முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெஞ்சில் பதிந்த பத்திரிகையாளர்


சரவணன் சந்திரன் வாழ்த்து
கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை ஒட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆண்டுக் கணக்கீடுகளின் பார்த்தால் இப்போது கலைஞரின் வைரவிழா நடத்துவது முறையா என்றெல்லாம் ஆங்காங்கே கேள்விகள் எழுகின்றன.
இத்தனை ஆண்டுகள் புதைந்து கிடக்க வேண்டுமென என வைரத்திற்கும் தங்கத்திற்கும் யாராவது அதிகாரப்பூர்வமான துல்லியமான கணிப்பு ஏதாவது வைத்திருக்கிறார்களா என்ன? தேவையிருந்தால் கொண்டாடிவிட்டுப் போகவேண்டியதுதானே? திமுகவைப் பொறுத்தவரை அப்படிக் கொண்டாட வேண்டியதற்கான தேவை இருப்பதாகவே தெரிகிறது. அதன் செயல் தலைவர் தமிழ்நாட்டில் யாரை எதிர்த்து அரசியல் செய்வது என்று யோசித்துப் பாருங்கள்? மாதவனையும் தீபாவையுமெல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா? பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் இருவர்களும் அவரது அரசியல் அனுபவத்தைப் பொறுத்தவரை, மேற்குறிப்பிட்ட இருவருக்கு, ஒப்பானவர்கள்தான் என்கிற போது ஸ்டாலினும் என்னதான் செய்வார்?
ஒரு பலமான எதிர்க்கட்சி, பலமான ஆளுங்கட்சியை எதிர்த்துத்தானே அரசியல் செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழகத்தை இன்றைய தேதியில் மறைமுகமாக பிஜேபிதான் ஆட்சி செய்கிறது. எனவே அதை எதிர்த்து அரசியல் செய்ய இந்த வைரவிழா ஒரு வாய்ப்பு. இதைத் தவறென்று சொல்லவே முடியாது. திமுகவின் செயல் தலைவரை பொறுத்த வரை பல நேரங்களில் அவர் சென்சிபிலாக அரசியல் காய் நகர்த்தல்களைச் செய்கிறார். மறுக்க முடியாது. ஆனால் சில நேரங்களில் அவர் செய்யும் அரசியல் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது. கலைஞர் வைரவிழாவிற்கான அழைப்பிதழை கலைஞரிடம் கொடுத்த காட்சியை பொதுமக்கள் ரசிக்கவில்லை. நானும்கூட பொதுஜனங்களில் ஒருத்தனே? திராவிடக் கட்சி ஆட்சிகளின் விளைவாக எல்லோரும் வயதிற்கு வந்துவிட்டோம். கூகிளைத் தேடி விஷயங்களை அறிந்து கொள்ளவும் செய்யத் துவங்கி விட்டோம்.
கலைஞருக்கு வந்திருக்கிற முதுமை சம்பந்தப்பட்ட நோய், அதற்கான மருத்துவங்கள், பின் விளைவுகள், அதன் பாதுகாப்பு நடைமுறைகள் எல்லாவற்றையும் கூகிளில் தட்டினாலே தெரிந்துவிடும். இப்படி இருக்கையில் அவரை அமர வைத்து போஸ் கொடுக்க வைப்பதெல்லாம் சரியா என்று தெரியவில்லை. அவர் விழாவிற்கு வரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். வரவே கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தொற்றுநோய் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் செய்பவர்களுக்கு நான் சொன்ன அர்த்தம் விளங்கும். ஆனால் இன்றையே தேதியில் கலைஞர் என்ன நிலையில் இருந்தாலும் அவர் தேவையாக இருக்கிறார். அதைத்தான் இந்தப் போக்கு உணர்த்துகிறது என்பதால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நாடு முழுவதும் மாட்டுக் கறிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் கலைஞர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? அவருக்கு மாட்டுக் கறி சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருமுறை பேட்டியின் போது தனக்குப் பிடித்த விரால் மீனைக்கூட இப்போதெல்லாம் அஜீரண பிரச்சினை காரணமாகச் சாப்பிடுவதில்லை என்று எங்களிடம் சொல்லியிருந்தார். முருங்கைக் காயைக்கூட வழித்துவைத்துத்தான் அவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது. இது நடந்து பத்து வருடங்கள் இருக்கலாம். ஆனால் இப்போது என்ன அஜீரணம் என்றாலும் சும்மா எதிர்ப்பிற்காகவாவது ஒரு துண்டு மாட்டிறைச்சியை எடுத்து வாயில் போட்டிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. தவறாகச் சொல்லவில்லை என்பதை அவருடன் இருப்பவர்கள் அறிவார்கள்.
