முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேடி சரித்திரம்.


கேடி சகோதரர்கள் கேடி சகோதரர்கள் என்று தமிழகத்தின் முக்கியமான பெரும்புள்ளிகளைப் பற்றி சவுக்கு வாசர்கள் நன்கு அறிவீர்கள்.  அவர்கள் யார், அவர்களால் தமிழகத்துக்கு விளையும் ஆபத்து என்ன என்பது குறித்து,  என்று ஒரு கட்டுரை 11 ஏப்ரல் 2011 அன்று வெளி வந்திருந்ததை வாசர்கள் படித்திருப்பீர்கள்.  2ஜி ஊழலின் முன்னோடி, 2ஜி ஊழலின் தந்தை என்றால் அது கேடி சகோதரர்கள்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

கேடி சகோதரர்கள் முன்னால், ஆ.ராசாவெல்லாம் கத்துக் குட்டி.   2ஜி ஊழல் குறித்த செய்திகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்து வட இந்திய ஊடகங்களும், தென்னிந்திய ஊடகங்களும், ஆ.ராசாவை எப்படி வறுத்து எடுத்து உரித்து ஊறவைத்து உப்புக் கண்டம் போட்டன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ராசாவுக்கு அடுத்தபடியாக ஊடகங்களிடம் சிக்கியவர் கனிமொழி.  கனிமொழியும், ராசாவும் சிறைக்குச் செல்லும் வரை, ஊடகங்கள் ஓயவே இல்லை. இதைத் தவறு என்று சொல்ல முடியாது.  ராசாவும், கனிமொழியும் தங்கள் செய்த தவறுக்காக சிறை சென்றார்கள்.  ஆனால், அவர்கள் இருவருக்கு முன்பாகவே ஸ்பெக்ட்ரத்தில் பல கோடி ரூபாய் வருமானம் பார்த்த கேடி சகோதரர்களைப் பற்றி ஏன் ஊடகங்கள் வாய்த் திறக்க  மறுக்கின்றன ?  ராசா சிறை செல்வது வரை, தன்னை இந்தியாவின் மனசாட்சி என்று அழைத்துக் கொண்ட சுப்ரமணியன் சுவாமி, கேடி சகோதரர்களின் வழக்கைப் பற்றி ஏன் வாய்த் திறக்க மறுக்கிறார் ? கேடி சகோதரர்களின் உடம்பில் கலந்திருக்கும் பார்ப்பன ரத்தத்தின் காரணமாகவா என்பது சுவாமிக்கே வெளிச்சம்.
ஆனால், இந்தக் கேடி சகோதரர்கள் சிபிஐ பிடியிலிருந்து தப்பிப்பதற்கு எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்கள் என்றே தகவல்கள் கூறுகின்றன.
தீட்டிய மரத்திலேயே கூர்பார்க்கத் தயங்காத கேடி சகோதரர்கள், கருணாநிதியின் பிள்ளைகளை விட, தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே 2007ல் கருத்துக் கணிப்பை வெளியிட்டார்கள்.  எந்த அளவுக்கு கேடி சகோதரர்களுக்கு அளவில்லாத ஆசை என்றால், தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சர்களிலேயே சிறந்தவர் சின்னக்கேடி தயாநிதிதானாம்.  ப.சிதம்பரத்திற்கு 24 மதிப்பெண்ணாம்.   தயாநிதிக்கு 66 மதிப்பெண்ணாம். தயாநிதிக்கு கிடைத்த எம்.பி. பதவியும், மந்திரி பதவியும், கனிமொழி போட்ட பிச்சை என்பதை கேடி சகோதரர்கள் வசதியாக மறந்தார்கள்.   2004 தேர்தலில் முரசொலி மாறன் ஆக்ரமித்திருந்த மத்திய சென்னை தொகுதிக்கு யாரை நிறுத்துவது என்ற கேள்வி வரும்போது, இப்போது இருப்பது போல அறிவோடு இருந்திருந்தால், கனிமொழி எடுத்த எடுப்பிலேயே சரி என்று சொல்லியிருப்பார்.  ஆனால், அனுபவம் இல்லாத கனிமொழி, எனக்கு பதவி வேண்டாம் என்று சொன்னதால், அந்த வாய்ப்பு சின்னக் கேடி தயாநிதிக்கு கிடைத்தது.  அந்த வாய்ப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது உலகறிந்தது.  அது குறித்து பின்னால் பார்ப்போம்.
