முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜோ டி குரூஸின் கருத்துரிமையை முடக்கிக் கொண்டே பெருமாள்முருகனின் கருத்துரிமையைக் காப்பாற்ற முடியாது!





Andhimazhai Image
 
-லீனா மணிமேகலை
 
 
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சிதான் சுதந்திர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில் தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் தரக்கூடாது என்று விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தார்கள்.  சென்சார் போர்டு செர்டிஃபிகேஷன் (Certification)) போர்டாக பெயர் பெற்று வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டம் கலைஞர்களுக்கு கருத்துரிமை வழங்குகிறது. அத்துடன்  பார்வையாளர்களுக்கு தணிக்கை இன்றி படங்கள் பார்க்கும் உரிமையையும் பாதுகாக்கிறது. அதனால்தான் எப்போதும் சென்ஸார் போர்டை எதிர்த்து நீதிமன்றம்செல்லும் போது இயக்குநர்களால் வெற்றி பெறமுடிகிறது. ஆனால் நடைமுறை? ஆட்சிகள் மாறும்போது பிராந்திய CBFC (Central Board of Film Certification; C என்றால் censor அல்ல கவனிக்கவும் ) அலுவலகங்களில் அரசியல் ரீதியில் நியமனங்கள் நடைபெறுகின்றன. இவர்களுக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மத்திய CBFC தலைவர் பங்கஜ் நிஹ்லானி நேரடியாக தன்னை மோடியின் கையாள் என்று சொல்லிக்கொள்கிறார். நியமனம் செய்யப்பட்ட ஆட்கள் தங்கள் அரசியல் மாஸ்டர்களை  உற்சாகப் படுத்துவதற்காக செயல்படுகிறார்கள். இதில் யாருமே படைப்பாளியைப் புரிந்துக் கொண்டவர்கள் கிடையாது.
 
 
 இது ஏன் பூதாகரமாக வெடிக்கவில்லை என்றால் நமது திரைப்பட உலகம் வணிகப் படங்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் வெளியீட்டுக்கு நேரம் குறித்துவிட்டு தணிக்கைச் சான்றிதழ் பெறச் செல்லும்போது, பல இடங்களில் வெட்டச் சொன்னாலும் ஊழல் பேரங்களால் சரிக்கட்டப்படுகின்றன. வணிகப்படம் எடுத்தவர்கள் தணிக்கைச்சான்றிதழ் பெறுவதையே பெரிய சாதனையாக எண்ணி விளம்பரங்கள் கொடுப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சினிமாத்துறையில் நடக்கும் இந்தக் கோமாளித்தனத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. முதலில் அறுபது வெட்டுகள் கொடுப்பதும் பேரத்துக்குப் பிறகு அது நாற்பதாகக் குறைவதும் நடக்கிறது. இல்லையெனில் கபாலி போன்ற படத்துக்கு ‘யு’சான்றிதழ் வாங்க முடியுமா? அமெரிக்காவிலேயே அது யு/ஏதான்.
 
 
 நான் முதல்முதலில் என்னுடைய ‘பறை’ படத்தை CBFC க்கு எடுத்துச் சென்றேன். அதற்கு முன்னால் நான் எந்த சான்றிதழும் வாங்கியது கிடையாது. ஏன் போனேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் திரைப்பட விழாக்களில், பிலிம் சொசைட்டிகளில் படம் திரையிடுவதற்கு எந்த சென்சாரும் வேண்டியிருந்ததில்லை. ஆனால் பாஜக முதல்முதலில் ஆட்சிக்கு வந்த காலத்தில் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்களுக்கும்சென்ஸார் தேவை என்று அறிமுகப்படுத்தப்பட்டது.திரைப்பட விழாக்கள் என்பவை படைப்புசுதந்தரத்துக்கானவை, அங்கும் தணிக்கையா என்று 300க்கும் மேற்பட்ட சுதந்தரப் படைப்பாளிகள் ஒன்று சேர்ந்துப் போராடி, இந்த விதியை விலக்க வைத்தார்கள். ஆனால் இன்றும் தணிக்கைச்சான்றிதழ் இல்லாவிட்டால் இந்த தேசத்தின் அதிக பட்ச அங்கீகாரங்களான இந்தியன் பனோரமாவுக்கும், தேசியவிருதுக்கும் படம் அனுப்ப முடியாது. இந்தியன் பனோரமாவில் தேர்வானால் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் படம் பாதுகாக்கப்படும். அவற்றை அரசுத் தொலைக்காட்சி (Doordharshan) வாங்கிக்கொண்டு ஒளிபரப்பும். இதெல்லாம் திரைப்படக் கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் மிகமுக்கியமான அம்சங்கள். இணையம் பலப்படும்வரை இந்தியன் பனோரமா தான் தேர்வான படங்களை வெளிநாடுகளில் நடக்கும் விழாக்களுக்கு அனுப்பிவைப்பார்கள். ஆனால் பனோரமா தேர்வுக்கும் தணிக்கைச் சான்றிதழ் அவசியம் என்பது தான் அதில் சிக்கல்.  இன்றுவரை 35எம்எம் பிரிண்டை வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்றால் சென்ஸார் சான்றிதழ் இல்லாமல் அனுப்பமுடியாது என்ற அபத்தமான விதி உள்ளது. இப்போதைய ‘வீமியோ’ காலத்தில் கூட இந்த விதிகளில் எந்தவிதப் பரீசீலனைகளும் வரவில்லை. இன்றும் நமது நாட்டுக்குள் உங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் தணிக்கைச் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பிக்கக் கூட முடியாது என்ற வெட்கக்கேடான நிலைமையை சகித்துக் கொண்டு ‘ஈரானில்‘ தணிக்கை என்று உச்சு கொட்டுவதற்கு நமக்கென்ன தகுதியிருக்கிறது?
 
