முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’’ஒரே கருஞ்சட்டியில் ஊறிய நார்த்தங்காய்கள்..!’’ -

இப்போது ரெய்டு என்று நடந்து கொண்டிருப்பதெல்லாம், ஏதோ பங்காளித் தகராறு என்று கருதி வேறு வேலையைப் பார்க்கப் போவதுதான் புத்திசாலித்தனம். இந்த வெள்ளாமை ஒருபோதும் வீடு வந்து சேராது..!


150 கோடி ரூபாய் சொளையான பணம், 200 கிலோ ஒளிர்கிற சொக்கத் தங்கக் கட்டிகள், கத்தை கத்தையான ஆவணங்கள் என தொடர்ந்து சில நாட்களாகச் செய்திகள் கூவிக் கொண்டிருக்கின்றன. ஆவணங்களில் என்ன இருக்கப் போகிறது? அசையாத நிலபுலன்கள் குவிந்து கிடக்கப் போகின்றன. இது ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே நடப்பது போல ஒரு தோற்றமும் இயல்பாகவே விதைக்கப்படுகிறது. உண்மை நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாயெல்லாம் பல்லாகப் போட்டு உடைத்த காட்சியையும் செய்தியில் பார்க்க முடிந்தது. அவரது வாய்கொள்ள முடியாத இளிப்பு, அனைத்தையும் சொல்லாமல் சொல்லி விட்டது. அவரே கைதேர்ந்த ஒரு குத்தகைதாரர்தானே..?
இப்போது குறிவைக்கப்பட்டிருக்கிற முதல்தர அரசு ஒப்பந்தக்காரரான செய்யாத்துரைக்கு திமுக ஆட்சிக் காலத்திலும் பல கோடிகள் மதிப்பிலான எட்டு குத்தகைகள் ஒதுக்கப்பட்டதாக போகிற போக்கில் அவர் சொன்னார். அவர் சொன்ன எல்லா விஷயங்களிலும் உண்மை இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, அல்லது முதன்முறையாக அவர் மனம் விட்டு உண்மையைப் பேசினார் என்ற வகையில் சந்தோஷமே. போகிற போக்கில் அவர் அள்ளித் தெளித்ததை விரித்துப் பார்த்தால், இதன் பின்னால் இருக்கிற தொழில் பின்னல் சிலந்தி வலையைப் போல விரியும். இந்த விஷயத்தில் தமிழகத்தை ஏற்கனவே ஆண்ட திமுகவும் விதிவிலக்கில்லை என்பதைப் புரிந்து கொண்டால்தான் மேற்கொண்டு இந்த விவகாரத்தின் அத்தனை தொடர் சங்கிலிகளையும் உணர முடியும். உங்களில் கல் எறியாத எவரோ என்றெல்லாம் இந்த இடத்தில் விவரம் புரியாமல் உதாரணங்களை அள்ளி வீச முடியாது. ஏனெனில், எல்லோருமே இந்தக் குளத்தில் பெரிய பாறாங்கற்களைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, செய்யாத்துரையின் ஊரான அதே அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மூன்றாம் தர குத்தகைதாரர் ஒருத்தருடன் சென்னையில் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் அழைத்தவர், அதிமுக சார்பில் போட்டியிட்டவர். அவர் பேசி முடித்ததும் விஷயம் என்ன என்ற போது, “இருபது லட்ச ரூபாயை நூறு ரூபா சில்லறையா மாத்தி ஏதாவது வண்டில போட்டு அனுப்பச் சொல்றாரு. தேர்தல் செலவுக்காக கேக்குறாரு” என்றார் அந்த மூன்றாம்தர குத்தகைதாரர். மூன்றாம் தர ஆட்களிடமே இவ்வளவு என்றால், முதல் தர ஆட்களிடம் எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களது கட்சியில்லையே என்றபோது, “இந்த விவகாரத்தில கட்சிப் பிரிவினை எதையும் பாக்க மாட்டோம் தம்பி. எங்காளுகளுக்கும் கொடுத்திருக்கேன். யார் வந்தாலும் எங்க மாவட்டத்தில எனக்கு வேலை ஒதுக்கிருவாங்க” என்றார். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை குத்தகைதாரர்களுக்கு கறுப்பு, சிவப்பு, மஞ்சள், ஊதா என எல்லாமும் ஒன்றுதான். கம்யூனிஸ்ட்கார்கள் உண்மையிலேயே இந்த விஷயத்திலும் பாவம்தான்.
