நீண்ட காலமாக தமிழில் படித்து வருபவர்கள்
எழுத்தாளர் வாஸந்தி அவர்களை நிச்சயம் அறிவார்கள்.
தமிழில் பல நாவல்களை எழுதி இருப்பவர் பின்னாட்களில்
இந்தியா டுடே செய்தி நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பு
வகித்தவர்….
எழுத்தாளர் வாஸந்தி அவர்களை நிச்சயம் அறிவார்கள்.
தமிழில் பல நாவல்களை எழுதி இருப்பவர் பின்னாட்களில்
இந்தியா டுடே செய்தி நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பு
வகித்தவர்….

நீண்டகால வட இந்திய வாழ்க்கைக்கு பிறகு, இந்தியாடுடே
இதழின் தமிழ் பதிப்பாசிரியராக சென்னை
திரும்பிய அவர் அப்போது தனக்கு ஏற்பட்ட உடனடியான
அனுபவங்களை விவரிக்கிறார்….
இதழின் தமிழ் பதிப்பாசிரியராக சென்னை
திரும்பிய அவர் அப்போது தனக்கு ஏற்பட்ட உடனடியான
அனுபவங்களை விவரிக்கிறார்….
———————————————
ஒரு செய்திப் பத்திரிகை ஆசிரியையாக நான் கால்
வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த
சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத்
தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார
நம்பிக்கை இருந்தும், galley’, ‘form wise’, ‘slug’, ‘caption’, format’ என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள்
தடுமாறினேன்.
வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த
சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத்
தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார
நம்பிக்கை இருந்தும், galley’, ‘form wise’, ‘slug’, ‘caption’, format’ என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள்
தடுமாறினேன்.
காலை ஐந்து மணிக்கு எழுந்து, இரவு ஒன்பதரை, பத்துக்குப்
படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி,
இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு
நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை
அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை
வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப
இரவு எட்டு, எட்டரை ஆகிவிடும்.
படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி,
இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு
நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை
அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை
வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப
இரவு எட்டு, எட்டரை ஆகிவிடும்.
தொழில்ரீதியில் நேரிடையான தாக்குதல்கள்,
வேலையில் சேர்ந்த உடனேயே ஏற்பட்டது. அந்த
காலகட்டத்தில், ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பு,
அதிகபட்சம் ஆங்கில இதழிலிருந்து
மொழிபெயர்க்கப்பட்டகட்டுரைகளைக் கொண்டதாகவே
இருந்தது.
வேலையில் சேர்ந்த உடனேயே ஏற்பட்டது. அந்த
காலகட்டத்தில், ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பு,
அதிகபட்சம் ஆங்கில இதழிலிருந்து
மொழிபெயர்க்கப்பட்டகட்டுரைகளைக் கொண்டதாகவே
இருந்தது.
அப்போதுதான் நான் கால் வைத்திருந்ததால், எனது அதிகார
எல்லைகளைப் பற்றி எனக்குக் குழப்பமாக இருந்தது.
தில்லி அலுவலகம் சொன்னபடி, மற்ற மொழி ஆசிரியர்கள்
நடந்து கொண்டார்கள். மாற்றுக்கருத்துச் சொல்லும் வழக்கம்
இருக்கவில்லை. ஆங்கிலத்தில் வரும் கட்டுரைகளை
மொழிபெயர்க்கும்போது (அவை ஆங்கிலப் பதிப்பில்
வெளியாகிவிடுவதால்) நிச்சயமாக வரிகளை மாற்றவோ,
திருத்தவோ உரிமை கிடையாது.
எல்லைகளைப் பற்றி எனக்குக் குழப்பமாக இருந்தது.
தில்லி அலுவலகம் சொன்னபடி, மற்ற மொழி ஆசிரியர்கள்
நடந்து கொண்டார்கள். மாற்றுக்கருத்துச் சொல்லும் வழக்கம்
இருக்கவில்லை. ஆங்கிலத்தில் வரும் கட்டுரைகளை
மொழிபெயர்க்கும்போது (அவை ஆங்கிலப் பதிப்பில்
வெளியாகிவிடுவதால்) நிச்சயமாக வரிகளை மாற்றவோ,
திருத்தவோ உரிமை கிடையாது.
ஆங்கில இதழுக்கு, அப்போது சென்னைக் கிளையில்,
ப்ரகாஷ் சுவாமி நிருபராக இருந்தார்.
ப்ரகாஷ் சுவாமி நிருபராக இருந்தார்.
நான் போய்ச் சேர்ந்த இரு வாரத்தில்,
அவர், தி.மு.க. தலைவரின் இரு மனைவிகளும்
தனித்தனியாகக் கட்சி அரசியலில்,
தங்களின் அதிகாரத்தைச் செலுத்துவதாக ஒரு கட்டுரையை
ஆங்கில இதழுக்கு எழுதியிருந்தார்.
