முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்


மலர்மன்னன்

எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்’ என்கிற ஆய்வு நூலின் வாயிலாகக் கண்ணைக் கூசும்படியான வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் இருவரும் இணைந்து ஆய்ந்து பதிவு செய்திருக்கிற காத்திரமான ஆவணமாக இந்த நூல் தமிழ்ச் சமூக ஆய்வுத் தளத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
தோள் சீலைக் கலகத்தை முன்வைத்து இந்த நூல் தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளபோதிலும், தமிழ் நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு வகுப்பின் சமூக அந்தஸ்து, படிநிலையில் தனக்குரிய இருக்கையைத் தக்க வைத்துக் கொள்ள அது மேற்கொள்ள நேர்ந்த போராட்டங்கள், பல முனைகளிலிருந்தும் செலுத்தப்பட்ட அழுத்தங்களின் விளைவாக அது தனது முயற்சியில் அடைந்த தோல்வி, சமூக அமைப்பில் ஒரு கெளரவமான தட்டில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அது மேற்கொண்ட மாற்று நிலைப்பாடு ஆகியவற்றை மிக விரிவாக ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தக்க ஆதாரங்களுடன் பதிவு செய்யும் ஆவணமாகத் தீவிரம் கொள்கிறது. பரந்துபட்ட ஆய்வின் நகர்வு, பல முகமூடிகளைக் கிழித்தெறிந்தும் பொதுப் புத்தியில் பதிந்து விட்டிருக்கிற நம்பிக்கைகளைக் கலைத்துப் போட்டும் முன்னேறுகையில் நூல் நாடகத் தன்மையுடன் வாசிப்பில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. வெறும் வறட்டுத்தனமான தெரிவுகளாக அல்லாமல் வாசகன் சலிப்படையாமல் ஆர்வத்துடன் படிக்குமாறு பக்கங்கள் விரைகின்றன.
கிழிபடும் முகமூடிகளுள் குறிப்பிடத்தக்கது, தமிழ்ப் பண்டித உலகில் ஒர் உயர்ந்த பீடம் அளிக்கப்பட்டுள்ள பிஷப் கால்டுவெல்லினுடையது.
திருநெல்வேலி மாவட்டமும் அதற்குத் தெற்கே நிலப் பரப்பு குறுகலாய் முற்றுப்பெறும் கன்னியாகுமரி மாவட்டமும் நாடார் அல்லது சாணார் வகுப்பினர் மிகுதியும் வாழும் பகுதிகள். இவற்றில் கன்னியாகுமரி மாவட்டம் இந்த நூல் ஆய்வுக்கு மேற்கொள்ளும் கால்கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. க்ன்னியாகுமரியிலும் சரி, திருநெல்வேலியிலும் சரி, இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் கிறிஸ்தவ மதமாற்றம் மிக மும்முரமாய் நடந்தேறியுள்ளது. எனினும் மற்ற வகுப்பாரைப் போலன்றி மதமாற்றம் நிகழ்ந்தான பிறகும் சாணாரிடையே வியக்கத்தக்கவாறு வகுப்பொற்றுமை சமயங்களில் வீரியத்துடன் எழுவதற்கு மதம் ஒரு தடையாக இருக்க வில்லை. இது தேசிய உணர்வுக்குச் சமமானது. சாணார் என்கிற பிரிவு, சமூகத்தில் எதிர்ப்புக் காட்டாது தலைமுறை தலைமுறையாக மிகவும் இயல்பாக அடங்கிப் போகிற கீழ்ச் சாதி அல்ல என்பதற்கு இது ஓர் அத்தாட்சி.
