முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமணம், பாலியல் உறவு, சடங்குகள் - உயர் நீதிமன்றத் தீர்ப்பு



**

1967, அண்ணா முதல்வராக இருந்தபோது, சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதாவை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, ‘மாலை மாற்றி தாலி கட்டவேண்டும் ‘’ என்றிருந்த பகுதியைப் பார்த்து ’’தாலி கட்டுவதை அவசியமாக்கத் தேவையில்லை’’ என்று திருத்தம் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட அண்ணாவும் அந்தப் பகுதியை நீக்கினார். அதன்பின்னரே இந்தியாவிலேயே முதன்முதலாக சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டன.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நீதிபதி கர்ணன் வழங்கிய தீர்ப்பு சமூகத்த்திலும் ஊடகங்களிலும் ஒரு சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த ஆயிஷா என்கிற இஸ்லாமிய பெண் ஓஸிர் ஹசன் என்கிற இஸ்லாமியரை இஸ்லாமிய சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபின்னர், ஹசன் ஆயிஷாவைப் பிரிந்துவிட்டார். ஆயிஷா குழநதைகளைப் பேணுவதற்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹசன் தரவேண்டும் என்று கோரி கோவை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவமனை ஆவணங்களில் பிரசவ சமயத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தபோதும் கணவன் என்கிற இடத்தில் ஹசன் தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஆகவே குழந்தைகள் சட்டரீதியாக இவர்களுக்குப் பிறந்தவர்களே என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், ஆயிஷாவை ஹசனின் சட்டபூர்வ மனைவி என்று கூற முடியாது என்று தீர்ப்பளித்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் ஆயிஷா. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்தான் நீதிபதி ‘’மாலைமாற்றிக்கொள்வதோ, தாலி கட்டிக்கொள்வதோ, மோதிரம் மாற்றுவதோ, அக்னி குண்டத்தைச் சுற்றி வருவதோ, பதிவு அலுவலகத்தில் சென்று பதிந்துகொள்வதோ திருமணம் அல்ல. இந்த மதச் சடங்குகள் எல்லாமே சமூகத்தை திருப்திப்படுத்தத்தான். சட்டபூர்வமான அங்கீகாரத்துக்கு அவர்களுக்கிடையே பாலியல் உறவு இருந்தால் போதும்’’ என்கிறார். அதாவது இருவ்ருக்கும் பாலியல் உறவிருந்தாலே அவரக்ள் கணவன் - மனைவி என்று அறியப்படுவர் என்கிறது தீர்ப்பு.

ஆனால் பாலியல் உறவுக்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் கொடுக்க முடியாமல் போகும்போது, அந்த உறவை சட்டபூர்வம்தான் என்று வாதாட முடியாத நிலையும் உள்ளது. ஆயிஷாவைப் பொருத்தவரை அவர்களுடைய குழந்தைகள் உறவுக்கு சாட்சியாக உள்ளன. , ஒருவேளை குழந்தைகள் இல்லையெனில் பாலியல் உறவு இருந்ததற்கான என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்? இந்தத் தீர்ப்புக்கு சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் எதிர்வினைகள் அதிகமாக இருந்தனர். ஆனால் பெரும்பாலானவை பொழுதுபோக்காக சிரிப்பதற்கானவை. உண்மையான சமூக அக்க்றையுடன் எழுதியவர்கள் வெகு சிலரே. இந்தத் தீர்ப்பு சம அளவில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இருபுறம் கூர்தீட்டிய வாளைப் போன்றது இந்தச் சட்டம். ஒருபுறம் லிவிங்க் டூகெதர் முறையில் மணம் புரியாமல் வாழ்பவர்களுக்கு இத்தீர்ப்பு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குகிறது.

லிவிங் டூகெதர் முறையில் வாழ்பவர்களுக்கிடையேயும் மணமான தம்பதிகளுக்கிடையே இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் உண்டு. சென்னையில் தன் துணையுடன் வாழும் பெண் கூறுகையில் ‘’கடந்த 5 ஆண்டுகளாக நான் அவருடன் வாழ்கிறேன். முறைப்படி திருமணம் செய்துகொண்ட ஒரு மனைவி போலவேதான் சமைப்பது, துவைப்பது என்று எல்லாமே செய்கிறேன். அவரை நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அவரும் என்மீது அன்பாகவே இருக்கிறார். ஆனால் சண்டை போடும்போது மட்டும், ‘’நீ என்ன என் மனைவியா? உனக்கு என்ன உரிமை இருக்கிறது? போ’ என்று கத்துவார். தீர்ப்புதான் வந்துவிட்டதே. இன்னொரு முறை அப்படிச் சொல்லட்டும். ஒரு கை பார்த்துவிடுவேன்’’ என்று சிரிக்கிறார்.

