முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முடிவின் ஆரம்பம்.

18 செப்டம்பர் 1949 அன்று சென்னை பவழக்காரத் தெருவில் நடந்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைப்புக் குழுக் கூட்டத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுத்தது. “நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்பவும், உடனடியாக வேலைகளைத் துவக்கி நடத்தவும் நாம் “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுவதெனவும் இக்கமிட்டி தீர்மானிக்கிறது.
DMK_flag
நீண்ட சதுர வடிவத்தில் மேல் சரிபாதி கறுப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி சிவப்பு நிறமமாகவும் அமைந்திருக்க வேண்டும்.
கறுப்பு : அரசியல் பொருளாதார சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.
சிவப்பு : அம்மூன்று துறைகளிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும்.  இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக் கொண்டு வரவேண்டும். அழித்துக் கொண்டு வருகிறது.  இருண்ட வானின் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளி போல் என்ற கருத்துடன், கறுப்பு மேலும், சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது.  இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காலிகக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.”
இந்தத் தீர்மானத்தோடுதான் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் நடந்த அந்தப் பொதுக்கூட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாது நனைந்தபடி கேட்ட பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணா
“திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும்.  படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான்.  திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை, திராவிடத்தை செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள், திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத் தான் குறிக்கும்.  இரு பூங்காக்களும் தேவை.  ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை, அவசியமும் இல்லை.   எது புஷ்பித்தாலும் மாலையாகப்போவது திராவிடத்துக்குத்தான் என்ற எண்ணம் வர வேண்டும்” என்று பேசினார்.
மொழி என்பது தமிழர்களின் ரத்தத்தோடு கலந்த ஒரு விவகாரமாக இருந்த காலம் அது. 1948ல் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா போராட்டத்தின் தளபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
திமுக தொடங்கப்பட்ட பிறகு 1950 நவம்பர் 8 அன்று அதே செயின்ட் மேரி மண்டபத்தில் சத்தியேந்திரன் தலைமையில் திராவிட மாணவ முன்னேற்றக் கழக மாநாடு நடைபெறுகிறது.  அம்மாநாட்டில் தனித்திராவிட நாடு உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத் தொடர்ந்து 1955 நவம்பரில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது மாநாடு சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து தமிழகமெங்கும் மாணவர் இயக்கங்களை திமுக கட்டமைத்தது.
இந்தி எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, 25 ஜனவரி 1965 தினத்தை மாணவர்கள் துக்க தினமாக அறிவித்தனர்.   மெரினா கடற்கரையில் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர் 21 அடி உயர இந்தி அரக்கி கொடும்பாவி கொளுத்தப்பட்டது.   சில மாதங்களுக்கு முன் திருச்சியில் நடந்த போராட்டத்தில்  நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே காங்கிரஸ்காரர்கள் மதுரையிலும் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற மாணவர் உயிரிழந்தார்.  தமிழகமெங்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.  அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது.  அந்த ஆண்டு முழுவதுமே தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் நடந்தவண்ணம் இருந்தது.  இந்த போராட்டத்தின் வீச்சை அப்போதைய காங்கிரஸ் அரசு சரிவர மதிப்பிடத் தவறியது.
1967 தேர்தலுக்கு சற்று முன்னதாக நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா இவ்வாறு பேசினார். “ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும், அமைச்சரவை ஏற்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் இறுதி முடிவு என்று யாரும் கருதி விடக் கூடாது.  அதுதான் லட்சியம் என்றால் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியவைகளை கொடுத்து அழைக்க வேண்டியவர்களை அழைத்து பதவியைப் பெற முடியாது என்பது முடியாத காரியமல்ல…!! காமராசரிடம் சென்று நீங்களே இருங்கள் நாங்கள் கீழே இருந்து கொள்ளுகிறோம் என்று சொன்னால் அது முடியாத காரியமா ?  இந்த முறை சரியானதல்ல என்று கருதுகிறேன்.