இதில் இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம், இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் மத மாற்றம் என்பது கொள்வினை-கொடுப்பினையில் எவ்விதக் குறுக்கீடும் செய்வதில்லை. ஹிந்து நாடார்-கிறிஸ்தவ நாடார் என்று இரு மதப் பிரிவினராக இவர்கள் இருந்து வருகிற நிலை ஏற்பட்ட பிறகும், இன்றளவும் இவர்களிடையே மதம் என்பது ஒரு பிரச்சினையாக இல்லாமல் பெண் எடுப்பதும் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது. ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக ஹிந்துக்களும் கிறிஸ்தவராக மதம் மாறியவர்களும் அவரவர் சமய நம்பிக்கைகளுடன் வாழ்வது நாடார் சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது ((எனினும் எல்லாப் பிரிவினரிடயேயும் இவ்வாறான மத வேறுபாடு பாராட்டாத கொள்வினை கொடுப்பினை வழக்கில் இல்லை என ஆய்வாளர் அ. கணேசன் தெரிவிக்கிறார் கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் இன்றைய சூழலில் இந்த ஒற்ற்றுமைக்கு பங்கம் விளையத் தொடங்கியுள்ளது என்றும் தெரிய வருகிறது).
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வகுப்பினரிடையே மட்டும் எத்தகைய நிலையிலும் தமது தனி அடையாளத்தை இழந்துவிடலாகாது என்கிற உறுதிப்பாட்டுடன் அதைக் காத்துக் கொள்கிற அளவுக்குத் தமது வகுப்பு அல்லது சமூகப் பிரிவின் மீது சுயாபிமானமும் பெருமிதமும் இருக்குமானால் அது பொதுவாக இயல்பாகவே போர்க் குணம் வாய்ந்த க்ஷத்திரிய வர்ணத்திற்குரிய லட்சணமாகவே இருக்கக் கூடும்.
எனில் இந்தச் சாணார் அல்லது நாடார் எனப்படுவோர் யார்?
இந்தக் கேள்விக்கு மிகவும் விரிவாக விடை அளிக்கிறது இந்த ஆய்வு நூல். விடை இவ்வாறு விரிவடைகையில், நூலுக்கே தலைப்பாக அமையும் அளவுக்கு முக்கியத்துவம் தரப்படும் தோள் சீலைக் கலகம் இரண்டாம் பட்சமாகி, நாடார் அல்லது சாணார் எனப்படுவோர் நாடாளும் சான்றோர் குலத்தவரே என்பதை நிலை நிறுத்துவதே லட்சியமாகக்கொண்ட ஆவணமாகி விடுகிறது.
நாடார் எனப்படுவோர் நெல்லை, குமரி மாவட்டங்களில் மட்டுமின்றி அவற்றுக்கு வடக்கே ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களிலும் கணிசமாக் இருந்து வருகின்றனர். தஞ்சையிலுங்கூட இவர்கள் பெருமளவில் உள்ளனர். தூத்துக்குடி அருகே மிஷனரிகள் நாசரேத் என்கிற குடியேற்ற ஊரை உருவாக்கியபோது அதில் தஞ்சையிலிருந்துதான் மத மாற்றம் செய்யப்பட்ட நாடார் பெரு மக்களைக் குடியேற்றியதாகத் தகவல் உண்டு.
தஞ்சைக்கும் வடக்கே தொண்டை மண்டலம் என்று வந்தால், தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்கிற வழக்கே உ.ள்ளது. இந்தச் சான்றோர் சாணார்தான் என்பதை நிறுவுகிறது, சென்னை கலெக்டராக இருந்த எல்லிஸ் துரை, சென்னைப் பட்டணத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வெட்டிய இருபத்தேழு கிணறுகள் பற்றிய தகவலைப் பதிவு செய்யும் வகையில் எழுதிய தமது செய்யுளில் எடுத்தாண்ட ’ஜெயங்கொண்ட தொண்டிய சாணார் நாடு’ என்ற வழக்கு. இதனை இந்நூலும் பொருத்தமாக நினைவூட்டுகிறது. தொண்டை மண்டலத்துச் சான்றோராகிய சாணார் ஆளுமைக்க்குரிய அதிகாரம் படைத்தோர் என்பதைச் சுட்டும் விதமாக கிராமணி என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதையும் நூல் கவனப்படுத்துகிறது.
