முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

| சரவணன் சந்திரன் - இயல்பு நோக்கும் ஆளுமை!





சமகால இலக்கிய உலகில் வளர்ந்து வரும் முக்கிய இளம் எழுத்தாளர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாதவராய், அடுத்தடுத்த தனது மூன்று படைப்புகளின் மூலம் இலக்கிய வெளிச்சத்தை தன் மீது விழச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
ஹாக்கி ப்ளேயர், பத்திரிக்கையாளர், சுயதொழில் முனைவோர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்டுள்ள சரவணன் சந்திரன, தன்னை வளர்ந்து வரும் ஓர் எழுத்தாளராக இலக்கிய உலகில் நிலைநிறுத்திக் கொள்ள கடந்து வந்த பாதையும் அவரது படைப்புகளைப் போலவே அத்தனை யதார்த்தங்களை கொண்டுள்ளது.
குறுகிய காலங்களிலே 'ஐந்து முதலைகளின் கதை', 'ரோலக்ஸ் வாட்ச்', 'வெண்ணிற ஆடை' என மூன்று புத்தகங்களை எழுதிய சரவணன் சந்திரன் தனது நான்காவது படைப்பான 'அஜ்வா' நாவலை முடித்த மகிழ்ச்சியில் நம்மிடையே பேசினார்.
ஓர் எழுத்தாளராக நமக்கு அறிமுகமான சரவணன் சந்திரன் முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது ஒரு ஹாக்கி ப்ளேயராகதான். சரவணன் சந்திரனுக்கு பள்ளிப் பருவம் முதல் தான் ஒரு ஹாக்கி ப்ளேயராக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பமாக இருந்ததாம்.
வாழ்க்கையின் பாதை எங்கு, எப்படி மாறும் என்பது சொல்லப்படாத ரகசியம் என்பது போல, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு விபத்தில் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் தனது ஹாக்கி கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சரவணன்.
ஹாக்கி விளையாட்டு வீரருக்கு பேனாவைப் பிடிக்கும் சூழல் எப்படி நேர்ந்தது என்று கேட்டேன். "ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கல்லூரியில் நடக்கும் 'வனம்' என்ற கவிதை, சிறுகதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் நான் எழுத அடித்தளமாகவும் அமைந்தது.
அதன்பின் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமா, வேலை என்ற இரு பாதைகள் என் கண்முன்னே இருந்தன. பொருளாதார நெருக்கடியால் வேலையைத் தேர்ந்தெடுத்து விட்டேன். 'ஆறாம்தினை' என்ற இணைய இதழில்தான் முதல்முதலாக வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு காலச்சுவடு, இந்தியா டுடே, கதையல்ல நிஜம் போன்ற நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தேன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இயக்குனராகவும் பணிபுரிந்தேன்" என்று தொடர்ந்த சரவணன் சந்திரன், பத்திரிகையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இடையிடையே மீன் தொழில், பட்டாசுக் கடை, பிபிஓ என பல தொழில்களை செய்து வந்திருக்கிறார்.
இலக்கிய உலகில் தொடர்ந்து பயணப்பட்டிருந்தும் புத்தகம் என்று ஒன்றும் வராமலிருந்தது ஒருவிதக் குற்றவுணர்ச்சியை அவருக்குள் ஏற்படுத்தியதாக கூறுபவர், தனது முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை' எப்படி உருவானது என்பதை சுவாரசியம் மிகுந்த குரலில் பகிர்ந்தார்.
"நான் தொழில்ரீதியாக ஒருமுறை தைமூர் நாட்டிற்கு பயணம் சென்றிருந்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தை கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனிடம் சொல்லும்போது ''நீ எவ்வளவோ விஷயங்களை செய்கிறாய். ஆனால் அது எதுவுமே நிலைக்காது. உன் அனுபவங்கள் மூலம் நீ எழுதும் புத்தகங்கள்தான் கடைசி வரை உன்னை நினைவுபடுத்தும்'' என்றார். அதில் உருவானதுதான் 'ஐந்து முதலைகளின் கதை'.
'ஐந்து முதலைகளின் கதை' நாவலில் உலகமயமாக்கலின் விளைவு குடும்ப உறவுகளை எப்படிப் பாதிக்கிறது. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அந்தந்த கதாபாத்திரங்களின் வாயிலாக தத்ரூபமாக விளக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு இயல்பு நிறைந்த படைப்புகளைத் தருவதற்கு எழுத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை உலகில் பணியாற்றியது உதவியதா? என்றதற்கு, "பணியின் நிமித்தமாக இதுவரை கிட்டத்தட்ட 5000 பேரையாவது சந்தித்து அவர்களது வாழ்க்கையைக் கேட்டறிந்திருப்பேன். எழுதுவதற்கு நிறைய அனுபவமும், கதைகளும் என்னுள் இருந்தன. இதனால் களத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுத வேண்டிய நிலை எனக்கு ஏற்படவில்லை. அதனாலேயே ஒரு வருடத்திலேயே 'ஐந்து முதலைகளின் கதை' உட்பட 'ரோலக்ஸ் வாட்ச்', 'வெண்ணிற ஆடை' என மூன்று படைப்புகளை வெளியிட முடிந்தது" என்றார்.
