முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வு பெறுங்கள்… ….

final_on_11
90 வயது. 90 வயதில் ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும்.  உண்டு, உறங்கி, எப்போது காடு அழைக்கும் என்று காட்டை எதிர்நோக்கி அந்தக் காலத்தைப் போல வருமா என்று புலம்பியபடி காலம் தள்ள முடியும். சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, பெரும்பாலான நேரம் உறங்கி, விழிக்கும் நேரத்தில் உடல் உபாதைகளைப் பற்றி புலம்பிக் கொண்டே பொழுதைப் போக்க முடியும்.
ஆனால், காலையில் எழுந்ததும் அனைத்து செய்தித்தாள்களையும் படித்து, உதவியாளர் சொல்லும் தகவல்களைக் கேட்டறிந்து, எந்தெந்த செய்திகளை பாராட்ட வேண்டும், எந்தெந்த செய்திகளை மறுக்க வேண்டும் என்று தேவையான குறிப்புகளை உதவியாளருக்கு கொடுத்து, கட்சியில் என்ன நடக்கிறது என்பதைக் கேட்டறிந்து, அறிவாலயம் சென்று, கட்சிக்காரர்களைப் பார்த்து, விபரங்களைக் கேட்டறிந்து, கோபாலபுரம் சென்று, மனைவி தயாளுவின் உடல் நிலையை விசாரித்து, மகன் என்ன செய்கிறான் என்று பார்த்து, மதுரை மகன் இன்று ஏதாவது பஞ்சாயத்து வைத்திருக்கிறானா என்பதை விசாரித்துக் கொண்டு, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, யாரையாவது தாக்கிப் பேசி, தான் பேசுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விவாதித்து, தொலைக்காட்சி நிருபர் ஏதாவது மோசமான கேள்விகளைக் கேட்டால், அவரைத் திட்டி, மாலை மீண்டும் கட்சித் தலைவர்களோடு ஜெயலலிதாவையும், அதிமுகவையும் பற்றி விசாரித்தறிந்து, ஜெயலலிதாவை வாயாரத் திட்டி, அடுத்து என்ன அறிக்கை விட வேண்டும் என்பதை கேட்டறிந்து, மாலை செய்தித்தாள்களைப் படித்து,  இரவு துணைவியார் வீடு இருக்கும் சிஐடி காலனிக்குப் போய், அவர் வைக்கும் ஒப்பாரியை முழுமையாக கேட்டு, மகளை எப்படி ராஜ்யசபை எம்.பியாக்குவது, எவனை வாங்குவது, எவனைக் கவிழ்ப்பது என்று யோசித்து, மகள் சொல்லும் புகார்களைக் கேட்டு, புதிதாக வந்திருக்கும் தமிழ்த்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி காட்டினால் அதை சென்று பார்த்து, அதற்கு விமர்சனம் எழுதி, இரவு உறங்கச் சென்று, மீண்டும் அதிகாலை எழுந்து, மீண்டும் செய்தித்தாள்களைப் படித்து…. …. …..
இதை உங்களால் 90 வயதில் செய்ய முடியுமா ?   நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது அல்லவா ? இதை கருணாநிதி 90 வயதில் செய்து கொண்டிருக்கிறார்.  இது ஒரு மனிதனால் சாத்தியமா என்பதை நம்ப முடியவில்லை.  கருணாநிதி ஒரு விஞ்ஞான அதிசயம்தான்.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளையை விஞ்ஞானிகள் பரிசோதித்தது போல கருணாநிதியின் மூளையையும் பரிசோதிக்கத் தகுந்ததே. அப்படிப்பட்ட அசாத்திய திறமை வாய்ந்தவர் கருணாநிதி. கருணாநிதியைப் போன்ற மிகச்சிறந்த நிர்வாகியைப் பார்க்கவே முடியாது. கருணாநிதியோடு பணியாற்றிய பெரும்பாலான உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் விஷயம், கருணாநிதி ஒரு சிறந்த நிர்வாகி என்பது. சட்டம், நிர்வாகம், உளவு, அரசியல், இலக்கியம் என்று கருணாநிதி ஒரு பன்முகத் திறன் படைத்தவர் என்பதை அவர் எதிரிகளும் ஒப்புக் கொள்ளவே செய்வர். கை ரிக்சாவை ஒழித்தது, இலவச கண் சிகிச்சை முகாம், திருமண உதவித் திட்டம், கிராமப்புரங்களை சீர்திருத்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராமங்கள் சுய நிர்ணயம் பெறும் வகையில் நமக்கு நாமே திட்டம், இது தவிரவும் பல்வேறு உட்கட்டுமானப் பணிகள் என்று கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்குச் செய்த சேவைகள் குறிப்பிடத் தக்கவை.
