முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழியாக் கோலம் [சிறுகதை]

“பார்த்தவுடனே டெலீட் பண்ணிடனும்.”

“பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்.”

மௌனம்.

அந்த டிஎம்மின் மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவைப்பார்த்து வரலாம்.

அவள் அப்ஸரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம். ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான்.

ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இன்னும் உருப்படியாய் ஜாவாவில் பேலிண்ட்ரோம் நிரல் எழுதத் தெரியாது; எழுதத்தெரியாது என்பதும் தெரியாது. ஆனால் இன்றைய தேதிக்கு ட்விட்டரில் அவளை இருபதாயிரத்துச் சொச்சம் பேர் தொடர்கிறார்கள். அவள் ட்வீட் நூறு ரீட்வீட் ஆவது சர்வசாதாரணம். அதாவது ப்ரியாவை இருநூறு பேருக்கும், அப்சராவை இருபதாயிரம் பேருக்கும் தெரியும். அதனால் அவளுக்குமே ப்ரியாவை விட அப்ஸராவைப் பிடிக்கும். நிஜத்தைவிட பிம்பங்கள் கொண்டாட்டத்துக்குரியவை! 


ட்விட்டர் கணக்கு தொடங்கி, தீபிகா படுகோன் டிபி வைத்து, “நண்பர்களுக்கு உண்டு மரணம், நட்பிற்கில்லை” என்ற ரீதியில் சில தத்துவங்களை அவள் எழுதியபோது அவ்வளவாய் யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு ‘வலைபாயுதே’வில் ஒரு ட்வீட் வந்தபோது புதிதாய் ஆயிரம் பேர் பின்தொடர்ந்தார்கள். ஒரு சுபதினத்தில் சட்டென முடிவெடுத்து தன் நிஜப்புகைப்படத்தை டிபியாய் வைத்தாள். அன்றிலிருந்து தினம் ஐம்பது பேர் புதிதாய் பின்தொடர்கிறார்கள். தன்னுடைய புகைப்படம் பார்த்துத்தான் பின்தொடர்கிறார்கள் என்பது புரிந்தாலும் தன் கருத்தை நோக்கி ஈர்க்கவே புகைப்படம் பயன்படுகிறது, அப்படி வந்தவர்கள் தன் எழுத்துக்காகவே தொடர்கிறார்கள், ரீட்வீட் செய்கிறார்கள், மென்ஷன் இடுகிறார்கள் எனச் சுயசமாதானம் செய்துகொண்டாள்.

இன்னமும் தத்துவங்களைக் கைவிடுவதாய் இல்லை. அதோடு மாதமொரு புது டிபி!

அவன் வருண். ட்விட்டரில் நடிகர் சத்யராஜ் டிபியோடு ‘தகடு தகடு’ என்ற பெயரில் இருக்கிறான். அவ்வளவுதான் அவளுக்கும் தெரியும். ஆறு மாதத்திற்கு முன் அவள் சொந்த டிபி படம் வைத்த மறுநாள் டிஎம்மில் “ஹாய், ஹவ் ஆர் யூ?” என்ற பீடிகை எல்லாம் இல்லாமல் “பேருக்கேத்த படம்” என வருண் ஒற்றை வரி டிஎம் அனுப்பிய போது ப்ரியாவுக்கு ஜிலீர் என்றிருந்தது. அதை எப்படி எதிர்கொள்வதெனப் புரியாமல் தடுமாறிப் பின் வேண்டுமென்றே அரை நாள் தாமதித்து “தேங்க்ஸ்” அனுப்பினாள்.

அவள் பன்னிரண்டாவது வரை படித்தது பெண்கள் பள்ளியில். கல்லூரியில் ஆண்கள் பெண்களோடு பேசத்தடை. மீறினால் பெற்றோர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு “இனி இது போல் நடக்காது” என்ற உறுதிமொழியில் கையெழுத்துப் போட வேண்டும்.

இந்தப் பின்புலத்தில்தான் உரிமை எடுத்துக்கொண்ட வருண் அத்தனை இனித்தான்!

வருண் தன் அப்பாவின் பிறந்த நாளன்று அவருடன் இருக்கும் படம் பகிர்ந்தபோது ரீட்வீட் செய்து மனதார வாழ்த்தினாள். அன்று வருண் ஐடி கொஞ்சம் பிரபலமானது!

பிறகு போடும் ட்வீட் குறித்து எப்போதாவது பேசினார்கள். பிறகு தினம் ஒரு முறை ஏதேனும் சாக்கு வைத்துப் பேசினார்கள். பிறகு குட்மார்னிங், குட்நைட், சாப்டாச்சா.