எளிய நடையில் தனது படைப்புகளை வாசகரிடம் சேர்க்கும் சரவணன் சந்திரனிடம் எழுத்தாளராவதற்கு வலிமையான இலக்கியப் பின்னணி அவசியமா என்பதற்கு, நிதானமாக தனது பேச்சைத் தொடர்ந்தார்.
"அப்படி ஒன்றும் இல்லை. எழுத்தின் மீது ஆர்வம் இருந்தால் போதும். பெரும்பாலான மூத்த எழுத்தாளர்கள் எனது படைப்பைப் பாராட்டிதான் எழுதினார்கள். இலக்கியத் தரம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோட்பாடு, கொள்கையும் வைத்திருக்கிறார்கள். இதில் நிறைய குழுக்கள் உள்ளன. அது மிக சிக்கலானது. என்னுடைய பாதை வெரி சிம்பிள். எனக்குத் தெரிந்த வாழ்க்கையை எனக்குத் தெரிந்த மொழியில் வாசகனிடம் எளியமையாக சொல்ல வேண்டும்" என்று கூறும் சரவணன் சந்திரனின் முதல் படைப்பான 'ஐந்து முதலைகளின் கதை' என்ற நாவலுக்கு 2016ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது வழங்கப்பட்டுள்ளது.
கேரளா, மேற்கு வங்கம்போல் எழுத்தாளர்களை தூக்கிப் பிடிக்கும் சமூகமாக தமிழகம் இல்லையே, இந்த நிலை மாற எழுத்தாளர்கள் தங்களை சுய திருத்தம் செய்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வியை முடிக்கும் முன்பே, "எழுத்தாளர்கள் சுய திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஆனால் நான் என்னை சுயதிருத்தம் செய்து கொண்டேன். என்னுடைய ஆரம்ப நாட்களை சில புத்தகங்களின் விலையைக் கண்டு வாங்கமுடியாமல் தவிர்த்திருக்கிறேன். என் புத்தகங்களை பக்கங்களையோ, விலையையோ வைத்து யாரும் தவிர்த்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் என்னை சுய திருத்தம் செய்து கொண்டேன்" என்று வாசகர் தந்த நம்பிக்கையுடன் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
"தமிழகத்தில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே காட்சி ஊடகத்துக்கு அளித்த முக்கியத்துவத்தை எழுத்துக்கு அளிக்கமால் போனதுதான் முக்கிய காரணம். நமது தமிழ் சமூகத்திடம் எதையும் பதிய வைக்கும் பழக்கம் இல்லை. உ.வே. சாமிநாதையர் இல்லையென்றால் சங்க இலக்கியமே நமக்கு கிடைத்திருக்காது. வரலாற்றைப் பதிவு செய்யும் மரபு நம்மிடையே முறையாக இருந்ததா என்ற குழப்பம் எனக்கு உண்டு. இன்றும் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டுதான் இருக்கிறார்கள் அவர்களது காலத்துக்குப் பிறகு அதுதான் வேறுபாடு" என்று தனது நிலைப்பாட்டை கூறினார்.
சரவணன் சந்திரனுடனான கலந்துரையாடலின் இறுதியாக வளரும் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை என்ன என்று வழக்கமான கேள்வி ஒன்றை கேட்டபோது, "ஒன்றே ஒன்றுதான். எழுத்தை முழு நேரத் தொழிலாளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். வருமானத்துக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து எழுதுங்கள், பயணப்படுங்கள்" என்று அன்பான இயல்பு மீறாத அறிவுரையை முன்வைக்கிறார் சரவணன் சந்திரன்.
சரவணன் சந்திரனின் நூல்கள்:
ஐந்து முதலைகளின் கதை - உயிர்மை பதிப்பகம் | ரோலக்ஸ் வாட்ச் - உயிர்மை பதிப்பகம் | வெண்ணிற ஆடை- உயிர்மை 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே ஒ வ்வொரு பத்திரிகையும் சில விஷயங்களைப் பெருமிதமாய்ச் சொல்வார்கள். தாங்கள் தான் முதன்முதலில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தோம், வீட்டு வசதி வாரிய  முறைகேட்டினை அம்பலப்படுத்தினோம், இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாய்ச் செய்து வருகிறோம் என்று, அவர்களுக்கு அதில் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உரிமை கோருவார்கள்,அதில் பெருமிதமும் சாதித்து விட்ட திருப்தியும் வெளிப்படும். ஆனால் இந்த 'இந்தியா டுடே'காரர்களுக்கோ வேறு விதமான உரிமை கோரல். பாலியல் இச்சைகளின் ஆய்வுகள் தொடர்பான நீண்டகால உரிமை கோரல் தான். தாங்கள் தான்  11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேசத்தின் தலையணை பேச்சுகளை படம் பிடித்துக் காட்டி வருகிறோம் எங்க‌ளை விட யாருக்கு இதில் தகுதியும் அனுபவமும்  இருக்கிற‌து என . உங்களுக்கு இது வக்கிரமாகவும் கழிசடையின் பிறப்பிடமாகவும் தெரியலாம்,ஆனால் அவர்களுக்கோ அது பெருமிதம். ஆனால் அவர்களுக்கே இந்த வழக்கமான பள்ளிய‌றை, கழிப்பறை பாலியல் தொடர்பு ஆய்வுகள்,இட்டுக்கட்டல்கள் அதைத்தொடர்ந்த  பூச்சுகள் அலுத்து விட்டதா என்று தெரியவில்லை.புதிய...