முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடியில் ஈடுபட்டாரா ராம.செல்வராஜ் ?

தமிழ்நாட்டின் மிக மிகச் சிறந்த புலனாய்வு நிருபர் யாரென்றால் அது சன் டிவியின் ராம செல்வராஜ்தான். இவரைப்போல ஒரு அப்பாடக்கர் நிருபரை பார்க்கவே முடியாது.  தனக்குத் தெரியாத விஷயங்கள் உலகில் எதுவுமே இல்லை என்பது போலப் பேசுவார்.
IMG_5410
சென்னை நகரில் நடக்கும் அனைத்து பெரிய குற்றங்களிலும் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று இவர் கொடுக்கும் வர்ணனை இருக்கிறதே…. அப்பப்பா…  அப்படி ஒரு வர்ணனை.  சம்பவம் நடக்கையில் பக்கத்தில் இருந்து நேராகப் பார்த்தது போலவே வர்ணிப்பார். ஒரு சம்பவத்தை நேரடியாகப் பார்த்தது போலவே அப்படியே வர்ணிப்பது ஒரு செய்தியாளரின் திறமைதான்.  ஆனால் நடக்காத பொய்யை அப்படியே வர்ணிப்பது… ? அதற்குப் பெயர் அயோக்கியத்தனம்.  ராம.செல்வராஜ் இது போல பல குற்ற நிகழ்வுகளில் காவல்துறைக்கு ஆதரவாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் பல முறை செய்தி வழங்கியிருக்கிறார்.  வேளச்சேரி என்கவுன்டரில் 5 பேரை, காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒரு உதாரணம்.   ஆனால் செல்வராஜ் செய்ததிலேயே மிகப்பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் போராட்ட சமயத்தில்தான்.
ஏதோ ஒரு காரணத்துக்காக கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி, எப்படியாவது அணு உலையை திறந்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வந்த சமயம்.  கூடங்குளத்தில் அப்போது நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் முகிலன், தோழர் சதீஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு ஆகியோரை காவல்துறையினர் பயங்கரமான நக்சலைட்டுகள் என்று செய்தியை பரப்பினார்கள்.  இந்தச் செய்தியை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்கு மத்திய உளவுத்துறை பயன்படுத்திய ஊடகம் சன் டிவி மற்றும் தினமலர்.
காவல்துறையின் தூண்டுதல் காரணமாக, ஒரு செய்தியை மிகைப்படுத்திச் சொல்வதைக் கூட மன்னித்து விடலாம்.  ஆனால் இல்லாத ஒரு பொய்யை உண்மையாக சித்தரிப்பதை மன்னிக்கவே முடியாது.  அதற்குப் பெயர் அயோக்கியத்தனம்.
கூடங்குளம் விவகாரத்தில் நடந்தது பச்சைப் பொய்.  தோழர் முகிலன் மற்றும் தோழர் சதீஷ் ஆகியோர் இதற்கு முன்னால் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கைதானவர்கள் என்பது உண்மையே.  ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக, இவர்கள் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.  பொதுப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.  சமூகத்தை நேசிப்பவர்களான இவர்கள், கூடங்குளம் விவகாரத்தில் அம்மக்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்துவது இயல்பே.  அப்படி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வந்த போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, கூடங்குளம் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் என்ற செய்தி காவல்துறையால் பரப்பப்படுகிறது.
DSC_0940
தோழர் சதீஷ்
சதீஷ் கைது செய்யப்பட்டபோது அந்தச் செய்தியை சன்டிவிக்காக வெளியிட்ட ராம.செல்வராஜ் என்ன சொன்னார் தெரியுமா ?  “கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக காவல்துறையினர் சதீஷ் என்ற நக்லைட்டை கைது செய்துள்ளனர்.  கூடங்குளம் அணு உலையை தகர்ப்பதற்காக நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.  பெருவாரியான மக்கள் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து இந்தப் போராட்டங்களை நடத்துவது நக்சலைட்டுகள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.  நக்சலைட்டுகள் ஊடுருவல் குறித்து எங்களுக்கு நீண்ட நாட்களாகவே தகவல் இருந்து வந்தது. இந்நிலையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம்.  அந்தக் கண்காணிப்பின் விளைவாகவே சதீஷ், முகிலன் மற்றும் வன்னி அரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்” என்று செய்தி அளித்தார் ராம.செல்வராஜ்.
இந்தத் தகவலை ராம.செல்வராஜுக்கு வழங்கியது ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கக் கூடும்.  காவல்துறையினர் இது போல ஆயிரம் தகவல்களைத் தருவார்கள்.  அதில் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். ஒரு பத்திரிக்கையாளரின் பணி, காவல்துறையினர் அளிக்கும் தகவல்களில் உள்ள உண்மைத் தன்மையை விசாரித்த பிறகு அத்தகவலை மக்களுக்கு வழங்குவதே.  சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்பது எனக்குத் தெரியாது என்று ராம.செல்வராஜ் சொல்லுவாரேயானால், அவர் பத்திரிக்கையாளராக இருக்க லாயக்கே இல்லை.  ஏதாவது மளிகைக் கடையில் பொட்டலம் கட்டச் செல்லலாம்.  ஆனால், சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்று தெரிந்தும், அவ்வாறு விசாரிக்காமல் காவல்துறை சொன்னதை மட்டும் வெளியிட்டால் அது தெரிந்தே செய்த அயோக்கியத்தனமா இல்லையா ?
