முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரியான் & Raanjhanaa – 2013

மரியான் & Raanjhanaa – 2013

Mariyaan-Movie-Photostills-Gallery_S_184

மரியான் மற்றும் ராஞ்ஜனா ஆகிய இரண்டுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆகையால், தனியே இவற்றைப்பற்றி எழுதி, படிப்பவர்களின் பொறுமையை சோதிப்பதற்குப் பதில் இரண்டு படங்களையும் ஒரே போஸ்ட்டில் போட்டுவிடலாம் என்று தோன்றியது.
முதலில், ஒரு கடற்கரை கிராமத்துக்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த கிராமத்தில் நமது அனுபவம் எப்படியெல்லாம் இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவசியம் நமது மனதில் இருக்கும். உள்ளே நுழைந்ததும் அந்த கிராமத்தில் மெக்டொனால்ட்ஸ் கிளை ஒன்று இருக்கிறது. பக்கத்திலேயே KFCயின் பிரம்மாண்டமான கிளை. அந்த கிராமத்தில் இருக்கும் மக்களில் ஒரே ஒரு பெண் மட்டும் அந்த பிராந்தியத்துக்கே சம்மந்தமில்லாமல், எந்த வேலையை செய்தாலும், எப்படிப் பார்த்தாலும் மிகவும் அழகாக, க்யூட்டாக இருக்கிறாள். அப்படியே மேலே நடக்கும்போது அங்கே எதுவுமே இல்லை என்பது தெரிகிறது. ‘இதுவும் மற்றொரு கிராமம்தான் போலும்’ என்று சோர்ந்துபோய் வெளியே வருகிறோம்.
இதுதான் மரியான்.
மரியானின் கதாநாயகி பனிமலரின் கதாபாத்திரம் மிகவும் செயற்கையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உடையிலிருந்து, புருவம், உடல்மொழி, பேச்சு ஆகிய எதுவும் இயல்பாக இல்லை. அந்த வேடத்தை ஏற்றிருக்கும் பார்வதியின் நடிப்பு நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற விஷயத்துக்கே போகவேண்டாம். ஆனால், அவரது கதாபாத்திரம் அந்த பிராந்திய மக்களிடமிருந்து மிகவும் அந்நியப்பட்டிருக்கிறது என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது. ஒரு சிறிய உதாரணமாக, ’பருத்திவீரன்’ கதாநாயகி ப்ரியாமணியை எடுத்துக்கொண்டால், இதுபோன்ற படங்களில் கதாநாயகியின் சித்தரிப்பு எப்படி இயல்பாக இருக்கவேண்டும் என்று உதாரணமாகக் காட்டமுடியும். எந்த ஃப்ரேமில் கதாநாயகியைக் காட்டினாலும் மிகவும் அழகாக அவர் தெரியவேண்டும் என்று மரியானில் அவரது வேடம் இடம்பெறுவது, படத்தின் ஆரம்பத்தில் இருந்தே மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது.
அடுத்த உறுத்தல் – தனுஷ். கதாநாயகன் மரியான் வேடத்தில் அவர் பொருந்திப் போகிறார். ஆனால், ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு, இதுபோன்ற வேடங்களையே அவர் தேடித்தேடி நடிப்பது புரிந்தது (அல்லது இதுபோன்ற வேடங்களே அவரைத் தேடித்தேடி வருகின்றன என்றும் வைத்துக்கொள்ளலாம்). உணர்ச்சிமயமான காட்சிகளில், எப்படி இதற்கு முந்தைய ‘ராஞ்ஜனா’, ’மயக்கம் என்ன’, ‘புதுப்பேட்டை’ போன்ற அவரது படங்களில் அவரது நடிப்பைப் பார்த்தோமோ, அதேபோன்றுதான் மரியானிலும் அவர் தெரிகிறார். இதனால், மரியானைப் பார்ப்பது போய், தனுஷையே மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்றே இருந்தது. அவரது உடல்மொழிகூட இதற்கு முன்பு நாம் பார்த்த படங்களையே ஒத்திருந்தது. மிகவும் அதிகமான நடிப்பை அவர் நல்கியிருக்கிறாரோ?
படத்தில் சில காட்சிகள் மனதில் சந்தோஷத்தை விளைவிக்கும் ரொமாண்டிக் காட்சிகளாக இருக்கின்றன. குறிப்பாக சர்ச்சில் மரியானைப் பார்க்கும் பனிமலர். கூடவே மரியானின் மனதில் பனிமலரைப் பற்றிய காதல் வெளிப்படையாக வெடிக்கும் காட்சி. அதைப்போலவே படத்தின் ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன’ பாடலுக்கு முன்னால் வரும் காட்சிகள். ஆனால், மொத்த படத்திலும் எனக்குப் பிடித்த காட்சிகளாக அவை மட்டுமே இருந்தன.