நிறையச் சிரிக்க வைத்தான்; வெட்கப்பட வைத்தான். பரஸ்பரம் தேடிக் கொண்டனர். வாங்க போங்க தேய்ந்து, வா போ என மாறி, பின் வாடா போடி என்றாகி விட்டது.

கல்லூரிப்படிப்பு முடித்தவுடன் பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்து விடுவது அவர்கள் சாதி வழக்கம். அவ்வளவு நம்பிக்கை! ப்ரியதர்ஷினிக்கு அதில் மறுப்பேதும் இருக்கவில்லை. சங்கத்தில் ஜாதகம் கொடுத்து சம்பள எதிர்பார்ப்பு போன்றவற்றை அடிக்கோடிட்டார்கள். ஒரே மகளுக்கு எழுபது பவுன் சேர்த்து வைத்திருந்தார்கள்.

மாப்பிள்ளை பார்ப்பதை தகவலாக மட்டும் அவனிடம் பதிந்து கடந்தாள். வருணும் பெரிதாய்ப் பொருட்படுத்தவில்லை. அன்றுதான் ஊமை மந்திரி ஜோக் சொன்னான்.

ராதிகா ஆப்தேவின் செல்ஃபி கசிந்து பரபரப்பானபோது லிங்க் தேடிக்கிடைக்காமல் வருணிடம் தயங்கித் தயங்கிக் கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு அங்கலாய்த்தாள்.

“ச்சை, எப்படித்தான் இப்படி எல்லாம் எடுக்கறாளுகளோ!”

“ஏன், நீ எல்லாம் எடுக்க மாட்டியா?”

“டேய், பொறுக்கி. நல்ல குடும்பத்துப் பொண்ணுக இதெல்லாம் செய்வாங்களா?”

“ஏய், இதில் என்ன தப்பு இருக்கு? உன்னை நீ கண்ணாடில பார்க்கறதில்லயா? காலைல குளிச்சி முடிச்சிட்டு வந்து? ஈவ்னிங் வந்து ட்ரஸ் சேஞ்ச் பண்றப்ப?”

“ம்ம்ம்.”

அவ்வப்போது செல்ஃபி பற்றிய பேச்சு வந்தது - சில முறை அவளே தொடங்கியது. 

“இதெல்லாம் இன்னும் கொஞ்ச காலம்தான். உன் அழகு உச்சத்திலிருக்கும் கணங்கள் இவை. ஆன்ட்டி ஆகிட்டேன்னா நீயா ஆசைப்பட்டு எடுத்தாலும் பார்க்கச் சகிக்காது!”

“எப்பவும் அதே நெனப்புதான்டா உனக்கு!”

“ஏய், நான் பார்க்கவா எடுக்கச் சொல்றேன். இஷ்டமிருந்தா எடு, இல்லன்னா போ.”

“தப்பில்லையா?”

“ம்ஹூம். எடுக்காம இருக்கறதுதான் தப்பு. உம்மாச்சி கண்ணைக் குத்திரும்.”

எடுத்துப் பார்த்து விட்டு அழித்து விடும்படி ஊக்கப்படுத்தினான். அவன் மூன்றாம் முறை சொன்ன நள்ளரவின் மறுநாள் காலை குளித்து முடித்து வந்த பின் அறைக் கதவைத் தாழிட்டு பூத்துவாலையில் உடம்பீரம் ஒத்தி எடுத்த பின் கண்ணாடியில் ஒத்திகை பார்த்து விட்டு தன் வாழ்வின் முதல் டாப்லெஸ் செல்ஃபியை எடுத்தாள். 

பார்த்து வெட்கப்பட்டாள். சந்தேகமில்லாமல்தான் ஒரு பேரழகி என்று எண்ணம் எழுந்தது. ராதிகா ஆப்தேவைவிடவும் என்று அடுத்துத் தோன்றியபோது மறுபடி வெட்கப்பட்டாள். மறக்காமல் அழித்தாள். மறக்காமல் அவனிடம் சொன்னாள்.

“எனக்குப் பார்க்கனும்னு இல்லப்பா. ஆனா நீயா அனுப்பினா மறுக்க மாட்டேன்.”

கண்ணடிக்கும் ஸ்மைலி அனுப்பினான். அவன் அப்படிக்கேட்டது பிடித்திருந்தது.

அடுத்த இரு மாதங்களுக்கு செல்ஃபி எடுத்தும் அழித்தும் மட்டும் கொண்டிருந்தாள். தவறாமல் அதைப்பற்றி பேச்சுவாக்கில் அவனிடம் சொல்லிச் சீண்டவும் செய்தாள்.

