முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’கலைஞர் 94’ - பத்திரிகையாளர்கள் பார்வையில் மகத்தான ஆளுமை!

கலைஞர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டப்பேரவை பணிகளில் வைர விழா இவை இரண்டையும் முன்னிட்டு இன்று (ஜூன் 3) திமுக கட்சித்தொண்டர்கள் தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். தலைச்சிறந்த தலைவராக திகழும் கலைஞர் கருணாநிதியின் இச்சாதனையை, திமுக கட்சியினரையும் தாண்டி அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரை வாழ்த்தியும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் பற்றியும் சமூக ஊடகங்களில் படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். 

அவரின் வரலாற்றுச் சாதனைகளையும், வாழ்க்கையில் அவர் சந்தித்த பல சவால்களை பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். உலகத்தமிழர்கள் முதல் இந்திய அளவிலான கட்சித்தலைவர்கள் வரை அவருக்கு வாழ்த்து மடல்களையும், அன்புப்பரிசுகளையும் அனுப்பி வருகின்றனர். ஆனால் சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதை தவிர்த்துள்ள கலைஞருக்காக இன்று எடுக்கப்படும் வைரவிழாவில் அவர் கலந்து கொள்ளமுடியாமல் இருப்பது சற்றே வருத்தமான விஷயம். 
கலைஞர் கருணாநிதியன் பேச்சுக்கு அவர் மட்டுமே நிகர் என்கின்ற அளவில் கலைநயமும், கவிதைத்துவமும், ஆழ்ந்த அரசியலும், நகைச்சுவையும் ஒருசேர இருப்பது, அரசியலையும் தாண்டி எல்லாரையும் எளிதில் வசீகரித்துவிடும். அந்த வகையில் பத்திரிகையாளர்கள் சிலர் கலைஞருடனான தங்கள் அனுபவங்களை முகநூலில் பகிர்ந்துள்ளனர். அதன் தொகுப்பு:
மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட்லைன் செய்தியாளர் விஜயசங்கர் ராமசந்திரன்: 
எமர்ஜென்சி தீண்டாத தீவின் தலைவர்
ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை பிறப்பிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பத்திரிக்கை அலுவலகங்களில் அதிகாரிகள் வந்து அமர்ந்து நேரடியாக தணிக்கை செய்கிறார்கள். அடுத்த சில மாதங்களுக்கு தமிழகம் எமர்ஜென்சி தீண்டாத தீவாக இருந்தது. பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தஞ்சமளித்தது. அதற்கு முழு முதற் காரணம் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.
ஜனவரி 30, 1976 அன்று தமிழக அரசு கலைக்கப்படுகிறது. திமுக, கம்யூனிஸ்டு தோழர்கள் கைது செய்யப் படுகின்றனர். செய்தி கேள்விப்பட்டு அன்று இரவு என் தந்தையும் மார்க்சிஸ்டு தலைவருமான பி ராமச்சந்திரன் வீட்டிற்கு வருகிறார். அகில இந்திய வானொலியில் அவசரநிலை செய்தி கேட்டு உறுதி செய்துகொள்கிறார். அன்று இரவே இரண்டு செட் துணிகளை எடுத்துக் கொண்டு இருளில் கரைந்து போகிறார். தலைமறைவு வாழ்க்கை தொடங்குகிறது.
பட உதவி: விஜயசங்கர் முகநூல்
அந்த ஏழு மாத சுதந்திரத்தின் அருமையும், அடுத்து வந்த காலத்தின் கொடுமையும் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தும் எமர்ஜென்சியை எதிர்த்து நின்ற கலைஞருக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன்: 
உங்களுடைய அரசியல் பார்வையோடு நான் முரண்பட்டதுண்டு. அதை உங்களிடமே நேரிடையாக விமர்சித்ததுண்டு. என் விமர்சனங்கள் எழுத்தில் வந்த போது அவற்றை வாசித்து அதற்கு உங்கள் எழுத்தின் மூலமும், போனிலும் நீங்கள் எதிர்வினையாற்றியதும் உண்டு. நேரில் தெரிவித்த என் கருத்துக்களுக்கு, சரிக்கு சமமாய் தர்க்க ரீதியாக நீங்கள் வாதிட்டதுண்டு. என்றாலும் உங்கள் அரசியலை ஏற்குமாறு ஒருபோதும் நீங்கள் வற்புறுத்தியதில்லை.
சில நேரங்களில் என் யோசனைகளைக் கேட்டுப் பெற்றிருக்கிறீர்கள். சிலவற்றை நானே முன் வந்தும் சொல்லியிருக்கிறேன். ஏற்கப்பட்டவையும் உண்டு நிராகரிக்கப்பட்டவையும் உண்டு. ஆனால் அதைக் குறித்து நமக்குள் பிணக்குகள் ஏற்பட்டதில்லை.
உங்கள் தனிப்பட்ட சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். கணினியில் தமிழ் எழுத இயலும் எனச் சொன்னபோது வியப்பில் உங்கள் புருவங்கள் உயர்ந்தன. அதைக் கற்றுக் கொண்டு, 'அகர முதல எழுத்தெல்லாம்' என தட்டச்சு செய்து காட்டி ஒரு குழந்தையைப் போல சிரித்த உங்களது அந்த முகத்தை மறக்கமுடியாது. பகிரங்கப்படுத்த மாட்டேன் என்ற நம்பிக்கையில் சில தனிப்பட்ட வருத்தங்களையும் கூடப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை நலிந்து போக நான் காரணமாக இருக்க மாட்டேன்.
நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, செய்தித் துறை ஒரு இலக்கிய மலர் கொண்டு வந்தது. அதில் நான் சிறுகதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கல்கி,புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன், சுஜாதா அசோகமித்ரன் எனப் பலரைப் பேசிய கட்டுரையில் திமுக எழுத்தாளர்களைக் குறிப்பிட்டிருக்கவில்லை. 'தலைவருடையதை ஏன் விட்டுவிட்டீர்கள்' எனக் கோபமாக கட்சிக்காரர் ஒருவர் என்னிடம் கொந்தளித்த போது 'அவருடைய இலக்கியப் பார்வை வேறு' என்று என் சார்பில் அவருக்கு பதிலளித்தீர்கள். என் அழைப்பை ஏற்று, அக்னி அறக்கட்டளையின் தமிழுக்கும் அமுதென்று பேர் நிகழ்ச்சியில், சங்கத் தமிழ் பற்றி எந்தக் குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் நீண்டதொரு உரையாற்றினீர்கள். பல ஆசிரியர்களுக்கே அது பாடமாக அமைந்திருந்தது. எனக்கோ என்னுள் ஒரு ஜன்னல் திறந்தது.
பொருளாதாரம், ஜாதி, சமூக அந்தஸ்து, பெரிய கல்வித் தகுதி என எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், அரசியலில் ஒருவர் உச்சத்தைத் தொட முடியும் என்பதைக் கண்ணெதிரே நிரூபித்து, நம் ஜனநாயகத்தின் மீது என்னை நம்பிக்கை கொள்ளச் செய்தவர் நீங்கள். மண்ணைக் கீறிக் கொண்டு எழுந்த விதையாக உங்களைச் சொல்வதுண்டு, எனக்கோ நீங்கள் பாறையைப் பிளந்து கொண்டு எழுந்த விருட்சம்.
மாலன் முகநூலில் பகிரப்பட்ட படம்
எதிர்காலம் உங்களது அரசியலைப் பற்றி வரலாற்றில் எப்படிக் குறித்து வைக்குமோ தெரியவில்லை; ஆனால் தமிழர்களிடையே அவர்கள் மொழி குறித்த பெருமிதம் செழிக்க நீங்கள் தெளித்த விதைகளும் ஊற்றிய நீரும் தலைமுறைகள் தாண்டி வேராய்ப் படர்ந்து நிற்கும். பிறந்த நாள் வாழ்த்துகள்! சொல்லாண்டு வாழ்க!
எழுத்தாளர் ஆர்.கே.ருத்ரன்
தமிழை காதலிக்க ஒரு காரணியாக, பள்ளிப்பருவத்திலிருந்து என்னைக் கவர்ந்த அரசியல் நாயகனாக... பின் சிந்திக்கவும் சீர்தூக்கிப் பார்க்கவும் கற்றதும் என் கடும் விமர்சனத்துக்கும் இலக்கான மேதையாக.. நெஞ்சுரத்துக்கோர் எடுத்துக்காட்டாக..
விமர்சனம் கோபம் வெறுப்பு எவ்வளவோ இருந்தாலும், வியந்தோதி வணங்குகிறேன்.