படத்தின் ஒரு நெகட்டிவ் அம்சம் – தடால் என்று பாடல்கள் இடம்பெறுவது. ‘எங்க போன ராசா’ பாடலின் முக்கியத்துவம் என்ன? அந்தப் பாடலுக்கான காட்சிகளே செயற்கையாக இருந்தன. ரேடியோவை சுற்றி சிலர் அமர்ந்திருக்கிறார்கள். அதில் புயல் பற்றிய செய்தி ஒலிக்கிறது. ’கடலுக்குப் போன மரியானும் பிறரும் இன்னும் வரவில்லை’ என்று யாரோ ஒருவர் வந்து பனிமலரிடம் சொல்லிவிட்டு செல்கிறார். உடனேயே பாடல் ஆரம்பித்துவிடுகிறது. அதேபோல் முடிந்தும் விடுகிறது. உடனேயே மரியான் வந்துவிடுகிறான். இந்தக் காட்சிகளில் எந்த வகையான உணர்வுகளும் வெளிப்படுவதில்லை. இதைப்போலவே இரண்டாம் பாதியில் டெரரிஸ்ட்களுக்கு மத்தியில் மரியான் பாடும் ‘கடல் ராசா நான்’ பாடலும் எந்த வகையான உணர்ச்சிகளையும் நமது மனதில் வரவழைக்க மறுக்கிறது. அந்த சிச்சுவேஷனே நகைச்சுவையாக இருந்தது இன்னுமொரு குறைபாடு.
படத்தில் வேகம் மிகவும் கம்மியாக இருந்தது. படத்தின் கதையில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதற்கான அம்சங்கள் எதுவுமே இல்லாததால், கதையோடு ஒன்ற முடியவில்லை. எனக்குப் புரிந்தவரை, படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மரியான் வெறுமனே ரியாக்ட் தான் செய்துகொண்டிருக்கிறான். அவனைச் சுற்றிலும் சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றுக்கான எதிர்வினை மட்டுமே இறுதிவரை மரியான் புரிந்துகொண்டே இருக்கிறான். அவனாக எதையுமே செய்வதில்லை. அவனாக எதையும் செய்யாமல் இருப்பதால் படமும் சுவாரஸ்யமாக இல்லை. இதனால் படத்தின் இரண்டாம் பாதியில் டெரரிஸ்ட்களுக்கு மத்தியில் மரியான் அவஸ்தைப்படும்போது நமக்கு பச்சாதாப உணர்ச்சி வருவதே இல்லை. மாறாக, அந்தக் காட்சிகளில் அலுப்பே எழுகிறது. உங்களுக்குப் பிடித்த படங்களின் கதாபாத்திரங்களை எண்ணிப்பாருங்கள். படத்தின் ஆரம்பத்தில் ரியாக்ட் செய்தாலும், அதன்பின் அவர்களாக செயல்புரிவதில்தான் சுவாரஸ்யம் அடங்கியிருக்கும். பல வெற்றிகரமான தமிழ்ப்படங்களை இதற்கு உதாரணமாக சொல்லமுடியும். கமர்ஷியல் படங்களில் கதாநாயகன் சுறுசுறுப்பாக, தான் மேற்கொண்ட குறிக்கோளை நோக்கி செய்யும் செயல்களே படங்களை சுவாரஸ்யம் ஆக்கும். இதில் அது மிஸ்ஸிங். கதாநாயகன் வெறுமனே ரியாக்ட் மட்டுமே செய்வது, கலைப்படங்களின் டெக்னிக். மரியான் மட்டுமல்ல – பனிமலரும் தேமே என்று இரண்டாம் பாதி முழுக்க ஃபோனின் பக்கத்தில் அமர்ந்துகொண்டிருப்பதோடு சரி. எந்த செயலும் இல்லை.
