முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளா கொண்டாடும் சேச்சி ஹரிதா வி.குமார் ஐ.ஏ.எஸ்




டந்த மூன்று ஆண்டுகளில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடத்தை பெண்களே பெற்று வருகின்றனர். 2010 ஆண்டுத் தேர்வில் சென்னையைச் சேர்ந்த திவ்ய தர்ஷினியும், 2011-ஆம் ஆண்டுத் தேர்வில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் படித்த ஷேனா அகர்வாலும், 2012 ஆண்டுத் தேர்வில் திருவனந்த புரத்தை சேர்ந்த ஹரிதா வி. குமாரும் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். இது இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்தை காட்டுகிறது. 

இந்தாண்டு தேர்வில் முதலிடத்தை பெற்ற ஹரிதா வி. குமார் ஏற்கெனவே ஐ.ஆர். எஸ். பணி வாய்ப்பை பெற்று பரீதாபாத்தில் அமைந்துள்ள கஸ்டம்ஸ் & கலால் வரி தேசிய அகாடமியில் பயிற்சி பெற்றுவருபவர். இதற்கிடையில் மற்றொரு முயற்சியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.


அதுவும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தை சேர்ந்த ஒருவர் அகில இந்திய அளவில் தற்போதுதான் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1991-இல் கேரளத்தை சேர்ந்த ராஜூ நாராயணசாமி முதலிடத்தை பிடித்தார். இவர் இன்று கேரளாவில் சிறந்த அரசு அதிகாரி என்ற பெருமை பெற்றவர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், தாயகோடுவில் உள்ள சங்கீத் நகரில் வசிக்கும் ஹரிதா வி. குமார் நமது பொது அறிவு உலகம் இதழுக்காக தனது தேர்வு அனுபவங்களையும் வெற்றிப்பெற்ற வழி முறைகளையும் பகிர்ந்துக்கொண்டார்.   

* வாழ்த்துகள். உங்களின் இந்த வெற்றி கேரளாவிற்கு கிடைத்த கௌரவம். நீங்கள் இந்த மிகப்பெரிய வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

அன்று   எனது நண்பர் நான் முதலிடத்தில் வந்ததாகவும் உடனே யு.பி.எஸ்.சி சைட்டை பார்க்கவும் சொன்னார். முதலில் இதை நான் நம்பவில்லை. ரிசல்ட் லிஸ்ட்டை பார்த்தேன். நான் ஆச்சர்யத்தில் மூழ்கினேன். எப்படியவது நூறு இடத்திற்குள் வரவேண்டும் என ஆசை வைத்திருந்தவளுக்கு முதலிடத்தில் வந்தது எப்படி இருக்கும். எனது வெற்றியை கேரளா மாநிலமே கொண்டாடுகிறது. என்னுடைய இந்த வெற்றியை கேரளாவுக்கு அர்பணிக்கிறேன்.   

* உங்களின் குடும்பத்தை பற்றி கூறுங்கள்......


தந்தை ஆர்.விஜயகுமார். தாய் சித்ரா. இரண்டு சகோதரர்கள் அதுவும் இரட்டை சகோதரர்கள் சத்ஹிர்த், சதார்ஷ் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். சகோதரி ஜாஸ்மின் பள்ளி ஆசிரியை. எனது குடும்பம், எனது ஆசிரியர்கள், நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உதவியும் தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம். 

* படித்ததெல்லாம்.......


திருவனந்தபுரம் நெய்யாற்றங்கராவில் உள்ள செயிண்ட் தெரஸா கான்வெண்டில் ஆரம்பக் கல்வியை முடித்தேன். பின்னர் அங்கிருந்த அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்தேன். அதன்பிறகு பார்டன் ஹில்லில் உள்ள பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றேன். 


* இன்ஜினியரிங் படித்தவர்கள் பெரும்பாலும் சாப்ட்வேர் வேலைக்கு போவார்கள் நீங்கள் ஐ.ஏ.எஸ் படித்தது ஏன்?


எனக்கு பள்ளிப் படிப்பிலிருந்தே இலட்சியம் ஐ.ஏ.எஸ். ஆவதென்று. எனது தந்தையும் தொடர்ந்து ஆலோசனை கொடுத்துக்கொண்டே வந்தார். இருந்தாலும் ஒருவேளை சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெறவில்லையெனில் சாப்ட்வேர் வேலைக்கு சென்றுவிடுவது என்ற முடிவில் தான் இன்ஜினியரிங் படித்தேன்.   

* இந்த தேர்வுக்கு தயார் செய்தவிதத்தைக் கூறமுடியுமா?


2007- இல் எனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விட்டேன். முதல் முயற்சியில் மெயின் தேர்வில் கூட தேர்ச்சிப் பெறவில்லை. 2010 இல் இரண்டாவது முயற்சி யில் 179 ஆவது ரேங்க் பெற்றேன். ஐ.பி.எஸ் கிடைத்தது. போலீஸ் வேலை வேண்டாமென ஐ.ஆர்.எஸ் தேர்ந் தெடுத்தேன். இருந்தாலும் எனக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை. அதனால் மூன்றாவது முறையாக சிவில் தேர்வை எழுதி 290-ஆவது ரேங்க் பெற்றேன். மிகவும் பின்தங்கிப் போனதை உணர்ந்தேன். இருந்தாலும் விடா முயற்சியாக கடைசி முறையாக சிவில் சர்வீஸஸ் தேர்வை எழுதி விடுவது என மிகவும் கவனமுடன் சிறப்பாக தயார் செய்தேன். என் நான்காவது முயற்சியில் எனது லட்சியம் நிறைவேறிவிட்டது.

