முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஸ்ரோவின் அவதார்!



134... 130... 122... என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் கவுன்ட் சென்ற வாரம் முழுக்க பிரேக்கிங் நியூஸாக நிமிடத்துக்கு ஒருமுறை பூச்சாண்டி காட்டிய சூழலில், 3... 2... 1... 0 என்ற கவுன்ட் டவுண் உடன் இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவிய சரித்திர நிகழ்வு, சரிவர கவனம் பெறவில்லை. ராக்கெட்டை வெற்றிகரமாக மேலே அனுப்பியதற்காகப் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடவேண்டிய நாம், உச்ச நீதிமன்றம் ஒரு குற்றவாளியைச் சிறைக்கு அனுப்பிய குஷியில் கொண்டாடிக்கொண்டிருந்தோம். ஆனால், `‘விராட் கோஹ்லிபோல நாங்களும் செஞ்சுரி அடித்துள்ளோம் விண்வெளியில்!’' என இஸ்ரோவின் இயக்குநர்களில் ஒருவரான தபன் மிஸ்ரா தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். உண்மையிலேயே இஸ்ரோ செய்திருக்கும் சாதனை என்ன?
1993-ம் ஆண்டு செப்டம்பர் 23. இஸ்ரோ செயற்கைக்கோளைச் சுமந்து செல்வதற்கு என தனது முதல் பி.எஸ்.எல்.வி (போலார் சாட்டிலைட் லான்ச் வெஹிகிள்) ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. முதல் முயற்சியே படுதோல்வி. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஏவப்பட்ட இன்னொரு பி.எஸ்.எல்.வி ராக்கெட், பகுதியளவில் தோல்வியடைந்தது. அந்த இரண்டு முயற்சிகள் தவிர, இதுவரை 37 முறை பி.எஸ்.எல்.வி-யால் வெற்றி பெற்றிருக்கிறது இஸ்ரோ. 

2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி ஏவப்பட்ட `பி.எஸ்.எல்.வி-சி37', இஸ்ரோவின் 39-வது பி.எஸ்.எல்.வி மிஷன். அதில் 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தி, விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது என்பது வேறு எந்த நாடும் நிகழ்த்தியிராத உச்சபட்ச சாதனை.

அந்தப் புதன்கிழமை காலை 9:28-க்கு ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் முதல் தளத்தில் `பி.எஸ்.எல்.வி-சி37' கிளம்பியபோது எழுந்த வெப்பத்தைவிட, விஞ்ஞானிகள் குழுமியிருந்தக் கூடத்தின் வெப்பநிலை அதிகமாகத்தான் இருந்திருக்கக்கூடும். காரணம், 104 மடங்கு டென்ஷன். 714 கிலோ எடைகொண்ட கார்ட்டோசாட்-2டி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவது சி37-ன் தலையாய பணி. அதனுடன் ஐ.என்.எஸ்-1ஏ, ஐ.என்.எஸ்-1பி என்ற இரண்டு இந்திய நானோ செயற்கைக் கோள்களை இணைத்துக் கொண்டார்கள். தவிர, கூடுதலாக 600 கிலோ எடையைக் கொண்டு செல்லும் திறனும் சி37-க்கு இருந்தது.

இஸ்ரோ, ‘இங்கே சிறந்த முறையில் செயற்கைக்கோள்கள் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்’ என்று வணிகரீதியாகத் தனது வாசலைத் திறந்து அழைத்தது. சர்வதேச தனியார் நிறுவனங்களும், சொந்தமாக ராக்கெட் ஏவும் அளவுக்கு வசதியற்ற நாடுகளும்  பிற தேசங்களின் ராக்கெட்டுகளில் தங்களுக்கான செயற்கைக்கோள்களைப் பொருத்தி அனுப்புவது வழக்கமே. அதற்கான குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பிற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் அந்தக் கட்டணத்தொகை குறைவு. ஆக, சர்வதேச அளவில் இஸ்ரோவுக்கான வாடிக்கையாளர்கள் ஆதரவு அதிகம் உண்டு.

