முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னை மீட்ட யட்சன்




அன்பின் சரோ..
முதலில் மன்னித்துவிடு. உன் கேள்விக்கு சரியான பதில் இல்லாமல் சொல்லாமல் உன்னோடு பேச்சை நிறுத்திவிட்டமைக்கு.
ஞாபகமிருக்கிறதா உனக்கு நம் அறிமுகம்?. தோழி சுந்தரியின் திருமணத்திற்கு வந்திருந்த போது என்னைச்சுட்டி உன் தங்கையிடம் சொன்னாய் ''அவள் சேலை கட்டிருக்கற ஸ்டைலப்பாரேன்.. உடம்பு முழுக்கத் திமிர்'' எனக்கு நன்றாகத் தெரியும் சரோ நீ என்னைக் கவனித்தாய்.. உன் தங்கை எனக்கு சுந்தரி மூலம் கொஞ்சம் பழக்கம்.. அவள் ஒரு சுட்டிக்குழந்தை..அவளுக்கு முத்தங்கள் தரலாம். அவள்தானே உன்னை என்னிடம் இழுத்து வந்து அக்கா நீங்க திமிர் பிடிச்சவங்கன்னு அண்ணன் சொல்றான் என்று உன்னை என்னிடம் காட்டித்தந்தாள்.. ''ஐயோ அப்படியெல்லாம் நான் இல்லைங்க'' என்றதும் உனக்குள் நீயே ஒரு கணம் பின்வாங்கி வெளிவந்தாயே அது உன் கண்களில் தெரிந்தது. நான் திமிர்பிடித்தவளா இல்லையா என்பதெல்லாம் தெரியாது, ஆனால் அந்த நேரத்தில் உன்னிடம் என் திமிரை வெளிக்காட்ட விரும்பவில்லை என்பது மட்டும் நிஜம்.
திமிர்பிடித்த தோற்றம் என்பது ஒருவகையில் பெண்களுக்குப் பாராட்டு. என்னைப்பார்த்தால் அப்படியா தெரிகிறது? பார்த்த உடனே அப்படிதான் இருந்துச்சு இப்ப பேசுனதும் அப்படித் தெரியல என்றாய். அட என் அறிவு நண்பனே நான் மட்டுமல்ல எல்லா பெண்களுமே இப்படிதான். திமிர் என்பது காட்டக்கூடியவர்களிடம் மட்டும்தான் காட்டப்படும். முகாந்திரம் இல்லாத இடத்தில் திமிரைக்காட்டுவது எத்தனை முயற்சித்தாலும் வராது. ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, திமிர் பிடித்தவள் என்று நீ சொன்னதும் மகிழ்ந்த மனம், நான் அப்படி அல்ல என்று நீ சொன்னதும் இன்னும் மகிழ்கிறது. நாம் நெருக்கமாவதற்கு சிரமமே படவில்லை.. மிக எளிதாக நிகழ்ந்தது அது. சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்து பின் மண்டபம் விட்டு வெளியேறும் வரை சின்னசின்னப் புன்னகையில் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். கடைசியாக விடைபெறுவதற்குச் சொல்ல வந்தாய்.. ''சரிங்க பார்க்கலாம்'' என்றதும் ''எப்போ?'' என்ற உன் கேள்வியில் தான் தடுமாறிப்போனேன்.. யாரும் என்னிடம் இப்படிக்கேட்டதில்லை உன் கேள்விக்கான சரியான பதிலும் என்னிடம் இல்லை. ''மொபைல் யூஸ் பண்ற பழக்கம் இருக்கா?'' என்றாய்.. அலைபேசி எண்ணை உன்னிடம் சொல்லிவிட்ட பின் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கும் என்னை என்ன செய்வது சொல்.!
நான்கு நாட்களில் 14 ஆயிரம் மெசேஜ் சென்ட் ,14800 மெசேஜ் ரிசீவ்ட் என்று கணக்குக்காட்டியது வாட்சப் ஹிஸ்டரி. இன்றோடு உலகம் அழிந்துவிடும் அதற்குள் வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்பு இருவருக்குமே இருந்தது.. என் மீது சந்தேகப்பட்டான் என்னை முன்முடிவு செய்தான் என்பதற்காக தோற்ற காதல் பற்றி சொன்னேன் அல்லவா உண்மையில் அப்படி ஒரு காதல் என் வாழ்வில் இல்லவே இல்லை.. நீ என்னை எப்படி ட்ரீட் செய்யவேண்டும் என்ற பாடம் அது.. இப்படி நிறைய சொல்லி இருக்கிறேன்.. எனக்கு பிடிக்காதவைகளை யாரோ செய்தது போலவும் அதற்கு நான் வருந்தியது போலவும் உன்னிடம் சொன்னேன்.. நீ அவற்றை மறந்தும் செய்துவிடக்கூடாது என்பதற்காக.. அப்போதைய மனநிலையில் எந்தக் காரணத்திற்காகவும் நானுன்னை இழக்க விரும்பவில்லை.
