முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெஞ்சில் பதிந்த பத்திரிகையாளர்


சரவணன் சந்திரன் வாழ்த்து
கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை ஒட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆண்டுக் கணக்கீடுகளின் பார்த்தால் இப்போது கலைஞரின் வைரவிழா நடத்துவது முறையா என்றெல்லாம் ஆங்காங்கே கேள்விகள் எழுகின்றன.
இத்தனை ஆண்டுகள் புதைந்து கிடக்க வேண்டுமென என வைரத்திற்கும் தங்கத்திற்கும் யாராவது அதிகாரப்பூர்வமான துல்லியமான கணிப்பு ஏதாவது வைத்திருக்கிறார்களா என்ன? தேவையிருந்தால் கொண்டாடிவிட்டுப் போகவேண்டியதுதானே? திமுகவைப் பொறுத்தவரை அப்படிக் கொண்டாட வேண்டியதற்கான தேவை இருப்பதாகவே தெரிகிறது. அதன் செயல் தலைவர் தமிழ்நாட்டில் யாரை எதிர்த்து அரசியல் செய்வது என்று யோசித்துப் பாருங்கள்? மாதவனையும் தீபாவையுமெல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா? பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் இருவர்களும் அவரது அரசியல் அனுபவத்தைப் பொறுத்தவரை, மேற்குறிப்பிட்ட இருவருக்கு, ஒப்பானவர்கள்தான் என்கிற போது ஸ்டாலினும் என்னதான் செய்வார்?
ஒரு பலமான எதிர்க்கட்சி, பலமான ஆளுங்கட்சியை எதிர்த்துத்தானே அரசியல் செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழகத்தை இன்றைய தேதியில் மறைமுகமாக பிஜேபிதான் ஆட்சி செய்கிறது. எனவே அதை எதிர்த்து அரசியல் செய்ய இந்த வைரவிழா ஒரு வாய்ப்பு. இதைத் தவறென்று சொல்லவே முடியாது. திமுகவின் செயல் தலைவரை பொறுத்த வரை பல நேரங்களில் அவர் சென்சிபிலாக அரசியல் காய் நகர்த்தல்களைச் செய்கிறார். மறுக்க முடியாது. ஆனால் சில நேரங்களில் அவர் செய்யும் அரசியல் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது. கலைஞர் வைரவிழாவிற்கான அழைப்பிதழை கலைஞரிடம் கொடுத்த காட்சியை பொதுமக்கள் ரசிக்கவில்லை. நானும்கூட பொதுஜனங்களில் ஒருத்தனே? திராவிடக் கட்சி ஆட்சிகளின் விளைவாக எல்லோரும் வயதிற்கு வந்துவிட்டோம். கூகிளைத் தேடி விஷயங்களை அறிந்து கொள்ளவும் செய்யத் துவங்கி விட்டோம்.
கலைஞருக்கு வந்திருக்கிற முதுமை சம்பந்தப்பட்ட நோய், அதற்கான மருத்துவங்கள், பின் விளைவுகள், அதன் பாதுகாப்பு நடைமுறைகள் எல்லாவற்றையும் கூகிளில் தட்டினாலே தெரிந்துவிடும். இப்படி இருக்கையில் அவரை அமர வைத்து போஸ் கொடுக்க வைப்பதெல்லாம் சரியா என்று தெரியவில்லை. அவர் விழாவிற்கு வரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். வரவே கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தொற்றுநோய் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் செய்பவர்களுக்கு நான் சொன்ன அர்த்தம் விளங்கும். ஆனால் இன்றையே தேதியில் கலைஞர் என்ன நிலையில் இருந்தாலும் அவர் தேவையாக இருக்கிறார். அதைத்தான் இந்தப் போக்கு உணர்த்துகிறது என்பதால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நாடு முழுவதும் மாட்டுக் கறிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் கலைஞர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? அவருக்கு மாட்டுக் கறி சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருமுறை பேட்டியின் போது தனக்குப் பிடித்த விரால் மீனைக்கூட இப்போதெல்லாம் அஜீரண பிரச்சினை காரணமாகச் சாப்பிடுவதில்லை என்று எங்களிடம் சொல்லியிருந்தார். முருங்கைக் காயைக்கூட வழித்துவைத்துத்தான் அவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது. இது நடந்து பத்து வருடங்கள் இருக்கலாம். ஆனால் இப்போது என்ன அஜீரணம் என்றாலும் சும்மா எதிர்ப்பிற்காகவாவது ஒரு துண்டு மாட்டிறைச்சியை எடுத்து வாயில் போட்டிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. தவறாகச் சொல்லவில்லை என்பதை அவருடன் இருப்பவர்கள் அறிவார்கள்.
