முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"இவள்"களுள் நான் 25+



21 22 23 வயதின் யுவதிகள் அணியும் ஆடைகள் எல்லாம் கவர்ச்சியாக உள்ளதா? அல்லது இவர்கள் கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறார்களா? என்று தெரியவில்லையே, இவள்கள் பெற்றோர் எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள் போல், முன்பெல்லாம் சுடிதாரின் தோள்பட்டையை மேலேற்றி விடுவது வழக்கமாக இருந்தது ஆனால் இங்கொருத்தி முன்னிழுத்து விட்டு மெலிதான க்ளிவேஜ் தெரியும்படி பார்த்துக்கொள்கிறாள். துப்பட்டாவையும் கழுத்தை ஒட்டி போட்டுகொண்டு ச்சே என்ன இதெல்லாம். சுடியும் முட்டுக்கு மேல் வரைக்கும் தான் இருக்கிறது, கேட்டால் ஷார்ட் என்பாள். வயிறு flat ஆ இருப்பதாலயே அவளுக்கு எல்லா ஆடைகளும் பொருந்துகிறது, மார்பு தூக்கி வைத்தாற்போல் இருக்கிறது கண்டிப்பாக புஷ்அப் ப்ரா போட்டு இருப்பாள். இன்னொருத்தியின் தொப்புளில் சிறியதாக ஒரு கம்மல். எப்படி வெட்கமே இல்லாமல் காது குத்துவது போல காண்பித்துக்கொண்டிருந்திருப்பாள்? ஜீன்ஸ் ஸ்லீவ்லெஸ் டாப்ல ஒருத்தி அனாயசமாக ஒருவனின் பைக் பின்னால் இருபக்கமும் கால் போட்டு அமர்ந்து கட்டிக்கொள்கிறாள், டெய்லியும் அக்குளை சேவ் செய்வாளா இருக்கும். நடக்கும் போது தாளத்திற்கு ஏற்ற வகையில் அசையும் புட்டம், ஹீல்ஸ் போட்டு பழகி இருப்பாள். எங்கோ படித்தேன் ஹீல்ஸ் செருப்பு போட்டால் பிரசவத்தில் சிக்கல் வரும் என்று. சர்வ சாதரணமாக ஒருவனின் தோளில் கைவைத்து தாங்கியபடி ஏதோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டு…. எப்படி முடிகிறது? இந்த இளைய சமுதாயம் ஏன் இப்படி வீணாகிறது? நல்லவேளை நான் அப்படியெல்லாம் இல்லை. இப்படியெல்லாம் உடம்பை வெளிக்காட்டாமலே என்னை பல ஆண்கள் திரும்பிப்பார்ப்பார்கள் அது தானே என் பெருமை. – இதுவெல்லாமே இளைய சமுதாயத்தின் மீதான தன்னுடைய அக்கறை என்றே நம்பினாள் மதுமிதா. அப்படி நம்புவது அவளின் 35 வயதுக்கு ஆசுவாசமாக இருந்தது.
எனக்கு மகள் இருந்தால் அவளும் இப்படிதான் ஆடை அணிவாள் அவளை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் தவிர அது அவசியமற்ற ஒன்று. அதெப்படி என் மகளை மட்டும் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு பார்க்க முடிகிறது என்ற கேள்வி ஒன்று உண்டு. ஆசைகள் எல்லாருக்கும் பொதுதானே என்ற சமாதானமும் உண்டு. என் உதிரம் என்பதால் வரும் சலுகைகள் அவை. மகள் இல்லை என்பதால் அந்த பிரச்சினைக்கு போக வேண்டாம் தற்போதைய பிரச்சினை மகன் தான். நேற்று துணி துவைத்துக்கொண்டிருக்கும் போது அவன் உடுத்திய கைலியில் விந்துப்படிமம். அவனுக்கு தனியறை கொடுத்தது தப்போ? இது இயல்பு தானா? என்ற மனதை அரிக்கும் கேள்விகள் தான்டி, அவன் திடீரென்று குழந்தையில் இருந்து இளைஞன் ஆகிவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதே பதைபதைப்பு தான் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்த பின்னும் இருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கிறான், டிவியில் முத்தக்காட்சிகள் வந்தால் அவனே சேனலை மாற்றும் அளவுக்கு பக்குவம் இருக்கிறது என்றெல்லாம் பெருமையில் இருந்தேனே… என்ன இப்படி ஆகிவிட்டது. இதை அவனிடம் கேட்க முடியாது.. சரி கணவனிடம் சொன்னால் அந்த மனுஷனுக்கு பிள்ளைய போட்டு அடிக்கத்தான் தெரியும். வேலை அலைச்சலில் வார நாட்களில் வருபவரிடம் இதை ஏன் சொல்லிக்கொண்டு என்றொரு எண்ணம் வேறு. தோழியிடம் சொன்னேன் அவள் கெக்கேபிக்கே என்று சிரித்து உன் மகன் கல்யாணத்துக்கு தயாராகிட்டான் என்று கேலி பேசுகிறாள். ஒழுங்கா படிப்பானா? டாக்டர்ட்ட கவுன்சலிங் கூட்டிட்டு போகலாமா? பேசாம நெட் கனெக்சன கட் பண்ணிட்டா என்ன? கேள்விகள் கேள்விகள் கேள்விகள் கடந்து அவனையும் அவன் வயதையும் புரிந்துகொள்வதற்கு சில மணி நேரங்கள் பிடித்தது. காமத்தை கடந்துவந்தால் காதல் பிறக்கும். அவன் காமத்தை அவன் கடக்கிறான், பெருங்கருணை பிறக்கிறது. பிறந்து பசியிலவன் அழுத போது தோன்றிய அதே கரிசம்.