தமிழ் மொழியைக் காத்தாக வேண்டும்.  தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்தாக வேண்டும்.  இதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது தொடர்ந்து உத்வேகத்துடன் பாடுபட்டால்தான் உலக வரலாற்றில் நாங்கள் தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து கூறக்கூடிய நிலை ஏற்படும்.  எனவே, புதிய வரலாற்றில் சிறப்பான அத்தியாயத்தை தோற்றுவிக்க வேண்டும்.  அந்த லட்சியத்தை அடைய நான் மேற்கொள்ளும் பணியில் நீங்கள் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறேன்.” இதுதான் அறிஞர் அண்ணா திமுக ஆட்சிப்பொறுப்பேற்கும் முன் விடுத்த அழைப்பு.  தமிழ் மொழியைக் காத்தாக வேண்டும், தமிழ் இனத்தை காக்க வேண்டும். இதுதான் அறிஞர் அண்ணாவின் லட்சிய மூச்சாக இருந்தது.  எந்தத் தமிழினத்தைக் காக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணா உறுதிபூண்டு தேர்தல் களத்தில் குதித்தாரோ, அதே தமிழினத்தின் அழிவுக்கு வழிகோலிய ஒரு இயக்கமாக திமுக மாறிப்போனது காலத்தின் விசித்திர கோலமே.
எத்தனையோ ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த திமுக இன்று மீளாத சரிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.  தேசியம், தேசியம் என்று பேசி எந்தக் காங்கிரஸ் கட்சி தமிழினத்தை மீளாத்துயரில் ஆழ்த்தியதோ, அந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து தமிழினத்தையும், தமிழகத்தையும் மீட்டெடுக்கப்போகிறோம் என்று சூளுரைத்து பதவியேற்றது திமுக.
m-karunanidhi-sonia-gandhi-rahul-gandhi-dayanidhi-maran-2009-5-19-11-53-40
ஆனால் அதே காங்கிரஸ் கட்சியிடம் தன் குடும்பத்துக்காக ஒரு இனத்தையே பலி கொடுத்த வரலாற்றையும் திமுகவே அரங்கேற்றியிருக்கிறது. 2004ல் காங்கிரஸ் கட்சியோடு ஏற்பட்ட உறவு 2ஜி ஊழல் பணத்தால் வலுவாக கட்டப்பட்டது.  தன்னுடைய கட்சியின் ஆதரவினால் மட்டுமே நடந்த முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடமிருந்து, எப்படிப்பட்ட பசையான துறைகளைப் பெற முடியுமோ, அப்படிப்பட்ட பசையான துறைகளை மிரட்டிப் பெற்றார் கருணாநிதி.  அப்படிப் பெற்ற துறைகளில் மூலமாக ஆயிரக்கணக்கான கோடிகளை தன் குடும்பத்தினரும், அமைச்சர் பெருமக்களும் கொள்ளையடிப்பதை அகமகிழ்ந்து ரசித்தார் கருணாநிதி.
தன்னுடைய பல ஆண்டு கால பொதுவாழ்வில் காணக்கிடைக்காத பணம் அவர் கண்ணை மறைத்தது. அந்த நேரத்தில் வளர்ந்து தலையெடுத்த குடும்பம், அவர் சிந்தையை முடக்கியது. தன் கணவனைக் கொன்றதற்காக ஒரு இனத்தையே அழிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கிய பெண்ணுக்கு, துணை நின்று, “ஒரு அடிமை இறைஞ்சுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்” என்றார். தன்னை நிரந்தர அடிமையாக்க, காங்கிரஸ் கட்சி 2ஜி என்ற வலையை விரித்து வைத்திருப்பதை உணரத் தவறிய அவர், வகை தொகை தெரியாமல் அந்த வலையில் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையும் சிக்க வைத்தார்.  தானாகவே வந்து வலையில் சிக்கிய திமுகவை தத்தளிக்க வைத்தது காங்கிரஸ்.  நீரா ராடியா உரையாடல்கள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதாரங்களை அவ்வப்போது ஊடகங்களில் வெளியிட்டு, கனிமொழிக்கு நெருக்கடி என்பதை உணர்த்தியே, ஈழப்போரில் சிங்களன் கையை வலுப்படுத்த, கருணாநிதியே கேடயமாக பயன்படுத்தியது காங்கிரஸ்.  தன் மீதும், திமுக மீதும் எரியப்பட்ட அத்தனை  அம்புகளையும், தாங்கிக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் முட்டுக் கொடுத்தார் கருணாநிதி.
