முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீன்காரி




 ஷாலின் மரிய லாரன்ஸ் 

நான் ஆங்கிலோ இந்தியன் கான்வென்டில் படிக்கும் காலத்தில் பெண்கள் மற்ற பெண்களை கீழ்த்தரமாக சித்தரிக்க வேண்டுமென்றால் "Fisher woman " (மீன்காரி ) என்று அழைப்பார்கள். சில வருடங்கள் முன்பு வரை கூட ஒரு விதமான கொண்டை அணியும்போது எனது சில கார்பொரேட் நண்பர்கள் "மீன்காரி கொண்ட " என்று அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கம் அப்பொழுது கூட நான் அதைப் பற்றி பெரிதாய் சிந்தித்து இல்லை .
ஆனால் சமூகநீதிக்காக பாடுபட ஆரம்பித்ததிலிருந்து விளிம்பு நிலை மனிதர்களின் ,ஒடுக்கப்பட்டவர்களின் தோற்றத்தை வைத்து இழிவுபடுத்துவது மிகப்பெரிய அட்டூழியங்களில் ஒன்று என்று அறிந்துகொண்டேன் .அதிலிருந்து தோற்ற ரீதியிலான சாதிய /வர்க்க அடக்குமுறைகளை இன்று வரை எதிர்த்துப் போராடி வருகிறேன் .
எனக்கு மீன் அதிகம் பிடிக்கும் என்பதால் மெரினாவில் கலங்கரை விளக்கம் அருகிலிருந்து துவங்கும் மீன் மார்க்கெட்டில் (நொச்சிக்குப்பம்) மாதத்தில் இரண்டுமுறை நானே சென்று மீன் வாங்குவது வழக்கம் ,இதன் காரணமாக அங்கே மீன் விற்கும் பெண்களிடம் நல்ல நட்பு உள்ளது எனக்கு . அடித்துச் சொல்கிறேன் ,அவர்களைப்போல் வாஞ்சையுடன் யாராலும் பழக முடியாது .உறவினர்கள் தெருமுனையில் வருவது தெரிந்தால் பிளாட்டின் கதவை பூட்டிக்கொள்ளும் இந்த சமூகத்தில் இன்னும் கூட முன் பின் அறியாதவர்கள்மேல் எதையும் எதிர்பாராமல் பாசமழை பொழிய இவர்களால் மட்டுமே சாத்தியம் . காரில் வந்தவர்களாக இருந்தாலும் சரி ,சைக்கிளில் வந்தவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு அனைவரும் சமமே .
எத்தனையோ முறை அவர்கள் செய்து கொடுத்த கடம்பான் தொக்கு ,தோசை ,மீன் குழம்பு எல்லாவற்றையும் ரசித்து சாப்பிட்டு இருக்கிறேன் .
அவர்கள் கட்டி இருக்கும் புடவையின் மேலிருந்து வரும் வாடை நாச மூளைக்காரர்களுக்கு வேண்டுமானால் நாற்றமாக இருக்கலாம் ,ஆனால் எனக்கோ அது பேரன்பின் வாசம் .
எனக்கும் அவர்களுக்கு மிகவும் பிடித்த எம்ஜியார் என்கின்ற நடிகரின் அழகை அவர்கள் மீன் வெட்டும் அநேக நேரங்களில் சிலாகித்துப் பேசி இருக்கிறோம் .படகோட்டியில் எம்ஜியார் அணிந்திருந்த அடர்பச்சை ,சிகப்பு சட்டைகள்,கையில் போட்டிருந்த காப்பு என்று அவரை தலை முதல் கால்வரை வர்ணித்து மகிழ்ந்திருக்கிறோம் .'கடல் மேல் பிறக்கவைத்தான் பாடல்' டிவியில் ஒலிக்கும்போதெல்லாம் எப்படி அவர்களுக்கு ஒவ்வொருமுறையும் கண்ணீரை வரவழைக்கிறது என்று அவர்கள் விவரித்தபொழுது நானும் அழுதிருக்கிறேன் .
அப்படி ஒரு பந்தம் என் மீனவ சொந்தங்களுடன் எனக்கு .
அங்கே ராமேஸ்வரம் கடலில் மீனவர்கள் சுடப்படும்போதெல்லாம் குண்டு இவர்கள் நெஞ்சிலும் பாய்ந்தது என்று அவர்களுடன் பழகியவர்கள் நன்கு அறிவார்கள் .
அவர்கள் உலகத்தில் யார் பிறந்தாலும் அவர்கள் வீட்டிலேயே குழந்தை பிறந்ததாய் மகிழ்ச்சி கொள்வார்கள் ,யார் வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும் ஊரே சோகத்தில் இணைகிறது .
அவர்களுள் பொருளாதார ரீதியாக ஒரு சிலர் முன்னேறியும் கூட இன்னும் அவர்களுக்கு சமூகத்தில் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்பது அவர்களின் நிரந்தர வேதனையாக இருக்கிறது . அவர்களுள் யாரவது MBA படித்தாலும்கூட சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் 'மீன்காரர்கள்' என்று ஒதுக்கியே வைக்கவேபடுகிறார்கள் .
மீன்பிடிப்புத் தொழிலின் மூலம் இந்தியாவின் வாழ்வாதாரம் ,வேலைவாய்ப்பு ,உணவுப் பாதுகாப்பு என்கின்ற விஷயங்களை சீராக வைத்திருப்பவர்கள் இவர்கள்தான் என்றால் மிகையாகாது . இந்தியாவின் GDP யில் ஒரு சதவிகிதத்திற்கு மேலும் ,இந்திய விவசாய GDP யில் 16 சதவிகிதத்திற்கு மேலும் இவர்களின் பங்கு இருக்கிறது....இருந்தாலும் ...மற்ற துறைகளுக்கு இந்த நாட்டில் கிடைக்கும் மாண்பும் ,மரியாதையும் இவர்களிடம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகக் கூட கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம் .
