முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அணையாத காதல் தீ




சாதி என்னவெல்லாம் செய்யும்? ஊரைக் கொளுத்தும்; கௌரவக் கொலை செய்யும்; காதலித்து மணந்தவர்களைப் பிரிக்கும். சினிமாவில் மட்டுமே பார்த்த இதுபோன்ற காட்சிகளெல்லாம் அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் அரங்கேறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள். 

தர்மபுரி நத்தம் தலித் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனை திவ்யா என்கிற வன்னிய சாதியைச் சேர்ந்த பெ
ண் காதலித்து மணந்ததைப் பொறுக்காமல் மூன்று தலித் கிராமங்கள் எரிக்கப்பட்ட அந்த நவம்பர் 7ம் தேதிக்குப் பின் நிகழ்ந்தவை ஊரறியும். அதன் பின்னர் தொடர்ச்சியாக நிகழ்ந்த கௌரவக் கொலைகள், தலித் பெண்கள் மீதான தாக்குதல்கள், சாதியின் பெயரால் நிகழும் தாக்குதல்கள், குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள் என்று மரக்காணம் வரை நீண்டது பிரச்சனை. மாமல்லபுரம் வன்னியர் விழாவில் பேசியதற்காக ராமதாஸ், காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வளவு நடந்தபோதும் திவ்யாவும் இளவரசனும் எங்கிருக்கிறார்கள் என்கிற விவரம் மட்டும் யாருக்கும் தெரியவில்லை.

திவ்யாவின் தாய் தேன்மொழி தன் கணவரின் மரணத்துக்கு இளவரசன் தான் காரணம் என்றும் தன் மகளை கடத்திவிட்டதாகவும்  தொடுத்த வழக்கில் ஆஜரான திவ்யா ’’என்னை யாரும் கடத்தவில்லை; நானாக விரும்பித்தான் இளவரசனை திருமணம் செய்துகொண்டேன்’’ என்று சாட்சியமளித்துவிட்டுச் சென்றார்.  அதன்பின் திவ்யாவும் இளவரசனும் எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நாடகக் காதல் திருமணங்கள் இவை என்று பா.ம.க. தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதன் தலைவர் தொல். திருமாவளவனும் இத்தகைய திருமணங்களை ஊக்குவிக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டியது பா.ம.க. காதலை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கமும், காதலுக்கு எதிரான சாதிய அமைப்புகள் ஒரு பக்கமும் நின்று தமிழகக் களம் இரண்டாகப் பிரிந்ததும், பெரும் விவாதங்கள் நிகழந்ததும் வரலாறு. இத்தனை நடக்கையிலும் திவ்யாவும் இளவரசனும் எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். திவ்யாவும் இளவரசனும் ஊர் ஊராக சாதிவெறிக்கு பயந்து வாழ்ந்துகொண்டிருந்தனர். சென்னையில், பெங்களூரில் என்று ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்துவந்தாலும் பெரிதாக வருமானம் இல்லாத நிலையில் ஒருகட்டத்துக்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை. இளவரசனுக்காகவும் திவ்யாவுக்காகவும் காதல் திருமணங்களுக்காகவும் ஆதரித்துப் பேசிய இயக்கங்கள் எதுவும் கூட இவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இவர்களும் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆகவே பொருளாதாரரீதியில் யாரும் இவர்களுக்கு உதவமுடியமல் போயிற்று. இளவரசனின் தந்தை இளங்கோ தர்மபுரி அரசு மருத்துவமனையில் ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரிகிறார். ஒரு கட்டத்தில் பொருளாதார சுமை அழுத்த வேறு ஊர்களில் குடிவைக்க முடியாமல் மகனையும் மருமகளையும் தர்மபுரி டவுனில் உள்ள அரசு மருத்துவமனி குவார்ட்டஸுக்கு அழைத்து தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார். வீட்டைவிட்டு ஜோடியை வெளியே அனுப்பவில்லை. யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர் பெற்றோர். ’’ இதற்கிடையே திவ்யா கர்ப்பமானார். ஊர் ஊராக அலைந்ததில் திவ்யாவுக்கு கர்ப்பம் தங்கவில்லை.’’ என்கிறார் இளவரசன். சென்னைக்கு உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் அம்மா தொடர்ந்த வழக்கில் ஆஜரானார் திவ்யா. 