பணியிடத்தில் ஒருவனின் தவறான அணுகுதல் பற்றிச் சொன்னதும்.. உலகின் அத்தனை கெட்ட வார்த்தைகளும் சொல்லி அவனை திட்டினாய்.. தமிழில் இவ்வளவு கவுச்சி வார்த்தைகள் இருக்கிறதென்றே அன்றுதான் தெரியும். பெண்பார்க்க வந்தவன் என்னை பிடிக்கவில்லை என்ற போது அவனைத்திட்ட வேண்டும் என்று ஆசை, அவனுடைய செல்போன் நம்பர் உன்ட்ட கொடுத்து நீ அவன நாறக்கிழி கிழிச்சு வாய்ஸ் ரெகார்ட் செஞ்சு அனுப்பினாயே..! எப்பா டேய்.. அவன் வம்சத்தையே கேவலப்படுத்தி வச்சிருந்தடா. என் மேல் என்னைவிட அதிக உரிமை எடுத்துக்கொண்டாய்.. ஒருவேளை இது காதலா என்றால் இல்லை.. நீ என்னை காதலிப்பதாக சொன்னதே கிடையாது.. என்னைக் கல்யாணம் செய்பவன் என்னை சந்தோசமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் அவனைக் கொன்றுவிடுவேன் என்பாய். அவ்வளவு பிடிக்குமாடா என்னை ?!!!
உடல் குறித்த புகழ்ச்சிகளை விரும்பியதில்லை யாரும் சொன்னதுமில்லை.. முதன்முதலில் கேட்டது உன் வாயிலிருந்துதான் ''மூவ் விளம்பரத்தில் நடிக்க ஏற்ற இடுப்பு'' சனியனே ச்சீ நீ ஏன்டா அங்கல்லாம் பார்த்த.. அத்தோடு நீ நிறுத்தி இருக்கலாம் clovia bra வரைக்கும் பேச்சை இழுத்தாய். நெஞ்சுக்கூட்டிற்குள் வெப்பம் பரவி தேகம் மொத்தமும் அனலில் தகித்து கால்விரல் இடைவெளிகள் ஊறின அன்று. அதற்குப் பின்னான நாட்களில் நாம் அதிகமாகக் காமத்தைப் பற்றிதான் பேசினோம். ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் கையாளவேண்டும் என்று அந்த இரவில் படிப்படியாக அலைபேசியில் சொல்லிக்கொண்டிருந்தாய். ''டேய் நிறுத்து! இது செக்ஸ்சாட் தான?'' ச்சே இல்லடி செக்ஸ்சாட் வேற. அது எப்படி இருக்கும்ன்னா?! முதல்ல நீ கட்டில்ல படுத்துக்க ''ஹ்ம்ம்ம்'' இப்ப நான் உன் பக்கத்தில இருக்கறதா நினைச்சுக்க.. ''ஹ்ம்ம்ம்'' ஹஹாஹஹா டேய் பொறுக்கி ராஸ்கல் என்ன அழகா பிக்கப் செஞ்சடா என்னைய!!! உனக்கொன்னு தெரியுமா? நான் நீ சொல்லித்தரதுக்கு முன்னமே ஃபிங்கரிங்லாம் பண்ணுவேன்.. சரி இருந்தாலும் நீ ஆர்வமா சொல்லித்தரியே!! அதான் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரியே கேட்டுக்கிட்டேன்.. நாம் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகள் ரொம்பவே குறைவு.. காரணங்களும் குறைவு.. ஒரு வேளை சந்திக்கும் சந்தர்ப்பம் வெகுவாக வாய்த்திருந்தால் இந்த இரண்டு வருடங்களில் நாம் நிஜமாகவும் பலமுறை புணர்ந்து இருப்போம் என்றே நினைக்கிறேன். அதற்கான வாய்ப்புகளை நாம் வாழும் சூழல் கட்டுப்படுத்தி வைத்துவிட்டது.
