முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Sun_TV_PK

இப்படி யாரையும் சபிப்பது வருத்தத்திற்குரிய விஷயம்.  அதிலும் சம்பந்தப்பட்ட நபரின் பிறந்தநாள் அன்று சபித்தால் ?   இவர் திருந்த மாட்டார், மனம் வருந்தமாட்டார் என்று நினைக்கும் ஒரு நபரை மட்டுமே இப்படிச் சபிக்க முடியும்.  அப்படி சபிக்கப்பட உள்ள நபர் யார் தெரியுமா ?   சன் டிவிதான்.   13 ஏப்ரல் 2013ம் ஆண்டோடு சன் டிவி தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.   சாதாரணமாக, ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகனாகப் பிறந்த கேடி சகோதரர்கள் இன்று ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்திருக்கிறார்கள்.   இவர்களின் சாம்ராஜ்யம் அத்தனையும், தமிழனின் உழைப்பில், தமிழனின் வியர்வையில், தமிழனின் பணத்தில் விளைந்தது.
இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும் கேடி சகோதரர்களின் சன் குழுமத்தின் உறுப்பினர்கள் யார் தெரியுமா ?
young_KD
மல்லிகா மாறன்  (கேடிகளைப் பெற்ற மகராசி)
கலாநிதி மாறன்
தயாநிதி மாறன்
அன்புக்கரசி மாறன் (கேடிகளின் தங்கை)
காவேரி கலாநிதி (பெரிய கேடியின் மனைவி)
காவ்யா கலாநிதி (மகள்)
நீனா பெல்லியப்பா (கலாநிதியின் மாமனார்)
செரினா பெல்லியப்பா (கலாநிதியின் மாமியார்)
இவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊடக மாஃபியாவாக வளர்ந்து நிற்கும் சன் குழுமத்தின் உரிமையாளர்கள்.
இந்த சன் குழுத்தின் தொடக்க கால வரலாற்றை சவுக்கு தளத்தில் கேடி சரித்திரம் என்ற கட்டுரையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கேடிகளின் வரலாறே பொய், புரட்டு, வஞ்சகம், சூது இன்னபிற.
தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான பணத்துக்கு அதிபதிகளாக இருக்கும் கேடி சகோதரர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா ?
வேலூர் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கோவை முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கே.எஸ் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி, ஆர்எம்அர் ரமேஷ்
சேலம் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் கேபிள்ஸ் ப்ரைவெட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், கே.சண்முகம்
சன் அகாடமி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் உதயநிதி, கலாநிதி மாறன், எஸ்.செல்வம், கே.சண்முகம்
ஜெமினி டிவி ப்ரைவெட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், ஏ.மனோகர் ப்ரசாத், பி.கிரண், காவேரி கலாநிதி
கல் கம்யூனிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டேட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (மெட்றாஸ்) ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், எஸ்.செல்வம் மற்றும் காவேரி கலாநிதி
கேபிகே பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
குங்குமம் நிதியகம் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
உதயா டிவி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
குங்குமம் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன்  மற்றும் கே.சண்முகம்
சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் எஸ்.செல்வம்
சன் டைரெக்ட் டிவி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்
இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்
எச்.எஃப்.ஓ என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்
டிகே என்டர்ப்ரைசஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் ப்ரியா தயாநிதி
சன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்
ட்ரஸ்டிகள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
எஸ் & எஸ் டெக்ஸ்டைல்ஸ்
செல்வி செல்வம், காவேரி கலாநிதி, ப்ரியா தயாநிதி
எம்எம்எஃப் ட்ரஸ்ட்
ட்ரஸ்டீஸ் கலாநிதி மாறன் மற்றும் மல்லிகா மாறன்
கல் ரேடியோஸ்
இயக்குநர்கள் கலாநிதி மாறன்
சவுத் ஏஷியா எப்.எம்.
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
இந்தப் பட்டியல் 2006 அன்று உள்ளபடி.  இதற்குப் பிறகு மேலும் பல நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார்கள் கேடி சகோதரர்கள்.  கடைசியாக அவர்கள் தொடங்கிய தொழில் நிறுவனம்தான் ஸ்பைஸ் –ஜெட் விமான சேவை.
கேடி சகோதரர்களின் தொடக்க காலம் முதல், இன்றைய வளர்ச்சி வரை, திமுக என்ற மாபெரும் கட்சியின் நிதியும், அதிகார பலமும் பின்புலத்தில் இருந்து இயக்குகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  திமுகவால் வளர்ந்து இன்று தீட்டிய மரத்திலேயே பதம் பார்க்கிறார்கள் கேடிகள் என்பது வேறு விஷயம்.