கேடி சகோதரர்களின் வளர்ச்சியே, பொய், புனைசுருட்டு, சூது, வஞ்சகம், துரோகம் இவை எல்லாவற்றாலும் ஆனது. ஆங்கிலத்தில் Putting the cart before the horse என்று சொல்லுவார்கள்.   அது போல திமுக என்ற கட்சியைக் கைப்பற்ற கேடி சகோதரர்கள் எடுத்த அவசர நடவடிக்கையே அந்த கருத்துக் கணிப்பு.  கருணாநிதிக்கு அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பில், முதலிடத்தில் ஸ்டாலினுக்கு 70 சதவிகிதமும், கனிமொழிக்கும், அழகிரிக்கும் தலா 2 சதவிகிதமும், மற்றவர்கள் என்று 20 சதவிகிதமும் என்று முடிவு வெளியிட்டார்கள்.  மற்றவர்கள் என்றால் யார்… அறிவாலயத்தின் வாட்ச்மேனா… ?   அந்த மற்றவர்கள் யார் என்பது ஊருக்குத் தெரியாதா ?  இன்று கல்லால் அடிபட்ட நாய், வாலை இரண்டு கால்களுக்கிடையே சுருட்டிக் கொண்டு ஓடுவது போல ஓடிக்கொண்டிருக்கும் முன்னாள் அஞ்சா நெஞ்சன் அழகிரி, அன்று தனது அடியாட்களை விட்டு, தயாநிதி மற்றும் கலாநிதி மாறன்களின் வீட்டை அடித்து நொறுக்கியிருந்தால் அவரை வீரன் என்று சொல்லலாம்.  தினகரன் அலுவலகத்தை அடித்து, அப்பாவி ஊழியர்களை கொலை செய்தார் அஞ்சா நெஞ்சன். அந்த மூன்று ஊழியர்கள் இறந்த அன்று, பெரிய கேடி கலாநிதி நடித்த நடிப்பை பார்க்க வேண்டுமே… செவாலியே சிவாஜி தோற்று விடுவார்.  அப்படி ஒரு நடிப்பு.  பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம், உங்களுக்கு நியாயம் கிடைக்கும்.  அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.  இதைச் சும்மா விடமாட்டேன் என்று நடித்தாரே பாருங்கள் ஒரு நடிப்பு… இதயம் இனித்து, கண்கள் பனித்ததும், தன் மேக்கப்பை கலைத்து விட்டு, யதார்த்த நிலைமைக்கு வந்தார் கலாநிதி.
