முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடியில் ஈடுபட்டாரா ராம.செல்வராஜ் ?

தமிழ்நாட்டின் மிக மிகச் சிறந்த புலனாய்வு நிருபர் யாரென்றால் அது சன் டிவியின் ராம செல்வராஜ்தான். இவரைப்போல ஒரு அப்பாடக்கர் நிருபரை பார்க்கவே முடியாது.  தனக்குத் தெரியாத விஷயங்கள் உலகில் எதுவுமே இல்லை என்பது போலப் பேசுவார்.
IMG_5410
சென்னை நகரில் நடக்கும் அனைத்து பெரிய குற்றங்களிலும் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று இவர் கொடுக்கும் வர்ணனை இருக்கிறதே…. அப்பப்பா…  அப்படி ஒரு வர்ணனை.  சம்பவம் நடக்கையில் பக்கத்தில் இருந்து நேராகப் பார்த்தது போலவே வர்ணிப்பார். ஒரு சம்பவத்தை நேரடியாகப் பார்த்தது போலவே அப்படியே வர்ணிப்பது ஒரு செய்தியாளரின் திறமைதான்.  ஆனால் நடக்காத பொய்யை அப்படியே வர்ணிப்பது… ? அதற்குப் பெயர் அயோக்கியத்தனம்.  ராம.செல்வராஜ் இது போல பல குற்ற நிகழ்வுகளில் காவல்துறைக்கு ஆதரவாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் பல முறை செய்தி வழங்கியிருக்கிறார்.  வேளச்சேரி என்கவுன்டரில் 5 பேரை, காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒரு உதாரணம்.   ஆனால் செல்வராஜ் செய்ததிலேயே மிகப்பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் போராட்ட சமயத்தில்தான்.
ஏதோ ஒரு காரணத்துக்காக கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி, எப்படியாவது அணு உலையை திறந்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வந்த சமயம்.  கூடங்குளத்தில் அப்போது நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் முகிலன், தோழர் சதீஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு ஆகியோரை காவல்துறையினர் பயங்கரமான நக்சலைட்டுகள் என்று செய்தியை பரப்பினார்கள்.  இந்தச் செய்தியை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்கு மத்திய உளவுத்துறை பயன்படுத்திய ஊடகம் சன் டிவி மற்றும் தினமலர்.
காவல்துறையின் தூண்டுதல் காரணமாக, ஒரு செய்தியை மிகைப்படுத்திச் சொல்வதைக் கூட மன்னித்து விடலாம்.  ஆனால் இல்லாத ஒரு பொய்யை உண்மையாக சித்தரிப்பதை மன்னிக்கவே முடியாது.  அதற்குப் பெயர் அயோக்கியத்தனம்.
கூடங்குளம் விவகாரத்தில் நடந்தது பச்சைப் பொய்.  தோழர் முகிலன் மற்றும் தோழர் சதீஷ் ஆகியோர் இதற்கு முன்னால் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கைதானவர்கள் என்பது உண்மையே.  ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக, இவர்கள் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.  பொதுப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.  சமூகத்தை நேசிப்பவர்களான இவர்கள், கூடங்குளம் விவகாரத்தில் அம்மக்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்துவது இயல்பே.  அப்படி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வந்த போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, கூடங்குளம் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் என்ற செய்தி காவல்துறையால் பரப்பப்படுகிறது.
DSC_0940
தோழர் சதீஷ்
சதீஷ் கைது செய்யப்பட்டபோது அந்தச் செய்தியை சன்டிவிக்காக வெளியிட்ட ராம.செல்வராஜ் என்ன சொன்னார் தெரியுமா ?  “கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக காவல்துறையினர் சதீஷ் என்ற நக்லைட்டை கைது செய்துள்ளனர்.  கூடங்குளம் அணு உலையை தகர்ப்பதற்காக நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.  பெருவாரியான மக்கள் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து இந்தப் போராட்டங்களை நடத்துவது நக்சலைட்டுகள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.  நக்சலைட்டுகள் ஊடுருவல் குறித்து எங்களுக்கு நீண்ட நாட்களாகவே தகவல் இருந்து வந்தது. இந்நிலையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம்.  அந்தக் கண்காணிப்பின் விளைவாகவே சதீஷ், முகிலன் மற்றும் வன்னி அரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்” என்று செய்தி அளித்தார் ராம.செல்வராஜ்.
இந்தத் தகவலை ராம.செல்வராஜுக்கு வழங்கியது ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கக் கூடும்.  காவல்துறையினர் இது போல ஆயிரம் தகவல்களைத் தருவார்கள்.  அதில் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். ஒரு பத்திரிக்கையாளரின் பணி, காவல்துறையினர் அளிக்கும் தகவல்களில் உள்ள உண்மைத் தன்மையை விசாரித்த பிறகு அத்தகவலை மக்களுக்கு வழங்குவதே.  சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்பது எனக்குத் தெரியாது என்று ராம.செல்வராஜ் சொல்லுவாரேயானால், அவர் பத்திரிக்கையாளராக இருக்க லாயக்கே இல்லை.  ஏதாவது மளிகைக் கடையில் பொட்டலம் கட்டச் செல்லலாம்.  ஆனால், சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்று தெரிந்தும், அவ்வாறு விசாரிக்காமல் காவல்துறை சொன்னதை மட்டும் வெளியிட்டால் அது தெரிந்தே செய்த அயோக்கியத்தனமா இல்லையா ?
