்திம வயது ஆளை (அதாவது முன்கிழவர்) ரத்தமும் சதையுமாய் நம் கண் முன் கொணர்ந்து விடுகிறார் ரஜினி. உதாரணமாய் மின்துண்டிப்பின் போது தன் வீட்டினுள் இருக்கும் குழந்தைகளைப் பயமுறுத்த "பே" என்றபடி நுழைகையில் உள்ளே அமர்ந்திருக்கும் ஹூமாவைப் பார்த்து ரஜினி அதிரும் கணம் ச்சோ ச்வீட்! குடித்து விட்டு வீட்டிலும், காவல் நிலையத்திலும் பேசும் காட்சிகளிலும் அற்புத நடிப்பு. கபாலி நடிப்புக்கே உச்சமடைந்த‌ ரசிகர்கள் இதற்கு என்னாவார்களோ!

3) காலாவின் காதல்கள் - ஹூமா குரேஷியுடனான உறவும் சரி, ஈஸ்வரி ராவுடனான உறவும் சரி - மிக அழகு. காவல் நிலையத்திலிருந்து வெளிவருகையில் ஜரீனா அழுதாள் என்று காலாவிடம் செல்வி பிலாக்கணம் வைக்கும் போது கண்டு கொள்ளாமல் விட்டுப் பின் நிஜமாகவே அழுதாளா என காலா கேட்பது போன்ற காட்சிகளை உதாரணமாய்ச் சொல்லலாம்.

4) காலாவின் மிகையற்ற ஹீரோயிசங்களை மிக ரசித்தேன். ஒன்று இடைவேளைக்கு முந்தைய தாராவி வந்து திரும்பும் நானா படேகரின் நிக்கால் நிக்கால் காட்சி. அடுத்தது காவல்நிலையத்தில் குடித்து விட்டு சாயாஜி ஷிண்டேவுடன் ரஜினி உரையாடல். அப்புறம் நானா படேகரை அவரது வீட்டில் வைத்து ரஜினி சந்தித்துப் பேசும் காட்சி. வழக்கமான, நீர்த்த‌, மேலோட்டமான, ஜிகினாத்தனமான‌, அர்த்தமற்ற‌ ரஜினி பட பஞ்ச் டயலாக்களாக, பில்டப் காட்சிகளாக‌ச் செய்யாமல் தீவிரமான சினிமாப் பார்வையாளர்களும் ரசிக்கும்படி இக்காட்சிகள் இருந்தன. ஒருமாதிரி underplayed super-stardom.

5) படம் நெடுகிலும் சாதி மதம் சார்ந்த‌ இந்துத்துவ / பாஜக அரசியலை, அதன் சகிப்பின்மையை, அதனால் விளையும் சமூக அமைதியின்மையை, மக்கள் மீதான அதன் அக்கறையின்மையை தொங்க விட்டுத் தோலை உரித்திருக்கிறார் ரஞ்சித். "நீ சொல்றதை எதிர்த்தா கொலை செய்வேன்னா அது ஃபாசிஸம்" என்று நேரடியாகவே தாக்கும் வசனம் இருக்கிறது. கடைசியில் கருப்பு, சிவப்பு, நீலம்  மூன்றையும் உள்ளடக்கிய ஓர் அரசியலாலேயே காவியை வீழ்த்த முடியும் என்று சூசகமாகச் சொல்லியிருக்கிறார். அவ்வகையில் இப்படம் வழக்கமான ரஞ்சித் படங்களின் அரசியலிலிருந்து வேறானது. இதில் பிரதானம் தலித் அரசியல் அல்ல; இந்துத்துவ மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல். மையக் கதை தவிர்த்து ரஜினி தன் குடும்பத்தினருடன் உறவாடும் காட்சிகளில் தான் தலித் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மகன், மருமகள் வீட்டை விட்டுப் போவதாகச் சொல்லும் காட்சியில் ரஜினி பேசும் வசனங்கள் உதாரணம். "நான் கால் மேல் கால் போட்டா உனக்குக் கோபம் வருதுன்னா" என்பது போன்ற கபாலி பேசிய அசட்டு வன்முறை தலித்தியத்தை விட காலா பேசியிருக்கும் ஆக்கப்பூர்வ தலித்தியம் மேலான‌து. (அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களிலும் இதைக் கொஞ்சம் செய்திருக்கிறார்.)

5அ) மும்பை முழுக்க சேரி வாழ் உழைப்பாளிகள் வேலை நிறுத்தத்தில் இறங்குவது குஜராத்தின் ஊனா எழுச்சியைச் சுட்டுகிறது. போராட்டத்தின் நிகழ்வுகள் மெரீனா ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. 