தனது உயிருக்குயிரான ஆசை மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும் வந்து பேசிய காங்கிரஸ் தலைவர்களிடமெல்லாம் மன்றாடினார் கருணாநிதி.  ஆனால், நம்ப வைத்து கழுத்தறுத்தது காங்கிரஸ் கட்சி.  பெற்ற மகள் திஹார் சிறையில் உழலுவதைப் பார்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் புலம்பினார் கருணாநிதி. ஆனால் அவர் புலம்பலைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தனர் காங்கிரஸ் கட்சியினர்.  வசமாகச் சிக்கினான் நமக்கு ஒரு அடிமை என்று அகமகிழ்ந்தனர்.   புதைமணலில் சிக்கியவன் எது கிடைத்தாலும் கரையேறத் துடிப்பது போல, பிடிப்புக்காக அலைந்து காங்கிரஸ் கட்சி வீசிய கிளையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கருணாநிதி.  தனது சுயமரியாதைக்கும், கட்சியின் மரியாதைக்கும் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது வந்த சிக்கலான நேரத்தில் ஒரு கணம் தடுமாறி கூட்டணியை விட்டு விலகுகிறேன் என்று வீராவேசமாக அறிவித்தார்.  காங்கிரஸ் கட்சி 2ஜி வழக்கை சுட்டிக்காட்டி, கையை முறுக்கியதும், எந்த 63 தர முடியாது என்று வீரவசனம் பேசினாரோ அதே 63 இடங்களை வழங்கியதோடல்லாமல், 63 நாயன்மார்கள் என்று வாழ்த்துப்பா பாடினார்.
2ஜி வழக்கில் உதவி செய்கிறோம், உதவி செய்கிறோம் என்று கடைசி வரை நம்ப வைத்துக் கழுத்தறுத்த காங்கிரஸ் கட்சிக்கு சரியான பாடம் புகட்டுவதற்காக காத்திருந்த கருணாநிதிக்கு வசதியாகக் கிடைத்தது, தமிழ் மாணவர்களின் போராட்டம்.  எந்த திமுகவும் கருணாநிதியும், ஈழப்போராட்டத்தை அழித்தார்களோ, அதே கருணாநிதி மாணவப் போராட்டத்தைக் காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற நேர்ந்தது.  ஐக்கிய நாடுகள் அவையில் எடுத்து வரப்பட்ட தீர்மானத்தைக் காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கினார் கருணாநிதி. எந்த ஈழத்தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தாரோ, அதே ஈழத் தமிழகர்கள் பேரால் முண்டா தட்டினார் கருணாநிதி. டெசோ அமைப்பால் ஈழத்தை பெற்றே தீருவேன் என்று சூளுரைத்தார்.
வாபஸ் வாங்குவதென்ற முடிவெடுத்ததும், செய்தியாளர்களிடம் ஈழத்தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தார்.
செய்தியாளர் :- நீங்கள் கோரும் மாற்றம் செய்யப்படவில்லை என்றால், மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில்லை என்று ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவு உடனடியாக எடுக்கப்படுமா?
கலைஞர் :- எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம் - நீடிக்காது என்பது உறுதி.
செய்தியாளர் :- இந்தியா திருத்தங்களைக்கூறினால், அதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறீர்களா?
கலைஞர் :- இந்தியா வலியுறுத்த தவறினால், அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாததை விட அது பெரிய தவறு. அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ, அதைக்கூட இந்தியா சொல்லத்தவறினால், அது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெருத்த அநீதி என்று நாங்கள் கருதுகின்ற காரணத்தினால்தான், இந்தக்கூட்டணியிலே நீடிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை என்று நான் ஏற்கனவே சொல்லியிருக் கிறேன். அதையே இப்போதும் சொல்கிறேன்.”