இப்படி அடிக்கடி கலைஞர் இருந்திருந்தால், கலைஞர் இருந்திருந்தால் என்று சொல்வது சங்கடமாகத்தான் இருக்கிறது. ஒரு கட்சிக்கு செயல் தலைவர் என்று ஒருத்தரை நியமித்த பிறகு இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாதுதான். ஆனால் என்ன செய்ய? செயல் தலைவர் அவர்களே கலைஞர் இருந்திருந்தால் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைய தேதியில் அவர் இன்னமும் தேவை ப்படுபவராக இருக்கிறார் என்பதன் அடையாளம்தான் அவரைச் சுற்றிய இந்தப் பேச்சுக்கள் எல்லாமும். அந்த வகையில் இந்த வைரவிழா கண்டிப்பாக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்வு. காலத் தேவை கருதியது.
அவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவர் இன்னமும் தேவையாக இருக்கிறார் என்பதை உணர்ந்தால் உண்மையில் சந்தோஷப்படத்தான் செய்வார். அவர் பல பாத்திரங்களை வகித்திருக்கிறார். எனக்குப் பிடித்தது அவர் வகித்த பத்திரிகையாளர் பாத்திரம்தான். குச்சி ஐஸ் சாப்பிடுகிற வயதில் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று அவரால் மட்டுமே எழுத முடியும். அதிகாலையில் அவர் எழுந்து கொள்வதன் அவசியம் பற்றி எனக்கு வகுப்பு எடுத்தார் ஒருமுறை. இன்றளவும் நான் பின்பற்ற நினைக்கும் அறிவுரை அது. ஒரு பத்திரிகையாளனாக அவருடன் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. அதில் ஒரு அனுபவம் எப்போதும் என் நினைவில் நிற்கும். அடிக்கடி இதைச் சொல்லவும் செய்கிறேன்.
“வீல் சேரில் போகிற கஷ்டம் உங்களுக்கு எல்லோரையும் விட நல்லா தெரியுமே?” இந்தக் கேள்வியை அந்தப் பெண் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞரை நோக்கி கேட்டதும் அந்த அறையில் இருந்த அதிகாரிகள் உட்பட அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள். ஒருநிமிடம் அந்த அறையில் நிசப்தம் நிலவியது. அதைக் கண்டு கொள்ளாத கலைஞர் அந்தப் பெண்ணைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் அம்மா? என்று கேட்டதும் அந்தப் பெண் தனக்கு வசதியான வீல் சேர் ஒன்று வேண்டும் என்றதும் மெல்லியதாக சிரித்துக் கொண்டார்.
அந்தப் பெண்ணிற்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் செய்து தருமாறு உத்தரவிட்டார். மஸ்குலர் டிஸ்ரபி என்னும் விநோத நோயால் பாதிக்கப்பட்ட அனுராதா என்கிற பெண்மணி இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அன்று கலைஞரை சந்தித்து நான் என் நிலைமையை விளக்கி என்னைப் போன்றவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டதும் கலைஞருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளைச் செய்தோம்.
விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சிக்காக இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போதுதான் கலைஞர் வீல் சேரில் உலவ ஆரம்பித்த காலம் என்பதால், அரசல்புரசலாக அப்போது விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அந்தக் கட்டத்திலும் தன்னை வீல் சேரில் பயணிப்பதாக அந்தப் பெண் சுட்டிக் காட்டியபோதும் கோபப்படாமல் அந்தப் பெண்ணை கலைஞர் எதிர்கொண்ட விதமும் அவருடைய மனிதாபிமானமும் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏதோ இந்த அனுபவத்தை இப்போது சொல்லத் தோன்றுகிறது.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ஒரு சாமானியரின் பிரச்சினைக்குக்கூட அவரது கதவைத் தட்ட முடிந்த தூரத்திலேயே அவர் தன்னை வைத்துக் கொண்டிருந்தார். ஒரு மிகப் பெரிய கட்டுரைக்கு இரண்டு வரிகள் மட்டுமே தேவைப்படும் கருத்திற்காகக்கூட அவரைத் தொலைபேசியில் அழைக்க முடியும். அந்தத் தேதியில் அவர் பத்திரிகையாளர்கள் மீது நல்ல மனநிலையில் இருந்தால், ரெண்டு வரிக்கு கூப்டறது நியாயமாப்பா என்றெல்லாம் கேட்காமல், தயங்காமல் லைனுக்கு வந்துவிடுவார் என்பதுதான் உண்மை. அவரிடம் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்டுவிட முடியும்.