6) காலா கொண்டிருப்பது பலவீனமான திரைக்கதை. நாம் ஒரு சிறுகதை எழுதும் போதே அத்தனை நுட்பமாய் எல்லா விஷயங்களையும் கவனித்துத் திரும்பத் திரும்ப எழுதிச் சரி செய்கிறோம். தேசத்தின் உச்ச நட்சத்திரத்தினை இயக்கும் வாய்ப்பு, அதுவும் முந்தைய வாய்ப்பில் செய்த பிழைகளைச் சீர் செய்யக் கிடைத்த இரண்டாம் வாய்ப்பு எனும் போது ஒருவர் எத்தனை மென்க்கெட்டுத் திரைக்கதை எழுதியிருக்க வேண்டும்! துரதிர்ஷ்டவசமாய் அந்த உழைப்பு வெளிப்படவே இல்லை. மேலே சொல்லியிருக்கும் விஷயங்களும் ரசிக்கத்தக்கவை என்றாலும் அவை தனித்தனிக் காட்சிகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. காலா ஒரு படமாக ஒட்டுமொத்த உணர்வெழுச்சியைத் தரத் தவறுகிறது. படத்தின் பிரதான‌ச் சறுக்கல் அதுவே. அது போக கணிசமான‌ தர்க்கப் பிழைகள் அல்லது கேள்விகளற்ற பதில்கள் ஆங்காங்கே கிட‌ந்து உறுத்துகின்றன‌.

7) நானா படேகர் படத்தில் ஹரிதேவ் அப்யங்கர் என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். சித்பவன் பிராமணர். காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவும், நாராயண் ஆப்தேவும் இப்பிரிவினரே. அதையும் இந்துத்துவக் குறியீடாகவே வைத்திருக்கிறார் எனப் படுகிறது. மாறாக எதிர்தரப்பில் சாருமதி கெய்க்வாட் போராடுகிறார், போலீசிடம் அடிபடுகிறார், சிவாஜ்ராவ் கெய்க்வாட் என்ற போலீஸ்காரர் "ஜெய்பீம்" என்று போராடும் மக்களிடையே உரக்க, உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். (தலதளபதி சலூன் மாதிரி இந்துத்துவ அம்பேத்கர் என்ற பொய்யைக் கட்டமைப்போர் கவனத்திற்கு.)

8) ரஜினி ரசிகன் அந்த பிம்ப‌ச் சிறையிலிருந்து வெளிவந்து காலா படத்தை ரசிக்க‌ முடியாமை ஒரு பெரும் பின்னடைவு. ரஜினி சம்பத்தைத் தட்டிக் கேட்க வரும் முதல் காட்சியிலும், க்யாரே செட்டிங்கா காட்சியின் போதும் ஒரு பரபரப்பான ஆக்ஷன் ப்ளாக்கை ரசிக மனம் இயல்பாகவே எதிர்பார்த்து ஏமாறுகிறது. ஒன்று முழு யதார்த்தப்படமாக இருந்திருக்க வேண்டும், அல்லது முழு ஹீரோயிசம். ரஞ்சித் இரண்டுங்கெட்டாய்ச் சிக்கிக் கொண்டு விழிக்கிறார். படம் இரண்டுக்கும் மத்தியில் அடையாளமிழந்து தடுமாறுகிறது. உருப்படியான படைப்பாளி ரஜினியைக் கையாள்வதன் சிக்கல் அது. இது ரஜினி விஷயத்தில்  கடந்த முப்பதாண்டுகளாக நடக்கிறது. பாலு மகேந்திரா, பாரதிராஜா, ஷங்கர் என எல்லோருக்கும் அந்தச் சிக்கல் இருந்தது. மகேந்திரனும் மணிரத்னமும் தான் அதைச் சரியாக எதிர்கொண்டார்கள் எனச் சொல்ல முடியும்.

9) ஈஸ்வரி ராவ் நடிப்பில் பின்னுகிறார். சிலர் அதை மிகைநடிப்பு எனச் சொல்லக் கேட்கிறேன். அப்படியா என்ன! அப்படிப் படபடவெனப் பொரியும் பெண்களைக் கண்டதில்லையா! கடைசியாய் அந்த ஐ லவ் யூவிற்குக் கிறங்கும் காட்சியை ரஞ்சித் எப்படி கன்சீவ் செய்திருப்பார் என வியக்கிறேன். ஹூமா குரேஷியும் சொல்லிக் கொள்ளும் படி நடித்திருக்கிறார்.

