முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமணம், பாலியல் உறவு, சடங்குகள் - உயர் நீதிமன்றத் தீர்ப்பு



**

1967, அண்ணா முதல்வராக இருந்தபோது, சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதாவை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, ‘மாலை மாற்றி தாலி கட்டவேண்டும் ‘’ என்றிருந்த பகுதியைப் பார்த்து ’’தாலி கட்டுவதை அவசியமாக்கத் தேவையில்லை’’ என்று திருத்தம் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட அண்ணாவும் அந்தப் பகுதியை நீக்கினார். அதன்பின்னரே இந்தியாவிலேயே முதன்முதலாக சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டன.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நீதிபதி கர்ணன் வழங்கிய தீர்ப்பு சமூகத்த்திலும் ஊடகங்களிலும் ஒரு சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த ஆயிஷா என்கிற இஸ்லாமிய பெண் ஓஸிர் ஹசன் என்கிற இஸ்லாமியரை இஸ்லாமிய சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபின்னர், ஹசன் ஆயிஷாவைப் பிரிந்துவிட்டார். ஆயிஷா குழநதைகளைப் பேணுவதற்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹசன் தரவேண்டும் என்று கோரி கோவை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவமனை ஆவணங்களில் பிரசவ சமயத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தபோதும் கணவன் என்கிற இடத்தில் ஹசன் தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஆகவே குழந்தைகள் சட்டரீதியாக இவர்களுக்குப் பிறந்தவர்களே என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், ஆயிஷாவை ஹசனின் சட்டபூர்வ மனைவி என்று கூற முடியாது என்று தீர்ப்பளித்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் ஆயிஷா. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்தான் நீதிபதி ‘’மாலைமாற்றிக்கொள்வதோ, தாலி கட்டிக்கொள்வதோ, மோதிரம் மாற்றுவதோ, அக்னி குண்டத்தைச் சுற்றி வருவதோ, பதிவு அலுவலகத்தில் சென்று பதிந்துகொள்வதோ திருமணம் அல்ல. இந்த மதச் சடங்குகள் எல்லாமே சமூகத்தை திருப்திப்படுத்தத்தான். சட்டபூர்வமான அங்கீகாரத்துக்கு அவர்களுக்கிடையே பாலியல் உறவு இருந்தால் போதும்’’ என்கிறார். அதாவது இருவ்ருக்கும் பாலியல் உறவிருந்தாலே அவரக்ள் கணவன் - மனைவி என்று அறியப்படுவர் என்கிறது தீர்ப்பு.

ஆனால் பாலியல் உறவுக்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் கொடுக்க முடியாமல் போகும்போது, அந்த உறவை சட்டபூர்வம்தான் என்று வாதாட முடியாத நிலையும் உள்ளது. ஆயிஷாவைப் பொருத்தவரை அவர்களுடைய குழந்தைகள் உறவுக்கு சாட்சியாக உள்ளன. , ஒருவேளை குழந்தைகள் இல்லையெனில் பாலியல் உறவு இருந்ததற்கான என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்? இந்தத் தீர்ப்புக்கு சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் எதிர்வினைகள் அதிகமாக இருந்தனர். ஆனால் பெரும்பாலானவை பொழுதுபோக்காக சிரிப்பதற்கானவை. உண்மையான சமூக அக்க்றையுடன் எழுதியவர்கள் வெகு சிலரே. இந்தத் தீர்ப்பு சம அளவில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இருபுறம் கூர்தீட்டிய வாளைப் போன்றது இந்தச் சட்டம். ஒருபுறம் லிவிங்க் டூகெதர் முறையில் மணம் புரியாமல் வாழ்பவர்களுக்கு இத்தீர்ப்பு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குகிறது.

லிவிங் டூகெதர் முறையில் வாழ்பவர்களுக்கிடையேயும் மணமான தம்பதிகளுக்கிடையே இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் உண்டு. சென்னையில் தன் துணையுடன் வாழும் பெண் கூறுகையில் ‘’கடந்த 5 ஆண்டுகளாக நான் அவருடன் வாழ்கிறேன். முறைப்படி திருமணம் செய்துகொண்ட ஒரு மனைவி போலவேதான் சமைப்பது, துவைப்பது என்று எல்லாமே செய்கிறேன். அவரை நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அவரும் என்மீது அன்பாகவே இருக்கிறார். ஆனால் சண்டை போடும்போது மட்டும், ‘’நீ என்ன என் மனைவியா? உனக்கு என்ன உரிமை இருக்கிறது? போ’ என்று கத்துவார். தீர்ப்புதான் வந்துவிட்டதே. இன்னொரு முறை அப்படிச் சொல்லட்டும். ஒரு கை பார்த்துவிடுவேன்’’ என்று சிரிக்கிறார்.

