முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! #RememberingSwarnalatha

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! #RememberingSwarnalatha
ஸ்வர்ணலதா எனும் பெயர் 90களின் போதே எனக்குப் பரிட்சையமானது. முகம் காணாத நேசம் என்பார்களே அதைப் போன்றதோர் உணர்வை எட்டியிருந்த காலத்தில் அவரின் பல பாடல்கள் முணுமுணுப்பைத் தாண்டி ரசனையின் அடுத்தகட்டத்துக்கென என்னை அழைத்துச் சென்றிருந்தது. அவருடன் இசை உலகுக்கு வந்த மற்ற அனைவரைக் காட்டிலும் தான் பாடிய எல்லாப் பாடல்களிலும் ஸ்வர்ணலதாவுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் இருந்தது. 
அக்கால கட்டத்தில் பாடலைக் கேட்ட இரண்டொரு நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரலென அடையாளம் காண முடிந்திருந்தது என்னால். அவர் பாடிய பாடல்களை ரேடியோவிலோ இல்லை தொலைக்காட்சியிலோ எதேச்சையாகக் கேட்டால் கூட சற்று நின்று நிதானமாக அப்பாடல் முடியும் வரை காத்திருந்து கடப்பது எனப் புதிதாகச் சில எல்லைகளை வகுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தேன்.  
ஸ்வர்ணலதா
மெல்லிசை மன்னரின் அறிமுகம் என்னும் அடையாளத்துடன் இசை உலகுக்கு வந்தவர் ஸ்வர்ணலதா. அதுவும் முதல் பாடலிலேயே கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடியிருந்தார். அதற்கு பிறகு இளையராஜாவுடன் பணியாற்றிய அனைத்துப் பாடல்களிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைப் பிரதிபலிக்க அவர் ஒரு போதும் தவறியதில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய ``மாலையில் யாரோ” தான் அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் அப்பாடலில் உருகும் தேனென அவரின் குரல் அத்தனை மென்மையாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. 

பொதுவாக அவரின் குரல் வழி இசையை அறிந்தோர் எவருக்கும் அவரின் தாய் மொழி தமிழில்லை என்று தெரிய வாய்ப்பே இல்லை. உச்சரிப்புக்கெனத் தனி அகராதி ஏதும் உண்டெனில் அதில் ஸ்வர்ணலதாவுக்கும் ஓர் இடமிருக்கும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பை இந்த இன்னிசைக் குயிலுக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்று யோசித்ததுண்டு. அதுவும் தெம்மாங்குப் பாடல்களில் நாட்டுப் புற கலைஞர்களுக்கு நிகரான உச்சரிப்பும், தொனியும் கொண்டவர் ஸ்வர்ணலதா. 
இசையமைப்பாளர் சௌந்தர்யனின் முதல் படமான `சேரன் பாண்டிய’னில் ஸ்வர்ணலதா இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். அதில் `சம்பா நாத்து” பாடலில் அவரின் உச்சரிப்பை எத்தனை முறை ரசித்தாலும் தகும். சாதாரண வார்த்தைகள்தாம் என்றாலும் தெம்மாங்கு கலந்த உச்சரிப்பு சற்றுத் தனித்து தெரிவதுண்டு. ``உனக்காக மச்சான் காத்திருந்தேன் உறங்காம கண்ணு முழிச்சிருந்தேன்” என்பதுதான் பாடல் வரிகள். ஆனால் ஸ்வர்ணலதா பாடும் போது அந்தத் தொனியைக் கவனித்துப் பாருங்கள் ``உறங்காமே” என்று பாடியிருப்பார். பெரும்பாலான தெம்மாங்குப் பாடல்களில் இந்த உச்சரிப்பைக் காண்பதரிது. 
ஸ்வர்ணலதா
``போவோமா ஊர்கோலம்”, ``நீ எங்கே என் அன்பே”, ``குயில் பாட்டு” என 90களின் ஆரம்பங்களிலேயே இளையராஜாவின் தனிக் கவனத்தைப் பெற்றிருந்தார் ஸ்வர்ணலதா. இதில் `கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வந்த ``ஆட்டமா தேரோட்டமா” பாடல்தான் ஸ்வரண்லதாவுக்குக் கிடைத்த முற்றிலும் மாறுபட்ட பாடல். அதற்கு முன் பாடிய எல்லாப் பாடல்களும் மெலடி வகையறாக்கள். ஆனால் இப்பாடல் அவரின் குரலின் மாறுபட்ட பரிமாணம். பாடல் முழுவதும் அவர் குரலின் வழி பரவும் குதூகலம் நம்மையும் ஒட்டிக் கொள்ளும். 
