முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசீகர எழுத்துக்காரன்


சரவணன் சந்திரன்(எழுத்தாளர்)


சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது

சரவண சந்திரனின் பன்முக படைப்புகள்




தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு.
இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை 
பேசுபவை.ஒன்று தெற்காசிய நாடுகளுக்கு வணிகம் செய்யப் போன ஒரு இளைஞனின் கதை,மற்றொன்று தரகு வேலைகள் முதன்மை பெற்ற  அரசியல் உலகில் புகுந்த ஒரு சாமானியனின் கதை.மூன்றாவது படைப்பு விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள்" நான்காவதாக மீட்சிக்காக தவிக்கும் மனிதர்களின் கதைகள் என்கிறார் சரவணன் சந்திரன்.
"முழு நேர எழுத்தாளராக விரும்பவில்லை"என்று அவரே கூறினாலும் குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க இளம் படைப்பாளராக உயர்ந்திருப்பவர் அவர் .
2016 ஆண்டிற்கான விகடனின் டாப் 10 இளைஞர்களில் ஒருவர் சரவணன் சந்திரன்.

வாழ்வனுபவமே ஒரு நல்ல எழுத்தின் சாரம் என்ற எளிமையான புரிதல்தான் அவரது படைப்புகளாக நம் முன் விரிகிறது. வழுக்கிச் செல்லும் மெட்ரோ ரயிலின் ஓசையற்ற பயணம் போல சரளமான நடை இவருடையது.இது வாசிப்பை எளிமையாக்குகிறது.அவரிடம் அதிகம் சொல்லக்கூடிய குறையே இந்த எளிமைதான்.சற்று நிதமான சித்தரிப்பு.எழுத்தில் கூடுதல் அடுக்குகளை சேர்ப்பது இன்னும் சிறப்பாக இருக்குமா என்பது அதிகபட்ச விமர்சனம். அவரது கவனம் வேறு திசைகளில் திரும்பாத பட்சத்தில் தமிழ் இலக்கியத்தளத்தில் இன்னும் சிறந்த எழுத்தாளராக சரவணன்சந்திரன் ஒரு நீண்ட இன்னிங்க்ஸ் போடுவார் என்று நம்பலாம்.