கேடி சகோதரர்களின் ஆக்டோபஸ் வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல.   படிப்படியாக, திமுக தொண்டனின் ரத்தத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அது.  அதிமுக இரட்டைப் புறா (ஜானகி), சேவல் (ஜெயலலிதா) என்று பிரிந்து கிடந்த நிலையில், மக்கள் தற்போது கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தது போலவே 1989ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அப்போதெல்லாம் கேபிள் டிவி என்பது உருவாகாத காலம்.   வீடு வீடாக வீடியோ, டெக் எனப்படும் வீடியோ கேசட் ப்ளேயர்கள் வலம் வந்து கொண்டிருக்கும்.  தூர்தர்ஷனில், The World This Week என்று முதன் முதலாக ஒரு நிகழ்ச்சியை பிரணாய் ராய் தொகுத்து வழங்குகிறார்.   ஏஷியா நெட்டின் சஷிகுமார் மேனன் அதன் தயாரிப்பாளர் என்று நினைவு. அந்த The World This Week நிகழ்ச்சி, வீடியோ ஜர்னலிசத்தின் மைல்கல் என்று தாராளாக சொல்லாம்.  அப்படி ஒரு தரமான நிகழ்ச்சியாக அது வந்து கொண்டிருந்தது.  அந்நிகழ்ச்சியின் வெற்றியைப் பார்த்து, வீடு வீடாக மாதப்பத்திரிக்கைகள் போடுவது போல, வீடியோ கேசட்டுகளை போடலாம் என்று ஒரு புதிய திட்டம் உருவாகுகிறது.  இந்தியா டுடே குழுமம் என்று நினைவு. ஆங்கிலத்தில் நியூஸ்ட்ராக் என்ற வீடியோ இதழை வெளியிடுகிறது.  அந்த வீடியோ கேசட், பரவலான வரவேற்பை பெறுகிறது. இந்த திட்டத்தை அப்படியே காப்பியடித்த கேடி சகோதரர்கள் பூமாலை என்று தமிழில் ஒரு வீடியோ மேகஸின் தொடங்குகிறார்கள்.  வீடியோ ஷுட் செய்வதற்கெல்லாம் அப்போது விலையுயர்ந்த கேமரா வேண்டும்.  படம் பிடிக்க கேமராமேன்களின் ஊதியம் மிக அதிகம்.   அதற்கு வேறு வழியின்றி செலவு செய்த கேடி சகோதரர்கள் செய்தி சேகரிப்பதற்கென தனியே ஊழியர்களை நியமிக்கவில்லை.  அப்போது கேடி சகோதரர்கள் நடத்திக் கொண்டிருந்த வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம் போன்ற இதழ்களின் ஊழியர்கள் இந்தப் பணியையும் சேர்த்துச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தப் பட்டனர்.   சம்பளம் கொடுக்கும் விஷயத்தில் கேடி சகோதரர்கள் எவ்வளவு கப்பித்தனமானவர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் சன் டிவியில் பணியாற்றினால் கேட்டுப் பாருங்கள்.  கப்பி என்றால் கப்பி… அவ்வளவு கப்பி.
பூமாலை வீடியோ மேகசின் 1990ல் வெளியானதும், யாரும் அதைச் சீண்டவில்லை. விலை கொடுத்து கேசட்டுகள் தயாரித்து அதை யாருமே வாங்கவில்லை என்றால் நஷ்டத்தை எப்படி பொறுத்துக் கொள்வார்கள் கேடி சகோதரர்கள் ? இருக்கவே இருக்கிறது தாத்தாவின் காவல்துறை.   அப்போது தொழிலில் கொடிகட்டிப் பறந்தவை வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் கடைகள். அந்தக் கடைகளில் பூமாலை கேசட்டுகளை வாங்கி விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது.  மறுக்கும் வீடியோ கடைகாரர்களின் கடைகளில் நீலப்படம் வைத்திருந்ததாக காவல்துறையின் திடீர் சோதனைகள் நடைபெற்றன.
1991ல் ராஜீவ் மரணத்தில் ஏற்பட்ட அனுதாப அலையால் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில், பூமாலை வாடி வதங்கி உதிர்ந்து போனது.  ஜெயலலிதா ஆட்சியில் கேடி சகோதரர்களின் திட்டங்கள் எடுபடவில்லை.
