முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! #RememberingSwarnalatha

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! #RememberingSwarnalatha
ஸ்வர்ணலதா எனும் பெயர் 90களின் போதே எனக்குப் பரிட்சையமானது. முகம் காணாத நேசம் என்பார்களே அதைப் போன்றதோர் உணர்வை எட்டியிருந்த காலத்தில் அவரின் பல பாடல்கள் முணுமுணுப்பைத் தாண்டி ரசனையின் அடுத்தகட்டத்துக்கென என்னை அழைத்துச் சென்றிருந்தது. அவருடன் இசை உலகுக்கு வந்த மற்ற அனைவரைக் காட்டிலும் தான் பாடிய எல்லாப் பாடல்களிலும் ஸ்வர்ணலதாவுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் இருந்தது. 
அக்கால கட்டத்தில் பாடலைக் கேட்ட இரண்டொரு நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரலென அடையாளம் காண முடிந்திருந்தது என்னால். அவர் பாடிய பாடல்களை ரேடியோவிலோ இல்லை தொலைக்காட்சியிலோ எதேச்சையாகக் கேட்டால் கூட சற்று நின்று நிதானமாக அப்பாடல் முடியும் வரை காத்திருந்து கடப்பது எனப் புதிதாகச் சில எல்லைகளை வகுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தேன்.  
ஸ்வர்ணலதா
மெல்லிசை மன்னரின் அறிமுகம் என்னும் அடையாளத்துடன் இசை உலகுக்கு வந்தவர் ஸ்வர்ணலதா. அதுவும் முதல் பாடலிலேயே கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடியிருந்தார். அதற்கு பிறகு இளையராஜாவுடன் பணியாற்றிய அனைத்துப் பாடல்களிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைப் பிரதிபலிக்க அவர் ஒரு போதும் தவறியதில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய ``மாலையில் யாரோ” தான் அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் அப்பாடலில் உருகும் தேனென அவரின் குரல் அத்தனை மென்மையாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. 