இந்த 104 செயற்கைக்கோள்களில் நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கஜகஸ்தான், இஸ்ரேல் நாடுகளின் நானோ செயற்கைக்கோள்கள் தலா ஒன்று, அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 96 நானோ செயற்கைக்கோள்கள் என கவுன்ட் எகிறியது.

மணிக்கு 17,000 மைல்கள் வேகத்தில் செல்லும் ஒரு   ராக்கெட்டிலிருந்து 104 செயற்கைக்கோள்களை ஒன்றன் பின் ஒன்றாக நிலைநிறுத்துவது என்பது அதிகபட்ச ரிஸ்க். செயற்கைக்கோள்களை வெளியேற்றும் கோணம், திசைவேகம், காலம் என எதில் தவறு நேர்ந்தாலும் அவை ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறிவிடும்.
`பி.எஸ்.எல்.வி-சி37' கிளம்பியதிலிருந்து 17 நிமிடம் 29-வது நொடியில் கார்ட்டோசாட்-2டி அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அடுத்து ஐ.என்.எஸ்-1ஏ, ஐ.என்.எஸ்-1பி. பிறகு, குறிப்பிட்ட இடைவெளிகளில் மீதமுள்ள 101 நானோ செயற்கைக்கோள்களும் சற்றும் பிசகின்றி வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. புவியிலிருந்து 524 கி.மீ தூரத்தில் 28 நிமிடம் 42 நொடியில் மொத்த மிஷனும் சுபம்.

`இந்த ராக்கெட் ஏவலுக்கான மொத்த பட்ஜெட் 15 மில்லியன் அமெரிக்க டாலர். அதில் பாதிச் செலவு, 101 அயல்தேசச் செயற்கைக் கோள்களுக்கான ஏவுதல் கட்டணத்தில் சரிகட்டப்பட்டுவிட்டது' என்கிறார்கள். ஹாலிவுட்டின் `கிராவிட்டி' படத்துக்கான பட்ஜெட்டைவிட, இந்தியாவில் ஒரு ராக்கெட் மூலம் சில செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் செலவு குறைவு என்பது நிஜம். பெரும்பாலும் இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன என்பதும் நம் விஞ்ஞானிகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதற்கான விஷயம். பல லட்சங்களில் விலை கொடுத்து வாங்கவேண்டிய நவீன தொழில்நுட்பங்களை, இஸ்ரோவில் தாங்களாகவே குறைந்த செலவில் தயாரித்துக்கொள்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவுடன் ஒப்பிட்டால், தொழில் நுட்பத்தில் நாசா எங்கோ இருக்கிறது. தவிர, அமெரிக்காவில் விண்வெளியில் ராக்கெட்டுகளைச் செலுத்தும் பல தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. என்றாலும் விண்வெளித் துறையில் இந்தியாவின் அறிவுவளத்தை, இந்தியர்களின் உழைப்பைக் குறைந்த செலவில் தனக்கெனப் பயன்படுத்திக் கொள்கிறது அமெரிக்கா என்ற சர்ச்சை உண்டு. அதேசமயம் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற விண்வெளித் துறை சார்ந்த அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் இந்தியாவின் மலிவுவிலை விண்வெளி வணிகத்தால் தங்கள் தொழில் பாதிக்கப்படு வதாகவும் குரலெழுப்பி வருகின்றன. ஆனால், சிறிய நாடுகளுக்கு இஸ்ரோவின் விண்வெளி சேவை, தேவை என்பதும் மறுக்க முடியாதது.

சர்வதேசப் பத்திரிகைகள் பலவும் இந்தியாவின் சாதனையை உச்சி முகர்ந்துள்ளன. ‘உண்மையான விண்வெளிப் பந்தயம் ஆசியாவில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. விண்வெளி வணிகச் சந்தையில் மிக முக்கியமான சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது’ எனப் பாராட்டியிருக்கிறது நியூயார்க் டைம்ஸ்.