குத்தகையை இட்டார் பெரியார்; இடாதார் சிறியோர் அவ்வளவுதான் நூலிலை வித்தியாசம். அதே தேர்தல் முடிந்து முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக திமுகவின் உயர் மட்ட ஆட்களுடன் அதே சென்னையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ஆட்சிக்கு வந்தவுடன் யாருக்கு மணல் குத்தகையைக் கொடுப்பது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிமுக அரசில் மணல் வியாபாரத்தை நடத்தியவருக்கே திரும்பவும் தருவதாக முடிவிற்கு வந்தார்கள். இத்தனைக்கும் அந்த நபர் தோட்டத்திற்கு மிகவும் நெருங்கியவர் என அறியப்பட்டவர். “யாரா இருந்தா என்ன..? அவர்ட்ட கொடுக்கல் வாங்கல் சரியா இருக்கு. வாரா வாரம் கேட்கிற முறையில செட்டில் பண்ணிடுறாரு” என்பதுதான் அவர்களுடைய பதிலாக இருந்தது. இதுதான் சகிக்க முடியாத கள யதார்த்தம். இப்போது ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறேன் என்று கிளம்பியிருப்பதையெல்லாம் லூலாயி என்கிற ரீதியில் எடுத்துக் கொண்டு கடந்து விட வேண்டும். விவரம் புரியாமல் கம்பைத் தூக்கிக் கொண்டு யாராவது உடன் பிறப்புகள் கிளம்பி வந்தால், அவருடைய எண்ணை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அவர்களுடைய ஆட்சி வரும்போது ஏதாவது சிபாரிசுக்குப் போகலாம் என்பதால் பகைத்தும் கொள்ளாதீர்கள்.
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். திமுக எம்எல்ஏக்களுக்கு, அவர்களது தொகுதியில் எட்டு கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்த வேலைகளைச் செய்ய, எடப்பாடி தலைமையிலான அரசு மறைமுகமாக வேலைகளை ஒதுக்கி கொடுத்திருக்கும் செய்தி அது. அந்த ஒப்பந்த வேலைகளில் அதிமுகவினர் தலையிடக்கூடாது என்பதுதான் எழுதப்படாத ஒப்பந்தம். எட்டுகோடியை ஒதுக்கி, அதில் முப்பது சதவீதத்தை அவர்கள் எடுத்துக் கொள்ள வழி ஏற்படுத்துவதன் ஊடாக எதிராளியின் பாத்திரத்திலும் தங்கக் கஞ்சியை ஊற்றுகிற ஏற்பாடு அது. அதுமாதிரியான ஒப்பந்தங்களை நம்முடைய கட்சி எம்எல்ஏக்கள் எடுக்கக்கூடாது என திமுகவின் மேல்மட்டம் சொல்லுமானால், அவர்கள் தயங்காமல் தங்களுக்குத் தோதாக செயல்படும் ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பதுதான் முகத்தில் அறைகிற உண்மை. இதெல்லாம் தெரிந்தும், வாசல்படிக்கு முன்னால் நின்று கொண்டு சத்தம் விடுவதையெல்லாம் விவரம் தெரிந்தவர்கள் நம்பத் தயாராக இல்லை.
இந்த இருவர் மட்டுமா இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்..? ஒவ்வொரு ஆட்சி அமையும் போதும் அவர்களோடு நட்பில், கூட்டணியில் இருப்பவர்களுக்கும் ஒப்பந்தப் பங்கு போவது என்பது அடிப்படை விதி. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இதுவும் அடக்கம் என்பதை போயஸ் கார்டன், அறிவாலயம் பக்கம் சுற்றிய மனசாட்சி உள்ளவர்கள் அறிவார்கள். ஒருதடவை திமுகவோடு கூட்டணியில் இருந்து முறித்துக் கொள்வதற்கு முன்பு பாமக நிறுவனர் சொன்ன கூற்றொன்று புகழ்பெற்றது. “ஒரு ஆயா போஸ்டிங்கூட பண்ணித் தர மாட்டேங்கறாங்க” என அவர் வெளிப்படையாகவே சொன்னது எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. அப்படியென்றால் என்ன..? அரசு காரியங்களில் தங்களுக்கான பங்கைத் தரவில்லை என்பதுதான் அர்த்தம்.
பல்வேறு அரசு ஒப்பந்தங்கள், பணி இடமாறுதல், புதிய பணி வாய்ப்பு இவற்றைச் செய்து தருவது என்பது ஒரு இணை வணிகம் இங்கே. பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்குகிற வணிகம். ஐம்பது கோடி ரூபாய் கப்பம் கட்டி விட்டு அடுத்த ஆட்சி வருகிற வரை காத்திருந்தவர்களையெல்லாம் நிறைய பார்த்திருக்கிறேன். எல்லா வணிகத்திலும் இருப்பதைப் போல இதிலும் போலிகள் உண்டு. வேலூரைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் ஒருவர், நர்சிங் கல்லூரி உரிமம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி பத்து கோடி ரூபாயை வாங்கி வைத்துக் கொண்டு, வேலையையும் செய்யாமல் இழுத்தடித்தார். கொடுத்த நண்பர் போய் கேட்டபோது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் மின்சார அமைச்சரின் மச்சானிடம் இதே மாதிரி ஐந்து கோடி ரூபாய் கொடுத்து விட்டு அதை திருப்பி வாங்க நடையாய் நடந்தவரையும் எனக்கு தெரியும்.
