முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்தி எழுதுவது எப்படி?



சமகால இதழியலில் எல்லோரும் எழுத்து கூட்டி பத்தி எழுதுகிறார்கள். எல்லோரும் பத்தி கட்டுரைகளை தொகுப்பாக்குகிறார்கள். ஆனால் பத்தி எழுத்தாளர்களில் எத்தனை பேர் என்னைப் போல் பிரபலத்தை அனுபவிக்கிறார்கள்? நான் பல முக்கிய நாவல்களை எழுதியிருக்கிறேன். குழந்தைகளைக்கூட விட்டு வைக்காமல் அவர்களுக்கும் புத்தகம் எழுதியிருக்கிறேன். எனினும் எனது பிரபலத்திற்கு பத்திதான் காரணம். குறைந்த உழைப்பில் நிறைந்த வருமானம் பத்தி எழுத்தில்தான் கிடைக்கிறது. இந்தப் பிரபலம் எல்லோருக்கும் வாய்க்காத காரணம் அவர்கள் நான் அல்ல என்பதே. எனது வெற்றியால் உந்தப்பட்டு பத்தி எழுத துவங்குபவர்கள் என்னைப் போலவே எழுதினால் ஓரளவு வெற்றியடையலாம். இப்போது அரிச்சுவடியை கற்போமா?
முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக்கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிசொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முடிக்க வேண்டும். உதாரணமாக ஒரு துவக்கம்:-
வாழ்க்கையை எல்லோரும் ஒரே விதமாக வாழ்வதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வெவ்வேறு அபிலாஷைகள் கனன்றுகொண்டிருக்கின்றன. கடந்த மாதம் ரயிலில் திருப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு சகபயணி* என்னை அடிக்கடி உற்றுப் பார்த்தபடி இருந்தார். அவர் என்னிடம் பேச விரும்பி கூச்சத்தால் தயங்குவது போல் தெரிந்தது. நானே அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன். நான் அவரது பள்ளி ஆசிரியர் ஒருவரை போல் இருந்ததாகவும் ஆனால் அந்த ஆசிரியருக்கு ஏழு கண்கள் என்றும் அவர் கூறினார்.
பேசிக்கொண்டிருந்தபோது என் சகபயணி தன்னை பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டார். அவர் திருச்சியில் விவசாயம் செய்துவந்தார். வருமானம் மிக குறைவு. செலவுக்கு காசில்லை. வசதியான பின்னணி இருந்த மனைவிக்கு வங்கியில் கணிசமான அளவு பணம் இருந்தது. ஆனால் மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட அந்தப் பெண்மணி தன் பணத்தை கோவில் குளங்களுக்கு வாரி வழங்குவதிலேயே செலவிட்டார். சொத்து மட்டும் கணவர் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். சகபயணி சொத்துக்காக மனைவியை ஏர் பில்லோவால் கொல்ல பலமுறை முயன்று தோல்வியடைந்திருக்கிறார். திருப்பூரில் கூடுதல் பஞ்சு வைத்த கனத்த தலையணைகள் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
அவர் கூறியது முழுவதையும் வியப்புடன் கேட்டேன். மனைவியை கொலை செய்ய காற்று தலையணையை பயன்படுத்தும் அளவிற்கு சமகால கணவர்கள் நிதர்சனத்திலிருந்து விலகி இருக்கிறார்களா? மனைவியை கொல்ல வேறு வழிகள் தெரியாதவனை சமூகம் அங்கீகரிக்க வேண்டுமா? (இப்படியே இன்னும் இரு பாராக்கள்)
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சச்சரவுகள் திருமணம் என்கிற சடங்கு தோன்றிய காலத்திலிருந்தே புழங்கி வருகிறது. பல சமயங்களில் மனைவியின் கொலையே சுமுகமான தீர்வாக இருக்கிறது. அவ்வாறு கொலை செய்த பின் ஒரு கணவனுக்கு ஏற்படும் போலீஸ் நடவடிக்கை போன்ற நடைமுறை சிக்கல்கள் எண்ணற்ற புத்தகங்களின் கருவாகியிருக்கின்றன. (இப்படியே இன்னும் சுமார் ஆறு பாராக்கள்)
* உங்களுக்கு சகபயணி யாரும் இல்லாதிருந்தால் மட்டுமே இப்படி எழுத வேண்டும். நீங்கள் அந்த பயணத்திற்கே சென்றிருக்கவில்லை என்றால் இன்னும் நல்லது.