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்தியா டுடேவிடம் ‘’தமிழர்களிடையே சங்ககாலம்தொட்டு இருந்த களவு மணம் தான் இது. இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தேவையற்ர மதச்சடங்குகள் திருமணத்துக்கு தேவையில்லை என்கிற தீர்ப்பு முற்போக்கானது’’ என்கிறார்.

நம் சமூகத்தில் பெரும்பாலும் பெண்களே பாலியல்ரீதியான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஆகவே இயல்பாகவே இந்தத் தீர்ப்பு ஆண்களுக்கு ஒருவித பயத்தை அளித்திருக்கிறது. பாலியல்ரீதியான சுரண்டலை ஒரு பெண் ஆணுக்கு செய்தாலும் இது பொருந்தும். ஆனால் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வெறும் பாலியல் உறவை மட்டும் திருமணம் என்று கூறிவிட முடியுமா? ‘’ஆயிஷாவுக்கு இந்தத் தீர்ப்பு நியாயம் வழங்கியுள்ளது என்கிற அளவில் இந்தத் தீர்ப்பு முற்போக்கானது என்று கூறலாம். சில சமயங்களில் காதலிக்கும் ஜோடிகள் பெற்றோர் எதிர்ப்பதால், அவர்களாகவே எந்த ஆவணமும் இல்லாமல் திருமணம் செய்துகொள்கின்றனர். இப்படிப்பட்ட சமயங்களில் இந்தத் தீர்ப்பு உதவலாம். ஆனால் ஒரு திருமணத்துக்கு பாலியல் உறவை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள முடியுமா? அப்படியெனில், கல்லூரி மாணவர்கள் இப்போதெல்லாம் டேட்டிங் செல்கிறார்கள். பாலியல் உறவுக்கான சாத்தியங்களும் உள்ளன. அப்படியிருக்கையில் அதையும் திருமணம் என்று நாம் கணக்கிலெடுக்க முடியுமா?’’ என்கிறார் பெண்னிய செய்ற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கீதா ராமசேஷன். ‘’ இந்த வழக்கில் குறிப்பிட்ட இருவரின் பெயர்களும் ரேஷன் அட்டையில் உள்ளன. வேறு பல ஆவணங்களும் உள்ளன. ஆனால் இப்படி ஒரு சூழலை யோசியுங்களேன்..அதாவது பாலியல் உறவுக்கான எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால்? எனக்குத் தெரிந்து பெண் தங்களுடன் இருந்ததாக ஜோடிக்கபப்ட்ட புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் போட்டு ‘இவள் என் மனைவி’ என்று அபாண்டமாகக் கூறிய ஆண்களும் உண்டு. இப்படியான வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். அத்துடன் புகைப்படங்களையும் ஆவணங்களையும் வைத்து ஒரு பாலியல் உறவை நிரூபிக்கச் சொல்வது சிக்கலானது’’ என்கிறார்

பெண்ணுக்கு 18 வயதாகவும் ஆணுக்கு 21 வயதாகவும் இருக்கவேண்டும் என்கிறது இந்தத் தீர்பு. ஆனால் தேசிய அளவில் பாலியல் உறவுக்கான குறைந்தபட்ச வயதை 16 ஆகக் குறைப்பது குறித்த தீவிரமான விவாதங்கள் நடந்துவருகின்றன. ஒரு நீடித்த உறவுக்கான விருப்பத்தில், ஆணும் பெண்ணும் திருமணம் என்கிற பெயரில் எந்த மதச் சடங்குகளும் இல்லாமல் சேர்ந்திருப்பார்களேயானால், இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஒரு பரிசு. ஆனால், அவர்களே பிரிந்துவிட எண்ணினால், சட்டப்படி அவர்கள் விவாகரத்து கோரித்தான் பெறவேண்டும். ஒருவேளை அவர்கள்க்கு நீடித்த உறவுக்கான விழைவு இல்லாமல் இருந்தால் அங்கேதான் சிக்கல். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணை இருக்க சாத்தியமுண்டு. எத்தனை துணைகளோ அத்தனை முறை திருமணம் செய்துகொண்டார்கள் என்று கூறமுடியுமா?

