முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருணாநிதி இன்று..?


‘`சார்... தலைவரே!” என்று அழைக்கிறார் ரஜினிகாந்த். அவரை அடையாளம் காண முடியவில்லை கருணாநிதியால்.

‘`ஐயா, வைரமுத்து வந்திருக்கிறேன். உங்கள் கவிஞர் வந்திருக்கிறேன்’’ என்று உரக்கக் குரல்கொடுக்கிறார் வைரமுத்து. குரலோசை, காதுகளுக்குள் போகவில்லை கருணாநிதிக்கு.

“அப்பா, திருவாரூர் போயிட்டு வர்றேன்” - உத்தரவுக்காகக் காத்திருக்கிறார் ஸ்டாலின். உரக்கச் சொல்லியும் உணர்வு இல்லை கருணாநிதியிடம்.

“அண்ணே, அறிவாலயம் போகலாமா?” இது துரைமுருகனின் வெடிக்குரலில் வெளிப்படும் வேதனைக் கேள்வி. சிக்கலான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் கருணாநிதியிடம் இருந்து வரவில்லை எதிர்க்குரல்.

நாளிதழை வாசிக்கிறார் சண்முகநாதன். சத்தம் இல்லை கருணாநிதியிடம்.

‘நெஞ்சுக்கு நீதி’யில் இருந்து சில பகுதிகளை ராஜமாணிக்கம் படிக்கிறார். பதில் இல்லை கருணாநிதியிடம்.

டி.வி-யில் பழைய பாடல்களை ஓடவிடுகிறார்கள். கேட்பதாக உணர முடியவில்லை.

அவரே முன்னொரு காலத்தில் எழுதிய வசனங்கள் மிக உரத்த ஒளியில் காட்டப்படுகின்றன. கருணாநிதியின் கவனம் அவற்றில் பதியவில்லை.

எப்போதும் தன்னைச் சுற்றியே அரசியல் இருக்க வேண்டும் என நினைத்த, ‘என்னைத் திட்டினாலும் பாராட்டினாலும் அவர்கள் `கருணாநிதி' என்றே சொல்கிறார்கள்’ எனச் சொல்லிக்கொண்ட, புதிய செய்தியை தான் பரப்புவது அல்லது பழைய செய்திக்கு தனது எதிர்வினையை வழங்குவது என எப்போதும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாகவே இருந்த கருணாநிதிக்கு, இப்போது எதையும் உணரும், உள்வாங்கிக்கொள்ளும், வெளிப்படுத்தும் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது.
கடந்த ஒரு வார காலமாக ஒருவித முன்னேற்றம் இருக்கிறது, வழக்கம்போல் காலையில் தன்னைப் பார்க்க வந்த ஸ்டாலினைப் பார்த்து, புருவங்களை உயர்த்திக் கவனித்திருக்கிறார் கருணாநிதி.

பாசுரம் பாடிய ஜெகத்ரட்சகனைப் பார்த்து, மெள்ளச் சிரித்துள்ளார் கருணாநிதி. இதைப் பார்த்ததும் ஜெகத், ‘`ஐயா, நீங்க ராமானுஜர் மாதிரி 109 வயது வரைக்கும் இருப்பீங்க” என்று சொல்லி, மேலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து, கருணாநிதியின் கண்களில் இருந்து இரண்டு மூன்று சொட்டு நீர்த்துளிகள் விழுந்துள்ளன.

தினமும் காலையும் மதியமும் அப்பாவைப் பார்க்க வரும் கனிமொழி, நான்கைந்து நாட்களுக்கு முன்னர் உள்ளே வருகிறார். `ரெண்டு மூணு நாள் வெளியூர் போறேன்' என்கிறார். தன் முகத்துக்கு நெருக்கமாக இருந்த கனிமொழியின் நெற்றியில் முத்தம் இட்டுள்ளார் கருணாநிதி.