ராம.செல்வராஜ் இப்படி தெரிந்தே ஒரு அயோக்கியத்தனத்தை அந்தக் கைது விவகாரத்தில் செய்தார். சதீஷ் ஒரு பயங்கரமான நக்சலைட் என்று செய்தி வெளியிட்ட சன் டிவி, சதீஷின் புகைப்படத்தை காண்பித்தது. கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் என்ற செய்தி வெளியிட்ட ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியிடப்பட்ட நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டம் குறித்து, சவுக்கு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் போடப்பட்டிருந்த சதீஷின் புகைப்படம், சன் டிவி செய்தி வாசிக்கையில் பயன்படுத்தப்பட்டது.  அந்த ஆர்ப்பாட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் என்பது சவுக்கு தளத்திலேயே உள்ளது.  தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜுக்கு நன்கு தெரியும்.  சதீஷ் யார், அவர் தற்போது மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ளாரா என்பதை விசாரிக்க எத்தனை நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள் ?
ஆனால் அவ்வாறு விசாரிக்காமல், விசாரிக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபரை, நக்சலைட் என்று கூசாமல் பொய்யை உண்மை போலவே அரங்கேற்றிய ராம.செல்வராஜ் ஒரு பத்திரிக்கையாளரா ?
இந்த யோக்கிய சிகாமணி செய்த சட்டவிரோத காரியம் என்னவென்று பார்ப்போமா ?
சன் டிவியின் தலைமை செய்தியாசிரியர் ராஜா பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார் என்பதை சவுக்கு வாசர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவீர்கள்.  இந்த ராஜாவை, சனிக்கிழமையன்று காலை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் மற்றும் சன் டிவி நிலைய வித்வான் மகாலட்சுமி ஆகியோர் சிறையில் சந்தித்துள்ளனர்.  புழல் சிறையைப் பொறுத்தவரை, வாரநாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் கைதிகளை சந்திக்கலாம்.  சனிக்கிழமையைப் பொறுத்தவரை வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க முடியும்.  மகாலட்சுமியைப் பொறுத்தவரை அவர் சன் டிவியில் பகுதி நேர நிகழ்ச்சி வழங்கினாலும், பதிவு பெற்ற வழக்கறிஞர்.  நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்.   ஆனால் ராம.செல்வராஜ் சட்டம் படித்துள்ளார்.  வழக்கறிஞர் அல்ல.
சட்டம் படிப்பதற்கும், வழக்கறிஞராக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது.  ஒருவர் சட்டம் படித்து விட்டதாலேயே வழக்கறிஞராகிவிட முடியாது.  சட்டம் முடித்து, அந்தந்த மாநில வழக்கறிஞர் சங்கத்தில் (Bar Council) பதிவு செய்தால் மட்டுமே வழக்கறிஞராக முடியும்.  அப்படி வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு, நிரந்தரமான வேறு வேலைகளுக்கு போகக் கூடாது.  அப்படி வேலைக்குச் சென்றால், அந்த வேலையில் இருக்கும் வரை, தங்களின் வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக ரத்து செய்த பிறகுதான் வேலைக்குப் போக இயலும்.  எளிமையாக, சவுக்கு வாசகர்கள் கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொள்ளும் வகையில் சொல்லுவதென்றால், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த வாதப்புலி வண்டுமுருகன் சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.   இவர் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பணியில் இருக்க வேண்டும்.  இப்படி நியமிக்கப்பட்டதும் வண்டு முருகன், தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டும். நான் இது போன்ற ஒரு பதவியில் நியமிக்கப்பட்டுள்ளேன், அல்லது ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.  ஆகையால் எனது வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என்று கடிதம் அளித்தன் அடிப்படையில் அவரின் பதிவை பார் கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்யும்.  டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக் காலம் முடிவடைந்ததும், மீண்டும் பதிவை புதுப்பித்து வழக்கறிஞராக தொழில் செய்யலாம்.
ராம.செல்வராஜ் சன் டிவியின் க்ரைம் பீட் பார்க்கும் செய்தியாளர்.  முழு நேர ஊழியர்.   இவர் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.  அப்படியே செய்திருந்தாலும் முழு நேர ஊழியராக இருப்பதால், அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தநிலையில் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உள்ள சலுகையான சனிக்கிழமை கைதிகளை பார்க்கும் சலுகையை அனுபவித்துள்ளார்.  சனிக்கிழமை கைதிகளை பார்க்க விரும்பும் வழக்கறிஞர்கள் பார்க் கவுன்சில் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.  அப்படிக் காண்பித்த பிறகே, கைதிகளைப் பார்க்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  அப்படி இருக்கையில் புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் எப்படி சிறைக்குள் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார் ?