ராம.செல்வராஜ் இப்படி தெரிந்தே ஒரு அயோக்கியத்தனத்தை அந்தக் கைது விவகாரத்தில் செய்தார். சதீஷ் ஒரு பயங்கரமான நக்சலைட் என்று செய்தி வெளியிட்ட சன் டிவி, சதீஷின் புகைப்படத்தை காண்பித்தது. கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் என்ற செய்தி வெளியிட்ட ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியிடப்பட்ட நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டம் குறித்து, சவுக்கு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் போடப்பட்டிருந்த சதீஷின் புகைப்படம், சன் டிவி செய்தி வாசிக்கையில் பயன்படுத்தப்பட்டது.  அந்த ஆர்ப்பாட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் என்பது சவுக்கு தளத்திலேயே உள்ளது.  தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜுக்கு நன்கு தெரியும்.  சதீஷ் யார், அவர் தற்போது மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ளாரா என்பதை விசாரிக்க எத்தனை நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள் ?
ஆனால் அவ்வாறு விசாரிக்காமல், விசாரிக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபரை, நக்சலைட் என்று கூசாமல் பொய்யை உண்மை போலவே அரங்கேற்றிய ராம.செல்வராஜ் ஒரு பத்திரிக்கையாளரா ?
இந்த யோக்கிய சிகாமணி செய்த சட்டவிரோத காரியம் என்னவென்று பார்ப்போமா ?
சன் டிவியின் தலைமை செய்தியாசிரியர் ராஜா பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார் என்பதை சவுக்கு வாசர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவீர்கள்.  இந்த ராஜாவை, சனிக்கிழமையன்று காலை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் மற்றும் சன் டிவி நிலைய வித்வான் மகாலட்சுமி ஆகியோர் சிறையில் சந்தித்துள்ளனர்.  புழல் சிறையைப் பொறுத்தவரை, வாரநாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் கைதிகளை சந்திக்கலாம்.  சனிக்கிழமையைப் பொறுத்தவரை வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க முடியும்.  மகாலட்சுமியைப் பொறுத்தவரை அவர் சன் டிவியில் பகுதி நேர நிகழ்ச்சி வழங்கினாலும், பதிவு பெற்ற வழக்கறிஞர்.  நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்.   ஆனால் ராம.செல்வராஜ் சட்டம் படித்துள்ளார்.  வழக்கறிஞர் அல்ல.
சட்டம் படிப்பதற்கும், வழக்கறிஞராக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது.  ஒருவர் சட்டம் படித்து விட்டதாலேயே வழக்கறிஞராகிவிட முடியாது.  சட்டம் முடித்து, அந்தந்த மாநில வழக்கறிஞர் சங்கத்தில் (Bar Council) பதிவு செய்தால் மட்டுமே வழக்கறிஞராக முடியும்.  அப்படி வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு, நிரந்தரமான வேறு வேலைகளுக்கு போகக் கூடாது.  அப்படி வேலைக்குச் சென்றால், அந்த வேலையில் இருக்கும் வரை, தங்களின் வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக ரத்து செய்த பிறகுதான் வேலைக்குப் போக இயலும்.  எளிமையாக, சவுக்கு வாசகர்கள் கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொள்ளும் வகையில் சொல்லுவதென்றால், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த வாதப்புலி வண்டுமுருகன் சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.   இவர் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பணியில் இருக்க வேண்டும்.  இப்படி நியமிக்கப்பட்டதும் வண்டு முருகன், தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டும். நான் இது போன்ற ஒரு பதவியில் நியமிக்கப்பட்டுள்ளேன், அல்லது ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.  ஆகையால் எனது வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என்று கடிதம் அளித்தன் அடிப்படையில் அவரின் பதிவை பார் கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்யும்.  டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக் காலம் முடிவடைந்ததும், மீண்டும் பதிவை புதுப்பித்து வழக்கறிஞராக தொழில் செய்யலாம்.
ராம.செல்வராஜ் சன் டிவியின் க்ரைம் பீட் பார்க்கும் செய்தியாளர்.  முழு நேர ஊழியர்.   இவர் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.  அப்படியே செய்திருந்தாலும் முழு நேர ஊழியராக இருப்பதால், அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தநிலையில் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உள்ள சலுகையான சனிக்கிழமை கைதிகளை பார்க்கும் சலுகையை அனுபவித்துள்ளார்.  சனிக்கிழமை கைதிகளை பார்க்க விரும்பும் வழக்கறிஞர்கள் பார்க் கவுன்சில் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.  அப்படிக் காண்பித்த பிறகே, கைதிகளைப் பார்க்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  அப்படி இருக்கையில் புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் எப்படி சிறைக்குள் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார் ?