எனக்கு நிச்சயதார்த்தம் முடியும் வரைக்கும் நாம் இருவரும் வாழ்ந்தோம் என்றே சொல்லலாம்.. அதற்குப்பின் நாம் பேசுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது குறைத்துக்கொண்டாய். திடீரென்று ஒரு நாள் போன் செய்து.. ''நான் உன்னை ஏதாவது கஷ்டப்படுத்திட்டேனா? நாம ரெண்டு பேரும் பேசிய பேச்சுக்கள் இப்ப எனக்கு guilt feel தருது. என்னோட வசதிக்காக நான் mastrubate செய்ய உன்னை யூஸ் செஞ்சுக்கிட்ட மாதிரி தோணுதுடி. என்னைய தப்பானவனா நினைச்சிடாத அயம் சாரி அயம் சாரி'' என்று அரற்றினாய்.. உண்மையில் எனக்கும் அன்று குற்ற உணர்ச்சியே மேலோங்கி இருந்தது.. உனக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் இனி நாம் பேசிக்க வேண்டாம் என்று அத்தோடு நம் தொடர்பை முறித்துக்கொண்டோம்..
கல்யாணம் குழந்தை என்று நாட்கள் ஓடிவிட்டது.. அவ்வவப்போது நீ நினைவிற்கு வருவாய். கணவனிடம் எப்போதெல்லாம் சண்டை வருகிறதோ அப்போதெல்லாம்''உன்னை சந்தோசமா வச்சிக்கலன்னா உன் புருசன கொன்னுடுவேன்'' என்று நீ சொல்லியது நினைவிற்கு வரும் சிரித்துக்கொள்வேன். நீ கேட்ட கேள்விக்கு இப்போதுதான் எனக்கு பதில் சொல்ல மனமும் பக்குவமும் வாய்த்திருக்கிறது. வாழ்வில் சூனியமும் வெறுப்பும் கலந்திருந்த கட்டத்தில்தான் நாம் சந்தித்தோம்.. கூடப்படித்த தோழிகள் அனைவருமே திருமணம் ஆகி அவரவர் வாழ்க்கை என்று போய்விட இன்னும் சிலர் காதலில் இருக்க நான் மட்டும் தனிமையில் இருந்தேன். தனிமையில் இருப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா? அதுவும் நம்மைச்சுற்றி இருப்பவர்கள் ஜோடியாக இருக்கும் போது நாம் மட்டும் தனிமையில் இருப்பது பெருங்கொடுமை. வரிசையாக வரன்கள் தட்டிச்செல்ல எனக்குள் நானே புதைந்துகொண்டேன்.. திருமணத்தில் எனக்கு பெரிய ஈர்ப்போ நாட்டமோ இல்லை ஆனால் அப்போது நான் வாழ்வு சலித்து ஏதாவது புதிய ஒரு மாற்றத்திற்கு காத்திருத்தேன். ஒரே விதமான துயரை எத்தனை காலம்தான் கட்டி அழுவது. திருமணம் வேறு ஒரு புதிய துயரைத் தருமே என்றுதான்.
இரண்டு வார்த்தைகளுக்குப் பிறகு எப்போது கல்யாணம்? என்பார்கள் உறவுகள்.. இதுதான் நம் சமூக அமைப்பு.. இதற்குள் இருந்து தப்புவது கடினம் தப்பிக்க நான் தனிமையை தேர்ந்தெடுத்தேன் தனிமை என்னை தற்கொலைக்கு உந்தியது.. அப்போதுதான் நீ என் வாழ்வில் வந்தாய் என் தனிமைக்குத் துணையாய்.. என் தேவை வெறும் பேச்சுத்துணை மட்டுமல்ல. காமமும்தான்.. துணையிருப்பது என்று ஆகிவிட்டது அதில் நட்பென்ன! காதலென்ன! காமமென்ன!.
மனம் வெறுத்து இருந்த காலகட்டத்தில் துணையாய் இருந்த உன்னை எந்த காலத்திலும் மறக்கமாட்டேன். என்னை மீட்ட யட்சனடா நீ.. எந்தக் குற்றஉணர்ச்சியும் கொள்ளாதே.. லவ் யூ நண்பா
பிரியங்களுடன் - மது

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

சிம்பு குடும்பத்தாருக்கு கொற்றவை கடிதம்!

உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்                         கொற்றவை -பெண்ணிய செயல்பாட்டாளர் ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப்படுற வழியப்பாருலே “பு.ண்.டை” நாயம் பேசிட்டு திரியுறவ” என்று சொல்வார்கள். ஓர் உயிரை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் உறுப்பிற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இவ்வளவுதான் மரியாதை என்றோ அல்லது பெண் பித்து பிடித்து அலையாமல் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார் என்றோ சொல்வதாகவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் “புண்டை” நியாயம் பேச வைத்த பெருமை உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் போய்ச் சேரும். இதை எண்ணி உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டும், உயிரையும் உடைமையையும் இழந்தும் துன்புருகையில் இவர்கள் “பு.ண்.டை” ஆராய்ச...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...