முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்கிற பெருமர நிழல்


திராவிட அரசியல் சித்தாந்தங்களால் கவரப்பட வில்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் கருணாநிதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறேன்.

கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்கிற பெருமர நிழல்
-லீனா மணிமேகலை
முதன்முதலில் கலைஞர் மு.கருணாநிதியின் பெயர் என் மனதில் பதிந்தது எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. மறைந்த எனது தந்தை தமிழ்ப் பேராசிரியர் இரகுபதி, சிறுமியான என் மழலைத் தமிழைத் திருத்தி பிழையில்லாமல் தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாட கற்றுக் கொடுத்த போது, இரண்டு கேள்விகள் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு பதில்களையும் அவரே சொல்லி, என்னை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்க சொல்வார். ‘தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை’. ‘அதை தமிழ் நாட்டின் தேசிய கீதமாக மாற்றியவர் யார்? கலைஞர் மு. கருணாநிதி’. நானும் கேள்வி பதிலை அப்படியே ஒப்புவிப்பேன். தொலைக்காட்சியில் கரகர குரலும் கறுப்புக் கண்ணாடியுமாய் அவர் தோன்றி பேசும்போதெல்லாம் அப்பா அவரைக் காட்டி "யார் இவரு?" என்று கேடடால் "நீராடும் கடலுடுத்த" பாடலை ராகமெடுத்து நான் பாடிய ஞாபகங்கள் நிழலாடுகின்றன.  
திராவிட அரசியல் சித்தாந்தங்களால் கவரப்பட வில்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் கருணாநிதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறேன். இடதுசாரி குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என்னைப் பெரிதும் ஈர்த்த - பாதித்த சிந்தனையாளராக  தந்தை பெரியார் தான் இருந்தார் . இளவயதில், கம்யூனிஸ்ட் புத்தகங்களை விட திராவிட இயக்கத்தின் புத்தகங்கள் தான் எனக்கு இலகுவாகவும் புரியும்படியாகவும் இருந்தன. ஒரு சூத்திர கருப்பு தமிழ்ப் பெண்ணாக இந்த உலகத்தை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் தைரியத்தை திராவிட இயக்கப் போராட்ட வரலாற்றை வாசித்து தான் பெற்றுக்கொண்டேன். இடதுசாரி திராவிடம் என்ற எனக்கான ஒரு வெளிச்சத்தை தேடிக் கொண்டேன். தந்தை பெரியார் தன் தம்பிகளாக அரவணைத்துக் கொண்ட அண்ணாவும் கலைஞரும் அந்த வெளிச்சத்தை விசாலப் படுத்த உதவினார்களா என்று யோசித்துப் பார்க்கிறேன்.  திராவிட இயக்கம் விதைத்ததை யெல்லாம் அரசியல் விளைச்சல் நிலமாக மாற்றியதில் இருவரும் ஓரளவு வெற்றியடைந்தார்கள் என்பது தான் வரலாறு. 
சூத்திரர், மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், நாத்திகர், பகுத்தறிவாளர், "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்" என்று சினிமாவுக்கு கதை வசனம் எழுதுபவர், வீதிதோறும் அரசியல் நாடகம் போடுபவர், பத்திரிகையாளர் என்ற அடையாளங்களோடு "பார்ப்பனிய ஹிந்தியாவில்" அறுபதாண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகவும், ஐம்பதாண்டு காலம் கட்சித் தலைவராகவும், ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வராகவும் அரசியல் செய்த சாணக்கியம் என்பது அசுர சாதனை. நான் பேசும்- எழுதும்- சிந்திக்கும் தமிழிலும், கற்ற கல்வியிலும், சமூகத்தில் பெண்ணாக எனக்கு கிடைத்திருக்கும் இடத்திலும், நம்பும் கடவுள் மறுப்பு கொள்கைகளிலும், பங்கெடுக்கும் சமூக நீதி போராட்டங்களிலும், எடுக்கும் சினிமாவிலும் கலைஞர் கருணாநிதியின் வியர்வை வாசம் அடிப்பது அந்த சாதனையின் விளைவு தான். அதனால் தான் அவருடைய சமரசங்களும் என்னை மிகவும் காயப்படுத்தியிருக்கின்றன. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. பங்கேற்றதை, வெறும் அரசதிகாரத்தில் நிறுவனமயமாதலால் நடந்த வீழ்ச்சியென என்னால் கடந்துப் போக முடிந்ததில்லை. தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவமும், தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகளும் ஆகப்பெரும் சனநாயகவாதியாக கொண்டாடப்படும் அரசியல் தலைவர் அனுமதித்திருக்க கூடாதவை. இலங்கையில் இனஅழிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்தபோதும், தன் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நின்ற பிழைப்புவாத அரசியல், அவர் என்னுள் உரம்போட்டு வளர்த்த இன உணர்வையும், மொழி உணர்வையும் வஞ்சித்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவராக, சாகும்வரை விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்து காலம் தவறிய என் தாத்தா வெங்கடசாமி தோழரிடம் 'எமர்ஜென்சிக்கு ஆதரவாக உங்கள் கட்சி இருந்ததற்காக எங்கள் தலைமுறையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று தகராறு செய்வேன். அரசியல் கட்டமைப்புக்குள் இலட்சியங்களுக்கு நடக்கும் சித்ரவதைகளை சொல்லி ஆதங்கப்படுவார். பதின்ம வயதில் சிவப்புத் துண்டு தாத்தாவை புரிந்துகொள்ள சிரமப் பட்டேன். "உயிரினும் மேலான உடன்பிறப்புகளே" என்று மஞ்சள் துண்டு கலைஞர் பேசும்போது, பாசமும் எரிச்சலுமாக மனம் பொங்குவதையும் புண்படுவதையும் புரிந்துக் கொள்வதற்கு முப்பதுகளின் இறுதியிலும் சிரமப்படுகிறேன். 
