முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னை மீட்ட யட்சன்




அன்பின் சரோ..
முதலில் மன்னித்துவிடு. உன் கேள்விக்கு சரியான பதில் இல்லாமல் சொல்லாமல் உன்னோடு பேச்சை நிறுத்திவிட்டமைக்கு.
ஞாபகமிருக்கிறதா உனக்கு நம் அறிமுகம்?. தோழி சுந்தரியின் திருமணத்திற்கு வந்திருந்த போது என்னைச்சுட்டி உன் தங்கையிடம் சொன்னாய் ''அவள் சேலை கட்டிருக்கற ஸ்டைலப்பாரேன்.. உடம்பு முழுக்கத் திமிர்'' எனக்கு நன்றாகத் தெரியும் சரோ நீ என்னைக் கவனித்தாய்.. உன் தங்கை எனக்கு சுந்தரி மூலம் கொஞ்சம் பழக்கம்.. அவள் ஒரு சுட்டிக்குழந்தை..அவளுக்கு முத்தங்கள் தரலாம். அவள்தானே உன்னை என்னிடம் இழுத்து வந்து அக்கா நீங்க திமிர் பிடிச்சவங்கன்னு அண்ணன் சொல்றான் என்று உன்னை என்னிடம் காட்டித்தந்தாள்.. ''ஐயோ அப்படியெல்லாம் நான் இல்லைங்க'' என்றதும் உனக்குள் நீயே ஒரு கணம் பின்வாங்கி வெளிவந்தாயே அது உன் கண்களில் தெரிந்தது. நான் திமிர்பிடித்தவளா இல்லையா என்பதெல்லாம் தெரியாது, ஆனால் அந்த நேரத்தில் உன்னிடம் என் திமிரை வெளிக்காட்ட விரும்பவில்லை என்பது மட்டும் நிஜம்.
திமிர்பிடித்த தோற்றம் என்பது ஒருவகையில் பெண்களுக்குப் பாராட்டு. என்னைப்பார்த்தால் அப்படியா தெரிகிறது? பார்த்த உடனே அப்படிதான் இருந்துச்சு இப்ப பேசுனதும் அப்படித் தெரியல என்றாய். அட என் அறிவு நண்பனே நான் மட்டுமல்ல எல்லா பெண்களுமே இப்படிதான். திமிர் என்பது காட்டக்கூடியவர்களிடம் மட்டும்தான் காட்டப்படும். முகாந்திரம் இல்லாத இடத்தில் திமிரைக்காட்டுவது எத்தனை முயற்சித்தாலும் வராது. ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, திமிர் பிடித்தவள் என்று நீ சொன்னதும் மகிழ்ந்த மனம், நான் அப்படி அல்ல என்று நீ சொன்னதும் இன்னும் மகிழ்கிறது. நாம் நெருக்கமாவதற்கு சிரமமே படவில்லை.. மிக எளிதாக நிகழ்ந்தது அது. சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்து பின் மண்டபம் விட்டு வெளியேறும் வரை சின்னசின்னப் புன்னகையில் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். கடைசியாக விடைபெறுவதற்குச் சொல்ல வந்தாய்.. ''சரிங்க பார்க்கலாம்'' என்றதும் ''எப்போ?'' என்ற உன் கேள்வியில் தான் தடுமாறிப்போனேன்.. யாரும் என்னிடம் இப்படிக்கேட்டதில்லை உன் கேள்விக்கான சரியான பதிலும் என்னிடம் இல்லை. ''மொபைல் யூஸ் பண்ற பழக்கம் இருக்கா?'' என்றாய்.. அலைபேசி எண்ணை உன்னிடம் சொல்லிவிட்ட பின் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கும் என்னை என்ன செய்வது சொல்.!
நான்கு நாட்களில் 14 ஆயிரம் மெசேஜ் சென்ட் ,14800 மெசேஜ் ரிசீவ்ட் என்று கணக்குக்காட்டியது வாட்சப் ஹிஸ்டரி. இன்றோடு உலகம் அழிந்துவிடும் அதற்குள் வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்பு இருவருக்குமே இருந்தது.. என் மீது சந்தேகப்பட்டான் என்னை முன்முடிவு செய்தான் என்பதற்காக தோற்ற காதல் பற்றி சொன்னேன் அல்லவா உண்மையில் அப்படி ஒரு காதல் என் வாழ்வில் இல்லவே இல்லை.. நீ என்னை எப்படி ட்ரீட் செய்யவேண்டும் என்ற பாடம் அது.. இப்படி நிறைய சொல்லி இருக்கிறேன்.. எனக்கு பிடிக்காதவைகளை யாரோ செய்தது போலவும் அதற்கு நான் வருந்தியது போலவும் உன்னிடம் சொன்னேன்.. நீ அவற்றை மறந்தும் செய்துவிடக்கூடாது என்பதற்காக.. அப்போதைய மனநிலையில் எந்தக் காரணத்திற்காகவும் நானுன்னை இழக்க விரும்பவில்லை.
