முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜோ டி குரூஸின் கருத்துரிமையை முடக்கிக் கொண்டே பெருமாள்முருகனின் கருத்துரிமையைக் காப்பாற்ற முடியாது!





Andhimazhai Image
 
-லீனா மணிமேகலை
 
 
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சிதான் சுதந்திர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில் தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் தரக்கூடாது என்று விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தார்கள்.  சென்சார் போர்டு செர்டிஃபிகேஷன் (Certification)) போர்டாக பெயர் பெற்று வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டம் கலைஞர்களுக்கு கருத்துரிமை வழங்குகிறது. அத்துடன்  பார்வையாளர்களுக்கு தணிக்கை இன்றி படங்கள் பார்க்கும் உரிமையையும் பாதுகாக்கிறது. அதனால்தான் எப்போதும் சென்ஸார் போர்டை எதிர்த்து நீதிமன்றம்செல்லும் போது இயக்குநர்களால் வெற்றி பெறமுடிகிறது. ஆனால் நடைமுறை? ஆட்சிகள் மாறும்போது பிராந்திய CBFC (Central Board of Film Certification; C என்றால் censor அல்ல கவனிக்கவும் ) அலுவலகங்களில் அரசியல் ரீதியில் நியமனங்கள் நடைபெறுகின்றன. இவர்களுக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மத்திய CBFC தலைவர் பங்கஜ் நிஹ்லானி நேரடியாக தன்னை மோடியின் கையாள் என்று சொல்லிக்கொள்கிறார். நியமனம் செய்யப்பட்ட ஆட்கள் தங்கள் அரசியல் மாஸ்டர்களை  உற்சாகப் படுத்துவதற்காக செயல்படுகிறார்கள். இதில் யாருமே படைப்பாளியைப் புரிந்துக் கொண்டவர்கள் கிடையாது.
 
 
 இது ஏன் பூதாகரமாக வெடிக்கவில்லை என்றால் நமது திரைப்பட உலகம் வணிகப் படங்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் வெளியீட்டுக்கு நேரம் குறித்துவிட்டு தணிக்கைச் சான்றிதழ் பெறச் செல்லும்போது, பல இடங்களில் வெட்டச் சொன்னாலும் ஊழல் பேரங்களால் சரிக்கட்டப்படுகின்றன. வணிகப்படம் எடுத்தவர்கள் தணிக்கைச்சான்றிதழ் பெறுவதையே பெரிய சாதனையாக எண்ணி விளம்பரங்கள் கொடுப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சினிமாத்துறையில் நடக்கும் இந்தக் கோமாளித்தனத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. முதலில் அறுபது வெட்டுகள் கொடுப்பதும் பேரத்துக்குப் பிறகு அது நாற்பதாகக் குறைவதும் நடக்கிறது. இல்லையெனில் கபாலி போன்ற படத்துக்கு ‘யு’சான்றிதழ் வாங்க முடியுமா? அமெரிக்காவிலேயே அது யு/ஏதான்.
 
 
 நான் முதல்முதலில் என்னுடைய ‘பறை’ படத்தை CBFC க்கு எடுத்துச் சென்றேன். அதற்கு முன்னால் நான் எந்த சான்றிதழும் வாங்கியது கிடையாது. ஏன் போனேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் திரைப்பட விழாக்களில், பிலிம் சொசைட்டிகளில் படம் திரையிடுவதற்கு எந்த சென்சாரும் வேண்டியிருந்ததில்லை. ஆனால் பாஜக முதல்முதலில் ஆட்சிக்கு வந்த காலத்தில் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்களுக்கும்சென்ஸார் தேவை என்று அறிமுகப்படுத்தப்பட்டது.திரைப்பட விழாக்கள் என்பவை படைப்புசுதந்தரத்துக்கானவை, அங்கும் தணிக்கையா என்று 300க்கும் மேற்பட்ட சுதந்தரப் படைப்பாளிகள் ஒன்று சேர்ந்துப் போராடி, இந்த விதியை விலக்க வைத்தார்கள். ஆனால் இன்றும் தணிக்கைச்சான்றிதழ் இல்லாவிட்டால் இந்த தேசத்தின் அதிக பட்ச அங்கீகாரங்களான இந்தியன் பனோரமாவுக்கும், தேசியவிருதுக்கும் படம் அனுப்ப முடியாது. இந்தியன் பனோரமாவில் தேர்வானால் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் படம் பாதுகாக்கப்படும். அவற்றை அரசுத் தொலைக்காட்சி (Doordharshan) வாங்கிக்கொண்டு ஒளிபரப்பும். இதெல்லாம் திரைப்படக் கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் மிகமுக்கியமான அம்சங்கள். இணையம் பலப்படும்வரை இந்தியன் பனோரமா தான் தேர்வான படங்களை வெளிநாடுகளில் நடக்கும் விழாக்களுக்கு அனுப்பிவைப்பார்கள். ஆனால் பனோரமா தேர்வுக்கும் தணிக்கைச் சான்றிதழ் அவசியம் என்பது தான் அதில் சிக்கல்.  இன்றுவரை 35எம்எம் பிரிண்டை வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்றால் சென்ஸார் சான்றிதழ் இல்லாமல் அனுப்பமுடியாது என்ற அபத்தமான விதி உள்ளது. இப்போதைய ‘வீமியோ’ காலத்தில் கூட இந்த விதிகளில் எந்தவிதப் பரீசீலனைகளும் வரவில்லை. இன்றும் நமது நாட்டுக்குள் உங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் தணிக்கைச் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பிக்கக் கூட முடியாது என்ற வெட்கக்கேடான நிலைமையை சகித்துக் கொண்டு ‘ஈரானில்‘ தணிக்கை என்று உச்சு கொட்டுவதற்கு நமக்கென்ன தகுதியிருக்கிறது?
 