ஆனாலும் மீண்டும் மீண்டும், தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போதும், பார்ப்பனிய இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போதும், தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் பெரியார் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போதும், அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போதும் அவரிலிருந்து துண்டித்துக் கொள்வது முடியாது என்பதை உணர்கிறேன். அரசாங்க வேலைகளில் இருப்பவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் தலைவராக கலைஞர் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறார். ஆனால் விளிம்புநிலை மக்களோடு தொடர்ந்து வேலை செய்பவளாக, திரைப்படங்கள் இயக்குபவளாக எனக்கு கிடைத்த அனுபவத்தில், அவரை உழைக்கும் பெண்கள், திருநங்கைகள், அருந்ததியர்கள், குறவர்கள், புதிரை வண்ணார்கள், ஊனமுற்றவர்கள், குடிசை வாழ்மக்கள் போன்ற புறக்கணிக்கப்படட மக்கள் கூட்டங்களின் தோழராக, அவர்களின் சமூக அங்கீகாரத்திற்கான போராட்ட்ங்களுக்கு நெருக்கமானவராகப்  பார்க்கிறேன். விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை அமுல்படுத்தியதற்காக விவசாயியான என் தாயார் ரமாவும், "திருநங்கை" என்ற கம்பீர அடையாளத்தை தந்ததற்காக மாநிலத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி தோழி கிரேஸ் பானுவும், அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தியதற்காக அருமை நண்பன் கவிஞர் மதிவண்ணனும், "ஆதி திராவிடர் புதிரை வண்ணார் நல வாரியம் அமைத்ததற்காக"- பார்த்தாலே தீட்டு என்ற ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் பிறந்து முதல் தலைமுறையாக படித்து தாசில்தாராக ஒய்வு பெற்றிருக்கும் என் குடும்ப நண்பர் மூர்த்தி அய்யாவும், குடிசை மாற்று வாரியம் அமைத்ததற்காக நண்பன் பத்திரிகையாளர் தமிழ்ப்பிரபாவும், கலைஞருக்கு தெரிவிக்கும் நன்றிகள், உதிரி மக்களின் நலனுக்காக அவர் உண்மையான பரிவுடன் செய்த பணிக்கு கிடைத்த சான்றுகள். 
“கருணாநிதி நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு” என்று வாழ்த்தினாராம் தந்தை பெரியார். திராவிட அரசியல் அரசியல் வாய்த்திருக்காவிட்டால் இந்தியா என்ற காலனிய உருவாக்கத்தில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக நசுக்கப்பட்டிருப்போம். விடுதலைக்கு முன் பிறந்து, உலகமயமான இந்தியா வரை ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் அசராமல் அரசியல் செய்த கலைஞர் தன்னையே பரிசோதனைக் களனாக மாற்றிக்கொண்டதால் தான் தொடர்ந்து இயங்க முடிந்திருக்கிறது. முரண்களின் தொகுப்பாக அவர் நமக்கு தெரிவதையும் அந்தப் புள்ளியிலிருந்தே அவதானிக்க முயற்சிக்கிறேன். அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, "மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா" என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, ஈழப் பெண்களை சூறையாடிய இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, "ராமன் என்ன எஞ்சினீயரா" என்று சேது சமுத்திர திட்டம் குறித்த விவாதத்தில் சடடமன்றத்திலேயே கிண்டலடித்த கருணாநிதி என அவரைத் தமிழினத் தலைவராக நினைத்துப் பெருமை கொள்ள, அழியாத வரலாற்று தடயங்களை விட்டு சென்றிருப்பதோடு ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், "திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது" என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் புற்றீசல் போல பெருகியிருக்கும் இந்த கால கட்டம் அவரைப் போன்ற அசைக்க முடியாத தலைவரைக் கேட்டு நிற்கிறது. இந்துத்துவப் பாசிசமும், மாநிலங்களை அடிமைப்படுத்தும் மத்திய எதேச்சதிகாரமும், இந்தி திணிப்பும், மத துவேஷங்களும் தலையெடுத்திருக்கும் சூழல் அவர் விட்டு சென்றிருக்கும் போராட்டப் பாதையை விடாமல் தொடரப் பணிக்கிறது. இரங்கலைக் கூட "எழுந்து வா தலைவா" என்று முழக்கங்களாக கோஷமிடும் திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்கள் சூரியனை அஸ்தமிக்கவிடக் கூடாது. ”தலைவர் கலைஞர் தொடர்ந்து 14வது முறையாக வெற்றி; தொகுதி-மெரினா; பெற்ற வாக்குகள்-ஏழரை கோடி; 'என் ஆறடி நிலம்கூட நீ தந்ததாக இருக்க கூடாது , நான் போராடி வென்றதாக இருக்க வேண்டும்' - கலைஞர்” என்றொரு ட்வீட்டை மிகவும் ரசித்துப் படித்தேன். பேரியக்கங்கள் எப்போதும் யாருக்காகவும் நிற்பதில்லை. இன்னும் செய்வதற்கும், தொடர்வதற்கும் போராடடக் களன் கொதி விடாது காத்துக் கிடக்க, வரலாறு கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...