முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

october 2005 kushboo issue

India today
ஆதிக்கம் - ஆபாசம் - ஆண்கள்
அமைதி காக்கலாமா பெண்கள்? பெண் வெறும்உடல். ஆண்களைப் பராமரிக்கவும், அவனுக்கு சுகம் கொடுக்கவும், வாரிசைப் பெற்றுக் கொடுக்கவுமே பெண் படைக்கப்பட்டவள். வலிமை மிக்கவனான ஆண் எவ்வளவு கொடுமையானவனாக, கெட்டவனாக இருந்தாலும், மனைவி என்பவள் கணவனுக்குக் கட்டுப்பட்டு, அவனால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு, குடும்பத்தை வழி நடத்திச் செல்ல வேண்டும். கணவனை விட்டுப் பிரிவதைப் பற்றியோ வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது பற்றியோ அவள் கனவிலும் நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தாலோ, கணவனுக்கு மட்டுமே முழுமையான சுகம் தர படைக்கப்பட்டவள் வேறொருவனால் பலாத்காரம் செய்யப்பட்டாலோகூட, அவள் கற்பை இழந்தவளாகவும், கெட்டுப் போனவளாகவும் ஆகிறாள். அன்றிலிருந்து அவள் வாழ்வதற்கானத் தகுதியையும் இழக்கிறாள்'' - கற்புக்கு இந்து மதம் கொடுக்கும் விளக்கம் இந்த ரீதியிலானது. 

இந்த முட்டாள்தனமான கருத்து தங்களுக்குச் சாதகமாக இருப்பதால், எல்லா தரப்பு ஆண்களும் பெண்களின் கற்பைக் கட்டிக்காக்க காலங்காலமாகப் போராடுகிறார்கள். பழமைவாத மற்றும் அடிமைத்தனமான கற்பிதங்களால் பெண்களையும் தலித் மக்களையும் ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக வைத்திருக்க, இந்து மதத்துக்குத் துணை போகிறார்கள் அனைத்துத் தரப்பு ஆண்களும். அவர்களால் பெண்களும்.

இன்றைய அரசியல் தலைவர்கள், ‘தமிழ்ப் பண்பாட்டு' முலாம் பூசிய இந்து மதக் கற்பிதங்களைக் கட்டிக்காத்து, சாதி அழிந்துவிடாதபடியும், பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிடாதபடியும், மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் மேம்பட்டு விடாதபடியும் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். ‘கற்பு' என்ற ஒற்றைச் சொல், இன்று தமிழகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது அதன் விளைவே. ‘தமிழகப் பெண்கள் கற்பில்லாதவர்களா?' என்று பெண்களே சிலிர்த்துக் கொண்டு போராடுவது, பகுத்தறிவு மண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம். தலித் தலைவர்களின், தலித் பெண்களின் இந்த ஆர்ப்பாட்டம், இந்து கற்பிதங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி என்ற வேதனையோடு....

- ஜெனிபர்

உலகம் முழுக்க பெண்கள் எத்தனையோ வகையானப் போராட்டங்களை நாள்தோறும் நிகழ்த்துகிறார்கள். அவையெல்லாம் அடிமைத்தனத்துக்கும், தன் மீதான வன்முறைக்கும் எதிரானவை. ஆனால், தமிழகப் பெண்கள் மட்டும் தங்கள் மீதான அடிமைத்தனம் நிலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராட்டம் நடத்துகிறார்கள். கேட்டால், தமிழ்க் கலாச்சாரமாம்! யாரால் உருவாக்கப்பட்டது இந்தக் கலாச்சாரம்? ஆண், கடவுள் மற்றும் மதத்தின் உதவியுடன் தன் சுயநலத்துக்காகத் தோற்றுவித்த பாரம்பரியக் கட்டுப்பாடுகள்தான் இன்றும் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் நசுக்குகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கலாச்சாரம் என்ற வார்த்தையும் அடிமைத்தனம் என்ற வார்த்தையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. பெண் வீட்டை விட்டு வரக் கூடாததும், அவள் பேதையாக இருக்க வேண்டியதும், ஆணின் அனுமதியின்றி சிறு துரும்பையும் அசைக்க முடியாதவளாக இருப்பதும், ஆணைத் தொழுது, அவனுக்குக் கட்டுப்பட்டு, அவன் சொல்வதை உண்டு, உடுத்தி, அவனுக்குப் பின் தூங்கி முன் எழுவதே தமிழ் அடிமைக் கலாச்சாரம். தந்தை பெரியார் உருவாக்கிய தொடர்ச்சியான பகுத்தறிவுப் பிரச்சாரங்களால் தமிழகம் ஓரளவுக்கு இதிலிருந்து விடுபட்டிருந்தது. ஆனால், அந்த ஜனநாயகச் சூழலுக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.