நமது சமூகத்தில் சாதி அமைப்பானது மேல், கீழ் என்கிற செங்குத்தான கோபுர அடுக்கு அமைப்பாக உருவானது அல்ல. மாறாக, அது கிடையான, அதாவது படுக்கைவாட்டில் உருவான அமைப்பு என்கிற கருதுகோளுக்கு வலுவூட்டுவதாக இந்த நூல் உள்ளது.
ஐரோப்பியப் பார்வையில் மட்டுமே மேல்சாதி கீழ்சாதி என்கிற செங்குத்து அடுக்கிலான சாதி அமைப்பு தென்பட்டுள்ளது. ஐரோப்பியச் சிந்தனை வழியிலேயே ஆய்வைத் தொடர்ந்து பழகிய நமது ஆய்வாளர்களும் இன்றளவும் ஐரோப்பியப் பார்வையிலேயே சாதியமைப்பை அணுகி வருகின்றனர். இத்தடத்திலிருந்து விலகி, சுயமான பார்வையுடன் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் சாதியமைப்பை அணுகியிருப்பது நூலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
சாதிகள் என்பவை உயர்வு-தாழ்வு என்கிற அடிப்படையில் உருவானவை யல்ல; ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சாதிகள் கூட்டணியின் கை மேலோங்கி, உயர்வுநிலை பாராட்டி, பிற சாதிகளைத் தம்மைவிடத் தாழ்வானவை என்று சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வினை வலிந்து நிறுவி வந்துள்ளது. எனவே சாதிகளிடையே உயர்வு-தாழ்வு என்பது அவ்வப்பொழுது இடம் மாறி வந்துள்ளது. நாடாளும் வகுப்பினரான நாடார் அல்லது சாணார் இவ்வாறு வேளாளர் வகுப்பினரின் கரம் மேலோங்கியபொழுது தாழ்வடைய நேரிட்டது என்பதை இந்நூல் பல கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் சான்றாக முன்வைத்து நிறுவுகிறது.
இதன் அடிப்படையிலேதான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாக விளங்கிய குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த தோள் சீலைக் கலகம் ஆராயப் படுகிறது. சாணார் எனப்படுவோர் கீழ்ச் சாதியினர் ஆதலால் சாணார் சாதிப் பெண்களுக்கு இடுப்புக்குமேல் சேலைத் தலைப்பை தோளில் சுற்றி மார்பகங்களை மறைக்கும் உரிமை இருந்ததில்லை என்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் சாணார் சாதியினரை மத மாற்றம் செய்து அவர்களை நாகரிகப் படுத்திய பிறகுதான் சாணார் சாதிப் பெண்கள் ரவிக்கை அணிந்தும் சேலைத் தலைப்பால் மார்பகங்களை மூடியும் நடமாடத் தொடங்கினர் என்பதும், சாணார் சாதிப் பெண்டிர் இவ்வாறு மார்பகங்களை மறைத்துக் கொள்வதற்கு உயர் சாதியினரான நாயர்களும் பிள்ளைமார்களும் தடை விதித்தபோது, அதனை எதிர்த்து சாணார் நடத்திய உரிமைப் போருக்கு மிஷனரிகள் துணை நின்று அவர்களுக்கு அந்த உரிமை கிடைக்கச் செய்தனர் என்பதும் மிஷனரிகள், ஐரோப்பிய ஆய்வாளர்கள், அவர்கள் வழியில் ஆய்வு செய்த நமது ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தி.