மகன் வளர்ந்துவிட்டான் எனத்தெரிந்ததும் எனக்கு இன்னும் வயதாகிவிட்டது போல உணர்கிறேன். ஒன்றிரண்டு நரைமுடிகள், பிரசவச்சுருக்க வயிறு. கொஞ்சம் குண்டடித்திருகிறேன், அவ்வளவுதான் மற்றபடிக்கு நான் அழகாகதான் இருக்கிறேன். அதனால் தான் இந்த சரவணன் என் பின்னாலயே சுற்றுகிறான். அவனுக்கும் என் வயது தான் ஆகிறது. ஆள் பார்க்கவும் ஓரளவுக்கு ஜெய் மாதிரி இருப்பான். இவனை சமாளிப்பது பெரும் பிரயத்தனம். ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு முகத்தை திருப்பிக்கொள்வதும் சாத்தியமில்லாத ஒன்று.ஒன்றாக காப்பி குடிப்பது ஒன்றாக சாப்பிடுவது என்று பரிணமித்திருந்தது அவனோடான பழக்கம், அவனின் கேள்விகளுக்கு சிரிக்காமல் பதில் சொல்ல முடியவில்லை. இதுவெல்லாம் புதியதாக இருக்கிறது யாரும் என்னிடம் இப்படியெல்லாம் பேசியதே இல்லை. பெண்ணின் ஆடைக்குறைப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து, தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் விர்ஜின் இல்லை என்றுவந்து முடிப்பான். புணர்வு தொடர்பானது என்று அறிந்ததுமே சட்டென்று உள்ளங்கை வியர்க்க துவங்குகிறது. உடனே அந்நேரத்தில் நான் பேச்சை மாற்றுவதற்கு முன் அவனே மாற்றிவிடுகிறான்/.. தொடர்பே இல்லாமல் – உங்களுக்கு எப்போதுதான் வயதாகும்? இப்படி அவன் கேட்க வரும் சந்தோசம் அவன் பேச்சை கேட்கத்தூண்டியது.
ப்ளவுஸ் எல்லாம் எங்க ஸ்டிச் பண்றிங்க நல்லா fit ஆ இருக்கு, என் மனைவிக்கு தான் நல்ல டெய்லர் அமையவே இல்ல. என அவன் பார்க்கின்ற இடங்களை வெளிப்படையாக சொல்லிக்காட்டும் உத்தியை வியக்கிறேன். மனம் மூளைக்கு கட்டளை இட்டுக்கொண்டே இருக்கிறது. ”பதில் சொல்லாத மதுமிதா”
கண்ணு சோர்வா இருக்கு நைட் நேரங்கழிச்சு தூங்கினிர்களா? மனம் பலவித இரட்டை அர்த்தங்களை சொல்கிறது, ”பதில் சொல்லாமல் சிரித்துவை மதுமிதா”
இந்த கவிதை எப்படி இருக்கிறது பாருங்கள்
”தேவதைகள் நீலச்சேலையில் வரலாம்
நிரம்பியிருக்கும்
மது(மிதா)க்கோப்பை போல” / ‘புரியவில்லை என்று திருப்பிக்கொடுத்துவிடு மதுமிதா’
சிவப்பு, நீலம், இளமஞ்சள், ரோஸ், ஆரஞ் – என்ன இதெல்லாம்?