 
இதுவரைக்கும் தேசிய விருது தேர்வுக்கு என்னுடைய ஒரு படத்தையும் அனுப்பியதில்லை. என்னுடைய Goddesses படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேசப் பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கியது. அந்தப்படத்தைக்கூட தேசிய விருதுக்கு நான் அனுப்பிவைக்க வில்லை. ஏனெனில் அதற்குச்  ‘சான்றிதழ் இழவை’ வாங்க வேண்டும்.
 
 
செங்கடலுக்கு தணிக்கை சான்றிதழைத் தயாரிப்பாளர் பெயரில் வாங்கினோம். ஆனால் தயாரிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கவே இல்லை என்பதை சமீபத்தில் தான் தெரிந்துக்கொண்டேன்.
 
 
படத்திற்கு  CBFC வெட்டுகள் தர நேரும்போது, அதை மறுக்க மறுபரீசலனை கமிட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். அதற்கான செலவுகளுக்கு நாம் தான் பணம் கட்டவேண்டும். அங்கிருந்து மத்திய டிரிபியூனல் போகலாம். அங்கேயும் வழக்கறிஞருக்கு நாம்தான் பணம்கொடுத்து வாதாட வேண்டும். ஆனந்த் பட்வர்த்தன் போன்றவர்கள் ஒவ்வொரு படத்துக்கும் இப்படித்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ட்ரிபியூனலில் ஜெயிக்கவில்லை என்றால் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டு வாதாடவேண்டும்.
 
 
செங்கடல் படத்துக்கு முதலில் இங்கே தடைகொடுத்து விட்டார்கள். எங்கேயும் திரையிட முடியாது. நான் இங்கே மறுபரிசீலனைக் குழுவுக்கெல்லாம் போகவில்லை. அதற்கே 25000 ரூபாய் செலவாகிற மாதிரி இருந்ததால், நேரடியாக ட்ரிபியூனலுக்கே சென்று வழக்காடினேன். ட்ரிபியூனலில் சென்ஸார் போர்டின் தடையை ரத்து செய்து வழிகாட்டுதல்கள் கொடுத்தார்கள். அதை எடுத்துக்கொண்டு திரும்ப சென்னைக்கு வந்து, டிரிபியூனல் கொடுத்த விதிகள்படி அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவுக்கு போட்டுக் காண்பித்துதான் சான்றிதழ் வாங்கினேன். இது படம் எடுப்பதை விட அதிக பொறுமையையும் சக்தியையும் உறிஞ்சும் வேலை.
 
 
 
சென்ஸார் போர்ட் போல செயல்படும் CBFCயைக் குப்பையில் தூக்கிப்போட வேண்டிய காலம் வந்துவிட்டது. சுதந்தரமான ஓர் அமைப்பு, அரசால் கட்டுப்படுத்த முடியாத ஓர் அமைப்பைச் சான்றிதழ் வழங்கும் பொருட்டு அமைத்துக் கொள்ளலாம்.  இந்த  சான்றிதழ் விவகாரத்திலும் ஒரு சிக்கல் உள்ளது.
 
 
செங்கடலுக்கு ‘ ஏ‘ கொடுத்தார்கள். ஏனெனில் அந்தப் படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வாழும் தலைவர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன என்று காரணம் சொன்னார்கள்.  நான் இதையும் எதிர்த்து உச்சநீதி மன்றம் போகலாம். அதற்கெல்லாம் எனக்கு சக்தி இல்லை என்பதால் விட்டுவிட்டேன். ‘ஏ‘ சான்றிதழ் இருக்கும் படங்களை பனோரமாவுக்குத் தேர்வானாலும் தூர்தர்ஷனில் வாங்க மாட்டார்கள். தூர்தர்ஷன் கொடுக்கும் பணம், அதற்கு  இருக்கும் பார்வையாளர் எண்ணிக்கை எல்லாவற்றையும் இழக்கவேண்டியிருக்கும். தியேட்டர்களும் வினியோகத்திற்கு எடுக்க மாட்டார்கள். நம்ம நாட்டைப் பொறுத்தவரை ஒரு படைப்பாளிக்கு,  ‘ஏ’ சான்றிதழ் ‘கொலைத் தண்டனைக்கு‘ சமமானது தான்.
 
