முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"சப்பையும் ஒரு ஆம்பள தான்... எல்லா ஆம்பளையும் சப்பை தான்!" - ஆரண்யகாண்டம் எனும் கல்ட் க்ளாஸிக் #6YearsOfAaranyakaandam


 கார்த்திக் ஜீவானந்தம்

அன்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தால் நமக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும்.இது தமிழ் திரைப்படம் தானா?  மஞ்சளும், கருப்புமாக டிசைன் செய்யப்பட்டிருந்த அந்த போஸ்டரில் தெரிந்த பெயர் ஒன்றுமே இல்லை.யுவன்சங்கர் ராஜாவை தவிர.இன்று தியாகராஜன் குமாரராஜாவின் "அநீதிக் கதைகள்" திரைப்படத்திற்கு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.


"ஆரண்ய காண்டம்"

வெகுஜன மக்கள் அப்படி ஒரு படம் வந்ததா என்று சந்தேகத்துடன் கேட்டால் நாம் ஆச்சர்யப்படக்கூடாது.  இத்தனைக்கும் சினிமா விமர்சகர்கள் , ஆர்வலர்கள் , ரசிகர்கள் என அனைவரும் பாராட்டிய படம்,தேசிய , சர்வதேச விருதுகளைப் பெற்ற படம்.

 "படத்தின் ப்ளூ ரே (Blue Ray) சிடியை வெளியிடலாமே?" என்று அதன் தயாரிப்பாளரான எஸ்.பி.பி.சரணிடம் கேட்டபோது ,"அதை வெளியிட என்னிடம் பணம் இல்லை.உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்" என்று அவர் அளித்த பதிலை பார்த்தே தெரிந்திருக்கும் ஆரண்ய காண்டத்தின் வணிகரீதியான வெற்றி.

சொல்லப்போனால் 8 வருடங்களை ஆரண்யகாண்டம் நிறைவு செய்திருக்கிறது.படப்பிடிப்பு 2008 ல் ஆரம்பிக்கப்பட்டு 2009 லேயே முழுவதும்  தயாராகிவிட்ட நிலையில் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு தெற்காசிய திரைப்பட விழாவில் (SAIFF) சிறந்த திரைப்படத்திற்கான விருதை வாங்கிய, நியோ நாயர்(Neo-Noir) வகைமையில் வெளிவந்த முதல் தமிழ்த்திரைப்படமாக அடையாளப்படுத்தப்படும் ஆரண்ய காண்டம் சென்ஸார் போர்டின் '52' கட் களுக்குப் பிறகு UA சான்றிதழுடன் வெளியாகி இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது. இதற்கு முன்பே புதுப்பேட்டை போன்ற படங்களில் நியோ நாயர் ஓரளவு முயற்சி செய்திருந்த போதும், அதை முழுமை செய்தது குமார ராஜா தான். 


நியோ நாயரில் பல்வேறு வடிவங்களில் கதைசொல்லல் அமைந்த திரைக்கதை முழுக்க மாஃபியா , கேங்ஸ்டர் போன்ற குற்றப் பின்னணியில் அமைந்திருக்கும்.
நியோ நாயர்  களத்தையும், கதை சொல்லலைச் சார்ந்தது.
மேலும் தொடரும் முன் இந்த "வேற" லெவல் டிரெயிலரை பார்த்து விட்டு தொடர்வது நலம்.

கதை  நிகழும் காலம் ஒரே நாள் - எட்டு கதாப்பாத்திரங்கள் 

*சிங்கப் பெருமாள் - பசுபதி
ஆரண்ய காண்டம்

பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் தான்  சிங்கப்பெருமாளுக்கு உயிர் கொடுத்தவர்.கருணை என்பதே பழக்கப்படாத இந்த தாதா ,தேவையில்லால் கத்திக் கொண்டிருக்கும் வழக்கம் அறவே இல்லாமல் "ஈ" என்று க்ளோசப்பில் பல்லை காட்டும் போது பகீர் அடிப்பது தான்  கேரக்டர் ஸ்கெட்சின் பலம்.

பசுபதியின் ஐடியாவை கேட்டபின், ரிஸ்க் வேண்டாமென சிங்கப்பெருமாள் கூற ,"நல்ல டீலு" என்று பசுபதி  மீண்டும் இழுப்பான். பல் விளக்கிக்கொண்டே கண்களை சுருக்கிக் கொண்டு வாயே திறக்காமல் மறுக்கும் அந்த பாவனையை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். அது ஒரு தரிசனம் போல எளிதில் காணக்கிடைக்காத நடிப்பு.

ஓடிக் கொண்டே ,படத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் புத்திசாலி தளபதி கதாப்பாத்திரம் தான் பசுபதி.மையக் கதாப்பாத்திரம் பசுபதியாக நடித்திருக்கும் சம்பத் , தான் தமிழின் மிக முக்கியமான நடிகன் என்பதை நிரூபித்திருப்பார். 