 
இதுவரைக்கும் தேசிய விருது தேர்வுக்கு என்னுடைய ஒரு படத்தையும் அனுப்பியதில்லை. என்னுடைய Goddesses படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேசப் பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கியது. அந்தப்படத்தைக்கூட தேசிய விருதுக்கு நான் அனுப்பிவைக்க வில்லை. ஏனெனில் அதற்குச்  ‘சான்றிதழ் இழவை’ வாங்க வேண்டும்.
 
 
செங்கடலுக்கு தணிக்கை சான்றிதழைத் தயாரிப்பாளர் பெயரில் வாங்கினோம். ஆனால் தயாரிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கவே இல்லை என்பதை சமீபத்தில் தான் தெரிந்துக்கொண்டேன்.
 
 
படத்திற்கு  CBFC வெட்டுகள் தர நேரும்போது, அதை மறுக்க மறுபரீசலனை கமிட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். அதற்கான செலவுகளுக்கு நாம் தான் பணம் கட்டவேண்டும். அங்கிருந்து மத்திய டிரிபியூனல் போகலாம். அங்கேயும் வழக்கறிஞருக்கு நாம்தான் பணம்கொடுத்து வாதாட வேண்டும். ஆனந்த் பட்வர்த்தன் போன்றவர்கள் ஒவ்வொரு படத்துக்கும் இப்படித்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ட்ரிபியூனலில் ஜெயிக்கவில்லை என்றால் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டு வாதாடவேண்டும்.
 
 
செங்கடல் படத்துக்கு முதலில் இங்கே தடைகொடுத்து விட்டார்கள். எங்கேயும் திரையிட முடியாது. நான் இங்கே மறுபரிசீலனைக் குழுவுக்கெல்லாம் போகவில்லை. அதற்கே 25000 ரூபாய் செலவாகிற மாதிரி இருந்ததால், நேரடியாக ட்ரிபியூனலுக்கே சென்று வழக்காடினேன். ட்ரிபியூனலில் சென்ஸார் போர்டின் தடையை ரத்து செய்து வழிகாட்டுதல்கள் கொடுத்தார்கள். அதை எடுத்துக்கொண்டு திரும்ப சென்னைக்கு வந்து, டிரிபியூனல் கொடுத்த விதிகள்படி அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவுக்கு போட்டுக் காண்பித்துதான் சான்றிதழ் வாங்கினேன். இது படம் எடுப்பதை விட அதிக பொறுமையையும் சக்தியையும் உறிஞ்சும் வேலை.
 
 
 
சென்ஸார் போர்ட் போல செயல்படும் CBFCயைக் குப்பையில் தூக்கிப்போட வேண்டிய காலம் வந்துவிட்டது. சுதந்தரமான ஓர் அமைப்பு, அரசால் கட்டுப்படுத்த முடியாத ஓர் அமைப்பைச் சான்றிதழ் வழங்கும் பொருட்டு அமைத்துக் கொள்ளலாம்.  இந்த  சான்றிதழ் விவகாரத்திலும் ஒரு சிக்கல் உள்ளது.
 