பணியிடத்தில் ஒருவனின் தவறான அணுகுதல் பற்றிச் சொன்னதும்.. உலகின் அத்தனை கெட்ட வார்த்தைகளும் சொல்லி அவனை திட்டினாய்.. தமிழில் இவ்வளவு கவுச்சி வார்த்தைகள் இருக்கிறதென்றே அன்றுதான் தெரியும். பெண்பார்க்க வந்தவன் என்னை பிடிக்கவில்லை என்ற போது அவனைத்திட்ட வேண்டும் என்று ஆசை, அவனுடைய செல்போன் நம்பர் உன்ட்ட கொடுத்து நீ அவன நாறக்கிழி கிழிச்சு வாய்ஸ் ரெகார்ட் செஞ்சு அனுப்பினாயே..! எப்பா டேய்.. அவன் வம்சத்தையே கேவலப்படுத்தி வச்சிருந்தடா. என் மேல் என்னைவிட அதிக உரிமை எடுத்துக்கொண்டாய்.. ஒருவேளை இது காதலா என்றால் இல்லை.. நீ என்னை காதலிப்பதாக சொன்னதே கிடையாது.. என்னைக் கல்யாணம் செய்பவன் என்னை சந்தோசமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் அவனைக் கொன்றுவிடுவேன் என்பாய். அவ்வளவு பிடிக்குமாடா என்னை ?!!!
உடல் குறித்த புகழ்ச்சிகளை விரும்பியதில்லை யாரும் சொன்னதுமில்லை.. முதன்முதலில் கேட்டது உன் வாயிலிருந்துதான் ''மூவ் விளம்பரத்தில் நடிக்க ஏற்ற இடுப்பு'' சனியனே ச்சீ நீ ஏன்டா அங்கல்லாம் பார்த்த.. அத்தோடு நீ நிறுத்தி இருக்கலாம் clovia bra வரைக்கும் பேச்சை இழுத்தாய். நெஞ்சுக்கூட்டிற்குள் வெப்பம் பரவி தேகம் மொத்தமும் அனலில் தகித்து கால்விரல் இடைவெளிகள் ஊறின அன்று. அதற்குப் பின்னான நாட்களில் நாம் அதிகமாகக் காமத்தைப் பற்றிதான் பேசினோம். ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் கையாளவேண்டும் என்று அந்த இரவில் படிப்படியாக அலைபேசியில் சொல்லிக்கொண்டிருந்தாய். ''டேய் நிறுத்து! இது செக்ஸ்சாட் தான?'' ச்சே இல்லடி செக்ஸ்சாட் வேற. அது எப்படி இருக்கும்ன்னா?! முதல்ல நீ கட்டில்ல படுத்துக்க ''ஹ்ம்ம்ம்'' இப்ப நான் உன் பக்கத்தில இருக்கறதா நினைச்சுக்க.. ''ஹ்ம்ம்ம்'' ஹஹாஹஹா டேய் பொறுக்கி ராஸ்கல் என்ன அழகா பிக்கப் செஞ்சடா என்னைய!!! உனக்கொன்னு தெரியுமா? நான் நீ சொல்லித்தரதுக்கு முன்னமே ஃபிங்கரிங்லாம் பண்ணுவேன்.. சரி இருந்தாலும் நீ ஆர்வமா சொல்லித்தரியே!! அதான் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரியே கேட்டுக்கிட்டேன்.. நாம் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகள் ரொம்பவே குறைவு.. காரணங்களும் குறைவு.. ஒரு வேளை சந்திக்கும் சந்தர்ப்பம் வெகுவாக வாய்த்திருந்தால் இந்த இரண்டு வருடங்களில் நாம் நிஜமாகவும் பலமுறை புணர்ந்து இருப்போம் என்றே நினைக்கிறேன். அதற்கான வாய்ப்புகளை நாம் வாழும் சூழல் கட்டுப்படுத்தி வைத்துவிட்டது.
எனக்கு நிச்சயதார்த்தம் முடியும் வரைக்கும் நாம் இருவரும் வாழ்ந்தோம் என்றே சொல்லலாம்.. அதற்குப்பின் நாம் பேசுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது குறைத்துக்கொண்டாய். திடீரென்று ஒரு நாள் போன் செய்து.. ''நான் உன்னை ஏதாவது கஷ்டப்படுத்திட்டேனா? நாம ரெண்டு பேரும் பேசிய பேச்சுக்கள் இப்ப எனக்கு guilt feel தருது. என்னோட வசதிக்காக நான் mastrubate செய்ய உன்னை யூஸ் செஞ்சுக்கிட்ட மாதிரி தோணுதுடி. என்னைய தப்பானவனா நினைச்சிடாத அயம் சாரி அயம் சாரி'' என்று அரற்றினாய்.. உண்மையில் எனக்கும் அன்று குற்ற உணர்ச்சியே மேலோங்கி இருந்தது.. உனக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் இனி நாம் பேசிக்க வேண்டாம் என்று அத்தோடு நம் தொடர்பை முறித்துக்கொண்டோம்..