’’திவ்யாவின் அப்பா திவ்யாவைத்தான் வாரிசாக நியமித்திருந்தார். அதனால் அவர் இறந்தவுடன் அவருடைய வேலை திவ்யாவுக்குத்தான் வரும். திவ்யா அதை வேண்டாம் என்று எழுதிக்கொடுத்தால்தான் அது அவங்க அம்மாவுக்குக் கிடைக்கும். ஆகவே எங்களிடம் போனில் பேசினார் திவ்யாவின் அம்மா. வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்கினார். நான் தான் அவரை வீட்டுக்கு அழைத்துவந்து மீண்டும் கொண்டுபோய் விட்டேன். நன்றாகப் பேசினார். பாசமாக இருந்தார். அதனால் ந்மபினோம். அம்மாவிடம் அவ்வபோது பேசுவார் திவ்யா. நானோ என் வீட்டாரோ திவ்யாவை தடுக்கவில்லை. இந்தச் சூழலில்தான் நான் வீட்டில் இல்லாதபோது திவ்யாவுக்கு போன்செய்து உடல்நலம் சரியில்லை என்றும் கவிதா மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் சொல்லி வரவைத்திருக்கிறார்கள். நான் வரும்வரை பொறுக்கச் சொன்னேன். அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்திகேட்டவுடன் திவ்யாவால் தாங்க முடியவில்லை. உடனே கிளம்பிச் சென்றுவிட, அப்புறம் நடந்ததுதான் ஊருக்கே தெரியுமே?’’ என்கிறார் இளவரசன்.’’நாங்கள் கவிதா மருத்துவமனையில் விசாரித்துவிட்டோம். உள்நோயாளியாக அவர் அங்கே அட்மிட் ஆகவில்லை.’’ என்கிறார் இளவரசனின் தந்தை இளங்கோ.

திவ்யாவின் புகைப்படமாவது நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. இளவரசன் எப்படி இருப்பார் என்பதே பலருக்குத் தெரியாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 6ம் தேதி தான் பலர் அவரைப் பார்த்தனர். இவர்களின் திருமணத்துக்குப் பின்னான சம்பவங்கள் நாடறியும் என்கிறபோது நீதிமன்றம் இந்த வழக்கை நடத்திய விதம் குறித்து பலர் புருவம் உயர்த்துகின்றனர். அன்றைக்கு விசாரணையில் திவ்யா தான் மனக்குழப்பத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். இவ்வளவு பலவீனமான மனநிலையில் உள்ளவரை இருதரப்பிலும் அனுப்பாமல் காப்பகத்தில் சேர்த்து சில நாட்கள் இருக்கவைத்து அதன்பின் அவர் சமச்சீர் மனநிலைக்கு வந்தபின்பு அவரை விசாரித்து எங்கே செல்ல விரும்புகிறார் என்று கேட்டறிந்து அனுப்பியிருக்கலாம். திவ்யாவை அன்றைக்கு வேறு யாரிடமும் பேச விடாமல் பாதுகாப்பு வளையம் ஒன்றை அமைத்து அப்படியே அழைத்துச் சென்றுவிட்டனர். 

இருவர் விரும்பி மணம் புரிந்துகொண்டபின்னர் அதைப் பிரிப்பது எந்தவகை அறம்? அப்படியென்ன குற்றம் புரிந்தார்கள் இவர்கள்? நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திவ்யா தன் கணவருடன் தான் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக கூறியிருக்கிறார். அப்படியென்றால் இந்த முடிவு நிர்பந்தத்தத்தின் பேரில் எடுத்த முடிவு என்பதும் விளங்குகிறது. மேலும் நீதிபதிகளிடம் அவர் ‘’என் அம்மாவின் மனநிலை மிகவும்மோசமாக இருக்கிறது. உடல்நலமும் சரியில்லை. ஆகவே 3 வாரங்கள் நான் அம்மாவுடன் இருக்கிறேன்’’ என்று கூற நீதிபதிகள் அதற்கு ‘’அப்படியெனில் இளவரசனை பிரிகிறீர்களா?’’ என்று கேட்க ‘’அப்படி நான் முடிவெடுக்கவில்லை. இப்போதைக்கு அம்மாவுடன் செல்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். ஆனால் முந்தைய நாளே திவ்யாவும் அவருடைய அம்மாவும் விவாகரத்து கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்றைக்கு மனு அளிக்கவிருப்பதாக செய்திகள் உலவவிடப்பட்டன. ஊடகங்களும் இவர்கள் இருவரும் பிரிந்ததாகவே செய்திகள் வெளியிட்டன. இதை கடுமையாக மறுக்கிறார் இளவரசன். ‘’திவ்யா அப்படிச் சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் அன்றைக்கே வழக்கு முடிந்திருக்கும். ஏன் மீண்டும் ஜூலை 1ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்கள்?’’ என்கிறார் இளவரசன்.

