முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’’ஒரே கருஞ்சட்டியில் ஊறிய நார்த்தங்காய்கள்..!’’ -

இப்போது ரெய்டு என்று நடந்து கொண்டிருப்பதெல்லாம், ஏதோ பங்காளித் தகராறு என்று கருதி வேறு வேலையைப் பார்க்கப் போவதுதான் புத்திசாலித்தனம். இந்த வெள்ளாமை ஒருபோதும் வீடு வந்து சேராது..!


150 கோடி ரூபாய் சொளையான பணம், 200 கிலோ ஒளிர்கிற சொக்கத் தங்கக் கட்டிகள், கத்தை கத்தையான ஆவணங்கள் என தொடர்ந்து சில நாட்களாகச் செய்திகள் கூவிக் கொண்டிருக்கின்றன. ஆவணங்களில் என்ன இருக்கப் போகிறது? அசையாத நிலபுலன்கள் குவிந்து கிடக்கப் போகின்றன. இது ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே நடப்பது போல ஒரு தோற்றமும் இயல்பாகவே விதைக்கப்படுகிறது. உண்மை நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாயெல்லாம் பல்லாகப் போட்டு உடைத்த காட்சியையும் செய்தியில் பார்க்க முடிந்தது. அவரது வாய்கொள்ள முடியாத இளிப்பு, அனைத்தையும் சொல்லாமல் சொல்லி விட்டது. அவரே கைதேர்ந்த ஒரு குத்தகைதாரர்தானே..?
இப்போது குறிவைக்கப்பட்டிருக்கிற முதல்தர அரசு ஒப்பந்தக்காரரான செய்யாத்துரைக்கு திமுக ஆட்சிக் காலத்திலும் பல கோடிகள் மதிப்பிலான எட்டு குத்தகைகள் ஒதுக்கப்பட்டதாக போகிற போக்கில் அவர் சொன்னார். அவர் சொன்ன எல்லா விஷயங்களிலும் உண்மை இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, அல்லது முதன்முறையாக அவர் மனம் விட்டு உண்மையைப் பேசினார் என்ற வகையில் சந்தோஷமே. போகிற போக்கில் அவர் அள்ளித் தெளித்ததை விரித்துப் பார்த்தால், இதன் பின்னால் இருக்கிற தொழில் பின்னல் சிலந்தி வலையைப் போல விரியும். இந்த விஷயத்தில் தமிழகத்தை ஏற்கனவே ஆண்ட திமுகவும் விதிவிலக்கில்லை என்பதைப் புரிந்து கொண்டால்தான் மேற்கொண்டு இந்த விவகாரத்தின் அத்தனை தொடர் சங்கிலிகளையும் உணர முடியும். உங்களில் கல் எறியாத எவரோ என்றெல்லாம் இந்த இடத்தில் விவரம் புரியாமல் உதாரணங்களை அள்ளி வீச முடியாது. ஏனெனில், எல்லோருமே இந்தக் குளத்தில் பெரிய பாறாங்கற்களைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, செய்யாத்துரையின் ஊரான அதே அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மூன்றாம் தர குத்தகைதாரர் ஒருத்தருடன் சென்னையில் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் அழைத்தவர், அதிமுக சார்பில் போட்டியிட்டவர். அவர் பேசி முடித்ததும் விஷயம் என்ன என்ற போது, “இருபது லட்ச ரூபாயை நூறு ரூபா சில்லறையா மாத்தி ஏதாவது வண்டில போட்டு அனுப்பச் சொல்றாரு. தேர்தல் செலவுக்காக கேக்குறாரு” என்றார் அந்த மூன்றாம்தர குத்தகைதாரர். மூன்றாம் தர ஆட்களிடமே இவ்வளவு என்றால், முதல் தர ஆட்களிடம் எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களது கட்சியில்லையே என்றபோது, “இந்த விவகாரத்தில கட்சிப் பிரிவினை எதையும் பாக்க மாட்டோம் தம்பி. எங்காளுகளுக்கும் கொடுத்திருக்கேன். யார் வந்தாலும் எங்க மாவட்டத்தில எனக்கு வேலை ஒதுக்கிருவாங்க” என்றார். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை குத்தகைதாரர்களுக்கு கறுப்பு, சிவப்பு, மஞ்சள், ஊதா என எல்லாமும் ஒன்றுதான். கம்யூனிஸ்ட்கார்கள் உண்மையிலேயே இந்த விஷயத்திலும் பாவம்தான்.