 
முதல் உலக நாடுகளில் இங்கிருப்பது போன்ற சிஸ்டம் இல்லை. உதாரணத்திற்கு ஒரு படத்தில் கடுமையான சொற்பிரயோகம் இருக்குமெனில் அதை வெட்டமாட்டார்கள். இதில்  Strong Language பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று டிஸ்கிளைமர் போடுவார்கள். அவ்வளவுதான். ஒரு நேர்மையான படைப்பாளியால் தன் படத்தில் வெட்டுவிழுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் ஒரு நாவல் எழுதுகிறீர்கள். பதிப்பாளர் அதில் ஒன்றுக்குப் பாதியாக வெட்டிவிட்டுத்தான் பதிப்பிப்பேன் என்றால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? அதேதான். ஆனால் இந்த தார்மீகக் கோபமே இங்கிருக்கும் படைப்பாளிகளுக்கு இல்லையே!
 
 
சமீபத்தில் ‘Lipstick Under My Burka” என்று ஒரு படத்துக்கு CBFC தடைகொடுத்தபோது, நீதிபதி, ‘ ஏன் இப்படி நடந்துக்கிறீங்க.. உங்கள் வேலை A, U, U/A என தரம்பிரித்து சான்றிதழ் தருவது தானே.. ஏன் இப்படி தலைவலி கொடுக்கிறீங்கன்னு” வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.
 
 
இதுவரை நாம் விவாதித்தது  சட்டத்துக்கு உட்பட்ட தணிக்கை. இதை எதிர்த்துப் போராட நமக்கு வழிகள் உள்ளன. நம் படைப்புரிமைகளுக்கு சாதகமாக சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. உச்சநீதிமன்றம் வரை போகலாம். ஆனால் இதற்கு வெளியே ‘கும்பல்’ தலையிட்டுச் செய்யும் தணிக்கை என்று ஒன்று இருக்கிறது. இதில் யாரை எதிர்க்கிறோம் என்றே தெரியாமல் போராட வேண்டியிருக்கிறது. சிவசேனா போன்ற அமைப்புகளுக்கு இதுவே முழுநேர வேலை என்றாலும் இடதுசாரி அமைப்புகளும் விதிவிலக்கல்ல. ஸ்டாலினியவாதிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? தணிக்கையை ஜனநாயக அச்சுறுத்தலாக இடதுசாரிகள் பார்க்கத் தவறுகிறார்கள். தமது கருத்தியல் சார்பு, பொது எதிரி என்றால் மட்டுமே தணிக்கைக்கு எதிராக கூச்சல் போடுகிறார்கள். யாராக இருந்தாலும், நாம் நம்பும் கருத்துக்கு உவப்பில்லாதவர்களாக இருந்தாலும், அவர்களின் வெளிப்பாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும்.  ஜோ டி குரூஸின் கருத்துரிமையை முடக்கிக் கொண்டே பெருமாள்முருகனின் கருத்துரிமையைக் காப்பாற்ற முடியாது. ஆனால் அவரவர் கொள்கைக்கு ஆதரவாக இல்லாதவர்களைக் கைவிட்டுவிடும் போக்குதான் இங்கு நிலவுகிறது. கருத்தியல்களுக்கு அப்பால் அனைத்து தரப்பு படைப்பாளிகளின் படைப்புரிமைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான படைப்புச்  சுதந்தரத்திற்கான ஆதரவு. மற்றது பாசிசத் தன்மையன்றி வேறில்லை.  விஸ்வரூபம் படத்தில் பிரச்சினை என்றாலும், டேம் 999 படத்தில் பிரச்சினை என்றாலும் விமர்சனங்கள் மூலம் அணுகுவது தான் நியாயம். 
 