இதற்குக் காரணம், கல்லாப்பெட்டி கருப்பண்ணன் என்று கைதிகளால் அன்போடு அழைக்கப்படும் புழல் சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணன்.  சனிக்கிழமை அன்று ராம.செல்வராஜும், மகாலட்சுமியும் ராஜாவைப் பார்ப்பதற்கு முன் நேராக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் அறைக்குச் சென்றுள்ளனர்.  அவர் அறைக்குச் சென்று விவாதித்த பிறகு, கீழே இறங்கி ராஜாவைப் பார்த்துள்ளனர். இந்த கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன.  இது தவிரவும், சிறையில் சமைப்பதற்கான வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கள்ளத்தனமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.  ஆனால், இந்த கருப்பண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய “சரிபாதி கேட்கும் திரிபாதி” கண்டும் காணாமலும் இருக்கிறார்.  இவரும் சிலிண்டர் விற்பனையில் பங்குதாரரா என்பது குறித்து  நமக்கு தவல்கள் இல்லை. ராம.செல்வராஜ் சனிக்கிழமை புழல் சிறை சென்று ராஜாவை பார்த்த வீடியோ பதிவுகள் சிறையில் இன்னும் இருக்கும். திரிபாதி அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டு உடனே நடவடிக்கை எடுக்க முடியும்.  பார்ப்போம் செய்கிறாரா என்று.
ராம.செல்வராஜும், மற்றொரு வழக்கறிஞரான மகாலட்சுமியும், நாள் தவறாமல், ராஜாவை புழல் சிறையில் சந்தித்து வருகின்றனர். ராம.செல்வராஜ் குறித்து பார்த்து விட்டோம்.  யார் இந்த  மகாலட்சுமி ?
மகாலட்சுமி ராஜகோபால். இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். சன் டிவியின் நிலைய வித்வான் வழக்கறிஞர். அப்படியென்றால், சன் நியூஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் வரும் ஆலோசனை நேரம் நிகழ்ச்சியில் உள்ளுர் சட்டம் முதல் சர்வதேச சட்டம் வரை விலாவாரியாக அலசுவார். தற்போது அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, இவர் செய்தி வாசிப்பாளராக, சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசித்து வருகிறார்.
217009_216938881654467_1571989_n
வழக்கறிஞர் மகாலட்சுமி
தற்போது, சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள், மற்றும் முன்னாள் செய்தி ஆசிரியர் ராஜா மீதான புகாரில் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கக் கூடியவர்களிடம், "போலீசார் உங்களை ஏதாவது கேட்டால் எனக்குத் தெரியாது என்று சொல்லுங்கள். நாளைக்கு கோர்ட்டு, கேசு என்று அலைய வேண்டி வரும்... நான் வக்கீல், எத்தனையோ பேரை நானே குறுக்கு விசாரணை செய்திருக்கிறேன். சமயங்களில் குறுக்கு விசாரணை ஒரு வாரம் கூட தோடர்ந்து நடைபெறும்" என்று பேசி வருகிறார். ஒரு வழக்கின் புலன் விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், சாட்சிகளிடம் இது போலப் பேசுவது, இந்திய தண்டனைச் சட்டம் 202 மற்றும் 203 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கக் கூடிய குற்ம் என்பது சட்டம் படித்த மகாலட்சுமிக்கு எப்படித் தெரியாமல் போனது.
இது தவிரவும், இவ்வாறு சாட்சிகளைக் கலைக்கும் பணியில் ஈடுபடுவதால் இவரை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 109ன் கீழ், ராஜாவுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, இதே வழக்கில் குற்றவாளியாகவும் சேர்க்க முடியும்.
வழக்கறிஞர் என்று சனிக்கிழமை அன்று புழல் சிறையில் கைதியைப் பார்த்த குற்றத்துக்காக ராம.செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, இந்திய தண்டனைச் சட்டத்தில் வழி உண்டு.  இது தவிரவும், சன் டிவியின் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரை சனிக்கிழமை அன்று கைதியைப் பார்க்க அனுமதித்ததோடு,  அவரை சந்தித்து அரை மணி நேரம் விவாதித்து, ஒரு சட்டவிரோத நடவடிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்த குற்றத்துக்காக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உளவுத்துறை டிஜிபியான ராமானுஜத்தைத் தவிர ஒரு அதிகாரி கூட ஜெயலலிதாவுக்கு உண்மையாக செயல்படுவதாகத் தெரியவில்லை.  ராமானுஜம் அவர்கள்தான் முன்முயற்சி எடுத்து இந்தத் தகவல்களை ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  ராஜாவின் மீதான வழக்கை உடைத்து, ராஜாவை மீண்டும் சன்டிவியின் செய்தி ஆசிரியராக நியமிப்பதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  சாட்சிகளும் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.  ராமானுஜம் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...