*கொடுக்கா புலி - காளையன்
ஆரண்ய காண்டம்

வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பம் அப்பனும் மகனுமாய் பட்டணத்தை வந்தடைபவர்கள்.நேர்மாறான குணம் கொண்டவர்கள். காளையனாக குருசோமசுந்தரம். (இதில் தான் இவர் அறிமுகம்) எரிந்து விழும் மகனிடம் ,முகம் சுருங்கி ,"அப்பனை ஏச்சுப் புட்டானுவய்யா" எனும் போதும் , தாதா ஆகிய சிங்கப்பெருமாளை சேவல் சண்டையில்  வென்றதும் "ஏய் தோத்தாங்கொலி" என்று வம்பிழுத்து சேவலை பலி கொடுக்கும் போதும் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் பாவனைகள் ப்ளாக் ஹியூமரின் நுண்ணிய தருணங்கள்.

அப்பனை மானாவாரியாக திட்டி விட்டு,கடைசியில் ''அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?" என்று கேட்கும் பசுபதியிடம், 
"அப்டில்லாம் இல்ல.. ஆனா அவரு எங்க அப்பா" எனும் போது கொடுக்கா புலியாக நடித்திருக்கும் மாஸ்டர் வசந்த் சொல்லும் போது அந்த நேசம் ஒருவழியாய் நமக்கு பிடிபடும்.

*சுப்பு - சப்பை
ஆரண்ய காண்டம்
சிங்கப் பெருமாளால் நடிகையாவோம் என்று ஏமாற்றப்பட்டு அவருக்கு மனைவியாக்கப்பட்ட பாவப்பட்ட பெண் , கதையின் ஆதாரப்புள்ளியாய் மாறும் தருணம் யாரோ  நம் தண்டுவடத்தில் தட்டியது போலிருக்கும். 

சப்பை சற்றே நளினமாக அந்த கொள்ளைக்கும்பலின் நடுவே "எல்லாமே பண்ணுவேன்" என்று சிணுங்கிக் கொண்டு, எப்போதும் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருப்பான்.ரவிகிருஷ்ணா நடித்திருக்கும் இந்த வேடம் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ கேமின் தீம் ஒரு ராணியை ,ஒரு சிறுவன் காப்பாற்றுவதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அது சுப்பு ,சப்பையை குறிக்கும் குறியீடு.


*கஜபதி - கஜேந்திரன்

குரூரத்தின் ஒட்டுமொத்த உருவமான அண்ணன் - தம்பி தாதாக்கள்.
சில வார்த்தைகளில் கதாப்பாத்திரங்களின் பின்னணியை விளக்கிவிடும் வசனங்களுக்கு இடையில் கஜேந்திரனுக்கு வைக்கப்பட்ட "விரல் கதை"  கதை சொல்லலின் வேறுபட்ட வடிவம்.

இப்படி அனைவரையும் இணைக்கும் திரைக்கதை எப்படி எல்லாம் சொல்லப்படுகிறது என்பது மிக முக்கியம். கதை மாந்தர்களின் வசனங்கள் , சுய விளக்கங்கள் , கதை சொல்லல்கள் ,பழக்கப்பட்டிருக்காத காட்சிகளுக்கு ,வித்தியாசமான பின்னணி இசை, ரிவர்ஸ் சீன்கள் . நாம் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என எதிர்பார்க்கிறோமோ அதெல்லாம் தப்பித் தவறியும் நடந்துவிடாத ஆச்சர்யம் தான் இதன் ப்ளஸ்.

பாடல்களே இல்லாத இத்திரைப்படத்திற்கு யுவனின் ஆல்டைம் பிஜிஎம் லிஸ்டில் கண்டிப்பாக இடம் உண்டு.

படத்தொகுப்புக்காக 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதினைப் பெற்ற ஆரண்ய காண்டத்தின் எடிட்டிங் சாம்பிளை அதன் டிரெய்லர்  மூலம் கண்டு கொள்ளலாம்.

இதற்கு முன் யாரிடமும் உதவி இயக்குனராய் பணியாற்றாத தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படமான இதில் எதிர்பார்க்காத கோணங்களில் வைக்கப்பட்டிருக்கும் கேமராவும் கதைசொல்லி. சைக்கிளுக்கு அடியில், வேலிகளுக்கு நடுவின் ,சுவர் துளையின் மத்தியில் என அந்த களத்தின் தன்மையை நமக்கு கடத்தும்.