அந்தரங்கத்தை ஆபாசமாக்கி வியாபாரம் பார்க்கும் பத்திரிகை, திரைப்படம், மாணவ - மாணவியர் பேசிக் கொள்வதைக்கூட கலாச்சார சீரழிவாகப் பார்க்கும் கல்வி நிறுவனங்கள், தனிமனித சுதந்திரத்தைக் குற்றமெனக் கருதும் காவல்துறை, பாலியல் கருத்துகளைப் பெண் வெளிப்படையாகப் பேசினால், அவற்றுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் என தமிழகம் முழுக்க ‘ஒழுக்கக் காவலர்'களாக - ‘பண்பாட்டுக் காவலர்'களாக நின்று, பெண்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

குஷ்பு விவகாரத்தை பூதாகரமாக்கி... ஊடகங்கள் பொருளாதார ஆதாயமும், மத அமைப்புகள் சிறுபான்மையினர் எதிர்ப்பு ஆதாயமும், கட்சிகள் அரசியல் ஆதாயமும் தேடுவதில் குறியாக இருக்கின்றன. குழம்பிய குட்டையில் ஆளாளுக்குத் தூண்டில் போட்டுக் காத்திருக்கிறார்கள். கிடைத்தவரை அவரவருக்கு லாபம் என்றாலும்கூட, பெண்கள் அமைப்புகளையும் மகளிரணியையும் ஒன்றிணைத்துக் கொண்டு, இந்தச் சமூகத்தில் பெண்ணடிமைத்தன சித்தாந்தங்களை ஆழ ஊன்றுகின்றனர் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கண்டிக்க வேண்டியிருக்கிறது.

‘இந்தியா டுடே' இதழிலும், ‘தினத் தந்தி' நாளிதழிலும் குஷ்பு கூறியிருக்கும் கருத்துகளில் இவர்கள் கூறும் அவதூறு இல்லை. தமிழகப் பெண்கள் கற்பில்லாதவர்கள் என்றோ, திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியிலோ - அவர் எந்தக் கருத்தையும் அதில் கூறவில்லை. மாறாக, ‘‘பெண்கள் திருமணமாகும்போது, கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்'' என்கிறார். மேலும், ‘‘திருமணத்துக்கு முன்பு ‘செக்ஸ்' வைத்துக் கொள்ளும் போது, கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்'' என்றும், இறுதியாக, ‘‘பெண்கள் தமது ‘செக்ஸ்' விருப்பங்களைப் பற்றிப் பேசினால், அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும்'' என்றும் சொல்கிறார்.


Outlookகிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் எத்தனை எத்தனை சிறுமிகளும், இளம் பெண்களும் ஆண்களால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்து அதை மறைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? ‘எய்ட்ஸ்' என்னும் உயிர்க்கொல்லி நோயாலும், பால்வினை நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாகப் பெண்கள்; அதிலும் (ஆண்களால் இழைக்கப்படும் கொடூரங்களுக்கு) குடும்பப் பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்குப் பாலியல் கல்வி தீர்வாக இருக்கும் என்று குஷ்பு வலியுறுத்தியதைத் தவறு என்று சொல்கிறார்கள் இந்த ‘ஒழுக்கக் காவலர்கள்'.

