முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரா விற்பனையாளனின் காதல்




பர்ஹாத் ஓர் எலிஜிபிள் பேச்சுலர். அம்மா கோண்டு. பார்ஸி சமுதாயத்தைச் சேர்ந்த அவனுக்கு கல்யாணம் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம் அவனது வேலை.
மும்பையில் பெண்கள் உள்ளாடை விற்கும் பெரிய கடை ஒன்றில் விற்பனையாளனாக பணிபுரிகிறான். பெண் பார்க்கச் செல்லும் இடங்களில் எல்லாம் பிரா, ஜட்டி விற்பவன்என்கிற இவனது பணியை கிண்டல் செய்கிறார்கள். பர்ஹாத்துக்கு தன் பணி மீது உயர்ந்த அபிப்ராயம் இருக்கிறது. உள்ளாடை பயன்படுத்தாத பெண்ணே இல்லை என்கிறபோது, அதை விற்பது எவ்வளவு கவுரவமான பணி என்கிறான். ஒரு பெண்ணை பார்த்ததுமே அவளது சைஸ்என்ன என்பதை அளக்காமலேயே பளிச்சென்று சொல்லக்கூடிய நிபுணத்துவத்தைப் பெற்ற கில்லிஅவன். அண்டர் வேர்ல்ட்என்கிற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடை வணிகவளாகத்தை உருவாக்குவது அவனது கனவு. பையனுக்கு கல்யாணம் ஆகி பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே என்று அவனது அம்மாவுக்கும், அம்மாவின் அம்மாவுக்கும் ஆதங்கம்.
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு காலை வேளை. தான் பணிபுரியும் கடையில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொம்மைக்கு (பெண் பொம்மை) ஜட்டியும், பிராவும் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கிறான். கடைக்கு வெளியே ஒரு தேவதை கொஞ்சம் வெட்கமாகவும், கொஞ்சம் அருவருப்போடும், கொஞ்சம் காமெடியாகவும் இவனைப் பார்க்கிறாள். அவள் ஷெரீன். தன்னை ஒருத்தி ஒரு மாதிரியாக பார்ப்பதை பர்ஹாத்தும் கவனித்து விடுகிறான். பார்த்ததுமே புரிந்துவிட்டது. தனக்காக படைக்கப்பட்டவள் இவள்தான். அவனது மூளைக்குள் எண்டாக்ரீன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. ஹார்மோன்கள் தறிகெட்டு அலைந்தன.


கடைக்குள் நுழைகிறாள் ஷெரீன். பர்ஹாத் எதிர்கொள்கிறான்.

எனக்கு பிரேசியர் வேண்டும்
ஏகப்பட்ட மாடல்கள் இருக்கின்றன. நிறைய வண்ணங்களில். ஃப்ளோரசண்ட் கூட இருக்கிறது. பார்க்கிறீர்களா?”
இல்லை. சாதாரணமான வெள்ளை ப்ராவே போதும்
உங்கள் சைஸ்?”
கொஞ்சம் வெட்கத்தோடும், பீதியோடும் “38”
இல்லை. 36தான் உங்களுக்கு சரியாக இருக்கும். 38 கொஞ்சம் லூஸ்
மிஸ்டர். என்னுடைய அளவு எனக்குத் தெரியும். நான் கேட்டதை கொடுங்கள்
பற்றிக்கொண்டது காதல். வாழ்க்கையில் முதன்முறையாக காதலை உணர்கிறான் பர்ஹாத். இந்தப் பரவசம் அவனது உடலெங்கும் பெய்யென பெய்யும் மழையாய் சோவென அடிக்க, காதல் காலராவில் அவதிப்படுகிறான்.

இதற்கிடையே அவனுடைய அம்மா பார்ஸி சங்கத்தின் மேட்ரிமோனியல் சேவையை நாடியிருக்கிறாள். நம்மூர் கல்யாண மாலை மாதிரி ஒரு சுயம்வரத்துக்கு பர்ஹாத் செல்கிறான். அங்கே நடைபெறும் ஏகப்பட்ட கலாட்டாக்களுக்கு இடையே ஷெரீனை மீண்டும் காண்கிறான். கொஞ்சம் தைரியமாகவே அவளிடம் போன் நம்பர் கேட்கிறான்.
உங்களுடைய நம்பர் என்ன?”
“38” சொல்லிவிட்டு குறும்பாக சிரிக்கிறாள்.

