முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்










அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார்.
ஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்த சசிகலாவின் வாழ்க்கை திரு மணத்துக்குப் பிறகு மாறத் தொடங்கியது. திமுக பின்னணி கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நடத்தி வைத்தார்.
நடிகையாக தமிழ்த் திரையுலகில் ஜொலித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆதரவுடன் தீவிர அரசியலில் இறங்கி னார். 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட் டார். அரசியலுக்கு புதியவரான ஜெய லலிதாவுக்கு ஆலோசனைகள் வழங்க வும், அரசியல் வளர்ச்சிக்கு வழிகாட்டவும் அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவை எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார்.
இதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்க மானார் சந்திரலேகா. அந்த நேரத்தில் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன், தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார்.
அந்த காலகட்டத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது தம்பி திவாகரனுடன் இணைந்து வீடியோ கடை நடத்தி வந்தார் சசிகலா. சில படங்களின் வீடியோக்களை சந்திர லேகாவிடம் ஜெயலலிதா கேட்க, அவர் அவற்றை சசிகலாவிடம் வாங்கிக் கொடுத்தார். இப்படி வீடியோ கேசட்டு களை கொடுக்க போயஸ் கார்டன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா, ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
ஜெயலலிதா - சசிகலா நட்பு வளர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எஸ்.டி. சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்தி னர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டம் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்ததால் அவரது முழு நம்பிக்கைக்கு உரியவராக சசிகலா மாறினார்.
மன்னார்குடி பொதுக்கூட்ட வெற்றிக் குப் பிறகு போயஸ் கார்டன் இல்லத் திலேயே குடியேறினார் சசிகலா. அன்றில் இருந்து அவரது வாழ்வில் ஏற்றம் தொடங்கியது. ஜெயலலிதா எங்கு சென்றாலும் அங்கு சசிகலாவும் செல்லத் தொடங்கினார். இருவரையும் தனித்துப் பார்க்க முடியாது என்ற நிலை உருவானது.
இந்நிலையில் 1987-ல் எம்.ஜி.ஆர். காலமானார். அப்போது ஜெய லலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ராஜாஜி மண்டபத்தில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப் பட்டிருந்தபோது ஜெயலலிதா அவமதிக் கப்பட்டார், அப்போது சசிகலாவும், நடராஜனும் தான் அவருக்கு உறு துணையாகவும், ஆறுதலாகவும் இருந்தனர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். இதனால், உடைந்த அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் கிடைத்தது. அதன்பிறகு 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார்.
1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் சசிகலாவின் வளர்ச்சியும் தொடங்கியது. 1991 - 1996 வரை 5 ஆண்டு கால ஆட்சியில் சசிகலா குடும்பத்தினர் கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியதாக பல புகார்கள் எழுந்தன. அவற்றை உறுதிப்படுத்துவதுபோல சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை, தனது வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார்.
1991-க்குப் பிறகு 2016-ல் மரணம் அடையும் வரை 15 ஆண்டுகள் ஜெய லலிதா ஆட்சியில் இருந்தார். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளும் அரசியல் செல்வாக்குடனேயே இருந்தார். இந்த 25 ஆண்டுகளும் கட்சியிலும், ஆட்சியிலும் அனைத்தையும் தீர்மானிப்பவராக சசிகலா இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கூட்டணி கட்சிகளுடன்கூட சசிகலாவே பேசுவார் என்பதை யாரும் மறுக்கவில்லை.
இப்படி திரைமறைவில் அதிகாரம் செலுத்தி வந்த சசிகலா, ஜெயலலிதா மரணம் அடைந்ததும் திடீரென திரையை விலக்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஜெயலலிதாவுக்கு தாமே இறுதிச் சடங்குகள் செய்து அவரது அரசியல் வாரிசு தான்தான் என்பதை சொல்லாமல் சொன்னார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனாலும் முதல்வர் பதவியை கைப்பற்ற சசிகலா திட்டம் தீட்டினார். ஓபிஎஸ் முன்மொழிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியும், ஆட்சியும் கைக்கு வந்துவிட்டன என சசிகலா நினைத்த நேரத்தில், திடீரென போர்க்கொடி உயர்த்தினார் ஓபிஎஸ்.
இதனால் சசிகலாவின் பதவியேற்பு தாமதமானது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக் கப்பட்டனர். தன்னை ஆட்சியமைக்க அழைக்க ஆளுநர் தாமதப்படுத்த, கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்.எல்.ஏ.க்களிடம் உணர்ச்சிமயமாக உரை யாற்றினார் சசிகலா. இனியும் பொறுத் துக் கொள்ள முடியாது என மத்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
ஆனால், சொத்துக் குவிப்பு வழக் கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதும் காட்சிகள் மாறின. சசிகலாவுக்குப் பதில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பெங்களூர் சிறைக்கு செல்லும் முன்பு மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார் சசிகலா.
சிறைக்கு செல்லும் முன்பு கட்சியை வழிநடத்துவதற்காக தனது அக்கா மகன் டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கினார். அவர் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சிறையில் இருந்தாலும் கட்சியை தனது கட்டுக்குள்ளேயே சசிகலா வைத்திருந்தார். அமைச்சர்கள் பலரும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனே போட்டியிட்டார். ஆனால், இரட்டை இலை சின்னம் முடக்கம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில் வருமானவரித் துறை சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகியவற்றுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. சசிகலாவின் அர சியல் வாழ்க்கை சரியத் தொடங் கியது.
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப் பட்டாலும் நம்பிக்கை இழக்காமல் தினகரன் பேசி வந்தார். ஆனால், இரட்டை இலை சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இது சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளது சசிகலாவை நிலைகுலையச் செய்துள்ளது.
இதனால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, ஓபிஎஸ் அணியுடன் இணைய முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்த முயன்று வருகிறார். சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே பேச்சு நடத்துவோம் என ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்துள்ளது. அதனை ஏற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த டிச.31-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் அமர்ந்து பொதுச்செயலாளராக சசிகலா முறைப் படி பதவியேற்றார். ஆனால், 4 மாதங்கள் கூட முடியாத நிலையில் அதே அலுவலகத்தில் சசிகலாவின் படங்கள் இடம்பெற்ற பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.
முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படும் அளவுக்கு அரசியலில் வேகமாக வளர்ந்த சசிகலா, அதே வேகத்தில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளார்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016