புள்ளி ராஜாவுக்கு ‘எய்ட்ஸ்' வருமா? என்று ஒரு விளம்பரம் தமிழகத்தையே கலங்கடித்தது. ‘பாலியல் தொழிலாளர்களிடம் ‘போகும்' ஆண்களை ஆணுறை பயன்படுத்தச் சொல்லி அது வலியுறுத்தியது. ‘மனைவியைத் தவிர வேறு பெண்களிடம் போகாதே, போனால் உனக்கு ‘எய்ட்ஸ்' வரும் என்று அச்சுறுத்தாமல், போ, ஆனால் ஆணுறை பயன்படுத்து என்று ‘ஆலோசனை' கொடுத்தது. அப்படிப் பலரிடம் கற்பிழந்த ஆண்மகனை இந்த சமூகம் வெறுக்குமா? கெட்டுப் போனவன் என்று குற்றம் சாட்டுமா? வேசி என்றோ, விபச்சாரி என்றோ சாடுமா? பாதுகாப்பான உடலுறவு குறித்து மேடை போட்டு ‘மைக்' அமைத்து ஆணுக்குப் பரிந்துரைக்கலாம். அதுவே பெண்ணுக்கென்றால், அதுவும் ஒரு பெண்ணே என்றால் பொத்துக் கொண்டு வருகிறது. கலாச்சார சீரழிவாக்கப்படுகிறது. இதுதான் தமிழகம். உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் செவிமடுக்காத இந்தச் சமூகம், கற்பொழுக்கம் என்ற அடிமைத்தனத்துக்கு மட்டும் எப்படியெல்லாம் வக்காலத்து வாங்குகிறது பாருங்கள்.

குஷ்புவின் தனிப்பட்ட கருத்துகளை இவ்வளவு பரபரப்பாக்கியது யார்? அவர்களுடைய தேவை என்ன? அதே ‘இந்தியா டுடே'யில் ‘செக்ஸ் சர்வே'க்காக கவிஞர் சுகிர்தராணியும் கருத்துக் கூறியிருக்கிறார்: ‘‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுச் சாரத்தின் வழி நின்று திருமணத்தில் ஒருவனோடு இணையும்போது, கன்னித்தன்மையும் கற்பும் எதிர்பார்க்கப்படுகின்றன. கற்பைப் பற்றிப் பேசும்போது, பெண்களின் பாலியல் சுதந்திரம் முன் நிற்கிறது. தன் உடலை மற்றவர்க்கு வழங்குவதிலுள்ள தன் விருப்பத்திலிருந்து அது தொடங்குகிறது. மரபுகளைக் கட்டுடைத்து ஆண் மதிப்பீடுகளை மீறும்போது, கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவாக அது பார்க்கப்படுகிறது. இங்கு விளிம்பில் நிற்க வைக்கப்படுகிறவர்கள் பெண்களே. கற்பு, பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை பெண்களிடம் மட்டுமே எதிர்பார்ப்பது எந்தச் சமூகத்திற்கும் அழகல்ல; அவசியமும் அல்ல.''

சுகிர்தராணியின் இந்தக் கருத்துகள், குஷ்புவின் கருத்துகளை விடவும் மிகக் கூர்மையாகக் கற்பின் மீதும், கன்னித் தன்மையின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றன. ஆனால், அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்வதன் மூலம் அரசியல் லாபம் ஒன்றும் அவர்களுக்குக் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை.

சர்ச்சை தொடங்கிய இடத்திலிருந்து பார்ப்போம். மாலை நாளிதழ்களின் மொத்த விற்பனையே இருபதாயிரம் படிகள் இருக்க, ‘தினகரன்' குடும்பத்தைச் சேர்ந்த ‘தமிழ் முரசு' மட்டும் லட்சத்தை நோக்கி அதிவேகமாக போய்க் கொண்டிருக்கிறது. காரணம், அவர்கள் கொடுக்கும் கிளு, கிளு, கிசு, கிசு செய்திகள். கூடவே இலவசப் பொருட்கள். ‘இந்தியா டுடே'யில் குஷ்பு கொடுத்த பேட்டியிலிருந்து ஆங்காங்கே சில வார்த்தைகளை உருவிப் போட்டுத் தலைப்புச் செய்தியாக்கி நாலைந்து பேரிடம் இது குறித்துக் கருத்து கேட்டு, பக்கத்தை நிரப்ப, விஷயம் சர்ச்சையானது. அப்பாடா தமிழ் நாடே இன்றைக்கு நாம் உருவாக்கின செய்தியால் கதிகலங்கிப் போயிருக்கிறது என்று ‘தமிழ் முரசின்' ஆசிரியர் குழு காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