குத்தகையை இட்டார் பெரியார்; இடாதார் சிறியோர் அவ்வளவுதான் நூலிலை வித்தியாசம். அதே தேர்தல் முடிந்து முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக திமுகவின் உயர் மட்ட ஆட்களுடன் அதே சென்னையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ஆட்சிக்கு வந்தவுடன் யாருக்கு மணல் குத்தகையைக் கொடுப்பது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிமுக அரசில் மணல் வியாபாரத்தை நடத்தியவருக்கே திரும்பவும் தருவதாக முடிவிற்கு வந்தார்கள். இத்தனைக்கும் அந்த நபர் தோட்டத்திற்கு மிகவும் நெருங்கியவர் என அறியப்பட்டவர். “யாரா இருந்தா என்ன..? அவர்ட்ட கொடுக்கல் வாங்கல் சரியா இருக்கு. வாரா வாரம் கேட்கிற முறையில செட்டில் பண்ணிடுறாரு” என்பதுதான் அவர்களுடைய பதிலாக இருந்தது. இதுதான் சகிக்க முடியாத கள யதார்த்தம். இப்போது ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறேன் என்று கிளம்பியிருப்பதையெல்லாம் லூலாயி என்கிற ரீதியில் எடுத்துக் கொண்டு கடந்து விட வேண்டும். விவரம் புரியாமல் கம்பைத் தூக்கிக் கொண்டு யாராவது உடன் பிறப்புகள் கிளம்பி வந்தால், அவருடைய எண்ணை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அவர்களுடைய ஆட்சி வரும்போது ஏதாவது சிபாரிசுக்குப் போகலாம் என்பதால் பகைத்தும் கொள்ளாதீர்கள்.
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். திமுக எம்எல்ஏக்களுக்கு, அவர்களது தொகுதியில் எட்டு கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்த வேலைகளைச் செய்ய, எடப்பாடி தலைமையிலான அரசு மறைமுகமாக வேலைகளை ஒதுக்கி கொடுத்திருக்கும் செய்தி அது. அந்த ஒப்பந்த வேலைகளில் அதிமுகவினர் தலையிடக்கூடாது என்பதுதான் எழுதப்படாத ஒப்பந்தம். எட்டுகோடியை ஒதுக்கி, அதில் முப்பது சதவீதத்தை அவர்கள் எடுத்துக் கொள்ள வழி ஏற்படுத்துவதன் ஊடாக எதிராளியின் பாத்திரத்திலும் தங்கக் கஞ்சியை ஊற்றுகிற ஏற்பாடு அது. அதுமாதிரியான ஒப்பந்தங்களை நம்முடைய கட்சி எம்எல்ஏக்கள் எடுக்கக்கூடாது என திமுகவின் மேல்மட்டம் சொல்லுமானால், அவர்கள் தயங்காமல் தங்களுக்குத் தோதாக செயல்படும் ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பதுதான் முகத்தில் அறைகிற உண்மை. இதெல்லாம் தெரிந்தும், வாசல்படிக்கு முன்னால் நின்று கொண்டு சத்தம் விடுவதையெல்லாம் விவரம் தெரிந்தவர்கள் நம்பத் தயாராக இல்லை.
இந்த இருவர் மட்டுமா இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்..? ஒவ்வொரு ஆட்சி அமையும் போதும் அவர்களோடு நட்பில், கூட்டணியில் இருப்பவர்களுக்கும் ஒப்பந்தப் பங்கு போவது என்பது அடிப்படை விதி. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இதுவும் அடக்கம் என்பதை போயஸ் கார்டன், அறிவாலயம் பக்கம் சுற்றிய மனசாட்சி உள்ளவர்கள் அறிவார்கள். ஒருதடவை திமுகவோடு கூட்டணியில் இருந்து முறித்துக் கொள்வதற்கு முன்பு பாமக நிறுவனர் சொன்ன கூற்றொன்று புகழ்பெற்றது. “ஒரு ஆயா போஸ்டிங்கூட பண்ணித் தர மாட்டேங்கறாங்க” என அவர் வெளிப்படையாகவே சொன்னது எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. அப்படியென்றால் என்ன..? அரசு காரியங்களில் தங்களுக்கான பங்கைத் தரவில்லை என்பதுதான் அர்த்தம்.