பொதுவாக மீனவர்கள் அதிகம் நகை அணிவார்கள் ஆனால் அத்தனை நகையும் கூட அவர்களை இதுவரை ஒரு நல்ல நட்சத்திர ஹோட்டலிலோ அல்லது ஒரு சரவண பவனிலோ உட்காரவைத்ததில்லை .அமெரிக்காவில் சவுத் கரோலினா மாகாணத்தில் மீன்பிடித் தொழிலில் இருக்கும் ஒரு மனிதர் தன ஊரில் உள்ள ஒரு நல்ல பாரில் அமேசான் கம்பெனியின் CEO ஓடு சரி சமமாக உட்கார்ந்து பீர் அருந்த முடியும் ..இங்கே மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள 'illusions ' போன்ற பார்களில் இப்படி ஒரு காட்சியை நாம் காண முடியுமா ?
இந்த நாட்டில் பணத்திற்குத்தான் மதிப்பு இருக்கிறது என்று யாரவது கூறிக் கொண்டிருந்தால் தயவு செய்து உங்கள் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளுங்கள் ,பத்தும் செய்யும் பணம் கூட இங்கே மனித மாண்பை மீட்பதில் தோல்வி அடைந்திருக்கிறது ,அவர்கள் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலிகள் அவர்களை நோக்கி வரும் முகச் சுளிப்புகளைத்தடுக்கும் வல்லமை இல்லாதவைகளாகவே இருக்கின்றன .
மீன்விற்பவர்களின் குரல் மீன் சந்தைகளுக்குளேயே அடங்கி விடுகிறது ,சமதர்மத்திற்கான அவர்களின் கூக்குரலை நம் காதுகள் எனோ ஏற்க மறுக்கின்றன .
'Dignity of labor ' என்கின்ற விஷயம் இந்திய /தமிழ்ச் சமூகத்தின் அகராதியில் இன்னும் இடம் பெறவில்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கின்றது .சமூகத்தில் கடைநிலை வேலைகளில் தங்களை வருத்திக்கொள்ளும் இதுபோன்ற மனிதர்களுக்கு மரியாதை எல்லாம் கடலில் தேடினாலும் கிடைக்காதவை .அதற்குமேல் ஒருபடி போய் நாம் ஒருவரை அவமானப் படுத்துவதற்கு இவர்களின் பெயரையும் ,தோற்றத்தையும் உபயோகிப்பது மீனவர்களை நாம் சராசரி மனிதர்களாய் கூட மதிப்பதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் .
இந்த நிலை இப்படி இருக்க கடந்த வார தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்கள் இன்னும் வரதட்சணை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று கொஞ்சம் சீற்றத்துடன் என் வேதனையை வெளிப்படுத்தியபோது அதை கேலிப்பொருளாக்கும் நோக்கத்துடன் 'Meme Creators ' என்றழைக்கப்படும் வலைதள நவீன சித்திரக் கலைஞர்கள் ,வசைச் சித்திரக் கலைஞர்களாக மாறி என்னை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு என் படத்தை மீன் விற்பவர்போல் சித்தரித்து இருப்பது .
இதில் எனக்குத் துளிக் கூட அவமானமா , இழிவோ இல்லை .ஏனென்றால் நான் பலவருடங்களாக நேசித்து அன்பு பாராட்டி வரும் மனிதர்களின் தொழிலை நான் செய்வது போல் காட்டி இருப்பது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது . இந்தப் படத்தை அடுத்த முறை நான் மீன் வாங்க கடற்கரைக்குச் செல்லும்போது ,செல்வி அக்காவிற்கும் ,லூசியா அக்காவிற்கும் காட்டிப் பெருமைகொள்வேன் . மாறாக இந்தப் படத்தை வடிவமைத்திருக்கும் மனிதர்களைக் கண்டால் மனம் கடும் வேதனை கொள்கிறது.மீன்காரி என்பது இகழ்ச்சியா ? மீன் பிடிப்பவர் /விற்பவர் என்றால் அவமானத்திற்குரிய தோற்றமா ? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமயத்தில் இவர்களுக்குப் பெரும் ஆதரவைக் கொடுத்து ,உணவு உடை பாதுகாப்பை அளித்து அந்த இளைஞர்களுக்காக அடி உதை பட்டு வீடுகளை இழந்தவர்களை அந்த இளைஞர்கள் இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாக கருதிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது .
நன்றி மறந்த ,சமூதாய நீதி அறியாத 'மீம் காரர்களாக' இருப்பதை விட நாம் ருசியாக ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்றெண்ணி நமக்காக இந்தத் தொழிலை செய்துவரும் மனசாட்சியுள்ள ,நேர்மையான 'மீன்காரியாக ' இருந்துவிட்டுப் போகிறேன் .
Shalin Maria Lawrence

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...