கிராமங்களில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெண்ணை ஓர் ஆண் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டால், அந்தப் பெண் அந்த ஆணையே திருமணம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுவது சகஜம். இந்த பார்வையே கலாசார காவலர்களின் பார்வை. அதாவது ஒரு பெண்ணின் உடல் கணவனால் மட்டுமே தீண்டப்படவேண்டுமென்கிற பொதுப்புத்தியில் உறைந்த கலாசாரம் என்கிற போர்வையிலான பழமைத்தனம்தான் இது. ‘’இந்த தீர்ப்பும் இத்தகைய பழமைத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாக நான் உணர்கிறேன். இருவர் பாலியல்ரீதியாக உறவுகொண்டால் அவர்கள் நிச்சயம் கணவன் - மனைவியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற பார்வை முற்போக்கானதா?’’ எனக் கேட்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.

‘’மதரீதியாக மணம் செய்துகொண்ட இருவருக்குள் உடல்ரீதியான உறவு இல்லையென்றால், அந்தத் திருமணமே செல்லாது’’ என்கிறது தீர்ப்பு. ‘’தீர்ப்பின் இந்தப் பகுதி சிக்கலானது’’ என்கிறார் கீதா ராமசேஷன். ‘’ஆண்மையற்றவராக ஆண் இருந்தால், அந்தத் திருமணம் செல்லாது என்கிறது இந்து சட்டம். ஆனால் உறவுக்கு மறுத்தல் என்பது வேறு’’ என்கிறார். பாலியல்ரீதியான உறவில் இல்லாத தம்பதியிரிடையே பிரச்சனை வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால்? குடுமப் வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி கணவன் மனைவியின் விருப்பமில்லாமல் அவளைத் தொடுவது குற்றமாகிறது. தொட்டால் குற்றம். தொடாவிட்டால் கணவன் இல்லை என்கிற நிலை சிக்கல்தான். இப்படியான உறவில் பிரச்சனைவ் வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி புகார் அளித்தால், அந்தப் புகார் செல்லுமா? திருமணமே செல்லாது என்றானபின் அது குடும்ப வன்முறைக்குள் வருமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இந்தத் தீர்ப்பு மணமாகாத ஜோடிகளுக்கும் மணமான தம்பதியருக்கு உண்டான உரிமைகளை வழங்குகிறதா? அல்லது சட்டத்தின் முன் நிற்க விரும்பாதவர்களையும் சட்டத்தின் பெயர் சொல்லி சிறைபடுத்துகிறதா? எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு முந்தைய உறவு என்கிற விஷயம் பொதுத்தளத்தில் ஒருபோதும் விவாதப் பொருளாகவில்லை. இந்தத் தீர்ப்பு அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்கள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களுலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இது மாறிவரும் மக்கள் மனநிலையைக் குறிக்கிறது. கலாசாரப் போர்வையின் கீழ் தங்களை முடக்கிக்கொண்டுவிட்ட ஒரு சமூகத்தை இது குறித்துப் பேச வைத்ததே இந்தத் தீர்ப்பின் வெற்றி. சமபாலின ஈர்ப்பை சட்டபூர்வமாக்கியதன் மூலம் இந்தியாவின் முகம் சற்றே மாறியது. இப்போது நீதிமன்றம் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு தவறில்லை என்று கூறியிருக்கிறது. பழம்பெருமை பேசும் இந்தியாவில் இது நிச்சயமாக ஒரு முற்போக்கான திருப்புமுனைதான். மக்களின் மனங்களை அசைத்துப் பார்த்ததன் மூலம் இந்தத் தீர்ப்பு எல்லா கேள்விகள், விமர்சனங்களையும் மீறி முற்போக்கானதாகவே இருக்கிறது.

(இந்தியா டுடே இதழில் எழுதிய கட்டுரை)


coutesy :kavinmalar 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...