நம்பிக்கையோடு இருக்கிறார் இளவரசன். இருவருக்குள் பிரச்சனை; வாழப்பிடிக்கவில்லை என்பதால் விலகுகிறார்கள் என்பது வேறு. அரசியல் காரணங்களால் காதலர்களை, தம்பதிகளை பிரிப்பது சகித்துக்கொள்ள முடியாதது. மனம் விரும்பிப் புரிந்த திருமணங்களை சாதிய சக்திகள் பிரித்துவிடும் என்றால் அந்தளவுக்கு பலவீனமான சமூகமாக இச்சமூகம் இருக்கிறது என்று பொருள். நீதியைவிட, சட்டத்தைவிட  சக்திவாய்ந்தது சாதி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது

*****
சாகணும்னு நினைக்கலைங்க. அம்மா அப்பா பயந்துட்டாங்க. அவங்களுக்கு பயம். எனக்கு வேதனை. எப்படி தீர்த்துக்குறதுன்னு தெரியலை. அதான்’’ என்கிறார் இளவரசன்.

காதலிக்கும்போதோ திருமணம் செய்துகொள்ளும்போதோ இப்படி தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாவோம் என்று நினைத்தீர்களா?

இல்லை. நிச்சயமாக இல்லை. எத்தனையோ பேர் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். அப்படித்தான் எங்க கல்யாணமும்னு நினைச்சேன். திவ்யாவும் அப்படித்தான் நினைச்சாங்க. முதல்ல கோபமாக இருப்பாங்க. அப்புறம் சமாதானமாகிடுவாங்கன்னு நினைச்சோம். இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கவில்லை.  சாதி எவ்வளவு கொடூரமானது; அது என்னவெல்லாம் செய்யும்னு காதலிச்சபின்னால்தான் நல்லா புரியுது.

திவ்யா திடீரென்று தாயுடன் செல்லவேண்டும் என்று கூறியது ஏன்?

திவ்யாவின் அம்மாவை பின்னணியில் இருந்து இயக்குகிறாங்க. அம்மாவின் உயிருக்கும் என் உயிருக்கும் ஆபத்து என்று மிரட்டியிருக்கிறாங்க. அதனால்தான் திவ்யா இப்படியொரு முடிவு எடுத்திருப்பாங்க. என்னைப் பிரிந்து அவங்களால் இருக்க முடியாது. இந்த மூன்றுவார பிரிவை திவ்யாவால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு மணிநேரம்கூட என்னைப் பிரிந்திருக்க முடியலைனு அடிக்கடி சொல்வாங்க. எங்களைப் பிரிக்கும் திட்டத்தை பா.ம.க.வின் ஹெட் ஆஃபீஸ்லதான் போட்டிருக்காங்க. அதை செயல்படுத்திட்டாங்க.

திவ்யாவுக்கும் உங்களுக்கும் திருமணத்துக்குப் பின் பிரச்சனைகள் ஏதேனும் உண்டா?

இல்லை. நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஊர் ஊரா பயந்து பயந்து வாழ்ந்தாலும் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறதே சந்தோஷமா இருந்துச்சு.

திருமணம் எங்கே நடந்தது?