10) சமுத்திரக்கனியின் பாத்திரம் சுவாரஸ்யம். அவர் பேசும் வசனம் ஒவ்வொன்றுக்குமே திரையரங்கில் கைதட்டலோ, சிரிப்போ எழுகிறது. நடிப்பிலும் மின்னுகிறார். அவர் வாழ்க்கையில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படம் தான்.

11) எல்லோரும் சிலாகித்து விட்ட, கலவரத்தில் போலீஸால் புயல் பேண்ட் அவிழ்க்கப்படும் காட்சி வலுவான ஒன்று தான். பெண்கள் உடலை வைத்து அவமதிக்க‌ப்படுதலைத் தடுக்க ஒரே வழி அதை அவமதிப்பு என்று பெண்களும் அடுத்து சமூகமும் புரிந்து கொள்வது தான். சாருமதியாக‌ அஞ்சலி பாட்டீல் துருதுருவெனப் படம் முழுவதும் ஈர்க்கிறார்.

12) நானா படேகர் மோகன்லாலுக்கு இணையான நடிகர் என்பதை இந்தப் படத்தில் உணர முடிகிறது. ஒரு நடிகனின் முகத்தில் உணர்ச்சிகளைக் கண்டு ரசித்தெல்லாம் எத்தனை நாளாகிறது! இதற்கு முன் அவர் நடிப்பை பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் பார்த்திருக்கிறேன். ஆங்காங்கே சில இந்திப் படக் காட்சிகள். அவ்வகையில் அவரை பிரகாஷ்ராஜ் மாதிரியான ஒரு நடிகர் என நினைத்திருந்தேன். ஆனால் அவர் அதற்கும் மேல் என நிரூபிக்கிறார் காலாவில். ரஜினியைத் தாண்டி நிற்கிறார் என்றே சொல்வேன். (இத்தனை தயங்கி இதைச் சொல்லக் காரணம் ரஜினியும் இதில் நல்ல நடிப்பு!)

13) சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் நாடித்துடிப்பு. பாடல்கள் முழுதாக அல்லாமல் தேவைக்கேற்ற அளவு தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரஹ்மான், யுவனுக்குப் பிறகு கதைக்கான இசையமைப்பாளராக உருவாகி வருகிறார். இசைப் பொருத்தப்பாட்டில் நிலமே எங்கள் உரிமை பாடல் எனக்கு மிகப் படித்தது. கண்ணம்மாவும். நானா படேகருக்ருக்கான‌ பின்னணி இசை மிரட்டல். மெல்லிய மின்சாரம் மாதிரி படம் முழுக்க இசை வியாபித்திருக்கிறது.

14) ஆதவன் தீட்சண்யா போன்றவர்களை வசனப்பணியில் ரஞ்சித் பயன்படுத்தி இருப்பது நல்லது. கபாலி போல் வெற்று ஜம்பமாக அல்லாமல் கோட்பாடுகளைப் பேச முடியும். அது ஓரளவு நடந்தேறி இருக்கிறது. (அது சரி, மகிழ்நன் யார்?) 

15) இராவண காவியம் நூலை ரஜினியின் மேசையில் வைத்திருப்பது, நானா படேகர் பேத்தியுடன் அவ்வப்போது ராம, ராவண இருமையைப் பேசுவது, கடைசியில் ராம காதையை ஒலிக்க விட்டு ராவண தியாகத்தை (வதம் என்று சொல்லுதல் இங்கு பொருத்தமில்லை) காட்சிப்படுத்தியிருப்பது எல்லாம் நன்று தான். கடைசியில் மீட்பர்களை நம்பியல்ல எந்தப் போராட்டமும், ஒவ்வொருவருமே காலா தான் என்று சொல்லி இருப்பது தான் படம் சொல்ல‌ வரும் முக்கியச் செய்தி. 

16) ரஜினி தன்னைத் தானே எதிர்த்து இதில் அரசியல் பேசியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியமான உண்மை. காவல் நிலையத்தில் ரஜினி "யார் நீ?" என்று சாயஜி ஷிண்டேவிடம் கேட்பது கூடத் தூத்துக்குடி தம்பியை நினைவூட்டியது. இன்னொரு விஷயம் ரஜினி எடுத்திருக்கும் ஆன்மீக அரசியலையும் படம் அவரை வைத்தே கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு போராட்டத்தைப் போலீஸ் எப்படிக் கலவரமாகத் திசை திருப்ப முடியும் என்பது படத்திலேயே காட்டப்படுகிறது. படத்துக்குள் போராடும் தரப்பில் ரஜினி. ஆனால் படத்துக்கு வெளியே போலீஸுக்கு வக்காலத்து வாங்கி, போராடினால் நாடு சுடுகாடாகும் எனச் சொல்லும் ரஜினி. நல்லவேளை, ரஜினி தூத்துக்குடிபோய் வந்தார். இல்லை என்றால் காலா தான் ரஜினியின் அரசியல் என உணர்ச்சிவசப்பட்டு மானாவாரியாய் நம்பிச் சில்லறையைச் சிதற விட்டிருப்போம். தான் வேறு, படங்களில் வரும் பிம்பம் வேறு எனத் தெளிவுபடுத்தி இருக்கிறார் ரஜினி. (இதை குசேலன் படத்திலேயே ஒரு வசனமாக வைத்திருப்பார் பி.வாசு.) எம்ஜிஆரும் அப்படித்தான் என்றாலும் இந்த விஷயம் பொதுமக்களிடம் கசியுமளவு வைத்துக் கொள்ளவில்லை என்பதால் தான் ஜெயித்தார். ரஜினிக்கு அந்தக்கூறு கிடையாது என்பதால் தமிழகம் பிழைத்தது.