குறிப்பாகத் தமிழ் நாட்டுச் சாதிகள் குறித்து ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் எழுதிய ஐரோப்பியருள் பிஷப் கால்டுவெல் முக்கியமானவர். ஆதாரப்பூர்வ மான ஆய்வாளர் என்று கொண்டாடப்படுகிற இவர், திருநெல்வேலிச் சாணார்கள் என்ற தமது நூலில் சாணார்கள் கீழ்ச் சாதியினர் என்றே வகைப்படுத்துகிறார். அவர் எழுதிய சில கட்டுரைகளிலும் ஒரு இடத்தில் அவர்களை சூத்திரராகக் கொள்ள வேண்டும் என்றும் இன்னொரு இடத்தில் சூத்திரரைவிடக் கீழ்ச் சாதியினர் என்று தோன்றுவதாகவும் எழுதுகிறார். பிறகு அவரே சாணார்களில் சிலர் அவர்கள் வாழும் அவ்வப் பிரதேசங்களின் ஆட்சியாளர்களாகத் தோற்றமளிக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார். இந்த முரண்பாட்டை இந்நூலாசிரியர்கள் சிந்தனைத் தெளிவின்மை என்ற விமர்சனத்துடன் பதிவு செய்துள்ளனர்.
சாணார்கள் கீழ்ச் சாதியினர் எனில் அவர்களுக்கு நில உடைமையோ தமக்குச் சொந்தமான நிலத்தை தானம் வழங்கும் பாத்தியதையோ இருந்திருக்க வாய்ப் பில்லை. ஆனால் முதன் முதலில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்காக லண்டன் மிஷனரிக்கு நிலக் கொடை அளித்தவர் ஒரு சாணார் என்கிற தகவலை இந்நூல் அளிக்கிறது. மேலும், தோள் சீலைக் கலகம் நடந்த திருவிதாங்கூர் சமஸ்தான ஆவணங்களிலேயேகூட சாணார் எனப்படும் நாடாக்கமார் சிலர் நிலச்சுவான்தார்களாக இருந்துள்ளமைக்குச் சான்று உள்ள விவரத்தையும் இந்நூல் தெரிவிக்கிறது.
இதேபோல் வேள்வி நடத்திக்கொடுத்த, வேத அத்யயனம் செய்த பிராமணருக்கும் சாணார்கள் நில தானம் செய்தமைக்கு ஆதாரம் உண்டு.
கால்டுவெல்லேகூட, ’தாம் குடியேறிய இடையன்குடி ஊரினை இவ்வூருக்கு அருகில் உள்ள குட்டம் என்ற சிற்றூரில் வாழ்ந்த மார்த்தாண்ட நாடாக்கள் எனப்படும் சான்றோர் குல நிலைமைக்காரர் பிரிவு நிலக்கிழாரிடமிருந்து 99 வருடக் குத்தகைக்குப் பெற்றார். இப்பகுதியில் குடியிருந்த அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த மக்களுமே குட்டம் மார்த்தாண்ட நாடாக்களுக்கு ஆண்டு தோறும் குடியிருப்பு வரி, குடும்பங்களில் நிகழும் சுப, அசுப காரியங்களுக்கு உரிய வரிகள் ஆகியவற்றைச் செலுத்தி வந்தனர்’ என்றும், ’குட்டத்தைச் சுற்றிக் கொம்மடிக்கோட்டை, படுகைப் பற்று, செட்டியாப் பற்று, தண்டு பற்று, பரமன் குறிச்சி, பள்ளிப் பற்று, செம்மறிக்குளம், வீரப்ப நாடார் குடியிருப்பு, காயாமொழி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நிலைமைக்கார நாடார்களின் ஊர்கள் உள்ளன. அவ்வூர்களில் அரச குலச் சான்றோரான நிலைமைக்கார நாடார்கள் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் எல்லாம் (பல்வேறு சாதிகளைச் சேர்ந்த) தம் குடிமக்கள் மீது தொடர்ந்து தம் அதிகாரத்தைச் செலுத்தி வந்தனர்’ என்றும் நூலாசிரியர்கள் தகவல்கள் அளிக்கின்றனர். இந்த உண்மை தெரிந்திருந்தும் கால்டுவெல் திருநெல்வேலி சாணார்கள் என்ற தமது நூலில் சாணார் சமூகத்தவர் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், ஹிந்து சமயத்தின் சமூக அதிகார அடுக்கில் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும் வைதிக சமயத்துக்கு மாறுபட்ட சிறு தெய்வ வழிபாட்டினையே (இதுவும் ஹிந்துஸ்தானத்து மக்களைப் பலவாறு பிரித்துப் பின்னங்களாக்கினால் எளிதாக அவர்களை மத மாற்றம் செய்துவிடலாம் என்கிற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்டுவாதம்தான்!) பின்பற்றி வருகிறார்கள் என்றும் மந்த புத்திக்காரர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்.
