முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஸ்ரோவின் அவதார்!



134... 130... 122... என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் கவுன்ட் சென்ற வாரம் முழுக்க பிரேக்கிங் நியூஸாக நிமிடத்துக்கு ஒருமுறை பூச்சாண்டி காட்டிய சூழலில், 3... 2... 1... 0 என்ற கவுன்ட் டவுண் உடன் இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவிய சரித்திர நிகழ்வு, சரிவர கவனம் பெறவில்லை. ராக்கெட்டை வெற்றிகரமாக மேலே அனுப்பியதற்காகப் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடவேண்டிய நாம், உச்ச நீதிமன்றம் ஒரு குற்றவாளியைச் சிறைக்கு அனுப்பிய குஷியில் கொண்டாடிக்கொண்டிருந்தோம். ஆனால், `‘விராட் கோஹ்லிபோல நாங்களும் செஞ்சுரி அடித்துள்ளோம் விண்வெளியில்!’' என இஸ்ரோவின் இயக்குநர்களில் ஒருவரான தபன் மிஸ்ரா தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். உண்மையிலேயே இஸ்ரோ செய்திருக்கும் சாதனை என்ன?
1993-ம் ஆண்டு செப்டம்பர் 23. இஸ்ரோ செயற்கைக்கோளைச் சுமந்து செல்வதற்கு என தனது முதல் பி.எஸ்.எல்.வி (போலார் சாட்டிலைட் லான்ச் வெஹிகிள்) ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. முதல் முயற்சியே படுதோல்வி. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஏவப்பட்ட இன்னொரு பி.எஸ்.எல்.வி ராக்கெட், பகுதியளவில் தோல்வியடைந்தது. அந்த இரண்டு முயற்சிகள் தவிர, இதுவரை 37 முறை பி.எஸ்.எல்.வி-யால் வெற்றி பெற்றிருக்கிறது இஸ்ரோ. 

2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி ஏவப்பட்ட `பி.எஸ்.எல்.வி-சி37', இஸ்ரோவின் 39-வது பி.எஸ்.எல்.வி மிஷன். அதில் 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தி, விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது என்பது வேறு எந்த நாடும் நிகழ்த்தியிராத உச்சபட்ச சாதனை.

அந்தப் புதன்கிழமை காலை 9:28-க்கு ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் முதல் தளத்தில் `பி.எஸ்.எல்.வி-சி37' கிளம்பியபோது எழுந்த வெப்பத்தைவிட, விஞ்ஞானிகள் குழுமியிருந்தக் கூடத்தின் வெப்பநிலை அதிகமாகத்தான் இருந்திருக்கக்கூடும். காரணம், 104 மடங்கு டென்ஷன். 714 கிலோ எடைகொண்ட கார்ட்டோசாட்-2டி செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவது சி37-ன் தலையாய பணி. அதனுடன் ஐ.என்.எஸ்-1ஏ, ஐ.என்.எஸ்-1பி என்ற இரண்டு இந்திய நானோ செயற்கைக் கோள்களை இணைத்துக் கொண்டார்கள். தவிர, கூடுதலாக 600 கிலோ எடையைக் கொண்டு செல்லும் திறனும் சி37-க்கு இருந்தது.

இஸ்ரோ, ‘இங்கே சிறந்த முறையில் செயற்கைக்கோள்கள் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்’ என்று வணிகரீதியாகத் தனது வாசலைத் திறந்து அழைத்தது. சர்வதேச தனியார் நிறுவனங்களும், சொந்தமாக ராக்கெட் ஏவும் அளவுக்கு வசதியற்ற நாடுகளும்  பிற தேசங்களின் ராக்கெட்டுகளில் தங்களுக்கான செயற்கைக்கோள்களைப் பொருத்தி அனுப்புவது வழக்கமே. அதற்கான குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பிற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் அந்தக் கட்டணத்தொகை குறைவு. ஆக, சர்வதேச அளவில் இஸ்ரோவுக்கான வாடிக்கையாளர்கள் ஆதரவு அதிகம் உண்டு.

இந்த 104 செயற்கைக்கோள்களில் நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கஜகஸ்தான், இஸ்ரேல் நாடுகளின் நானோ செயற்கைக்கோள்கள் தலா ஒன்று, அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 96 நானோ செயற்கைக்கோள்கள் என கவுன்ட் எகிறியது.