பல்வேறு அரசு ஒப்பந்தங்கள், பணி இடமாறுதல், புதிய பணி வாய்ப்பு இவற்றைச் செய்து தருவது என்பது ஒரு இணை வணிகம் இங்கே. பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்குகிற வணிகம். ஐம்பது கோடி ரூபாய் கப்பம் கட்டி விட்டு அடுத்த ஆட்சி வருகிற வரை காத்திருந்தவர்களையெல்லாம் நிறைய பார்த்திருக்கிறேன். எல்லா வணிகத்திலும் இருப்பதைப் போல இதிலும் போலிகள் உண்டு. வேலூரைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் ஒருவர், நர்சிங் கல்லூரி உரிமம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி பத்து கோடி ரூபாயை வாங்கி வைத்துக் கொண்டு, வேலையையும் செய்யாமல் இழுத்தடித்தார். கொடுத்த நண்பர் போய் கேட்டபோது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் மின்சார அமைச்சரின் மச்சானிடம் இதே மாதிரி ஐந்து கோடி ரூபாய் கொடுத்து விட்டு அதை திருப்பி வாங்க நடையாய் நடந்தவரையும் எனக்கு தெரியும்.
இதுபோன்ற அரசு வேலைகளை எடுத்துச் செய்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களின் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி இருப்பவர்களால் மட்டுமே முதல் தர குத்தகைகளை எடுக்க இயலும். எடப்பாடியின் சம்பந்தி செய்யாத்துரை என்றால், அறிவாலயத்தில் வேறு ஒருத்தர் இருப்பார்; அவ்வளவுதான் வித்தியாசம். மாட்டிக் கொள்கிறபோது மட்டுமே, விஷயம் சந்தி சிரிக்கும். மாட்டிக் கொள்ளவில்லை என்பதற்காக, சந்தியில் நின்று விவரம் புரியாமல் சிரித்துக் கொண்டிருக்கக்கூடாது. பூமராங்கிற்கு, திருப்பி வருகிற பழக்கம் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பரவியிருக்கிற, உடனடியாக களையெடுக்க முடியாத இணை வணிகம் இது. இதில், புரோக்கர்கள் என்கிற லேயர்கள் இருக்கின்றன. எல்லா நேரங்களிலும் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சாட்டிவிட முடியாது இல்லையா..? ஒதுக்கப்படுகிற ஒப்பந்தங்களுக்கான பணத்தை பெறுவதற்கு அதிகாரிகளுக்கு இரண்டு சதவீதம் தர வேண்டும். இல்லாவிட்டால், காசோலை காலுக்குக் கீழே கிடக்கும். இன்ன அதிகாரிக்கு இன்ன தொகை கொடுத்து விடுங்கள் என அமைச்சர்களே அழைத்தும் சொல்லி விடுகிற நேர்மையான ஏற்பாடும் உண்டு. அரசாங்கத்தில் இருக்கிற எல்லா துறைகளிலும் வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை ஏதோ சந்திர மண்டலத்தில் நடப்பது போலச் சித்தரிப்பது விஷயத்தின் ஆழத்தை மூடி மறைக்கிற முயற்சியே.
பொதுப்பணித்துறைதான் என்றில்லை... சத்துணவுத் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை என சகல துறையிலும் இந்த மறை வணிகம் தங்கு தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையையெல்லாம் பசையில்லாத துறை என்பார்கள். ஆனால், அங்கேகூட மொத்தமாக பிளக்ஸ் அடிக்க, இத்தனை சதவீதம் காசு கொடுக்க வேண்டும் என்கிற முறை இருக்கிறது. எதற்குமே உருப்படாத விளையாட்டுத் துறையில் உபகரணங்களை மொத்தமாக அரசிற்கு தருவதற்கு இதே மாதிரி தர வேண்டும். ஒட்டுமொத்தமும் இப்படித்தான் நடக்கிறது என்கிற போது, ஒட்டுமொத்தமான மாற்றம் என்று சொல்வதெல்லாம் சிறுவர்த்தனமான அரசியல் சித்து விளையாட்டு.
இதுமாதிரி சிலர் மீது நடவடிக்கை எடுப்பதன் வழியாக, ஊழலுக்கு எதிரான கட்சியைப் போல பாஜக தன்னைக் காட்டிக் கொள்வதையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அதானி யார்..? கொஞ்சம் பெரிய சைஸ் சிவந்த செய்யாத்துரை. சிகப்பாக இருப்பதால் பொய் சொல்ல மாட்டான் என்றெல்லாம் சொல்லி விடமுடியுமா..? நாளையே பாஜக ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும்..? செய்யாத்துரை போய், கொஞ்சம் மூக்குச் சிவந்தவர்கள் இதே காரியத்தை தலைமைச் செயலகத்தில் செய்வார்கள். இப்போதே ஆங்காங்கே செய்வதில்லையா..? தலைமைச் செயலகம் பக்கமாக பாஜக ஆதரவு பெற்ற புதிய குத்தகைதாரர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 
ஒரு வாதத்திற்காக தமிழகம் முழுக்க இருக்கிற ஒப்பந்தக்கார்கள் எல்லோரையும் ஒரே நாளில் நெருக்கினால் என்ன நடக்கும்..? ஒருத்தரும் டெண்டர் எடுக்க வர மாட்டார்கள். தலைமைச் செயலரும் அவருடைய மச்சானும்தான் போய் சாலை போட வேண்டும். ஐந்து சதவீதமாக இருந்த கமிஷன் தொகை இப்போது நாற்பது சதவீதம் வரை வந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். அது உண்மையா என்றும் தெரியவில்லை. இந்த சதவீதத்தில் அதிகாரிகளுக்கான ஒதுக்கீடு இருக்கிறதா, இல்லையா..? அதனால்தான் சொல்கிறேன். செய்யாத்துரை என்பதெல்லாம் ஒரு சின்ன உதாரணம்தான். தமிழகம் முழுக்கத் தோண்டிப் பார்த்தால், இன்னும் மிளிர்கிற தங்கக் கட்டிகளைப் பொறுக்கி விட முடியும். இந்த வணிகத்தைப் பொறுத்தவரை, எல்லா மாநிலங்களும் தங்கச் சுரங்கமே.