டெரரிஸ்ட்களைப் பற்றிப் பேசும்போது – சூடானின் பின்னணி நமக்குப் புதியது. எத்தகைய படமாக இருந்தாலும், அதில் வரப்போகும் பிரதான பாத்திரங்களைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இருந்தால், அவர்கள் படத்தின் பின்னால் வரும்போது ஆடியன்ஸ் தயாராக இருக்கமுடியும். ஆனால் இந்தப் படத்தில் சூடானுக்கு தனுஷ் போகப்போவதை அறிகிறோம். அடுத்த ஷாட்டில் இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. அடுத்த காட்சியில் தனுஷ் கடத்தப்படுகிறார். அதுகூட ஓகே. ஆனால் கடத்தப்படும் காரணம் என்ன? கடத்துபவர்களின் பின்னணி என்ன? ஒன்றுமே நமக்கு சொல்லப்படுவதில்லை. ஒரே ஒரு டயலாக் மூலம், ‘எண்ணை வளம், நிறுவனங்களின் சுரண்டல்’ போன்றவை லேசாக கேட்கின்றன. ஆனால், இந்த கடத்தல் காட்சிகளின்மீது நமக்கு ஈர்ப்பு வருவதற்கு இது போதாது. இதே போன்ற பின்னணியுடைய ‘ரோஜா’ படத்தை எடுத்துக்கொண்டால், வாஸிம் கானின் பின்னணி நமக்கு முன்னமேயே சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகனை கடத்தும் லியாகத்துக்குமே பலமான காரணம் இருக்கிறது. அர்விந்த்ஸ்வாமியிடம் அவன் ஆவேசமாக பேசும் வசனம் மூலமாக, அவனது நோக்கம் தெள்ளத்தெளிவாக நமக்கு சொல்லப்படுகிறது. இதுதான் படத்தில் சுவாரஸ்யம் அதிகரிப்பதற்கும், அது அடியோடு இல்லாமல் போவதற்குமான வித்தியாசம். அதுவேதான் ரசனைக்கும் ரசனையின்மைக்குமான வித்தியாசம்.
கூடவே பல தமிழ்ப்படங்களில் நாம் பார்த்த மொக்கை வில்லன் இதிலும் இருப்பதால், அது இன்னும் படத்தை இழுக்கிறது. உதாரணமாக, மரியான் ஊருக்குப் போனதுமே வில்லனுக்கு லைன் க்ளியர் ஆகிவிடுகிறது. ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அவன் கடத்தப்படும்வரை காத்திருந்து, அதன்பின்னர்தான் பனிமலரிடம் வருகிறான் அவன். அதற்கு ஜஸ்டிஃபிகேஷனாக, ‘உன்னை அப்பவே தூக்கிருக்கணும்டி’ என்று ஒரு டயலாக். 80க்களின் காலகட்டத்தில்தான் இப்படிப்பட்ட வில்லன் வருவதை பார்த்திருக்கிறேன்.
படத்தில் கதாநாயகி பார்வதியின் கதாபாத்திரம் எப்படி எனக்கு மிகவும் அந்நியமாக தோன்றியதோ, அப்படித் தோன்றிய இன்னொரு அந்நியமான விஷயம் – ஒளிப்பதிவாளர் மார்க் கோனிங்ஸின் கேமரா. படத்தில் வரும் அத்தனை காட்சிகளும், ஒரு துணியை வைத்து ஒவ்வொரு ஷாட்டின் முன்பும் கேமராவை துல்லியமாக துடைத்து எடுத்ததுபோன்று பளிச்சென்று இருந்தன. எனக்குத் தெரிந்து ஷாட்களில் Out of Focus இல்லாத ஒரே தமிழ்ப்படம் இதுதான் என்று தோன்றியது (எனது திரைத்துறை நண்பர்களும் இதனை உறுதி செய்தனர்). இதனால் ஒவ்வொரு காட்சியின்போதும் அந்தக் காட்சி துருத்திக்கொண்டு தெரிவது புரிந்தது. அதாவது, எல்லா காட்சிகளுமே ‘என் அழகைப் பார்’ என்று வெளிப்படையாக பறைசாற்றும்விதமான காட்சிகள். மணிரத்னத்தின் தற்போதைய படங்களிலும் இந்த பிரச்னை இருக்கும். இப்படி ஒளிப்பதிவாளரை டாமினேட் செய்யவிட்டால், இயக்குநர் அங்கே பளிச்சிட முடியாது. ஆகவே, ஏற்கெனவே வீக்காக இருக்கும் மரியானின் கதை, ஒளிப்பதிவினால் மேலும் வீக் ஆகிறது. போலவே, அப்படிப்பட்ட ஒரு கடல்புறத்துக் கதைக்கு இது கொஞ்சம் ஓவரன தொழில்நேர்த்தி என்றும் தோன்றியது.
பின்னணி இசையில், Swades படத்தில் ரஹ்மான் செய்திருந்த அற்புதத்தின் ஒரு சில தீற்றல்கள் மட்டும் உணர முடிந்தது. அதுவும் காதல் காட்சிகளில் மட்டும். பாடல்கள் வழக்கப்படி அட்டகாசம். ஆனால் ஒரே குறை – ரஹ்மானின் இசையில் தனுஷுக்கு ஒரு பாடலைக் கொடுத்திருக்கலாம். அவரது குரல் எனக்குப் பிடிக்கும்.