இவையெல்லாவற்றையும் விட, கருணாநிதியிடம் குறிப்பிடத்தகுந்த பாரட்டக் கூடிய ஒரு குணம், அவரது சிறந்த நகைச்சுவை உணர்வு.  ஜெயலலிதாவுக்கு இந்த உணர்வு சுட்டுப்போட்டாலும் வராது. கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா சரியான சிடுமூஞ்சி.  ஜெயலலிதா எப்போதாவது சிரித்தார் என்றால் அது அதிசயிக்கத்தக்க சம்பவமாக இருக்கும்.  நான் நல்ல ஆட்சி தருகிறேன் என்று ஜெயலலிதா தான் பேசுவது நகைச்சுவை என்பதே தெரியாமல் ஜோக் அடித்தால்தான் உண்டு.
ஆனால் கருணாநிதியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சிலேடையும், நகைச்சுவை உணர்வும் இருக்கும். தர்மசங்கடமான கேள்விகளுக்கு சிலேடையாகவும், நகைச்சுவையாகவும் பதில் கூறி, அந்தக் கேள்வியையே முனை மழுங்கச் செய்வதில் கருணாநிதிக்கு நிகரே கிடையாது.
இவையெல்லாம் கருணாநிதியின் ஒரு முகம்.  கருணாநிதிக்கு மற்றொரு முகம் இருக்கிறது. அது சகித்துக் கொள்ள முடியாத முகம். தொடக்க காலம் முதலாகவே கருணாநிதி, தான் தன் குடும்பம் என்பதை மனிதில் வைத்தே அத்தனை காரியங்களையும் ஆற்றியிருக்கிறார்.
சுயமரியாதை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையோடு தன் அரசியல் வாழ்வை தொடங்கிய கருணாநிதி, தன் அக்காள் சண்முக சுந்தரம்மாளின் மகன் மாறனை தன் இளமைக் காலம் தொடங்கியே கூடவே வைத்திருந்தார்.   முதல் மனைவி பத்மாவதியின் மறைவுக்குப் பிறகு, தயாளு அம்மாளைத் திருமணம் செய்த கருணாநிதிக்கு தயாளு அம்மாள் வழியாக அழகிரி, ஸ்டாலின், தமிழரசு மற்றும் செல்வி என்று நான்கு பிள்ளைகள்.  அடுத்ததாக வந்து சேர்ந்தார் துணைவியார் தர்மாம்பாள் என்கிற ராசாத்தி அம்மாள். அவர் வழியாக கனிமொழி. இந்தக் குடும்பங்களும், மாறனின் குடும்பங்களின் வளர்ச்சியே திமுக மற்றும் கருணாநிதியின் வளர்ச்சி.
எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக தன் மகனை களமிறக்கி தோல்வி கண்ட கருணாநிதி முத்துவின் மீதான நம்பிக்கையை இழந்தார். 1953ல் பிறந்த ஸ்டாலின், 1969 பாராளுமன்றத் தேர்தலில் முரசொலி மாறனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நெருக்கடி நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததைக் காரணம் காட்டியே அவரை கட்சியின் இளைஞர் அணித் தலைவராக்கினார்.  1980ல் இளைஞர் அணித் தலைவரான ஸ்டாலின் இன்று வரை அந்தப் பதவியை விடவில்லை. டெல்லியை கவனித்துக் கொள்ள முரசொலி மாறனும், தமிழகத்தில் தனக்கு அடுத்து மு.க.ஸ்டாலினும், தென் தமிழகத்துக்கு அழகிரியும் என்று மெள்ள மெள்ள, போராட்டத்தில் உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை தனது குடும்ப நிறுவனமாக மாற்றினார் கருணாநிதி.
தனக்கு போட்டி என்று கருதி எம்.ஜி.ஆரை வெளியேற்றினார், தன் மகனுக்கு போட்டி என்று கருதி வைகோவை வெளியேற்றினார்.  தனக்கும், தன் குடும்பத்துக்கும் யார் யாரெல்லாம் எதிரி என்று கருதினாரோ, அத்தனை பேரையும் ஒழித்துக் கட்டினார். வி.பி.சிங் அரசாங்கத்தில் மந்திரி பதவி என்ற வாய்ப்பு வந்ததும், அப்போது ராஜ்யசபா எம்.பிக்களாக இருந்த யாரையும் பரிந்துரைக்காமல், முரசொலி மாறனைத்தான் பரிந்துரைத்தார் கருணாநிதி. 2004ல் வாய்ப்பு வந்தபோது முரசொலி மாறனின் வாரிசைத்தான் மந்திரியாக்கினார் கருணாநிதி. கட்சியின் தொழிற்சங்கத்தில் முக்கிய பங்காற்றிய செ.குப்புசாமியை எம்.பியாக்கத் தோன்றிய கருணாநிதிக்கு அவரை அமைச்சராக்கத் தோன்றவில்லை. 2009ல் எம்.பியான அழகிரியை மந்திரியாக்கத் தெரிந்த கருணாநிதிக்கு, கட்சி மற்றும் தமிழகத்தின் குரலாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றி வரும் திருச்சி சிவாவை அமைச்சராக்கத் தோன்றவில்லை.