இப்படி அடிக்கடி கலைஞர் இருந்திருந்தால், கலைஞர் இருந்திருந்தால் என்று சொல்வது சங்கடமாகத்தான் இருக்கிறது. ஒரு கட்சிக்கு செயல் தலைவர் என்று ஒருத்தரை நியமித்த பிறகு இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாதுதான். ஆனால் என்ன செய்ய? செயல் தலைவர் அவர்களே கலைஞர் இருந்திருந்தால் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைய தேதியில் அவர் இன்னமும் தேவை ப்படுபவராக இருக்கிறார் என்பதன் அடையாளம்தான் அவரைச் சுற்றிய இந்தப் பேச்சுக்கள் எல்லாமும். அந்த வகையில் இந்த வைரவிழா கண்டிப்பாக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்வு. காலத் தேவை கருதியது.
அவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவர் இன்னமும் தேவையாக இருக்கிறார் என்பதை உணர்ந்தால் உண்மையில் சந்தோஷப்படத்தான் செய்வார். அவர் பல பாத்திரங்களை வகித்திருக்கிறார். எனக்குப் பிடித்தது அவர் வகித்த பத்திரிகையாளர் பாத்திரம்தான். குச்சி ஐஸ் சாப்பிடுகிற வயதில் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று அவரால் மட்டுமே எழுத முடியும். அதிகாலையில் அவர் எழுந்து கொள்வதன் அவசியம் பற்றி எனக்கு வகுப்பு எடுத்தார் ஒருமுறை. இன்றளவும் நான் பின்பற்ற நினைக்கும் அறிவுரை அது. ஒரு பத்திரிகையாளனாக அவருடன் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. அதில் ஒரு அனுபவம் எப்போதும் என் நினைவில் நிற்கும். அடிக்கடி இதைச் சொல்லவும் செய்கிறேன்.
“வீல் சேரில் போகிற கஷ்டம் உங்களுக்கு எல்லோரையும் விட நல்லா தெரியுமே?” இந்தக் கேள்வியை அந்தப் பெண் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞரை நோக்கி கேட்டதும் அந்த அறையில் இருந்த அதிகாரிகள் உட்பட அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள். ஒருநிமிடம் அந்த அறையில் நிசப்தம் நிலவியது. அதைக் கண்டு கொள்ளாத கலைஞர் அந்தப் பெண்ணைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் அம்மா? என்று கேட்டதும் அந்தப் பெண் தனக்கு வசதியான வீல் சேர் ஒன்று வேண்டும் என்றதும் மெல்லியதாக சிரித்துக் கொண்டார்.
அந்தப் பெண்ணிற்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் செய்து தருமாறு உத்தரவிட்டார். மஸ்குலர் டிஸ்ரபி என்னும் விநோத நோயால் பாதிக்கப்பட்ட அனுராதா என்கிற பெண்மணி இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அன்று கலைஞரை சந்தித்து நான் என் நிலைமையை விளக்கி என்னைப் போன்றவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டதும் கலைஞருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளைச் செய்தோம்.
விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சிக்காக இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போதுதான் கலைஞர் வீல் சேரில் உலவ ஆரம்பித்த காலம் என்பதால், அரசல்புரசலாக அப்போது விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அந்தக் கட்டத்திலும் தன்னை வீல் சேரில் பயணிப்பதாக அந்தப் பெண் சுட்டிக் காட்டியபோதும் கோபப்படாமல் அந்தப் பெண்ணை கலைஞர் எதிர்கொண்ட விதமும் அவருடைய மனிதாபிமானமும் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏதோ இந்த அனுபவத்தை இப்போது சொல்லத் தோன்றுகிறது.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ஒரு சாமானியரின் பிரச்சினைக்குக்கூட அவரது கதவைத் தட்ட முடிந்த தூரத்திலேயே அவர் தன்னை வைத்துக் கொண்டிருந்தார். ஒரு மிகப் பெரிய கட்டுரைக்கு இரண்டு வரிகள் மட்டுமே தேவைப்படும் கருத்திற்காகக்கூட அவரைத் தொலைபேசியில் அழைக்க முடியும். அந்தத் தேதியில் அவர் பத்திரிகையாளர்கள் மீது நல்ல மனநிலையில் இருந்தால், ரெண்டு வரிக்கு கூப்டறது நியாயமாப்பா என்றெல்லாம் கேட்காமல், தயங்காமல் லைனுக்கு வந்துவிடுவார் என்பதுதான் உண்மை. அவரிடம் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்டுவிட முடியும்.