முதலில் விட்டுப்பிடித்தவன் ஒரு கட்டத்தில் கெஞ்சத்தொடங்கி இருந்தான். அதை ரசித்தபடி அவள் நாட்களைக்கடத்திய வேளையில்தான் அடுத்த அஸ்திரம் வந்தது.

“அப்ப என் மேல நம்பிக்கை இல்லையாடி?”

“அப்படி இல்லடா. சொல்லப்போனா என் மேலதான் எனக்கு நம்பிக்கை இல்லை.”

அஸ்திரம் வேலை செய்தது. குற்றவுணர்வு மேலோங்க அவனுக்கு செல்ஃபி அனுப்பத் தீர்மானித்தாள். பார்த்தவுடன் அழித்துவிட வேண்டும் என வெவ்வேறு சொற்களில் இருபது முறைக்கு மேல் சொல்லி விட்டாள். நிற்க. டிஎம் மௌனம் உடைபடுகிறது.

சில நொடிகள் டிஎம்மில் டைப்பிங் சிம்பல் காட்டிய பின் செல்ஃபி வந்து விழுந்தது.

“ப்பா! ரெண்டும் கண்ணைக் குத்துது!”

“டேய்ய்ய்!”

“தினம் பாலில் குளிப்பியாடி?”

“போடா!”

“சான்சே இல்ல!”

“யாருமே என்னை இப்படிப் பார்த்ததில்ல. என் அம்மா கூட. நீதான் முதல்.”

“நான் மட்டும் என்ன? யாரையுமே நானும் இப்படிப் பார்த்ததில்லயாக்கும்.”

“புளுகாதே. தினம் பாக்கற சீன் படத்துல எட்டு கெஜம் புடவை சுத்திட்டா வர்றாளுக?”

“இன்சல்ட் பண்ணாதே. அதுவும் இதுவும் ஒண்ணாடி? நீ ஃப்ரெஷ் பீஸ் ஆச்சே!”

“ச்சீய்...”

தொடர்ந்தார்கள். தோய்ந்தார்கள். நான்காம் தலைமுறை அலைக்கற்றை நாணியது.

தவறியும் எத்தருணத்திலும் காதல் என்ற சொல் அவர்களுக்குள் இடம்பெறவில்லை. தெளிந்த இத்தலைமுறையின் பிரதிநிதிகளாய்த் தம்மைக் கருதிக் கொண்டார்கள்.

ப்ரியதர்ஷினிக்கு கல்யாணம் நிச்சயமானது. “இனி இதெல்லாம் தப்பு. இதுதான் கடைசி! சரியா?” என்று சொல்லி அதையும் செல்ஃபியுடன்தான் கொண்டாடினர்.

மாப்பிள்ளைக்கு பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் லட்சம் ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை. ரிசப்ஷனில் போட பதினைந்தாயிரம் ரூபாய்க்கு கோட் வாங்கிய பின், எட்டு பவுனில் தாலி செய்ய ஆர்டர் கொடுத்த பின், பரூஃப் பார்த்த பத்திரிக்கை அச்சுக்குப்போன மறுநாள் – கல்யாணத்துக்குச் சரியாய் மூன்று வாரம் இருக்கையில் - எல்லாவற்றையும் நிறுத்துமாறு மாப்பிள்ளை வீட்டில் சொன்னார்கள்.

நெஞ்சைப் பிடித்தபடி ப்ரியாவின் அப்பா காரணம் கேட்டார். வாட்ஸாப் பார்க்கச் சொன்னார்கள். திறந்து பார்த்து கட்டுவிரியன் கொத்தியதுபோல் அதிர்ச்சியுற்றார்.

அது ப்ரியதர்ஷனியின் செல்ஃபி. டாப்லெஸ் செல்ஃபி. மாப்பிள்ளை தன் பள்ளி நண்பர்களுடனான வாட்ஸாப் குழுவில் தான் திருமணம் செய்யப் போகும் பெண் என்று ப்ரியதர்ஷினியின் படத்தைப்பகிர, அவர்களில் ஒருவன் தன் சேமிப்பிலிருந்து அந்தச் செல்ஃபியைப் பகிர்ந்து வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறான். பூகம்பப்புள்ளி!

ப்ரியதர்ஷினியை வீட்டில் நையப்புடைத்தார்கள். காதல், கர்ப்பம் என்று சிக்கலோ எனத் துருவிக் கேட்டார்கள். முதலில் அது தானே இல்லை என்று சாதித்தவள் - அப்படத்தில் வராகம் போல் வாயைக்குவித்து வைத்திருந்ததால் அப்படிச் சொல்ல முகாந்திரம் இருந்தது - அடி தாளாமல் கல்லூரி சினேகதிகளுடன் விளையாட்டாய்ப் பகிர்ந்தது எப்படி வெளியே வந்ததெனத் தெரியவில்லை எனக் கூறிச்சமாளித்தாள்.