* இந்த தேர்வில் விருப்பப்பாடங்களாக எவற்றை தேர்ந்தெடுத்தீர்கள்?


மெயின் தேர்வில் எனது விருப்பப்பாடங்கள் நான் படித்திராத பொருளாதாரம், மலையாள இலக்கியம். இந்த பாடங்களை பட்டப்படிப்பில் படிக்கவில்லை  என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள். அதிலும் மலையாள இலக்கியம் எனது சுவாசம். இந்தியா அளவில் மலையாள இலக்கியம் தரமானவை. எனது கல்லூரி வாழ்க்கையில் இன்ஜினியரிங் புத்தகங்களுக்கு அடுத்து அதிக அளவில் மலையாள நாவல்களை படித்துள்ளேன். அதிலும் நான் எழுத்தாளர் எம்.டி.வாசு தேவனின் வாசகி. அவரின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல இந்துமேனன், விலோபில்லியின் கவிதை பிடித்தமானவை. இந்த நிலையில் சிவில் மெயின் தேர்வுக்கு மலையாள இலக்கியம் படிப்பதில் சிரமமில்லாமல் படித்தேன். அடுத்த விருப்பப்பாடமான பொருளாதாரம் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.  ஆனால் பொருளாதரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற எனது தோழி, பொருளாதாரத்தில் ஆராய்ச்சி செய்யும் நண்பர், பொருளாதார பேராசிரியர் என எனக்காக சிரமம் பாராமல் கற்றுத்தந்தனர். இதனால் பொருளாதரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது.
  

* மெயின் தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

 நான் ஆரம்பத்தில் கேரளா மாநில சிவில் சர்வீசஸ் அகாடமியில் பயிற்சி பெற்றேன். அங்கு மெயின் தேர்வுக்கு தயார் செய்ய மிகவும் உதவியாக இருந்தது. மலையாள இலக்கியம், பொருளாதாரம் பாடங்களுக்கு நல்ல நூல்கள் கிடைத்தன. சிறந்த பொருளாதார பேராசிரியர் சிறப்பாக கற்பித்தனர். இவை மிகுந்த உதவியாக இருந்தன. அனைத்து பாடங்களையும்  நன்றாக ஆழமாக படித்து முடித்தவுடன் தேர்வு எழுதிப் பார்ப்பேன். எனது கடைசி தேர்வு முயற்சியில் தொடர்ந்து அதிகளவில் எழுதி பயிற்சி செய்தது இந்த வெற்றியைப் பெற மிக உதவிகரமாக இருந்தது.

* நேர்முகத்தேர்வு எப்படியிருந்தது?


நேர்முகத் தேர்வு பொருத்தவரை ஐ.ஆர்.எஸ் பயிற்சியில் என்னுடன் இருந்த நண்பர்களின் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பேன். அதனால் சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ள முடிந்தது. நான் மலையாள இலக்கியம், பொருளாதாரம் எடுத்ததால் அது சம்பந்தமான கேள்விகள் கேட்டனர். அடுத்து கேரளா மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றிக் கேட்டனர். ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருப்பதை கூறினேன். முக்கியமாக காசர்கோடு பகுதியில் நிலவும் எண்டோ சல்பான் பிரச்சினை பற்றி கேட்டனர். அதேசமயம் எனக்கு மோகினியாட்டம், பழைய மலையாள பாடல்கள் பிடிக்கும் என்பதால் அதை பற்றிய கேள்விகளையும் கேட்டனர். நாட்டை உலுக்கும் நான்கு முக்கிய பிரச்சினைகள் பற்றி கேட்டனர். ஊழல், வறுமை, பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இன்மை, அதிகரித்து வரும் வேலையின்மை, மேலும் வெளிப்படையான நிர்வாகம் பற்றியும் பதிலளித்தேன்.

* சிவில் சர்வீசஸ் தேர்வு தயார் செய்பவர்களுக்கு உங்களின் ஆலோசனைகள்...


விருப்பப்பாடங்களை உங்களுக்கு பிடித்தமானதாகவும் தயார் செய்வதில் சிரமமில்லாத பாடங்களையும் தேர்ந்தெடுங்கள். முறையாக திட்டமிடுங்கள். திட்ட மிட்டதை முடிந்தவரை சரியான முறையில் பின்பற்றுங்கள். நேரத்தை சரியாக பயன்படுத்தி படியுங்கள். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். தன்னம்பிக்கையும் கடுமையான உழைப்பும் இருந்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் நிச்சயம் வெற்றிப் பெறலாம். 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ” என் பெண் வருகிறாள் ” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில் , ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து ; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த , குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ” ஹாய்! ” என்றாள். ” என்னைத்தெரியுமா ?” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு. ” சொல்லுங்க ” என்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர் , ” இவருதான் ...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest