முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

PARCHED: உலர் பெண்டிர்



Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான் PARCHED படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன.

பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.)


ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள், குடித்து விட்டு வந்து அவளை மலடி எனச் சொல்லி அடிக்கும் கணவனைப் பெற்றவள். ஒருத்தி ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவள், அதன் நீட்சியாய் பாலியல் தொழில் செய்பவள். ஒருத்தி தன் காதலைத் துறந்து விட்டு 14 வயதிலேயே 4 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு பெற்றோறால் இன்னொருவனுக்குக் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறவள். இவர்கள் நால்வரும் இவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கதை.

ராஜஸ்தானின் ஏதோ ஒரு பட்டிக்காட்டில் கதை ந‌டப்பதாகக் காட்டுகிறார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாத பத்தாம்பசலிக் கிராமம் என்பதைக் காட்ட டிவி கூட இன்னும் அங்கே வரவில்லை எனக் காட்டியிருப்பது கொஞ்சம் நம்பச் சிரமமாக இருக்கிறது. போலவே ஷாரூக் கான் யாரென்றே தெரியாத பெண்கள் கொண்ட‌ வட இந்தியக் கிராமம் என்பதும்.

Bhopal: Prayer for Rain, Angry Indian Goddesses ஆகிய படங்களில் நடிப்பின் மூலம் முன்பே கவர்ந்தவர் நடிகை தன்னிஸ்தா சேட்டர்ஜி. இப்படம் அவரது மாஸ்டர்பீஸ். ராதிகா ஆப்தே பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தான் கர்ப்பமுற்றதை உணரும் காட்சியில் அவர் முகபாவங்கள் ஓர் அற்புதம். இன்னொரு காட்சி குழந்தை பெற இன்னொரு ஆடவனுடன் கலவியில் ஈடுபடும் காட்சி. அக்காட்சியில் பெருமாள்முருகனின் மாதொருபாகன் நினைவு வந்தது. (அது வேறு மனநிலை என்றாலும்) பொன்னாவின் எதிர்வினையும் கிட்டத்தட்ட அப்படியானதாகவே இருக்கும். மாதொருபாகன் திரைப்படமாக எடுக்கப்பட்டால் பொன்னாவாக ராதிகா ஆப்தேவே நடிக்க வேண்டும்! விரைவில் ராதிகா தேசிய விருது பெறுவார். (இப்படத்திலேயே சிறந்த துணை நடிகையாக வாங்கக்கூடும்.) பாலியல் தொழிலாளியாக வரும் சுர்வீன் சாவ்லாவும் சிறப்பான பங்களிப்பு. இவர்களின் உயிர்ப்பான‌ நடிப்புக்காகவே படத்தை நிச்சயம் பார்க்கலாம் என்பேன்.

படத்தில் ஒரு காட்சி வரும். Motherfucker, Sisterfucker என்றெல்லாம் சொற்கள் உருவாக்கியது ஓர் ஆணாய்த் தான் இருக்க முடியும். ஏன் எப்போதும் பெண்களே தான் அப்படிக் கலவி செய்யப்பட வேண்டுமா? நாம் இப்போது புதுச் சொற்கள் உருவாக்குவோம் எனச் சொல்லி Sonfucker, Brotherfucker என மலை மீது உரக்கக் கூவுவார்கள். தற்காலிகச் சுதந்திரம் கிடைத்த உற்சாகமான பாமரப் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு வெளிப்படுத்தும் வெள்ளந்தித்தனமான ஒரு குறியீட்டு எதிர்ப்பாய் அதை இயக்குநர் முன்வைக்கிறார் என்றே எடுத்துக் கொள்கிறேன். சோகம் என்னவென்றால் இணையத்தில் பெண்ணுரிமை பேசினால் கிடைக்கும் அகண்ட புகழையும் செல்வாக்கையும் கண்டு ஈர்க்கப்பட்டு வீராவேசமாய் உருவாகும் பெரும்பாலான self-proclaimed பெண்ணியவாதிகள் பலரும் பெண் சுதந்திரம் என்பதே அப்படிக் கதறுவதோடு முடிந்து விடுகிறது என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் அப்படிக் கத்துவதோடு நின்று விடுவதில்லை. பெரும்பாலான பெண்கள் எடுக்கத் தயங்கும் சிரமமான தேர்வுகளைத் தம் வாழ்வில் எடுக்கின்றனர். தம் மனம் விரும்பியபடி வாழத் தீர்மானிக்கின்றனர். சுருக்கமாய்ச் சொன்னால் பெண்ணியம் என்ற சொல்லை ஒருமுறையும் பயன்படுத்தாமல் அவர்கள் தம் செயலால் பெண்ணியம் பேசி விடுகின்றனர். அவர்கள் நம் மனதில் நிறைகிறார்கள்.

"Women who read do not make good wives" என்ற வசனம் படத்தில் வருகிறது. கல்வி மறுக்கப்படும் பெண் அடிமையாகத் தான் இருப்பாள் என்ற பெரியாரின் கருத்தை அது முன்வைக்கிறது என்றாலும் "Women who (just) read do not make good feminists either" என்று தோன்றியது. வாசிப்போடு கூடிய நேர்மையும், நல்லறிவுமே அசல் பெண்ணியத்திற்கு அடிகோலும்.

இன்னொரு விஷயம் இந்தப் படத்தில் பெரும்பாலான ஆண்கள் ஆணாதிக்கவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும், கெட்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் எல்லா ஆண்களும் அப்படியே என இயக்குநர் முத்திரை குத்தவில்லை. அதே ஊரில் தான் பெண்கள் வேலைக்குச் சென்று முன்னேறுவதை ஊக்குவிக்க அவர்களை நம்பி, மதித்து வாய்ப்புகள் வழங்கும் ஆணும், ப‌டுக்கையில் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் அளித்து அவளைச் சமமாய் நடத்தி இன்பத்தைத் தரும் / பெறும் ஆணும், பெண் மீது கொண்ட பிரியத்தால் அவளுக்காக பல கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து வந்து அவளைச் சந்திக்கும், இன்னொருவனுடன் திருமணமாகி அவள் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதால் கற்பு என்பதை மறுதலித்து அவளை மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் ஆணும் இருக்கிறார்கள். அது முக்கியப் புரிதல்.

பெண்ணியம் என்பது கண்மூடித்தனமாய் ஆண்களை எதிர்ப்பதும், திட்டுவதும், மறுப்பதும், துறப்பதுமல்ல; அவர்களுடன் இணையாய்க் கை கோர்த்து நடப்பதும், பரஸ்பரம் உதவியாய் வாழ்க்கையை நடத்துவதும், அது சாத்தியப்படாத போழ்து அவர்களிடமிருந்து விலகி தன் மனம் சரியெனத் தீர்மானிக்கும் வழியைச் சுதந்திரமாய்த் தேர்ந்தெடுப்பதுமே பெண்ணியம் என அழுத்தம் திருத்தமாய் இப்படத்தில் எழுதி வைத்திருக்கிறார் இயக்குநர் லீனா யாதவ். அவருக்கு என் வந்தனங்கள்.

லீனா பளிச்சிடும் ஒரு காட்சி அடி வாங்கிய‌ காயத்துடன் வீட்டுக்கு வரும் ராதிகாவுக்கு தன்னிஸ்தா மேலாடையை அகற்றி மருந்து தடவும் இடம். அங்கே அவர்களுக்குள் பரஸ்பரம் எழும் மெல்லிய காமம் வலுவான தாய்மையாக முதிர்ச்சியுறுகிறது. அதை மேலும் உயரே நகர்த்தும் காட்சி அடுத்து தன்னிஸ்தா இல்லாத போது அதே சூழலில் ராதிகா வரும் போது பதின்ம‌ வயதவளான தன்னிஸ்தாவின் மருமகள் (லெஹர் கான்) மருந்திடும் காட்சி. தாய்மை என்ற உணர்வுக்கு தன் வயதோ எதிராளியின் வயதோ பொருட்டில்லை என்பதும் பெண்கள் வயதுக்கு மீறியும் சக பெண்களின் பிரச்சனைகளை உணர்வர் என்பதும் அதில் சொல்லப்படுகிறது. இது போல் ஆங்காங்கே வலுவான காட்சியமைப்புகள்.

தொடர் அடர்குடியின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படும் ஆண் பாத்திரம் ஒன்று அது தெரிந்தும் தன் மனைவி தான் குழந்தையின்மைக்குக் காரணம் எனத் தினமும் குடித்து வந்து அவள் மீது உடல்நீதியான, மனரீதியான‌ வன்முறைகளைப் பிரயோகிக்கிறது. அவள் வேறு ஒருவனின் மூலம் தாய்மையடையும் போது அதற்கும் அவளைப் போட்டு அடிக்கிறது. அதன் மனோவியலை யோசித்துக் கொண்டிருக்கிறேன். (அன்னக்கொடி மனோஜ் பாத்திரம் நினைவுக்கு வருகிறது.)

ஆண்கள் அதீதமாய்க் குடிப்பதும், பாலியல் தொழிலாளிகளிடம் போவதும் பெண்களின் பெரும் பிரச்சனையாகப் படம் நெடுகிலும் சித்தரிக்கப்படுகிறது. கணவன் அப்படி நடப்பதால் திருமணமாகி வரும் பெண்கள் சொந்த‌ மாமனார் உள்ளிட்ட அந்த வீட்டு ஆண்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதும் சொல்லப்படுகிறது. "நான் எனது கரு ஒன்றைக் கலைத்துக் கொண்டேன். அதன் தந்தை யாரெனத் தெரியாததால்" என்று தன் தாய் வீட்டிற்கு ஓடி வந்து விடும் ஒரு குடும்பப் பெண் பேசும் வசனம் வருகிறது. ஆனால் அவளைக் கட்டாயப்படுத்தி அவளது புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவளது அடிபட்ட‌ பார்வையைப் பார்த்த பின்பும் நாம் இந்தியக் கலாசாரம் பற்றி எப்படி மார் தட்டிப் பேச முடியும்!
ரைட்டர்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...