மத்திய அரசிலிருந்து, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் நேரில் வந்து முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்ட போதும், முடியவே முடியாது…. மகளைக் காப்பாற்றாத உங்களுக்கு எதற்கு ஆதரவு தரவேண்டும் என்று உள்ளே பேசி விட்டு, வெளியே நிருபர்களிடம் “எனவே, ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குப்பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக்கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.“ என்று பசப்பு நாடகமாடினார்.
karuna_kanimozhi_delhi
“இதற்குப் பிறகும், இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை“ எப்படிப்பட்ட கடுமையான வார்த்தைகள்…. ?
இந்த வார்த்தைகளைக் கேட்டு, உடன்பிறப்புகள் அகமகிழ்ந்தனர், ஆர்ப்பரித்தனர், ஆனந்தக் கூத்தாடினர்… விரலிடுக்கில் உறுத்திக் கொண்டிருந்த பேனா விலகிப்போனது என்றனர்… காலில் குத்திய நெருஞ்சி முள் பிடுங்கி எறியப்பட்டது என்றனர். இனி நாங்கள் யாருக்காகவும் சிலுவை சுமக்கவேண்டியதில்லை  என்றனர்…  பட்டாசு வெடித்தனர்… பண்டிகை போலக் கொண்டாடினர்…..
திகவின் மூத்த சொம்பு குஞ்சாமணி இது குறித்து அறிக்கை வெளியிட்டார்.
“ஈழத் தமிழர் வாழ்வுரிமையைக் காப்பாற்றத் தவறியதோடு, மனித நேயத்தையும் மறந்த இலங்கை ராஜபக்சே அரசின் தமிழர் இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் – ஆகியவற்றிலிருந்து இன்னமும் இலங்கை அரசைக் காப்பாற்ற சர்வதேச அரங்கிலும் முயற்சிக்கும் இந்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறுவது என்ற (கூட்டணியிலிருந்தும்கூட) அதன் முடிவு – மிகவும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த முடிவு ஆகும். காலத்தே எடுக்கப்பட்ட சரியான முடிவு – தேவையான முடிவும் கூட.
ஞாலம் வரவேற்கும் என்பது உறுதி. ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக முன்பு இரண்டு முறை, தமிழ்நாட்டு ஆட்சியை – அரசைத் தியாகம் செய்த தி.மு.க. -இப்போது 9 ஆண்டுகளாக பங்கேற்ற மத்திய ஆட்சியிலிருந்து, அக்கூட்டணி அரசிலிருந்து வெளியேறி அதன் தியாக வரலாற்றில் மேலும் ஒரு வைரக் கல்லைப் பதித்து உயர்ந்துள்ளது.”
குஞ்சாமணியின் அறிக்கைகள் கருணாநிதியின் அறிக்கைகளே…
ஆனால் என்ன நடந்தது ?   எந்த காங்கிரசோடு உறவாடுவது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்று வர்ணித்தாரோ, அதே காங்கிரஸிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி சென்றார்.  எந்த காங்கிரஸ் கட்சியைப் பார்த்து முண்டா தட்டினாரோ, அதே காங்கிரஸ் கட்சியிடம் இன்று மடிப்பிச்சை ஏந்தி நிற்கிறார்.  கூட்டணியிலிருந்து விலகியதிலிருந்து மீனவர் பிரச்சினைக்கும், கச்சத்தீவு பிரச்சினைக்கும் குரல் கொடுத்து வீராவேசம் பேசி வந்தவர், ஊட்டியில் சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததைக் கண்டும் காணாமலும் இருந்தார்.  நாள்தோறும் ஜெயலலிதாவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தவர், ஜெயலலிதாவைக் கூட பகைக்க விரும்பாமல் தேர்தல் முடியும் வரை எந்த அறிக்கைகளும் விடாமல் அமைதி காத்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த ஒன்பது ஆண்டுகால உறவில், என்றாவது ஒரு நாள், எந்த திமுக தலைவரின் கால்களாவது சத்யமூர்த்தி பவனில் பட்டிருக்குமா ?   கருணாநிதி குடும்பத்தின் எந்த வாரிசாவது சத்யமூர்த்தி பவனில் கால் பதித்திருப்பார்களா ?  ஆனால், கருணாநிதியின் மகள் கனிமொழியே நேராக சத்யமூர்த்தி பவன் சென்று காங்கிரஸ் தலைவர்களிடம் ஆதரவு கேட்கும் நிலை ஏற்பட்டது.  குடியரசுத் தலைவராக இருந்தாலும் கருணாநிதியை வீட்டில் வந்து சந்திக்கும் நிலையில் இருந்த திமுகவின் வாரிசுகளில் ஒன்று சத்தியமூர்த்தி பவனில் மடிப்பிச்சை கேட்டது.
