முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீன்காரி




 ஷாலின் மரிய லாரன்ஸ் 

நான் ஆங்கிலோ இந்தியன் கான்வென்டில் படிக்கும் காலத்தில் பெண்கள் மற்ற பெண்களை கீழ்த்தரமாக சித்தரிக்க வேண்டுமென்றால் "Fisher woman " (மீன்காரி ) என்று அழைப்பார்கள். சில வருடங்கள் முன்பு வரை கூட ஒரு விதமான கொண்டை அணியும்போது எனது சில கார்பொரேட் நண்பர்கள் "மீன்காரி கொண்ட " என்று அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கம் அப்பொழுது கூட நான் அதைப் பற்றி பெரிதாய் சிந்தித்து இல்லை .
ஆனால் சமூகநீதிக்காக பாடுபட ஆரம்பித்ததிலிருந்து விளிம்பு நிலை மனிதர்களின் ,ஒடுக்கப்பட்டவர்களின் தோற்றத்தை வைத்து இழிவுபடுத்துவது மிகப்பெரிய அட்டூழியங்களில் ஒன்று என்று அறிந்துகொண்டேன் .அதிலிருந்து தோற்ற ரீதியிலான சாதிய /வர்க்க அடக்குமுறைகளை இன்று வரை எதிர்த்துப் போராடி வருகிறேன் .
எனக்கு மீன் அதிகம் பிடிக்கும் என்பதால் மெரினாவில் கலங்கரை விளக்கம் அருகிலிருந்து துவங்கும் மீன் மார்க்கெட்டில் (நொச்சிக்குப்பம்) மாதத்தில் இரண்டுமுறை நானே சென்று மீன் வாங்குவது வழக்கம் ,இதன் காரணமாக அங்கே மீன் விற்கும் பெண்களிடம் நல்ல நட்பு உள்ளது எனக்கு . அடித்துச் சொல்கிறேன் ,அவர்களைப்போல் வாஞ்சையுடன் யாராலும் பழக முடியாது .உறவினர்கள் தெருமுனையில் வருவது தெரிந்தால் பிளாட்டின் கதவை பூட்டிக்கொள்ளும் இந்த சமூகத்தில் இன்னும் கூட முன் பின் அறியாதவர்கள்மேல் எதையும் எதிர்பாராமல் பாசமழை பொழிய இவர்களால் மட்டுமே சாத்தியம் . காரில் வந்தவர்களாக இருந்தாலும் சரி ,சைக்கிளில் வந்தவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு அனைவரும் சமமே .
எத்தனையோ முறை அவர்கள் செய்து கொடுத்த கடம்பான் தொக்கு ,தோசை ,மீன் குழம்பு எல்லாவற்றையும் ரசித்து சாப்பிட்டு இருக்கிறேன் .
அவர்கள் கட்டி இருக்கும் புடவையின் மேலிருந்து வரும் வாடை நாச மூளைக்காரர்களுக்கு வேண்டுமானால் நாற்றமாக இருக்கலாம் ,ஆனால் எனக்கோ அது பேரன்பின் வாசம் .
எனக்கும் அவர்களுக்கு மிகவும் பிடித்த எம்ஜியார் என்கின்ற நடிகரின் அழகை அவர்கள் மீன் வெட்டும் அநேக நேரங்களில் சிலாகித்துப் பேசி இருக்கிறோம் .படகோட்டியில் எம்ஜியார் அணிந்திருந்த அடர்பச்சை ,சிகப்பு சட்டைகள்,கையில் போட்டிருந்த காப்பு என்று அவரை தலை முதல் கால்வரை வர்ணித்து மகிழ்ந்திருக்கிறோம் .'கடல் மேல் பிறக்கவைத்தான் பாடல்' டிவியில் ஒலிக்கும்போதெல்லாம் எப்படி அவர்களுக்கு ஒவ்வொருமுறையும் கண்ணீரை வரவழைக்கிறது என்று அவர்கள் விவரித்தபொழுது நானும் அழுதிருக்கிறேன் .
அப்படி ஒரு பந்தம் என் மீனவ சொந்தங்களுடன் எனக்கு .
அங்கே ராமேஸ்வரம் கடலில் மீனவர்கள் சுடப்படும்போதெல்லாம் குண்டு இவர்கள் நெஞ்சிலும் பாய்ந்தது என்று அவர்களுடன் பழகியவர்கள் நன்கு அறிவார்கள் .
அவர்கள் உலகத்தில் யார் பிறந்தாலும் அவர்கள் வீட்டிலேயே குழந்தை பிறந்ததாய் மகிழ்ச்சி கொள்வார்கள் ,யார் வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும் ஊரே சோகத்தில் இணைகிறது .
அவர்களுள் பொருளாதார ரீதியாக ஒரு சிலர் முன்னேறியும் கூட இன்னும் அவர்களுக்கு சமூகத்தில் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்பது அவர்களின் நிரந்தர வேதனையாக இருக்கிறது . அவர்களுள் யாரவது MBA படித்தாலும்கூட சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் 'மீன்காரர்கள்' என்று ஒதுக்கியே வைக்கவேபடுகிறார்கள் .
மீன்பிடிப்புத் தொழிலின் மூலம் இந்தியாவின் வாழ்வாதாரம் ,வேலைவாய்ப்பு ,உணவுப் பாதுகாப்பு என்கின்ற விஷயங்களை சீராக வைத்திருப்பவர்கள் இவர்கள்தான் என்றால் மிகையாகாது . இந்தியாவின் GDP யில் ஒரு சதவிகிதத்திற்கு மேலும் ,இந்திய விவசாய GDP யில் 16 சதவிகிதத்திற்கு மேலும் இவர்களின் பங்கு இருக்கிறது....இருந்தாலும் ...மற்ற துறைகளுக்கு இந்த நாட்டில் கிடைக்கும் மாண்பும் ,மரியாதையும் இவர்களிடம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகக் கூட கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம் .