வட இந்தியாவில் சுபாஷ் சந்திரா ஜீ தொலைக்காட்சியைத் தொடங்குகிறார்.  சஷிகுமார் மேனன்,   வெளிநாட்டு வாழ் மலையாளிகளுக்காக நான்கு மணி நேர மலையாள நிகழ்ச்சியை தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறார்.  இதே போல தமிழில் நான்கு மணி நேர நிகழ்ச்சி தயாரித்துத் தருமாறு, ஏற்கனவே பூமாலை நடத்திய அனுபவம் இருந்ததால் கேடி சகோதரர்களை நிகழ்ச்சித் தயாரித்துத் தருமாறு  கேடி சகோதரர்களின் டாடி முரசொலி மாறனிடம் கேட்கிறார்.  முரசொலி மாறனோ… நான் என்ன உனக்கு நிகழ்ச்சி தயாரித்துத் தருவது…. நான் நேரடியாகவே பேசிக் கொள்கிறேன் என்று சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி, புதிய தொலைக்காட்சிச் சேனலைத் தொடங்குவதற்கே வாய்ப்பு ஏற்படுத்துகிறார்.
சன் டிவி ஏப்ரல் 1993ல் உருவாகிறது.   சேனல் உருவானாலும், மாதற்தோறும் கொடுக்க வேண்டிய ட்ரான்ஸ்பாண்டர் வாடகையை சன் நிறுவனத்துக்கு வரும் வருமானத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.  விளம்பரங்களும் போதிய அளவில் வரவில்லை.   கடன் வாங்கித்தான் சேனலை நடத்த வேண்டிய நிலை.  இந்தியன் வங்கியை அணுகினால், அவர்கள் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட சன் டிவிக்கு கடன் தர மறுத்து விட்டார்கள்.
கழகம் ஒரு குடும்பம் போன்றது என்று கருணாநிதி அடிக்கடி சொல்வது கருணாநிதியின் மனசாட்சியான முரசொலி மாறனுக்குத் தெரியாதா ?  திமுக உடன்பிறப்புக்கள் கட்சிக்காக கொடுத்த பல கோடி ரூபாய் நிதியை, மந்தைவெளியில் உள்ள கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் முதலீடு செய்கிறார்கள்.  அந்த முதலீட்டின் பேரில் வாங்கிய கடனில்தான் சன் டிவி நடைபெற்றது.
வி.பி.சிங் அரசில் அமைச்சராக இருந்த முரசொலி மாறனுக்கு பல்வேறு தொழில் அதிபர்களோடு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அந்த நட்பை பலமாகப் பயன்படுத்திக் கொண்ட மாறன், ஒரு தொழில் அதிபருக்கு பரிசாகக் கிடைத்த ட்ரான்ஸ்பாண்டரை தனக்குத் தரும்படி கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்.  அந்த ட்ரான்ஸ்பான்டர் மூலமாகத்தான் சன் ஒளிபரப்பப் பட்டது.  அப்போது இருந்த   ஜெ.ஜெ டிவி இது போன்ற தில்லாலங்கடி வேலைகள் தெரியாததன் காரணமாகத்தான் அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கினர்.  சன் டிவியின் பங்குதாரர்களாக தயாளு அம்மாள், முரசொலி மாறன், மல்லிகா மாறன், கேடி சகோதரர்கள் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.  சன் டிவியின் அலுவலகம், முரசொலி அலுவலக வளாகத்திலேயே செயல்பட்டது.
css2669
சன் டிவி தொடங்கப்பட்ட பிறகு பெரிய அளவில் பிரகாசிக்க முடியாவிட்டாலும், தமிழில் தொடங்கப்பட்ட முதல் சேனல் என்பதால், அது ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது.  தூர்தர்ஷனை விட்டால் வேறு சேனலே இல்லை என்பதால், அந்த இடத்தை சன் டிவி ஆக்ரமித்தது.     1991-1996 ஜெயலலிதா ஆட்சி, சன் டிவியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியது.  நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்குப் போட்டது, சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீசியது, 100 கோடி ரூபாய் வளர்ப்பு மகன் திருமணம் போன்ற செய்திகளை தூர்தர்ஷன் கவல் செய்யாத காரணத்தால் சன் டிவியின் பக்கம் மக்கள் திரும்பினர்.  வளர்ப்பு மகன் திருமணத்தில் வீடியோ எடுத்தார் என்ற காரணத்தால், சன் டிவியின் கேமராமேன் கண்ணன் என்பவரை, ஜெயலலிதாவின் விசுவாசமான அடிமை விஜயக்குமார் ஐபிஎஸ் கைது செய்தார்.  இந்த விவகாரத்தை சன் டிவி பெரிய அளவில் எடுத்தச் சென்றதும் சன் டிவியின் வளர்ச்சிக்கு உதவியாக அமைந்தது.   தற்போது அதிமுகவின் அடிமைகள் சங்கத்தில் உறுப்பினராகி ராஜ்ய சபை எம்.பியாக இருக்கும் ரபி பெர்நார்ட், அப்போது சன் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சி நடத்துபவர்.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக கேடி சகோதரர்களின் டாடி நியமிக்கப்பட்டதும், சன் டிவியின் விளம்பர வருவாய் பல மடங்கு பெருகியது.  தொழில் அதிபர்களை மிரட்டி, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு நெருக்கடி தரப்பட்டது.