உடனே ராசாத்தி அம்மாளுக்குத் தகவல் தருகிறார் கனிமொழி. அவர் அவசரமாக வருகிறார். அவரைப் பார்த்ததும் கண்கள் லேசாகக் கலங்குகின்றன கருணாநிதிக்கு.

ஆட்களைக்கூட அடையாளம் காண முடியாமல் இருந்தவர், குடும்ப உறுப்பினர் முகம் அறிவதும், ஏதோ உள்ளுக்குள் யோசித்து அதை வெளிப்படுத்த வார்த்தைகள் வசப்படாமல் கண்கள் கசிவதும் கோபாலபுரத்துக் காட்சிகளாக இப்போது இருக்கின்றன. இதை வைத்துத்தான், ‘`இன்னும் 15 நாட்களில் தலைவர் கலைஞர், அண்ணா அறிவாலயம் வந்து கட்சிப் பணிகளைக் கவனிப்பார்” என்று அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சொன்னது. தான் பெற்ற உற்சாகத்தை, உடன்பிறப்புகளுக்கு ஊட்டுவதாக டி.கே.எஸ் அறிக்கை அமைந்துள்ளது. ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை.

கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்தே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் கருணாநிதி. அதற்குக் காரணம், உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள். கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து என ஏற்பட்டு, ஒவ்வாமை காரணமாக முகத்திலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. இதனால் முகச்சவரம் செய்ய முடியாமல்போனது. தினமும் இரண்டு வேளை முகச்சவரம் செய்யும் கருணாநிதி, லேசான தாடியுடன் வெளியே மற்றவர் பார்வையில் பட வேண்டாம் எனத் தவிர்த்தார். இந்தக் கொப்புளங்கள் மறைவதற்கான மருந்தை, மருத்துவர்களால் முழுமையான அளவில் தர இயலவில்லை. `தேவையான அளவுக்கு மருந்தைத் தாங்கும் சக்தி, உடலுக்கு இல்லை' என்றனர் மருத்துவர்கள். அதனால் இந்தக் கொப்புளங்கள் மறைய நாள் பிடித்தது. அக்டோபர் மாதம் இதில் துன்பப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, உணவு உட்கொள்வதிலும் சிரமம் இருந்தது; லேசாக மறதியும் ஏற்பட்டது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னரே, உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிடுவார் கருணாநிதி. பிரமுகர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கியுள்ளார். வீட்டில் இருக்கும்போதே, ‘அறிவாலயத்திலா இருக்கேன்?’ எனக் கேட்டுள்ளார். பழைய நினைவுகள் மறப்பதும், ஆட்களை அடையாளம் காண்பதில் சிரமமும் இருந்த நிலையில்தான், உணவுப் பிரச்னையும் ஏற்பட்டது. எனவே, திரவ உணவை குழாய் மூலமாகச் செலுத்தினார்கள். மூக்கில் குழாய் போனதால் பேச்சும் தடைப்பட்டது.

`ஜெயலலிதா இறந்துவிட்டார்' என்று அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். ‘மூச்சை  நல்லா இழுத்து விடுங்க...’ என மருத்துவர் சொன்னபோது, ‘மூச்சை இழுத்து விட்டுடக் கூடாதுன்னுதான் இங்கே வந்திருக்கேன்’ என்று தன் பாணியில் கமென்ட் அடித்தார். அதன் பிறகு தான் பேசும், யோசிக்கும், வெளிப்படுத்தும் தன்மை மெள்ளக் குறைந்துள்ளது.

இரண்டாவது முறை மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டபோது இருந்த நிலைமையே வேறு. அவரது நெஞ்சில் சளி கடுமையாக அடைத்துக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, காவேரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பனி நேரம் என்பதாலும், சளி அதிகமாக அடைத்ததாலும் ஏற்பட்ட மூச்சுத்திணறல் அது. உடனடியாக நெஞ்சு சளி நீக்கப்பட்டது. மூச்சு விடுதல் இயல்பானது. ஒரு வாரக் காலத்துக்குப் பிறகு  மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்.