ஃபுட்பால் மேட்ச்சுக்காக திருச்சி போயிட்டிருந்தேன். ஓமலூர் போகும்போது அவங்க வீட்ல வேற இடத்துல கல்யாணம் பண்ணிக்குடுக்கப் பார்க்கிறாங்கன்னு திவ்யா போன் பண்ணினாங்க. என்னை அழைச்சுட்டுப் போன்னு சொன்னாங்க. ஆந்திராவில் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 

திவ்யாவின் வீட்டினருக்கும் உங்களுக்குமான உறவு எப்படி?

திவ்யாவின் அப்பா நல்லவர். சாதி வித்தியாசம் பார்க்கமாட்டார். எங்க கல்யாணம் பிடிக்காம அவர் தற்கொலை பண்ணிக்கிட்டாருன்னு நானும் திவ்யாவும் இப்பவும் நம்பலை. அவங்க அம்மாவுக்கும்கூட பெரிசா எதிர்ப்பு இல்லை. எங்க கல்யாணத்துக்குப் பிறகு அவங்க அண்ணன் தம்பி எல்லோரும் அவங்ககிட்ட பேசுறதில்லை. ஆனால் சுற்றி உள்ளவங்கதான் அவங்களை தூண்டிவிடுறாங்க. எனக்கு கிடைக்க இருந்த போலீஸ் வேலையை சரியாய் ஆர்டர் வரப்போகுதுன்னு தெரிஞ்சே என் மேல் கேஸ் போட்டு அந்த வேலையை கிடைக்கவிடாமல் செய்தாங்க. இது எல்லாமே அம்மா செய்யலை. அவங்களை நிர்பந்தம் பண்ணி சுத்தி உள்ள சாதிக்காரங்க பண்றாங்க.

தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள் எரிந்தபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?

குற்ற உணர்ச்சியாக இருந்தது. நானும் திவ்யாவும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்தோம். அவங்க அப்பா இறந்துபோவார் என்று நாங்க கனவிலும் நினைக்கலை. அப்பாவின் மரணம் திவ்யாவை ரொம்பவே பாதித்தது. ரொம்ப அழுதாங்க. அந்த நவம்பர் 7ம் தேதியை மறக்க முடியாது. திவ்யாவைப் பார்க்கணும்; திரும்ப கூட்டிட்டுப் போகணும்னு அவங்க தரப்புல கேட்டாங்க. ‘நீங்க வாங்க..வந்து திவ்யா வந்தா தாராளமா கூட்டிட்டுப்போங்கன்னு சொன்னேன்’ நவம்பர் 7ம் தேதி எங்களைப் பார்க்க தொப்பூருக்கு திவ்யா தரப்பில் கொஞ்சம் பேர் எங்க ஊர் தரப்பில் கொஞ்சம் பேர் வந்தாங்க. திவ்யாவோட அப்பா அப்போ வரலை. அம்மா திவ்யாவை வரச் சொல்லி கேட்டாங்க. ஆனா திவ்யா திட்டவட்டமா வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்க திரும்பிப் போய் அரைமணி நேரத்துல திவ்யா அப்பா இறந்துபோன செய்தி வருது. ஊரை எரிக்கிறாங்கன்னு தகவல் வருது. டிவியிலயும் பார்த்தோம். இந்தளவுக்கு ஆகும்னு யாருக்குத் தெரியும். நான் பிறந்த சாதிதான் இவங்களுக்குப் பிரச்சனையா போச்சு. இவ்வளவு செய்றவங்க எதையும் செய்வாங்க.

மனைவியை மீட்க என்ன செய்யப் போகிறீர்கள்?

தொடர்ந்து போராடுவேன். மூணு ஊரைக் கொளுத்தினவங்க யாருன்னு அதிகாரிங்களுக்குத் தெரியும். ஆனா நடவடிக்கை எடுக்கலை. அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும். திவ்யா எங்க இருக்காங்கன்னு பப்ளிக்கா அறிவிக்கணும். எங்களைப் பிரிக்க நினைக்கிறவங்க யாரு..இதுக்குப் பின்னணி என்ன இப்படி எல்லாத்தையும் விசாரிச்சு அறிவிக்கணும். அவங்களால மனசறிஞ்சு என்னை வேண்டாம்னு சொல்ல முடியாது. சொல்ல மாட்டாங்க. திவ்யாகூட நான் பேசணும் முதல்ல. அப்புறம் பாருங்க. எல்லாமே சரியாகிடும். 

