முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சில நிதர்சனங்கள்:நான் ஏன் இஞ்சினியரிங் எடுத்தேன்?

நான் ஒரு இன்சினிய‌ரிங்முடித்த‌மாணவன்.  தேர்வில் பாஸ் ஆவதற்காக உப தலைப்பிட்டு , பாயின்ட் பை பாயின்டாக எழுதி அதற்கு முன் ஒரு புல்லட் குறியீடு இட்டு, சம்மந்தமே இல்லாத கருத்துக்களை அடிக்கோடிட்டு விடைகள் சரியானவை என்று திருத்துபவர்களை நம்பவைத்துப் பழக்கப்பட்டவன் என்பதால் இந்தக் கட்டுரையும் அதே வடிவத்தில் வந்துவிட்டது தயவுகூர்ந்து பொருத்தருளவும். இஞ்சினியரிங்க் படிப்பதற்கான காரணங்கள் : இஞ்சினியரிங்க் படிப்பதற்கு பல்வேறு காரனங்கள் (காரணங்களுக்கு ரெண்டு சுழி ந வா இல்லை மூன்று சுழி ந வா எனத் தெரியாத காரனத்தால் ஒரு இடத்தில் ரெண்டு சுழியும் இன்னொரு இடத்தில்  மூன்று சுழியும் பயன்படுத்தப்படுகிறது.) உள்ளன அவை யாவை எனில்  "இஞ்சினியரிங்க் படிக்கவைங்க பய நல்லா வருவான்" ஒன்னறை  லட்சம் இஞ்சினியரிங்க்  அப்ளிகேசன் விற்க  இது போல யாரோ ஒரு புண்ணியவான் ஏதோ            ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதைப் போல பொறுப்பில்லாமல் அப்பாவின் காதில் போட்டுவிடுவதுதான் காரணம்.  "எங்க நாத்தனார் பையன் இஞ்சினியரிங்க் த...

முடிவின் ஆரம்பம்.

18 செப்டம்பர் 1949 அன்று சென்னை பவழக்காரத் தெருவில் நடந்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைப்புக் குழுக் கூட்டத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுத்தது. “நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்பவும், உடனடியாக வேலைகளைத் துவக்கி நடத்தவும் நாம் “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுவதெனவும் இக்கமிட்டி தீர்மானிக்கிறது. நீண்ட சதுர வடிவத்தில் மேல் சரிபாதி கறுப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி சிவப்பு நிறமமாகவும் அமைந்திருக்க வேண்டும். கறுப்பு : அரசியல் பொருளாதார சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும். சிவப்பு : அம்மூன்று துறைகளிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும்.  இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக் கொண்டு வரவேண்டும். அழித்துக் கொண்டு வருகிறது.  இருண்ட வானின் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளி போல் என்ற கருத்துடன், கறுப்பு மேலும், சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது.  இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காலிகக் கொடியா...

அன்பான கனிமொழி… ….

கடந்த காலங்களில் சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக நீங்கள் புழல் சிறைக்கு சென்று நிகழ்ச்சி நடத்திய போதெல்லாம், அந்தக் கைதியோடு கைதியாக இருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள்.  காலம் எப்படியெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது !!!   சிறை என்பது மனிதர்களை பக்குவப் படுத்தவும் செய்யும், அழிக்கவும் செய்யும்.  ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த போதுதான் தன் மகளுக்கு கடிதங்கள் வாயிலாக, உலக சரித்திரத்தை எழுதினார்.   சவுக்கு அந்தப் புத்தகத்தை புழல் சிறையில்தான் படிக்க நேரிட்டது.   அதே நேரத்தில் சிறை ஒரு மனிதனுக்கு தன்னுடைய நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண உதவும். சிறைக்குக் சென்றவுடன் நண்பர்கள் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் நடந்து கொள்ளும் தன்மையே வித்தியாசமாக இருக்கும்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  புதிய நண்பர்கள் காலா காலத்துக்கும் நண்பர்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் விஷயத்தில், உங்கள் தந்தையின் கட்டாயத்திற்காக வேறு வழியின்றி உங்களை சிறையில் வந்து சிலர் பார்த்திருக்கக் கூடும்.  ஆனால் உண்மையில் ...

தமிழில் எழுதுவது எப்படி

ஃபேஸ்புக்குக்கு வரும் பல புதிய நண்பர்கள் தமிழில் எழுதுவது எப்படி என்பது தெரியாததால் தங்கிலீஸ்லயே பின்னூட்டங்களை எழுதுகிறார்கள். அவர்கள் முக்கியமான கருத்துகளை எழுதியிருந்தாலும் அதை படிக்க முடியாமல் கடந்து விட நேர்கிறது.  அதைத் தவிர்க்க... h ttp://software.nhm.in/products/writer இந்த மென்பொருளை பதிவிரக்கம் செய்து கொண்டு உங்கள் கணினியில் பதிவேற்றிக் கொள்ளுங்கள் (download and install). அதன் பிறகு start-ல போய் திறந்தீங்கன்னா வலது பக்கம் கீழே ஒரு மணி தெரிய வரும். இப்போ எங்க உங்களுக்கு தட்டச்சு (type) செய்யணுமோ அங்க mouse-யை click பண்ணுங்க. அப்புறம் alt 2 அடிங்க. அந்த மணி மஞ்சளா மாறும். இப்போ `ammaa’ அடிச்சா `அம்மா’ வரும். எஸ்.எம்.எஸ். அனுப்புற மாதிரி தமிழ்லயே எழுதலாம். ரொம்ப எளிமையானது. முயற்சி செஞ்சுப்பாருங்க.. தேட வேண்டிய எழுத்துருக்கள் : w-ந், wa- ந, n-ன், n-ன, N-ண், f-ஃப், S-ஸ், sh-ஷ், u-உ, uu-ஊ,

டாஸ்மாக் தமிழ்

உள்ளே நுழையும்போதே தலையை சொறிந்து கொண்டே வந்தான் டாஸ்மாக் தமிழ்.   வந்ததும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தான். “என்னப்பா அமைதியா இருக்க… ? எதுவும் பிரச்சினையா… ? “ என்று தமிழைப் பார்த்து வாஞ்சையோடு கேட்டார் கணேசன். “எனக்கு எதுவும் பிரச்சினை இல்லண்ணே…  ராஜ்யசபா தேர்தல்ல என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நிலைமை மாறிக்கிட்டே இருக்கு. ஆதரவு தருவாங்கன்னு நெனைச்ச பாட்டாளி மக்கள் கட்சி முறுக்கிக்கிட்டாங்க.“ “அவங்க ஏன் மச்சான் முறுக்கிக்கிட்டாங்க…  ? “ என்று உரையாடலுக்குள் நுழைந்தான் பீமராஜன். “செயற்குழு தீர்மானம்னு சொல்றாங்க. “ “அவங்க செயற்குழுவுல, டாக்டர் ராமதாஸுக்கு நெஞ்சு வலின்னுல தீர்மானம் போட்டாங்க….“ “ அது மட்டுமா போட்டாங்க…  “தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ராமதாஸ் அய்யா ஏற்கனவே இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழலில் 110 டிகிரி வெப்பநிலை நிலவிய திருச்சி மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு பிரிவில் அவரை தமிழக அரசு அடைத்துக் கொடுமைப் படுத்தியது....