முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமணம், பாலியல் உறவு, சடங்குகள் - உயர் நீதிமன்றத் தீர்ப்பு



**

1967, அண்ணா முதல்வராக இருந்தபோது, சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதாவை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, ‘மாலை மாற்றி தாலி கட்டவேண்டும் ‘’ என்றிருந்த பகுதியைப் பார்த்து ’’தாலி கட்டுவதை அவசியமாக்கத் தேவையில்லை’’ என்று திருத்தம் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட அண்ணாவும் அந்தப் பகுதியை நீக்கினார். அதன்பின்னரே இந்தியாவிலேயே முதன்முதலாக சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டன.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நீதிபதி கர்ணன் வழங்கிய தீர்ப்பு சமூகத்த்திலும் ஊடகங்களிலும் ஒரு சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த ஆயிஷா என்கிற இஸ்லாமிய பெண் ஓஸிர் ஹசன் என்கிற இஸ்லாமியரை இஸ்லாமிய சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபின்னர், ஹசன் ஆயிஷாவைப் பிரிந்துவிட்டார். ஆயிஷா குழநதைகளைப் பேணுவதற்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹசன் தரவேண்டும் என்று கோரி கோவை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவமனை ஆவணங்களில் பிரசவ சமயத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தபோதும் கணவன் என்கிற இடத்தில் ஹசன் தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஆகவே குழந்தைகள் சட்டரீதியாக இவர்களுக்குப் பிறந்தவர்களே என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், ஆயிஷாவை ஹசனின் சட்டபூர்வ மனைவி என்று கூற முடியாது என்று தீர்ப்பளித்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் ஆயிஷா. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்தான் நீதிபதி ‘’மாலைமாற்றிக்கொள்வதோ, தாலி கட்டிக்கொள்வதோ, மோதிரம் மாற்றுவதோ, அக்னி குண்டத்தைச் சுற்றி வருவதோ, பதிவு அலுவலகத்தில் சென்று பதிந்துகொள்வதோ திருமணம் அல்ல. இந்த மதச் சடங்குகள் எல்லாமே சமூகத்தை திருப்திப்படுத்தத்தான். சட்டபூர்வமான அங்கீகாரத்துக்கு அவர்களுக்கிடையே பாலியல் உறவு இருந்தால் போதும்’’ என்கிறார். அதாவது இருவ்ருக்கும் பாலியல் உறவிருந்தாலே அவரக்ள் கணவன் - மனைவி என்று அறியப்படுவர் என்கிறது தீர்ப்பு.

ஆனால் பாலியல் உறவுக்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் கொடுக்க முடியாமல் போகும்போது, அந்த உறவை சட்டபூர்வம்தான் என்று வாதாட முடியாத நிலையும் உள்ளது. ஆயிஷாவைப் பொருத்தவரை அவர்களுடைய குழந்தைகள் உறவுக்கு சாட்சியாக உள்ளன. , ஒருவேளை குழந்தைகள் இல்லையெனில் பாலியல் உறவு இருந்ததற்கான என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்? இந்தத் தீர்ப்புக்கு சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் எதிர்வினைகள் அதிகமாக இருந்தனர். ஆனால் பெரும்பாலானவை பொழுதுபோக்காக சிரிப்பதற்கானவை. உண்மையான சமூக அக்க்றையுடன் எழுதியவர்கள் வெகு சிலரே. இந்தத் தீர்ப்பு சம அளவில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இருபுறம் கூர்தீட்டிய வாளைப் போன்றது இந்தச் சட்டம். ஒருபுறம் லிவிங்க் டூகெதர் முறையில் மணம் புரியாமல் வாழ்பவர்களுக்கு இத்தீர்ப்பு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குகிறது.

லிவிங் டூகெதர் முறையில் வாழ்பவர்களுக்கிடையேயும் மணமான தம்பதிகளுக்கிடையே இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் உண்டு. சென்னையில் தன் துணையுடன் வாழும் பெண் கூறுகையில் ‘’கடந்த 5 ஆண்டுகளாக நான் அவருடன் வாழ்கிறேன். முறைப்படி திருமணம் செய்துகொண்ட ஒரு மனைவி போலவேதான் சமைப்பது, துவைப்பது என்று எல்லாமே செய்கிறேன். அவரை நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அவரும் என்மீது அன்பாகவே இருக்கிறார். ஆனால் சண்டை போடும்போது மட்டும், ‘’நீ என்ன என் மனைவியா? உனக்கு என்ன உரிமை இருக்கிறது? போ’ என்று கத்துவார். தீர்ப்புதான் வந்துவிட்டதே. இன்னொரு முறை அப்படிச் சொல்லட்டும். ஒரு கை பார்த்துவிடுவேன்’’ என்று சிரிக்கிறார்.