மணிக்கு 17,000 மைல்கள் வேகத்தில் செல்லும் ஒரு   ராக்கெட்டிலிருந்து 104 செயற்கைக்கோள்களை ஒன்றன் பின் ஒன்றாக நிலைநிறுத்துவது என்பது அதிகபட்ச ரிஸ்க். செயற்கைக்கோள்களை வெளியேற்றும் கோணம், திசைவேகம், காலம் என எதில் தவறு நேர்ந்தாலும் அவை ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறிவிடும்.
`பி.எஸ்.எல்.வி-சி37' கிளம்பியதிலிருந்து 17 நிமிடம் 29-வது நொடியில் கார்ட்டோசாட்-2டி அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அடுத்து ஐ.என்.எஸ்-1ஏ, ஐ.என்.எஸ்-1பி. பிறகு, குறிப்பிட்ட இடைவெளிகளில் மீதமுள்ள 101 நானோ செயற்கைக்கோள்களும் சற்றும் பிசகின்றி வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. புவியிலிருந்து 524 கி.மீ தூரத்தில் 28 நிமிடம் 42 நொடியில் மொத்த மிஷனும் சுபம்.

`இந்த ராக்கெட் ஏவலுக்கான மொத்த பட்ஜெட் 15 மில்லியன் அமெரிக்க டாலர். அதில் பாதிச் செலவு, 101 அயல்தேசச் செயற்கைக் கோள்களுக்கான ஏவுதல் கட்டணத்தில் சரிகட்டப்பட்டுவிட்டது' என்கிறார்கள். ஹாலிவுட்டின் `கிராவிட்டி' படத்துக்கான பட்ஜெட்டைவிட, இந்தியாவில் ஒரு ராக்கெட் மூலம் சில செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் செலவு குறைவு என்பது நிஜம். பெரும்பாலும் இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன என்பதும் நம் விஞ்ஞானிகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதற்கான விஷயம். பல லட்சங்களில் விலை கொடுத்து வாங்கவேண்டிய நவீன தொழில்நுட்பங்களை, இஸ்ரோவில் தாங்களாகவே குறைந்த செலவில் தயாரித்துக்கொள்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவுடன் ஒப்பிட்டால், தொழில் நுட்பத்தில் நாசா எங்கோ இருக்கிறது. தவிர, அமெரிக்காவில் விண்வெளியில் ராக்கெட்டுகளைச் செலுத்தும் பல தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. என்றாலும் விண்வெளித் துறையில் இந்தியாவின் அறிவுவளத்தை, இந்தியர்களின் உழைப்பைக் குறைந்த செலவில் தனக்கெனப் பயன்படுத்திக் கொள்கிறது அமெரிக்கா என்ற சர்ச்சை உண்டு. அதேசமயம் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற விண்வெளித் துறை சார்ந்த அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் இந்தியாவின் மலிவுவிலை விண்வெளி வணிகத்தால் தங்கள் தொழில் பாதிக்கப்படு வதாகவும் குரலெழுப்பி வருகின்றன. ஆனால், சிறிய நாடுகளுக்கு இஸ்ரோவின் விண்வெளி சேவை, தேவை என்பதும் மறுக்க முடியாதது.

சர்வதேசப் பத்திரிகைகள் பலவும் இந்தியாவின் சாதனையை உச்சி முகர்ந்துள்ளன. ‘உண்மையான விண்வெளிப் பந்தயம் ஆசியாவில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. விண்வெளி வணிகச் சந்தையில் மிக முக்கியமான சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது’ எனப் பாராட்டியிருக்கிறது நியூயார்க் டைம்ஸ்.

சீனாவுக்குத்தான் சற்றே புகைச்சல்போல. ‘வாழ்த்துகள் இந்தியா. இருந்தாலும் அமெரிக்கா, சீனாவைவிட இந்தியா விண்வெளித் துறையில் மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறது. பிற பெரிய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு அது முழுமையான வளர்ச்சியை அடையவில்லை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது, விண்வெளியில் ஆய்வுமையம் அமைப்பது போன்ற முயற்சிகளை இந்தியா இன்னும் ஆரம்பிக்கவில்லை’ என்று அறிக்கை விடுத்திருக்கிறது சீனா.
பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் எல்லாம் ஒருமுறை உபயோகப்படுத்தக் கூடியவை மட்டுமே. இஸ்ரோவும் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய ராக்கெட் தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின் பெயர் ‘அவதார்.’ இஸ்ரோவின் அவதார் வெகுவிரைவில் விண்ணில் பாயும்.