 
செங்கடலுக்கு ‘ ஏ‘ கொடுத்தார்கள். ஏனெனில் அந்தப் படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வாழும் தலைவர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன என்று காரணம் சொன்னார்கள்.  நான் இதையும் எதிர்த்து உச்சநீதி மன்றம் போகலாம். அதற்கெல்லாம் எனக்கு சக்தி இல்லை என்பதால் விட்டுவிட்டேன். ‘ஏ‘ சான்றிதழ் இருக்கும் படங்களை பனோரமாவுக்குத் தேர்வானாலும் தூர்தர்ஷனில் வாங்க மாட்டார்கள். தூர்தர்ஷன் கொடுக்கும் பணம், அதற்கு  இருக்கும் பார்வையாளர் எண்ணிக்கை எல்லாவற்றையும் இழக்கவேண்டியிருக்கும். தியேட்டர்களும் வினியோகத்திற்கு எடுக்க மாட்டார்கள். நம்ம நாட்டைப் பொறுத்தவரை ஒரு படைப்பாளிக்கு,  ‘ஏ’ சான்றிதழ் ‘கொலைத் தண்டனைக்கு‘ சமமானது தான்.
 
 
முதல் உலக நாடுகளில் இங்கிருப்பது போன்ற சிஸ்டம் இல்லை. உதாரணத்திற்கு ஒரு படத்தில் கடுமையான சொற்பிரயோகம் இருக்குமெனில் அதை வெட்டமாட்டார்கள். இதில்  Strong Language பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று டிஸ்கிளைமர் போடுவார்கள். அவ்வளவுதான். ஒரு நேர்மையான படைப்பாளியால் தன் படத்தில் வெட்டுவிழுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் ஒரு நாவல் எழுதுகிறீர்கள். பதிப்பாளர் அதில் ஒன்றுக்குப் பாதியாக வெட்டிவிட்டுத்தான் பதிப்பிப்பேன் என்றால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? அதேதான். ஆனால் இந்த தார்மீகக் கோபமே இங்கிருக்கும் படைப்பாளிகளுக்கு இல்லையே!
 
 
சமீபத்தில் ‘Lipstick Under My Burka” என்று ஒரு படத்துக்கு CBFC தடைகொடுத்தபோது, நீதிபதி, ‘ ஏன் இப்படி நடந்துக்கிறீங்க.. உங்கள் வேலை A, U, U/A என தரம்பிரித்து சான்றிதழ் தருவது தானே.. ஏன் இப்படி தலைவலி கொடுக்கிறீங்கன்னு” வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.
 
 
இதுவரை நாம் விவாதித்தது  சட்டத்துக்கு உட்பட்ட தணிக்கை. இதை எதிர்த்துப் போராட நமக்கு வழிகள் உள்ளன. நம் படைப்புரிமைகளுக்கு சாதகமாக சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. உச்சநீதிமன்றம் வரை போகலாம். ஆனால் இதற்கு வெளியே ‘கும்பல்’ தலையிட்டுச் செய்யும் தணிக்கை என்று ஒன்று இருக்கிறது. இதில் யாரை எதிர்க்கிறோம் என்றே தெரியாமல் போராட வேண்டியிருக்கிறது. சிவசேனா போன்ற அமைப்புகளுக்கு இதுவே முழுநேர வேலை என்றாலும் இடதுசாரி அமைப்புகளும் விதிவிலக்கல்ல. ஸ்டாலினியவாதிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? தணிக்கையை ஜனநாயக அச்சுறுத்தலாக இடதுசாரிகள் பார்க்கத் தவறுகிறார்கள். தமது கருத்தியல் சார்பு, பொது எதிரி என்றால் மட்டுமே தணிக்கைக்கு எதிராக கூச்சல் போடுகிறார்கள். யாராக இருந்தாலும், நாம் நம்பும் கருத்துக்கு உவப்பில்லாதவர்களாக இருந்தாலும், அவர்களின் வெளிப்பாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும்.  ஜோ டி குரூஸின் கருத்துரிமையை முடக்கிக் கொண்டே பெருமாள்முருகனின் கருத்துரிமையைக் காப்பாற்ற முடியாது. ஆனால் அவரவர் கொள்கைக்கு ஆதரவாக இல்லாதவர்களைக் கைவிட்டுவிடும் போக்குதான் இங்கு நிலவுகிறது. கருத்தியல்களுக்கு அப்பால் அனைத்து தரப்பு படைப்பாளிகளின் படைப்புரிமைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான படைப்புச்  சுதந்தரத்திற்கான ஆதரவு. மற்றது பாசிசத் தன்மையன்றி வேறில்லை.  விஸ்வரூபம் படத்தில் பிரச்சினை என்றாலும், டேம் 999 படத்தில் பிரச்சினை என்றாலும் விமர்சனங்கள் மூலம் அணுகுவது தான் நியாயம். 
 