மனைவியை கணவன் கொல்வது பற்றி உலக இலக்கியம் என்ன சொல்கிறது? உங்களுக்கு தெரியவில்லை என்றால் வலைதளத்தில் தேடுங்கள். எடுத்துக்காட்டாக டபிள்யூடபிள்யூ டாட்காம் கூகுளில் male person killing wife latin american literature only என தேடுங்கள். தேடலில் தானாக வந்து மாட்டும் தகவல்களையும் சேர்க்கலாம். தகவல் கிடைத்தபின் அதை மேற்கண்ட சம்பவத்துடன் இணைக்க வேண்டும். கதையின் முடிவில் ஆழமான கருத்துகளை மறக்கக்கூடாது….
அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பரோஸின் ‘நேக்கட் லஞ்ச்’ (Naked Lunch) என்கிற நாவலில், நாயகன் வில்லியம் லீ-க்கு பூச்சி மருந்து அடிப்பதால் ஏற்படும் மூச்சு திணறல் அவனுள் போதை மற்றும் காம உணர்வை கிளறுகிறது.
இத்தகைய புலனின்பம் சார்ந்த அக தேடலின்போது தனது மனைவியை தவறுதலாக பூச்சி மருந்தால் கொல்கிறான். இதனால் ஏர் பில்லோவால் அவளை அமுக்கி கொல்லும் திட்டம் முறியடிக்கப்படுகிறது (ஏர் பில்லோவால் கொல்ல முடியாது என்றாலும் சர்ரியலிச நாவல் என்பதால் இதில் யதார்த்தம் தவிர்க்கப்படுகிறது). வில்லியம் மனைவியை திட்டமிட்டு கொன்றதாக போலீஸ் சந்தேகிக்கிறது. காவல் துறை பெரிய அதிகாரி அவன் வீட்டிற்கு வந்து, ‘உங்கள் மனைவிக்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா?’ என்று கேட்கிறார்.
போலீசிடமிருந்து தப்பிக்க நாயகன் தேசாந்திரம் போகிறான். பிடிபடும் கோர அச்சத்தின் தீவிரம் தந்த வேதனை அவனை ஒருபுறம் நெருக்க, மறுபுறம் வாழ்க்கை அவனுக்கு பலவித அனுபவங்களை புகட்டியபடி இருக்கிறது.
இந்தப் பாடங்களை நாமும் தினமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கை கற்பனை கதாபாத்திரங்களுக்கும் நிஜமனிதர்களுக்கும் வித்யாசம் பார்ப்பதில்லை. சூரிய ஒளி தெருவிலுள்ள மழைநீர் குட்டைகளில் பிரதிபலிப்பது போல் என் சகபயணியின் கனவு பல கணவர்களின் மனதில் புழங்குகிறது. அடைய இயலாத ஒரு குதிரைத் தந்தமாகவே அந்த கனவு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்குகிறது. (இதே ரீதியில் இன்னும் இரு பாராக்கள்)
இலக்கிய கதை முடிந்தது. இப்போது உலக சினிமா படத்தை பற்றி எழுத வேண்டும். தரமான படமாக இருக்க தேவையில்லை. வெளிநாட்டவரால் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் போதும். அழகியல் நேர்த்தி துடித்து வெளிக்கிளப்பும் உளவியல் ஒருங்கிணைப்புக்காக அதே பார்முலாவை பின்பற்றுங்கள்….
1991-ம் ஆண்டு ஷோஹை இமமுரா இயக்கி டோக்கியோவில் வெளிவந்த ‘த ஈல்’ (The Eel) என்ற படம் கணவர்களின் தீராத கொலையுணர்வைப் பற்றியது. கோஜி யகுஷோ நடித்த இந்தப் படம், மனைவியின் ரகசிய சுரோணித சிநேகிதத்தை கண்டுபிடிக்கும் ஒரு கணவன் அவளை கொன்றுவிட்டு சிறைக்குச் சென்று பின்னர் ஜாமீனில் வெளிவந்து முடிதிருத்து நிலையம் அமைத்து இயல்பு வாழ்க்கையை மீட்க முயல்வதையும் அவன் கடையில் வேலைசெய்ய வரும் ஒரு பெண் அவன்பால் ஈர்க்கப்படுவதையும் பற்றியது.