பவர் பெண்கள்!

ஸ்ரோவின் 104 செயற்கைக்கோள்கள் சாதனையில் பெண்களின் பங்கு அதிகம். இந்தச் செயல்திட்டத்துக்காக மட்டும், ஏராளமான பெண்கள் பணிபுரிந்திருக்​கின்றனர். அவர்களில் தமிழ்ப் பெண்ணான ஜெஸ்ஸி ஃபுளோராவிடம் பேசினோம்.
 
``நான் 34 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றுகிறேன். இங்கு வந்து சேர்ந்த புதிதில் மொத்தமே மூன்று பெண்கள்தான் வேலைபார்த்தார்கள். ஆனால், நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோவுக்குச் சொந்தமான மகேந்திரகிரி மையத்தில் மட்டும் இப்போது 78 பெண்கள் பணிபுரிகிறார்கள். 

எங்கள் வேலைக்கு இதுதான் நேரம் என்பதெல்லாம் கிடையாது. இந்தச் செயல்திட்டத்தில், பி.எஸ்.எல்.வி 2-வது கட்டத்துக்கான மின்னணு தொடர்பான வேலைகளை, எங்கள் குழு இரவு பகலாகச் செய்தது. நான் வீட்டுக்குச் செல்வதற்கே அதிகாலை 3 மணி ஆகிவிடும். நாங்கள் வேலைபார்க்கும் பகுதிகளில் காற்று பலமாக வீசும். இத்தகைய சூழலில் வேலைபார்ப்பது சற்று கடினமே. அதையெல்லாம் மீறி ஒரு விஷயம் ஜெயிக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை'' என்கிறார்.

- ஷோபனா ரூபகுமார், படம்: ரா.ராம்குமார்

இதுவரை பி.எஸ்.எல்.வி மூலம் 226 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. அதில் 179 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள்.

இஸ்ரோ விஞ்ஞானிகளும் பணியாளர்களும் மிகக் குறுகிய காலத்தில் திட்டமிட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். ‘ஐ.எஸ்.டி நேரம் என்பது, எங்களுக்கு இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் அல்ல; இஸ்ரோ ஸ்டாண்டர்ட் டைம். அது எப்போதும் இரண்டு, மூன்று மாதங்கள் குறைவான கால அவகாசத்தைக் கொண்டதே’ என்பது இஸ்ரோ மக்களின் வேடிக்கையான ஸ்டேட்மென்ட்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆறு கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள், இதுவரை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. பூமியில் உள்ள வளங்களைக் கண்டறிவதற்கும் கண்காணிப்பதற்கும் இந்தச் செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. கார்ட்டோசாட்-2டி, ஐந்து ஆண்டுகள் செயல்படும்.

மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இஸ்ரோவின் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிரக ஆராய்ச்சித் திட்டங்களுக்கு என 23 சதவிகிதம் கூடுதல் தொகையை ஒதுக்கியிருக்கிறது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...

ஜொலிக்கிற சின்னத்திரைத் துருவ நட்சத்திரங்கள்

நாம் எப்போதும் சினிமாவைப் பற்றிப் பேச மட்டுமே பழக்குவிக்கப் பட்டிருக்கிறோம். மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட தொழுவத்து மாடோ அல்லது வண்டி மாடோ எப்படி கயிறு கட்டப்பட்ட அடுத்த நொடியிலிருந்து தன்னுடைய பாதையை இயந்திர கதியில் கண்ணுக்குள் கொண்டு வருமோ, அப்படி சினிமா மட்டுமே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. வெள்ளித்திரை அது என்பதை மறுப்பதற்கில்லை. ஜொலிக்கிற துருவ நட்சதிரங்கள் அங்கேதான் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம் வெள்ளித் திரையையும் சார்ந்து வாழும் சின்னத் திரையில் அவ்வப்போது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்துவிட்டு வருவது தப்பில்லைதானே? வெறும் நான்கு வரிச் செய்திகளாகவே முடித்து விட்டால் எப்படி? அமெரிக்கத் தேர்தலில் எல்லோரும் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் எனக் கணித்தார்கள். மனிதர்களைத் தாண்டி சில குரங்குகளும் தவளைகளும்கூட கணித்தன. ஆனால் மாறாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே சின்னத்திரையிலும் ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சத்தமில்லாத சாதனை அது. அதேசமயம் அந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள மாறியிருக்கிற சில அம்சங்கள் குற...