முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக நீதிக்காக அளிக்கப்பட்ட முதல் அறிக்கை... யார் அந்த மண்டல்?


சமூக நீதிக்காக அளிக்கப்பட்ட முதல் அறிக்கை... யார் அந்த மண்டல்?
ந்திய அரசியல் அரங்கில் சமூக நீதி நோக்கிய மிக முக்கிய மைல்கல்லாக இன்று வரை போற்றப்படுவது மண்டல் குழுவின் அறிக்கை. அதை நிரூபித்துக் காட்டிய பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் 1982-ல் தனது 64 வது வயதில் மறைந்தார். 1918 ஆகஸ்ட் மாதம் பிறந்த மண்டலின் நூற்றாண்டு விழா இம்மாதம் கொண்டாடப்படுகிறது. உலகமயமாக்கலை சந்தித்து வந்த இந்தியாவின் நிலையற்ற 90-களில் அரசியல் அரங்கில் பேசு பொருளாக நிலவிய பெயர்தான் இந்தப் பி.பி.மண்டல்.
மண்டலின் ஆரம்ப காலம்:
பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் 1918-ம் ஆண்டு பிறந்தவர் மண்டல். சமூக சீர்திருத்தவாதியான இவரின் தந்தை ராஷ்பி ஹரி மண்டல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இளம் வயது முதலே சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் மண்டலிடமிருந்து வந்தது. தர்பாங்கா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தபோது மதிய உணவு ஆதிக்க சமூக மாணவர்கள் சாப்பிட்ட பிறகே இவரின் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இளம் பிராயத்திலேயே இந்தச் சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராடி அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். அப்போது, நிலவிவந்த வங்காள மறுமலர்ச்சியால் ஈர்க்கப்பட்ட மண்டல், சமூக மேம்பாட்டுக்கு உழைப்பதற்காக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
அரசியல் வாழ்க்கை: 
1941-ம் ஆண்டு பாகல்பூர் மாவட்ட சபைக்கு எதிர்ப்பில்லாமல் தேர்வு செய்யப்பட்டார் மண்டல். இதிலிருந்துதான் இவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது. பின்னர் 1952-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பீகாரின் மதேபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று சட்டசபைக்குச் சென்றார். அப்போது, பீகாரின் பாமா என்கிற கிராமத்தில் நிலக்கிழார்கள் ஏற்படுத்திய வன்முறையில் காவல்துறையினர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபட்டனர். அதில் காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுத்தார் மண்டல். அவற்றை கைவிட நெருக்கடி கொடுக்கப்பட்டதையடுத்து, ஆளும் தரப்பிலிருந்து விலகி எதிர்க்கட்சியான 'சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி'யுடன் இணைந்து அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.
பின்னர், 'சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி'யிலிருந்து விலகி மார்ச் 1967-ல் 'ஷோஷிட் தள்' என்கிற கட்சியைத் தொடங்கி தேர்தலைச் சந்தித்தார். தேர்தலில் வென்று பிப்ரவரி 1968-ம் ஆண்டு பீகார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். வெறும் 47 நாள்கள் மட்டுமே நீடித்த இவருடைய அமைச்சரவையில் அதிக அளவிலான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருந்தனர். பின்னர், 1968-ம் ஆண்டு மதேபூர் இடைத்தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். காங்கிரஸ் அரசை எதிர்த்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தவர், ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து 1977 தேர்தலில் அதே தொகுதியில் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார்.
மண்டல் குழு:
இந்திய அரசியலமைப்பின் 340 வது பிரிவின்படி பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை அமல்படுத்த வழிவகை செய்ய முடிவு எடுத்தது. அதன்படி சுதந்திர இந்தியாவில் 1953-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட முதலாவது குழுவான 'கலேகர் குழு'வின் பரிந்துரைகளை அரசு நிராகரித்திருந்தது. பின்னர், 25 ஆண்டுகள் கழித்து இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸை வீழ்த்தி ஜனதா அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகுதான், மண்டல் தலைமையில் ஒரு குழு ’சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய மக்களை’ அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டுக்கான இடஒதுக்கீடு பற்றிய பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது.