அப்புறம் என்ன பையனுக்கு வந்த காதல் காலரா பெண்ணுக்கும் தொற்றிக் கொள்கிறது. பார்ஸி சங்கத்தில் அவள் செயலராகப் பணிபுரிகிறாள். பர்ஹாத்தை விட வசதியான குடும்பம். பையனுக்கும், பெண்ணுக்கும் பிடித்துவிட்டது. அடுத்து கல்யாணம்தான் எனும்போது ஒரு பெரிய சிக்கல்.
பர்ஹாத்தின் அம்மாவுக்கு பெண்ணை சில காரணங்களால் பிடிக்கவில்லை. அம்மாவின் செல்லக் குழந்தையான பர்ஹாத் தாய்க்கும், காதலிக்கும் இடையே அல்லாடுகிறான். இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான விஷயத்துக்காக ஷெரீன் இவனை அழைக்க செல்போனில் முயற்சிக்கிறாள். அப்போது அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பர்ஹாத் கோபமாக போனை எடுத்து, “எப்பவும் கொஞ்சிக்கிட்டிருக்கணுமாஎன்பது மாதிரி கேட்டு போனை தூக்கிப்போட்டு உடைக்கிறான். இயல்பிலேயே இனியவன் என்பதால்தான் ஷெரீனுக்கு இவன் மீது காதல் பிறந்தது. மாறாக முதன்முதலாக அவனது கோபத்தை உணர்ந்தவள் தனது காதலை துறக்கிறாள். பிற்பாடு எவ்வளவு கெஞ்சியும் மீண்டும் பர்ஹாத்தை காதலிக்க ஷெரீன் துணியவில்லை. இதற்கிடையே பர்ஹாத்தின் அம்மா அவனுக்கு வேறு பெரிய இடங்களில் பெண் பார்க்க ஆரம்பிக்கிறாள்.
க்ளைமேக்ஸ்.
பர்ஹாத் கடைசியாக ஷெரீனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறான். டிசம்பர் 31 இரவு 9 மணிக்கு தயாராக இரு. நாம் நியூ இயர் பார்ட்டிக்கு செல்கிறோம். நீ வர மறுத்தால் நம்முடைய காதல் முடிந்தது என்று நினைத்துக் கொள்கிறேன். இடைபட்ட பசலைநாட்களில் பர்ஹாத்துடனான தன்னுடைய தினங்களை ஷெரீன் நினைத்துப் பார்க்கிறாள். தன் வாழ்க்கையிலேயே மிக மகிழ்ச்சியான தினங்கள் அவைதான் என்று உணர்கிறாள். பர்ஹாத்துடன் வாழ்ந்தால் மட்டுமே அது வாழ்க்கை என்பதை உணர்ந்த ஷெரீன் பார்ட்டிக்கு தயார் ஆகிறாள்.
வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த பர்ஹாத்துக்கு பெரிய அதிர்ச்சி. பையன்பார்க்க பெண்வீட்டாரை அழைத்திருக்கிறாள் அம்மா. 9 மணிக்கு செல்லாவிட்டால் ஷெரீன் இனி வாழ்நாள் முழுக்க தன்னை மன்னிக்கவே மாட்டாள். டென்ஷன்.
நயமாக தன்னைப் பார்க்க வந்த பெண்ணிடம் தான் காதல்வசப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்கிறான். அம்மாவிடமும் தன் காதலின் வீச்சு எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறான். ஷெரீன் வீட்டுக்கு மிகச்சரியாக ஒன்பது மணிக்குச் செல்கிறான். அவளது வீட்டு வாசலில் நடக்கும் நியூ இயர் கலாட்டாவில் போலிஸ் இவனை அள்ளிப்போட்டுக் கொண்டு செல்கிறது. பர்ஹாத் வருவான் என்று காத்திருக்கும் ஷெரீன் பதட்டமடைகிறாள். நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. 9.00, 10.00, 11.00, 12.00
புதுவருடம் பிறக்கிறது. பர்ஹாத் வரவேயில்லை. இனி அவன் தன் வாழ்க்கையில் வரவே மாட்டான் என்று நினைக்கிறாள் ஷெரீன். காதலர்கள் இணைந்தார்களா என்பதை நீங்கள் ஏதேனும் திரையரங்கின் வண்ணத்திரையில்தான் காணவேண்டும்.
இதுவரை நீங்கள் பார்த்த, கேட்ட பிழியப் பிழிய காதல் திரைப்படங்களையும், கதைகளையும் கொஞ்சம் நினைவுறுத்திப் பாருங்கள். ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி, ஏக் துஜே கலியே, அன்பே வா, அலைகள் ஓய்வதில்லை, காதலுக்கு மரியாதை, வைகாசி பொறந்தாச்சி, காதல் கோட்டை, விண்ணைத் தாண்டி வருவாயா... இதெல்லாம் சட்டென்று நினைவுக்கு வரலாம். இந்த எந்த படைப்புகளுக்கும் ஒப்பானது பர்ஹாத் ஷெரீனின் காதல். ஒரே ஒரு வித்தியாசம்தான். நீங்கள் இதுவரை பார்த்த காதல்களின் காதலர்கள் வயது அதிகபட்சம் இருபதுகளின் இறுதியில் இருக்கும். Shirin Farhad Ki Toh Nikal Padi படத்தில் பையனின் வயது 45. பெண்ணுக்கு வயது 40+. வயது ஒரு மேட்டரே இல்லை என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள். விண்ணைத்தாண்டி வருவாயாவில் சிம்பு என்னென்ன செய்வாரோ அது அத்தனையையும் பர்ஹாத் என்கிற பொமான் இரானி செய்கிறார். இடுப்பொடிய நடனம் ஆடுகிறார். நொடிக்கொரு முறை காதலியை நினைத்து சிலிர்க்கிறார். திரிஷா செய்கிற அத்தனையையும் ஷெரீன் என்கிற ஃபராகான் செய்கிறார். முகம் சிவந்து வெட்கப்படுகிறார். காதலனை தன் பின்னாலேயே ஹட்ச் நாய்க்குட்டி மாதிரி அலைய விடுகிறார்.