இதெல்லாம் போன வாரம் நீங்க கட்டுன சேலை நிறங்கள். – ஓ! வெகுவாக கவனிக்கிறான் ”கவனம் மதுமிதா”
நாளைக்கு என்ன கலர் சேலை உடுத்துவிங்க சொல்லுங்க ”’தெரியாதென்று சொல் மதுமிதா இல்லையென்றால் இவனுக்காகவே சொன்ன வண்ண சேலையை உடுத்த வேண்டி வரும்”
புதன் கிழமை ஒரு மல்ட்டி கலர் சேலை இருக்கு அதைதான் உடுத்தணும்,நாளைக்கு தெரியல.
புதனன்று மல்ட்டிகலர் சேலையை தொட்டதும் வந்தது அவன் நினைவுதான், புதன் வியாழன் இரண்டு நாட்களாக அவன் வேலைக்கு வரவில்லை அவனை தேடுகிறேன். வேலைகளை முடித்துவிட்டு படுக்க வந்த போது அலைபேசி ஒளிர்ந்தது. அவன் செய்தி தான்
kiss you madhumitha.
என்ன இது என்று ஆத்திரம் கோபம் கிளர்ச்சியில் பதில் அனுப்பும் முன் அடுத்த செய்தி
sorry, ,miss you madhumitha
hello
hello
hello
enna aachu?
அவன் பார்வைகளை உள்ளூர ரசிக்கிறேன். ரசிப்பது வெளித்தெரியாமல் இருக்க மனமுதிர்வு ஏற்பட்டதாக நடிக்கிறேன். பதின்மத்தில் பெண்கள் பின்னால் ஆண்கள் சுற்ற ஆரம்பிக்கும் ஒரு பருவம் வரும் அல்லவா?! அப்போதே எனக்கு திருமணம் செய்து வைத்து அந்த ஆசையை நீர்த்துப்போகவைத்துவிட்டார்கள். இப்போது இவன் பேச்சுக்களும் பார்வைகளும் அதை மீட்டுக்கொடுப்பதாக தோன்றுகிறது. இளைஞர்கள் காதலில் இருந்தால் எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாம மந்திரித்து விட்டது போல திரிவார்களே அப்படியான ஒரு நிலை. இது தவறா சரியா என்ற தர்க்க ரீதி நியாயங்கள் எப்பொதும் ஒரு முடிவிற்கு வரப்போவதே இல்லை. என்னை ரசிக்கிறாய் ரசித்துவிட்டு போ என்பதில் உள்ள ஆபத்து அவன் ரசிப்பதை ரசிக்கத்தொடங்கிவிடுதல்தான்.
மறுநாள் வேலைக்கு வந்தான்
என்னங்க மெசேஜ்க்கு ரிப்ளை செய்யவே இல்ல?
…எதுக்கு மெசேஜ் பண்ணுனிங்க?
சும்மாதான் உங்களை தேடுச்சி
….ஏன்?
ஏனோ!
சரி சொல்லுங்க ஏன் ரிப்ளை பண்ணல மொபைல்ல பேலன்ஸ் இல்லியா? ச்சே தெரிஞ்சா ரீசார்ஜ் செஞ்சு விட்டுருப்பேனே.
….பேலன்ஸ்லாம் இருக்கு.. ரிப்ளை அனுப்பனும்ன்னு தோணல
கோபமா இருக்கிங்களா?
….இல்லியே
sorry ங்க அது நான் உங்களுக்கு வேணும்ன்னு அனுப்பல வேற ஒருத்தங்களுக்கு அனுப்ப வேண்டியது உங்களுக்கு மிஸ்பிளேஸ் ஆகிட்டு.
….எது kiss you வா?
இல்லங்க அதுக்கு அடுத்து அனுப்பியவை.
….இல்லியே எனக்கு அதுக்கு அடுத்து ஒன்னும் மெசெஜ் வரலியே
வரலியா..? இதெல்லாம் என்று sent message காண்பித்தான்.
ummmaaa
enna dress?
ippa naan anka varavaa?
i love you di
லேசாக தலை சுற்றியது. அவன் மெசேஜ் காரணம் அல்ல. அது என் மொபைலில் காணாமல் போனதின் காரணம் தேடி.
அவன் நம்பரும் டெலிட் செய்யப்பட்டு இருந்தது.
குழப்பத்தில் தெளிந்து வீட்டுக்கு திரும்பும்போது க்ளீவேஜ் தொப்புள் யுவதிகள் புனிதைகளாக தெரிந்தார்கள். நான்தான் அசிங்கமாக போய்விட்டேன்..
பரவாயில்லை
என்னைப் புனிதப்படுத்தும் பெருங்கருணையை என் மகன் வழங்குவான்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...