மருத்துவமனையில், ராகுல் காந்தியைத் தவிர  வேறு எவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. “சார்... சார்...” என்று அழைத்துப்பார்த்தார். கருணாநிதியால், ராகுலை உணர முடியவில்லை. கோபாலபுரம் வீட்டுக்குக் கொண்டுவந்த பிறகும் கருணாநிதியைப் பார்க்க எவரும் அனுமதிக்கப்பட வில்லை. ஸ்டாலின் செயல் தலைவர் ஆக்கப்பட்டபோது (ஜனவரி-4) க.அன்பழகன், துரைமுருகன் ஆகியோர் வந்திருந்தனர். புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது.

மற்றபடி செல்வி, ஸ்டாலின், தமிழரசு, ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் மட்டுமே கருணாநிதியைப் பார்க்க தின அனுமதி உள்ளவர்கள். பொங்கல் தினத்தன்று வைரமுத்து, சண்முகநாதன், ராஜமாணிக்கம் ஆகியோர் கருணாநிதியைப் பார்த்தனர். மற்றபடி மருத்துவர்கள், ஆண் மருத்துவப் பணியாளர்கள் ஆறு பேர் கருணாநிதியைக் கவனித்துக் கொள்கிறார்கள். நிழலாக இருந்த உதவியாளர் நித்யாவுக்குக்கூட இப்போது அதிக வேலை இல்லை. 

தி.மு.க தலைமைக்கழகச் செயலாளர்கள் கு.க.செல்வம், தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் ஆ.த.சதாசிவம், பூச்சிமுருகன் ஆகிய மூவரில் ஒருவர் கோபாலபுரம் வீட்டில் காலையும் மதியமும் இருக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக இவர்களுக்கு இந்தப் பணி தரப்பட்டுள்ளது.

இரவில் மட்டும் அல்ல, பகலிலும் தூங்கியபடியே இருக்கிறார் கருணாநிதி. குழாய் மூலமாகவே திரவ உணவு செலுத்தப்படுகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து ஊட்டச்சத்து மருந்தைக் கொடுக்கிறார்கள். சரியான திடஉணவு எடுக்காததால், உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. முகச்சவரம் செய்யப்படாததால், தாடி வளர்ந்துள்ளது. கறுப்புக் கண்ணாடியை அணிவிப்பது இல்லை. மருத்துவமனைக்கு இரண்டாவது முறை அழைத்துச் செல்லும்போதே மோதிரத்தைக் கழற்றிவிட்டார்கள்.

‘தலைவர் நன்றாக இருக்கிறார்’ என்பது மாதிரியான பொய்யான தகவல் பரப்பப்படுவதை ஸ்டாலின் விரும்பவில்லை. அதனால்தான் அவர் பெயரில் அறிக்கை வெளியிடுவதை ஸ்டாலின் நிறுத்தச் சொன்னார். இந்தப் பொங்கல் தினத்தன்று, கருணாநிதி பெயரில் வாழ்த்து அறிக்கை வெளிவரவில்லை. பொங்கல் அன்று கருணாநிதியைப் பார்த்து ஆசி பெற்று அவர் தரும் பத்து ரூபாயை வாங்கி பத்திரப்படுத்தும் வழக்கம் பலருக்கும் உண்டு. இந்த முறை அவரைப் பார்க்கவும் யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மாடிக்குச் சென்று கருணாநிதியைப் பார்த்துவிட்டு வர, இந்தத் தகவல் ஸ்டாலினுக்குப் போய், `‘இப்படி ஒவ்வொருத்தராப் போனா `என்னைய விடலை... உன்னைய விடலை'னு பிரச்னை வரும்’' எனக் கோபப்பட்டுள்ளார்.