இதுபோன்ற அரசு வேலைகளை எடுத்துச் செய்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களின் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி இருப்பவர்களால் மட்டுமே முதல் தர குத்தகைகளை எடுக்க இயலும். எடப்பாடியின் சம்பந்தி செய்யாத்துரை என்றால், அறிவாலயத்தில் வேறு ஒருத்தர் இருப்பார்; அவ்வளவுதான் வித்தியாசம். மாட்டிக் கொள்கிறபோது மட்டுமே, விஷயம் சந்தி சிரிக்கும். மாட்டிக் கொள்ளவில்லை என்பதற்காக, சந்தியில் நின்று விவரம் புரியாமல் சிரித்துக் கொண்டிருக்கக்கூடாது. பூமராங்கிற்கு, திருப்பி வருகிற பழக்கம் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பரவியிருக்கிற, உடனடியாக களையெடுக்க முடியாத இணை வணிகம் இது. இதில், புரோக்கர்கள் என்கிற லேயர்கள் இருக்கின்றன. எல்லா நேரங்களிலும் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சாட்டிவிட முடியாது இல்லையா..? ஒதுக்கப்படுகிற ஒப்பந்தங்களுக்கான பணத்தை பெறுவதற்கு அதிகாரிகளுக்கு இரண்டு சதவீதம் தர வேண்டும். இல்லாவிட்டால், காசோலை காலுக்குக் கீழே கிடக்கும். இன்ன அதிகாரிக்கு இன்ன தொகை கொடுத்து விடுங்கள் என அமைச்சர்களே அழைத்தும் சொல்லி விடுகிற நேர்மையான ஏற்பாடும் உண்டு. அரசாங்கத்தில் இருக்கிற எல்லா துறைகளிலும் வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை ஏதோ சந்திர மண்டலத்தில் நடப்பது போலச் சித்தரிப்பது விஷயத்தின் ஆழத்தை மூடி மறைக்கிற முயற்சியே.
பொதுப்பணித்துறைதான் என்றில்லை... சத்துணவுத் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை என சகல துறையிலும் இந்த மறை வணிகம் தங்கு தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையையெல்லாம் பசையில்லாத துறை என்பார்கள். ஆனால், அங்கேகூட மொத்தமாக பிளக்ஸ் அடிக்க, இத்தனை சதவீதம் காசு கொடுக்க வேண்டும் என்கிற முறை இருக்கிறது. எதற்குமே உருப்படாத விளையாட்டுத் துறையில் உபகரணங்களை மொத்தமாக அரசிற்கு தருவதற்கு இதே மாதிரி தர வேண்டும். ஒட்டுமொத்தமும் இப்படித்தான் நடக்கிறது என்கிற போது, ஒட்டுமொத்தமான மாற்றம் என்று சொல்வதெல்லாம் சிறுவர்த்தனமான அரசியல் சித்து விளையாட்டு.
இதுமாதிரி சிலர் மீது நடவடிக்கை எடுப்பதன் வழியாக, ஊழலுக்கு எதிரான கட்சியைப் போல பாஜக தன்னைக் காட்டிக் கொள்வதையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அதானி யார்..? கொஞ்சம் பெரிய சைஸ் சிவந்த செய்யாத்துரை. சிகப்பாக இருப்பதால் பொய் சொல்ல மாட்டான் என்றெல்லாம் சொல்லி விடமுடியுமா..? நாளையே பாஜக ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும்..? செய்யாத்துரை போய், கொஞ்சம் மூக்குச் சிவந்தவர்கள் இதே காரியத்தை தலைமைச் செயலகத்தில் செய்வார்கள். இப்போதே ஆங்காங்கே செய்வதில்லையா..? தலைமைச் செயலகம் பக்கமாக பாஜக ஆதரவு பெற்ற புதிய குத்தகைதாரர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 
ஒரு வாதத்திற்காக தமிழகம் முழுக்க இருக்கிற ஒப்பந்தக்கார்கள் எல்லோரையும் ஒரே நாளில் நெருக்கினால் என்ன நடக்கும்..? ஒருத்தரும் டெண்டர் எடுக்க வர மாட்டார்கள். தலைமைச் செயலரும் அவருடைய மச்சானும்தான் போய் சாலை போட வேண்டும். ஐந்து சதவீதமாக இருந்த கமிஷன் தொகை இப்போது நாற்பது சதவீதம் வரை வந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். அது உண்மையா என்றும் தெரியவில்லை. இந்த சதவீதத்தில் அதிகாரிகளுக்கான ஒதுக்கீடு இருக்கிறதா, இல்லையா..? அதனால்தான் சொல்கிறேன். செய்யாத்துரை என்பதெல்லாம் ஒரு சின்ன உதாரணம்தான். தமிழகம் முழுக்கத் தோண்டிப் பார்த்தால், இன்னும் மிளிர்கிற தங்கக் கட்டிகளைப் பொறுக்கி விட முடியும். இந்த வணிகத்தைப் பொறுத்தவரை, எல்லா மாநிலங்களும் தங்கச் சுரங்கமே.