ஆ.ராசாவை ஆறே மாதங்களில் கைது செய்த சிபிஐ, கேடி சகோதரர்கள் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் செயலற்று இருக்கிறது என்பது, கேடி சகோதரர்கள் எத்தனை பெரிய தீய சக்தியாக வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  தொலைபேசி இணைப்பைத் திருடி கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கு என்பது வெளிநாட்டில் ஆதாரங்களைத் தேட வேண்டிய வழக்கு அல்ல.   பத்தே நாட்களில் புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு எளிதான வழக்கு.  இந்த வழக்கிலும் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் கேடிகளின் செல்வாக்குக்கு ஒரு சான்று.
இந்த கேடி சகோதரர்களுக்கு அம்பானிகள் போலவும், ரத்தன் டாடா போலவும், ஆதித்ய பிர்லா போலவும், பஜாஜ் போலவும், பெரும் பணக்காரர்கள் வரிசையில் வர வேண்டும் என்ற தணியாத கனவு உண்டு. இந்தக் கனவின் ஒரு பகுதியே சொந்தமாக ஐபிஎல் அணி.
1356065909_ipl-sunrisers-logo27
சொந்தமாக ஐபிஎல் அணி வாங்க நினைப்பதில் தவறில்லை…. ஆனால், இலங்கையின் தமிழினப்படுகொலை காரணமாக தமிழகமே சிங்களனுக்கு எதிராக கொதித்தெழுந்து எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சிங்களனை தங்கள் அணியின் கேப்டனாக வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட இனத்துரோகிகள் என்பதை அடையாளம் காணுங்கள்.
தங்களது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை இலங்கைக்கு நடத்தி தொடர்ந்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.  பாலச்சந்திரன் புகைப்படம் வெளியாகி, தமிழகம் கொதிநிலையை எட்டியபோதும் கூட, இவர்கள் குறைந்தபட்சம் தங்கள் அணியில் உள்ள சிங்கள வீரர்களை நீக்குகிறோம் என்று அறிவிக்கவில்லை.
தமிழனின் வியர்வையிலும், தமிழனின் உழைப்பிலும், தமிழனின் பணத்தை உறிஞ்சிய இவர்கள், தமிழினத்துக்கே விரோதிகளாக தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.   இவர்கள்தான் தமிழினத்தின் உண்மையான எதிரிகள்.  எந்த திமுகவின் பலத்தில் வளர்ந்து எந்த திமுகவின் பலத்தில் இயங்கி வருகிறார்களோ, அந்த திமுகவே தீவிர சிங்கள எதிர்ப்பில் இறங்கியுள்ள நிலையில், வெளிப்படையாக சிங்களனோடு உறவாடி, சிங்களனோடு கொஞ்சி குலாவி, சிங்களனோடு தொழில் செய்து வரும் இவர்கள் தமிழின விரோதிகளா இல்லையா… இவர்களின் சன் டிவி பிறந்தநாளன்று இவர்களை சபிக்காமல் என்ன செய்வது ?'
கேடி சகோதரர்களை முழுமையான தீவிரத்தோடு எதிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.   இந்தக் கடமையை ஆற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மாணவ சமுதாயத்திடம் உள்ளது.
அன்பார்ந்த மாணவர்களே.  கடந்த ஒரு மாத காலமாக, தமிழகத்தை ஏறக்குறைய புரட்டிப் போட்டு விட்டீர்கள். பாலச்சந்திரனின் கொலைக்கான ஆதாரங்கள் வெளியானதும் நீங்கள் தொடங்கிய போராட்டம் தமிழகத்தையே பற்றி எரியச் செய்தது.  அரசியல் கட்சிகள் நடுநடுங்கின. மத்திய அரசு அதிர்ச்சியோடு வேடிக்கை பார்த்தது.  அரசியல் கட்சிகள் எப்படி இந்த மாணவர்களை தாஜா செய்வது என்று ஆருடம் பார்த்தன.  தமிழினத்தின் ப்ரூட்டஸ் டெசோவின் மார்க்கெட் போய் விட்டதே என்று கவலைப்பட்டார்.  சிறிது காலம் தலைமறைவாக இருந்த போலிப்பாதிரி மீண்டும் ஈழ விவகாரத்தை கையில் எடுக்கும் சூழல் உருவானது.  தமிழின ப்ரூட்டஸின் அன்புத் தளபதி திருமாவளவன் கூட, முதலில் போராட்டத்தைத் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.