நாடார் அல்லது சாணார் வகுப்பில் உயர்நிலை, இடைநிலை, கடை நிலை என்ற பிரிவுகள் இருப்பதும் உண்மையே. இதனை நூலாசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆயினும், பெரும்பாலான சாதிகளில் இவ்வாறான உயர், இடை, கடை நிலைகள் இருக்கவே செய்கின்றன. நாடார் வகுப்பு மட்டும் இதற்கு விதி விலக்கு அல்ல. இதையும்கூட கால்டுவெல் அறியாதவர் அல்ல. எனினும், ‘தாழ்ந்த கீழ்ச் சாதிகளில் உயர்ந்த அடுக்குகளைச் சேர்ந்தவர் என்றோ, மத்திய ஜாதிகளில் கீழ் அடுக்கைச் சேர்ந்தவர்கள் என்றோதான் இவர்களை வர்ணிக்க முடியும்; இவர்கள் எழுத்தறிவில்லாத மூர்க்கர்கள்; ஆயினும் காட்டுமிராண்டி நிலையிலிருந்து பல மடங்கு உயர்ந்தவர்கள்’ என்றெல்லாம் தமது நூலில் சாணார்களைப் பற்றி மனம்போன போக்கில் விவரிக்கிறார். திருநெல்வேலி மிஷனரிகளின் மதமாற்றப் பணி பற்றிய உரையில், ’பிற சூத்திரச் சாதியினர் ஹிந்து சமயக் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதுபோல் சாணார்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சாணார் பெண்கள் இடுப்புக்குமேல் உடையணிவதில்லை’ என்றும் குறிப்பிடுகிறார் (இந்தியாவில் உள்ள கீழ்ச் சாதி மக்களை நாங்கள் அரும்பாடுபட்டு மத மாற்றம் செய்து அவர்களை விவரம் தெரிந்தவர்களாக நாகரிகப்படுத்தி வருகிறோம். இதற்காக நாங்கள் மேல் சாதியினரின் கடும் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்றெல்லாம் அங்கலாய்த்து, தம் நாட்டு மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று நன்கொடையினை அதிக அளவில் திரட்டுவதே இதன் நோக்கம்).
சாணார் வகுப்புப் பெண்டிர் கிறிஸ்தவ மத மாற்றத்திற்குப் பிறகே இடுப்புக்கு மேல் ஆடை அணியும் வழக்கத்தை மேற்கொணடனர் என்றும் அது பிறகு ஹிந்து சமயத்தில் தொடர்ந்து நீடித்த சாணார் வகுப்பிலும் பின்பற்றப்பட்டது என்றும் கருதுவது தவறான தகவல் என்பதைப் பல வலுவான ஆதாரங்களுடன் நூலாசிரியர்கள் நிறுவுகின்றனர். மதம் மாறாத சாணார் வகுப்புப் பெண்டிரும் ரவிக்கை அணிந்து வந்துள்ளனர் என்பதை நிரூபணம் செய்யும் புகைப்படங்களும் பழங்காலச் சித்திரங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம், கேரளத்தில் நாயர் சாதிப் பெண்டிர் இடுப்பில் வெறும் முண்டு மட்டும் கட்டிய நிலையில் வெற்று மார்புடன் நடமாடி வந்துள்ளதைக் காட்டும் படங்களையும் நூலில் காணலாம்.