படத்தின் தொடக்கத்தில் பகவத் கீதையின் வாசகம் வரும்.
"எது தர்மம்?"
"எது தேவையோ அதுவே தர்மம்"
முன்னெப்போதும் நாம் அறிந்திருக்காத மனிதர்களின் தேவைகளுக்கு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை செயற்கை பூச்சு இல்லாமல் , கலாப்பூர்வமான ஒரு கதை வடிவத்தை வைத்ததற்காக தியாகராஜன்  குமாரராஜா தவிர்க்க முடியாத கலைஞன் ஆகிறார்.

 ஒன்றை உறுதியாய்க் கூறலாம். இதற்கு முன் நீங்கள் ஆரண்ய காண்டம் பார்க்காதிருந்தால், முன்னெப்போதும் ஏற்பட்டிருக்காத அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..! 
அது உங்களை ஏமாற்றவும் செய்யலாம், ஆச்சர்யமும் படுத்தலாம் ! 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

இருட்டு அறையில் முரட்டு குத்து - ஐ சப்போர்ட் :-)

அராத்து இந்த படத்துக்கெல்லாம் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இந்த  படத்துக்கு எழும் எதிர்ப்பைப் பார்த்தவுடன் எழுத வேண்டிய கட்டாயம். முதலில் படம் :- மொக்கை படம். கொஞ்சம் கூட கவனமும் , மெனக்கெடலும் , ப்ரொஃபஷனலிஸமும் இல்லாத மட்டி படம். அடல்ட் காமடி : இதை எடுக்க மூளையும் ரசனையும் வேண்டும். கலா ரசிகனாக இருக்க வேண்டும். அடல்ட் காமடி என்ற பெயரில் இந்த படத்தில் இருப்பதெல்லாம் , கற்பனை வளம் இல்லாத அருவருப்பு காமடி.அதிலும் ஒரு ஓவியத்தை பார்த்து இருவர் நின்று கொண்டே சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் அருவருப்பின் உச்சம். அடல்ட் காமடியை விடுங்கள், படத்தில் காமடியே இல்லை. செக்ஸ் பற்றி , பொதுமக்கள் பேசிக்கொள்வதை , வெளிப்படையாக திரையில் வைத்ததால் ஆர்பரிக்கிறார்கள் , அவ்வளவே ! கவர்ச்சி : இதைப்போன்ற படங்களில் கவர்ச்சியாவது இருக்க வேண்டும். க்ளீவேஜ் , தொடையை காட்டினால் கவர்ச்சி என்பதெல்லாம் , பிரசாந்த் காலத்தோடு மலையேறி விட்டது. இந்த படத்தில் காயலான் கடை பார்ட்டி , டொக்கு ஒடிசல் வாங்கியதையெல்லாம் காட்டி கவர்ச்சி என்கிறார்கள், மண்ணாங்கட்டி ! அவனவனு...

ரிப்போர்ட்டரா இருக்கிறது குத்தமாய்யா ?

வேலை கிடைக்காம இருந்தப்பவும் சரி, வேலை கிடைச்சு சென்னையிலேயே செட்டிலான பிறகும் சரி... ஒவ்வொரு தடவை சொந்த ஊருக்குப் போகும்போதும், நமக்குனே காத்துட்டிருக்கிற  டிக்கெட்டுகளை சமாளிக்கணும்னா, கொஞ்சம் கஷ்டம்தான். இவங்களுக்கெல்லாம் 'நாம என்ன வேலை பார்க்கிறோம்’னு விளக்குறதுக்குள்ளேயே, நொந்துடுவோம். அதுவும் இந்த ரிப்போர்ட்டர் வேலையை விளக்குறது இருக்கே... ஊர்ல இறங்கி, பேக்கோட நடந்துபோனாலே, நாலு திசையில இருந்தும் நோக்கு வர்மம் மாதிரி நோக்குவாங்க. ''எங்கே இருக்கீங்க தம்பி?, ஆளையே பார்க்க முடியலை''னு ஆரம்பிப்பாங்க. 'இதென்னடா கொடுமையா இருக்கு? ஊர்ல உள்ளவங்க அப்படித்தானே கேட்பாங்க?’னு யோசிக்கிறீங்க. எக்ஸ்கியூஸ் மீ.... அந்தாளு இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கிறது எட்டாவது முறை.   'எங்கே இருக்கீக தம்பி?’னு ஆரம்பிக்கிற ஆம்பளைங்களை விட, 'என்ன வேலை பார்க்கிற?’னு ஆரம்பிக்கிற பெண்கள் கொஞ்சம் டேஞ்சர். 'ரிப்போட்டர்னா? இந்தக் கணக்கு எடுக்கிற வேலையா?’ 'அது இல்லடி, ஊரு ஃபுல்லா சுத்துவாங்கள்ல அது...’ 'இல்லை.. டி.வி-யில மைக்கைப் பிடிச்சுக்கிட்டு நிப்பாங்கல்ல... அந...