ஒரு இயக்குநராக பரத்பாலா இந்தப் படத்தில் எதுவுமே செய்யவில்லை. மணிரத்னத்தின் பாணியையே (டெக்னீஷியன்களின் தரத்தால் படத்தை கரையேற்ற முயல்வது) பின்பற்றியிருக்கிறார். ஆனால் மணிரத்னத்தின் ரசனை பரத்பாலாவிடம் இல்லை.
ஒட்டுமொத்தமாக, ஒரு வலுவான கதை இல்லாமல், படம் முழுதும் வெறும் காட்சிகளின் தொகுப்பாக இருந்ததால், மரியான் மிகவும் அலுப்பான ஒரு அனுபவமாக இருந்ததை தவிர்க்கமுடியவில்லை.
எனக்குப் பிடித்த ஒரு பாடலின் மேக்கிங் வீடியோ இங்கே.
 

Raanjhanaa
Raanjhanaa-2013-Dhanush
வழக்கமாக ரொமாண்டிக் ஹிந்திப்படங்களில், ஹீரோயினை துரத்தித்துரத்தி காதலிக்கும் ஹீரோ இருப்பான். படத்தின் இறுதிவரை இந்த வேலையை செவ்வனே செய்து, ஹீரோயினை கரம்பிடிப்பது இவனது வேலை. இந்தமுறை, ராஞ்ஜனாவில் செக்கச்செவேல் ஹிந்தி ஹீரோவுக்குப் பதில், சாதாரணமான, பக்கத்து வீட்டு நபர் போன்று இருக்கும் தனுஷ்.
படத்தின் முதல்பாதி வேகமாக செல்கிறது. மரியானின் மரியானுக்கும், ராஞ்ஜனாவின் குந்தன் ஷங்கருக்கும் பிரதான வித்தியாசம் இங்கேதான். குந்தன் ஷங்கர், படம் முழுவதிலும் செயல்புரிந்துகொண்டே இருக்கிறான். முதல்பாதியில் கதாநாயகியை துரத்துகிறான். இரண்டாம் பாதியில் கதாநாயகியின் அருகிலேயே இருந்துகொண்டு அரசியலில் ஈடுபடுகிறான். ஆகமொத்தம் படம் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பதால், படமும் அதனைச்சுற்றி ஆக்டிவாக இருக்கிறது. ஆனால், மரியானில் இது இல்லை.
ராஞ்ஜனாவில் எனக்குப் பிடிக்காமல் போனது, படத்தின் இரண்டாம் பகுதி. அதில் கதை மிகவும் மந்த நிலையில் நகர்கிறது. அந்த இரண்டாம் பகுதியில் தனுஷைத் தவிர வேறு யாருக்கும் ஸ்கோப் இல்லை. அப்படி தனுஷுக்கு வாய்ப்பு இருந்தாலும், கதையே படுமொக்கையாக இந்த இரண்டாம் பாதியில் செல்வதால் எப்போது படம் முடியும் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. கூடவே, அதில் இருக்கும் ஒரு so called ட்விஸ்டுமே கொடுமை.
முதல் பாதி இல்லை என்றால் இந்தப் படம் படுதோல்வி அடைந்திருக்கும். முதல்பாதியில் ஒட்டுமொத்த படமும் தனுஷால்தான் நகர்கிறது. செம ஜாலியான நடிப்பை வழங்கியிருக்கிறார். வசனங்களை அட்டகாசமான உச்சரிப்பில் அவர் பேசுவது பிரமாதம். இந்தப் படத்தை பார்க்கும்போது, ஒரு நடிகராக, ஒரு முழுப்படத்தையும் தன் தோளில் தூக்கி சுமக்கும் பொறுப்பும் மெச்சூரிட்டியும் தனுஷுக்கு வந்தாயிற்று என்பது புரிந்தது. அதேசமயம் இந்தப் படத்தின் இரண்டாம் பாதியில் தனுஷை பார்த்தால் வழக்கமான அதே நடிப்புப் பிரச்னைதான் தெரிகிறது. மரியானைப் பார்த்தால் ராஞ்ஜனாவில் நடித்ததுபோலவே தெரிகிறது. ராஞ்ஜனாவைப் பார்த்தால் மயக்கம் என்ன, புதுப்பேட்டை சாயல். படத்தின் நாயகி சோனம் கபூர், கொடுமைக்கு இளைத்துப்போய், அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. படத்தின் பிரமாதமான அம்சம் – குந்தனுக்கும் அவனது நண்பர்களுக்கும் இடையே நிலவும் அருமையான நட்பு. குறிப்பாக, பிந்தியா என்ற பெண்ணுக்கும் குந்தனுக்கும் இருக்கும் நட்பு கலந்த அன்பு கலந்த காதல். அந்த பிந்தியாவின் வேடம் ஏற்று நடித்த ஸ்வரா பாஸ்கர் என்ற நடிகையை எனக்கு மிகவும் பிடித்தது.