தமிழ்ப் பத்திரிகைகளுக்கு இதைவிட பெரிய வேலையோ, பொறுப்போ என்ன இருக்கிறது? யார் கற்போடு இருக்கிறார்கள், யார் அதை இழக்கிறார்கள் என்று ஆராய்ந்து சொல்லி, இந்த சமூகத்தை மேன்மை அடையச் செய்யும் ஒற்றைக் குறிக்கோளோடு இயங்கும் ‘தமிழ் முரசு' மாதிரியான பத்திரிகைகள், புழுத்துப்போன பழமைவாதிகளின் கூடாரமாகவே இருக்கிறது. கற்பொழுக்கம் பற்றி இவ்வளவு அக்கறைப்படுகிறவர்கள்தான் முழுப் பக்க கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு காசு பார்க்கிறார்கள். ஆனால், கலாச்சாரத்துக்கு ஏதாவது கேடு வந்தால் மட்டும் அவர்களால் ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாது!

உலகம் முழுக்கவே வறுமை அதிகரித்திருக்கிறது. உத்திரப்பிரதேசத்திலும் மகாராட்டிராவிலும் சத்தின்மையால் குழந்தைகள் செத்து மடிகின்றன. கோகோ கோலா மாதிரியான பன்னாட்டு நிறுவனங்கள் நிலம், நீர், உழைப்பு என எல்லாவற்றையும் சுரண்டுகின்றன. எங்கும் ஊழல், பெண்களுக்கெதிரான, குழந்தைகளுக்கெதிரான வன்முறை, போதைப் பொருள் பெருக்கம், அதிகரிக்கும் சாதி அடக்குமுறை - இதெல்லாம் தலைப்புச் செய்தியாகத் தகுதியற்றவை. நடிகைகளைப் பின் தொடர்ந்து போய், அவர்களின் அந்தரங்கங்களை வியாபாரமாக்குவதை மட்டுமே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் பத்திரிகைகளின் உச்சபட்ச அரிப்புதான் குஷ்பு விவகாரம்.

குஷ்புவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகளும், பா.ம.க.வும் ஏன் இவ்வளவு காட்டமாகக் களமிறங்க வேண்டும்? திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்க போராட்டம் நடத்துகிறவர்கள், தரமான திரைப்படங்களை எடுக்கச் சொல்லி போராடுவதில்லை. பெண்களைக் கொச்சைப்படுத்தும் பாலியல் வக்கிர சிந்தனையைத் தூண்டும் குலுக்கு நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசப் பாடல்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லையே ஏன்?


Dinamalarதனி மனித சுதந்திரத்தில் தலையிடும் ‘ஒழுக்கக் காவலர்'கள், அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறார்கள். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறது, அண்ணா பல்கலைக் கழகம். பெண்கள் தாங்கள் விரும்பிய உடையை அணியத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு வீராங்கனையான சானியா மிர்சாவை கண்டிக்கிறது ‘ஜமாத்'. ‘பிரைவேட் பார்ட்டி' களில் கேமராவோடு புகுந்து, கணவர்களோடு இருக்கும் பெண்களைப் புகைப் படம் எடுத்து வெளியிடுகின்றன பத்திரிகைகள். இப்படியே போனால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதும், ஆண்களோடு சேர்ந்து பணியாற்றுவதும், கல்வி பயில்வதும்கூட நாளை குற்றமாக்கப்படும். இதற்கு அரசும் துணைபோகிறது.

கற்பொழுக்கத்துக்காகப் பெண்களை நரம்பு புடைக்க துடைப்பத்தோடு களமிறக்கிய இந்தத் தலைவர்கள், அப்பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டிற்காகவோ, பாலியல் துன்புறுத்தல் சட்ட வரைவுக்காகவோ, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றச் சொல்லியோ குரல் கொடுக்கவில்லையே! பெண்களுக்கு ‘ஒழுக்கத்தை' வலியுறுத்துவதன் மூலம் அவர்கள் அடிமை வட்டத்திலிருந்து வெளியேறிவிடாமல் பார்த்துக் கொள்ளலாம். உரிமையை வலியுறுத்தினால், பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி நாட்டை ஆளக் கிளம்பிவிடுவார்கள். அப்புறம் இந்த ஆண்களுக்கு ஆக்கிப்போடவும், சேவை செய்யவும் ஆளில்லாமல் போய்விடுமே!