இதற்குக் காரணம், கல்லாப்பெட்டி கருப்பண்ணன் என்று கைதிகளால் அன்போடு அழைக்கப்படும் புழல் சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணன்.  சனிக்கிழமை அன்று ராம.செல்வராஜும், மகாலட்சுமியும் ராஜாவைப் பார்ப்பதற்கு முன் நேராக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் அறைக்குச் சென்றுள்ளனர்.  அவர் அறைக்குச் சென்று விவாதித்த பிறகு, கீழே இறங்கி ராஜாவைப் பார்த்துள்ளனர். இந்த கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன.  இது தவிரவும், சிறையில் சமைப்பதற்கான வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கள்ளத்தனமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.  ஆனால், இந்த கருப்பண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய “சரிபாதி கேட்கும் திரிபாதி” கண்டும் காணாமலும் இருக்கிறார்.  இவரும் சிலிண்டர் விற்பனையில் பங்குதாரரா என்பது குறித்து  நமக்கு தவல்கள் இல்லை. ராம.செல்வராஜ் சனிக்கிழமை புழல் சிறை சென்று ராஜாவை பார்த்த வீடியோ பதிவுகள் சிறையில் இன்னும் இருக்கும். திரிபாதி அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டு உடனே நடவடிக்கை எடுக்க முடியும்.  பார்ப்போம் செய்கிறாரா என்று.
ராம.செல்வராஜும், மற்றொரு வழக்கறிஞரான மகாலட்சுமியும், நாள் தவறாமல், ராஜாவை புழல் சிறையில் சந்தித்து வருகின்றனர். ராம.செல்வராஜ் குறித்து பார்த்து விட்டோம்.  யார் இந்த  மகாலட்சுமி ?
மகாலட்சுமி ராஜகோபால். இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். சன் டிவியின் நிலைய வித்வான் வழக்கறிஞர். அப்படியென்றால், சன் நியூஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் வரும் ஆலோசனை நேரம் நிகழ்ச்சியில் உள்ளுர் சட்டம் முதல் சர்வதேச சட்டம் வரை விலாவாரியாக அலசுவார். தற்போது அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, இவர் செய்தி வாசிப்பாளராக, சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசித்து வருகிறார்.
217009_216938881654467_1571989_n
வழக்கறிஞர் மகாலட்சுமி
தற்போது, சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள், மற்றும் முன்னாள் செய்தி ஆசிரியர் ராஜா மீதான புகாரில் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கக் கூடியவர்களிடம், "போலீசார் உங்களை ஏதாவது கேட்டால் எனக்குத் தெரியாது என்று சொல்லுங்கள். நாளைக்கு கோர்ட்டு, கேசு என்று அலைய வேண்டி வரும்... நான் வக்கீல், எத்தனையோ பேரை நானே குறுக்கு விசாரணை செய்திருக்கிறேன். சமயங்களில் குறுக்கு விசாரணை ஒரு வாரம் கூட தோடர்ந்து நடைபெறும்" என்று பேசி வருகிறார். ஒரு வழக்கின் புலன் விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், சாட்சிகளிடம் இது போலப் பேசுவது, இந்திய தண்டனைச் சட்டம் 202 மற்றும் 203 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கக் கூடிய குற்ம் என்பது சட்டம் படித்த மகாலட்சுமிக்கு எப்படித் தெரியாமல் போனது.
இது தவிரவும், இவ்வாறு சாட்சிகளைக் கலைக்கும் பணியில் ஈடுபடுவதால் இவரை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 109ன் கீழ், ராஜாவுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, இதே வழக்கில் குற்றவாளியாகவும் சேர்க்க முடியும்.
வழக்கறிஞர் என்று சனிக்கிழமை அன்று புழல் சிறையில் கைதியைப் பார்த்த குற்றத்துக்காக ராம.செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, இந்திய தண்டனைச் சட்டத்தில் வழி உண்டு.  இது தவிரவும், சன் டிவியின் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரை சனிக்கிழமை அன்று கைதியைப் பார்க்க அனுமதித்ததோடு,  அவரை சந்தித்து அரை மணி நேரம் விவாதித்து, ஒரு சட்டவிரோத நடவடிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்த குற்றத்துக்காக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உளவுத்துறை டிஜிபியான ராமானுஜத்தைத் தவிர ஒரு அதிகாரி கூட ஜெயலலிதாவுக்கு உண்மையாக செயல்படுவதாகத் தெரியவில்லை.  ராமானுஜம் அவர்கள்தான் முன்முயற்சி எடுத்து இந்தத் தகவல்களை ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  ராஜாவின் மீதான வழக்கை உடைத்து, ராஜாவை மீண்டும் சன்டிவியின் செய்தி ஆசிரியராக நியமிப்பதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  சாட்சிகளும் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.  ராமானுஜம் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016