சன் டிவி தொடங்கிய ஒரு சில  ஆண்டுகளிலேயே பல்வேறு திரைப்படங்களின் உரிமையை வைத்திருந்த ராஜ் வீடியோ விஷன், ராஜ் டிவியை தொடங்கியது.  அப்போதெல்லாம் கேபிள் டிவி ஒளிபரப்புவதென்றால் வடை சுடும் சட்டியைப் போன்ற பெரிய டிஷ்களை வீட்டின் மாடியில் வைத்து, அதிலிருந்து கேபிளில் ஒளிபரப்ப வேண்டும்.   இலவசமாக பல்வேறு சேனல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்டார் குழுமம், தங்கள் சேனல்களைப் பெறுவதற்கு பணம் கட்ட வேண்டும் என்ற பே சேனல் முறையைக் கொண்டு வருகிறது.  இந்த பே சேனல் முறை அமலுக்கு வந்ததும், வெறும் தொலைக்காட்சிச் சேனலை மட்டும் வைத்தால் போணியாகாது என்பது புரிந்த கேடி சகோதரர்கள், 2000 ஆண்டில் சுமங்கலி கேபிள் விஷன் என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்குகிறார்கள். அது வரை தமிழகத்தில் கேபிள் விநியோகம் ஆங்காங்கே இருந்த சிறு சிறு ஆபரேட்டர்களால் தனித்தனியாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.  இதை ஒருமுகப்படுத்தி சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் கேபிள் டிவி சேவையை வழங்கிக் கொண்டிருந்தது ஹாத்வே என்ற நிறுவனம்.  ஹாத்வே நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால், தங்கள் தொழிலுக்கு ஆபத்து என்பதைப் புரிந்த கேடி சகோதரர்கள், தமிழகமெங்கும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை அழைத்து,  தனித்தனியே தொழில் நடத்த வேண்டாம் எங்களோடு இணைந்து தொழில் நடத்துங்கள் என்று மிரட்டுகிறார்கள்.   கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வேறு வழியே இல்லை.  தனித்தனியே அவர்களால் ஸ்டார் குழுமத்துக்கு பணம் கொடுக்க முடியாது.   இணைய மறுத்தால் தொழிலை மூடி விட்டுப் போக வேண்டும்.
இணைய மறுக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டார்கள்.  தாத்தாவின் காவல்துறை கேடி சகோதரர்களின் சேவைக்கில்லாமல் வேறு எதற்கு ? ஹாத்வே நிறுவனத்தினர் உயர் அழுத்தக் கம்பி வட இணைப்பின் மூலம், கேபிள் மற்றும் இன்டெர்னெட் இணைப்பு கொடுக்க உத்தேசித்து அதற்கான வேலைகளில் இறங்கிய போது, அப்போது சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த தங்கள் மாமா ஸ்டாலினை வைத்து,  அனுமதி மறுத்தனர்.  மீறி கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களில் இணைப்புகள் அறுத்தெறியப் பட்டன. ஒரு சில ஆண்டுகளில், ஹாத்வே மொத்த கூடாரத்தையும் காலி செய்து விட்டு, சென்னையை விட்டே ஓடியது.