‘`கொஞ்சம் இடம் மாறுதலுக்காக சி.ஐ.டி காலனி வீட்டில் கொண்டுபோய் வைத்துக்கொள்கிறோம்'' என்று ராசாத்தி அம்மாள் சொன்னதையும் ஸ்டாலின் ஏற்கவில்லை. ‘தலைவர் இங்கே இருப்பதுதான் நல்லது. நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம், போகலாம். இங்கேயே வேணும்னாலும் இருங்க!' என்று ராசாத்தி அம்மாளுக்குத் தகவல் அனுப்பினாராம் ஸ்டாலின். ‘`கோபாலபுரம் வீட்டுல இருந்தாத்தான் எல்லாரும் வந்து பார்க்க வசதியா இருக்கும்” என்று கனிமொழியும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஸ்டாலினுடன் வரும் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, பி.கே.சேகர்பாபு போன்றோர் கீழேயே உட்கார்ந்துவிடுகிறார்கள். ஸ்டாலின் மட்டுமே மேலே சென்று பார்க்கிறார். கட்சி முன்னணியினர் அனைவரும் காலையும் மாலையும் இங்கே வந்து ஒரு மணி நேரம் உட்கார்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கருணாநிதிக்கு 93 வயது ஆகிறது. சர்க்கரைச் சத்து, ரத்த அழுத்தம் என நிரந்தர நோய்கள் இல்லை. வயிறு செரிமானப் பிரச்னை உண்டு. கால் மூட்டுவலி எப்போதும் உண்டு. மற்றபடி இன்றைய நினைவிழப்பு, உணர்வுக் குறைவு, பேச்சு எழாமை அனைத்துமே வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டவை. இதை மீட்டெடுப்பது சிரமம் என்றே சொல்கிறார்கள். அதற்கான சிகிச்சைகள், மருந்துகள்தான் அவருக்குத் தரப்படுகின்றன.

கட்சிக்குள் தான் தனிமைப்படுத்தப்பட்டதும், கட்சி முன்னணியினர்கூட தன்னை வந்து சந்திப்பதைத் தவிர்த்ததும், தனது குரலுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பு இல்லாமல் போனதுமான மனத்துயரங்களே கருணாநிதியை இந்த நிலைமைக்கு மிக வேகமாக நகர்த்தியுள்ளன. ஒருகாலத்தில் இந்த மாதிரி பிரச்னைகளை துணிந்து எதிர்கொண்டார். ‘பிரச்னை இல்லைன்னா செத்திருவேன்யா’ எனச் சொன்னவரும் அவர்தான். ஆனால் முதுமை, பிரச்னைகளை ரசிக்கவைக்காது; கசக்கவேவைக்கும். ‘`நான் வளர்த்த கட்சியிலா இப்படி நடக்கிறது? நான் பெத்த பிள்ளைகளா இப்படி மோதிக்கொள்கிறார்கள்?” என்று துன்பத் துயரங்கள் முதுமை என்னும் முதுகில் உட்காரும்போது கருணாநிதியாலேயே தாங்க முடியவில்லை.

``பழைய கருணாநிதியாக இன்று அவர் செயல்பட முடியுமானால், `பன்னீர்செல்வத்தின் பாசிச ஆட்சியைப் பாரீர்!' என முழங்கியிருப்பார். கடற்கரையிலும் அவரது முகம் பார்த்திருக்கலாம்; நடுக்குப்பத்திலும் அவரது நடையைப் பார்த்திருக்கலாம். 1965-ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தில் பங்கெடுத்ததாகப் பலரும் கைதானார்கள். ஆனால், மாணவர் போராட்டதைத் தூண்டியவர் என்று பக்தவத்சலம் ஆட்சியால் கைதானவர் கருணாநிதி. பாளையங்கோட்டைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். `என் தம்பி கருணாநிதி சிறையில் இருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலை, கழகத்தவர் யாத்திரை செல்லத்தக்க புண்ணியத்தலம்' என்று அண்ணா சொன்னது அப்போதுதான். ஆட்சிக்கு வந்ததும் உள்துறையைக் கேட்டு கருணாநிதியிடம் அதைத் தர மறுத்தார் அண்ணா. அந்த அளவுக்கு வேகமாக இருந்தார் கருணாநிதி.