படத்தில் நாயகன் நாயகியை நினைத்தும், நாயகி நாயகனை நினைத்தும் காதலை கொட்டோ கொட்டுவென்று கொட்டி பாடல் காட்சிகள். டூயட்டுகள். அதிலும் ஒரு டூயட்டில் இந்தி சினிமாவின் புகழ்பெற்ற காதல் திரைப்படங்களான ஹம் ஆப்கே ஹைன் கோன், ஜப் வி மெட் மாதிரி படங்களில் இடம்பெற்ற காட்சிகளை உல்டா அடித்து பயங்கர கலாட்டா.
காதலுக்கு வயது ஒரு பொருட்டேயில்லை. காதல் எப்பவும் காதல்தான். படம் பார்க்கும்போது நம் அம்மா-அப்பா, சித்தப்பா-சித்தி, மாமா-அத்தை, பக்கத்து வீட்டு அங்கிள் - ஆண்ட்டி என்று அத்தனை பேரின் காதலையும், நாம் ரகசியமாக எட்டி நின்று பார்ப்பது மாதிரி ஃபீலிங். இரண்டு மணி நேர திரைப்படத்தில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறையாவது நீங்கள் வாய்விட்டு சிரிப்பீர்கள். காதல் என்பது வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையும்தான்.