கல்யாணம் குழந்தை என்று நாட்கள் ஓடிவிட்டது.. அவ்வவப்போது நீ நினைவிற்கு வருவாய். கணவனிடம் எப்போதெல்லாம் சண்டை வருகிறதோ அப்போதெல்லாம்''உன்னை சந்தோசமா வச்சிக்கலன்னா உன் புருசன கொன்னுடுவேன்'' என்று நீ சொல்லியது நினைவிற்கு வரும் சிரித்துக்கொள்வேன். நீ கேட்ட கேள்விக்கு இப்போதுதான் எனக்கு பதில் சொல்ல மனமும் பக்குவமும் வாய்த்திருக்கிறது. வாழ்வில் சூனியமும் வெறுப்பும் கலந்திருந்த கட்டத்தில்தான் நாம் சந்தித்தோம்.. கூடப்படித்த தோழிகள் அனைவருமே திருமணம் ஆகி அவரவர் வாழ்க்கை என்று போய்விட இன்னும் சிலர் காதலில் இருக்க நான் மட்டும் தனிமையில் இருந்தேன். தனிமையில் இருப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா? அதுவும் நம்மைச்சுற்றி இருப்பவர்கள் ஜோடியாக இருக்கும் போது நாம் மட்டும் தனிமையில் இருப்பது பெருங்கொடுமை. வரிசையாக வரன்கள் தட்டிச்செல்ல எனக்குள் நானே புதைந்துகொண்டேன்.. திருமணத்தில் எனக்கு பெரிய ஈர்ப்போ நாட்டமோ இல்லை ஆனால் அப்போது நான் வாழ்வு சலித்து ஏதாவது புதிய ஒரு மாற்றத்திற்கு காத்திருத்தேன். ஒரே விதமான துயரை எத்தனை காலம்தான் கட்டி அழுவது. திருமணம் வேறு ஒரு புதிய துயரைத் தருமே என்றுதான்.
இரண்டு வார்த்தைகளுக்குப் பிறகு எப்போது கல்யாணம்? என்பார்கள் உறவுகள்.. இதுதான் நம் சமூக அமைப்பு.. இதற்குள் இருந்து தப்புவது கடினம் தப்பிக்க நான் தனிமையை தேர்ந்தெடுத்தேன் தனிமை என்னை தற்கொலைக்கு உந்தியது.. அப்போதுதான் நீ என் வாழ்வில் வந்தாய் என் தனிமைக்குத் துணையாய்.. என் தேவை வெறும் பேச்சுத்துணை மட்டுமல்ல. காமமும்தான்.. துணையிருப்பது என்று ஆகிவிட்டது அதில் நட்பென்ன! காதலென்ன! காமமென்ன!.
மனம் வெறுத்து இருந்த காலகட்டத்தில் துணையாய் இருந்த உன்னை எந்த காலத்திலும் மறக்கமாட்டேன். என்னை மீட்ட யட்சனடா நீ.. எந்தக் குற்றஉணர்ச்சியும் கொள்ளாதே.. லவ் யூ நண்பா
பிரியங்களுடன் - மது

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

இருட்டு அறையில் முரட்டு குத்து - ஐ சப்போர்ட் :-)

அராத்து இந்த படத்துக்கெல்லாம் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இந்த  படத்துக்கு எழும் எதிர்ப்பைப் பார்த்தவுடன் எழுத வேண்டிய கட்டாயம். முதலில் படம் :- மொக்கை படம். கொஞ்சம் கூட கவனமும் , மெனக்கெடலும் , ப்ரொஃபஷனலிஸமும் இல்லாத மட்டி படம். அடல்ட் காமடி : இதை எடுக்க மூளையும் ரசனையும் வேண்டும். கலா ரசிகனாக இருக்க வேண்டும். அடல்ட் காமடி என்ற பெயரில் இந்த படத்தில் இருப்பதெல்லாம் , கற்பனை வளம் இல்லாத அருவருப்பு காமடி.அதிலும் ஒரு ஓவியத்தை பார்த்து இருவர் நின்று கொண்டே சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் அருவருப்பின் உச்சம். அடல்ட் காமடியை விடுங்கள், படத்தில் காமடியே இல்லை. செக்ஸ் பற்றி , பொதுமக்கள் பேசிக்கொள்வதை , வெளிப்படையாக திரையில் வைத்ததால் ஆர்பரிக்கிறார்கள் , அவ்வளவே ! கவர்ச்சி : இதைப்போன்ற படங்களில் கவர்ச்சியாவது இருக்க வேண்டும். க்ளீவேஜ் , தொடையை காட்டினால் கவர்ச்சி என்பதெல்லாம் , பிரசாந்த் காலத்தோடு மலையேறி விட்டது. இந்த படத்தில் காயலான் கடை பார்ட்டி , டொக்கு ஒடிசல் வாங்கியதையெல்லாம் காட்டி கவர்ச்சி என்கிறார்கள், மண்ணாங்கட்டி ! அவனவனு...