``மாசி மாசம்”, ``வெண்ணிலவு கொதிப்பதென்ன” போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியிருந்தாலும் ``என்னுள்ளே என்னுள்ளே”பாடல் இன்றளவும் ஒரு மைல்கல்தான். மோகத்துக்கென ஒரு வடிவமிருக்குமெனில் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும். ``மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன” என்று அவர் உச்சஸ்தாயில் பாடும் அக்குரலைக் கேட்கையில் கால்கள் இரண்டும் தரையில் இல்லாது மிதந்துகொண்டிருக்கும். இப்போதிருக்கும் தலைமுறைப் பாடகர்கள் கூட அப்பாடலை வெவ்வேறு விதமாக பாட முயற்சி செய்தாலும் ஸ்வர்ணலதாவின் குரலில் வெளிப்படும் மோகத்தின் சிறு அளவைக் கூட யாராலும் நெருங்க முடியவதில்லை.
இளையராஜா 90 களின் பிற்பகுதிகளில் ஒரே பாடகியை வைத்து அனைத்துப் பாடல்களையும் பாட வைத்ததென்பது சற்று அரிதானது. ஆனால் `கும்மிப்பாட்டு’ படத்தின் 6 பாடல்களையும் ஸ்வர்ணலதா பாடியிருந்தார். பேருக்கேற்றார் போல் படத்தின் எல்லாப் பாடல்களும் மண் வாசனை நிறைந்த தெம்மாங்கு மெட்டுகளாகவே இருந்தன.
ரஹ்மானுடனான ஸ்வர்ணலதாவின் இசைப்பயணம் ``உசிலம்பட்டி பெண்குட்டி” யில் தொடங்கியது. அதன் பிறகான பல படங்களில் ஸ்வர்ணலதாவுக்கெனத் தனி இடத்தை ஒதுக்கியிருந்தார் ரஹ்மான். பெரும்பாலும் ரஹ்மான் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஸ்வர்ணலதா கலக்கிக் கொண்டிருந்தார். ``முக்காலா முக்காபுலா”, ``குச்சி குச்சி ராக்கம்மா” , ``மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்” என்று எல்லா வகையான பாடல்களிலும் பயன்படுத்திக் கொண்டிருந்த ரஹ்மான் `உழவன்’ படத்தில் வரும் ``ராக்கோழி” பாடலின் மூலம் திரும்பவும் மோகத்தின் குரலுக்கென ஸ்வர்ணலதாவைப் பாட வைத்தார். 
ஸ்வர்ணலதா
எல்லாவற்றையும் விட ஸ்வர்ணலதா தன் ஆலாபனைகளாலும், ஹம்மிங்கு(ரீங்காரம்)களாலும் நம்மைக் கட்டிப் போடுபவர். ``என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட” பாடலின் ஆலாபனையை மட்டும் ஆயுசு முழுவதுக்கும் வைத்து கொண்டாடுமளவுக்கான அற்புதத்தைத் நிகழ்த்தித் தந்தவர். 
ரஹ்மானின் முதல் இந்தித் திரைப்படமான ``ரங்கீலா” வில் ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருந்தார். ``ஹை ராமா” பாடல் வரிகளைக் கூர்ந்து கவனித்தால் தெரியும் ஸ்வர்ணலதாவுக்கு வேற்று மொழிகள் அப்படி ஒன்றும் சிரமத்தை எல்லாம் தரக்கூடியதல்ல என்று. இசைக்கு மொழி அவசியமற்றது. தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என 12 மொழிகளில் 7000 பாடல்களைப் பாடியிருக்கிறார். 
அவ்வகையில் ரஹ்மான் ஸ்வர்ணலதாவின் ஹம்மிங்கை மிக அழகாக தனக்கு முதல் கிராமியப் படமென பெயர் வாங்கித் தந்த ``கிழக்குச் சீமையிலே”படத்தில் பயன்படுத்திக்கொண்டார். படம் நெடுக அம்மண்ணின் வாசனையோடும், அம்மக்களின் கண்ணீரோடும் ஸ்வர்ணலதாவின் குரலும் பயணிக்கும். பாசத்துக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் போராட்டத்துக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் விருமாயியின் வாழ்க்கைக் கனவை குரல் வழி கடத்தியவர் ஸ்வர்ணலதா. 