தமிழ் என்ற ஒற்றை ஆயுதம், அரசியலுக்கு எந்தளவுக்குப் பயன்படும் என்பதை திருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் முன்பே புரிந்து கொண்டவர் தங்கர்பச்சான். அண்மையில், ‘பணத்துக்காக நடிக்கிற நடிகைகள் விபச்சாரிகளுக்கு சமம்' என்ற ‘அரிய' கருத்தை வெளிப்படுத்தியவர். தங்கர்பச்சானைப் பொறுத்தவரை விபச்சாரியாக இருந்தாலும், பணம் பற்றி கவலைப்படாமல் அவள் சுகம் தேடி வரும் ஆணுக்குப் பத்தினியாகப் படுத்து எழுந்திரிக்க வேண்டும் (பார்க்க: ‘தென்றல்' படம்). முழுக்க முழுக்க பெண்ணடிமைத்தன கருத்துகளை வைத்துப் படங்கள் எடுத்துவிட்டு, ‘தமிழ்ப் படம் எடுக்கிறேன்', ‘நானொரு தமிழன்', ‘தமிழ்க் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கிறேன்' என்று பிதற்றுகிறார்.

நடிகைகளை விபச்சாரிகள் என்று தங்கர்பச்சான் திட்டியதற்கான காரணம், அவரின் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' படத்தில், நாயகி நவ்யா நாயர் தனக்கு சிகையலங்காரம் செய்யும் பெண்ணுக்குத் தர வேண்டிய அறுநூறு ரூபாய் சம்பள பாக்கியைக் கேட்டு படப்பிடிப்பை ரத்து செய்தார். தங்கர்பச்சானே இந்தப் படத்தை தயாரித்திருப்பதால், ஒரு தயாரிப்பாளரின் நிலை நடிகைகளுக்குப் புரியவில்லை என்று புலம்பியிருக்கிறார். ‘கேவலம் அறு நூறு ரூபாய் பணத்துக்காக' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்த அறுநூறு ரூபாய், பளிங்கு மாளிகையில் குடியிருக்கும் தங்கர்பச்சானுக்கு வேண்டுமானால் கேவலமாக இருக்கலாம். சிகையலங்காரம் செய்யும் அந்தப் பெண்ணுக்கு? குழந்தைக்குப் பால் வாங்கவோ, பள்ளிக் கட்டணம் கட்டவோ, மருத்துவச் செலவுக்கோ அந்தப் பணம்தான் வாழ்வாதாரம்.

உழைத்ததற்கு கூலி கேட்டதற்கு ‘தேவிடியா' என்று திட்டுகிறார் தங்கர்பச்சான். தனக்குக் கீழ் பணிபுரிபவரின் வயிற்றுப்பாட்டைக்கூட புரிந்து கொள்ள முடியாத தங்கர்பச்சானை, தமிழ் சமூகம் அவர் எந்தச் சூழலில் அப்படிப் பேட்டிக் கொடுத்தார் என்பதை மட்டும் புரிந்து, பதவிசாக நடந்து கொள்ள வேண்டுமாம்.

தங்கர்பச்சான் என்ன சமூக விடுதலைக்காகவா படம் எடுத்துவிட்டார்? அவர் படத்தில் குலுக்கு நடனங்கள் இல்லையா என்ன? ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' யில் கூட, அரைகுறை உடையில் பெண்ணை ஆட வைத்திருக்கிறார். தங்கர்பச்சானுக்கு தெரிந்த ஒரே தமிழ்க் கலாச்சாரம் பெண்ணடிமைத்தனம் என்பதை அவரின் படங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. கணவன் என்னதான் பொறுப்பற்றவனாக, ஊதாரியாக, சோம்பேறியாக, குடிகாரனாக, பெண்களைத் தேடிப் போகிறவனாக இருந்தாலும் - மனைவி என்பவள் அதைப் பொருட்படுத்தாமல், தையல் வேலை செய்தாவது சம்பாதித்து, வீட்டையும் கவனித்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து, உலகெல்லாம் சுற்றித் திரும்பி வரும்போது, கொஞ்சமாய் கோபித்துக் கொண்டு அணைத்துக் கொள்ள வேண்டுமாம். ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' வலியுறுத்தும் பத்தினித்தனம் தமிழ்க் கலாச்சாரம் இதுதான்!