தமிழ் தேசிய, ஈழ ஆதரவாளர்களிடமும் கருத்துரிமை எதிர்ப்பு மனநிலைதான் உள்ளது. அவதூறுகளைப்பரப்பி ஆளை இல்லாமல் ஆக்க முயற்சி செய்கிறார்கள். பிரசன்ன விதானகேயின் ‘வித் யூ வித்தவுட் யூ’ ((With You, Without You)  சிங்களப் படம் வெளிவந்தபோது, சிங்கள முன்னாள் ராணுவவீரன் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்வதாக எப்படி படம் எடுக்கலாம் என்று இரண்டு ‘திரை இயக்குநர்கள்’ சீமானும், வ. கௌதமனும் தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு கும்பல் தியேட்டர்களுக்கு தொலைபேசி அச்சுறுத்தல்களைக் கொடுத்து படத்தை ஒரே நாளில் தூக்கவைத்தார்கள். என்னுடைய  வெள்ளை வேன் கதைகள் (White Van Stories) ) படத்துக்கும் இதேதான் நிலை. பெண்ணியப் போலிகள் பொய் அறிக்கைகளை வெளியிட்டு படத்திற்கெதிரான வதந்திகளை பரப்பினார்கள். பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரையிடல்களை ரத்து செய்யவைத்தார்கள். இங்கிருக்கும் கருத்துக் குண்டர்களின் கைகளில் உண்மையிலேயே அதிகாரம் இருந்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
 
சேனல் ஃபோரில் வெளியான வெள்ளைக்காரனின் ஆவணப்படம் என்றால் அதைக்கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள்.  அதே சேனல் ஃபோர் வெளியிடும் ஒரு தமிழ்ப் பெண்ணின் படைப்பை முடக்குவார்கள். இவர்கள் இன்னும் யாருக்கு அடிமையாக இருக்கிறார்கள்? தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், முற்போக்கு இயக்கவாதிகள், இடது சாரிகள், பெண்ணியர்கள் என்று எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் சென்சார் ஆபீசர்களைக் களையாமல் இங்கு வீரியமான படங்கள் வரவே முடியாது. இன்றுவரை யூதர்கள் படுகொலை பற்றி படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். கடைசிப்போரில் லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த துயரம் பற்றி எத்தனைப்  படங்கள் வந்திருக்கவேண்டும்? ஆனால் என்ன வந்திருக்கிறது? இதற்கான மொத்த பாராட்டுமே தமிழ்த் தேசியவாதிகளையே சாரும்.
 
 
வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இந்தப் படங்களைப் பார்க்கவே மாட்டார்கள். பார்க்காமலேயே எதிர்ப்பார்கள்.  அப்படியே கும்பலாகச் செயல்பட்டு அந்த படங்களைத் திரையிடவிடாமல், அதைப் பற்றி எழுதவிடாமல் தடுத்து சத்தமே இல்லாமல் அழித்துவிடுவார்கள்.! எப்போதுமே ஒரு படைப்பாளியை, தன்னை தன் படைப்பை பாதுகாக்க வேண்டிய பதட்டத்திலேயே வைத்திருக்க விரும்பும் சமூகம் என்ன மாதிரியான சமூகம்? வானத்திலிருந்து எந்தப் படைப்பாளியும் குதிக்க முடியாது. இந்த சமூகத்திலிருந்து தான் வரமுடியும். சுதந்திரமான படைப்பாளிகளைப் பாதுகாப்பதும் சமூகத்தின் பொறுப்பும் தான். ஒவ்வொரு படைப்பாளியுடனும் அவரின் கருத்து சுதந்திரத்திற்காக, வெளிப்பாட்டுரிமைக்காக, கொள்கைச் சார்பு பார்க்காமல் நிற்கவேண்டும். அதுவே ஒரு சமூகத்தின் படைப்பியக்கத்துக்கு முக்கியமான விசை. 
 
 
(அந்திமழை 2017 ஏப்ரல் இதழில் வெளியான பத்தி)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...

ஜொலிக்கிற சின்னத்திரைத் துருவ நட்சத்திரங்கள்

நாம் எப்போதும் சினிமாவைப் பற்றிப் பேச மட்டுமே பழக்குவிக்கப் பட்டிருக்கிறோம். மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட தொழுவத்து மாடோ அல்லது வண்டி மாடோ எப்படி கயிறு கட்டப்பட்ட அடுத்த நொடியிலிருந்து தன்னுடைய பாதையை இயந்திர கதியில் கண்ணுக்குள் கொண்டு வருமோ, அப்படி சினிமா மட்டுமே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. வெள்ளித்திரை அது என்பதை மறுப்பதற்கில்லை. ஜொலிக்கிற துருவ நட்சதிரங்கள் அங்கேதான் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம் வெள்ளித் திரையையும் சார்ந்து வாழும் சின்னத் திரையில் அவ்வப்போது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்துவிட்டு வருவது தப்பில்லைதானே? வெறும் நான்கு வரிச் செய்திகளாகவே முடித்து விட்டால் எப்படி? அமெரிக்கத் தேர்தலில் எல்லோரும் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் எனக் கணித்தார்கள். மனிதர்களைத் தாண்டி சில குரங்குகளும் தவளைகளும்கூட கணித்தன. ஆனால் மாறாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே சின்னத்திரையிலும் ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சத்தமில்லாத சாதனை அது. அதேசமயம் அந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள மாறியிருக்கிற சில அம்சங்கள் குற...