சீனாவுக்குத்தான் சற்றே புகைச்சல்போல. ‘வாழ்த்துகள் இந்தியா. இருந்தாலும் அமெரிக்கா, சீனாவைவிட இந்தியா விண்வெளித் துறையில் மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறது. பிற பெரிய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு அது முழுமையான வளர்ச்சியை அடையவில்லை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது, விண்வெளியில் ஆய்வுமையம் அமைப்பது போன்ற முயற்சிகளை இந்தியா இன்னும் ஆரம்பிக்கவில்லை’ என்று அறிக்கை விடுத்திருக்கிறது சீனா.
பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் எல்லாம் ஒருமுறை உபயோகப்படுத்தக் கூடியவை மட்டுமே. இஸ்ரோவும் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய ராக்கெட் தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின் பெயர் ‘அவதார்.’ இஸ்ரோவின் அவதார் வெகுவிரைவில் விண்ணில் பாயும்.

பவர் பெண்கள்!

ஸ்ரோவின் 104 செயற்கைக்கோள்கள் சாதனையில் பெண்களின் பங்கு அதிகம். இந்தச் செயல்திட்டத்துக்காக மட்டும், ஏராளமான பெண்கள் பணிபுரிந்திருக்​கின்றனர். அவர்களில் தமிழ்ப் பெண்ணான ஜெஸ்ஸி ஃபுளோராவிடம் பேசினோம்.
 
``நான் 34 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றுகிறேன். இங்கு வந்து சேர்ந்த புதிதில் மொத்தமே மூன்று பெண்கள்தான் வேலைபார்த்தார்கள். ஆனால், நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோவுக்குச் சொந்தமான மகேந்திரகிரி மையத்தில் மட்டும் இப்போது 78 பெண்கள் பணிபுரிகிறார்கள். 

எங்கள் வேலைக்கு இதுதான் நேரம் என்பதெல்லாம் கிடையாது. இந்தச் செயல்திட்டத்தில், பி.எஸ்.எல்.வி 2-வது கட்டத்துக்கான மின்னணு தொடர்பான வேலைகளை, எங்கள் குழு இரவு பகலாகச் செய்தது. நான் வீட்டுக்குச் செல்வதற்கே அதிகாலை 3 மணி ஆகிவிடும். நாங்கள் வேலைபார்க்கும் பகுதிகளில் காற்று பலமாக வீசும். இத்தகைய சூழலில் வேலைபார்ப்பது சற்று கடினமே. அதையெல்லாம் மீறி ஒரு விஷயம் ஜெயிக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை'' என்கிறார்.

- ஷோபனா ரூபகுமார், படம்: ரா.ராம்குமார்

இதுவரை பி.எஸ்.எல்.வி மூலம் 226 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. அதில் 179 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள்.

இஸ்ரோ விஞ்ஞானிகளும் பணியாளர்களும் மிகக் குறுகிய காலத்தில் திட்டமிட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். ‘ஐ.எஸ்.டி நேரம் என்பது, எங்களுக்கு இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் அல்ல; இஸ்ரோ ஸ்டாண்டர்ட் டைம். அது எப்போதும் இரண்டு, மூன்று மாதங்கள் குறைவான கால அவகாசத்தைக் கொண்டதே’ என்பது இஸ்ரோ மக்களின் வேடிக்கையான ஸ்டேட்மென்ட்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆறு கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள், இதுவரை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. பூமியில் உள்ள வளங்களைக் கண்டறிவதற்கும் கண்காணிப்பதற்கும் இந்தச் செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. கார்ட்டோசாட்-2டி, ஐந்து ஆண்டுகள் செயல்படும்.

மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இஸ்ரோவின் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிரக ஆராய்ச்சித் திட்டங்களுக்கு என 23 சதவிகிதம் கூடுதல் தொகையை ஒதுக்கியிருக்கிறது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...