தங்கர்பச்சான் நடிகைகளை கேவலப்படுத்தியபோது கொதித்துப் போன நடிகைகளில் குஷ்பு குறிப்பிடத்தக்கவர். ஒரு ஆண், நடிகைகளாகிய பெண்களைப் பார்த்து ‘விபச்சாரி' என்று சொன்னபோது திரண்டு வராத மகளிரணியும் - பெண்கள் அமைப்பும், ஒரு பெண் பாலியல் விஷயங்களுக்காக குரல் கொடுக்கும்போது மட்டும் சீறிப்பாய்வதன் நியாயம் புரியவில்லை. ‘நடிகை என்பவளே ஒழுக்கக்கேடானவள்தான்' என்ற எண்ணம் சமூகத்தின் ரத்தத்திலேயே ஊறிப் போயிருக்கிறது. அதனால்தான் குஷ்புவுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாதிரியான அமைப்புகள்கூட, ஆதரவாக அழுத்தமான குரல் கொடுக்கவில்லை. ஆணாலேயே பாலியல் வக்கிரங்கள் அரங்கேறுகின்றன என்றாலும், பெண் மட்டுமே அவச் சொல்லுக்கு பலியாக்கப்படுகிறாள். ஆணாதிக்கச் சமூகத்தின் கை பொம்மைகளாகத்தான் பெண்கள் இன்றும் இருக்கிறார்கள் என்ற உண்மை சுட்டெரிக்கிறது.
Women agitating against Kushbooதிரை உலகமே திரண்டு நின்று கண்டித்ததால், காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அவமானப்பட்ட தங்கர் பச்சானின் பழிவாங்கும் படலம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வன்னியச் சாதி வெறியரான அவருக்குத் தோள் கொடுக்கவே பா.ம.க.வின் இந்த நாடகம். திரைப்படங்கள், பாடல்கள், விளம்பரங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எதில் இல்லை பாலியல் வக்கிரம்? அத்தனையும் ஆபாசமாகிக் கொண்டிருக்கிறது. பண்பாட்டுச் சீரழிவின் தொடக்கம், வளர்ச்சியும் ஆண்களாலேயே நிகழ்த்தப்படுகிற சூழலில், பெண் உடல் தினம் நசுக்கப்படுகிறது. பார்வையாளர்களை உடல் கூச வைத்த ‘சன்டேன்னா ரெண்டு' என்ற ‘தினமலரின்' விளம்பரத்தை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை இந்த ‘ஒழுக்கக் காவலர்'கள்! மிக மிக வக்கிரமான இந்த விளம்பரத்தை வைத்து தனது நாளேட்டின் விற்பனையைப் பெருக்கத் துடிக்கும் ‘தினமலர்' தான் ‘கலாச்சாரத்தின் காவல் நாயா'கச் செயல்படுகிறது.

‘இந்தியா டுடே'யும் ‘அவுட்லுக்' இதழும் ‘செக்ஸ் சர்வே' என்கிற பெயரில் மிகக் கேவலமான, அநாகரிகமான, அந்தரங்கத்தைக் கொச்சைப்படுத்தும் கேள்விகளைக் கொண்டு கருத்துக் கணிப்பு நடத்தி, அதை ஆபாசப் புகைப்படங்களோடு வெளியிடுகின்றன: ‘‘பெண்களின் எந்தப் பகுதி ஆண்களைக் கவரும்? உங்கள் பார்ட்னர் முன் சுய இன்பத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா? யாருடன் முதலில் செக்ஸ் வைத்துக் கொண்டீர்கள்? வாய் வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆண்களின் எந்த உறுப்பை செக்சியானதாகக் கருதுகிறீர்கள்?...'' சமூக விடுதலைக்கு உதவும் கேள்விகளா இவை? நியாயப்படிப் பார்த்தால் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பா.ம.க.வின் சீற்றம் இப்பத்திரிகைகள் மீதுதானே இருந்திருக்க வேண்டும்?