17) நானா படேகர் மோடியின் உருவகம் தான். இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்டி விட்டு அரசியலில் வளர்வது. ப்யூர் மும்பை - க்ளீன் இந்தியா. மும்பை முழுக்கத் தேர்தலில் வென்று தாராவியில் மட்டும் காவிக் கட்சி தோற்பது என்பது இந்தியா முழுக்க பாஜக வென்று தமிழ்நாட்டில் மட்டும் தோற்றதற்கு இணை. அவ்வகையில் காலா என்ற பாத்திரமே திராவிட அரசியலின் குறியீடு தான் (ஒரு காட்சியில் தாராவியில் பெரியாரின் சிலை காட்டப்படுகிறது). ஆனால் எனக்குச் சில இடங்களில் காலா என்ற பாத்திரம் நேரடியாய்க் கலைஞரைக் குறிப்பதாகக் கூடத் தோன்றிய‌து. (கரிகாலன் - கருணாநிதி; காலா - கலைஞர், கருப்புக் கண்ணாடி, காவிகளை எதிர்ப்பது, காலாவுக்கு நான்கு மகன்கள், பெருங்குடும்பம், ஒரு மகனின் பெயர் ரஷ்ய அதிபருடையது: லெனின் - ஸ்டாலின், இன்னொரு மகனை தளபதி என்று அழைப்பது, மனைவி இருக்கையிலேயே காதலி, காதலிக்கு ஒரு மகள், சமுத்திரக்கனி நடித்த‌ வள்ளியப்பன் பாத்திரம் - அன்பழகன், நள்ளிரவில் வயதான காலத்தில் போலீஸால் கைது செய்யப்படுவது, மக்களைத் திரட்டிப் போராடும் யுக்தி - இந்தி எதிர்ப்புப் போராட்டம், எல்லாவற்றுக்கும் மேல் தாராவி காலாவின் கோட்டை எனச் சொல்லப்படுவது!) ரஞ்சித் வேறு மாதிரி எண்ணியும் இக்காட்சிகளை எடுத்திருக்கலாம் தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பார்வையாளன் புரிதலுக்கு அணையேது!

18) காலா தலித் என்பது அம்பாசமுத்திரம், புத்தச் சின்னங்கள் எனப் பலவாறு சொல்லப்படுகிறது. அதையொட்டி நானா படேகர் அவர் வீட்டில் சொம்புத் தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுப்பது வரை புரிகிறது. ஆனால் பிற்பாடு தன் பேத்தியை காலாவின் காலைத் தொட்டு ஆசி பெறச் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சாதி இந்து அதைச் செய்வாரா? 

19) இது கபாலியை விட நன்றாக இருக்கிறதா என்ற கேள்வி பதிலளிக்கச் சிரமமானது. காரணம் இரண்டுமே அதனதன் அளவில் மோசமானவை, போலவே சில நல்ல காட்சிகளைக் கொண்டவை. அதனால் இரண்டையும் சமதளத்தில் தான் வைக்கத் தோன்றுகிறது. ஆனால் ரஜினியை அதை விட இதில் தான் என்னால் நெருக்கமாக உணர முடிந்தது.

20) என்ன கோபம் இருந்தாலும் ஒரு வேண்டுகோள். நாயகன் மாதிரி என்று மட்டும் காலாவைப் பற்றிச் சொல்லாதீர்கள்.(பல இடங்களில் நாயகனின் பாதிப்பு தெரிகிறது என்பது வேறு விஷயம். அதற்காக அப்படிப் பொசுக்கென்று ஒப்பிட்டு விடுவதா!)

பாஜக எதிர்ப்புக்காகவும், ரஜினியின் நடிப்புக்காகவும், காலாவின் அழகான காதல்களுக்காகவும் பார்க்கலாம்!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...