ரஹ்மானின் ஆஸ்தான பாடகியென மாறியிருந்த ஸ்வர்ணலதாவுக்கு ``கருத்தம்மா” படத்தின் ``போறாளே பொன்னுத்தாயி” பாடல் தேசிய விருதை வாங்கித் தந்தது. பாடலைப் பாடி முடித்த போது கண் கலங்கிப் போனாராம் ஸ்வர்ணலதா. சோகமும், வலியும் , கடந்து வந்த பாதையுமென அக்குரலில் அத்தனை ரணத்தையும் கொட்டித் தீர்த்திருப்பார். ``எவனோ ஒருவன்” பாடலிலும் இதே போன்றதொரு வலியை நமக்குக் கடத்தியிருப்பார். ``இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என்று ஸ்வர்ணலதா பாடி முடிக்கும் பொழுது மனதெல்லாம் பாரமாக அந்த இசைக் குயிலின் முகத்தை இனி ஒரு போதும் காண முடியாது என்ற வலி நெருடிக் கொண்டே இருக்கிறது. 
ஸ்வர்ணலதா
இளையராஜா, ரஹ்மான் மட்டுமல்லாது தேவாவுக்கும், எஸ்.ஏ. ராஜ்குமாருக்கும் ஸ்வர்ணலதா ஆஸ்தான பாடகிதான். யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், சிற்பி வரை எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.
ஸ்வர்ணலதா பாடிய பாடல்களைப் பற்றிய சரியான புள்ளி விவரங்களோ, நிலைத் தகவல்களோ இணையத்தில் இல்லை. கிடைத்தவரைக்குமா பொக்கிஷங்களெனப் பாடல்களை சேகரித்துக்கொண்டதுதான். 
ஆயிரமாயிரம் பாடல்களைப் பாடி நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் குரலுக்கு உருவமென ஒன்றை இனி காணப் போவதில்லை. ஸ்வர்ணலதாவின் குரல் வெறும் குரல் மட்டுமல்ல... அது,
 ``வலிகளின் அடையாளம்” 
``சோகங்களின் மூச்சுக் காற்று”
``ரசனைகளின் பிரதி” 
``உள்மன பிரதிபலிப்பு” 
``மோகத்தின் வடிவம்” 
``மகிழ்ச்சியின் எல்லை”. 
குரலின் மூலம் இத்தனை உணர்வுகளையும் எப்படிக் கடத்த முடிகிறது. இது சாத்தியப்படுமெனில் அதற்கு ``ஸ்வர்ணலதா’ என்று பெயர். 
இன்றோடு அவர் பிரிந்து 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆத்மாக்களின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், இக்குரலின் வழியிலும் அது தரும் உணர்வுகளின் வழியிலும் இன்னும் நூறாண்டு காலமும் அது கடந்தும் ``ஸ்வர்ணலதாவின்” பெயர் சொல்லும்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

ரகசியத்தின் அரூப நிழல்கள் ( சிறுகதை )

ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது பக்கத்திலோ அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால் பதட்டப்படாமல் பாதியில் நிறுத்தாமல் முழுவதும் வாசிக்க முயற்சி செய்யுங்கள். அவன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது தனிமனித உடல் இச்சைகளை அல்ல. காமத்தின் சுவிசேஷத்தை. Story of a male whore….. Whore? இந்த வார்த்தை எத்தனை அபத்தமானது தெரியுமா? உடல் என்பது பிரார்த்தனைக்கானது, சமயங்களில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிரார்த்திக்க, இன்னும் சில சமயங்களில் ஒரு ஆணும் சில பெண்களும் அல்லது சில ஆண்களும் சில பெண்களுமென தேவை எதுவோ அதுவாக கொண்டாடுவது. அதிகாரத்தின் வழியாய் தனிமனித விருப்பங்களை ஒடுக்க நினைக்கும் சர்வாதிகார மனம் கொண்டவர்களை வேண்டுமானால் இப்படி சொல்லலாம், whore. அந்த இணையத் தளத்தில் முகம் மட்டும் மறைக்கப்பட்ட இவன் படத்திற்குக் கீழ் தன்னை இப்படி அறிமுகம் செய்திருந்தான். Hi I am foot fetish slave. Looking for a mistress who wants me to be her slave dog. This relation is full of submission and domin...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...