பதவிக்கான போட்டிகள் இவர்கள் குடும்பத்திற்குள்தான் எழுந்தனவே தவிர குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் போட்டியிட முடியவில்லை. அழகிரியின் கோபம் பல பேருந்துகளை எரித்தது.  தான் வாரிசாகத் தகுதியில்லை என்று சர்வே வெளியிட்டதற்கு வந்த கோபம் மூன்று உயிர்களை பழிவாங்கியது. ஆட்சி பொறுப்பில் இருந்து இவற்றைக் கண்டித்திருக்க வேண்டிய கருணாநிதி, தன் பிள்ளைகளை மயிலிறகால் வருடிக் கொடுத்தார்.
karuna_family_tree
மாறன்களோடு பகை உருவானபோது, அவர்களுக்குப் போட்டியாக தன் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழியை டெல்லி பிரதிநிதியாக கட்சியின் மீது திணித்தார். தன்னையோ, தன் குடும்ப உறுப்பினர்களையோ தலைவர்களாக ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்பதை ஏறக்குறைய வெளிப்படையாகவே அறிவித்தார்.  திமுக என்பது, தனது குடும்ப சொத்து என்பதை பகிரங்கப்படுத்தினார் கருணாநிதி.
குடும்பம் என்ற புதைமணலில் சிக்கிய கருணாநிதி அந்த புதை மணலில் இருந்து வெளிவர முடியாமல், அதற்குள் நின்று கொண்டே கட்சி தொடர்பான அத்தனை முடிவுகளையும் எடுக்கத் தொடங்கினார். அப்போது இடுப்பு வரை அவரை விழுங்கியிருந்த புதை மணல், அவர் சிந்தனையை மழுங்கடித்தது.
சிறிது சிறிதாக கருணாநிதியை விழுங்கிய புதை மணல், 2006ல் அவரை கழுத்து வரை விழுங்கியது.  தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும் ஒருவன் சிந்தனை செய்ய முடியாமல் எப்படித் தடுமாறுவானோ, அது போலவே தடுமாறத் தொடங்கினார் கருணாநிதி.  அது வரை, மறைமுகமாக அமைச்சர்கள் மூலமாக வசூலில் ஈடுபட்ட கருணாநிதியின் குடும்பம், நேரடியாகவே வசூலில் இறங்கத் தொடங்கியது.  இரண்டாம் தாரத்துக்கும், மூன்றாம் தாரத்துக்கும் இடையே இருந்த போட்டிகளும், மாறன் குடும்பத்தோடு நடந்த போட்டிகளும், வரைமுறை இல்லாமல் கொள்ளையடிக்க வைத்தன.  டெல்லியில் ஒரு புறமும் தமிழகத்தில் மறு புறமும், கருணாநிதியின் குடும்பம் அடித்த கொள்ளைகள், சம்பல் பள்ளதாக்கில் அடித்த கொள்ளைகளை விஞ்சின.  இந்தக் கொள்ளைகளையெல்லாம் தடுத்திருக்கும் வல்லமை படைத்த கருணாநிதி தன் கட்டுப்பாட்டை இழந்து, சண்டை போடாமல் கொள்ளையடியுங்கள் என்றார்.
சொந்தங்களுக்குள்ளேயே சிக்கல் என்ற நெருக்கடி வந்தபோது, சொந்தங்களை விட குடும்பமே பெரிது என்று முடிவெடுத்தார்.  பிரிந்த சொந்தங்கள், குடும்பத்தை அச்சுறுத்தியதும், சொந்தங்களுக்கும், குடும்பத்துக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தினார். மூன்று உயிர்கள் பலியான விவகாரத்தை, அது முடிந்து போன விவகாரம் என்று புறந்தள்ளினார். இனித்த இதயத்தை தடவிக் கொண்டும் பனித்த கண்களை துடைத்துக் கொண்டும், மறைந்த உயிர்களை மறந்து போனார்.  தினகரன் நாளிதழில் நடந்த கொலைகளை கருணாநிதி கையாண்ட விதம், அவர் குடும்பத்துக்காக எத்தனை உயிர்களையும் பலி கொடுக்க தயங்க மாட்டார் என்பதை உணர்த்தியது.