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்தியா டுடேவிடம் ‘’தமிழர்களிடையே சங்ககாலம்தொட்டு இருந்த களவு மணம் தான் இது. இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தேவையற்ர மதச்சடங்குகள் திருமணத்துக்கு தேவையில்லை என்கிற தீர்ப்பு முற்போக்கானது’’ என்கிறார்.

நம் சமூகத்தில் பெரும்பாலும் பெண்களே பாலியல்ரீதியான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஆகவே இயல்பாகவே இந்தத் தீர்ப்பு ஆண்களுக்கு ஒருவித பயத்தை அளித்திருக்கிறது. பாலியல்ரீதியான சுரண்டலை ஒரு பெண் ஆணுக்கு செய்தாலும் இது பொருந்தும். ஆனால் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வெறும் பாலியல் உறவை மட்டும் திருமணம் என்று கூறிவிட முடியுமா? ‘’ஆயிஷாவுக்கு இந்தத் தீர்ப்பு நியாயம் வழங்கியுள்ளது என்கிற அளவில் இந்தத் தீர்ப்பு முற்போக்கானது என்று கூறலாம். சில சமயங்களில் காதலிக்கும் ஜோடிகள் பெற்றோர் எதிர்ப்பதால், அவர்களாகவே எந்த ஆவணமும் இல்லாமல் திருமணம் செய்துகொள்கின்றனர். இப்படிப்பட்ட சமயங்களில் இந்தத் தீர்ப்பு உதவலாம். ஆனால் ஒரு திருமணத்துக்கு பாலியல் உறவை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள முடியுமா? அப்படியெனில், கல்லூரி மாணவர்கள் இப்போதெல்லாம் டேட்டிங் செல்கிறார்கள். பாலியல் உறவுக்கான சாத்தியங்களும் உள்ளன. அப்படியிருக்கையில் அதையும் திருமணம் என்று நாம் கணக்கிலெடுக்க முடியுமா?’’ என்கிறார் பெண்னிய செய்ற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கீதா ராமசேஷன். ‘’ இந்த வழக்கில் குறிப்பிட்ட இருவரின் பெயர்களும் ரேஷன் அட்டையில் உள்ளன. வேறு பல ஆவணங்களும் உள்ளன. ஆனால் இப்படி ஒரு சூழலை யோசியுங்களேன்..அதாவது பாலியல் உறவுக்கான எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால்? எனக்குத் தெரிந்து பெண் தங்களுடன் இருந்ததாக ஜோடிக்கபப்ட்ட புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் போட்டு ‘இவள் என் மனைவி’ என்று அபாண்டமாகக் கூறிய ஆண்களும் உண்டு. இப்படியான வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். அத்துடன் புகைப்படங்களையும் ஆவணங்களையும் வைத்து ஒரு பாலியல் உறவை நிரூபிக்கச் சொல்வது சிக்கலானது’’ என்கிறார்

பெண்ணுக்கு 18 வயதாகவும் ஆணுக்கு 21 வயதாகவும் இருக்கவேண்டும் என்கிறது இந்தத் தீர்பு. ஆனால் தேசிய அளவில் பாலியல் உறவுக்கான குறைந்தபட்ச வயதை 16 ஆகக் குறைப்பது குறித்த தீவிரமான விவாதங்கள் நடந்துவருகின்றன. ஒரு நீடித்த உறவுக்கான விருப்பத்தில், ஆணும் பெண்ணும் திருமணம் என்கிற பெயரில் எந்த மதச் சடங்குகளும் இல்லாமல் சேர்ந்திருப்பார்களேயானால், இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஒரு பரிசு. ஆனால், அவர்களே பிரிந்துவிட எண்ணினால், சட்டப்படி அவர்கள் விவாகரத்து கோரித்தான் பெறவேண்டும். ஒருவேளை அவர்கள்க்கு நீடித்த உறவுக்கான விழைவு இல்லாமல் இருந்தால் அங்கேதான் சிக்கல். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணை இருக்க சாத்தியமுண்டு. எத்தனை துணைகளோ அத்தனை முறை திருமணம் செய்துகொண்டார்கள் என்று கூறமுடியுமா?

கிராமங்களில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெண்ணை ஓர் ஆண் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டால், அந்தப் பெண் அந்த ஆணையே திருமணம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுவது சகஜம். இந்த பார்வையே கலாசார காவலர்களின் பார்வை. அதாவது ஒரு பெண்ணின் உடல் கணவனால் மட்டுமே தீண்டப்படவேண்டுமென்கிற பொதுப்புத்தியில் உறைந்த கலாசாரம் என்கிற போர்வையிலான பழமைத்தனம்தான் இது. ‘’இந்த தீர்ப்பும் இத்தகைய பழமைத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாக நான் உணர்கிறேன். இருவர் பாலியல்ரீதியாக உறவுகொண்டால் அவர்கள் நிச்சயம் கணவன் - மனைவியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற பார்வை முற்போக்கானதா?’’ எனக் கேட்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.