பொதுவாக மீனவர்கள் அதிகம் நகை அணிவார்கள் ஆனால் அத்தனை நகையும் கூட அவர்களை இதுவரை ஒரு நல்ல நட்சத்திர ஹோட்டலிலோ அல்லது ஒரு சரவண பவனிலோ உட்காரவைத்ததில்லை .அமெரிக்காவில் சவுத் கரோலினா மாகாணத்தில் மீன்பிடித் தொழிலில் இருக்கும் ஒரு மனிதர் தன ஊரில் உள்ள ஒரு நல்ல பாரில் அமேசான் கம்பெனியின் CEO ஓடு சரி சமமாக உட்கார்ந்து பீர் அருந்த முடியும் ..இங்கே மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள 'illusions ' போன்ற பார்களில் இப்படி ஒரு காட்சியை நாம் காண முடியுமா ?
இந்த நாட்டில் பணத்திற்குத்தான் மதிப்பு இருக்கிறது என்று யாரவது கூறிக் கொண்டிருந்தால் தயவு செய்து உங்கள் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளுங்கள் ,பத்தும் செய்யும் பணம் கூட இங்கே மனித மாண்பை மீட்பதில் தோல்வி அடைந்திருக்கிறது ,அவர்கள் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலிகள் அவர்களை நோக்கி வரும் முகச் சுளிப்புகளைத்தடுக்கும் வல்லமை இல்லாதவைகளாகவே இருக்கின்றன .
மீன்விற்பவர்களின் குரல் மீன் சந்தைகளுக்குளேயே அடங்கி விடுகிறது ,சமதர்மத்திற்கான அவர்களின் கூக்குரலை நம் காதுகள் எனோ ஏற்க மறுக்கின்றன .
'Dignity of labor ' என்கின்ற விஷயம் இந்திய /தமிழ்ச் சமூகத்தின் அகராதியில் இன்னும் இடம் பெறவில்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கின்றது .சமூகத்தில் கடைநிலை வேலைகளில் தங்களை வருத்திக்கொள்ளும் இதுபோன்ற மனிதர்களுக்கு மரியாதை எல்லாம் கடலில் தேடினாலும் கிடைக்காதவை .அதற்குமேல் ஒருபடி போய் நாம் ஒருவரை அவமானப் படுத்துவதற்கு இவர்களின் பெயரையும் ,தோற்றத்தையும் உபயோகிப்பது மீனவர்களை நாம் சராசரி மனிதர்களாய் கூட மதிப்பதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் .
இந்த நிலை இப்படி இருக்க கடந்த வார தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்கள் இன்னும் வரதட்சணை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று கொஞ்சம் சீற்றத்துடன் என் வேதனையை வெளிப்படுத்தியபோது அதை கேலிப்பொருளாக்கும் நோக்கத்துடன் 'Meme Creators ' என்றழைக்கப்படும் வலைதள நவீன சித்திரக் கலைஞர்கள் ,வசைச் சித்திரக் கலைஞர்களாக மாறி என்னை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு என் படத்தை மீன் விற்பவர்போல் சித்தரித்து இருப்பது .
இதில் எனக்குத் துளிக் கூட அவமானமா , இழிவோ இல்லை .ஏனென்றால் நான் பலவருடங்களாக நேசித்து அன்பு பாராட்டி வரும் மனிதர்களின் தொழிலை நான் செய்வது போல் காட்டி இருப்பது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது . இந்தப் படத்தை அடுத்த முறை நான் மீன் வாங்க கடற்கரைக்குச் செல்லும்போது ,செல்வி அக்காவிற்கும் ,லூசியா அக்காவிற்கும் காட்டிப் பெருமைகொள்வேன் . மாறாக இந்தப் படத்தை வடிவமைத்திருக்கும் மனிதர்களைக் கண்டால் மனம் கடும் வேதனை கொள்கிறது.மீன்காரி என்பது இகழ்ச்சியா ? மீன் பிடிப்பவர் /விற்பவர் என்றால் அவமானத்திற்குரிய தோற்றமா ? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமயத்தில் இவர்களுக்குப் பெரும் ஆதரவைக் கொடுத்து ,உணவு உடை பாதுகாப்பை அளித்து அந்த இளைஞர்களுக்காக அடி உதை பட்டு வீடுகளை இழந்தவர்களை அந்த இளைஞர்கள் இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாக கருதிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது .
நன்றி மறந்த ,சமூதாய நீதி அறியாத 'மீம் காரர்களாக' இருப்பதை விட நாம் ருசியாக ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்றெண்ணி நமக்காக இந்தத் தொழிலை செய்துவரும் மனசாட்சியுள்ள ,நேர்மையான 'மீன்காரியாக ' இருந்துவிட்டுப் போகிறேன் .
Shalin Maria Lawrence

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...