(நானே கூடச் சிறுவனாக இருக்கையில் நாயர் சாதிப் பெண்களில் எல்லாப் பருவத்தினரும் இடுப்பில் மட்டும் ஒரு முண்டு (நான்கு முழ வேட்டி)உடுத்தி வெற்று மார்புடன் சர்வ சாதாரணமாக எங்கும் சென்று வருவதை எனது பூர்விக கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம் பார்த்துள்ளேன்).
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர் பகுதியாக அமைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையினராக உள்ள சாணார் மட்டும் ரவிக்கை அணிந்தும் சீலைத் தலைப்பால் மார்பகத்தை மூடியும் நடமாடியது அங்கு வாழ்ந்த நாயர் சாதியினருக்கு கெளரவக் குறைச்சலாகத் தோன்றியிருக்க வேண்டும். சமஸ்தானத்தில் உயர் சாதியினரான பிராமணர்களுடன் தமது சாதிப் பெண்டிர் தொடர்பு வைத்துக்கொள்ளும் வழக்கம் காரணமாகத் தம்மையும் உயர்சாதியினராக உரிமை பாராட்டிச் சமூகத்தில் மேல்நிலை அடைந்த நாயர்கள், தமது சாதிப் பெண்டிர் இடுப்பிற்குமேல் ஏதும் அணியாமல் நடமாடுகையில் தம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ள சாணார் வீட்டுப் பெண்கள் மார்பை மூடிக் கொண்டு செல்வதா என்கிற ஆங்காரத்தினாலேயே சாணார் சாதிப் பெண்டிரின் ரவிக்கையைக் கிழித்தும் சேலையின் மேலாக்கை இழுத்தும் அடாவடியில் இறங்கியுள்ளனர். பின்னர், தங்களுக்குத் துணையாகப் பிள்ளைமார்களையும் இதில் சேர்த்துக்கொண்டு கூட்டணி அமைத்து தோள் சீலை நீக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளன்ர். இதற்குச் சாணாரிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பி, பின்னர் அது தோள் சீலைக் கலகமாக வெடித்தது.
தோள் சீலைக் கலகத்தின் தோற்றுவாய், மேலாதிக்க மனப்பான்மையின் காரணமாகவே நாயர்-பிள்ளைமார் கூட்டணி சாணார் வீட்டுப் பெண்டிர் ரவிக்கை அணிவதையும் தோள் சீலை அணிவதையும் எதிர்த்துள்ளனரே யன்றி, சாணார் எனப்படுவோர் கீழ்ச் சாதியினர் என்பதால் அல்ல என்பதற்கான சான்றுகள், கிறிஸ்தவ மிஷனரிகளின் சீர்திருத்தத்தாலும் அவர்களின் தலையீட்டாலும்தான் சாணார் சாதிப் பெண்டிர் ரவிக்கை அணியவும் மேலாடையால் மார்பை மூடவும் உரிமை பெற்றனர் என்பது வெறும் பிரசார நோக்கில் பரப்பப்பட்ட தவறான கருத்து என்ற வாதம் முதலான அம்சங்கள் நூலில் மிகவும் விரிவாகவே பதிவாகியுள்ளன.