ஹீரோ-ஹீரோயின் வயதானவர்கள் என்பது தவிர்த்து, ஒரு காதல் படத்தில் இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் படத்தில் உண்டு. லேசான செக்ஸ் கூட. காதல் படங்களுக்கு அவசியமான வஸ்துவான மழை அவ்வப்போது தூறி, காதல் சிற்றாறாய் ஓடுகிறது. படம் பார்ப்பவர்களின் மனம் கரைகிறது.
படத்தில் நடிகர்கள் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஆப்ட்டாக இருக்கிறது. இசை பிரமாதம். எடிட்டிங் நறுக். மிகக்குறைவான கேரக்டர்களை வைத்து, சிக்கனமான பட்ஜெட்டில் சிறப்பான கதை, திரைக்கதை அமைத்து ரிச்சாக எடுத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் நாம் இப்படத்தை விமர்சிக்க வேண்டியதே இல்லை. படம் பார்ப்பவர்களே அதையெல்லாம் உணர்ந்துக் கொள்வார்கள்.
இந்தி சினிமா உள்ளடக்க ரீதியில் சர்வதேசத் தரத்தை எட்டியிருப்பதற்கு இப்படம் நல்ல உதாரணம். இப்படம் பார்க்கும்போது காட்டப்பட்ட சில ட்ரைலர்கள் மேலும் சில உதாரணங்களாய் எனக்குப் பட்டது. அதில் ஒன்று ஸ்ரீதேவி மீண்டும் நடிக்கும் படம் ஒன்று. அமெரிக்காவுக்கு ஒரு இந்தி குடும்பம் இடம் பெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு மட்டும் ஆங்கிலம் சரியாக வராது. அதனால் அவர் அங்கே படும் பாடு. ஒரு என்.ஆர்.ஐ குடும்பத்தலைவி ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்று ஒரு ஒன்லைன். இன்னொரு படம் சக்கரவியூக். மாவோயிஸ்ட்டுகளை குறித்த விரிவான திரைப்படம். இன்னொன்று ராஸ்-3 (3டி) லேசான போர்னோ கலந்த திகில் படம். இப்படி ஏகப்பட்ட genreகளில் இந்தியில் நிறைய படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவர்களது இண்டஸ்ட்ரி ஆரோக்கியமாக இருப்பதையே இது காட்டுகிறது.
மாறாக நம் கோலிவுட்டை நினைத்துப் பாருங்கள். தெரியாத்தனமாக ஓக்கே ஓக்கேஹிட் அடித்துவிட்டது என்று நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் நம்மூர் இயக்குனர்கள். இல்லாவிட்டால் சைக்கோ த்ரில்லர். இந்தியிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் வெரைட்டியாக பிரியாணி போட்டுக் கொண்டிருக்க, நாம் வடுமாங்காய் வைத்து தயிர்ச்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

Shirin Farhad Ki Toh Nikal Padi மாதிரி ஒரு படத்தை நம்மூரில் எடுக்க முடியாதா? இங்கே இப்படிப்பட்ட படத்தில் நடிக்க பொமன் இரானி, ஃபராகான் மாதிரி ஸ்டார்கலைஞர்கள் இல்லையா? சிறப்பாக படம்பிடிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லையா? என்னதான் பிரச்சினை? உறுதியாக சொல்லலாம். இதே கதை, இங்கு பிரபு அம்பிகாகாம்பினேஷனில் எடுக்கப்பட்டிருந்தால் பரபரப்பான ஹிட் படம் ஆகியிருக்கும். பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர்கள் இன்னமும் தமக்கென்று ஒரு டெம்ப்ளேட்அமைத்துக்கொண்டே இயங்குகிறார்கள். புது இயக்குனர்களும் சேஃபாக அதே டெம்ப்ளேட்டில்தான் சிந்திக்கிறார்கள். அதை உடைத்து சிந்தனையை பரவலாக்க அவர்கள் தயார் இல்லை. குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதே அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது. அவ்வப்போது அங்காடித்தெரு, மதுபானக்கடை, அட்டக்கத்தி மாதிரி ஒரு சில வித்தியாச முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல ஒரு ஒளிக்கீற்றாக தென்படுவதை தவிர்த்து, கோலிவுட் ஜிலோவென்று இருளாகத்தான் இருக்கிறது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...