DSC_0419
DSC_0424
DSC_0429
இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய திருப்பமாக, எட்டி உதைத்தால் கூட வெளியேற மாட்டேன் என்று பிடிவாதமாக ஒட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார் கருணா. மாணவர்களின் போராட்டங்களுக்கு மக்களிடையே இருந்த தீவிர ஆதரவை நன்கு உணர்ந்த ஜெயலலிதா, மாணவர்களின் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கினார்.  தொடக்கத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு தவறான முடிவை எடுத்த ஜெயலலிதா, சுதாரித்துக் கொண்டு, மாணவர் போராட்டத்துக்கு மறைமுக ஆதரவ அளித்தார்.
ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக  இந்திய அரசு நிலைபாடு எடுக்க வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தோடு சில மாணவர்கள் போராடினர். அமெரிக்கத் தீர்மானமே ஒரு கண் துடைப்பு என்ற ரீதியில் சில மாணவர்கள் போராடினர். ஆனால் இந்த இரு தரப்பையும், சிங்கள எதிர்ப்பு என்ற ஒற்றை நூல் இணைத்தே வைத்திருந்தது.  மாணவர்களின் போராட்டம் ஐநா தீர்மானத்துக்குப் பிறகும், தனி ஈழம் கோரி ஜெயலலிதா எடுத்து வந்த தீர்மானத்துக்குப் பிறகும் சற்றே தளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவைத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க வைக்க நிர்பந்தித்தது மாணவர்களின் போராட்டம் மட்டுமே என்றால் அது மிகையல்ல.  அது நீர்த்துப் போன தீர்மானமாக இருந்தாலும், இலங்கையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மத்திய அரசு அப்படி ஒரு நிலைபாட்டை எடுக்க வைத்ததில் மாணவர்களின் பங்கு மகத்தானது.
தமிழினத்தைக் கருவறுத்த சிங்களனோடு கூட்டு சேர்ந்து, அதில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக போராட வேண்டிய கடமை இன்னும் இருக்கிறது.  மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகு, ஐபிஎல் என்ற கேளிக்கை விளையாட்டில் சிங்களனோடு கூட்டு சேர்ந்து, சிங்கள வீரர்களை தங்கள் அணியில் சேர்ந்து லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் துரோகிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு சம்பிரதாயமாக தொடங்கி அடங்கி விட்டது.   உண்மையில் மாணவர்கள் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டியது, இந்த கோடரிக் காம்புகளுக்கு எதிராகவே.
இந்தக் கோடரிக் காம்புகளில் முதன்மையான காம்பு தமிழகத்தைப் பீடித்திருக்கும் தீய சக்திகளான கேடி சகோதரர்கள்.   தமிழனின் உழைப்பில் விளைந்த பணத்தை சம்பாதித்து, தமிழ்நாட்டில் தொழில் நடத்தி, தமிழனின் பணத்தில் தொடர்ந்து திளைத்துக் கொண்டிருக்கும் கலாநிதி மற்றும் தயாநிதி ஆகிய கேடி சகோதரர்கள் ஒழிக்கப்பட வேண்டிய தீயசக்திகள்.
மாணவர்கள் சிங்கள எதிர்ப்போடு சேர்த்து செய்ய வேண்டியது, துரோகிகளை அம்பலப்படுத்தி ஒழிக்க வேண்டியதும் ஆகும்.  அன்பான மாணவச் செல்வங்கள் தங்கள் சக்தியை சன் குழுமத்துக்கு எதிராக திருப்ப வேண்டும் என்று சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது.   தமிழின விரோதிகளைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
எங்கெங்கெல்லாம் எஸ்சிவி கேபிள் இணைப்பு இருக்கிறதோ, அந்த இடங்களின் கேபிள் ஆபரேட்டர்களை வேறு ஆபரேட்டர்களுக்கு மாற்றச் சொல்லுங்கள்.
எங்கெல்லாம் சன் டிடிஎச் இணைப்பு இருக்கிறதோ அங்கே வேறு இணைப்புக்கு மாற்றச் சொல்லி வேண்டுகோள் வையுங்கள்.
யாரெல்லாம் தினகரன் வாங்குகிறார்களோ, அவர்களை வேறு செய்தித்தாள் வாங்கச் செய்யுங்கள்.
தமிழ் முரசு வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.
சன் டிவி பார்க்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.
சூரியன் எப்எம் கேட்காதீர்கள் என்று பரப்புரை செய்யுங்கள்.
தயாநிதி மாறன் எந்தத் தொகுதியின் போட்டியிட்டாலும், அந்தத் தொகுதியில் கூட்டமாகச் சென்று தயாநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள்.  தயாநிதியைத் தோற்கடிப்பதையே உங்கள் ஒரே லட்சியமாகக் கொள்ளுங்கள்.
தமிழின விரோதிகள் கேடி சகோதரர்கள் மீதான உங்கள் எதிர்ப்பைத் தீவிரப்படுத்துங்கள்.    கேடி சகோதரர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, தமிழினத்துக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை.
 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....