இப்படியெல்லாம் மன்றாடுவது எதற்காக ?  செத்து மடியும் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காகவா ?  ஈழத்தில் போரை நிறுத்துவதற்காகவா ?  தமிழ் மொழியை காப்பாற்றுவதற்காகவா ?  குறைந்தபட்சம் மாநிலத்தில் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகவா ?
1580992854_599b99cbe0_b_1
மகளை பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்காக இத்தனை தியாகங்களையும் செய்யத் துணிந்தார் கருணாநிதி. தன் குடும்பத்தின் நலனுக்காக, தன் சுயநலனுக்காக, எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்தான் கருணாநிதி என்பதை கனிமொழியை எம்.பியாக்குவதற்காக அவர் நடத்திய நாடகம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை என்று அறிவித்த மூன்று மாதங்கள் கூட வைராக்கியமாக இருக்க முடியாமல், தன் குடும்பத்துக்காக கூழைக்கும்பிடு போடுகிறார் கருணாநிதி. இதற்கு பிரதிபலனாக, அடுத்து எம்.பி பதவி முடியும் தருவாயில் இருக்கும் ஜெயந்தி நடராஜனை மீண்டும் எம்.பியாக்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்யப்போகிறவர் இதே கருணாநிதிதான்.
“தமிழ் மொழியைக் காத்தாக வேண்டும்.  தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்தாக வேண்டும்.  இதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது தொடர்ந்து உத்வேகத்துடன் பாடுபட்டால்தான் உலக வரலாற்றில் நாங்கள் தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து கூறக்கூடிய நிலை ஏற்படும். “ என்ற லட்சியத்தோடு தொடங்கப்பட்ட திமுகவை  இன்று குடும்ப நிறுவனமாக மாற்றியிருக்கிறார் கருணாநிதி.  தமிழினத்தை அழிக்கத் துணைபோனவர் என்ற அவச்சொல்லையே அகற்ற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கேட்டுப் பெற்ற நிலையில், புதைகுழியிலிருந்து வெளி வர கிடைத்த கடைசி ஆதாரத்தையும் கைவிட்டு விட்டார்.
1009764_10151540556698303_318832425_n
கனிமொழிக்காக காங்கிரஸிடம் கையேந்தி அவர் பெற்ற பதவி, அவர் குடும்பத்துக்குள் நிலவும் வாரிசுச் சண்டையை மேலும் கூர்மைப்படுத்தவே செய்யும்.   குறுகிய கால நினைவு உள்ள தமிழக மக்கள், தன் துரோகங்களை மறந்து விட்டு, மீண்டும் தன் குடும்பத்திடம் அதிகாரத்தை வழங்குவார்கள் என்று கருணாநிதி நினைப்பாரோயானால், அவரைப் போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது.  திமுக என்ற ஆலமரத்தின் வேரில் வெந்நீர் ஊற்றும் வேலையை கருணாநிதி தொடர்ந்து செய்து வருகிறார்.   எந்தக் குடும்பத்தின் காரணமாக 2011 தேர்தலில் தன் ஆட்சியை இழந்தாரோ, அதே குடும்பத்தின் காரணமாகவே 2014 தேர்தலையும் இழக்கப்போகிறார்.   கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது உள்ள வெறுப்பின் அடிப்படையிலேயே மீண்டும் ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களிக்கப் போகின்றனர்.  2014
தேர்தலிலும், திமுகவை படுதோல்வியை நோக்கி இட்டுச் செல்கிறார் கருணாநிதி.
27cm7
கருணாநிதியின் தொடர்ந்த தவறுகளால், திமுக மீள முடியாத அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.   எத்தனையோ நெருக்கடிகளைச் சந்தித்து மீண்டெழுந்த திமுகவை, மீண்டெழ முடியாத மயான படுகுழியில் தள்ளியிருக்கிறார் கருணாநிதி.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...