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதை எதிர்த்து தீர்மானம் போட்டதும், ஈழத்தமிழர் பிரச்னைக்காகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததும், `மிசாவைக் காட்டி மிரட்டினால், தமிழ்நாட்டுக்குள் வர விசா வாங்கவேண்டி வரும்' எனப் பேசியதும், இந்திய அரசியலைமைப்புச் சட்ட நகலைக் கொளுத்தியதும், `ஈழத்தமிழனைக் கொன்ற ராணுவத்தை வரவேற்கப் போக மாட்டேன்' என்றதும் கருணாநிதியின் கடந்தகாலப் பக்கங்கள்.
பிரச்னைகளைக் கவனித்தால், அவற்றில் தனது எதிர்வினையை எப்படியும் காட்டியாக வேண்டும் எனத் துடிப்பார். அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என நினைப்பார்.

கடந்த ஆண்டு வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது, மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனை அழைத்து, `உடனே கோட்டூர்புரம் பாலத்தைப் பார்க்க வேண்டும். சைதாப்பேட்டைக்குப் போக வேண்டும்' என்றார் அவர். ஊரே மிதக்கும்போது அவரால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியாது. ஒருவிதமான பதற்றம் அவருக்குத் தொற்றிக்கொள்ளும். ஜெயலலிதா மரணம், பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை, மாணவர் போராட்டங்கள், போலீஸின் வெறியாட்டம் போன்றவற்றை நேருக்குநேர் எதிர்கொள்ள பழைய கருணாநிதி போன்ற தலைமை, எந்தக் கட்சியிலும் இல்லை. இங்கே வெறும் அறிக்கை அதிபதிகள் கையில் கட்சிகள் போய்விட்டன.
`எங்களுக்கு என்ன செய்வது எனத் தெரியாத சூழ்நிலை இருக்கும். ஆனால், கலைஞர்தான் ஏதோ ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பார். அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம்' என ரஜினியிடம் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருநாவுக்கரசர் சொன்னார். ஏனென்றால், கருணாநிதி  மட்டும்தான் 24X7 அரசியல்வாதியாக இருந்தார்.

கருணாநிதி மிகவும் திடமான சிந்தனையுடன் கடைசியாகப் பேசியது எப்போது என விசாரித்தபோது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர், ‘மூணு தொகுதிகள்லயும் நாம ஜெயிச்சுடுவோம் தலைவரே!' என்றாராம். அப்போது கருணாநிதி, ‘இப்படித்தான் சட்டமன்றத் தேர்தல்லயும் சொல்லி ஏமாத்துனீங்க. இப்ப இதைச் சொல்லி ஏமாத்துறீங்களா?' என்றாராம். அப்போது அவர் குரல், கோபாலபுரம் முதல் மாடியில் பட்டு எதிரொலித்ததாம். இதன் பிறகு கருணாநிதியின் உணர்ச்சிமயமான குரல் வெளிவரவில்லை.

குரல் வெளிவராவிட்டாலும் தினமும் இரண்டு மணி நேரம் அவரது உடல் உற்சாகம் அடைகிறது. காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் அவரை சூரிய வெளிச்சத்தில் உட்காரவைக்கிறார்கள். அறுபது ஆண்டு காலமாக, ‘வாக்களிப்பீர் உதயசூரியன்’ என்று எந்தச் சின்னத்துக்கு அந்தக் குரல் வாக்குக் கேட்டதோ, அந்த உதயசூரியன் கைமாறு காட்டுகிறது.

சூரியனோடு நடக்கிறது பேச்சு... ஆதவனிடம் இருக்கிறது ஆக்ஸிஜன்!
ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...