பார்ட்டியொன்றில் எல்லோரும் வியக்கும் கோடீஸ்வரர் ஒருத்தரைச் சந்தித்தேன். அவர் யார் என்று கேட்டபோது, வடமாநிலங்களில் கொசுக்கு மருந்தடிக்கிற காண்டிராக்டர் என்றார்கள். செய்யாத்துரையெல்லாம் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம்தான் வாங்க வேண்டும். ஏனெனில், அவர் பத்தாயிரம் செய்யாத்துரையின் பலம் கொண்டவர். எல்லோரும் தங்களை இந்த விஷயத்தில் தரமான, நயம் எலுமிச்சை ஊறுகாயாகக் காட்டிக் கொள்ள முயல்வதை ஒருபோதும் நம்பிவிடாதீர்கள். ஒருவகையில் எல்லோரும் ஒரே கருஞ்சட்டியில் ஊறிய கசக்கிற நார்த்தங்காய்கள்தான். எலுமிச்சை நேர் வணிகம் என்றால், இந்தத் துறையில் நார்த்தங்காய் என்பது இணை வணிகத்திற்கான குறியீடு. நார்த்தங்காயை ஒரு உதாரணத்திற்காகவே சொல்லியிருக்கிறேன். அதைத் தவறாகச் சொல்லவில்லை. தனி மனிதரை எளிதாகப் போட்டுச் சாய்த்து விடலாம். ஆழமாக ஓங்கி வளர்ந்திருக்கிற இணை வணிகத்தைத் துளி அளவிற்குக்கூட அசைத்துப் பார்க்க முடியாது. அசைக்கிறோம் என்று சொல்லிக் கிளம்புவதெல்லாம் கண்ணா மூச்சி ஆட்டம்தான் தவிர வேறொன்றுமில்லை. இப்போது ரெய்டு என்று நடந்து கொண்டிருப்பதெல்லாம் ஏதோ பங்காளித் தகராறு என்று கருதி வேறு வேலையைப் பார்க்கப் போவதுதான் புத்திசாலித்தனம். இந்த வெள்ளாமை ஒருபோதும் வீடு வந்து சேராது..!

சரவணன் சந்திரன்


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே ஒ வ்வொரு பத்திரிகையும் சில விஷயங்களைப் பெருமிதமாய்ச் சொல்வார்கள். தாங்கள் தான் முதன்முதலில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தோம், வீட்டு வசதி வாரிய  முறைகேட்டினை அம்பலப்படுத்தினோம், இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாய்ச் செய்து வருகிறோம் என்று, அவர்களுக்கு அதில் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உரிமை கோருவார்கள்,அதில் பெருமிதமும் சாதித்து விட்ட திருப்தியும் வெளிப்படும். ஆனால் இந்த 'இந்தியா டுடே'காரர்களுக்கோ வேறு விதமான உரிமை கோரல். பாலியல் இச்சைகளின் ஆய்வுகள் தொடர்பான நீண்டகால உரிமை கோரல் தான். தாங்கள் தான்  11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேசத்தின் தலையணை பேச்சுகளை படம் பிடித்துக் காட்டி வருகிறோம் எங்க‌ளை விட யாருக்கு இதில் தகுதியும் அனுபவமும்  இருக்கிற‌து என . உங்களுக்கு இது வக்கிரமாகவும் கழிசடையின் பிறப்பிடமாகவும் தெரியலாம்,ஆனால் அவர்களுக்கோ அது பெருமிதம். ஆனால் அவர்களுக்கே இந்த வழக்கமான பள்ளிய‌றை, கழிப்பறை பாலியல் தொடர்பு ஆய்வுகள்,இட்டுக்கட்டல்கள் அதைத்தொடர்ந்த  பூச்சுகள் அலுத்து விட்டதா என்று தெரியவில்லை.புதிய...