சாணார் பனையேறிகளாக இருந்துள்ளனர் என்பது சரியே. ஆனால் அவர்கள் பிறர் தோப்புகளில் வெறும் பதநீரும் கள்ளும் இறக்கி ஊழியம் செய்பவர் களாக இல்லை. பனைவெல்லம் காய்ச்சும் தொழிலையும் காய்ச்சிய கருப்பட்டி, பனை வெல்லத்தை விற்பனை செய்யும் வாணிபத்தையும் மேற்கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும், சாணார் எனவும் நாடார்கள் எனவும் அறியப்படும் இச்சாதியினர், ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட பலவாறான வாணிபத்திலும் ஈடுபட்டு, இருநூறு-இருநூற்றைம்பது ஆண்டுகளான மிகக் குறுகிய காலத்தில் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வந்துள்ளனர். சாணார்கள் காலங் காலமாகக் கீழ்ச் சாதியினராக இருந்து வந்துள்ளனர் எனில் இது எப்படிச் சாத்தியமாயிற்று என யோசிக்க வேண்டும்.
நம் நாட்டில் விடுதலையையொட்டி சுயேற்சையான சமஸ்தானங்கள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு, மன்னர்களின் ஆளும் அதிகாரம் ரத்து செய்யப்பட்ட போதும் பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் அறவே கைவிடப்பட்ட பிறகும், மன்னர்களின் அரண்மனைகள் யாவும் ஐந்து நட்சத்திர விடுதிகளாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் மாறின. தலைமுறை தலைமுறையாக அவற்றை ஆண்டு அனுபவித்து வந்த மன்னர்கள் அவற்றின் நிர்வாக இயக்குநர்களாக உருவெடுத்தனர். மேலும் பல்வேறு தொழில்களிலும் வர்த்தகங்களிலும் இறங்கிச் சடுதியில் முன்னேறவும் அவர்களால் எளிதாக இயன்றது. கட்டியாளும் அனுபவமும், நிர்வாகம் செய்யும் ஆற்றலும், புதிய துறைகளில் துணிந்து இறங்கும் சாகசமும் கிளைகள் பரப்பி விரிவாக்கம் செய்தலும் இயல்பான குணாம்சமாகவே அமைந்து விட்டிருந்தமையால்தான் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டிருக்க முடியும்.
தமிழ்நாட்டில் சாணார் அல்லது நாடார் வகுப்பினரின் நிலையுடன் இதனைப் பொருத்திப் பார்க்கும்போது நமக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. நாடார்கள் நாடாளும் அரச குலத்தினராக இருந்தமையால்தான் அவர்கள் நிலை அதிலிருந்து மாற நேரிட்ட போது, மிகவும் இயல்பாக வாணிபத்திற்கு மாறி அதில் எளிதாக முன்னேற்றம் காணவும் முடிந்திருக்கிறது. அரசியல் ஆதிக்கத்திற்கு இணையானதே பொருளாதார ஆதிக்கம் என்பதும், வர்த்தகத்திலும் உற்பத்தித் தொழிலிலும் இறங்குவதன் மூலம் சமூகத்தில் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியம் என்பதும்கூட கவனத்தில் கொள்ள வேண்டிய நிதர்சனம் அல்லவா?
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உணமைகள்’ ஆய்வு நூலை வாசிக்கையில் இவ்வாறாக நமது ஆய்வுப் பார்வையும் விரிவடைந்து செல்வதற்குத் தூண்டுதல் விளைகிறது. ஆகவே தமிழ்நாட்டின் சமூகவியல் ஆய்வு முயற்சிகளுக்கு மிகவும் கனமான பங்களிப்பு, இந்த நூல்.
நூல்: தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
வெளியீடு: தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்,
15 காமகோடி தெரு, பத்மநாப நகர், குரோம்பேட்டை, சென்னை 600 044
தொலைபேசி: +91-44-2223 5172 பக்கங்கள்: 192 விலை: ரூ. 100/- அஞ்சலில் பெற உள்நாடு: ரூ. 125/- வெளிநாடு (விமான மூலம்): US $ 5.
++++++ .
மலர்மன்னன், 18/37 முத்துலட்சுமி சாலை, லட்சுமிபுரம், சென்னை 600 041
தொலசிபேசி இலக்கம்: 4351 4248 / மொபைல்: 97899 62333
-மலர்மன்னன்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...