எஸ்.சி.வி மூலமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த கேபிள் சாம்ராஜ்யத்தையும் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள் கேடி சகோதரர்கள். தமிழில் சேனல் தொடங்க வேண்டுமென்றால் எஸ்.சி.வி நிர்ணயித்ததுதான் விலை.  அவர்கள் வைத்ததுதான் சட்டம்.  அதை மீறினால் சேனலுக்கு பெரிய பூட்டு போட வேண்டியதுதான்.   இவர்களின் அதிகாரத்தின் காரணமாக, தமிழில் தொலைக்காட்சிச் சேனல் தொடங்க முடியாமல் ஓடியவர்களின் பட்டியல் பெரியது.
முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு 2004ல் மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்ற விவாதம் நடக்கிறது.  கருணாநிதி மத்திய சென்னைத் தொகுதியில் நிறுத்த விரும்பியது, கனிமொழியைத்தான்.   இரண்டாவது குடும்பத்தின் தொடர்ந்த நச்சரிப்புகள் காரணமாகவும், கனிமொழிக்கு அரசியல் ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவுமே, கனிமொழியை அந்த இடத்தில் போட்டியிடச் சொன்னார்.   கனிமொழிக்கு அப்போது அரசியலில் ஆர்வம் இல்லை. இலக்கிய உலகில், ஒரு பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்பதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தார்.   தன் தந்தையைப் போல, தமிழ் பேசியே தமிழ்நாட்டை சூறையாடலாம் என்று திட்டமிட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.  மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டார்.  அந்த இடத்தை சின்னக் கேடி தயாநிதிக்குத் தர வேண்டும் என்று, சிஐடி காலனியிலேயே கேடி சகோதரர்கள் தவமாய்த் தவமிருந்தார்கள். அவர்கள் தவத்தின் பலனாக, ராசாத்தி அம்மாள் கேடி சகோதரர்களின் விஷத்தன்மை அறியாமல் அந்தப் பாம்புகளுக்கு பால் வார்த்தார்.
2004 பாராளுமன்றத் தேர்தலும் வந்தது.  ஜெயலலிதா “மிகச் சிறப்பான முறையில்” நடத்திய ஆட்சியால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.   குறைவான சீட்டுகளையே பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்ததால், ஆட்சி அமைப்பதற்கும், தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கும் திமுகவின் தயவிலேயே இருந்தது காங்கிரஸ்.   தனது எம்.பிக்கள் எண்ணிக்கையால், மத்திய அரசையே தன் விரலசைவில் வைத்தார் கருணாநிதி. கருணாநிதி சொன்னவர்தான் மந்திரி.  கருணாநிதி வேண்டிய இலாக்கா கொடுக்கப்பட வேண்டும். நினைத்ததை நடத்தினார் கருணாநிதி.
மத்திய மந்திரியாக தன் ரத்த சொந்தம் யாராவது ஆக வேண்டும் என்பதற்காக கருணாநிதி தேர்ந்தெடுத்த நபர்தான் தயாநிதி மாறன்.  கட்சியில் எவ்வளவோ மூத்தவர்கள் இருக்க, இப்போதுதான் கட்சியில் சேர்ந்த தயாநிதி மாறனை கேபினெட் மந்திரியாக்க பரிந்துரைக்கிறீர்களே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, கருணாநிதி சொன்ன பதில் “விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப தயாநிதியின் திறமையை நான் சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன் என்பதுதான்.”
சிறிய வயதில் கருணாநிதி பார்த்த அந்த திறமை, சவுக்கு கண்களுக்குத் தென்படவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள் வாசகர்களே…
young_KD
கருணாநிதி தான் ஒரு வரலாற்றுத் தவறைச் செய்கிறோம் என்பதை அப்போது உணரவில்லை.
தொடரும்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....