பொதுவாக அவரின் குரல் வழி இசையை அறிந்தோர் எவருக்கும் அவரின் தாய் மொழி தமிழில்லை என்று தெரிய வாய்ப்பே இல்லை. உச்சரிப்புக்கெனத் தனி அகராதி ஏதும் உண்டெனில் அதில் ஸ்வர்ணலதாவுக்கும் ஓர் இடமிருக்கும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பை இந்த இன்னிசைக் குயிலுக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்று யோசித்ததுண்டு. அதுவும் தெம்மாங்குப் பாடல்களில் நாட்டுப் புற கலைஞர்களுக்கு நிகரான உச்சரிப்பும், தொனியும் கொண்டவர் ஸ்வர்ணலதா. 
இசையமைப்பாளர் சௌந்தர்யனின் முதல் படமான `சேரன் பாண்டிய’னில் ஸ்வர்ணலதா இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். அதில் `சம்பா நாத்து” பாடலில் அவரின் உச்சரிப்பை எத்தனை முறை ரசித்தாலும் தகும். சாதாரண வார்த்தைகள்தாம் என்றாலும் தெம்மாங்கு கலந்த உச்சரிப்பு சற்றுத் தனித்து தெரிவதுண்டு. ``உனக்காக மச்சான் காத்திருந்தேன் உறங்காம கண்ணு முழிச்சிருந்தேன்” என்பதுதான் பாடல் வரிகள். ஆனால் ஸ்வர்ணலதா பாடும் போது அந்தத் தொனியைக் கவனித்துப் பாருங்கள் ``உறங்காமே” என்று பாடியிருப்பார். பெரும்பாலான தெம்மாங்குப் பாடல்களில் இந்த உச்சரிப்பைக் காண்பதரிது. 
ஸ்வர்ணலதா
``போவோமா ஊர்கோலம்”, ``நீ எங்கே என் அன்பே”, ``குயில் பாட்டு” என 90களின் ஆரம்பங்களிலேயே இளையராஜாவின் தனிக் கவனத்தைப் பெற்றிருந்தார் ஸ்வர்ணலதா. இதில் `கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வந்த ``ஆட்டமா தேரோட்டமா” பாடல்தான் ஸ்வரண்லதாவுக்குக் கிடைத்த முற்றிலும் மாறுபட்ட பாடல். அதற்கு முன் பாடிய எல்லாப் பாடல்களும் மெலடி வகையறாக்கள். ஆனால் இப்பாடல் அவரின் குரலின் மாறுபட்ட பரிமாணம். பாடல் முழுவதும் அவர் குரலின் வழி பரவும் குதூகலம் நம்மையும் ஒட்டிக் கொள்ளும். 
``மாசி மாசம்”, ``வெண்ணிலவு கொதிப்பதென்ன” போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியிருந்தாலும் ``என்னுள்ளே என்னுள்ளே”பாடல் இன்றளவும் ஒரு மைல்கல்தான். மோகத்துக்கென ஒரு வடிவமிருக்குமெனில் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும். ``மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன” என்று அவர் உச்சஸ்தாயில் பாடும் அக்குரலைக் கேட்கையில் கால்கள் இரண்டும் தரையில் இல்லாது மிதந்துகொண்டிருக்கும். இப்போதிருக்கும் தலைமுறைப் பாடகர்கள் கூட அப்பாடலை வெவ்வேறு விதமாக பாட முயற்சி செய்தாலும் ஸ்வர்ணலதாவின் குரலில் வெளிப்படும் மோகத்தின் சிறு அளவைக் கூட யாராலும் நெருங்க முடியவதில்லை.
இளையராஜா 90 களின் பிற்பகுதிகளில் ஒரே பாடகியை வைத்து அனைத்துப் பாடல்களையும் பாட வைத்ததென்பது சற்று அரிதானது. ஆனால் `கும்மிப்பாட்டு’ படத்தின் 6 பாடல்களையும் ஸ்வர்ணலதா பாடியிருந்தார். பேருக்கேற்றார் போல் படத்தின் எல்லாப் பாடல்களும் மண் வாசனை நிறைந்த தெம்மாங்கு மெட்டுகளாகவே இருந்தன.
ரஹ்மானுடனான ஸ்வர்ணலதாவின் இசைப்பயணம் ``உசிலம்பட்டி பெண்குட்டி” யில் தொடங்கியது. அதன் பிறகான பல படங்களில் ஸ்வர்ணலதாவுக்கெனத் தனி இடத்தை ஒதுக்கியிருந்தார் ரஹ்மான். பெரும்பாலும் ரஹ்மான் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஸ்வர்ணலதா கலக்கிக் கொண்டிருந்தார். ``முக்காலா முக்காபுலா”, ``குச்சி குச்சி ராக்கம்மா” , ``மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்” என்று எல்லா வகையான பாடல்களிலும் பயன்படுத்திக் கொண்டிருந்த ரஹ்மான் `உழவன்’ படத்தில் வரும் ``ராக்கோழி” பாடலின் மூலம் திரும்பவும் மோகத்தின் குரலுக்கென ஸ்வர்ணலதாவைப் பாட வைத்தார். 