அவர், தி.மு.க. தலைவரின் இரு மனைவிகளும்
தனித்தனியாகக் கட்சி அரசியலில்,
தங்களின் அதிகாரத்தைச் செலுத்துவதாக ஒரு கட்டுரையை
ஆங்கில இதழுக்கு எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரைக்கும் எனக்கும்
துளியும் சம்பந்தமில்லை. தமிழகத்து அரசியல் சம்பந்தப்பட்ட
கட்டுரை என்பதால், அதைத் தமிழ் இதழில் போடவேண்டிய
கட்டாயத்தில் இருந்தேன்.
துளியும் சம்பந்தமில்லை. தமிழகத்து அரசியல் சம்பந்தப்பட்ட
கட்டுரை என்பதால், அதைத் தமிழ் இதழில் போடவேண்டிய
கட்டாயத்தில் இருந்தேன்.
அதைப் பக்கமாக்குவதற்குமுன் வந்திருந்த ‘ரீணீறீறீமீஹ்யில்’
படித்துப் பார்த்தபோது, ஒரு வரியை நீக்கிவிடலாம் என்று
முடிவு செய்தேன். கனிமொழியின் முதல் திருமணம்
விவாகரத்தான சமயம் அது. ஆனால், செய்தி வெளியில்
வந்திருக்கவில்லை.
படித்துப் பார்த்தபோது, ஒரு வரியை நீக்கிவிடலாம் என்று
முடிவு செய்தேன். கனிமொழியின் முதல் திருமணம்
விவாகரத்தான சமயம் அது. ஆனால், செய்தி வெளியில்
வந்திருக்கவில்லை.
கட்டுரையிலிருந்த, ‘விவாகரத்தான மகள் கனிமொழி’
என்ற சொற்கள் சம்பந்தப்பட்டவரை புண்படுத்தலாம்
என்று நினைத்து, அவற்றை நீக்கிவிட்டு ‘பக்கம்’ செய்ய
அனுப்பிவிட்டேன். அன்று ‘டெபுடி காப்பி எடிட்டர்’
இருந்தார். இறுதியாக பக்கத்தைக் கவனித்து அச்சுக்கு
அனுப்பும் வேலை அவருடையது.
என்ற சொற்கள் சம்பந்தப்பட்டவரை புண்படுத்தலாம்
என்று நினைத்து, அவற்றை நீக்கிவிட்டு ‘பக்கம்’ செய்ய
அனுப்பிவிட்டேன். அன்று ‘டெபுடி காப்பி எடிட்டர்’
இருந்தார். இறுதியாக பக்கத்தைக் கவனித்து அச்சுக்கு
அனுப்பும் வேலை அவருடையது.
மறுநாள், அச்சாகிவிட்ட பக்கங்கள் எனது பார்வைக்கு
வந்த போது திடுக்கிட்டேன். நான் நீக்கியிருந்த சொற்கள்
அச்சாகியிருந்தன. அன்று மாலை ‘டெபுடி காப்பி எடிட்டர்’
வந்தபோது, ‘‘நான் அடித்திருந்த சொற்கள் எப்படி வந்தன’’
என்று கேட்டேன். ‘‘பக்கம் ஆகி வந்த போது நான்கு
சொற்கள் தேவைப்பட்டன; அதனால் அவற்றைச் சேர்த்துக்
கொண்டேன்’’ என்றார்.
வந்த போது திடுக்கிட்டேன். நான் நீக்கியிருந்த சொற்கள்
அச்சாகியிருந்தன. அன்று மாலை ‘டெபுடி காப்பி எடிட்டர்’
வந்தபோது, ‘‘நான் அடித்திருந்த சொற்கள் எப்படி வந்தன’’
என்று கேட்டேன். ‘‘பக்கம் ஆகி வந்த போது நான்கு
சொற்கள் தேவைப்பட்டன; அதனால் அவற்றைச் சேர்த்துக்
கொண்டேன்’’ என்றார்.
நான் ஏன் அவற்றை விலக்க நினைத்தேன் என்று அவரிடம்
சொல்லவில்லை. எப்படியும் ஆங்கில பதிப்பில் வந்த
விவரம்தானே என்றிருப்பார்.
சொல்லவில்லை. எப்படியும் ஆங்கில பதிப்பில் வந்த
விவரம்தானே என்றிருப்பார்.