தமிழ் தேசிய, ஈழ ஆதரவாளர்களிடமும் கருத்துரிமை எதிர்ப்பு மனநிலைதான் உள்ளது. அவதூறுகளைப்பரப்பி ஆளை இல்லாமல் ஆக்க முயற்சி செய்கிறார்கள். பிரசன்ன விதானகேயின் ‘வித் யூ வித்தவுட் யூ’ ((With You, Without You)  சிங்களப் படம் வெளிவந்தபோது, சிங்கள முன்னாள் ராணுவவீரன் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்வதாக எப்படி படம் எடுக்கலாம் என்று இரண்டு ‘திரை இயக்குநர்கள்’ சீமானும், வ. கௌதமனும் தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு கும்பல் தியேட்டர்களுக்கு தொலைபேசி அச்சுறுத்தல்களைக் கொடுத்து படத்தை ஒரே நாளில் தூக்கவைத்தார்கள். என்னுடைய  வெள்ளை வேன் கதைகள் (White Van Stories) ) படத்துக்கும் இதேதான் நிலை. பெண்ணியப் போலிகள் பொய் அறிக்கைகளை வெளியிட்டு படத்திற்கெதிரான வதந்திகளை பரப்பினார்கள். பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரையிடல்களை ரத்து செய்யவைத்தார்கள். இங்கிருக்கும் கருத்துக் குண்டர்களின் கைகளில் உண்மையிலேயே அதிகாரம் இருந்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
 
சேனல் ஃபோரில் வெளியான வெள்ளைக்காரனின் ஆவணப்படம் என்றால் அதைக்கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள்.  அதே சேனல் ஃபோர் வெளியிடும் ஒரு தமிழ்ப் பெண்ணின் படைப்பை முடக்குவார்கள். இவர்கள் இன்னும் யாருக்கு அடிமையாக இருக்கிறார்கள்? தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், முற்போக்கு இயக்கவாதிகள், இடது சாரிகள், பெண்ணியர்கள் என்று எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் சென்சார் ஆபீசர்களைக் களையாமல் இங்கு வீரியமான படங்கள் வரவே முடியாது. இன்றுவரை யூதர்கள் படுகொலை பற்றி படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். கடைசிப்போரில் லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த துயரம் பற்றி எத்தனைப்  படங்கள் வந்திருக்கவேண்டும்? ஆனால் என்ன வந்திருக்கிறது? இதற்கான மொத்த பாராட்டுமே தமிழ்த் தேசியவாதிகளையே சாரும்.
 
 
வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இந்தப் படங்களைப் பார்க்கவே மாட்டார்கள். பார்க்காமலேயே எதிர்ப்பார்கள்.  அப்படியே கும்பலாகச் செயல்பட்டு அந்த படங்களைத் திரையிடவிடாமல், அதைப் பற்றி எழுதவிடாமல் தடுத்து சத்தமே இல்லாமல் அழித்துவிடுவார்கள்.! எப்போதுமே ஒரு படைப்பாளியை, தன்னை தன் படைப்பை பாதுகாக்க வேண்டிய பதட்டத்திலேயே வைத்திருக்க விரும்பும் சமூகம் என்ன மாதிரியான சமூகம்? வானத்திலிருந்து எந்தப் படைப்பாளியும் குதிக்க முடியாது. இந்த சமூகத்திலிருந்து தான் வரமுடியும். சுதந்திரமான படைப்பாளிகளைப் பாதுகாப்பதும் சமூகத்தின் பொறுப்பும் தான். ஒவ்வொரு படைப்பாளியுடனும் அவரின் கருத்து சுதந்திரத்திற்காக, வெளிப்பாட்டுரிமைக்காக, கொள்கைச் சார்பு பார்க்காமல் நிற்கவேண்டும். அதுவே ஒரு சமூகத்தின் படைப்பியக்கத்துக்கு முக்கியமான விசை. 
 
 
(அந்திமழை 2017 ஏப்ரல் இதழில் வெளியான பத்தி)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...