வனச்சினத்துடன் வருணிடம் விளக்கம் கேட்டாள். உண்மையாகவே அவன் அதை எவருக்கும் காட்டவோ பகிரவோ இல்லை. அதைச்சத்தியம் செய்தான். அழிக்காமல் வைத்திருந்தது மட்டுமே தன் தவறு என்றான். அவளதை நம்பத்தயாராய் இல்லை.

“யூ பெர்வர்ட், பிட்ரேயர்…” என்று திட்டி அவனை ட்விட்டரில் ப்ளாக் செய்தாள்.

ப்ரியதர்ஷினிக்குச் சத்தமில்லாமல் மீண்டும் ஒரு மாப்பிள்ளை தேடி - வாட்ஸாப் பயன்படுத்தாத மாப்பிள்ளை - அடுத்த மூன்று மாதத்தில் சிறப்பாய்க்கல்யாணம் முடித்தார்கள். சற்றும் மனந்தளராத வருண் அவளை ட்விட்டரில் மென்ஷனிட்டு வாழ்த்தினான். ப்ளாக் செய்திருந்ததால் அவள் அதைப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

வருணுக்கு இன்னும் புகைப்படம் எப்படி வெளியே போனது எனப்புரியவில்லை. அவனுக்குப் பெரிதாய்க் குற்றவுணர்வு ஏதுமில்லை என்றாலும் தான் செய்யாத பிழைக்குத் தண்டிக்கப்படுவது வருத்தமளித்தது. நண்பனின் வீட்டில் முட்டக்குடித்து மட்டையான இரவில் தன் செல்பேசியைத்திறந்து எவரும் எடுத்திருக்கலாம் அல்லது ஒருமுறை செல்பேசி மழையில் நனைந்து பழுதுபட்டபோது சர்வீஸ் சென்டரில் கொடுத்த அரை மணி இடைவெளியில் திருடப்பட்டிருக்கலாம் எனச்சாத்தியங்களை யோசித்துக்குழம்பினான். அடுத்த முறை ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். இப்போது அவன் மோனலிசாவிடம் பேசிக்கொண்டிருக்கிறான்!

ப்ரியதர்ஷினி இப்போது சந்தோஷமாய் இருக்கிறாள். அவள் செல்ஃபியானது வையக விரிவு வலையில் இன்று திரியும் பல்லாயிரங்கோடி ஆபாசப்படங்களில் ஒன்றாகக் கலந்து கரைந்து விட்டது. எப்போது வேண்டுமானாலும் அது வெளிப்பட்டு மீண்டும் தலை வலி தரலாம் என்ற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ப்ரியதர்ஷினி தன் ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டாள். கல்யாணத்துக்குப் பிந்தைய பூரிப்பிலோ என்னவோ சற்றே பெருத்து விட்டாள். இனி அந்தச் செல்ஃபி வெளிவந்தாலும் அது தானில்லை எனச்சாதிக்க அனைத்து முஸ்தீபுகளையும் செய்து தயாராகி விட்டாள்.

வருணின் ஆதார் அட்டையில் பிழைதிருத்தம் செய்ய ஓடிபி கன்ஃபர்மேஷனுக்காக அவன் செல்பேசி வாங்கிச்சென்ற, ஸ்மார்ட்ஃபோன் அவ்வளவாய்ப்பழகாத அவனது தந்தையின் மீது கடைசிவரை அவனுக்குக் கொஞ்சமும் சந்தேகமெழவே இல்லை.

***
writer 

[30-3-2018 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளியான கதை]

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

சிம்பு குடும்பத்தாருக்கு கொற்றவை கடிதம்!

உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்                         கொற்றவை -பெண்ணிய செயல்பாட்டாளர் ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப்படுற வழியப்பாருலே “பு.ண்.டை” நாயம் பேசிட்டு திரியுறவ” என்று சொல்வார்கள். ஓர் உயிரை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் உறுப்பிற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இவ்வளவுதான் மரியாதை என்றோ அல்லது பெண் பித்து பிடித்து அலையாமல் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார் என்றோ சொல்வதாகவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் “புண்டை” நியாயம் பேச வைத்த பெருமை உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் போய்ச் சேரும். இதை எண்ணி உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டும், உயிரையும் உடைமையையும் இழந்தும் துன்புருகையில் இவர்கள் “பு.ண்.டை” ஆராய்ச...