ரஹ்மானின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடித்தன.
ஹிந்தியில் தனுஷின் முதல் படம் ஹிட். முப்பத்தைந்து கோடி பட்ஜெட்டில், இதுவரை நூறு கோடியை வசூலித்திருக்கிறது. இதுவரை கமல், ரஜினி உள்பட வேறு எந்த தமிழ் ஹீரோவுக்கும் கிடைத்திராத பெருமை இது. ஹிந்தியில் அற்புதமான நடிகராக வர தனுஷுக்கு வாழ்த்துகள் (ஆனால், அதற்கு அவரது நடிப்புப்பாணியை அவர் மாற்றிக்கொள்ளவேண்டும்).
இதோ ராஞ்ஜனாவில் இருந்து சில அட்டகாசமான பாடல்கள்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

இருட்டு அறையில் முரட்டு குத்து - ஐ சப்போர்ட் :-)

அராத்து இந்த படத்துக்கெல்லாம் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இந்த  படத்துக்கு எழும் எதிர்ப்பைப் பார்த்தவுடன் எழுத வேண்டிய கட்டாயம். முதலில் படம் :- மொக்கை படம். கொஞ்சம் கூட கவனமும் , மெனக்கெடலும் , ப்ரொஃபஷனலிஸமும் இல்லாத மட்டி படம். அடல்ட் காமடி : இதை எடுக்க மூளையும் ரசனையும் வேண்டும். கலா ரசிகனாக இருக்க வேண்டும். அடல்ட் காமடி என்ற பெயரில் இந்த படத்தில் இருப்பதெல்லாம் , கற்பனை வளம் இல்லாத அருவருப்பு காமடி.அதிலும் ஒரு ஓவியத்தை பார்த்து இருவர் நின்று கொண்டே சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் அருவருப்பின் உச்சம். அடல்ட் காமடியை விடுங்கள், படத்தில் காமடியே இல்லை. செக்ஸ் பற்றி , பொதுமக்கள் பேசிக்கொள்வதை , வெளிப்படையாக திரையில் வைத்ததால் ஆர்பரிக்கிறார்கள் , அவ்வளவே ! கவர்ச்சி : இதைப்போன்ற படங்களில் கவர்ச்சியாவது இருக்க வேண்டும். க்ளீவேஜ் , தொடையை காட்டினால் கவர்ச்சி என்பதெல்லாம் , பிரசாந்த் காலத்தோடு மலையேறி விட்டது. இந்த படத்தில் காயலான் கடை பார்ட்டி , டொக்கு ஒடிசல் வாங்கியதையெல்லாம் காட்டி கவர்ச்சி என்கிறார்கள், மண்ணாங்கட்டி ! அவனவனு...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

ரகசியத்தின் அரூப நிழல்கள் ( சிறுகதை )

ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது பக்கத்திலோ அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால் பதட்டப்படாமல் பாதியில் நிறுத்தாமல் முழுவதும் வாசிக்க முயற்சி செய்யுங்கள். அவன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது தனிமனித உடல் இச்சைகளை அல்ல. காமத்தின் சுவிசேஷத்தை. Story of a male whore….. Whore? இந்த வார்த்தை எத்தனை அபத்தமானது தெரியுமா? உடல் என்பது பிரார்த்தனைக்கானது, சமயங்களில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிரார்த்திக்க, இன்னும் சில சமயங்களில் ஒரு ஆணும் சில பெண்களும் அல்லது சில ஆண்களும் சில பெண்களுமென தேவை எதுவோ அதுவாக கொண்டாடுவது. அதிகாரத்தின் வழியாய் தனிமனித விருப்பங்களை ஒடுக்க நினைக்கும் சர்வாதிகார மனம் கொண்டவர்களை வேண்டுமானால் இப்படி சொல்லலாம், whore. அந்த இணையத் தளத்தில் முகம் மட்டும் மறைக்கப்பட்ட இவன் படத்திற்குக் கீழ் தன்னை இப்படி அறிமுகம் செய்திருந்தான். Hi I am foot fetish slave. Looking for a mistress who wants me to be her slave dog. This relation is full of submission and domin...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...