”என் வீட்டு நாய்கூட அந்த வாசல மிதிக்காது” என அவர் சீறுவார். அது ஆப் தி ரெக்கார்டு என சண்முகநாதன் பின்னாடியே ஓடிவருவார் என்பது முன்னாடியே கலைஞருக்குத் தெரியும். ஆனாலும் எதிரே இருப்பவர்கள் ஒரு கணம் பயந்து போவோம். அடுத்த நிமிடமே ’அடுத்தத கேளு’ என அசால்ட்டாக கையை ஆட்டுவார் பாருங்கள். அதற்கே நானெல்லாம் ரசிகன். அவர் பெயர் இல்லாத செய்தித்தாளை இத்தனை வருடத்தில் ஒருநாள் காட்டுங்கள் பார்ப்போம். அவர் உரக்கப் பேசுபவராக இருந்தார். பேசப்படுபவராக இருந்தார். இதுதான் பத்திரிகையாளன் என்பவனின் பொதுக் குணம். “தூங்கறப்பகூட கால ஆட்டிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி முடிஞ்சிருச்சுன்னு தூக்கிப் போட்டுருவாங்க” என விளையாட்டாக இந்தக் குணத்தைப் பற்றிச் சொல்வார்கள். இந்த அடிப்படையிலும்கூட, இந்தச் சூழலின் போதுகூட அவர் பேசப்படுபவராகவே இருக்கிறார். எங்களைவிட மூத்த பத்திரிகையாளர்கள் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள். ஒரு பத்து முறை சந்தித்த எனக்கே பல்வேறு அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன என்கிற போது, அவருடன் இருந்தவர்கள் இன்னமும் நிறைய அனுபவங்களைச் சொல்ல முடியும்.
எனக்குத் தெரிந்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் அவர் பத்திரிகையாளர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்கும் நிலையில் இருக்கும் போதெல்லாம் அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சுமூகமான உறவு இருக்கும். அவரை நோக்கி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் நிலை வந்த போது அவர் தன்னுடைய கடைசி காலச் செயல்பாடுகளின் போது வழக்கத்தை மீறி நிதானத்தைத் தவற விட்டிருக்கிறார். தீக்குளிக்கலாம் வர்றீய்யா போன்ற வார்த்தைகளை அவரேகூட கற்பனை செய்திருக்க மாட்டார்.
பத்திரிகையாளர்கள் கொளுத்தப்பட்ட வழக்கில் அவர் கையறு நிலையில் நின்றதை அவர் யோசித்திருப்பாரா என்பது அவருடைய மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஆனால் இன்றைக்கு பத்திரிகையாளர்கள் பெற்றிருக்கிற அரசு சார் சிறு சலுகைகளுக்குக்கூட அவர்தான் காரணம் என்பதை மறுக்கவே முடியாது. அவர் தன்னை மட்டும் உற்சாகமாக இந்த விஷயத்தில் வைத்துக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் அப்படி வைத்திருந்தார். இத்தனை வருடமும் அவரைச் சுற்றியே பத்திரிகைகளும் சுற்றின. பத்திரிகையாளர்களும் சுற்றினார்கள். அந்த வகையில் அவர் வகித்த பாத்திரங்களுள் பத்திரிகையாளர் என்கிற பாத்திரமே நெஞ்சில் இன்னமும் பதிகிறது" எனக் குறிப்பிட்டுள்ள்ளார்.






கட்டுரையாளர்
சரவணன் சந்திரன் இந்தியா டுடே தமிழ் பதிப்பில் மூத்த பத்திரிக்கையாளராக இருந்தவர்


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...