ஒரு சாதாரண திரைப்பட எழுத்தாளராக தன் வாழ்வை தொடங்கிய கருணாநிதியின் குடும்பம், இன்று தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக உருவெடுத்திருக்கிறது.  கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.  ஆனால் அந்த குடும்பத்தின் பேராசைகள் அவர்களை சட்டத்தின் பிடியிலும் சிக்க வைத்திருக்கிறது.  பதவி ஆசையில் மகன் கொலை வழக்கை சந்தித்தார். பண ஆசையில் மகள் சிறை சென்றார்.  பெரும் பேராசையில் மருமகன்கள் சிறை செல்ல இருக்கின்றனர்.
இவர்களைக் காப்பாற்றும் நெருக்கடியில் இருந்த கருணாநிதி தனது அத்தனை விழுமியங்களையும் இழந்தார்.  தமிழினத் தலைவர் என்று தொண்டர்கள் வாயாரப் புகழ்வதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த கருணாநிதி அந்த இனத்தின் படுகொலைக்கு மவுன சாட்சியானார்.  தமிழ் தமிழ் என்று மொழியால் தன்னை வளர்த்துக் கொண்ட கருணாநிதி, அந்த மொழியை வாழவைக்கும் தமிழர்களின் இனப்படுகொலையைப் பார்த்து வாளாயிருந்தார்.
விஞ்ஞானிகளே வியக்கத்தக்க அசாத்தியமான திறமைகளைக் கொண்ட கருணாநிதியை ஒரு தட்டிலும், தன் குடும்பத்துக்காக அந்தத் திறமைகளை சீரழித்த கருணாநிதியை மறு தட்டிலும் வைத்தால், குடும்பத்துக்காக தன் இனத்தை பலிகொடுத்த கருணாநிதியின் பக்கமே எடை கூடுகிறது.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுக்கும் திறமைக்கும் ஈடு கிடையாது. அந்த ஐன்ஸ்டீன், தன்னுடைய கண்டுபிடிப்புகளை மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்துவதற்கும், கருணாநிதி தன்னுடைய அசாத்திய திறமைகளை குடும்பத்தை வளர்த்து இனத்தை அழிக்க பயன்படுத்தியதற்கும் வேறுபாடு இல்லை.
இந்த வயதிலும், பிடிவாதமாக நீங்கள் அரசியலில் ஈடுபட்டு, மகனுக்குக் கூட பதவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பதன் காரணம் நீங்கள் நார்சிஸ்ட் என்பது மட்டுமல்ல.  நீங்கள் பதவியில் இல்லாமல் இருந்தால், உங்கள் குடும்பங்கள் அடித்துக் கொண்டு தெருவுக்கு வந்து விடுவார்கள் என்பதும்தான்.  ஆனாலும் இந்த வயதில் நீங்கள் விடாமல் இந்தப் பதவியைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, உங்கள் பிள்ளைகளே ஏசுகிறார்கள்… உங்களை சபிக்கிறார்கள். உங்களைப் பார்த்ததும், அப்பா என்றும் தலைவர் என்றும் அவர்கள் பாசமாகப் பேசுவது நடிப்பு என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் அதை பாசமென்று நம்ப விரும்புகிறீர்கள். இதனால் அது உங்களுக்கு உண்மையாகத் தோன்றுகிறது.
இத்தனை நாட்களாக நீங்கள் குடும்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பங்களுக்காக பல கோடிகளை சேர்த்து வைத்திருக்கிறீர்கள். இது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய காலம். நீங்கள் காலதாமதம் செய்வீர்களேயானால், உங்கள் பிள்ளைகளே உங்களை வெளிப்படையாக வெறுக்க நேரிடும்.  அந்த நிலை உங்களுக்கு இந்த முதிய வயதில் வரக்கூடாது.
சுயசரிதை என்பது ஒரு மனிதனின் உயில் போன்றது.  அந்த உயிலில் பெரும்பாலும் பொய் இருக்காது.  ஆனால் உங்களின் நெஞ்சுக்கு நீதி ஆறு பாகங்களும் முக்கால் பகுதி பொய்யைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. யாருடைய நெஞ்சுக்கும் நீதி வழங்காதது உங்கள் சுயசரிதை.
உங்களின் இந்த 90வது பிறந்த நாளில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுங்கள். ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்தை தமிழர்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.  அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவது ஒன்றுதான் தமிழினத்துக்கு நீங்கள் செய்யும் ஒரே உதவி.
ஓய்வு பெற்ற பிறகு, உங்கள் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களை எழுதுங்கள்.  உண்மையை எழுதுங்கள்.  உங்கள் வாழ்வின் உண்மைகள் உங்களோடு அழிந்து போக வேண்டாம்.
Kalangher
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...