ஸ்வர்ணலதா
எல்லாவற்றையும் விட ஸ்வர்ணலதா தன் ஆலாபனைகளாலும், ஹம்மிங்கு(ரீங்காரம்)களாலும் நம்மைக் கட்டிப் போடுபவர். ``என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட” பாடலின் ஆலாபனையை மட்டும் ஆயுசு முழுவதுக்கும் வைத்து கொண்டாடுமளவுக்கான அற்புதத்தைத் நிகழ்த்தித் தந்தவர். 
ரஹ்மானின் முதல் இந்தித் திரைப்படமான ``ரங்கீலா” வில் ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருந்தார். ``ஹை ராமா” பாடல் வரிகளைக் கூர்ந்து கவனித்தால் தெரியும் ஸ்வர்ணலதாவுக்கு வேற்று மொழிகள் அப்படி ஒன்றும் சிரமத்தை எல்லாம் தரக்கூடியதல்ல என்று. இசைக்கு மொழி அவசியமற்றது. தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என 12 மொழிகளில் 7000 பாடல்களைப் பாடியிருக்கிறார். 
அவ்வகையில் ரஹ்மான் ஸ்வர்ணலதாவின் ஹம்மிங்கை மிக அழகாக தனக்கு முதல் கிராமியப் படமென பெயர் வாங்கித் தந்த ``கிழக்குச் சீமையிலே”படத்தில் பயன்படுத்திக்கொண்டார். படம் நெடுக அம்மண்ணின் வாசனையோடும், அம்மக்களின் கண்ணீரோடும் ஸ்வர்ணலதாவின் குரலும் பயணிக்கும். பாசத்துக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் போராட்டத்துக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் விருமாயியின் வாழ்க்கைக் கனவை குரல் வழி கடத்தியவர் ஸ்வர்ணலதா. 
ரஹ்மானின் ஆஸ்தான பாடகியென மாறியிருந்த ஸ்வர்ணலதாவுக்கு ``கருத்தம்மா” படத்தின் ``போறாளே பொன்னுத்தாயி” பாடல் தேசிய விருதை வாங்கித் தந்தது. பாடலைப் பாடி முடித்த போது கண் கலங்கிப் போனாராம் ஸ்வர்ணலதா. சோகமும், வலியும் , கடந்து வந்த பாதையுமென அக்குரலில் அத்தனை ரணத்தையும் கொட்டித் தீர்த்திருப்பார். ``எவனோ ஒருவன்” பாடலிலும் இதே போன்றதொரு வலியை நமக்குக் கடத்தியிருப்பார். ``இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என்று ஸ்வர்ணலதா பாடி முடிக்கும் பொழுது மனதெல்லாம் பாரமாக அந்த இசைக் குயிலின் முகத்தை இனி ஒரு போதும் காண முடியாது என்ற வலி நெருடிக் கொண்டே இருக்கிறது. 
ஸ்வர்ணலதா
இளையராஜா, ரஹ்மான் மட்டுமல்லாது தேவாவுக்கும், எஸ்.ஏ. ராஜ்குமாருக்கும் ஸ்வர்ணலதா ஆஸ்தான பாடகிதான். யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், சிற்பி வரை எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.
ஸ்வர்ணலதா பாடிய பாடல்களைப் பற்றிய சரியான புள்ளி விவரங்களோ, நிலைத் தகவல்களோ இணையத்தில் இல்லை. கிடைத்தவரைக்குமா பொக்கிஷங்களெனப் பாடல்களை சேகரித்துக்கொண்டதுதான். 
ஆயிரமாயிரம் பாடல்களைப் பாடி நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் குரலுக்கு உருவமென ஒன்றை இனி காணப் போவதில்லை. ஸ்வர்ணலதாவின் குரல் வெறும் குரல் மட்டுமல்ல... அது,
 ``வலிகளின் அடையாளம்” 
``சோகங்களின் மூச்சுக் காற்று”
``ரசனைகளின் பிரதி” 
``உள்மன பிரதிபலிப்பு” 
``மோகத்தின் வடிவம்” 
``மகிழ்ச்சியின் எல்லை”. 
குரலின் மூலம் இத்தனை உணர்வுகளையும் எப்படிக் கடத்த முடிகிறது. இது சாத்தியப்படுமெனில் அதற்கு ``ஸ்வர்ணலதா’ என்று பெயர். 
இன்றோடு அவர் பிரிந்து 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆத்மாக்களின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், இக்குரலின் வழியிலும் அது தரும் உணர்வுகளின் வழியிலும் இன்னும் நூறாண்டு காலமும் அது கடந்தும் ``ஸ்வர்ணலதாவின்” பெயர் சொல்லும்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