மண்டல் குழு தன்னுடைய அறிக்கையை டிசம்பர் 1980-ம் ஆண்டு அரசிடம் சமர்ப்பித்தது. 'இந்திய மக்கள் தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என மண்டல் குழு பரிந்துரை செய்திருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கிடப்பிலே போடப்பட்டிருந்தது. பின்னர், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி நாடாளுமன்றத்தில் மண்டல் குழுவின் அறிக்கைகள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 'பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்' எனக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. மண்டல் குழுவை நிறைவேற்றிய வி.பி.சிங் தலைமையிலான கூட்டணி அரசை உருவாக்குவதிலும் கருணாநிதி மிக முக்கியப் பங்காற்றினார். மண்டல் குழுவின் பரிந்துரைகளைத் தன்னுடைய அரசு ஏற்கப்போவதாக நாடாளுமன்றத்தில் வி.பி.சிங் அறிவித்த ஆகஸ்ட் 7-ம் தேதிதான் கருணாநிதி மரணமடைந்தார்.
மண்டல் கமிஷன், வி.பி.சிங், கருணாநிதி
'மண்டல் குழு'வின் அறிக்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு எதிராக வட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. மாணவர்கள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தனர். அனைத்து எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 'மண்டல் குழு'வின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவை அமல்படுத்தப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததால் முட்டுக்கட்டை விழுந்தது. மூன்று வருடங்கள் நடைபெற்ற வழக்கை விசாரித்த 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு 6 - 5 என இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை தன்னுடைய தீர்ப்பில் உறுதி செய்தது. அதற்கு பிறகு ஆகஸ்ட் 25, 1993 அன்றுதான் மண்டல் குழுவின் பரிந்துரை அமலுக்கு வந்தது.
சமூக நீதியை நிலைநாட்டுவதில் மிக முக்கிய பங்காற்றிய மண்டல் ஏப்ரல் 13, 1982 அன்று சமூக நீதியை நிலைநிறுத்த தான் செய்த பணிகளின் பலனை சமூகம் அனுபவிப்பதை காண்பதற்கு முன்னரே மரணமடைந்தார். சமீபத்தில் கிடைக்கப்பட்டுள்ள சில புள்ளி விவரங்களின்படி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம், மண்டல் குழு பரிந்துரைத்த 27% என்கிற அளவை விடவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 
மண்டலின் நூற்றாண்டோடு இவர் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவின் ஆன்மாவான அரசியலமைப்பின் முகப்பில் எழுதப்பட்டுள்ள சமூக நீதியை நிலைநிறுத்த, மண்டல் வழியில் இந்தத் தேசம் மேலும் பல நூற்றாண்டுகள் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே ஒ வ்வொரு பத்திரிகையும் சில விஷயங்களைப் பெருமிதமாய்ச் சொல்வார்கள். தாங்கள் தான் முதன்முதலில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தோம், வீட்டு வசதி வாரிய  முறைகேட்டினை அம்பலப்படுத்தினோம், இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாய்ச் செய்து வருகிறோம் என்று, அவர்களுக்கு அதில் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உரிமை கோருவார்கள்,அதில் பெருமிதமும் சாதித்து விட்ட திருப்தியும் வெளிப்படும். ஆனால் இந்த 'இந்தியா டுடே'காரர்களுக்கோ வேறு விதமான உரிமை கோரல். பாலியல் இச்சைகளின் ஆய்வுகள் தொடர்பான நீண்டகால உரிமை கோரல் தான். தாங்கள் தான்  11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேசத்தின் தலையணை பேச்சுகளை படம் பிடித்துக் காட்டி வருகிறோம் எங்க‌ளை விட யாருக்கு இதில் தகுதியும் அனுபவமும்  இருக்கிற‌து என . உங்களுக்கு இது வக்கிரமாகவும் கழிசடையின் பிறப்பிடமாகவும் தெரியலாம்,ஆனால் அவர்களுக்கோ அது பெருமிதம். ஆனால் அவர்களுக்கே இந்த வழக்கமான பள்ளிய‌றை, கழிப்பறை பாலியல் தொடர்பு ஆய்வுகள்,இட்டுக்கட்டல்கள் அதைத்தொடர்ந்த  பூச்சுகள் அலுத்து விட்டதா என்று தெரியவில்லை.புதிய...