இங்கு இன்னொரு செய்தியையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இதே விடுதலைச் சிறுத்தைகள் இதற்கு முன்பு நடத்திய சமூக விடுதலைப் போராட்டங்களை, இந்தப் பத்திரிகைகள் - இத்தனை கொட்டை எழுத்துகளில் தலைப்புச் செய்தியாக்கியதா? திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த கொடுமையையோ, பாப்பாபட்டி, கீரிப்பட்டி சாதி வக்கிரத்தையோ முதன்மைச் செய்தியாக வெளியிட வேண்டும் என்ற அக்கறையும் பொறுப்பும் அவர்களுக்கு இருந்ததா?

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த குஷ்புவை எதிர்த்து, இந்துத்துவா அமைப்புகள் பெரிய போராட்டம் எதுவும் நடத்தவில்லை. சாதி இந்துக்களும், தலித்துகளும் அவர்களை முந்திக் கொண்டு போராடி, ஆதிக்கவாதிகளையே வாயடைக்க வைத்துவிட்டார்கள். சாதி இந்துக்களும், தலித் அமைப்புகளும் - இந்து ஆதிக்கவாதிகளோடு ஒத்துப்போவது இது முதல் முறை அல்ல. ஆனால், பெண் எதிர்ப்பு என்று வரும்போது இஸ்லாமியர்களும் இந்துத்துவவாதிகளோடு நேர்கோட்டில் நிற்பதுதான் விந்தையிலும் விந்தை! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ‘குஷ்புவை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது'. மதங்களையோ மதவாதிகளையோ இங்கு குறை சொல்ல புதிதாக ஒன்றுமில்லை. காரணம், அவர்கள் ஒருபோதும் பெண் விடுதலைக்கு உழைக்கப் போவதில்லை. பார்ப்பான் மூளை எப்படி தலித் விடுதலை பற்றி சிந்திக்காதோ, அதே போலதான் ஆண் மூளையும் பெண் விடுதலையை ஏற்காது.

எல்லா துறைகளிலும் பெண் முன்னேறிவிட்டதைப் போன்ற தோற்றம் இருந்தாலும், இன்னும் உளவியல் ரீதியாக தன்னை வலிமையற்றவளாக எண்ணும் போக்கே நீடிக்கிறது. அதனால்தான் எத்தகைய பெரிய பதவியில் இருந்தாலும் குடும்ப வன்முறைக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் பெண் ஆளாக நேர்கிறது. ராணுவ ஆட்சியையும், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளையும் எதிர்த்து மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டத்திற்குத் தலைவணங்கலாம். ஆனால், தமிழகப் பெண்கள், போராடி ஒழிக்க எவ்வளவோ அடிமைத்தனங்கள் ஓங்கி நிற்கையில், ‘நாங்கள் கற்புக்கரசிகள்' (நாங்கள் அடிமைகள்) என்று ‘பெருமை'யோடு பெண்ணியத்துக்கு எதிராகப் போராடுவது கண்டு அவமானத்தில் தலை குனிவதைத் தவிர வேறு வழியில்லை.

ஜனநாயகத்துக்கு எதிரான ஆதிக்கவாதிகளையும் ‘ஒழுக்கக் காவலர்'களையும் கண்டிக்காமல் வளரவிட்டோமானால், பெண் விடுதலையும் அதனால் சமூக விடுதலையும் வேரோடு அழித்தொழிக்கப்பட்டுவிடும். இதுகாறும் வளர்த்தெடுக்கப்பட்ட பகுத்தறிவும், பெண் சுயமரியாதையும் மிக வேகமாக பொசுக்கப்படுகிறது. இதற்கு அனைத்துத் தரப்பு ஆண்களும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். ஆக, இங்கு ஒன்றிணைய வேண்டியது பெண்கள். ஆதிக்கம் - ஆபாசம் - ஆண்கள் இம்மூன்றுக்கெதிராகவும் ஒரு நிலையான போராட்டத்தைப் பெண்கள் உடனே தொடங்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில், தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில், இந்துமதக் கற்பிதங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, தன் கொடிய கால்களால் இந்தச் சமூகத்தைப் புரட்டி எடுக்கும். அந்தத் தாக்குதலில் மிகக் கொடூரமாக பலியாகப் போவது தலித் மக்களும் பெண்களும்தான்.


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....