பார்ட்டியொன்றில் எல்லோரும் வியக்கும் கோடீஸ்வரர் ஒருத்தரைச் சந்தித்தேன். அவர் யார் என்று கேட்டபோது, வடமாநிலங்களில் கொசுக்கு மருந்தடிக்கிற காண்டிராக்டர் என்றார்கள். செய்யாத்துரையெல்லாம் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம்தான் வாங்க வேண்டும். ஏனெனில், அவர் பத்தாயிரம் செய்யாத்துரையின் பலம் கொண்டவர். எல்லோரும் தங்களை இந்த விஷயத்தில் தரமான, நயம் எலுமிச்சை ஊறுகாயாகக் காட்டிக் கொள்ள முயல்வதை ஒருபோதும் நம்பிவிடாதீர்கள். ஒருவகையில் எல்லோரும் ஒரே கருஞ்சட்டியில் ஊறிய கசக்கிற நார்த்தங்காய்கள்தான். எலுமிச்சை நேர் வணிகம் என்றால், இந்தத் துறையில் நார்த்தங்காய் என்பது இணை வணிகத்திற்கான குறியீடு. நார்த்தங்காயை ஒரு உதாரணத்திற்காகவே சொல்லியிருக்கிறேன். அதைத் தவறாகச் சொல்லவில்லை. தனி மனிதரை எளிதாகப் போட்டுச் சாய்த்து விடலாம். ஆழமாக ஓங்கி வளர்ந்திருக்கிற இணை வணிகத்தைத் துளி அளவிற்குக்கூட அசைத்துப் பார்க்க முடியாது. அசைக்கிறோம் என்று சொல்லிக் கிளம்புவதெல்லாம் கண்ணா மூச்சி ஆட்டம்தான் தவிர வேறொன்றுமில்லை. இப்போது ரெய்டு என்று நடந்து கொண்டிருப்பதெல்லாம் ஏதோ பங்காளித் தகராறு என்று கருதி வேறு வேலையைப் பார்க்கப் போவதுதான் புத்திசாலித்தனம். இந்த வெள்ளாமை ஒருபோதும் வீடு வந்து சேராது..!

சரவணன் சந்திரன்


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...

ஜொலிக்கிற சின்னத்திரைத் துருவ நட்சத்திரங்கள்

நாம் எப்போதும் சினிமாவைப் பற்றிப் பேச மட்டுமே பழக்குவிக்கப் பட்டிருக்கிறோம். மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட தொழுவத்து மாடோ அல்லது வண்டி மாடோ எப்படி கயிறு கட்டப்பட்ட அடுத்த நொடியிலிருந்து தன்னுடைய பாதையை இயந்திர கதியில் கண்ணுக்குள் கொண்டு வருமோ, அப்படி சினிமா மட்டுமே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. வெள்ளித்திரை அது என்பதை மறுப்பதற்கில்லை. ஜொலிக்கிற துருவ நட்சதிரங்கள் அங்கேதான் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம் வெள்ளித் திரையையும் சார்ந்து வாழும் சின்னத் திரையில் அவ்வப்போது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்துவிட்டு வருவது தப்பில்லைதானே? வெறும் நான்கு வரிச் செய்திகளாகவே முடித்து விட்டால் எப்படி? அமெரிக்கத் தேர்தலில் எல்லோரும் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் எனக் கணித்தார்கள். மனிதர்களைத் தாண்டி சில குரங்குகளும் தவளைகளும்கூட கணித்தன. ஆனால் மாறாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே சின்னத்திரையிலும் ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சத்தமில்லாத சாதனை அது. அதேசமயம் அந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள மாறியிருக்கிற சில அம்சங்கள் குற...