டகுரோ யமாஷிட்டா …. (இரண்டு பாராக்களில் கதையை விளக்குங்கள்)
டகுரோவும் கெய்கோவும் சுய வாழ்க்கையின் அக நெருக்கடிகளை தத்தமது வழிமுறைகளில் எதிர்கொள்ளும் மனப்பான்மையின் இரண்டு மாறுபட்ட வடிவங்கள். சமூகம் அவர்கள் பலவீனத்தை அறிந்து பந்தாடுகிறது. உலக சினிமா பாத்திரங்கள் என்பதால் அவர்களுக்கு அக தேடல், அடையாள சிக்கல்களும் உள்ளன. (முடிந்தால் வளர்த்துங்கள்)
அடுத்து பெட்டிச் செய்தி இருந்தால் அதில் உங்களுக்கு பிடிக்காத யாரை பற்றியாவது எழுதுங்கள். அவர்களைப் பற்றி எழுதி கேவலப்படுத்த வேறு சந்தர்ப்பம் வாய்க்காது. எடுத்துக்காட்டாக எனக்கு சிட்னி ஷெல்டனை பிடிக்காது. அவரைப் புகழ்ந்து பதினைந்து வரிகள் எழுதினால் வேலை முடிந்தது.
இடம் இருந்தால் – அனேகமாக இருக்காது – ஒரு ஜென் கதையை சேர்த்துக்கொள்ளுங்கள். வலைதளத்தில் தேடினால் கிடைக்கும். கிடைக்கவில்லை என்றால் நீங்களே எழுதிவிடலாம். மாதிரிக்கு:-
“குருவே, முரண்களை சேர்க்கமுடியுமா?” என ஓர் இளந்துறவி லி மு பாயிடம் கேட்டார்.
தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த லி மு பாய் கொதிக்கும் வெந்நீரை அவர் முகத்தில் விட்டெறிந்து, “முடியாமலா?” என்றார்.
யார் வேண்டுமானாலும் பத்தி எழுதலாம். ஆனால் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். பத்திதானே என்று அலட்சியமாக எழுதக்கூடாது. எழுத்து எளிமையாகவும் காத்திரமாகவும் இருக்க வேண்டும். சிலருக்கு எளிமை பிரம்ம பிரயத்தனம் செய்தாலும் கைவராது. வேறு சிலருக்கு சிக்கலான எழுத்து மட்டுமே கைவரும். இதற்கு உதாரணங்களை எனது புத்தகங்களின் பின்னட்டை விளக்கங்களில் பார்க்கலாம்.
வெளிநாட்டவர்களின் பெயர்களை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக எழுத வேண்டும். உதாரணமாக, அன்னா கிரிகோரிவ்னா, அன்னா கிரிகோர்வினா, அன்னா கிரிகிரிவேனா ஆகிய மூன்று பெயர்களும் ஒரே நபரைக் குறிக்கின்றன. அதே சமயத்தில் மூன்று பெயர்களும் தவறாக எழுதப்பட்டுள்ளன. இது முக்கியம்.
தகவல் பிழைகளில் கவனம் தேவை. ஆங்கிலத்தில் Authenticity என்கிறார்கள். ஒரு கட்டுரைக்கு ஆதண்டிசிடி தருவது தகவல் பிழைகளே. ஆகவே உங்கள் பத்தியிலோ அல்லது கட்டுரையிலோ குறைந்தது இரண்டு தகவல் பிழைகளாவது இருக்க வேண்டும். தகவல் பிழைகள் இல்லை என்றால் கட்டுரை திருப்பி அனுப்பப்படலாம். இது என்னுடைய அனுபவம். இலக்கணப் பிழைகளும் எழுத்து நடையை மெருகேற்றும், ஆனால் அவை கட்டாயமல்ல.
இறுதியாக, மிதமிஞ்சிய தன்னம்பிக்கையைக் கைகொள்ளுங்கள். அது என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சொத்து. எனக்கு எல்லாம் தெரியும் என முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து சொல்லிக்கொள்ளுங்கள். என்னைப் போல் எழுத அபிலாஷித்தால் உங்களை உலக எழுத்தாளர்களின் வரிசையில் ஒருவராக நினைத்துக்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் அடித்தளமான ஒரு விதிமுறை உண்டு. அது:- பத்தி எழுத்து பத்தி எழுத்தாக இருக்க வேண்டும்.

நன்றி*****தமிழின் முன்னணி எழுத்தாளர்..

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...