ஆனால், கட்டுரை தமிழ்ப் பதிப்பில் வெளியானதும், ஒரு
பூகம்பம் வெடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
பூகம்பம் வெடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
‘முரசொலி’ ஞாயிறு மலர் பல பக்கங்களை எனக்காக
ஒதுக்கியது. என்னை, நான் நினைக்கவே கூசும் அளவுக்கு,
பெண் ஆசிரியை, அரசியலுக்கே வராத தலைவரின் வீட்டுப்
பெண்களைப் பற்றி தரக்குறைவாக எழுதியதற்காக’
வசைபாடி தூற்றிற்று;
ஒதுக்கியது. என்னை, நான் நினைக்கவே கூசும் அளவுக்கு,
பெண் ஆசிரியை, அரசியலுக்கே வராத தலைவரின் வீட்டுப்
பெண்களைப் பற்றி தரக்குறைவாக எழுதியதற்காக’
வசைபாடி தூற்றிற்று;
எனது ஒழுக்கத்தை, நேர்மையைக்
கேள்வி கேட்டது; எனது சாதியைக் குறிப்பிட்டது;
கேள்வி கேட்டது; எனது சாதியைக் குறிப்பிட்டது;
வாஸந்தி என்ற பெயரை ‘வாந்தி’ என்று எழுதிற்று.
‘குங்குமம்’ இதழில் வசை தொடர்ந்தது. கேள்வி_பதில்
பகுதியில், தானே ஒரு கேள்வியைப் போட்டு,
‘வாஸந்தியை ‘வா’ என்று சந்திக்கு இழுக்க எத்தனை நேரம்
ஆகும்?’ என்று, பதிலையும் போட்டது.
‘குங்குமம்’ இதழில் வசை தொடர்ந்தது. கேள்வி_பதில்
பகுதியில், தானே ஒரு கேள்வியைப் போட்டு,
‘வாஸந்தியை ‘வா’ என்று சந்திக்கு இழுக்க எத்தனை நேரம்
ஆகும்?’ என்று, பதிலையும் போட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், கட்டுரை எழுதிய
ப்ரகாஷ் சுவாமி, எந்தக் கண்டனத்துக்கும் உள்ளாகவில்லை.
ப்ரகாஷ் சுவாமி, எந்தக் கண்டனத்துக்கும் உள்ளாகவில்லை.
இந்த தாக்குதல் எனக்கு மிகப் பெரிய கலாசார அதிர்ச்சியை
ஏற்படுத்திற்று.
ஏற்படுத்திற்று.
தமிழ் நாட்டில் ஒரு பெண்ணைத் தாக்கவேண்டுமானால்,
ஆண்களின் மிகச் சுலபமான ஆயுதம், அவளது ஒழுக்கத்தைக்
குறை கூறுவது என்று, பின் வரும் ஆண்டுகளில் புரிந்து
போனது. இது அந்த சமூகத்தின் பலவீனமே தவிர, எனது
குறையல்ல என்கிற தெளிவு எனக்கு இருந்ததால், அத்தகைய
அவதூறுப் பிரசுரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக்
கொண்டேன்.
ஆண்களின் மிகச் சுலபமான ஆயுதம், அவளது ஒழுக்கத்தைக்
குறை கூறுவது என்று, பின் வரும் ஆண்டுகளில் புரிந்து
போனது. இது அந்த சமூகத்தின் பலவீனமே தவிர, எனது
குறையல்ல என்கிற தெளிவு எனக்கு இருந்ததால், அத்தகைய
அவதூறுப் பிரசுரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக்
கொண்டேன்.
ஆனால், ஆரம்பத்தில் அது ஏற்படுத்திய அதிர்விலிருந்து
மீள்வது, சுலபமாக இருக்கவில்லை. அடுத்த சில மாதங்களில்,
கலைஞர் கருணாநிதியைப் பேட்டி காண வேண்டி வந்தபோது,
நேரம் கொடுக்க அவர் சுலபத்தில் சம்மதிக்கவில்லை.
மீள்வது, சுலபமாக இருக்கவில்லை. அடுத்த சில மாதங்களில்,
கலைஞர் கருணாநிதியைப் பேட்டி காண வேண்டி வந்தபோது,
நேரம் கொடுக்க அவர் சுலபத்தில் சம்மதிக்கவில்லை.
ஆனால் கடைசியில் ஒத்துக் கொண்டவர், என்னைக்
கண்டதும், ‘முரசொலி’யில் தன்னைக் கேட்காமலே
சின்னக்குத்தூசி அந்தக் கட்டுரையை எழுதிவிட்டதாகச்
சொன்னார். அவரது விளக்கம் எனக்கு சமாதானமாகவில்லை
என்றாலும், அவரது அணுகுமுறை இறுக்கத்தைத் தளர்த்திற்று
கண்டதும், ‘முரசொலி’யில் தன்னைக் கேட்காமலே
சின்னக்குத்தூசி அந்தக் கட்டுரையை எழுதிவிட்டதாகச்
சொன்னார். அவரது விளக்கம் எனக்கு சமாதானமாகவில்லை
என்றாலும், அவரது அணுகுமுறை இறுக்கத்தைத் தளர்த்திற்று
கருத்துகள்
கருத்துரையிடுக