Politics is a dangerous game: Rajinikanth

In an in-depth interview at his home in Poes Garden, Rajinikanth spoke candidly to India Today not only about his life and films but also his political vision for Tamil Nadu, and a range of burning public issues. Raj Chengappa  Amarnath K. Menon  New Delhi  November 30, 2018 ISSUE DATE: December 10, 2018 UPDATED: December 1, 2018 10:26 IST Photographs by Bandeep Singh Will he, won't he? Southern superstar Rajinikanth has exhibited Hamletian indecision about pursuing a political career ever since he announced he was joining the fray in December 2017. So far, he has not even announced the name of his political party, choosing instead to deploy his massive fan following under the umbrella of his Rajini Makkal Mandrams and using them to build a cadre of party workers across Tamil Nadu. Meanwhile, the ageing star (he is 67) continues to do what he knows best-make iconic films. His latest-2.0, releasin...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

மகிழ்ச்சியின் விலை என்ன?

சரவணன் சந்திரன் December 12 at 1:04 PM  ·  -மகிழ்ச்சி என்பது இங்கே விலை போகிற சமாச்சாரம் என்று யூகித்திருக்கிருக்கிறோமா? ஆழமாக விவாதிப்பதென்றால், மகிழ்ச்சி என்று இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிற உணர்வு கைதேர்ந்த கைகளால் உருக்கி உருவாக்கப்பட்ட சரக்கு. கவலைகளை மறந்து எந்நேரமும் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருப்பது. காடுகளில், மலைகளில், ஒரு கோப்பைத் தேநீரில் என சந்தை வழிநடத்தும் இடங்களிலான தேடல் அது. தொண்ணூறுகள் என்றில்லை. எண்பதுகளின் இறுதியில் இருந்தே இந்த மகிழ்ச்சி வணிகம் மெல்ல இந்தியாவிற்குள் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. வறுமையின் நிறம் சிவப்பு என சாக்கடைக்குள் அமிழ்ந்து கிடக்கிற ஆப்பிளை எடுத்து கழிவிரக்கத்தோடு உண்ணும் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் சந்தைச் சரக்கது. எதுவெல்லாம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்? என்னென்ன பரிந்துரைகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன? உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமெனில் மகிழ்ச்சியாய் மலர்ந்து சிரிப்பதற்கு ஒரு கோல்கெட் தேவையாக இருக்கிறது. மெல்ல பின்னோக்கி யோசித்தால், உலகமயமாக்கல் என்கிற கரங்கள் எ...

தலைப்பு இல்லை

பெண்கள் தினம் என்பதால் துப்பட்டா என்று தலைப்பு வைக்க நினைத்தேன்; தலைப்பிலாவது துப்பட்டா இருக்கட்டும் என்று chennai pasanga da நினைக்கக் கூடும். சுச்சி அக்கா என்று தலைப்பு வைக்க ஆசைப்பட்டேன்; twitter பசங்கடாவ் கோபித்துக் கொள்வார்கள். Screenshotஐ ஏதோ love letter போல பகிர்ந்து "பாத்தீங்களா பாத்தீங்களா" என்று feel செய்து கொள்கின்றனர். Twitterஇல் நான் activeஆக இல்லாததுக்கு காரணம் நான் செய்ய வேண்டிய shares updatesஐ அவர்களே screenshot செய்து followers கிடைக ்கச் செய்து விடுகின்றனர். எனவே இதற்கும் promotion தேவையில்லை என்பதால் தலைப்பு இல்லை என்பதையே தலைப்பாக வைத்துவிட்டேன். Suchi சகோதரியின் சேவையினால் scandals சுவாரசியமற்றதாகிவிட்டது. ஆக அவருக்குப் பெண்கள் தின வாழ்த்து தெரிவித்துவிடலாம். இருந்தாலும் நான் ஆண்களின் குளியல் videoகள், masturbating videos எதிர்பார்த்தேன். இந்த scandalsஐ ஆராய்ந்ததில் ஒரு சிறப்பான தகவலைக் கண்டறிந்தேன். அதாவது ஆண்களுக்கு mobile selfie camera handle செய்யத் தெரியாது போலும். அல்லது கை நடுக்கமாகவும் இருக்கலாம். ஆண்களின் scandals வராததற்கு இந்த இயலாமை ம...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...