‘’மதரீதியாக மணம் செய்துகொண்ட இருவருக்குள் உடல்ரீதியான உறவு இல்லையென்றால், அந்தத் திருமணமே செல்லாது’’ என்கிறது தீர்ப்பு. ‘’தீர்ப்பின் இந்தப் பகுதி சிக்கலானது’’ என்கிறார் கீதா ராமசேஷன். ‘’ஆண்மையற்றவராக ஆண் இருந்தால், அந்தத் திருமணம் செல்லாது என்கிறது இந்து சட்டம். ஆனால் உறவுக்கு மறுத்தல் என்பது வேறு’’ என்கிறார். பாலியல்ரீதியான உறவில் இல்லாத தம்பதியிரிடையே பிரச்சனை வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால்? குடுமப் வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி கணவன் மனைவியின் விருப்பமில்லாமல் அவளைத் தொடுவது குற்றமாகிறது. தொட்டால் குற்றம். தொடாவிட்டால் கணவன் இல்லை என்கிற நிலை சிக்கல்தான். இப்படியான உறவில் பிரச்சனைவ் வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி புகார் அளித்தால், அந்தப் புகார் செல்லுமா? திருமணமே செல்லாது என்றானபின் அது குடும்ப வன்முறைக்குள் வருமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இந்தத் தீர்ப்பு மணமாகாத ஜோடிகளுக்கும் மணமான தம்பதியருக்கு உண்டான உரிமைகளை வழங்குகிறதா? அல்லது சட்டத்தின் முன் நிற்க விரும்பாதவர்களையும் சட்டத்தின் பெயர் சொல்லி சிறைபடுத்துகிறதா? எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு முந்தைய உறவு என்கிற விஷயம் பொதுத்தளத்தில் ஒருபோதும் விவாதப் பொருளாகவில்லை. இந்தத் தீர்ப்பு அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்கள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களுலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இது மாறிவரும் மக்கள் மனநிலையைக் குறிக்கிறது. கலாசாரப் போர்வையின் கீழ் தங்களை முடக்கிக்கொண்டுவிட்ட ஒரு சமூகத்தை இது குறித்துப் பேச வைத்ததே இந்தத் தீர்ப்பின் வெற்றி. சமபாலின ஈர்ப்பை சட்டபூர்வமாக்கியதன் மூலம் இந்தியாவின் முகம் சற்றே மாறியது. இப்போது நீதிமன்றம் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு தவறில்லை என்று கூறியிருக்கிறது. பழம்பெருமை பேசும் இந்தியாவில் இது நிச்சயமாக ஒரு முற்போக்கான திருப்புமுனைதான். மக்களின் மனங்களை அசைத்துப் பார்த்ததன் மூலம் இந்தத் தீர்ப்பு எல்லா கேள்விகள், விமர்சனங்களையும் மீறி முற்போக்கானதாகவே இருக்கிறது.

(இந்தியா டுடே இதழில் எழுதிய கட்டுரை)


coutesy :kavinmalar 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...

ஜொலிக்கிற சின்னத்திரைத் துருவ நட்சத்திரங்கள்

நாம் எப்போதும் சினிமாவைப் பற்றிப் பேச மட்டுமே பழக்குவிக்கப் பட்டிருக்கிறோம். மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட தொழுவத்து மாடோ அல்லது வண்டி மாடோ எப்படி கயிறு கட்டப்பட்ட அடுத்த நொடியிலிருந்து தன்னுடைய பாதையை இயந்திர கதியில் கண்ணுக்குள் கொண்டு வருமோ, அப்படி சினிமா மட்டுமே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. வெள்ளித்திரை அது என்பதை மறுப்பதற்கில்லை. ஜொலிக்கிற துருவ நட்சதிரங்கள் அங்கேதான் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம் வெள்ளித் திரையையும் சார்ந்து வாழும் சின்னத் திரையில் அவ்வப்போது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்துவிட்டு வருவது தப்பில்லைதானே? வெறும் நான்கு வரிச் செய்திகளாகவே முடித்து விட்டால் எப்படி? அமெரிக்கத் தேர்தலில் எல்லோரும் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் எனக் கணித்தார்கள். மனிதர்களைத் தாண்டி சில குரங்குகளும் தவளைகளும்கூட கணித்தன. ஆனால் மாறாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே சின்னத்திரையிலும் ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சத்தமில்லாத சாதனை அது. அதேசமயம் அந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள மாறியிருக்கிற சில அம்சங்கள் குற...