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்தியா டுடேவிடம் ‘’தமிழர்களிடையே சங்ககாலம்தொட்டு இருந்த களவு மணம் தான் இது. இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தேவையற்ர மதச்சடங்குகள் திருமணத்துக்கு தேவையில்லை என்கிற தீர்ப்பு முற்போக்கானது’’ என்கிறார்.

நம் சமூகத்தில் பெரும்பாலும் பெண்களே பாலியல்ரீதியான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஆகவே இயல்பாகவே இந்தத் தீர்ப்பு ஆண்களுக்கு ஒருவித பயத்தை அளித்திருக்கிறது. பாலியல்ரீதியான சுரண்டலை ஒரு பெண் ஆணுக்கு செய்தாலும் இது பொருந்தும். ஆனால் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வெறும் பாலியல் உறவை மட்டும் திருமணம் என்று கூறிவிட முடியுமா? ‘’ஆயிஷாவுக்கு இந்தத் தீர்ப்பு நியாயம் வழங்கியுள்ளது என்கிற அளவில் இந்தத் தீர்ப்பு முற்போக்கானது என்று கூறலாம். சில சமயங்களில் காதலிக்கும் ஜோடிகள் பெற்றோர் எதிர்ப்பதால், அவர்களாகவே எந்த ஆவணமும் இல்லாமல் திருமணம் செய்துகொள்கின்றனர். இப்படிப்பட்ட சமயங்களில் இந்தத் தீர்ப்பு உதவலாம். ஆனால் ஒரு திருமணத்துக்கு பாலியல் உறவை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள முடியுமா? அப்படியெனில், கல்லூரி மாணவர்கள் இப்போதெல்லாம் டேட்டிங் செல்கிறார்கள். பாலியல் உறவுக்கான சாத்தியங்களும் உள்ளன. அப்படியிருக்கையில் அதையும் திருமணம் என்று நாம் கணக்கிலெடுக்க முடியுமா?’’ என்கிறார் பெண்னிய செய்ற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கீதா ராமசேஷன். ‘’ இந்த வழக்கில் குறிப்பிட்ட இருவரின் பெயர்களும் ரேஷன் அட்டையில் உள்ளன. வேறு பல ஆவணங்களும் உள்ளன. ஆனால் இப்படி ஒரு சூழலை யோசியுங்களேன்..அதாவது பாலியல் உறவுக்கான எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால்? எனக்குத் தெரிந்து பெண் தங்களுடன் இருந்ததாக ஜோடிக்கபப்ட்ட புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் போட்டு ‘இவள் என் மனைவி’ என்று அபாண்டமாகக் கூறிய ஆண்களும் உண்டு. இப்படியான வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். அத்துடன் புகைப்படங்களையும் ஆவணங்களையும் வைத்து ஒரு பாலியல் உறவை நிரூபிக்கச் சொல்வது சிக்கலானது’’ என்கிறார்

பெண்ணுக்கு 18 வயதாகவும் ஆணுக்கு 21 வயதாகவும் இருக்கவேண்டும் என்கிறது இந்தத் தீர்பு. ஆனால் தேசிய அளவில் பாலியல் உறவுக்கான குறைந்தபட்ச வயதை 16 ஆகக் குறைப்பது குறித்த தீவிரமான விவாதங்கள் நடந்துவருகின்றன. ஒரு நீடித்த உறவுக்கான விருப்பத்தில், ஆணும் பெண்ணும் திருமணம் என்கிற பெயரில் எந்த மதச் சடங்குகளும் இல்லாமல் சேர்ந்திருப்பார்களேயானால், இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஒரு பரிசு. ஆனால், அவர்களே பிரிந்துவிட எண்ணினால், சட்டப்படி அவர்கள் விவாகரத்து கோரித்தான் பெறவேண்டும். ஒருவேளை அவர்கள்க்கு நீடித்த உறவுக்கான விழைவு இல்லாமல் இருந்தால் அங்கேதான் சிக்கல். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணை இருக்க சாத்தியமுண்டு. எத்தனை துணைகளோ அத்தனை முறை திருமணம் செய்துகொண்டார்கள் என்று கூறமுடியுமா?