கலைஞர் வாழ்க பல்லாண்டு! திருவள்ளுவர் சிலை, திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம், வள்ளுவர் கோட்டம் என தமிழகத்தில் திருவள்ளுவர் பெயர் அழுத்தமாக பதியக் காரணம் இவர் தான்! வள்ளுவன் புகழ் என்றும் ஒலிக்கக் காரணம்!
நல்ல தமிழ், நக்கல் தமிழ், வசனத்தமிழ் என்று தமிழோடு விளையாடியவர். இனி ஒருவன் யார்? உழவர் சந்தை, ஹிந்தி எதிர்ப்பு, முன்னொரு காலத்தில் ஈழ ஆதரவு, அண்ணா நூலகம், என நல்லவை பல நூறு !
இருந்தும் ஈழத் துரோகம், விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, குளிர் காய்ந்த குள்ளநரித்தனம் அமிர்தமோ, பசும் பாலோ ஆயினும் கலந்த ஒரு துளி விஷம் , மொத்தத்தையும் விசமாக்கும் . குடித்து விசம் மட்டும் கழுத்தில் நிற்பாட்ட தமிழர் யாவரும் ஈசன் இல்லையே!
வாழ்க! எங்களையும் வாழவைத்திருந்தால் வாழ்ந்திருக்கும் நின் பெயர் நற்பெயராக உம் வயதை போல் தீர்க்க ஆயுசாக!
பத்திரிகையாளர் மற்றும் வலைப்பதிவாளர் சைபர் சிம்மன்: 
ஒரு பத்திரிகையாளனாக எனக்கு எப்போதுமே கலைஞர் வியக்க கூடியவராகவும், ஆதர்சமாகவும் இருக்கிறார். அவரது உழைப்பும் ,வாசிப்பும் முன்மாதிரியானவை. மனிதர் எப்படி தான் எல்லாவற்றையும் படிக்கிறாரோ என பல முறை வியந்ததுண்டு.
ஒரு வலைப்பதிவளானாகவும் கலைஞரை முன்னோடியா பார்க்கிறேன். உடன்பிறப்பே என்னபாசத்தோடு துவங்கும், கலைஞரின் கடிதங்களை விட சிறந்த வலைப்பதிவு வேறு என்ன இருந்துவிட முடியும். இணையத்தின் ஆற்றல் அதன் தொடர்பு கொள்ளும் தன்மையில் ( இண்ட்ரியாக்டிவிட்டி). அந்த தன்மையை தன் எழுத்திலும், பேச்சிலும் கொண்டிருந்தவர் கலைஞர்.
கலைஞர்டா!
(பொறுப்புதுறப்பு: கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பதிவுகளில் உள்ள கருத்துக்கள் அவர்களின் சொந்த கருத்துக்கள் மட்டுமே.)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...