”என் வீட்டு நாய்கூட அந்த வாசல மிதிக்காது” என அவர் சீறுவார். அது ஆப் தி ரெக்கார்டு என சண்முகநாதன் பின்னாடியே ஓடிவருவார் என்பது முன்னாடியே கலைஞருக்குத் தெரியும். ஆனாலும் எதிரே இருப்பவர்கள் ஒரு கணம் பயந்து போவோம். அடுத்த நிமிடமே ’அடுத்தத கேளு’ என அசால்ட்டாக கையை ஆட்டுவார் பாருங்கள். அதற்கே நானெல்லாம் ரசிகன். அவர் பெயர் இல்லாத செய்தித்தாளை இத்தனை வருடத்தில் ஒருநாள் காட்டுங்கள் பார்ப்போம். அவர் உரக்கப் பேசுபவராக இருந்தார். பேசப்படுபவராக இருந்தார். இதுதான் பத்திரிகையாளன் என்பவனின் பொதுக் குணம். “தூங்கறப்பகூட கால ஆட்டிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி முடிஞ்சிருச்சுன்னு தூக்கிப் போட்டுருவாங்க” என விளையாட்டாக இந்தக் குணத்தைப் பற்றிச் சொல்வார்கள். இந்த அடிப்படையிலும்கூட, இந்தச் சூழலின் போதுகூட அவர் பேசப்படுபவராகவே இருக்கிறார். எங்களைவிட மூத்த பத்திரிகையாளர்கள் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள். ஒரு பத்து முறை சந்தித்த எனக்கே பல்வேறு அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன என்கிற போது, அவருடன் இருந்தவர்கள் இன்னமும் நிறைய அனுபவங்களைச் சொல்ல முடியும்.
எனக்குத் தெரிந்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் அவர் பத்திரிகையாளர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்கும் நிலையில் இருக்கும் போதெல்லாம் அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சுமூகமான உறவு இருக்கும். அவரை நோக்கி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் நிலை வந்த போது அவர் தன்னுடைய கடைசி காலச் செயல்பாடுகளின் போது வழக்கத்தை மீறி நிதானத்தைத் தவற விட்டிருக்கிறார். தீக்குளிக்கலாம் வர்றீய்யா போன்ற வார்த்தைகளை அவரேகூட கற்பனை செய்திருக்க மாட்டார்.
பத்திரிகையாளர்கள் கொளுத்தப்பட்ட வழக்கில் அவர் கையறு நிலையில் நின்றதை அவர் யோசித்திருப்பாரா என்பது அவருடைய மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஆனால் இன்றைக்கு பத்திரிகையாளர்கள் பெற்றிருக்கிற அரசு சார் சிறு சலுகைகளுக்குக்கூட அவர்தான் காரணம் என்பதை மறுக்கவே முடியாது. அவர் தன்னை மட்டும் உற்சாகமாக இந்த விஷயத்தில் வைத்துக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் அப்படி வைத்திருந்தார். இத்தனை வருடமும் அவரைச் சுற்றியே பத்திரிகைகளும் சுற்றின. பத்திரிகையாளர்களும் சுற்றினார்கள். அந்த வகையில் அவர் வகித்த பாத்திரங்களுள் பத்திரிகையாளர் என்கிற பாத்திரமே நெஞ்சில் இன்னமும் பதிகிறது" எனக் குறிப்பிட்டுள்ள்ளார்.






கட்டுரையாளர்
சரவணன் சந்திரன் இந்தியா டுடே தமிழ் பதிப்பில் மூத்த பத்திரிக்கையாளராக இருந்தவர்


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...