நாவல் : அஜ்வா
ஆசிரியர் : சரவணன் சந்திரன்
பதிப்பகம் : உயிர்மை


விலை : ரூ. 130
"அஜ்வா".. பாலைவனத்தில் வளரும் ஒரு வகை பேரிச்சம்பழம். அதை இங்கு கொண்டு வந்து செம்மண் பூமியில் விதைத்தால் அது துளிர் விட எத்தனை போராட்டமாக இருக்கும் ?? நம் கதையின் நாயகனும் அது போன்ற துளிர் விட முடியாத, ஆனால் துளிர் விடத் துடிக்க போராடும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அஜ்வா கதையின் மையம் "போதை." அதாவது போதை வஸ்துகளுக்கு அடிமையான, மிகவும் பயந்த சுபாவம் கொண்ட ஒருவன், தன் நாடோடி வாழ்க்கையை, சந்திக்கும் மனிதர்களை, அவன் பார்வையிலேயே நமக்கு கதையாகக் கூறுகிறான்.
போதைக்கு அடிமையானவர்கள் என்றால், சினிமாவில் காண்பிப்பது போல் மோசமானவர்களாக, பித்து பிடித்தவர்கள் போல் ஏதோ ஒரு இடத்தில் அடைந்துக் கொண்டெல்லாம் இருக்க மாட்டார்கள் என்பது புரிகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை எளிதாக கண்டு பிடித்து விடலாம். ஆனால் போதை வஸ்துகளை பயன்படுத்துபவர்களை இனங்காணவே முடியாது என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் உச்சகட்ட போதையை அனுபவிக்க அவர்கள் செய்யும் செயல்கள் பயங்கரம் !!
ஒருவரின் எண்ண ஓட்டங்களை அவரின் பார்வையில் இருந்து சொல்லும்போது அது சுய புலம்பலாக மாறிவிட வாய்ப்பு அதிகம். அதுபோல் அல்லாமல் அந்த எண்ண ஓட்டங்களை எழுதுவது என்பது ஒரு கலை. அது இந்த நாவலின் முதல் அத்தியாயத்திலேயே உணர முடிகிறது.
"ஐந்து முதலைகளின் கதை"யில் வரும் மனிதர்கள் போல் இந்நாவலிலும் நிறைய மனிதர்கள்.. டெய்ஸி, ஜார்ஜ் ஆண்டனி, விஜி அண்ணன், சுந்தர் சிங் அண்ணன், அம்மா, அத்தை, மினிஸ்டர் தாய்மாமன், ராஜன் அண்ணன், கனகரத்தினம், சங்கீதா, ராஜகுரு, சம்பத்....... இன்னும் இன்னும்.... பலப்பல மனிதர்களோடு பலப்பல கிளை கதைகளோடு சிறிதும் சுவாரஸ்யம் குன்றாமல், நாம் தெரிந்திராத, அறிந்திராத ஒரு வாழ்க்கையை நம்முன் அழகாக படைத்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
டெய்ஸியுடனான அத்தியாயங்கள் அழகான கவிதைகள் !!
ஜார்ஜுடனான நட்பு, அந்த பிணைப்பு.. "ரோலக்ஸ் வாட்ச்" சந்திரனை ஆங்காங்கே நினைவூட்டியது !!
இந்த நாவலில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள். வாசகனை பார்த்து கதையின் நாயகன் இவ்வாறு கூறுகிறான்.. "உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்கள் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையென்று நினைக்கிறேன். தவிர நீங்கள் ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல. தேவை இல்லாதவைகளை எல்லாம் உங்களிடம் கொட்டுவதற்கு"
வாசகனை கேனையனாக நினைத்து மலத்தை எழுத்தாக கொடுக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், வாசகனை பார்த்து இப்படி சில வரிகள். பெருமையாக உள்ளது சரவணன் சந்திரன்.
சாருவின் எழுத்தை வாசிக்கும்போது நடுவில் சில வரிகள் ச்சட்டென்று நம்மை வெடித்துச் சிரிக்க வைத்து விடும். அதுபோல் இந்நாவலிலும் அவ்வப்போது நம்மை ச்சட்டென்று புன்னகை பூக்க வைத்து விடுகிறார் சரவணன் சந்திரன். உதாரணம்..
ஹோமோ செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே பாவம் என்று நினைக்கும் ஜார்ஜ், பள்ளியில் சக மாணவர்களுக்கு செக்ஸ் கதைகள் கூறிக்கொண்டிருக்கிறான். நம் கதையின் நாயகன் ஜார்ஜிடம் கேட்கிறான்.. "செக்ஸ் கதைகள் சொல்வது மட்டும் பாவமில்லையா" என்று. அதற்கு ஜார்ஜின் பதில்.. "பாவமன்னிப்புக் கொடுக்கற பாதிரியாரே ஒரு தடவை செக்ஸ் புத்தகம் வாங்கிப் போவதைப் பார்த்தேன்" என்கிறான். இன்னொரு உதாரணம்.. அந்த ஜட்டி மேட்டர் :-)
அஜ்வாவை ஒரே சிட்டிங்கில் வாசித்து முடித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்தகத் திருவிழாவில் நீங்கள் வாங்க இருக்கும் புத்தக லிஸ்ட்டில் "அஜ்வா"வையும் தவற விடாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். வாங்கி வாசித்துப் பாருங்கள். அட்டகாசமானதொரு வாசிப்பனுபவம் கிடைக்கும் 

கருத்துகள்

  1. வாசகனை கேனையனாக மலத்தைக் கொடுக்கிற என்ற வரிகளைச் சகிக்க முடியவில்லை, எந்த எழுத்தாளனும் எழுத்தை மலம் என்று கூறுவதை ஏற்றகொள்ளமாட்டான்(நல்ல வாசகனும் கூடதான்).

    பதிலளிநீக்கு
  2. சசிகலா கூறுவது //பல எழுத்தாளர்களின் எழுத்துகளை படித்து மனம் கெட்டு அதில் தனக்கு தேவையான தன் ரசனைக்குரிய எழுத்துக்களை இனம் கண்டுகொண்ட போது ஏற்படும் சிலிர்ப்பின் மிகுதியால் அந்த வரிகளை கூறி இருக்கலாம் என்றே கருத வேண்டியிருக்கிறது அன்பரே..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...