****காதல் திருமணத்தை தாயார் ஏற்றுக்கொண்டால் கணவருடன் செல்வது பற்றி முடிவு: ஐகோர்ட்டில் தர்மபுரி பெண் வாக்குமூலம்
 
காதல் திருமணத்தை தாயார் ஏற்றுக்கொண்டால் கணவருடன் செல்வது பற்றி முடிவு: ஐகோர்ட்டில் தர்மபுரி பெண் வாக்குமூலம்
சென்னை, ஜூலை 2- 

காதல் திருமணத்தை தாயார் ஏற்றுக்கொண்டால், கணவருடன் வாழ்வது பற்றி முடிவு செய்வேன் என்று ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் தர்மபுரி பெண் வாக்குமூலம் அளித்தார். 

சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி (வயது 44) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

எனது மகள் திவ்யாவும் (வயது 20), மகன் மணிசேகரும் கல்லூரி படித்து வருகின்றனர். இந்த நிலையில் திவ்யா கடத்தப்பட்டு, இளவரசன் (வயது 19) என்பவருடன் சட்டவிரோதமாக திருமணம் செய்ததைத் தொடர்ந்து எனது கணவர் நாகராஜ் கடந்த நவம்பர் 7-ந் தேதி தற்கொலை செய்துகொண்டார். 

இந்த நிலையில் திவ்யா தொடர்பு கொண்டு, இளவரசன் தன்னை மிரட்டுவதாகவும், வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார். எனது மகள் திவ்யாவை சட்டவிரோதமாக அடைத்திருப்பதாக கருதுகிறேன். எனவே, திவ்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 27-ந் தேதி இந்த வழக்கை நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் ஆகியோர் விசாரித்தனர். ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில் திவ்யாவும், மனுதாரர் தேன்மொழியும் நீதிபதிகளின் முன்பு ஆஜரானார்கள். 

அப்போது திவ்யா, நான் விரும்பித்தான் இளவரசனுடன் சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை என்று கூறினார். 

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன்பு தேன்மொழி, திவ்யா, இளவரசன் ஆஜரானார்கள். 

அப்போது நீதிபதிகளிடம் திவ்யா, சமீபத்தில் நடந்த சம்பவங்களால் எனது மனம் மிகவும் குழம்பிப்போய் உள்ளது. எனவே தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு எனது தாயாருடன் தங்க விரும்புகிறேன். இளவரசனுடன் இப்போது பேச விரும்பவில்லை. தாயாருக்கு உடல்நலன் சரியில்லை என்று தகவல் கிடைத்ததால் அவரை பார்ப்பதற்காக சொந்த விருப்பத்தின் பேரில் அவருடன் சென்றேன் என்று பதிலளித்தார்.

அதைத் தொடர்ந்து தாயாருடன் திவ்யா தங்கிக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன்பு திவ்யா, இளவரசன் ஆஜரானார்கள். ஆனால் நீதிபதி அறையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று வக்கீல்கள் கேட்டுக்கொண்டனர். 

அதைத் தொடர்ந்து இளவரசன், திவ்யா மற்றும் அவர்கள் தரப்பு வக்கீல்கள் மட்டும் நீதிபதிகள் அறைக்கு அழைக்கப்பட்டனர். திவ்யா, இளவரசனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. சிறிது நேர விசாரணைக்கு பின்பு வழக்கை 3-ந் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர். 

அதன் பின்னர் வக்கீல்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- 

திவ்யாவிடம் நீதிபதிகள் கேள்விகள் கேட்டனர். அப்போது அவர், இளவரசன் என்னை எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அவரது தாயாரும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் எனக்கு பழைய சம்பவமும், எனது அப்பாவின் ஞாபகமாகவும் உள்ளது. இப்போது அம்மாவை விட்டுவர முடியவில்லை. அம்மாவையும், தம்பியையும் இழந்துவிடுவேனோ என்ற பயம் உள்ளது. அதனால் அவர்களுடன் வசிக்கிறேன். 

காதல் திருமணத்தை எனது தாயார் ஏற்றுக்கொண்டால், இளவரசனுடன் வாழ்வது பற்றி பின்னர் முடிவு செய்வேன் என்று கூறியிருக்கிறார். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...