கிராமங்களில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெண்ணை ஓர் ஆண் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டால், அந்தப் பெண் அந்த ஆணையே திருமணம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுவது சகஜம். இந்த பார்வையே கலாசார காவலர்களின் பார்வை. அதாவது ஒரு பெண்ணின் உடல் கணவனால் மட்டுமே தீண்டப்படவேண்டுமென்கிற பொதுப்புத்தியில் உறைந்த கலாசாரம் என்கிற போர்வையிலான பழமைத்தனம்தான் இது. ‘’இந்த தீர்ப்பும் இத்தகைய பழமைத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாக நான் உணர்கிறேன். இருவர் பாலியல்ரீதியாக உறவுகொண்டால் அவர்கள் நிச்சயம் கணவன் - மனைவியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற பார்வை முற்போக்கானதா?’’ எனக் கேட்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.

‘’மதரீதியாக மணம் செய்துகொண்ட இருவருக்குள் உடல்ரீதியான உறவு இல்லையென்றால், அந்தத் திருமணமே செல்லாது’’ என்கிறது தீர்ப்பு. ‘’தீர்ப்பின் இந்தப் பகுதி சிக்கலானது’’ என்கிறார் கீதா ராமசேஷன். ‘’ஆண்மையற்றவராக ஆண் இருந்தால், அந்தத் திருமணம் செல்லாது என்கிறது இந்து சட்டம். ஆனால் உறவுக்கு மறுத்தல் என்பது வேறு’’ என்கிறார். பாலியல்ரீதியான உறவில் இல்லாத தம்பதியிரிடையே பிரச்சனை வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால்? குடுமப் வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி கணவன் மனைவியின் விருப்பமில்லாமல் அவளைத் தொடுவது குற்றமாகிறது. தொட்டால் குற்றம். தொடாவிட்டால் கணவன் இல்லை என்கிற நிலை சிக்கல்தான். இப்படியான உறவில் பிரச்சனைவ் வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி புகார் அளித்தால், அந்தப் புகார் செல்லுமா? திருமணமே செல்லாது என்றானபின் அது குடும்ப வன்முறைக்குள் வருமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இந்தத் தீர்ப்பு மணமாகாத ஜோடிகளுக்கும் மணமான தம்பதியருக்கு உண்டான உரிமைகளை வழங்குகிறதா? அல்லது சட்டத்தின் முன் நிற்க விரும்பாதவர்களையும் சட்டத்தின் பெயர் சொல்லி சிறைபடுத்துகிறதா? எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு முந்தைய உறவு என்கிற விஷயம் பொதுத்தளத்தில் ஒருபோதும் விவாதப் பொருளாகவில்லை. இந்தத் தீர்ப்பு அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்கள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களுலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இது மாறிவரும் மக்கள் மனநிலையைக் குறிக்கிறது. கலாசாரப் போர்வையின் கீழ் தங்களை முடக்கிக்கொண்டுவிட்ட ஒரு சமூகத்தை இது குறித்துப் பேச வைத்ததே இந்தத் தீர்ப்பின் வெற்றி. சமபாலின ஈர்ப்பை சட்டபூர்வமாக்கியதன் மூலம் இந்தியாவின் முகம் சற்றே மாறியது. இப்போது நீதிமன்றம் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு தவறில்லை என்று கூறியிருக்கிறது. பழம்பெருமை பேசும் இந்தியாவில் இது நிச்சயமாக ஒரு முற்போக்கான திருப்புமுனைதான். மக்களின் மனங்களை அசைத்துப் பார்த்ததன் மூலம் இந்தத் தீர்ப்பு எல்லா கேள்விகள், விமர்சனங்களையும் மீறி முற்போக்கானதாகவே இருக்கிறது.

(இந்தியா டுடே இதழில் எழுதிய கட்டுரை)


coutesy :kavinmalar 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...